தெனாலிராமன் முழுக்க முழுக்க கற்பனைக் கதையே - ஏஜிஎஸ் விளக்கம்

சென்னை: தெனாலிராமன் படத்தின் கதை முழுக்க முழுக்க கற்பனையே. இதில் சரித்திர சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை, என்று ஏஜிஎஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தெனாலிராமன் படத்தில் மாமன்னன், தெனாலிராமன் என இரு வேடங்களில் நடிக்கிறார் வடிவேலு. அவரது சினிமா மறுபிரவேசப் படம் இது.

தெனாலிராமன் முழுக்க முழுக்க கற்பனைக் கதையே - ஏஜிஎஸ் விளக்கம்

இதில் மன்னர் வேடம் கிருஷ்ணதேவராயரைக் குறிப்பதாகவும், அவர் தொடர்பான காட்சிகளில் கிண்டலும் கேலியும் இருப்பதாகவும் கூறி தெலுங்கு அமைப்புகள் சர்ச்சை கிளப்பி வருகின்றன. தலைமைச் செயலரிடம் இது தொடர்பாக கடிதமும் கொடுத்துள்ளனர்.

வரும் ஏப்ரல் 18-ம் தேதி படம் வெளியாக உள்ள சூழலில், இந்த சர்ச்சை பதட்டத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் தெனாலிராமன் படத்தின் கதை குறித்து அதிகாரப்பூர்வமாக ஒரு விளக்கம் அளித்துள்ளது படத்தைத் தயாரித்துள்ள ஏஜிஎஸ் நிறுவனம்.

தெனாலிராமன் முழுக்க முழுக்க கற்பனைக் கதையே - ஏஜிஎஸ் விளக்கம்

அந்த விளக்க அறிக்கையில், "இந்தத் திரைப்படம் தெனாலிராமன் மற்றும் பிற நீதிக் கதைகளைத் தழுவி எழுதப்பட்டுள்ள ஒரு கற்பனைக் கதை. இப்படம் தெனாலிராமன் வாழ்க்கையைப் பற்றியோ, அவர் சம்பந்தப்பட்ட இன்னும் சில முக்கியப் பிரமுகர்களின் வரலாற்றையோ பதிவு செய்யும் படமல்ல.

கிபி 15-ம் நூற்றாண்டில் நடைபெற்ற வாழ்க்கை முறையைப் பின் புலமாகக் கொண்டு, தற்கால நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு புனைகதை.

இத் திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் முழுக் கற்பனையே. பெயர்களும் சம்பவங்களும் எவரையும் குறிப்பிட்டு அமைக்கப்படவில்லை. அப்படி ஒத்திருந்தாலும் அது தற்செயலே!," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பிரபு தேவா படம்... ரஹ்மான் இசை... காமெடிக்கு வடிவேலு!

வடிவேலுவின் அஞ்ஞாதவாசம் முடிந்து, மீண்டும் கலகல காமெடிவாசம் ஆரம்பித்துவிட்டது.

வரும் ஏப்ரல் 18-ம் தேதி அவர் ஹீரோவாக நடித்த தெனாலிராமன் வெளியாகிறது.

அடுத்து மீண்டும் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கப் போவதாகக் கூறியிருந்தார். அந்தப் படம் தொடங்கினாலும் வழக்கம்போல காமெடி வேடங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.

பிரபு தேவா படம்... ரஹ்மான் இசை... காமெடிக்கு வடிவேலு!

நான்கைந்து படங்களில் நடிக்கப் பேசி வரும் வடிவேலு, உடனடியாக ஓகே செய்திருப்பது பிரபுதேவா படத்தை.

ஏற்கெனவே பிரபுதேவா இயக்கிய போக்கிரி, வில்லு படங்களில் வடிவேலு காமெடி மிகப் பிரபலம்.

இந்திப் படத்தை முடித்துவிட்டு தமிழுக்கு வரும் பிரபு தேவா, முன்னணி நடிகரை வைத்து தன் அடுத்த தமிழ்ப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இசை ஏ ஆர் ரஹ்மான்.

காமெடிக்கு வைகைப் புயல். பிரபுதேவா விஷயத்தைச் சொன்னதே, சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாராம் வடிவேலு.

 

எப்போதும் வென்றான் படத்தை வெளியிட தடை: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: எப்போதும் வென்றான் படத்தை வெளியிட சென்னை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை 18 வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆர்.ரங்கநாதன் தாக்கல் செய்த மனுவில், "எப்போதும் வென்றான் படத்தை எடுக்க அதன் தயாரிப்பாளர் ராஜாராம் என் தந்தையிடம் ரூ.95 லட்சம் பெற்றார். என் தந்தை இறந்து விட்டதால் பணத்தை திருப்பிக் கேட்டேன்.

எப்போதும் வென்றான் படத்தை வெளியிட தடை: நீதிமன்றம் உத்தரவு

படத்தை வெளியிடுவதற்கு முன் தந்து விடுவதாகக் கூறினார். தற்போது பணத்தை தராமல் படத்தை 4 - ந்தேதி வெளியிடுவதாக விளம்பரம் செய்துள்ளனர். எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும்," என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.டி.அம்பிகா எப்போதும் வென்றான் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தார்.

சஞ்சய், சுனு லட்சுமி நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

இதே போன்ற பிரச்சினைக்காகத்தான் நேற்று முன்தினம் ஸ்ரீகாந்தின் ஓம் சாந்தி ஓம் படத்துக்கும் தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

 

வடிவேலுவின் தெனாலிராமனுக்கு தடை விதித்தே தீர வேண்டும்- தெலுங்கு அமைப்புகள் அடம்!

சென்னை: வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் படத்தை தடை செய்ய வேண்டும் என்று தலைமை செயலாளரிடம் தெலுங்கு சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு இடைவெளிக்குப் பிறகு தெனாலிராமன் என்ற புதிய படத்தில் வடிவேலு நடித்துள்ளார். இது கற்பனையும் வரலாறும் கலந்த கதையாகும். அதாவது தெனாலிராமன் பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கற்பனையான மன்னர் பாத்திரத்தைப் படைத்துள்ளனர்.

வடிவேலுவின் தெனாலிராமனுக்கு தடை விதித்தே தீர வேண்டும்- தெலுங்கு அமைப்புகள் அடம்!

இதனை வடிவேலுவும், இயக்குநர் யுவராஜும் பல முறை விளக்கமாகச் சொல்லிவிட்டனர். கிருஷ்ணதேவராயர் என்ற பெயரே படத்தில் இடம்பெறவில்லை என்றும் கூறிவிட்டனர்.

ஆனால் தெலுங்கு அமைப்புகள் சில இந்தப் படம் கிருஷ்ணதேவராயரை அவமானப்படுத்துவதாக உள்ளதாகக் கூறி சர்ச்சை கிளப்பி வருகின்றன.

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் அலுவலகத்தில், தெலுங்கு சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி சங்க தலைவர் ஜெகதீஷ்வர ரெட்டி கொடுத்த மனுவில், "தற்போது வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் என்ற திரைப்படம் மூலம் எங்களது உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன. 16-ம் நூற்றாண்டில் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் என்ற ராஜாவின் வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்.

வடிவேலுவின் தெனாலிராமனுக்கு தடை விதித்தே தீர வேண்டும்- தெலுங்கு அமைப்புகள் அடம்!

தெனாலிராமன்

சிறந்த அரசாட்சியையும், நிர்வாகத்தையும் வழங்கி, திராவிட மொழிகளை ஆதரித்த அரசனை நகைச்சுவை வேடத்தில் பயன்படுத்துவது, அவரை அவமதிப்பதாகும்.

கிருஷ்ண தேவராயருக்கு 38 மனைவிகளும், 58 குழந்தைகளும் இருப்பதாக படத்தில் காட்டுகின்றனர். ஆனால் அவருக்கு உண்மையில் அவ்வளவு மனைவி, குழந்தைகள் இருந்ததில்லை.ஆனால் கிருஷ்ண தேவராயர் பற்றிய படம் அதுவல்ல என்று தயாரிப்பாளர்களின் தரப்பு மறுக்கிறது. வரலாற்று சம்பவங்களை ஒப்பிட்டு பார்த்தால், அந்த படம் அவரைத்தான் சுட்டிக்காட்டுகிறது என்பது புரியும்.

எனவே எங்கள் சந்தேகம் தீர்க்கப்படும் வகையில், தெனாலிராமன் திரைப்படத்தை திரையிடுவதற்கு முன்பு, வரலாற்று ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், தெலுங்கு அமைப்பினரை கொண்ட குழு, அந்த படத்தை பார்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வடிவேலுவின் தெனாலிராமனுக்கு தடை விதித்தே தீர வேண்டும்- தெலுங்கு அமைப்புகள் அடம்!

அதன் பின்னர், ஆட்சேபனைக்குரிய காட்சிகளை அகற்றுவதற்கு உத்தரவிட வேண்டும். அந்த இரண்டு பேரின் வேடமும் திரைப்படம் முழுவதும் தொடருமானால், முழு படத்தையும் திரையிட தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்கள் சுயமரியாதை கேள்விக்குரியதாகிவிடும்,'' என்று கூறப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 18-ம் தேதி இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. அதற்கு முன் எதிர்ப்பாளர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டவும் தயாராக உள்ளதாக வடிவேலு தரப்பு கூறியுள்ளது.