திரைப்பட இசை கலைஞர்கள் சங்க தலைவராக மீண்டும் எஸ்ஏ ராஜ்குமார் பதவி ஏற்பு!

திரைப்பட இசை கலைஞர்கள் சங்க தலைவராக மீண்டும் எஸ்ஏ ராஜ்குமார் பதவி ஏற்பு!

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவராக இசையமைப்பாளர் எஸ் ஏ ராஜ்குமார் மீண்டும் பதவி ஏற்றார்.

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற உறுபினர்களுக்கு பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை வடபழனியில் உள்ள இசை கலைஞர்கள் சங்க வளாகத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது.

தேர்தலில் வெற்றிபெற்ற இசைக் கலைஞர்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

விழாவில் இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், பாடகர் மனோ மற்றும் பெப்சி செயலாளர் ஜி சிவா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாடகி சின்மயி விழாவை தொகுத்து வழங்கினார்.

பொறுப்பேற்றுக் கொண்ட புதிய நிர்வாகிகள்:

தலைவர் - எஸ் ஏ ராஜ்குமார்
செயலாளர் - டோம்னிக் சேவியர்
பொருளாளர் - விஆர் சேகர்
அறக்கட்டளை தலைவர் - பிஜி வெங்கடேஷ்
அறக்கட்டளை செயலாளர் - டி.சங்கரன்.

 

தலைவாவுக்கு அதிகபட்ச தியேட்டர்கள்.... சின்னப் படங்கள் இன்னும் 2 வாரம் காத்திருக்க வேண்டும்!

விஜய்யின் தலைவா படத்துக்கு அதிகபட்சமாக தியேட்டர்களை ஒதுக்க திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதால் சிறிய பட்ஜெட் படங்கள் மேலும் காத்திருக்க வேண்டிய நிலை.

விஜய் நடித்துள்ள தலைவாவுக்கு அதிகபட்ச தியேட்டர்கள்.... சின்னப் படங்கள் இன்னும் 2 வாரம் காத்திருக்க வேண்டும்!  

அதற்கு அடுத்த வாரமே ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் வருகிறது. பொதுவாக இந்த நாளில் பண்டிகைக்கு வெளியாவது போல நான்கைந்து படங்கள் வருவது வழக்கம். இந்த முறையும் 6 படங்கள் வெளியாகத் தயாராக உள்ளன. ஆனால் தலைவாவுக்கே அதிக தியேட்டர்கள், அதுவும் இரண்டு வாரங்களுக்கு தரப்பட்டுள்ளதால், மற்ற படங்களுக்கு போதிய அரங்குகள் இல்லை. எனவே தேசிங்கு ராஜா மற்றும் ஆதலால் காதல் செய்வீர் ஆகிய படங்கள் மட்டும் இருக்கும் தலைவாவுக்கு ஒதுக்கியது போல மிச்சமிருக்கும் தியேட்டர்களில் வெளியாகின்றன.

தங்க மீன்கள், ரகளபுரம் போன்றவை இந்த முறையும் தியேட்டர்களின்றி காத்திருக்கின்றன.

 

மும்பையில் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டில் விபச்சாரம் செய்த 5 டிவி, திரைப்பட நடிகைகள் கைது

மும்பை: மும்பை லோகந்த்வாலாவில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் இருந்து 5 விபச்சார அழகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த 5 பேரும் இந்தி சீரியல் மற்றும் போஜ்பூரி பட நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை லோகந்த்வாலா பகுதியில் உள்ள மீரா டவர்ஸில் பிளாட் பி எண் 1402ல் விபச்சாரம் நடப்பதாக அறிந்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். இதில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 5 நடிகைகள் மற்றும் அவர்களின் தரகர் இம்தியாஸ் கான் ஆகியோர் சிக்கினர். அதில் சிலர் இந்தி டிவி சீரியல்களிலும், மீதமுள்ளவர்கள் போஜ்புரி மற்றும் சி கிரேட் படங்களிலும் நடித்துள்ளனர்.

அவர்கள் விபச்சாரம் நடத்திய வீடு ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு சொந்தமானது. அவரிடம் வீட்டை வாடகைக்கு எடுத்து தொழில் செய்து வந்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில்,

அந்த வீட்டில் விபச்சாரம் நடப்பது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாங்கள் வாடிக்கையாளர் போன்று நடித்து இம்தியாஸை அணுகினோம். முதலில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு நடிகைக்கு ரூ.1 லட்சம் கேட்ட இம்தியாஸ் பிறகு ரூ.25,000க்கு நடிகையை அனுப்ப ஒப்புக் கொண்டார். இதையடுத்து நாங்கள் அந்த வீட்டுக்கு சென்ற உடன் வாடிக்கையாளர் என்று நினைத்து நடிகை ஒருவர் வெளியே வந்தார். அப்போது நாங்கள் வீட்டை சோதனை செய்து அவர்களை கைது செய்தோம் என்றனர்.

 

ஆபாச பட நடிகையை வரவேற்பீங்க, ஆனால் என்னை எதிர்ப்பீங்க: பூனம் பாண்டே

மும்பை: ஆபாச பட நடிகையை நாம் வரவேற்போம் ஆனால் சொந்த மண்ணைச் சேர்ந்த பெண்ணை எதிர்ப்போம் என்று இந்தி நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.

பூனம் பாண்டே நடிப்பில் வெளிவந்துள்ள முதல் இந்தி படம் நஷா. அந்த படத்தின் போஸ்டர்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதாகக் கூறி அதற்கு மும்பை மற்றும் டெல்லியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இரு இடங்களிலும் நஷா போஸ்டர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நஷா போஸ்டர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது தான் பூனமை பாதித்துள்ளதாம்.

ஆபாச பட நடிகையை வரவேற்பீங்க, ஆனால் என்னை எதிர்ப்பீங்க: பூனம் பாண்டே

இந்நிலையில் இது குறித்து பூனம் கூறுகையில்,

இது என்னை நோகடிப்பதாகும். என் முதல் படத்திலேயே என்னை இப்படி எதிர்ப்பார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. என்னை திரையுலகில் வரவேற்க யாரும் இல்லை. திரையுலகில் எனக்கு என்று எந்த காட்ஃபாதரும் இல்லை. ஆனால் அதற்காக இந்த முறையில் வரவேற்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நான் அப்படி என்ன பெரிய குற்றத்தை செய்துவிட்டேன்.

நான் லிமிட்டை தாண்டவில்லை. என் பட போஸ்டர்களை விட மோசமானவற்றை எல்லாம் நான் பார்த்துள்ளேன். என் போஸ்டர்களில் அப்படி ஒன்றும் இல்லை. என் அந்தரங்க உறுப்புகளை நான் காட்டவில்லை. வெளிநாட்டில் இருந்து வரும் ஆபாச பட நடிகைக்கு நம் நாட்டு மக்கள் மரியாதை அளிப்பார்கள். ஆனால் நான் ஆபாசம் என்று கூறும் வகையில் எதுவும் செய்யவில்லை. நஷா ஒன்றும் ஆபாச படம் இல்லை.

நான் மும்பையில் பிறந்து வளர்ந்தாலும், ஒரு பாரம்பரியமான பிராமண குடும்பத்தில் இருந்து வந்தவள். என் செயல்கள் எனது குடும்பத்தாருக்கு அதிர்ச்சியாக உள்ளது. ஆனால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? என்றார்.

 

சிறையில் வாழும் ‘போலீஸ் கிரி’க்கு இன்று 54வது பிறந்தநாள்

சிறையில் வாழும் ‘போலீஸ் கிரி’க்கு  இன்று 54வது பிறந்தநாள்

மும்பை: இன்று நடிகர் சஞ்சய் தத்தின் 54 வது பிறந்த நாள்.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத். இன்று அவரது 54 வது பிறந்த நாள். சிறையில் இருக்கும் அவரை சில திரையுலக நண்பர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இருப்பதாக செய்திகள் பரவியது.

ஆனால், இதுவரை அதுபோன்று யாரும் அதிகாரப்பூர்வமாக சஞ்சய் தத்தை சந்திக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யவில்லை என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சஞ்சய் தத்தின் மனைவி மானயதா தத் மட்டும் நேர்ல் வந்து வாழ்த்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.

எனவே, சஞ்சய் தத்தின் இந்தப் பிறந்த நாள் சிறையில் அமைதியாக கழியும் எனத் தெரிகிறது.

 

பிறந்த நாளன்று பேஸ்புக்கில் இணைந்த தனுஷ்!

பிறந்த நாளன்று பேஸ்புக்கில் இணைந்த தனுஷ்!

தனது பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதி பேஸ் புக்கில் இணைந்தார் தனுஷ்.

தனுஷ் தனது 30வது பிறந்த நாளை நேற்று லண்டனில் நண்பர்கள் புடை சூழ கொண்டாடினார்.

இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோர் இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த நாளில் தனது பேஸ்புக் பக்கத்தை தொடங்கிய தனுஷ், அதில் தனது படங்கள், அவை குறித்த செய்திகளை பதிவு செய்தார்.

ஏற்கெனவே ட்விட்டரில் தனுஷ் ரொம்பப் பிரபலம். லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரைத் தொடர்கின்றனர்.

பேஸ்புக்கில் இணைந்தது குறித்து தனுஷ் கூறுகையில், "நாம் சொல்ல நினைக்கும் விஷயங்களை நேரடியாக ரசிகர்களுக்குச் சொல்ல சமூக வலைத் தளங்கள் மிகச் சிறந்த வழயாக மாறியுள்ளது,' என்றார்.

இப்போதைக்கு தமிழில் நய்யாண்டி படத்தில் மட்டுமே நடித்து வருவதாகவும், விரைவில் புதிய இந்திப் படத்தை அறிவிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தனுஷின் பேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/dhanushchannel