ஐ ட்ரைலர்.. வரவேற்று வாழ்த்திய விவிஐபிகளுக்கு நன்றி சொன்ன ஷங்கர்!

ஐ ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சொதப்பினாலும், அதில் வெளியான ட்ரைலரை வாழ்த்தி வரவேற்ற அத்தனை விவிஐபிக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ஷங்கர்.

ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் விக்ரம், ஏமி ஜாக்சன் உள்ளிட்டவர்கள் நடிக்க ஷங்கர் இயக்கி இருக்கும் படம் 'ஐ'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஐ ட்ரைலர்.. வரவேற்று வாழ்த்திய விவிஐபிகளுக்கு நன்றி சொன்ன ஷங்கர்!

'ஐ' டீஸர் வெளியான அன்று, தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து இயக்குநர் ஷங்கர் மற்றும் விக்ரமுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். இப்போது கிட்டத்தட்ட ஒரு கோடி பார்வையாளர்களை நெருங்குகிறது ஐ ட்ரைலர்.

இதற்காக இயக்குநர் ஷங்கர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

"இயக்குநர் ராஜமெளலி, தனுஷ், சிவகார்த்திகேயன், சித்தார்த், கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன், செளந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட 'ஐ' டீஸரை குறிப்பிட்டு பாராட்டிய அனைவருக்கும் நன்றி" என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

'ஐ' தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டைத் தொடர்ந்து, தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பின் இசை வெளியீடு விரைவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு இசையை ஜாக்கி சானும், இந்தி இசையை சில்வஸ்டர் ஸ்டெல்லோனும் வெளியிடப் போகிறார்களாம்.

 

அவம் படத்திற்காக குரல் கொடுத்த கமல்ஹாஸன்!

விஜே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் விஜய் வில்வாகிரிஷ் இயக்கத்தில் சுந்தர்மூர்த்தி இசையில் உருவாகிவரும் படம் 'அவம்'.

இப்படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் கமல்ஹாசன் ஒரு பாடல் பாடியுள்ளார்.

அவம் படத்திற்காக குரல் கொடுத்த கமல்ஹாஸன்!

இந்த பாடல் ஒரு இளைஞனின் தனிமையையும் கவலையையும் உணர்ச்சிப்பூர்வமாக வெளிபடுத்தும் பாடல் என்பதால் பாடகர் இப்பாடலின் வரிகளை உணர்ந்து அதன் உண்மையை வெளிபடுத்தும் வகையில் பாடவேண்டியதிருந்தது.

கமல் இந்த வரிகளின் தன்மையை உணர்ந்து தன் குரலின் வாயிலாக பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார் என்றால் அது மிகையாகாது. பாடலை எழுதியிருப்பவர் மதன் கார்க்கி.

அவம் படத்திற்காக குரல் கொடுத்த கமல்ஹாஸன்!

படத்தின் கதை இது:

சாதாரண வாழ்க்கையை அனுபவித்து கொண்டிருக்கும் கார்த்திக், ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். அவனது அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணை சந்தித்ததும், அந்த பெண்ணால் அவன் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாரா சம்பங்கள், அந்த சம்பவத்தால் நிகமும் நிகழ்வுகளே படத்தின் கதை கரு.

பல புதுமுகங்களுடன் அனுபவசாலி நகர்களும் நடிக்கிறார்கள். படத்தின் நாயகனாக கௌரவ் நாயகனாக நடிக்க, கன்னட நடிகை காவ்யா ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். விவேக் லெஸ்தர் உத்துப் படத்தில் வில்லனாக நடிக்க, கார்த்திக் வில்வாகிரிஷ், காஜல் வசிஷ்ட், எம்.எஸ்.பாஸ்கர், அனுபமா குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அவம் படத்திற்காக குரல் கொடுத்த கமல்ஹாஸன்!

குகன் எஸ் பழனி படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார், இவர் ராஜா ராணி படத்தில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். ஆதியப்பன் சிவா படத்தொகுப்பு வேலைகளை கவினித்து கொள்ள, அயனா ஜெயகாந்த் கலை இயக்கத்தை கையாள்கிறார்.

அவம் படத்தை விஜய் வில்வாகிருஷ் இயக்கியுள்ளார்.

 

ரஜினியின் லிங்கா ஷூட்டிங்... ஸ்காட்லாந்து சுற்றுலாத் துறை வரவேற்பு!

லிங்கா படத்துக்காக ரஜினிகாந்த் தன் குழுவினருடன் ஸ்காட்லாந்து வருவதை அறிந்து அந்நாட்டு சுற்றுலாத்துறை மிகவும் உற்சாகமாகியுள்ளதாம்.

கிரேட் பிரிட்டன் எனப்படும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு அங்கம் ஸ்காட்லாந்து. எலிசபெத் மகாராணிதான் இந்த நாட்டுக்கும் தலைவர். இந்த நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரங்களுள் ஒன்று சுற்றுலா.

ரஜினியின் லிங்கா ஷூட்டிங்... ஸ்காட்லாந்து சுற்றுலாத் துறை வரவேற்பு!

இந்தப் பகுதியில் அதிக அளவு பாலிவுட் படங்கள்தான் படமாக்கப்பட்டுள்ளன. இன்னும் தென்னிந்திய சினிமா அவ்வளவாக எட்டிப் பார்க்காத தேசம் இது.

ரஜினியின் லிங்கா ஷூட்டிங்... ஸ்காட்லாந்து சுற்றுலாத் துறை வரவேற்பு!

இங்குதான் ரஜினி - அனுஷ்கா நடிக்கும் லிங்காவின் டூயட் பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளது.

ரஜினியின் லிங்கா ஷூட்டிங்... ஸ்காட்லாந்து சுற்றுலாத் துறை வரவேற்பு!

இந்த செய்தி அறிந்ததும், லிங்கா குழுவுக்கான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாகக் கூறி வரவேற்றுள்ளது ஸ்காட்லாந்து சுற்றுலாத் துறை.

ரஜினியின் லிங்கா ஷூட்டிங்... ஸ்காட்லாந்து சுற்றுலாத் துறை வரவேற்பு!

'ரஜினி மிகப பெரிய நடிகர், அவரது படத்தின் படப்பிடிப்பு இங்கு நிகழ்வதன் மூலம் இந்தியாவில் உள்ள உயர்மட்ட சுற்றுலா பயணிகளும் ஸ்காட்லாந்துக்கு அதிகம் வருவார்கள்' என்று அந்நாட்டு சுற்றுலாத் துறையினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

 

3 மணி நேரம் லேட்.. ஷாரூக்கான் பிரஸ் மீட்டைப் புறக்கணித்த மீடியா!

ஹேப்பி நியூ இயர் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு 3 மணி நேரம் தாமதமாக ஷாரூக்கான் வந்ததால், நிகழ்ச்சியைப் புறக்கணித்து வெளியேறினர் மீடியாக்காரர்கள்.

இந்த நிகழ்ச்சி சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 4 மணிக்கு பிரஸ் மீட் தொடங்கும் என தினசரி மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள், வீடியோ, போட்டோகிராபர்களுக்கு சொல்லியிருந்தனர்.

3 மணி நேரம் லேட்.. ஷாரூக்கான் பிரஸ் மீட்டைப் புறக்கணித்த மீடியா!

ஆனால் ஷாரூக்கான் வந்ததோ இரவு 8 மணிக்கு!

அவர் வரும் வரை காத்திருந்த மீடியாக்காரர்கள், ஷாரூக்கான் உள்ளே நுழைந்ததும் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில், பிரஸ் மீட்டைப் புறக்கணித்து வெளியேறினர்.

ஒவ்வொரு செய்தியாளருக்கும் தனித்தனியாக பேட்டியளிப்பதாக ஷாரூக்கான் உறுதி கூறியும், அதைப் பொருட்படுத்தாமல் வெளியேறினர் செய்தியாளர்கள்.

ஷாரூக்கானின் அடுத்த படம் ஹேப்பி நியூ இயர். பெரிய அளவில் உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.

 

எந்தப் படம் வந்தாலும் கவலையில்லை.. பூஜை வந்தே தீரும்! - விஷால்

தீபாவளிக்கு எந்தப் படம் வந்தாலும் கவலையில்லை. என்னுடைய பூஜை படம் வந்தே தீரும் என்று நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான விஷால் கூறியுள்ளார்.

ஹரி இயக்கத்தில் விஷால் - ஸ்ருதி ஹாஸன் ஜோடியாக நடித்துள்ள படம் பூஜை. இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது.

எந்தப் படம் வந்தாலும் கவலையில்லை.. பூஜை வந்தே தீரும்! - விஷால்

பாண்டிய நாடு படத்திலிருந்தே, ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டுத்தான் படத்தைத் தொடங்குகிறார் விஷால். யார் வந்தாலும் கவலையில்லை என்று கூறி ரிலீஸ் செய்து வெற்றியும் பெறுகிறார்.

அதே தன்னம்பிக்கை பூஜையிலும் தொடர்கிறது.

இந்தப் படத்தை ஆரம்பித்த போதே, தீபாவளி வெளியீடு என்று அறிவித்துவிட்டுத்தான் தொடங்கினார். அதேபோல படத்தை பக்காவாக முடித்துவிட்டார். தீபாவளி வெளியீட்டுக்கு தயாராக நிற்கிறார்.

இந்த வேளையில் விஜய் நடித்துள்ள கத்தியும், விமல், சூரி, நடித்த ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களும் ரிலீசாகவிருக்கின்றன.

ஆனால் அதைப் பற்றி கவலைப்படவில்லை விஷால். அறிவித்தது அறிவித்ததுதான்... நிச்சயம் தீபாவளிக்கு பூஜை ரிலீஸாகும் என்கிறார்.

இந்த உறுதிக்கும் திட்டமிடலுக்கும் வெற்றி நிச்சயம்!

 

புறம்போக்கு என்கிற பொதுவுடைமையும் யமலிங்கமும்!

வெறுமனே புறம்போக்கு என்று வைக்கப்பட்ட தலைப்பு நன்றாக இல்லை என நினைத்தாரோ என்னமோ, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை என தலைப்பை மாற்றி்விட்டார் இயக்குநர் எஸ்பி ஜனநாதன்.

ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா ஆகியோர் நடிப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குவதோடு யுடிவி மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரித்து வருகிறார் ஜனநாதன்.

புறம்போக்கு என்கிற பொதுவுடைமையும் யமலிங்கமும்!

சிறைகள்

இந்தப் படம் குறித்து ஜனநாதன் கூறுகையில், "சிறையில் உள்ள எல்லோருமே குற்றவாளிகள் அல்ல. நமது சரித்திரத்தின் பெரும் அத்தியாயங்கள் சிறைச்சாலையில்தான் அரங்கேறி உள்ளன. மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற மாபெரும் தலைவர்கள் சிறைசாலையில் இருந்துதான் தங்களது வெற்றி சரித்தரத்தைத் தொடங்கினர்.

ஆர்யா

சிறைச்சாலை என் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இருந்துள்ளது என்றால் மிகை ஆகாது. என் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களும் நமது சரித்தரத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான். சுதந்திர போராட்ட காலத்தில் மதுரையில் பிறந்து பின்னர் ஆந்திராவில் வாழ்ந்த வரலாற்று நாயகன் பாலுவின் பெயர்தான் ஆர்யாவுக்கு சூடப்பட்டு உள்ளது.

சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றிய தமிழகத்தின் புரட்சி வீராங்கனை வேலு நாச்சியார் அவர்களின் பாசறையில் முக்கிய பங்கு வகித்து, பின்னர் ஆங்கிலேயர்களின் ஆயுத கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்த குயிலியின் பெயர் கார்த்திகாவுக்கும், ஆங்கிலேயர் காலத்தில் அவர்களது கல்வி முறையை அறிமுகப்படுத்தியவரும், ஆங்கிலேயர்களின் கடுமையான தண்டனை முறையை அறிமுகப்படுத்தியவருமான மெக்காலேவின் பெயர் ஷ்யாமுக்கும் சூட்டப்பட்டுள்ளது.

யமலிங்கம் விஜய் சேதுபதி

மிகவும் வித்தியாசமான யாரும் எதிர்பாராத ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்துக்கு யமலிங்கம் என்று பெயர் சூட்டபட்டுள்ளது.

கலை இயக்குனர் செல்வகுமாரின் கை வண்ணத்தில் உருவான அந்த பிரம்மாண்டமான சிறைச்சாலை அரங்கின், ஒவ்வொரு சதுரத்தையும் தனது நேர்த்தியான ஒளிப்பதிவு மூலம் படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம்," என்றார்.

 

சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் 'கை நீளம்': ரஜினி பிறந்த நாளில் சூட்டிங் தொடக்கம்

சென்னை: சூது கவ்வும் திரைப்பட மெகா வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் நளன் குமாரசாமி அதன் இரண்டாம் பாகமாக, 'கை நீளம்' என்ற பெயரில் படமெடுக்க உள்ளார். ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12ம்தேதி இந்த திரைப்படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கிறது.

விஜய்சேதுபதி, கருணா உள்ளிட்ட பலர் நடித்த சூது கவ்வும் திரைப்படத்தை நளன் குமாரசாமி இயக்கியிருந்தார். வித்தியாசமான ஜானரில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.

சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் 'கை நீளம்': ரஜினி பிறந்த நாளில் சூட்டிங் தொடக்கம்

இதையடுத்து நளன் தற்போது 'கை நீளம்' என்ற திரைப்படத்தை இயக்க உள்ளாராம். இது, சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கப்போகிறது என்று நளன் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் வெற்றியை பொறுத்து, சூது கவ்வும் படத்தின் மூன்றாவது பாகத்தையும் இயக்க நளன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளான டிசம்பர் 12ம்தேதி, 'கை நீளம்' திரைப்படத்தின் சூட்டிங் துவங்க உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தினேஷ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, லியோ ஜான்பால் படத் தொகுப்பை கவனித்து கொள்கிறார். சி.வி.குமார் தயாரிக்கிறார்.

 

சீஷெல்ஸ் நாட்டு சுற்றுலாத் துறை தூதராக இளையராஜா நியமனம்!

சீஷெல்ஸ் தீவின் சுற்றுலாத் துறை தூதராக இசையமைப்பாளர் இளையராஜாவை நியமித்துள்ளது அந்நாட்டு அரசு.

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள 155 தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய நாடு சீஷெல்ஸ். ஆப்ரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த இந்த நாட்டில் இந்தியர்கள் ஏராளமாக வசிக்கின்றனர். குறிப்பாக தமிழர்களும் உள்ளனர். சுற்றுலாதான் இந்த நாட்டின் முக்கிய வருமானம்.

சீஷெல்ஸ் தீவை முதல் முதலாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் சரத்குமார். தனது ரகசிய போலீஸ் 115 படத்தை இங்குதான் படமாக்கினார் அவர்.

சீஷெல்ஸ் நாட்டு சுற்றுலாத் துறை தூதராக இளையராஜா நியமனம்!

சீஷெல்ஸ் தீவுக்கும் தமிழகத்துக்கும் கலாச்சார ரீதியான நல்லுறவு நிலவி வருகிறது.

சீஷெல்ஸ் அரசு இந்த ஆண்டு நடத்தும் கலை பண்பாட்டு கலாச்சார விழாவில் நான்கு நாட்கள் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினராக இந்த ஆண்டு இசைஞானி இளையராஜாவை அழைத்திருந்தது.

தலைநகர் விக்டோரியாவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இளையராஜா.

விழாவில் சீஷெல்ஸ் நாட்டின் சுற்றுலாத் துறை தூதராக இளையராஜாவை நியமிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனை இளையராஜாவும் ஏற்றுக் கொண்டார்.