கிசு கிசு - ஏகப்பட்ட பொறாமை... ஹீரோ வருத்தம்...

Tags:


Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

ஏகப்பட்ட பொறாமை… ஹீரோ வருத்தம்…

4/30/2011 1:53:09 PM

நல்லகாலம் பொறக்குது…
நல்லகாலம் பொறக்குது….

மோத்வானி நடிகைக்கு கோலிவுட், டோலிவுட்ல வாய்ப்புகள் வந்து கொட்டுறதால, மற்ற நடிகைங்க காதுல கன்னபின்னான்னு புகையாம்… புகையாம்… இதுல முக்கியமா, சீனியர் நடிகைகளுக்குதான் ஏகப்பட்ட புகையாம்… ‘இந்த கண், அந்த கண்ணு’ன்னு ஏகப்பட்ட கண் பட்டதுல, மோத்வானி நடிகைக்கு ரெண்டு நாளா உடல் சரியில்லாம போச்சாம்… போச்சாம்… இதனால எல்லா புகையும் ஆறணுங்கறதுக்காக, நடிகையும் அவரோட தாய்க்குலமும் ஏழுமலையானை சந்திச்சு சிறப்பு பிரார்த்தனை பண்ணிட்டு வந்திருக்காங்களாம்… வந்திருக்காங்களாம்…

பட் பட்டுனு வளர்ந்து வந்த தமன்ன நடிகைக்கு தமிழ்ல ஒண்ணும், தெலுங்குல ஒண்ணுமாகதான் படம் இருக்குதாம்… இருக்குதாம்… எப்படியாவது சம்பளத்தை குறைச்சு, மீண்டும் வாய்ப்பு வாங்கலாம்னு நினைச்சாலும் முடியலையாம்… முடியலையாம்… அதெப்படி திடீர்னு நம்ம மார்க்கெட் குறைஞ்சதுன்னு நடிகையும் அவரது அம்மாவும் யோசிச்சுட்டு இருக்காங்களாம்… ரூம்ல யோசிச்சுட்டு இருக்காங்களாம்…

ஒளிப்பதிவாள இயக்குனரோட கோவான படத்துல, மூணெழுத்து இன்ஷியலா பேரை சுருக்கி வச்சுக்கிட்ட ஹீரோ முதல்ல நடிக்க இருந்தாரு… திடீர்னு கதை சரியில்லைன்னு நடிகரு விலகிட்டாரு… விலகிட்டாரு… இப்ப படம் ஹிட்டானதுல இன்ஷியலு அப்செட்டாயிட்டாராம்… ஆயிட்டாராம்… ‘எங்க மிஸ்டேக் நடந்ததுன்னு தெரியலை’ங்கற மாதிரி நண்பர்கள்கிட்ட ரொம்ப வருத்தமா பேசிட்டிருக்காராம்… இன்ஷியல் பேசிட்டிருக்காராம்…

 

வில்லியாக நடிக்க பியா ஓ.கே

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வில்லியாக நடிக்க பியா ஓ.கே

4/30/2011 1:51:43 PM

'பொய் சொல்லப்போறோம்', 'கோவா', 'கோ' படங்களில் நடித்துள்ள பியா கூறியதாவது: 'கோ'வில் கிளாமராக நடித்ததை கண்டு அதிர்ச்சி தெரிவிக்கிறார்கள். கிளாமர் என்பது சினிமாவில் ஒரு பகுதி. சிறுவன் ஒருவன் எனது உடைகள் நழுவி இருப்பதை பார்த்து ஜொள்ளுவிடுவதுபோல் வரும் காட்சியில் நடித்தது தவறு என்கிறார்கள். அதில் என்ன தவறு? இதை ஜாலியான காட்சியாக ரசிகர்கள் எடுத்துக்கொண்டு தியேட்டரில் சிரிக்கிறார்கள். முத்தக்காட்சியில் நடிப்பதிலும் எனக்கு பிரச்னை இல்லை. பிகினி டிரஸ் அணியவும் தயக்கமில்லை. ஹீரோயின் வேடம்தான் வேண்டும் என்று காத்திருக்காமல் நல்ல கேரக்டர் கிடைத்தாலும் நடிப்பேன். வில்லி வேடம் என்றாலும் மறுக்க மாட்டேன்.

 

அஞ்சலியிடம் கிளாமருக்கு இடமில்லை!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அஞ்சலியிடம் கிளாமருக்கு இடமில்லை!

4/30/2011 1:50:27 PM

'கிளாமராக எப்போதும் நடிக்க மாட்டேன்' என்று அஞ்சலி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் 'எங்கேயும் எப்போதும்' படத்தில் ஜெய் ஜோடியாக நடிக்கிறேன். நிறைய படங்களில் நடித்துவிட்டேன். இதுவரை வசந்தபாலனின் 'அங்காடி தெரு'தான் எனது அடையாளமாக இருக்கிறது. அந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாது. 'இந்த கேரக்டரில் செயற்கையாக நடிக்கக் கூடாது. கதாபாத்திரத்துக்கு ஏற்ப இயற்கையான பாவனைகள் செய்தால் போதும். அப்போதுதான் அந்த வேடத்தோடு ரசிகர்களால் ஒன்ற முடியும்' என்று இயக்குனர் வசந்தபாலன் கூறினார். அவர் கூறியது எவ்வளவு உண்மை என்று படம் ரிலீஸ் ஆன பிறகு தெரிந்துகொண்டேன். மீண்டும் அவர் படத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். விரைவில் அதற்கான வாய்ப்பு அமையும். ஒரு படத்தில், நான் கிளாமராக நடித்துள்ளதாகக் கூறுகிறார்கள். அதில் உண்மை இல்லை. என்னிடம் கிளாமருக்கு இடம் கிடையாது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்கள்தான் என்னை தேடி வருகிறது. அதைத்தான் நானும் விரும்புகிறேன்.

 

பிகினி அணிய தைரியம் இல்லை!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிகினி அணிய தைரியம் இல்லை!

4/30/2011 10:54:22 AM

பிகினி உடை அணிந்து நடிக்க தைரியமில்லை என்று பூர்ணா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழில் நந்தாவுடன் நடித்த 'வேலூர் மாவட்டம்' ஷூட்டிங் முடிந்து விட்டது. பார்த்திபனுடன் 'வித்தகன்' பாடல் காட்சி பாக்கி இருக்கிறது. தெலுங்கில் அல்லரி நரேஷுடன் 'சீம டப்பாகாய்' படத்தில் நடித்துள்ளேன். அடுத்த மாதம் ரிலீஸ். இதில் நான் கிளாமராக நடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லை. இந்த ஷூட்டிங்கில் நான் அணிந்து நடிக்க வேண்டிய உடைகள் சம்பந்தமாக சிலரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மை. தெலுங்கில், குறிப்பாக பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடிக்கச் சொல்வார்கள். நானும் ஒரு வரையறைக்குள் நடித்திருக்கிறேன். பிகினி உடையில் நடிப்பீர்களா என்கிறார்கள். அதற்கு துணிச்சல் வேண்டும். அது எனக்கு இல்லை.

 

நடிகர் கார்த்திரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் : கொடுமுடி அருகே கிராமத்தில் நடந்தது

Tags: nbsp

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகர் கார்த்திரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் : கொடுமுடி அருகே கிராமத்தில் நடந்தது

4/30/2011 10:58:23 AM

நடிகர் கார்த்தி  ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் கொடுமுடி அருகே கிராமத்தில் உள்ள மணப்பெண் வீட்டில் நேற்று நடந்தது. நடிகர் சிவகுமார்  லட்சுமி தம்பதியின் இளைய மகன் கார்த்தி. பருத்தி வீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை ஆகிய படங்களில் நடித்துள்ளார். சென்னையில் பிஇ படித்த அவர், அமெரிக்காவில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பட்டம் பெற்றுள்ளார். கார்த்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள குமாரசாமி கவுண்டம்பாளையம் விவசாய குடும்பத்தை சேர்ந்த சின்னசாமி  ஜோதி மீனாட்சி தம்பதியின் மகள் ரஞ்சனியை மணக்கிறார். ரஞ்சனி எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்து முடித்துள்ளார். இவரது தம்பி ராம்குமார், சென்னை லயோலா கல்லூரியில் எம்பில் படித்து வருகிறார்.

கார்த்தி  ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் நேற்று மதியம் மணமகள் இல்லத்தில் நடந்தது. நடிகர் சிவகுமார், அவரது மனைவி லட்சுமி, மூத்த மகன் நடிகர் சூர்யா, தங்கை பிருந்தா, அவரது கணவர் சிவகுமார், சூர்யாவின் மகள் தியா கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் குமாரசாமி கவுண்டம்பாளையம் விநாயகர் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு மணப்பெண் வீட்டுக்கு வந்தனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு இரு தரப்பிலும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கார்த்தி, சூர்யா வருவதை அறிந்த கிராம மக்களும் ரசிகர்களும் ஏராளமானோர் குமாரசாமி கவுண்டம்பாளையத்தில் நேற்று குவிந்திருந்தனர். கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. நடிகர் கார்த்தி மணக்கப்போகும் பெண், தங்கள் கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் கிராமமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கார்த்தி  ரஞ்சனி திருமணம் கோவை கொடீசியா வளாகத்தில் ஜூலை மாதம் 3ம் தேதி நடக்க உள்ளது.




 

படமாகிறது சாய்பாபா வரலாறு

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
படமாகிறது சாய்பாபா வரலாறு

4/30/2011 10:56:27 AM

ஐதராபாத்: உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டவர் சத்ய சாய்பாபா. இவர், கடந்த 24ம் தேதி புட்டபர்த்தியில் மறைந்தார். சிறுவயதிலேயே ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பாபா, பிரசாந்தி நிலையம் என்ற ஆசிரமம் நடத்தினார். ஆன்மிகத்துடன் சமூக சேவைகளிலும் ஈடுபடத் தொடங்கினார். பின்தங்கிய கிராமமாக இருந்த புட்டபர்த்தி உலகத்தினரின் கவனத்தை ஈர்ப்பதற்கு காரணமாக இருந்தது பாபாவின் ஆன்மிகப்பணி. இதை மையமாக வைத்து அவரது வாழ்க்கை வரலாறை சிசி மோஷன் பிக்சர்ஸ் என்ற கார்பரேட் நிறுவனம் படமாகத் தயாரிக்கிறது. 'இதில் நடிப்பவர்கள் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி பேச்சு நடக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்' என்று பட நிறுவனம் தெரிவித்துள்ளது.




 

பாலச்சந்தருக்கு பால்கே விருது

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாலச்சந்தருக்கு பால்கே விருது

4/30/2011 10:57:15 AM

தாதா சாகேப் பால்கே விருதுக்கு, தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தரை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக திரைப்பட இயக்குனராகவும் வசன கர்த்தாவாகவும் தயாரிப்பாளராகவும் புகழ்பெற்று விளங்குபவர் கே.பாலச்சந்தர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். இதை கவுரவிக்கும் வகையில் தாதே சாகேப் பால்கே விருது பாலச்சந்தருக்கு வழங்கப்படுகிறது. இவருக்கு தங்க தாமரை விருது, ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை டெல்லியில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளன. கடந்த 87ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. தவிர பல்வேறு மத்திய, மாநில அரசு விருதுகளையும் பாலச்சந்தர் பெற்றுள்ளார்.




 

தமிழில் பின்னணி டாப்ஸி ஆசை!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் பின்னணி டாப்ஸி ஆசை!

4/30/2011 10:55:18 AM

ஜீவாவுடன் 'வந்தான் வென்றான்' படத்தில் நடித்து வரும் டாப்ஸி கூறியதாவது: 'ஆடுகளம்' படத்துக்குப் பிறகு என் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. கண்ணன் இயக்கும் 'வந்தான் வென்றான்' படம் எனக்கு வேறொரு அடையாளத்தை கொடுக்கும். நான் அதிக சம்பளம் கேட்பதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. என் தகுதிக்கு என்ன தேவையோ அதைதான் கேட்கிறேன். தெலுங்கில் நான் நடித்துள்ள 'மிஸ்டர் பெர்பக்ட்' சமீபத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. பிரபாஸ், காஜலுடன் என் நடிப்பும் இதில் பேசப்படுகிறது. இந்தப் படத்துக்கு நானே டப்பிங் பேசியுள்ளேன். இதே போல தமிழிலும் பின்னணி பேச ஆசை இருக்கிறது. அதற்காக தமிழ் கற்று வருகிறேன். இப்போது யாராவது பேசினால் புரிந்துகொள்ள முடிகிறது. விரைவில் தமிழில் பேசுவேன். தெலுங்கில் ரவிதேஜாவுடன் 'வீரா' படத்தில் இப்போது நடித்துவருகிறேன். தமிழில் ஒரு படத்தில் நடிக்க பேச்சு நடந்து வருகிறது. இவ்வாறு டாப்ஸி கூறினார்.




 

சைக்கோ வில்லன் ஆனார் விவேக்

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சைக்கோ வில்லன் ஆனார் விவேக்

4/30/2011 10:55:52 AM

சைக்கோ வில்லன் வேடத்தில் காமெடி நடிகர் விவேக் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 25 வருடங்களில் தமிழ், மலையாளத்தில் 450 படங்களில் நடித்து விட்டேன். இப்போது பெயரிடப்படாத படம் ஒன்றில் சைக்கோ வில்லன் வேடத்தில் நடிக்கிறேன். காமெடி பாணியிலிருந்து விலகி, வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த கேரக்டரை தேர்வு செய்தேன். மிதுன் ஹீரோ. அன்புச்செழியன் இயக்குகிறார். மலைப்பகுதிகளில் ஷூட்டிங் நடக்க உள்ளது. இதற்காக எனது கெட்டப்பை மாற்றுகிறேன். இதற்குமுன் நடித்த எந்த நடிகரின் சாயலும் இல்லாமல், வில்லன் வேடம் ஏற்றுள்ளேன். எனக்குள் எப்படி சைக்கோத்தனம் புகுந்தது, ஏன் வில்லன் ஆனேன் என்பதற்கான காட்சி புதுமையாக இருக்கும்.




 

நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன் : அஜீத்

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன் : அஜீத்

4/30/2011 10:13:16 AM

'எனது தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்' என்று அஜீத்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். மே 1-ம் தேதி அஜித்குமாரின் பிறந்தநாள். பிறந்தநாள் அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், அவர் மேலும் கூறியுள்ளதாவது: 'அமராவதி' படம் மூலம் தொடங்கிய என் திரையுலகப் பயணத்தில், 'மங்காத்தா' 50-வது படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப்பயணத்தில், எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாட்களாகவே என்னை சிந்திக்க வைத்த ஒரு கருத்தை சொல்ல இன்றே உகந்த நேரம் என்று கருதி, இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்துக்காகப் பயன்படுத்தியது இல்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை. பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு தரவும், சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை அறிவேன். என் ரசிகர்களிடையே இக்காரணத்தைக் கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை, பார்க்கவும் மாட்டேன். கோஷ்டிப் பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டுக்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என் எண்ண ஓட்டத்துக்கு உகந்ததாக இல்லை. சமுதாயநலப் பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக, தங்களது குடும்பத்துக்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறேன். நலத்திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம். நல்ல உள்ளமும், எண்ணமும் போதும் என்பதே என் கருத்து. மே 1-ம் தேதி எனது 40-வது பிறந்தநாளில், இந்த கருத்தையே எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்றுமுதல் எனது தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த 'அஜித்குமார் நற்பணி இயக்கத்தை' கலைக்கிறேன். மாறிவரும் காலகட்டத்தில், மக்கள் எல்லோரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, திரைப்படத்துக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் கவுரவம் கிடைக்கும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது பிறந்தநாள் பரிசாகும். இவ்வாறு அஜித்குமார் அறிக்கையில் கூறியுள்ளார். அஜீத்தின் இந்த முடிவு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன் : அஜீத்

 

அஜீரண கோளாறு : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் ரஜினி!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அஜீரண கோளாறு : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் ரஜினி!

4/30/2011 9:49:57 AM

நடிகர் ரஜினிகாந்த் அஜீரண கோளாறு காரணமாக மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். முதல்வர் கருணாநிதி நேரில் பார்த்து நலம் விசாரித்தார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கும் படம், ராணா. இப்படத்தின் தொடக்க விழா, சென்னை ஏவி.எம் ஸ்டுடியோவில் நேற்று காலை நடந்தது. இதில் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடித்த காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ரஜினிகாந்த் சோர்வாக இருந்தார். மதியம் 12.30 மணி வரை ராணா படப்பிடிப்பில் பங்கேற்ற அவர், அப்போது கொடுக்கப்பட்ட உணவை சாப்பிட்டார்.

உடனே அவருக்கு கடுமையான வயிற்று வலியும், அதை தொடர்ந்து வாந்தியும் ஏற்பட்டது. மேலும் சோர்வடைந்த அவர், மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு ரஜினிகாந்தை பரிசோதித்த டாக்டர்கள், நண்பகல் 1.45 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். பிறகு அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ரஜினி மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா தனுஷ், சவுந்தர்யா அஸ்வின் வந்தனர்.  

ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து லதா கூறியதாவது: உங்கள் வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால், மருத்துவமனைக்கு செல்வீர்கள் அல்லவா? அதுபோல்தான் அவரும் (ரஜினிகாந்த்) சிகிச்சை பெற வந்துள்ளார். இந்த விஷயம் இவ்வளவு பெரிய பரபரப்பாகி விட்டது என்பதை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. நேற்று நடந்த ராணா படப்பிடிப்பில் அவர், அங்கு ஏதோ சாப்பிட்டு இருக்கிறார்.

அது அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஃபுட் பாய்ஷன் ஆகிவிட்டது. வாந்தியும் எடுத்திருக்கிறார். எனவே, இசபெல் ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்துள்ளோம்.
இப்போது அவர் நலமாக இருக்கிறார். முன்பைவிட தெம்பாக இருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம். சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களில் அவர் வீட்டுக்கு செல்லலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் டாக்டர் சி.வி.கிருஷ்ணசாமி, டாக்டர் கிஷோர் இருவரும் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளித்தனர்.  பிறகு டாக்டர் கிஷோர், நிருபர்களிடம் கூறியதாவது: ரஜினிகாந்துக்கு வயிற்றில் அசிடிட்டி பிரச்னை ஏற்பட்டது. வாந்தியும் எடுத்து இருக்கிறார். இதனால், உடலில் நீர்ச்சத்து குறைந்து விட்டது. எனவே, அவருக்கு தரமான சிகிச்சை அளிப்பதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

உடனடியாக அவருக்கு இரண்டு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு, உரிய மருந்து, மாத்திரைகள் அளிக்கப்பட்டது. தீவிர கண்காணிப்பில் இருப்பதால், அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. மற்றபடி பெரிய அளவில் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவரது இதய துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசம் சீராக உள்ளது. சிகிச்சை முடிந்ததும் வீட்டுக்கு செல்வார். இவ்வாறு அவர் கூறினார்.

நலமாக இருக்கிறார்

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அறிந்த முதல்வர் கருணாநிதி, நேற்று மாலை 5.45 மணியளவில், இசபெல் மருத்துவமனையில் உள்ள தீவிர இருதய சிகிச்சைப் பிரிவுக்கு நேரில் வந்தார். அவருடன் கனிமொழியும் வந்தார். வாசலில் நின்றிருந்த ஐஸ்வர்யா தனுஷிடம், 'அப்பாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது?' என்று விசாரித்த முதல்வர், பிறகு ரஜினிகாந்த் இருந்த அறைக்கு சென்று, அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.

பிறகு வெளியே வந்த அவரிடம், ரஜினிகாந்த் எப்படி இருக்கிறார் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கருணாநிதி, 'அவருக்கு அஜீரண கோளாறு. இப்போது நலமாக இருக்கிறார். நன்றாக பேசுகிறார்' என்றார். பிறகு அவர் காரில் புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.




 

தமிழ்ப் பெயர் வேட்டையில் உதயநிதி!

Tags: English, female baby, hero, kal, kannadi, lsquo, movie, oru, rsquo, stalin, summaryUdhayanithi, tamil, tamil name, time


Hansika and Udayanithi
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஹீரோ உதயநிதி & ’1305′ என்ற ஆங்கில மாத இதழ் ஆசிரியர் கிருத்திகா ஜோடிக்கு, தாங்கள் எதிர்பார்த்தது போன்றே பெண் குழந்தை பிறந்ததில் ஏக சந்தோஷம்.

இப்போது அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தீவிரமாக பெயர் தேடிக்கொண்டிருக்கிறார்களாம். ஆண் குழந்தை பிறந்திருந்தால் இவ்வளவு சிரமம் இருந்திருக்காது. குடும்ப வழக்கப்படி தமிழ்ப் பெயருடன் ‘நிதி’ சேர்த்து வேலையை சுலபமாக்கிவிடலாம். அந்த வகையில்தான் தன் மூத்த மகனுக்கு ‘இன்பநிதி’ சுருக்கமாக ‘இன்பா’ என பெயர் வைத்தனர்.

பெண் குழந்தை என்பதால் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் இருந்தும் என்ன பெயர் வைக்கலாம் என்று ஆலோசனை கேட்டு வாங்கியபடி இருக்கிறார்களாம். குழந்தையின் தாத்தா ஸ்டாலினும் சில பெயர்களைச் சொல்லியிருக்கிறாராம்.

அநேகமாக ஒன்றிரண்டு நாட்களில் பெயர் தேர்வு இறுதிகட்டத்தை எட்டி அந்தப் பெயர் குடும்பத் தலைவர் கருணாநிதியால் சூட்டப்படும் என்று தெரிகிறது.

English summary
Udhayanithi Stalin, the producer turned hero in Oru Kal Oru Kannadi is seriously searching for a Tamil name. But this time it is not for a movie, but for his new born female baby!
 

ரஜினியின் ராணா நாளை ஆரம்பம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Tags: avm, magnum opus, pooja


Rana
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராணா படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராணா பூஜை கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடக்கவிருந்தது. ஆனால் தயாரிப்பு வேலைகள், ஸ்கிரிப்ட் பணிகள் மற்றும் தீபிகாவுக்கான தோற்ற வடிவமைப்பு குறித்த ஆலோசனைகள் நீண்டதால் ஒரு வாரம் தள்ளிப் போனதை முன்பே தெரிவித்திருந்தோம்.

இப்போது, அறிவித்தபடி ராணா படப்பிடிப்பு பூஜையுடன் நாளை ஏவிம்மில் அமர்க்களமாக ஆரம்பமாகிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ போஸ்டரும் வெளியாகியுள்ளது.

அனாவசிய வதந்திகளைத் தவிர்க்கும் பொருட்டு படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை அவ்வப்போது மீடியாவுக்குத் தெரிவிக்க முடிவு செய்துள்ள ரஜினி, மிகுந்த பாதுகாப்புடன் இந்த படப்பிடிப்பை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் பூஜை நடக்கிறது.

பின்னர், ஏவிஎம்மில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான செட்டில் படப்பிடிப்பு தொடர்கிறது. வெளிநாடுகளில், இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திராத அழகிய இடங்களில் இந்தப் பாடல்கள் படமாக்கப்படுகின்றன.

ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசை ஏஆர் ரஹ்மான். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவை கவனிக்க, கலை இயக்கத்துக்கு ராஜீவன் பொறுப்பேற்றுள்ளார். இயக்கம் கே எஸ் ரவிக்குமார். தயாரிப்பு: ஈராஸ் இன்டர்நேஷனல் கிஷோர் லுல்லா – ஆக்கர் ஸ்டுடியோஸ் சவுந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்த்.

தமிழ் மற்றும் இந்தியில் நேரடியாக வெளியாகும் இருமொழிப் படம் இது!

English summary
Superstar Rajini bilingual magnum opus Rana shooting will be launched tomorrow at AVM with formal pooja.
 

கைவிடப்படுகிறது பொன்னியின் செல்வன்?

Tags: director, dream, dream project, English, Manirathnam, mood, Ponniyin, project, revel, Selvan


Manirathnam
தொடங்கிய வேகத்திலேயே முற்றுப்புள்ளி விழும் போலிருக்கிறது, மணிரத்னத்தின் மெகா பட்ஜெட் படமான கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு!

படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் முடிவாகி, ஆளாளுக்கு பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்களையும் கரைத்துக் குடித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இந்தப் படம் தொடங்கப்படுவது சந்தேகமே என்ற தகவல்கள் வதந்திகளாக ஆரம்பித்து, செய்தியாகும் நிலையில் உள்ளதாக கோடம்பாக்கப் புள்ளிகள் கூறுகிறார்கள்.

காரணம் என்னவென்று இதுவரை அறியப்படவில்லை.

இதுகுறித்து எதுவும் பேசவும் மறுக்கின்றனர் தொடர்புடைய டெக்னீஷியன்கள் மற்றும் நடிகர்கள்.

ஏற்கெனவே இந்தக் கதையை மாபெரும் படமாக எடுக்க முயன்றவர் அமரர் எம்ஜிஆர். இயக்கநர் மகேந்திரனை வைத்து திரைக்கதையை முழுமையாக அவர் உருவாக்கிய நிலையில் தமிழக முதல்வராகிவிட, பொன்னியின் செல்வன் நாவல் வடிவிலேயே தொடர்ந்தது.

அதற்குப் பிறகு இந்த முயற்சியில் இறங்குவதா அறிவித்தார் கமல்ஹாஸன். ஆனால் அதுவும் அறிவிப்புடன் நின்றுவிட்டது.

ஆனால் மணிரத்னம், ஷூட்டிங் லொகேஷன்கள் கூட முடிவு செய்து வைத்திருந்த நிலையில் இப்படி செய்தி வந்துள்ளது. இது செய்தியா வதந்தியா… பொறுத்திருந்து பார்ப்போம்!

English summary
Sources close to Manirathnam revel that the director is in the mood of dropping his dream project Ponniyin Selvan, but the reasons unknown.
 

நாவலூரில் ஏஜிஎஸ் திறக்கும் புதிய 3 டி திரையரங்குகள்!!

Tags: companies, entertainment, entertainment business, launch, Leading, leading companies, Mamallapuram, mega, mega mall, Old, road, summaryAGS, Theater, theaters


AGS Multiplex inauguration
பொழுதுபோக்கில் புதிய பரிமாணத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.

மணலைக் குவித்து வைத்து உட்கார்ந்து படம் பார்த்த காலம் போய், இன்று படுத்துக் கொண்டே படம் பார்க்கும் அளவுக்கு நிலைமை வளர்ந்துவிட்டது.

இந்த வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, திரையரங்குகள் 3 டிக்கு மாற ஆரம்பித்துள்ளன.

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் தமிழகம் முழுவதும் மல்டிபிளக்ஸ் திரையரங்கங்களை உருவாக்கி வருகிறது. சிறிய திரையரங்குகளாக இல்லாமல், முன்புபோலவே, 500 முதல் 1000 பேர் வரை அமரும் தியேட்டர்களை, அனைத்து நவீன வசதிகளோடும் உருவாக்கி வருகிறது இந்த நிறுவனம்.

சென்னை வில்லிவாக்கத்தில்தான் இவர்களின் முதல் தியேட்டர் உதயமானது. இங்கே 5 ஸ்கிரீன்கள் உள்ளன.

அடுத்ததாக இரண்டாவது தியேட்டரை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நாவலூரில் பெரிய வணிக வளாகத்துடன் சேர்த்து அமைத்திருக்கிறார்கள். ஐந்து அடுக்குகள் கொண்ட இந்த மல்டி பிளக்சில் மேல்தளத்தில் நான்கு அதிநவீன தியேட்டர்கள் உள்ளன. மொத்தம் 3000 இருக்கைகள்! இந்த 4 தியேட்டர்களுமே 3 டி வசதி கொண்டவை என்பது கூடுதல் சிறப்பு.

செவ்வாய்க்கிழமை இந்த தியேட்டர்களை நடிகர்கள் ஜெயம்ரவி, நந்தா, சன் பிக்சர்ஸ் சக்சேனா ஆகியோர் திறந்து வைத்தார்கள்.

தொழில்நுட்பப் பூங்காக்கள் நிரம்பி வழியும் இந்தப் பகுதி மக்கள் நல்ல தியேட்டருக்குப் போக வேண்டுமென்றால் ஈசிஆரில் உள்ள மாயாஜாலுக்கு செல்லவேண்டியிருந்தது. அந்தக் குறையை போக்கிவிட்டார் கல்பாத்தி!

English summary
AGS entertainemt, one of the leading companies in in entertainment business is going to launch 4 new theaters at a mega mall at Old Mamallapuram road.
 

நிச்சயதார்தத்தோடு நின்ற திருமணம்... 'திரும்ப வந்தார்' ரீமா!

Tags: break, Cinema, English, film, hotelier, impending marriage, long break, marriage, Reema, Sen, South, south cinema, speculations, summaryReema, suspense, telugu film


Reema Sen
செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படம் ரிலீசான பிறகு காணாமல் போனவர்கள் இருவர். ஒருவர் படத்தின் நாயகி ரீமா சென்.

இன்னொருவர் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன்!

இரண்டாமவர் திரும்ப வருவது கஷ்டம் என்பதால், அந்த விவகாரத்தை பின்னர் பார்க்கலாம்.

கிட்டத்தட்ட ஓராண்டு காலமாய் தெற்குப் பக்கமே தலைவைத்துப் படுக்காமலிருந்த ரீமா, இப்போதுதான் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுகூட மிகுந்த முயற்சியின் பலனாக கிடைத்ததாம்.

ஆனால் தமிழில் இல்லை, தெலுங்கில். டி ராமாநாயுடு தயாரிக்கும் இந்தப் படத்தை ஆதித்யா இயக்குகிறார். இதில் மூன்று ஹீரோக்கள் அறிமுகமாகிறார்களாம். ஆனால் ரீமா மட்டும்தான் ஹீரோயினாம். மலேசியாவில் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடக்கிறதாம்.

மலையாளப் படங்களில் நடிக்கவும் தயார் என அறிவித்துள்ளார் ரீமா.

சில மாதங்களுக்கு முன் மும்பையில் நள்ளிரவுப் பார்ட்டி ஒன்றில் காதலருக்கு மோதிரம் அணிவித்து ரீமாவின் நிச்சயதார்த்தம் நடந்தது நினைவிருக்கலாம். ஆனால் திருமணம் நடக்கவில்லை. மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தப் போகிறாராம் ரீமா!

அப்போ… கல்யாணம்?!

English summary
Reema Sen, who recently engaged with a Delhi based hotelier, is returning to South cinema after a long break. Now Reema has put all speculations and suspense about her impending marriage to rest and doing a Telugu film, which will be shot in Malaysia for a month.
 

மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த 'ராணா' நாயகி தீபிகா!!

Tags: action, billionaire, Deepika, heroine, lip, mallya, Multi, rajini, rana, Sidhardh, son, summaryNow

Sidhard Mallaya and Deepika Padukone
ரஜினியின் அடுத்த படமான ராணாவில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோன், தனது காதலன் சித்தார்த் மல்லையாவுக்கு பல ஆயிரம் பேர் பார்க்க உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து, அதிர வைத்தார்.

தீபிகா படுகோனுக்கும் விஜய் மல்லையா மகன் சித்தார்த் மல்லையாவுக்கும் இடையே தீவிரமாக காதல் இருந்து வருவதாகக் கூறப்பட்டது. விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் விளம்பரத் தூதராக உள்ளார் தீபிகா.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தீபிகாவும் சித்தார்த்தும் கைகோர்த்தபடி ஜோடியாக சுற்றுவதைப் பார்க்கலாம். ஆனால் வழக்கம்போல இது வெறும் நட்பு மட்டுமே என்று கூறி வந்தார் தீபிகா.

இந்த நிலையில், பெங்களூர் அணியும் கொல்கத்தா அணியும் சமீபத்தில் மோதிய ஐபிஎல் போட்டியைக் காண விஜய் மல்லையாவும் வந்திருந்தார்.

அவரது மகன் சித்தார்த்தும் தீபிகாவும் இன்னொரு பகுதியில் ஒன்றாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஆட்டத்தில் பெங்களூர் அணி வென்றதும், இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டனர். சுற்றிலும் ஆயிரக்கணக்கானோர் இருப்பதையோ, அருகில் விஜய் மல்லையா இருப்பதையோ இருவரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

ரொம்ப 'ரொமான்டிக்கான நட்பு' போலிருக்கே!
English summary
Now Deepika, the main heroine of Rajini's prestigious Rana publicly caught in action when she was lip locked with Multi billionaire Vijay Mallya's son Sidhardh.
 

பிரஸ் முன்னால் வரமாட்டேன்: அனுஷ்காவின் அலம்பல்!

Tags: actress, actress anushka, anushka, controversies, English, film, giving interviews, lsquo, money, producers, promo, rsquo, summaryHot, time

Anushka
அனுஷ்காவின் அலம்பல் எல்லை மீறிப் போவதாக அவரின் மேனேஜர் உட்பட பலரும் வருத்தத்தில் உள்ளனர்.

அக்கட பூமியில் கவர்ச்சியை கமர்ஷியலாக்கி கோடம்பாக்கத்தாரை உஷ்ணப்பட வைத்தவர் அனுஷ்கா. அவரை தமிழுக்கு அழைத்து வரும் உற்சவத்தை தனது ‘ரெண்டு’ படம் மூலம் சுந்தர் சி துவக்கி வைக்க, அனுஷ்காவின் அலை ஆரம்பமானது.

‘வேட்டைக்காரன்’, ‘சிங்கம்’ என்று அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களுக்கு கால்ஷீட்டை அள்ளி வீச, அனுஷ்காவின் கால்ஷீட்டுக்கு இப்போது தவம் கிடக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

விஜய் இயக்கத்தில் விக்ரமுடன் ‘தெய்வத் திருமகன்’, சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் பெயரிடப்படாத படம், இதைத்தவிர தெலுஙகில் நாகார்ஜுனா, பிரபாஸ் படங்கள் என்று கால்ஷீட்டை காசாக்குவதில் கவனமாக இருக்கிறார். ஆனால் செய்தி இதுவல்ல.

பூஜை, ஆடியோ வெளியீடு, ப்ரிவ்யூ, பிரிமீயர் என்று சென்னை வரும்போது டிவி, பிரின்ட் மீடியாவை சந்தித்து சம்பிரதாயமாக ஹாய்... ஹலோ சொல்லுங்கள். மற்றபடி அந்த ஹாய்... ஹலோவையே வேதவாக்காக்கி அவர்கள் பில்டப் பேட்டி போட்டு விடுவார்கள்’ என்று அவருக்கு வேதம் ஓதி வருகிறார்கள்.

ஆனால் அம்மணியோ, ‘ரசிகர்களுக்கு திரையில் மட்டுமே காட்சி கொடுப்பேன். பிரஸ் முன்னால் காட்சி கொடுக்க எக்ஸ்ட்ரா பைசா ஆகும் பரவாயில்லையா?’ என்று அங்கும் கரன்சி கணக்கு பேசுகிறார்களாம். அதனால் ஏக எரிச்சலிலிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்!
English summary
Hot actress Anushka creating more controversies in recent time. According to the producers who suffered by Anushka, the actress demand more money to attend her film's promo and giving interviews to media.
 

ராணாவாவது, கானாவாவது : வடிவேலு கிண்டல்!

Tags: Dinakaran, Source


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ராணாவாவது, கானாவாவது : வடிவேலு கிண்டல்!

4/29/2011 5:21:28 PM

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ராணா. படத்தில் காமெடியனாக முதலில் வடிவேலு தேர்வாகியிருந்தார். ஆனால் கடைசி சமயத்தில் அவர் நீக்கப்பட்டு, அவருக்கு (வடிவேலுக்கு) பதிலாக கஞ்சா கருப்பை காமெடினயாக படக்குழு தேர்வு செய்தது. இதுபற்றி வடிவேலுவிடம் கேட்டதற்கு, ராணா படத்தில் இருந்து உங்களை நீக்கி இருக்கிறார்களே? ராணாவாவது, கானாவாவது. அதுபற்றி நான் கவலைப்படவில்லை. மக்கள் தீர்ப்புக்கு பின் எல்லாம் மாறும். எனக் கூறினார்.


Source: Dinakaran
 

தமிழிலில் படங்கள் இல்லை : தெலுங்கில் கவனம்!

Tags: Dinakaran, Source


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழிலில் படங்கள் இல்லை : தெலுங்கில் கவனம்!

4/29/2011 12:54:59 PM

தமிழிலும் ச‌ரி தெலுங்கிலும் ச‌ரி ப்‌ரியாமணிக்கு ச‌ரியான வாய்ப்புகளில்லை. அதிலும் தமிழ் பட வாய்ப்புகள் ப்ரியாமணிக்கு சுத்தமாக கிடைக்கவில்லை. தமிழ் முன்னணி ஹீரோக்கள் எல்லாம், தமன்னா, அமலா பால், அனுஷ்கா, சமீரா ரெட்டி போன்றவர்களை மட்டும் தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜுனியர் என்டிஆ‌ரின் படத்தில் ப்ரியாமணிக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஏறக்குறைய ஜாக்பாட். ஜுனியர் என்டிஆ‌ரின் அடுத்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பார் என அனைவரும் கூறி வந்தனர். திடீரென ஸ்ருதியின் இடத்தில் நுழைந்திருக்கிறார் ப்‌ரியாமணி. இதற்குமுன் இவர்கள் இணைந்து நடித்த யமதொங்கா சுமாரான வெற்றிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Source: Dinakaran
 

பாலாவின் "அவன் இவன்" ஸ்பெஷல் ஷோ

Tags: quot quot


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பாலாவின் ‘அவன் இவன்’ ஸ்பெஷல் ஷோ

4/29/2011 2:00:01 PM

பாலாவுக்கு பாலுமகேந்திரா எப்போதுமே ஸ்பெஷல். குரு என்பதைத் தாண்டி அப்பா ஸ்தானம். அவரைவிட திருமதி பாலுமகேந்திரா… அகிலா அம்மா மிகப் பிரதானம். அம்மா மாதி‌ரி. தனது குழந்தைக்கும் அவரது பெயர்தான் வைத்திருக்கிறார். அவன் இவன் படம் தயாரானதும் அகிலா அம்மாவுக்குதான் முதலில் திரையிட்டுக் காட்டியிருக்கிறார் பாலா. அவரது முந்தையப் படங்களின் இருண்மையான உலகை செல்லமாக கண்டித்தவர்களில் இவரும் ஒருவர். ச‌ரி, அவன் இவன் எப்படி? இறுதியான சில காட்சிகள் தவிர முழுப் படத்தையும் சி‌ரித்தபடியே ரசித்தாராம். அந்தளவுக்கு நகைச்சுவை. அவருக்குப் பிடித்தால் எல்லோருக்கும் பிடித்த மாதி‌ரி என ‌ரிலாக்ஸாகியிருக்கிறார் பாலா.


Source: Dinakaran
 

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

Tags: Dinakaran, Source


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

4/29/2011 5:02:37 PM

உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் ஆபத்து எதுவும் இல்லை என்றும் மருத்துவமனையில் இருந்து அவர் நாளை வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ராணா படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்று தொடங்கியது.

நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சில காட்சிகளில் நடித்தார். படப்பிடிப்பின்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் ரசிகர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ரஜினிகாந்தின் மனைவி லதா, மகள்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.


Source: Dinakaran
 

கே.வி.ஆனந்துக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!

Tags: Dinakaran, nbsp, Source


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கே.வி.ஆனந்துக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!

4/29/2011 12:42:01 PM

தாடியும் அழுக்கு பல்லுடனும் மகனை பல படங்களில் பார்த்த ‌ஜீவாவின் தாய், ‘கோ’ படத்தில் தன் மகன் ஜீவாவின் அழகை பார்த்து பூ‌ரித்துப் போனாராம். ஜீவா நடித்த ‘கோ’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில் தான் நடித்த ‘கோ’ படத்தை தன் குடும்பத்தோடு பார்த்த ஜீவா, செய்தியாளர்களை சந்தித்த போது, பேச்சில் பாதி நேரம் கே.வி.ஆனந்துக்கு நன்றி சொன்னார். முக்கியமாக தன்னை அழகாக காண்பித்ததற்கு. தாடியும் அழுக்கு பல்லுடனும் மகனை பல படங்களில் பார்த்த ‌ஜீவாவின் தாய் இந்தப் படத்தைப் பார்த்து உண்மையிலேயே பூ‌ரித்துப் போனாராம். மேலும் கே.வி.ஆனந்துக்கு, ஜீவாவின் அம்மா ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் கூறினாராம்.    


Source: Dinakaran
 

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம்!

Tags: Dinakaran, Source


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம்!

4/29/2011 12:23:03 PM

தெய்வத்திருமகன் படத்துக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கிறார் விக்ரம். இந்தப் படமும் அவரது வித்தியாசமான நடிப்புப் பசிக்கு தீனி போடும் என்கிறார்கள். இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படம் தாத்தா – பேரன் உறவை பற்றியதாம். பேரனாக விக்ரம் நடிக்கிறார். பிரபல இயக்குனர் கே.விஸ்வநாத் தாத்தாவாக நடிக்கிறார். தெய்வத்திருமகன் வெளியான பிறகு இந்த தாத்தா – பேரன் படம் தொடங்கப்பட உள்ளது.


Source: Dinakaran
 

எல்லா ஊரிலும் நெய்வேலியை காண்கிறேன் : பிரபு சாலமன்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

எல்லா ஊரிலும் நெய்வேலியை காண்கிறேன் : பிரபு சாலமன்!

4/29/2011 11:02:25 AM

ஒவ்வொரு முகம், ஒவ்வொரு ரசனை, ஒவ்வொரு ஏக்கம், ஒவ்வொரு மகிழ்ச்சி, அப்பப்ப கொண்டாட்டம், அப்பப்ப வெறுமை… இப்படி எல்லாத்தையும் குழைச்சு வச்சிருக்கிற வித்தியாசமான கூட்டாஞ்சோறுதான் ஊர். காலாற நடந்து போனா, கதை சொல்ற காற்றையும் ஏகப்பட்ட காதலர்கள் பெயரை சுமந்து நிற்கும் மரங்களையும் மக்கி மண்ணாகிப் போன, சொல்லப்படாத கதைகளையும் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஊரும் தனக்குள்ள வச்சிருக்கு. 'என்னைப் பேச விடுறீங்களா…'னு ஏதாவது ஒரு ஊர், தன்னோட கதையை சொல்ல ஆரம்பிச்சா, என்னவெல்லாம் சொல்லும்னு அடிக்கடி நினைச்சுப் பார்ப்பேன். இது கொஞ்சம் அதீத கற்பனைன்னாலும் யோசிக்கிறப்ப சந்தோஷமாவே இருக்கு.

நெய்வேலி டவுன்ஷிப்தான் சொந்த ஊர். பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாம் அங்கதான். எனக்கு ஊர்மேல இருக்கிற பாசத்தை விட, ஊருக்குதான் என்மேல அதிக பாசம்னு சொல்வேன். நான் மறந்துபோனா கூட, ஊர், என்னை அடிக்கடி நினைக்க வைக்கிறதால இந்த எண்ணம். இந்தியாவிலயே அதிகமா மரம் வளர்க்கிற ஊர்னு பேர் வாங்கினது நெய்வேலிதான். இது எப்பவும் அமைதியா இருக்கிற ஊர். அடூர் கோபாலகிருஷ்ணன் படத்துல வர்ற மாதிரி, எங்கயாவது ஒருத்தர் சைக்கிளை மிதிச்சுட்டு எப்பவும் வந்துட்டிருப்பதை அங்க அடிக்கடிப் பார்க்கலாம்.

சின்ன வயசுல அதிகமா தனியாதான் சுத்துவேன். நிலக்கரி சுரங்கத்துல இருந்து எடுக்கிற மண்கள், மேடு மாதிரி குவிஞ்சு கிடக்கும். அவ்வளவும் களிமண். கட்டியா இறுகிப் போய் இருக்கும். அதுக்குள்ள போனா, அங்கங்க மெகா சைஸ் குகைகள் போல அது போகும். மழை உருவாக்கி வச்சிருக்கிற குகைகள். உள்ள போய் எங்கேயாவது ஒரு இடத்துல உட்கார்ந்து, நேரத்தைப் போக்கிட்டு வெளிய வர்றதுதான் சனி, ஞாயிறுகள்ல என்னோட பொழுது போக்கு.

மழைக் காலங்கள்ல, இந்த மண்ணுமேல பார்த்தா மொசைக் போட்ட மாதிரி இருக்கும். அதுல ஏறி இறங்கி சறுக்கு விளையாடுறதால மாசத்துல நாலு டவுசரை கிழிச்சுடுவேன். மழை நேரத்துல இதுல ஓடுற தண்ணி பளிங்கு மாதிரி போகும். மீன்கள் போனா, அப்படியே பின்னாலயே போய் பிடிச்சு, எதிர்ல போட்டு சுட்டு சாப்பிடறது என் விளையாட்டு. இதைத்தாண்டி, வீட்டுக்கு வெளியே கொஞ்சம் தள்ளி ஒரு வேப்ப மரம் இருக்கும். மரம்னு சொல்றதை விட என்னோட இன்னொரு தோழன்னு சொல்லலாம். வெயில் கொளுத்துற கோடையில சைக்கிளை அதுக்கு கீழ ஸ்டாண்ட் போட்டுட்டு புத்தகங்கள் படிக்கிறதும் என் பொழுதுபோக்கு. படிக்கிற கதைகளின் ஹீரோவா என்னை மாற்றிக்கிட்டு அந்த கேரக்டரோட ஒன்றி கனவுல சஞ்சரிப்பேன்.

அங்க இருக்கிற, செயின்ட் பால் ஸ்கூல்லதான் படிச்சேன். நான் படிக்கும்போது இருந்த ஆசிரியர்கள்ல, என் மேல மரியாதை வச்சிருந்தவங்க நிறைய பேர். எனக்கும் அந்த ஸ்கூல் மேல இனம் தெரியாத பாசம் உண்டு. அதுக்குக் காரணம் என்னன்னு இன்னைக்கு வரைக்கும் தெரியலை. அங்க, மரியதாஸ்ங்கற வரலாற்று ஆசிரியர் இருந்தார். என்னை நாடக நடிகர் ஆக்கியவர் இவர். ஏதாவது விழான்னா, ஸ்கூல்ல உடனே நாடகம் போட்டிருவாங்க. போனமுறை என்னவா நடிச்சேனோ, அதுக்கு நேர்மாறா வேற கேரக்டர் கொடுப்பார் அடுத்த நாடகத்துல. நான் சினிமாவுக்கு வர அவரும் அந்த நாடகங்களும்தான் காரணம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கற்பனை வளரும். கூட படிக்கிறவங்கள்லாம், 'நீ பெரிய நடிகனாயிடுவடா'னு ஏற்றி விடுவாங்க. ஆனா, எனக்குள்ள டைரக்டர் ஆசைதான் முழுமையா இருந்ததுங்கறதை நான் கண்டுபிடிக்கவே ரொம்ப நாளாச்சு.

சினிமாவுக்காக சென்னை வந்த பிறகு மாசக்கணக்குல ஊருக்கு போகாம இருந்தாலும் மனசுக்குள்ள ஊரும் நண்பர்களும் எப்பவும் இருந்துட்டு இருப்பாங்க. ஏதாவது ஒரு படம் பார்த்து, அதுல ஏதாவது ஒரு ஊரை காட்டினா கூட, எங்க ஊர் என்னை கிள்ளிவிட்டுட்டுப் போகும். ஒரே ஊர்ல வாழ்ந்தவங்களால அந்த ஊரை ஜென்மத்துக்கும் மறக்க முடியாதுங்கறதுதான் உண்மை. ஏன்னா, ஊர்ங்கறது ஊர்மட்டுமல்ல, அதுதான் உயிர்.

'மைனா' ஹிட்டுக்குப் பிறகு சேரனோட 'ஆட்டோகிராஃப்' மாதிரி, நான் படிச்ச பள்ளி, வசிச்ச வீடு, ஓடியாடிய மைதானம், கூட சுற்றிய நண்பர்கள்னு தேடிப்போனேன். நான் வசிச்சப்போ இருந்ததை விட இப்ப நிறைய மாற்றம். இங்க எதுவுமே அப்படியே இருந்திட போறதில்லையே… மனசுக்குள்ள அடிக்கடி வந்துபோகும் அந்த மரியதாஸ் வாத்தியாரைத் தேடி சந்திச்சேன். உடனே, நான் படிச்ச ஸ்கூல்லயே ஒரு மீட்டிங். மனசுக்கு நிறைவா பேசிட்டு வந்தேன். என்னோட சிஸ்டரும், அம்மாவும் இன்னும் ஊர்லதான் இருக்காங்க. 'சென்னையில வந்து இருங்க'னு சொன்னாலும் அம்மாவுக்கு இந்த பரபரக்கிற நகரம் பிடிக்கலை. ஒரே இடத்துல வாழ்ந்த நினைவுகளும் வாழப்போற வாழ்க்கையும் தந்த, தரப்போற சுகங்கள் ஜாஸ்தி. சிலருக்கு வாழற ஊருதான் வீடு. சிலருக்கு வாழற வீடுதான் ஊரு. எனக்கு ரெண்டும் ஊராகத்தான் இருக்குது.


Source: Dinakaran