கவிஞர் தாமரையின் கணவர் எங்கே? பரபரக்கும் மீடியா உலகம்!

Cinima Lyricist Thamarai S Husband
சென்னை: சினிமா பாடலாசிரியர் தாமாரையின் கணவர் தியாகுவை கடந்த சில நாட்களாக காணவில்லை என்ற தகவல் தற்போது திரைப்பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஈழப்பிரச்சினையில் தீவிர ஆர்வம் கொண்ட தோழராக அறியப்பட்ட தியாகு கடந்த 13-ம் தேதியில் இருந்து எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை.

கவிஞர் தாமரையும், தோழர் தியாகுவும் ஈழத்தமிழர் பிரச்சினையில் ஆர்வத்துடன் பங்கேற்றவர்கள். இருவருக்குமே முதல் திருமண வாழ்க்கை சரியாக இல்லாத காரணத்தினால் இரண்டாவதாக தியாகுவும், தாமரையும் மணவாழ்க்கையில் ஒன்றாக இணைந்தனர். தங்களுடைய காதலைப் பற்றி கவிஞர் தாமரை பலமுறை பேட்டிகளில் கூறியிருக்கிறார். இந்த நிலையில் திடீரென தியாகு மாயமாகிவிட்டார். தியாகு யாரிடமும் எந்த தகவலும் சொல்லாமல் மாயமாகிவிட்டதாக அரசியல் வட்டாரங்களிலும், திரைப்படத்துறை வட்டாரங்களிலும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்தவர் தியாகு. அவரை கடந்த 13 ம் தேதி அன்று அந்த அமைப்பில் இருந்து நிர்வாகிகள் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் கூறும் நிர்வாகிகள், தியாகு எந்த வேலையும் பார்க்காமல் தொலைக்காட்சிகளில் பேசுவதை மட்டுமே வழக்கமாக வைத்திருக்கிறார் என்பதே.

அதேசமயம் கொல்லிமலைப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தியாகு தலைமறைவாகிவிட்டார் என்றும் வதந்திகள் உலா வருகின்றன. ஆனால் கொல்லிமலையைச் சேர்ந்த பெண்ணுக்கும் தியாகுவுக்கும் தவறான தொடர்பு இருப்பதாக கற்பனை செய்து கொண்டு தாமரைதான் தியாகுவை துன்புறுத்தினார் என்றும் ஒருசிலர் கூறுகின்றனர். இதில் எது உண்மை என்பதை தியாகுவே நேரில் வந்து கூறினால்தான் உண்டு!
Close
 
 

விஜய் - அஜீத்தை வைத்து நினைத்தாலே இனிக்கும் ரிமேக்கா?

Director Selva Denies Ninaithale Inikkum Remake
ரஜினி - கமல் நடித்த சூப்பர் ஹிட் படமான கே பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும் படத்தை இயக்குநர் செல்வா ரீமேக் செய்யப் போவதாகவும், அதில் விஜய்யும் அஜீத்தும் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

ரஜினி, கமல் திரையுலக வரலாற்றில் ஒரு மியூசிகல் ஹிட்டாக அமைந்தது இந்த நினைத்தாலே இனிக்கும். கதாநாயகியாக ஜெயப் பிரதா நடித்தார். எம்எஸ் விஸ்வநாதன் இசையில் அத்தனைப் பாடல்களும் காலத்தை வென்று இன்றும் இனிமையாக ஒலிக்கின்றன.

இந்தப் படத்தை ரீமேக் செய்ய முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின. இதில் விஜய், அஜித் ஆகியோர் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்பட்டது.

நினைத்தாலே இனிக்கும் ரீமேக்கை செல்வா இயக்க உள்ளதாகவும் செய்தி பரவியது. செல்வா ஏற்கனவே அமராவதி படம் மூலம் அஜித்தை அறிமுகம் செய்தவர். ஜெமினி கணேசனின் நான் அவனில்லை படத்தை ரீமேக் செய்து வெளியிட்டார். அப்படம் வெற்றிகரமாக ஓடியது.

இதையடுத்து நினைத்தாலே இனிக்கும் படத்தையும் அவர் ரீமேக் செய்ய உள்ளதாகவும் அஜித்தையும் விஜய்யையும் சந்தித்து இது குறித்து பேசி உள்ளதாகவும் வதந்திகள் பரவின.

ஆனால் செல்வா இந்த செய்திகளை மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், "நினைத்தாலே இனிக்கும் படத்தை ரீமேக் செய்யும் திட்டமில்லை. அப்படி நான் நினைத்திருந்தால்தானே விஜய், அஜித்திடம் பேச... அந்தப் படம் ஒரு க்ளாஸிக். அதை ரீமேக் செய்வது சரியாக இருக்காது," என்றார்.
Close
 
 

ஸ்ரீதேவியைப் பிடிக்கும்... ஆனால் அவரைப் போல திருமணமானவரை மணக்க இஷ்டமில்லை! - சமந்தா

Samantha Dislikes Sri Devi Personal Life
எனக்குப் பிடித்த நடிகை ஸ்ரீதேவிதான். ஆனால் அவரைப் போல ஏற்கெனவே திருமணமான ஒருவரை மணப்பதில் எனக்கு இஷ்டமில்லை, என்று கூறியுள்ளார் நடிகை சமந்தா.

தமிழில் பெரிய வெற்றிப் படம் எதிலும் தனி கதாநாயகியாக நடிக்காமலேயே முன்னணி நாயகியாக உள்ளவர் சமந்தா.

நீதானே என் பொன் வசந்தம், கடல் என எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் இவர் நாயகியாக நடித்து வருகிறார்.

தனது இந்த வளர்ச்சி குறித்து சமந்தா கூறுகையில், "எனக்கு பழைய நடிகை ஸ்ரீதேவியைப் பிடிக்கும். சினிமாவில் அவரை முன் மாதிரியாகக் கொண்டு நடிக்கிறேன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தென் இந்திய மொழி படங்களில் நம்பர் ஒன் கதாநாயகியாக வளர்ந்தார். இந்தி திரையுலகுக்கு போய் அங்கேயும் தன்னை திரையுலக மகாராணியாக நிரூபித்தார். என் நடிப்புக்கு அவர்தான் ரோல்மாடல்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த நான் ஸ்ரீதேவியை போல் இப்போது இந்திக்கு போய் உள்ளேன். எல்லா விஷயங்களிலும் ஸ்ரீதேவியைப் பின் பற்றும் நான் திருமண விஷயத்தில் மட்டும் அவரைப் பின்பற்ற மாட்டேன். ஸ்ரீதேவியை போல் ஏற்கனவே திருமணமான ஒருவரை மணக்கமாட்டேன்," என்றார்.
Close
 
 

வேண்டாம் அசின்! - ஷங்கருக்கு கோரிக்கை

Political Outfit Oppose Shanklar Book Asin
இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்ட அசினை தன் படத்தில் ஷங்கர் நடிக்க வைக்கக் கூடாது என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எந்த நடிகர் நடிகையும் செல்லக் கூடாது என்ற தடையை மீறி இலங்கை சென்ற நடிகை அசின், ரெடி படப்பிடிப்பில் பங்கேற்றார். அங்கு ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்டார்.

இதனால் அவருக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் அதைக் கண்டு கொள்ளவில்லை அசின். சினிமா உலகினரும் இதெல்லாம் சகஜம் என்று மறந்துவிட்டனர்.

அதற்குப் பிறகு தமிழில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்த காவலன் படம் கூட வெளியாகிவிட்டது.

இந்த நிலையில் ஷங்கர் இயக்கப் போகும் புதுப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் ராஜபக்சே அரசு ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது. அதன் மூன்றாம் ஆண்டு துக்க தினத்தை உலக தமிழர்கள் இப்போது கடை பிடிக்கின்றனர்.ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழர் உணர்வுகளுக்கு எதிராக நடந்து கொண்ட அசினை தனது புதுப்படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் முடிவெடுத்திருப்பதாக வெளியான தகவல் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது. திரையுலகினரின் தடையை மீறி அசின் இலங்கை சென்றது மட்டு மின்றி ராஜபக்சேயுடன் விருந்தும் சாப்பிட்டார்.

ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றவர்களோடு கைகுலுக்கி விட்டு வந்த அசினை படத்தில் ஷங்கர் நடிக்க வைக்கக்கூடாது. மீறி நடிக்க வைத்தால் ஷங்கர் வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்துவோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Close
 
 

'வயசாயிடுச்சு... இனி ஆக்ஷனுக்கு பை! - ஜாக்கி சான் அதிரடி அறிவிப்பு!

Jackie Chan Retires As Action Hero
கேன்ஸ்: இனி ஆக்ஷன் படங்களில் நடிக்கப் போவதில்லை... ஒய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார் உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான்.

கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் தனது ஆர்மர் ஆஃப் காட் மூன்றாம் பாகத்தை அறிமுகப்படுத்தியபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பரபரப்பான சண்டைக்காட்சிகளில் நடிக்க தன் வயது தடையாக உள்ளதாகவும், நடிப்பு தன்னை களைப்படைய வைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் பிறந்த சீன நடிகர் ஜாக்கி சான். 58 வயதாகும் ஜாக்கி சான் தனது 100வது படமான சைனீஸ் ஜோடியாக்கை (ஆர்மர் ஆப் காட் 3) உருவாக்கி வருகிறார்.

இந்தப் படம்தான் அவரது கடைசி ஆக்ஷன் படமாகும். கேன்ஸ் திரைப்பட விழாவில் சைனீஸ் ஜோடியாக் புரமோஷனுக்காக வந்திருக்கும் ஜாக்கி சான், இந்தப் படத்தோடு நடிப்புக்கு குட்பை சொல்வதாக அறிவித்து, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தார்.

இப்போது அந்தப் படத்தின் மூன்றாவது பாகமாக வருவதுதான் சைனீஸ் ஜோடியாக். டிசம்பரில் இந்தப் படம் வெளியாகிறது.

தனது ஓய்வு குறித்து அறிவித்த ஜாக்கி சான் கூறுகையில், "இன்னும் எத்தனை நாளைக்கு ஆக்ஷன் நாயகனாக நடிப்பது... சண்டை போட்டு போட்டு களைத்துவிட்டது. அதிரடி சண்டைக்கு என் வயசு இடம்கொடுக்கவில்லை.

இப்போது உலகம் ரொம்ப வன்முறைக் களமாக மாறிவிட்டது. உண்மையில் எனக்கு வன்முறை சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால்தான் என் படங்களில் சண்டைக் காட்சியைக் கூட நகைச்சுவையாக்கிவிட்டேன்.

கராத்தே கிட் நடிக்கும்போதே, போதும் ஆக்ஷன் என்ற மனநிலைக்கு வந்திருந்தேன்.

சைனீஸ் ஜோடியாக் படத்துக்குப் பின் இனி ஆக்ஷன் படங்களில் நடிக்க மாட்டேன். திரைக்குப் பின்னால் என் பங்களிப்பு இருக்கும். ராபர்ட் டி நீரோ போல, புதிய பரிமாணத்தில் தோன்றத் திட்டமிட்டுள்ளேன்," என்றார்.
Close
 
 

சேட்டை படப்பிடிப்புக்கு சூர்யா திடீர் வருகை!

டெல்லி பெல்லி படம் தமிழில் சேட்டை என்ற பெயரில் தயாராகிறது. ஆர் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தில் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி நடிக்கின்றனர்.

கடந்த வாரம் சென்னை பின்னி மில்லில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்தப் படப்பிடிப்புக்கு திடீர் வருகை தந்து படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி தந்தார் நடிகர் சூர்யா.
surya sudden visit settai sets
Close
 
வந்ததோடு மட்டுமல்லாமல், படத்தின் நட்சத்திரங்கள் ஆர்யா, சந்தானம் உள்ளிட்டோருடன் ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்தார். படத்தின் கதை மற்றும் ஷூட்டிங் நடக்கும் விதம் பற்றியெல்லாம் கேட்டறிந்தவர், அப்படியே பக்கத்தில் நடக்கும் மாற்றான் படப்பிடிப்புத் தளத்துக்கு சேட்டை குழுவினரை அழைத்துச் சென்று தனது குழுவினருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

சூர்யாவின் திடீர் வருகையும், அவர் தங்களிடம் நடந்து கொண்ட விதமும் உற்சாகமளிப்பதாகவும், புதிய அனுபவத்தைத் தருவதாகவும் இருந்தது என இயக்குநர் கண்ணன் தெரிவித்தார்.

சூர்யா எனக்குப் பிடித்த நடிகர்களுள் ஒருவர். அவர் வந்து என்னை வாழ்த்தியது மிகுந்த சந்தோஷத்தை அளித்தது என்றார் ஹீரோ ஆர்யா.

படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறுகையில், "சூர்யா எங்களுடன் வெகுநேரம் அமர்ந்து சேட்டை படம் வளரும் விதம் குறித்துப் பேசினார். ஒரு பெரிய நடிகர், எங்கள் மீது அக்கறையாக வந்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது," என்றார்.
Posted by: Shankar
 

குழந்தைகளுக்கு வில்லனாகும் டிவி ரியாலிட்டி ஷோக்கள்!

Impact Reality Shows On Children
தொலைக்காட்சிகளில் குழந்தைகள் பங்கேற்கும் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளினால் பெரும்பாலான குழந்தைகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் குழந்தைகளுடன் தமது குழந்தைகளை பெற்றோர்கள் ஒப்பிட்டு பேசுவதால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதனைத் தொடர்ந்து உடல் நல பாதிப்பும் ஏற்படும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

பிரபலமான தொலைக்காட்சியில் பிரசித்தி பெற்ற ரியாலிட்டி ஷோ. சீசன் 3 வரை வந்து விட்டது. சின்னக்குழந்தை ஒன்று மைக் பிடித்து அழகாக பாடிக்கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்களோ குற்றம் குறை கூறி பாடியது சரியில்லை என்று ரிஜெக்ட் செய்து விட்டனர். அதனால் அழுது ஆர்பாட்டம் செய்கிறது அந்த குழந்தை.

தொலைக்காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பெரும்பாலானவர்களை இந்த காட்சி பாதித்துள்ளது. என்னதான் போட்டியாக இருந்தாலும் நிராகரிப்பு என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை சொல்லும் விதமும் இருக்கிறது. டிஆர்பி ரேட்டிங்கை மனதில் வைத்து நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகளினால் பாதிக்கப்படுவது என்னவோ குழந்தைகள்தான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

குழந்தைகளின் தனித்திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறோம் என்ற போர்வையில் தொடங்கப்பட்டவைதான் இந்த ரியாலிட்டி ஷோ. இந்த நிகழ்ச்சிகளில் பத்து குழந்தைகளுக்கு நன்மை ஏற்பட்டிருக்கிறது என்றால் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தங்கள் குழந்தைகளும் அவர்களைப் போல டிவியில் தோன்றவேண்டும் என்ற ஆவலில் பிஞ்சு குழந்தைகளை படிப்பு தவிர பாட்டு, நடனம், கராத்தே என தனித்திறமை வகுப்புகளுக்கு டியூசன் அனுப்புகின்றனர்.

அது போன்ற வகுப்புகளுக்கு குழந்தைகள் விரும்பி சென்றால் எந்த பாதிப்பும் இல்லை. அதே சமயம் அவர்களுக்கு விருப்பமே இல்லாமல் அதுபோன்ற வகுப்புகளுக்கு அனுப்பி வைப்பது காசு கொடுத்து நாமே நம் பிள்ளைகளுக்கு சூனியம் வைப்பதற்கு சமம் என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இரவு பகலாக பயிற்சியில் ஈடுபடுகின்றனர். பாட்டு நிகழ்ச்சி என்றால் குரல் வளம் மட்டுமே பாதிக்கப்படும். நடனம் என்றால் உடலின் அனைத்து உறுப்புகளும் ஓய்வுக்காக கெஞ்சும் நிலைக்கு வந்து விடும். டிவியில் வந்து நடனம் ஆடும் போது அந்த புகழ் வெளிச்சம் பெற்றோர்களுக்கு நன்றாகத்தான் இருக்கும். இயல்பாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதேசமயம் பெற்றோர்களின் கட்டாயத்திற்காக அவர்கள் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொள்ளும் பட்சத்தில் உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். தோல்வியை தாங்கும் மனப்பக்கும் இல்லாத குழந்தைகள் மன ரீதியான பாதிப்பிற்கும் ஆளாகும் சூழ்நிலை உருவாகும் என்பதே நிபுணர்களின் எச்சரிக்கையாகும்.

டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த வேண்டும் என்பதற்காக ரியாலிட்டி ஷோ வில் சில செயற்கைத்தனமான செயல்களும் செய்யப்படுவதுண்டு. அதை உண்மை என்று நம்பிவிடும் குழந்தைகளும், பெற்றோர்கள் சில சமயம் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். அதேபோல் டிவி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் குழந்தைகளுடன் வீட்டில் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருக்கும் நமது குழந்தைகளை ஒப்பிடவே கூடாது. ஏனெனில் அந்த குழந்தைகளின் சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். அதற்கு அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எத்தனையோ தியாகங்களை செய்துள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்க அந்த குழந்தைகள் போடும் மேக் அப் அவர்களின் சருமத்தை பாதிக்கும். அதே போல் செயற்கை வெளிச்சம் குழந்தைகளின் கண்களையும் பாதிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.ஆனால் நமது குழந்தைகளுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. நாம் அளிக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப நம் குழந்தைகள் நிச்சயம் முன்னேறுவார்கள். அதேசமயம் பிற குழந்தைகளுடன் ஒப்பிடும் போது பெற்றோர் மீதே ஒரு வெறுப்பு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

எனவே பெற்றோர்களே உங்கள் குழந்தைகளும் ஹீரோக்கள்தான். தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ வில் பங்கேற்கும் அளவிற்கு திறமைசாலியாக இல்லை என்பதற்காக மட்டம் தட்டிப் பேசி அவர்களை ஜீரோவாக்கி விடாதீர்கள் என்கின்றனர் நிபுணர்கள். தமிழ்நாட்டு பெற்றோர்கள் இதை கருத்தில் கொள்வார்களா?
Close
 
 

இணையத்தைக் கலக்கும் இளையராஜாவின் இசை முன்னோட்டம்!

Ilayaraaja S Neethaane En Ponvasant
இன்றைய தேதிக்கு இணையதளங்களில் பல ஆயிரம் முறை பகிரப்பட்ட, பார்த்து ரசிக்கப்பட்ட, ஆசை தீர பாராட்டி எழுதிக் கொண்டாடப்படும் இசைக் கோர்வை நீதானே என் பொன்வசந்தம்தான்!

லண்டன் ஸ்டுடியோவில் புகழ்பெற்ற சிம்பொனி இசைக் கலைஞர்கள் மற்றும் தனது குழுவினர் 108 பேருடன் இளையராஜா நடத்திய இசை ராஜாங்கத்துக்கு ஒரு சாம்பிளாக இந்த இசைக் கோர்வையை நீதானே என் பொன்வசந்தம் இயக்குநரும் தயாரிப்பாளரும் வெளியிட்டுள்ளனர்.

ஒரு நிமிடத்துக்கும் குறைவாக ஒலிக்கும் இந்த இசைக் கோர்வை, இசைஞானியின் புதிய இசைப் பரிமாணத்தைக் காட்டுவதாக உள்ளது.

இதுபோன்று இன்னும் சில இசைக் கோர்வைகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, ஒரு படத்தின் இசைக்கு மட்டும் இத்தனை முக்கியத்துவம் தரப்படும் படம், சமீப காலத்தில் நீதானே என் பொன்வசந்தமாகத்தான் இருக்கும். தெலுங்கிலும் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த இசை.



ரூ 2.50 கோடிக்கு இதன் வெளியீட்டு உரிமையை சோனி நிறுவனத்துக்கு தரவிருப்பதாகத் தெரிகிறது.

இளையராஜாவின் இசை அபிமானிகளுக்கு இது மிகுந்த உற்சாகத்தைத் தருவதாக உள்ளது. குறிப்பாக இந்தத் தலைமுறை ரசிகர்கள் இளையராஜா இசையை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டை ஒரு திருவிழாவாகக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்!
Close
 
 

நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு மூன்றாவது முறையாக சரத்குமார் போட்டி!

Sarath Kumar Contest Nadigar Sangam President
சென்னை: நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் நடிகர் சரத்குமார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளை சேர்ந்த நடிகர்-நடிகைகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நாடக நடிகர்களையும் சேர்த்து மொத்தம் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள்.

இந்த சங்கத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், அஞ்சலிதேவி, ராதாரவி, விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர்.

நடிகர் சங்கத்துக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். 2012-2015-ம் ஆண்டுக்கான தேர்தல், அடுத்த மாதம் (ஜுன்) 10-ந் தேதி நடைபெற இருக்கிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. 25-ந் தேதி வேட்பு மனு தாக்கல் முடிவடையும். 30-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

ஜுன் 10-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறும். கவிஞர் பிறைசூடன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்துகிறார்.

மூன்றாவது முறை

கடந்த இரண்டு முறையாக தலைவராக இருந்து வரும் சரத்குமார், மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

அவருடன், இப்போது துணைத்தலைவராக இருந்து வரும் விஜயகுமார், பொதுச்செயலாளராக இருந்து வரும் ராதாரவி, பொருளாளராக இருந்து வரும் வாகை சந்திரசேகர் ஆகியோரும் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

இந்த அணியை எதிர்த்துக் களமிறங்க ஒரு குழு மும்முரமாகி வருகிறது. இதுகுறித்த விவரங்கள் நாளை மறுநாள் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
Close
 
 

சீரியல் அண்ணிகள் எல்லாமே வில்லிகள்தானா?

Real Vs Reel Serial Sister Laws Round Up
நெடுந்தொடர்களில் வரும் அண்ணி கதாபாத்திரம் பெரும்பாலும் வில்லியாக சித்தரிக்கப்படுவதால் அண்ணி என்றாலே அலறும் நிலைக்கு வந்து விட்டனர் சீரியல் பார்க்கும் திருவாளர் பொது ஜனங்கள். ரீல் அண்ணிகளினால் தியாக மனப்பான்மையுடன் இருக்கும் ரியல் அண்ணிகள் பாதிக்கப்படுகின்றனர் என்பது கண்கூடாக தெரியவந்துள்ளது. இதோ சிலரின் அனுபவங்கள் உங்களுக்காக.

“அவளுக்கு நிறைய சொத்து இருக்கு, அவளை விட நான் பெரிய பணக்காரி ஆகணும். அவளுக்கு குழந்தையே உருவாக கூடாதுன்னுதான் அவ கருவறைக்கே நான் விஷம் வைச்சேன்.” என்ன இது? என்று படிப்பவர்கள் புலம்புவது கேட்கிறது. இது ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் பிரபலமான ஒரு நெடுந்தொடரில் அண்ணி கதாபாத்திரம் பேசும் வசனம் மத்தியான நேரத்தில் இரண்டு மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரை பார்த்தால்தான் மத்தியான சாப்பாடே சிலருக்கு வயிற்றுக்குள் இறங்குகிறது.

இந்த தொடரில் வரும் அண்ணி கதாபாத்திரம் உலக பிரசித்தம். கணவரின் தங்கைக்கு குழந்தை பிறக்கக் கூடாது என்று விஷம் வைக்கிறாளாம். அவளின் சொத்தை அபகரிக்க லாரியை ஏற்றி கணவரின் தங்கை குடும்பத்தையே அழிக்க நினைக்கிறாளாம். இதையே ஆயிரம் எபிசோடுவரை ஓட்டிவிட்டார்கள். இந்த தொடரை விடாமல் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருப்பதால் அதை கணக்கெடுத்த திருடர்கள் அந்த நேரத்தில் சிலிண்டர்களை ஆட்டையை போட்டு சென்றுவிடுகின்றனராம். ( பேப்பரில் வந்த செய்தி)

இதை விட இரவு நேரத்தில் 8 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியலில் வரும் அண்ணியோ கூட இருந்தே குழி பறிக்கும் கதாபாத்திரம். கணவரின் மூன்று தங்கைகளின் வாழ்க்கையும் அழிந்து போகவேண்டும் என்று விரும்பும் அந்த அண்ணி தனது அம்மா, அண்ணனுடன் சேர்ந்து கணவரின் குடும்பத்தையே கதற அடிக்கிறாள். ( அப்புறம் எப்படி அண்ணி என்றாலே ஒரு நம்பிக்கை வரும்)

சித்தி என்றாலே வில்லி என்று சித்தரித்து அந்த புண்ணியத்தை திரைப்படங்கள் கட்டிக்கொண்டன என்றால் அண்ணி என்றாலே அலறவைக்கும் வில்லி என்று கதாபாத்திரங்களை சித்தரிக்கின்றன டிவி தொடர்கள். இதனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் அண்ணி என்றாலே எதிரியை பார்ப்பது போல பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதனால் குடும்பத்தில் குழப்பமும் விரிசலும் ஏற்படுகின்றன என்கின்றனர் ரியல் அண்ணிகள். (குடும்ப உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற சீரியல்களை தடை செய்யவேண்டும் என்று மலேசியாவில் கூட தடை போட முடிவு செய்துள்ளனர் என்பது சந்தோச சமாச்சாரம். )

அதிலும் சில விலக்குகள் உண்டு மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு தொடரில் சற்றே வித்தியாசமான நல்லது செய்யும் அண்ணி கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. தனது கணவரின் குடும்பத்திற்காக அனைத்து தியாகங்களையும் செய்யும் அண்ணியாக வருகிறார் தேவயானி. ராதிகாவும் கூட நல்ல அண்ணியாகத்தான் நடித்திருக்கிறார். ஆனால் நம்ம மக்கள்தான் நல்லது சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள அதிக காலம் எடுத்துக்கொள்வார்களே. அதே சமயம் தீயதை ஒருமுறை சொன்னால் உடனே அதையே பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள். எனவே இயக்குநர் பெருமக்களே இனியாவது அண்ணி கதாபாத்திரத்திற்கு என்று ஒரு மரியாதையை அளியுங்கள். ஏனென்றால் அண்ணி என்பவர் மற்றொரு அம்மா. நெடுந்தொடர்களில் வரும் அண்ணிகளால் எல்லா அண்ணிகளுமே பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது என்கின்றனர் தமிழ்நாட்டில் வசிக்கும் அண்ணிகள். சற்றே கவனிப்பார்களா?.
Close