சௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது மிகப் பெரிய தவறு: கன்னட இயக்குனர் பரபரப்பு புகார்

பெங்களூர்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா மீது கன்னட இயக்குனர் ராகவா த்வாரகி மோசடி புகார் தெரிவித்துள்ளார்.

கன்னட இயக்குனர் ராகவா த்வாரகி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளும், இயக்குனருமான சௌந்தர்யா பற்றி குற்றம் சாட்டியுள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது மிகப் பெரிய தவறு: கன்னட இயக்குனர் பரபரப்பு புகார்

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

எனது படமான மத்தே முங்காருவின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் சென்னையில் உள்ள சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தால் இழுத்தடிக்கப்பட்டது. சௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது தான் என் வாழ்வின் மிகப் பெரிய பேரழிவு ஆகும். அதனால் தான் என் கனவு படமான மத்தே முங்காரு தோல்வி அடைந்தது.

சௌந்தர்யாவின் அலட்சிய போக்கால், அவரது தயாரிப்பு நிறுவனத்தால் என் படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளி வைக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஆதாரம் இளையராஜா இசை!- எஸ் ராமகிருஷ்ணன்

சென்னை: உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஆதாரமே அய்யா இளையராஜா இசைதான் என்றார் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்.

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இன்று கோலாகலமாக நடந்தது. தயாரிப்பாளர் - இயக்குனர் பஞ்சு அருணாச்சலம், இயக்குநர்கள் பாலா, பார்த்திபன், சுகா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஆதாரம் இளையராஜா இசை!- எஸ் ராமகிருஷ்ணன்

இந்த விழாவில் இளையராஜா குமுதத்தில் தொடராக வந்த இளையராஜாவின் கேள்வி பதில்களின் தொகுப்பான ‘இளையராஜாவைக் கேளுங்கள்' எனும் புத்தகமும், திருப்பாவை பள்ளி எழுச்சிப் பாடல்களும் வெளியிடப்பட்டன.

இந்த விழா இளையராஜாவின் பிறந்தநாளாக மட்டுமல்லாமல். 71001 மரக் கன்றுகள் நடும் விழாவாகவும் நடைபெற்றது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசுகையில், "நான் ஒருமுறை வெளிநாடு சென்று கொண்டிருந்தேன். அப்போது ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் நின்ற விமானம் திரும்பக் கிளம்ப எட்டுமணி நேரமாகும் என்பதால் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அதே ஏர்போர்ட்டில் சதீஷ் என்கிற இளைஞனும், இளையராஜாவின் காதலின் தீபம் ஒன்று... பாடலை செல்போனில் ஒலிக்கவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். உடனே நான் அவனிடம் ஓடிச்சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னிடமுள்ள இளையராஜா பாடல்களை அவனும், அவனிடமுள்ள இளையராஜாவின் பாடல்களை நானும் பகிர்ந்து கொண்டோம். நாங்கள் இருவரும் அங்கே எங்களை மறந்து, போட்டிபோட்டுக்கொண்டு இளையராஜாவின் பாடல்களைக் கேட்க, அவற்றைக் கேட்டு 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் அந்தப் பாடல்களை ரசித்து, பாராட்டிவிட்டுச் சென்றனர்.

நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம், நான் தங்கும் விடுதியின் கதவைத் திறந்துவைத்துவிட்டு, இளையராஜாவின் பாடல்களை ஒலிக்க விடுவேன். நிச்சயம் அடுத்த சில நிமிடங்களில் யாராவது ஒருவர் என் அறையைத் தேடி வந்து நீங்க தமிழா என்று கேட்டு வருவார்கள்.

எந்த ஊருக்கும், எந்த நாட்டுக்கும் சென்றாலும் அங்கே இளையராஜா பாடல்களைக் கேட்கும் தமிழன் ஒருவனை சந்திக்காமல் இருக்கவே முடியாது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் முதல் ஆதாரமே இசைஞானியின் இசைதான்," என்றார்.

 

சீரியல் நடிகை ஆனந்தியின் சினிமா என்ட்ரி- மீகாமன் படத்தில் அறிமுகம்

சீரியல் நடிகை ஆனந்தியின் சினிமா என்ட்ரி- மீகாமன் படத்தில் அறிமுகம்

சென்னை: இதுவரை சீரியல்களிலும், நடன நிகழ்ச்சிகளிலும் தனது திறமையைக் காட்டி வந்த ஆனந்தி, தற்போது வெள்ளித்திரைக்கு ஷிப்ட் ஆகியுள்ளார்.

எப்போதும் சீரியல்களில் நடித்து வந்த ஆனந்தி, விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் சீசன் 7 நடன நிகழ்ச்சியில் தனது சூப்பரான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். அதுவும் சோலோ ரவுண்டில் அவர் ஆடிய பெல்லி டான்ஸ் யூடியூப்பில் லைக்குகளை அள்ளுகிறது.

ஆட்டம் தந்த புகழால் இப்போது சினிமா நடிகையாகிவிட்டார். மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா, ஹன்சிகா நடிக்கும் மீகாமன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் இன்னும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதுபற்றி ஆனந்தியிடம் கேட்டபோது, " சின்ன வயசிலிருந்தே நடனம்தான் எனக்கு உயிர். ஆனாலும் முதலில் சின்னத்திரையில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 7 இல் ஆட ஆரம்பித்தபிறகு என் வாழ்க்கையே திசை மாறிவிட்டது.

எனது ஆட்டத்தை பார்த்துவிட்டு வெளிநாடுகளில் இருந்தெல்லாம் எப்படியோ என் போன்நம்பரை பிடித்து பாராட்டி பேசினார்கள். இயக்குனர் மகிழ்திருமேனியும் எனது நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நடிக்க அழைத்தார்.

மீகாமன் படத்தில் ஹன்சிகாவுக்கு அடுத்து முக்கியமான கேரக்டர். இப்போது நிறைய வாய்ப்புகள் வருகிறது. அதனால் இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன். சீசன் 7ல் மட்டும் ஆடுவேன். மற்றபடி இனி சினிமாவுக்குத்தான் முக்கியத்துவம்" என்று கூறியுள்ளார் ஆனந்தி.

 

சிதைந்து வரும் பெண் இனத்தின் குரல் ‘சிட்டுக்குருவி’ ஆல்பம்!

பூமி மாசு பட்டு வருவது குறித்து ‘முத்தமிடும் பூமி', மழைநீர் சேகரிப்பு குறித்து ‘விரலை நனைத்த மழைத்துளி', என்று இரண்டு படைப்புகளை உருவாக்கிய விஜய் ஆர்ஆர் தற்போது இயக்கியுள்ள ஆல்பம் ‘சிட்டுக்குருவி'.

‘மெல்ல மெல்ல அழிந்து வரும் பறவையினம்தான் சிட்டுக்குருவி. தற்போது இந்தியாவில் ஆங்காங்கே நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள், பெண்களையும் அந்த சிட்டுக் குருவிகளைப் போல இல்லாமல் செய்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டது.

டெல்லி மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்திலும் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது, ஆண் இனத்திற்கே தீராத அவமானத்தை தேடி தருவதை போல உணர்ந்தேன். எனது வருத்தத்தை ஒரு ஆல்பமாக பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது. செல்வராஜ், எஸ்.சசி நீலாவதி இருவரும் தந்த ஊக்கத்தால் உருவானதுதான் இந்த ஆல்பம்' என்கிறார் இயக்குனர் விஜய் ஆர்ஆர். அடிப்படையில் விசில் கலைஞரான செல்வராஜ் இதில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்.

சிதைந்து வரும் பெண் இனத்தின் குரல் ‘சிட்டுக்குருவி’ ஆல்பம்!

வீட்டை விட்டு வெளியேறி ஆசிரமம் ஒன்றில் அநாதை குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தந்தையை பேட்டி காண வருகிறார் ஒரு பெண் பத்திரிகையாளர். ‘என்னை உங்க பெண்ணா நினைச்சு உங்க வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை சொல்லுங்க‘ என்று அவர் கேட்க, சொல்லத் தொடங்குகிறார் அந்த தந்தை.

அதுவரை உரையாடல் காட்சியாக இருந்த ஆல்பம் பாடலாகிறது திரையில். அவரும் அவரது தாயில்லாத பெண் குழந்தையும் எவ்வளவு அன்பாக இருக்கிறார்கள் என்பது மான்டேஜ் காட்சிகளாக ஓடுகின்றன. பள்ளிக்கு கிளம்பிச் செல்லும் அவளை வழி மறித்து காரில் கடத்தும் ஒரு கும்பல், அவள் மீது பாலியல் வெறியாட்டம் நடத்த... அதுவரை துள்ளி திரிந்த அந்த சிட்டுக்குருவி இந்த உலகத்தை விட்டே மறைகிறாள். பாடல் முடியும்போது அந்த தந்தையும் ஒரு சடலமாக மயங்கிச் சாய்வதோடு முடிகிறது ஆல்பம்.

சிதைந்து வரும் பெண் இனத்தின் குரல் ‘சிட்டுக்குருவி’ ஆல்பம்!

இந்த பாலியல் வன்முறையை தடுப்பதற்கு சட்டம் மட்டும் போதாது. மனவியல் ரீதியாக ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு முறையும் பாலியல் வன்முறையால் பலியாவது சம்பந்தப்பட்ட பெண் மட்டுமல்ல, ஒரு தலைமுறையே பாதிக்கப்படுகிறது என்பதை மனதளவில் பதிய வைக்க வேண்டும். அதற்கான முயற்சிகள்தான் இதுபோன்ற ஆல்பங்கள் என்கிறார் விஜய் ஆர்.ஆர்.

டிஎன்எஸ், அனுப்பிரியா, செல்வகுமார். ஆர், மோனிகா ஆகியோர் நடித்துள்ள இந்த ஆல்பத்தை விஜய் ஆர்.ஆர் இயக்க, ஜே.கே.ரித்திக் மாதவன் இசையமைத்துள்ளார்.

முத்து விஜயன் பாடல்களை எழுத, சீனிவாஸ் பாடியுள்ளார்.

 

ரஜினியின் நாயகி தனக்கு தானே கொடுத்த பிறந்தநாள் பரிசு இது தான்

மும்பை: நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது பிறந்தநாளான இன்று தனக்குத் தானே ஒரு பரிசை கொடுத்துக் கொண்டுள்ளார்.

பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா ரஜினியுடன் சேர்ந்து லிங்கா படத்தில் நடித்து வருகிறார். அவர் இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடினார். மும்பையில் அவர் அளித்த பார்ட்டியில் இந்தி நடிகர்கள் அர்ஜுன் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் அவருடைய காதலர் என்று கிசுகிசுக்கப்படும் நடிகர் ஷாஹித் கபூரை மட்டும் காணவில்லை.

ரஜினியின் நாயகி தனக்கு தானே கொடுத்த பிறந்தநாள் பரிசு இது தான்

அவர்கள் இருவரும் பார்ட்டி முடிந்த பிறகு இந்த நாளை கொண்டாட எங்கோ சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சோனாக்ஷி ட்விட்டரில் தனது பிறந்தநாள் பற்றி கூறியிருப்பதாவது,

சர்பிரைஸ்! இந்த டாட்டூ என் பிறந்தநாளுக்கு எனக்கு நானே கொடுத்துக் கொண்ட பரிசு. என்னை வழிநடத்தும் நட்சத்திரம். தற்போது என்னுடன் என்று தெரிவித்துள்ளார்.

 

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்...! - பிறந்த நாள் விழாவில் இளையராஜா பேச்சு

சென்னை: தன் பிறந்த நாளை மரக்கன்று நட்டு இன்று தொடங்கினார் இசைஞானி இளையராஜா.

தமிழ் சினிமாவில் 40 ஆண்டு காலமாய் கோலோச்சிக் கொண்டிருப்பவர் இளையராஜா. இந்திய சினிமா தாண்டி, உலகளாவிய இசை மேதைகளுள் முன்னணியில் இருப்பவர் என மேலை நாட்டவரும் வியக்கும் பெரும் மேதையாகத் திகழ்கிறார்.

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்...! - பிறந்த நாள் விழாவில் இளையராஜா பேச்சு

இன்று பிரசாத் ஸ்டுடியோவில் தன் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினார். அவருக்காக இசை வடிவில் சிறப்பாக கேக் வடிவமைக்கப்பட்டு வரவழைக்கப்பட்டது.

முதலில் கேக் வெட்ட தயக்கம் காட்டினாலும், பின்னர் இயக்குநர்கள் பாலா மற்றும் சுகா ஆகியோர் வற்புறுத்தியதால் வெட்டினார்.

முதல் துண்டை அவர் பஞ்சு அருணாச்சலத்துக்குத் தந்தார். அடுத்து பஞ்சு அருணாச்சலம், இளையராஜாவுக்கு கேக் ஊட்டினார்.

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்...! - பிறந்த நாள் விழாவில் இளையராஜா பேச்சு

பின்னர் பேசிய இளையராஜா, "இது பிறந்தநாள் விழா என்பதைவிட புத்தக வெளியிட்டு விழா என்றே சொல்லலாம். இவ்விழாவிற்கு வந்திருக்கும் பஞ்சு சார், பாலா, பார்த்திபன், ராமகிருஷ்ணன், சுகா அனைவருமே அவரவர் துறைகளில் சாதித்தவர்கள்தான்.

பொதுவாக அழைப்பிதழ்கள் அடித்து பிறந்தநாள் விழா கொண்டாடுவது எனக்குப் பிடிக்காது. ஆனால் இது புத்தக வெளியீட்டு விழாவோடு பிறந்தநாள் விழாவும் சேர்ந்த இந்த நாளில் உங்களை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி. எனக்கு எழுதி சாதிக்க வேண்டுமென்றோ, மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி சாதிக்க வேண்டுமென்றோ எனக்கு எண்ணம் கிடையாது.

அதேபோல, இங்கே வந்திருக்கும் பஞ்சு அண்ணனோ ஒரே சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் சரி, உலகநாயகன் கமல்ஹாசனுக்கும் சரி, ஆறிலிருந்து அறுபதுவரை, கல்யாணராமன் என்ற இரண்டு படங்களை ஒரே சமயத்தில் எழுதி, ஒரே வாரத்தில் ரிலீஸ் செய்து, இரண்டு படங்களையும் சக்சஸ் செய்தவர். இது எப்படி சாத்தியம் என ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.

கமலும், ரஜினியும் அவர்கள் வாழ்க்கையில் அதிக வெற்றிப் படங்களில் நடித்திருப்பது பஞ்சு அண்ணன் தயாரிப்பில்தான்.

எனவே அவர் இந்த விழாவிற்கு வருகை தந்து என்னை வாழ்த்தியது எனக்கு மகிழ்ச்சி. உங்களைச் சந்தித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி...

இன்று என் பிறந்த நாளையொட்டி மரங்கள் நட்டிருக்கிறார்கள். நானும் ஒரு மரக்கன்று நட்டேன். மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான் என்று ஏற்கெனவே பாடியிருக்கிறேன்.. நான் வைத்த மரத்துக்கு நானே தினமும் நீர் ஊற்றிக் கொண்டிருக்க முடியாது. இங்குள்ள தோட்டக்காரர் ஊற்றுவார்.. அப்படி இன்று நடப்படும் மரங்கள் அனைத்துக்கும் ஏதோ ஒரு வகையில் நீர் பெறும்.. வேறு என்ன சொல்ல.. நன்றி,'' என்றார்.

இன்று மட்டும் தமிழகமெங்கும் இளையராஜா ரசிகர்கள் 71001- மரக்கன்றுகள் நட்டது குறிப்பிடத்தக்கது.

 

மில்க் நடிகையின் படங்களை கைப்பற்ற நடிகைகள் போட்டா போட்டி

சென்னை: மில்க் நடிகை வெற்றி இயக்குனரை திருமணம் செய்து செட்டிலாக உள்ளதால் அவரது படங்களை கைப்பற்ற நடிகைகள் போட்டா போட்டி போடுகிறார்களாம்.

மில்க் நடிகை தான் காதலித்த வெற்றி இயக்குனரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக உள்ளார். இந்நிலையில் மில்க் நடிகையின் படங்களுக்கு வேறு ஹீரோயின்கள் தேடும் பணி துவங்கியுள்ளது. இது குறித்து அறிந்த கோலிவுட்டின் வளர்ந்து வரும் நாயகிகள், தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் நாயகி ஒருவர் மற்றும் முத்த மன்னனின் மகள் ஆகியோர் அந்த படங்களின் வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வருகிறார்களாம்.

இதில் சின்ன சில்கிற்கு 2 படங்கள் கிடைத்துள்ளதாம். மில்கும், அவரது காதலரும் காதலை ரகசியமாக வைக்க அதை இயக்குனர் ஒருவர் மேடையில் பேசுகையில் ஊருக்கே தெரிவித்துவிட்டார்.

அதன் பிறகு தான் காதல் ஜோடி தங்கள் காதல் பற்றி வாய் திறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி.. புதிய படம் தொடக்கம்!

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் நேற்று தொடங்கியது.

ஜெயம் ரவி தற்போது அவருடைய அண்ணன் எம்.ராஜா இயக்கும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

அடுத்து ‘எங்கேயும் காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் ஹன்சிகாவுடன் இணைந்து ‘ரோமியோ ஜூலியட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவ்விரு படங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த புதிய படப் பூஜை நேற்று நடந்தது.

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி.. புதிய படம் தொடக்கம்!

‘தலைநகரம்', ‘மருதமலை', ‘படிக்காதவன்' போன்ற படங்களை இயக்கிய சுராஜ் இயக்குகிறார். ஒரு இடைவெளிக்குப் பிறகு லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப் படத்தைத் தயாரிக்கிறது.

ஜெயம் ரவியின் 27-வது படமான இதில், அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகையுடன் பேசி வருகின்றனர். மற்ற நடிக நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாக உள்ளது.

நேற்று நடந்த படத்தின் பூஜையில் நடிகர் ஜெயம் ரவி, மற்றும் அவரது அப்பாவும், தயாரிப்பாளருமான எடிட்டர் மோகன், அம்மா வரலட்சுமி, நடிகர்கள் சூரி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

ஆணுறை விவகாரம்: நடிகர் ரன்வீர் மீது கோபத்தில் இருக்கும் சன்னி லியோன்

மும்பை: பாதுகாப்பான உறவை வலியுறுத்தி ஆணுறை விளம்பரத்தில் நடித்தது குறித்து நடிகர் ரன்வீர் சிங் மீது நடிகை சன்னி லியோன் கடுப்பில் உள்ளார் என்று கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பாதுகாப்பான உறவை வலியுறுத்தி ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். அவரைப் போன்றே நடிகை சன்னி லியோனும் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆணுறை விளம்பரத்தில் நடித்த முதல் நடிகர் தான் தான் என ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

ஆணுறை விவகாரம்: நடிகர் ரன்வீர் மீது கோபத்தில் இருக்கும் சன்னி லியோன்

அதெப்படி அவர் ஆணுறை விளம்பரத்தில் நடித்த முதல் நடிகர் என்று கூறலாம் என சன்னி ரன்வீர் மீது கோபத்தில் உள்ளாராம்.

அண்மையில் செய்தியாளர்கள் ரன்வீரிடம் நீங்கள் சன்னி நடித்த ஆணுறை விளம்பரத்தை பார்த்தீர்களா என்று கேட்க அவர் அதை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

துணிச்சலாக ஆணுறை விளம்பரத்தில் நாம் நடிக்க எல்லா புகழையும் ரன்வீர் தட்டிச் செல்கிறாரே என்பது தான் சன்னியின் கவலையாம்.