சினேகா – பிரசன்னா மகனின் பெயர் என்ன தெரியுமா?

பிரசன்னா சினேகா தம்பதியர் தங்களின் மகனுக்கு விஹான் என்று பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் சினேகா. சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் சில படங்களில் நடித்து வந்தார்.

Actress Sneha Actor Prasanna son as Vihaan

டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். சில சினேகா கர்ப்பமானதைத் தொடர்ந்து படங்களில் நடிப்பதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 11ம் தேதி காலை சென்னையில் பிரசன்னா - சினேகா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தங்களின் குழந்தைக்கு தற்போது விஹான் என்று பெயரிட்டுள்ளனர். விஹான் என்றால் ‘காலை' என்கிறது அகராதி. இந்த தகவலை இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரசன்னாவைச் சந்தித்து பேசினேன். அவர் தன் குழந்தைக்கு விஹான் (Vihaan) எனப் பெயரிட்டுள்ளதாக இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் அறிவித்தார். நடிகை நந்திதா தாஸும் தனது மகனுக்கு அந்தப் பெயரைத்தான் சூட்டியுள்ளார் என்றும் சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.

 

கோடம்பாக்கத்தை பரபரக்க வைத்த விஷாலின் நற்பணிகள்!

கடந்த ஓராண்டு காலமாகவே விஷால் செய்யும் நற்பணிகள் பலரையும் ஆச்சர்யப்படுத்தி வருகின்றன. இவர் என்ன நோக்கத்தில் இந்த உதவிகளையெல்லாம் செய்கிறார் என்று கேட்க வைத்துள்ளன.

இவற்றுக்கு விஷால் தரும் ஒரே பதில்: "நிச்சயம் அரசியல் இல்லை... ஏழைகளுக்கு உதவ வேண்டும், ஏழைக் குழந்தைகள் நன்கு படித்து நல்ல எதிர்காலத்தை அடைய வேண்டும் என்பதே!"

Vishal celebrates his birthday with good cause

இன்று விஷாலுக்குப் பிறந்த நாள். இந்த நாளில் வழக்கமாக நண்பர்களுடன் நட்சத்திர ஓட்டல்கள் அல்லது பண்ணை இல்லத்தில் விருந்துண்டு கொண்டாடும் பழக்கத்தை இன்று முதல் விட்டொழித்து விட்டதாக அறிவித்துவிட்டார் விஷால்.

அடுத்து, இன்று காலை இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் அவர்களுடன் தங்கி, உதவி அளித்து, உணவு பரிமாறினார்.

அடுத்து திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனை மற்றும் கோடம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு விஷால் தங்க மோதிரங்களைப் பரிசாக அளித்தார். இந்தக் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களையும் பரிசாக அளித்தார்.

அடுத்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஏழை, எளியவர்கள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் மாணவ - மாணவிகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். பாரிமுனையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஒரு பெண் குழந்தைக்கு தேவி என்று தன் தாயார் பெயரை விஷால் சூட்டினார்.

போகும் இடங்களிலெல்லாம் விஷாலை வரவேற்று பெண்கள் ஆரத்தி எடுத்தனர்.

 

விநாயகர் சதுர்த்தியன்று மிரட்ட வரும் கோப்பெருந்தேவி பேய்!

பேயுடன் ரொம்ப சினேகமாக குடித்தனம் நடத்தத் தொடங்கிவிட்டது தமிழ் சினிமா. கோடம்பாக்கத்தில் அடுத்து வரும் பேய் கோப்பெருந்தேவி. ரொம்ப நாளாக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் இந்தப் பேய் வரும் செப்டம்பர் 17-ம் தேதி வெளியாகிறது.

புதுமுக இயக்குனர் ஹ்ருஷிகேஷ அச்சுதன் சங்கர் இயக்கியுள்ளார். சக்தி டாக்கீஸ் ஏ.ராஜசேகர் ரெட்டி தயாரித்துள்ளார்.

Kopperunthevi on September 17th

இதில் கோவை சரளா, வி.டி.வி கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், மனோபாலா, சாமி நாதன், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, சாம்ஸ், அனுமோகன், வெங்கல்ராவ், பயில்வான் ரங்கநாதன், அல்வா வாசு உள்ளிட்ட பதினெட்டு நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்களுடன் ஊர்வசி, தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், இளவரசு ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். ஆராத்யா என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழ்சினிமா வரலாற்றில் பனி பொழியும் லடாக் பகுதியில் செட் போட்டு படமாக்கிய முதல் படம் இதுவே என்கிறார் இயக்குநர்.

Kopperunthevi on September 17th

அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் புதையலை எடுக்க ஒரு நகைச்சுவைப் பட்டாளம் கிளம்புகிறது. அந்த புதையலை பேய் ஒன்று பாதுகாத்து வருகிறது எனும் விஷயம் தெரியாமல் அவர்கள் அந்த பேயிடம் மாட்டி என்னவெல்லாம் சின்ன பின்னமாகிறார்கள் என்பதுதான் கதையாம்.

இந்தப் படம் வெளியாகும் தேதியில் ருத்ரமாதேவி உள்ளிட்ட 5 பெரிய படங்களும் வெளியாகின்றன. அவற்றிடம் இந்தப் பேய் சிக்கிக் கொள்ளுமா, தப்பிப் பிழைக்குமா.. பார்க்கலாம்!

 

கம்பத்தில் உலகத் திரைப்பட விழா தொடங்கியது: 9 நாடுகளைச் சேர்ந்த 15 படங்கள் திரையிடல்!

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், நிழல் திரைப்பட சங்கம், திரை இயக்கம் ஆகியன நடத்தும் கம்பம் உலகத் திரைப்பட விழா-2015, வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது

கம்பம் அமராவதி திரை அரங்கில் விழா தொடங்குவதற்கு முன், மாரியம்மன் கோயிலில் இருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் பேரணி நடைபெற்றது. பின்னர், அமராவதி தியேட்டர் முன்பாக மறைந்த இயக்குநர்கள் ருத்ரய்யா, கே. பாலசந்தர் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோர்களது உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தத் திரைப்பட விழாவில், அமெரிக்கா, இத்தாலி, சீனா, போலந்த், தைவான், பாலஸ்தீனம், ரஷ்யா, இந்தியா என 9 நாடுகளைச் சேர்ந்த 15 திரைப்படங்கள் தொடர்ந்து 3 நாள்கள் திரையிடப்படுகின்றன.

முதல் நாள் காலை, தமிழ் திரைப்படமான ருத்ரய்யா இயக்கிய அவள் அப்படித்தான், ஏக் தின் பாரடைசின் என்ற பெங்காளி திரைப்படமும், லக்கி என்ற அமெரிக்கா திரைப்படமும், சினிமா பாரடைஸ் என்ற இத்தாலி திரைப்படமும், கோல்டன் ஈரா என்ற சீனப் படமும் திரையிடப்பட்டன.

மாலையில் நடந்த விழாவில், தமிழக அரசின் முன்னாள் தில்லி சிறப்புப் பிரதிநிதி பெ. செல்வேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில், நடிகர் ஜோ. மல்லூரி, வசனகர்த்தா சுருளிப்பட்டி சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஆண்டுதோறும் கம்பத்தில் உலகத் திரைப்பட விழா நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது.

திரைப்பட விழாவையொட்டி, பிரபல திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்துகொண்டு கலந்துரையாடுகின்றனர்.

 

முகாமில் இலங்கை அகதிகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய விஷால்!

பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து நடிகர் விஷால் இன்று நாடு திரும்பவிருக்கும் இலங்கை அகதிகளுடன் நற்பணி நாளாக கொண்டாடினார்.

இன்று விஷாலின் பிறந்த நாள். இந்த நாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்துள்ள அவர், நண்பர்களுடன் கேளிக்கை விருந்து கொண்டாட்டங்களைத் தவிர்த்துவிட்டார்.

Vishal celebrates his b'day with Sri Lankan Tamil refugees

இன்று நாடு திரும்பவிருக்கும் இலங்கை தமிழ் அகதிகளுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது:

Vishal celebrates his b'day with Sri Lankan Tamil refugees

நான் தாமிரபரணி படபிடிப்புக்காக இராமேஸ்வரத்தில் இருந்த போதுதான் அங்கு இருக்கும் இலங்கை அகதிகள் முகம் பற்றி எனக்கு தெரியவந்தது. எனக்கு முகாமை பற்றிய இன்னும் பல தகவல்களை என் அண்ணி ஸ்ரேயா அவர்களின் தோழியான பூங்கோதை சந்திரஹாசன் மூலமாக தெரிந்துகொண்டேன். மேலும் அவர் இயக்குனராக இருக்கும் ஆஃபர் (OFERR) தன்னார்வ தொண்டு நிறுவனம் பற்றி என்னிடம் கூறியவுடன் எனக்கும் அவர்களுடன் சேர்ந்து நற்பனி செய்ய ஆர்வம் ஏற்பட்டு தொடர்ந்து செய்து வருகிறேன்.

Vishal celebrates his b'day with Sri Lankan Tamil refugees

ஒவ்வொரு முறை நான் அங்கு சென்று திரும்பும் போது என்னுள் புத்துணர்ச்சி ஏற்படுவதை நான் உணர்கிறேன். என்னுள் அரசியல் நோக்கம் இருப்பதால்தான் நான் இதை போன்ற நற்பணிகளை செய்கிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். எனக்கு சத்தியமாக அதைபோன்ற அரசியல் நோக்கம் துளி கூட இல்லை.

நான் ஒரு நடிகன், மக்களை மகிழ்விக்கும் மகத்தான பொறுப்பு எனக்கு உள்ளது. அதை மட்டும் சரியாக செய்தால் போதும் என்று நான் நினைகிறேன். மேலும் நான் ட்ராபிக் கான்ஸ்டபிள் போல இருந்து நற்பணி ஆற்ற நினைபவர்களுக்கு சரியான வழியைக் காட்டவே விரும்புகிறேன்.

Vishal celebrates his b'day with Sri Lankan Tamil refugees

நடிகர் கார்த்தி நேற்று இரவு என்னிடம் பேசிக் கொண்டு இருக்கும்போது பெண் குழந்தைகள் பலர் தாங்கள் படிக்கும் பள்ளியில் கழிப்பறை இல்லாத காரணத்தினால் அவர்களுடைய படிப்பையே நிறுத்திவிட்டுச் சென்றதாகவும், அதை கருத்தில் கொண்டு பாரீசில் உள்ள அரசு பள்ளி ஒன்றுக்கு அவருடைய அகரம் அறகட்டளை மூலமாக ஒரு இலட்சம் ருபாய் செலவில் கழிப்பறை கட்டிகொடுத்ததையும் சொன்னார். அதை போலவே ஒரு லட்சம் ருபாய் கொடுத்தால் வேறு ஒரு பள்ளியில் கழிப்பறை கட்டி கொடுக்கலாம் என்ற செய்தியை என்னிடம் தெரிவித்தார். நானும் அதை நிச்சயம் செய்ய உள்ளேன்," என்றார்.

Vishal celebrates his b'day with Sri Lankan Tamil refugees

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மாணவர்களுக்கும், ICSAவை சேர்ந்த முப்பது மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கும் ஒரு லட்சத்தி அறுபத்தி ஏழாயிரம் ரூபாயை நன்கொடையாகக் கொடுத்தார். அது போக அவர்களுக்கு காலணி மற்றும் காலுறைகளை வழங்கினார். மேலும் காலுறைகள் வழங்க தன்னுடைய நற்பணி மன்றத்தினர் மூலமாக மக்களை அணுகி நிதி பெற்று மேலும் இதை சிறப்பாக செய்யவுள்ளதாகவும் கூறினார்.

 

மு களஞ்சியம் இயக்கத்தில் சீமான்.. கம்யூனிஸ்ட் மகேந்திரன் மகன் அறிமுகம்!

அஞ்சலியைத் துரத்தித் துரத்தி ஓய்ந்த மு களஞ்சியம் மீண்டும் சினிமா இயக்கத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். அந்த ஊர்சுற்றிப் புராணத்தை கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது புதிய படத்தை அறிவித்துள்ளார். தலைப்பு: முந்திரிக்காடு.

இதில் சீமான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சிபிஎம் தலைவர்களுள் ஒருவரான சி மகேந்திரனின் மகன் புகழ் நாயகனாக அறிமுகமாகிறார்.

Seeman in Kalanjiam's Munthirikkadu

கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன் , பாவாலட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஏஆர் ரஹ்மானின் இசைப் பள்ளி மாணவர் ஏகே பிரியன் இசையமைக்க. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மு களஞ்சியம்.

படம் குறித்து இப்படிச் சொன்னார் களஞ்சியம்:

"முந்திரிக்காட்டு மக்களின் வாழ்கை யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலையுயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதும், அங்கே காதல் வயப்பட்ட இருவரின் காதலுக்கு ஊரே எதிர்ப்பு தெரிவிக்க, காக்கி சட்டைக்கே உரிய கௌரவத்தை காப்பாற்றும் அன்பரசன் அந்த காதலர்களை சேத்து வைக்க எடுத்த முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் கதை.

Seeman in Kalanjiam's Munthirikkadu

படப்பிடிப்பு தஞ்சை மாவட்டம், நெல்லை மாவட்டம் மற்றும் ஆந்திராவின் நகரி மற்றும் சென்னை போன்ற இடங்களிள் 40 நாட்கள் நடைபெற்றுள்ளது. கடலூர், பாண்டி உள்ளிட்ட இடங்களில் மீதிப் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது."