விஜயகாந்த் கட்சி நடிகர் மீது திடீர் கொலை மிரட்டல் வழக்கு

நெல்லை: விஜயகாந்த் கட்சியைச் சேர்ந்த நடிகர் ராஜேந்திர பிரசாத் மீது திடீரென கொலை மிரட்டல் வழக்குப் பாய்ந்துள்ளது.

நெல்லைமாவட்டம் முக்கூடலில் பிரசித்திபெற்ற முத்து மாலையம்மன் கோவில் உள்ளது இந்த கோவில் நிர்வாகிகளாக முன்னாள் எம்பி சிவபிரகாசம் உள்ளிட்ட சிலர் இருந்தனர் .அப்போது கோவில் நிதியில் முறைகேடு நடந்ததாக நடிகர் ராஜேந்திரபிரசாத் போலீசில் புகார் செய்தார்.

ஆனால் நடவடிக்கை தாமதமானதால் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் அதன்படி கடந்த அக்டோபர் மாதம் முன்னாள் எம்பி சிவபிரகாசம் உள்ளிட்ட சிலர்மீது வழக்கு பதியபட்டது.

இந்நிலையில் இந்தக்கோவில் கணக்காளர் சுப்பிரமணியன் என்பவர் முக்கூடல் போலீசில் ஒரு புகார் அளித்தார். அப்புகாரில் நடிகர் ராஜேந்திர பிரசாத் ஜீப் ஏற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருவதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து முக்கூடல் போலீஸார் மூன்று பிரிவின் கீழ் நடிகர் ராஜேந்திரபிரசாத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த திடீர் வழக்கால் தேமுதிகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தேமுதிகவின் கலை இலக்கியப் பிரிவின் செயலாளராக இருப்பவர் ராஜேந்திர பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வடிவேலுவுடன் இணைந்து ஏகப்பட்ட படங்களில் காமெடி ரோல்களில் நடித்தவர். கடைசியாக சுறா படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருந்தார்.

 

'ஹேக்கர்' ஆனார் அஜீத்!

Ajith Kumar Turns Hacker

அஜீத், ஆர்யா முதன் முறையாக இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்புக்காக படப்பிடிப்பு குழுவினர் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.

விஷ்ணுவர்த்தன் இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, டாப்ஸி ஆகியோர் நடிக்கின்றனர் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் 2ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. 15 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்கிறது. இதில் அஜீத்தும் ஆர்யாவும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது. இதற்காக அஜீத் மும்பை சென்றுள்ளார். ஏற்கனவே சேட்டை படப்பிடிப்புக்காக ஒரு மாதம் மும்பையிலேயே முகாமிட்டுள்ள ஆர்யா, அஜீத்துடன் நடிப்பதற்காக மேலும் 15 நாட்கள் அங்கு தங்குகிறார்.

சினிமாவில் பல அவதாரங்களை எடுத்துள்ள அஜீத் இந்த படத்தில் கம்யூட்டர் ஹேக்கராக நடித்திருக்கிறாராம். தல ரசிகர்களுக்கு இது மிகச் சிறந்த படமாக அமையும் என்கின்றனர் படத் தயாரிப்பாளர்கள்.

தெலுங்கு நடிகர் ராணா இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். ஏற்கனவே அஜீத் பற்றி அவர் ஆகா, ஓகோ என்று புகழ்ந்து வருவது பற்றி அனைவரும் அறிந்திருக்கலாம்.

அஜீத்துடன் சுமன் ரங்கநாதன், அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்சரேக்கர் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஸ்வரூபம் இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு

Vishwaroopam Audio Gets Delay   

சென்னை: நவம்பர் 7ம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த விஸ்வரூபம் படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் படத்தை கமல்ஹாசன் தயாரித்து இயக்கியுள்ளார். இதில் அவருடன் ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் வைரமுத்துவின் வார்த்தைகளுக்கு ஷங்கர் எக்சான் லாய் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு வருகிற நவம்பர் 7 ஆம் தேதி அதாவது கமலின் பிறந்த நாள் அன்று வெளியிடுவதாக இருந்தது. இதற்காக மூன்று நகரங்களில் பறந்து பறந்து பாடலை வெளியிடுகிறார் கமல்ஹாசன் என்று செய்திகள் வெளியாகின. இப்பொழுது சில காரணங்களினால் இசை வெளியீட்டு விழா ஓரிரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்க பட்டுள்ளது.

முதலாவது இப்படத்தின் இசை வெளியீட்டை சாதாரணமாக வெளியிட்டால் போதும் என்று கூறினார்கள், ஆனால், இப்போது மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டினை செய்ய வேண்டும் என்று அதற்க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தமிழில் ‘விஸ்வரூபம்' என்றும் ஹிந்தியில் ‘விஸ்வரூப்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்திற்கு சிறிது நாட்களுக்கு முன்பு தான் இப்படத்திற்கு U / A சான்றிதழ் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 

கமலின் அறிவு கண்டு உறைந்து விட்டேன்: ஆங் லீ புகழாரம்

சென்னை: நடிகர் கமல்ஹாசன் உண்மையிலே உலக நாயகன்தான், அவருடைய சினிமா அறிவு என்னை வியக்க வைக்கிறது என்று ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் ஆங் லீ கூறியுள்ளார்.

ஆங் லீ புதிதாக இயக்கியுள்ள படம் ‘லைஃப் ஆஃப் பை' இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது. நடிகை தபு இந்த ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

totally stunned kamal brilliance says ang lee
Close
 

இந்த படத்தின் புரமோஷனுக்காக இயக்குனர் ஆங் லீ இந்தியாவின் முக்கிய நகரங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சென்னை வந்த அவர், ‘லைஃப் ஆஃப் பை' படத்தின் 3D டிரெய்லரைப் தமிழ்த் திரையுலகினருக்கு போட்டுக்காட்டினர். இதனை பலரும் பாராட்டினர். நிகழ்ச்சியின் போது இயக்குனர் ஆங் லீ-யை பேட்டி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவரை நடிகர் கமல்ஹாசன் பேட்டி எடுத்தார்.

பேட்டியின்போது கமல் கேட்ட கேள்விகளும், ஆங் லீயைப் பற்றி அவர் தெரிந்து வைத்திருந்ததும், உலக சினிமா குறித்த கமல்ஹாசனின் புலமையும் ஆங் லீயை அசத்திவிட்டதாம்.

இது குறித்துப் பின்னர் பேசிய ஆங் லீ, கமல் சிறந்த அறிவாளி. என்னைப் பற்றியும் என் படங்களைப் பற்றியும் அவர் இந்த அளவுக்கு அறிந்து வைத்திருப்பார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

கமல், என்னை பேட்டி எடுத்த விதத்தில் நான் அப்படியே உறைந்துவிட்டேன். கமல், உலக சினிமா அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கும் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த மனிதரும் கூட. இந்திய திரை உலகமே அவரால் பெருமையடைகிறது என்று பாராட்டு பத்திரம் வாசித்தார் ஆங் லீ.

அதன் பின்னர் கமல் இயக்கிய ‘விஸ்வரூபம்' படத்தைப் பற்றி கேள்விப்பட்டு கமலின் அலுவலகத்திற்குச் சென்று விஸ்வரூபம் படத்தின் டிரெய்லரைப் பார்த்தார். "மொழி தெரியாதவர்களுக்குக் கூட புரியும் வகையில் இருக்கிறது விஸ்வரூபம் படத்தின் டிரெய்லர். நிச்சயமாக விஸ்வரூபம் மிகப் பெரிய அளவில் வெற்றியடையும்" என ஆங் லீ வாழ்த்தினார்.

கமல்ஹாசனை வாழ்த்தும் இரண்டாவது ஹாலிவுட் வாய் ஆங் லீ. ஏற்கனவே பேரி ஆஸ்போர்ன் கமல்ஹாசனைப் பாராட்டியதோடு தனது படத்தையும் இயக்கி, நடிக்கும் பொறுப்பை கொடுத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

 

'பிக் பாஸ்' வீட்டில் ராஜூ சுந்தரத்துடன் ஆடிய 'ஜும்பலக்கா' மிங்க்!

மும்பை: பிக் பாஸ் 6 ரியாலிட்டி ஷோவில் புதிதாக ஒரு ஐட்டத்தைச் சேர்த்துள்ளனர். அவர் மிங் பிரார். மிங் மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி, டான்ஸர் மற்றும் நடிகை.

mink brar enters into bb house
Close
 

தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிங்க்கை நன்றாகவே தெரியும்... ஆனால் மிங்க் என்ற பெயரைச் சொன்னால் தெரியாது... என் சுவாசக் காற்றே படத்தில் இடம் பெற்ற ஜும்பலக்கா ஜும்பலக்கா பாடலைச் சொன்னால் நன்றாக தெரியும். அந்தப் பாட்டில், ராஜு சுந்தரம் மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து கலக்காலக ஆட்டம் போட்டாரே அவர்தான் மிங்க்.

நடன வடிவமைப்புக்காக வெகுவாகப் பேசப்பட்ட பாடல் அது. அதிலும் ராஜு சுந்தரத்தின் நுனுக்கமான டான்ஸ் மூவ்மென்ட்கள் அந்தப் பாடலை பெரிய ஹிட்டாக்கியது, மிங்க்கும் சேர்ந்ததால் பாடல் படு ஹாட்டாகவும் மாறியது.

பழங்கதை போதும்.. மிங்க் இப்போது பிக் பாஸ் 6 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளார். 1993ம் ஆண்டு தேவ் ஆனந்த்தால் சினிமாவுக்குக் கொண்டு வரப்பட்டவர் மிங்க். பாலிவுட்டில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்துள்ளார். குத்தாட்டம் போட்டுள்ளார். விளம்பரங்களில் நிறைய நடித்துள்ளார்.

பெரிய அளவில் பிரேக் கிடைக்காவிட்டாலும் கூட ஹாட்டான தனது பேச்சால் தொடர்ந்து லைம்லைட்டில் இருந்து வருபவர். நான் ஒரு லெஸ்பியன், இதைச் சொல்ல வெட்கப்படவில்லை என்று அதிரடியாக கூறியவர். பெண் ஒருவருக்கு அழுத்தமாக உதட்டு முத்தம் கொடுத்தும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இப்போது இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் புகுவதால் வீடே அதகளப்படும் என்பதில் ஐயமில்லை...!

 

பாலச்சந்தரின் புதிய தொடர் ‘இலக்கணம் மாறுதோ?’

Kavithalaya New Serial Ilakkanam Marutho

கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ள ‘இலக்கணம் மாறுதோ'. புதிய தொடர் வரும் திங்கட்கிழமை முதல் ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாக இருக்கிறது.

"இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ..." நிழல் நிஜமாகிறது என்ற படத்தில் வந்த பாடலின் வரியை கவிதாலயா நிறுவனத்தின் அடுத்த நெடுந்தொடரின் தொடரின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

பாலசந்தரின் இயக்கமோ, தயாரிப்போ கதைக்களம் வித்தியாசமாகத்தான் இருக்கும். இந்த தொடரும் அதுபோலத்தான் என்பதை பெயரை வைத்தே புரிந்து கொள்ளலாம்.

ஸ்ரேயா, சுரபி இருவரும் பள்ளிப்பருவத்தில் இருந்தே உயிர்த் தோழிகள். இருவருக்கும் உரிய காலத்தில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. வாசுவுக்கு சுரபி என்றும், சிவாவுக்கு ஸ்ரேயா என்றும் இவர்களின் பெற்றோர் நிச்சயிக்கிறார்கள். திருமணத்திற்கு முன் 3 மாத இடைவெளி இருக்க, நால்வரும் ஜோடியாக பழகுகிறார்கள். அப்பழக்கத்தின் பயனாக, நால்வரும் தத்தம் விருப்பு, வெறுப்புகளை நன்கு புரிந்து கொள்கிறார்கள். தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை விட அடுத்தவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் உகந்தவள் என்ற உண்மையை மெல்ல உணரத் தலைப்படுகின்றனர். இதை தோழிகள் இருவரும் கூட உணர்ந்து ஒப்புக்கொள்கின்றனர். அவர்கள் முன் எழும் கேள்விகள் இப்போது இது தான்.

பெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளையை மணப்பதா? அல்லது தத்தம் ரசனைக்கு ஒத்து வருகின்ற குண நலன்களை கொண்ட தனக்கேற்ற மற்றவரை ஏற்பதா? என்று யோசிக்கின்றனர். இறுதியில் நால்வரும் இரண்டாவது முடிவை ஒரு மனதாக தேர்ந்தெடுக்க, சிக்கல் உருவாகிறது. இவர்கள் வாழ்வு இவர்கள் முடிவிற்கேற்ப மகிழ்ச்சியாக அமையுமா? என்பதை சுவாரஸ்யத்துடன் கொண்டு செல்கின்றனர்.

இதில் ‘சஹானா' புகழ் காவ்யா, ஐஸ்வர்யா, விஜய், விக்கி, விஜய் ஆனந்த், கவிதாலயா கிருஷ்ணன், ‘அச்சமில்லை' கோபி, சாந்தி வில்லியம்ஸ், உஷா, லலிதா, விசேஷ், ஸ்வேதா, ஸ்ரீவித்யா, லட்சுமி நடிக்கின்றனர். முக்கியமான கதாபாத்திரத்தில் பிரமோதினி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகும் இந்த தொடரை புஷ்பா கந்தசுவாமி தயாரிக்க, வெங்கட் இயக்குகிறார்.

 

புயலால் சென்னையே பீதியில் ஆழ்ந்தபோது உற்சாகமாக வரவேற்ற மணிரத்தினம்!

Manirathinam Shoots Cyclone Nilam For His Movie

சென்னை: நிலம் புயலால் சென்னை மாநகரமே பெரும் பீதியில் இருந்தபோது ஒரே ஒரு குரூப் மட்டும் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் இருந்துள்ளது. அவர்கள் வேறு யாருமல்ல, இயக்குநர் மணிரத்தினம், கேமராமேன் ராஜீவ் மேனன் ஆகியோர் அடங்கிய கடல் படக் குழுவினர்.

நிலம் புயலால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பையும், கடல் சீற்றத்தையும், பலத்த சூறாவளிக் காற்றையும் இவர்கள் படம் பிடித்துள்ளனர் தங்களது படல் படத்துக்காக.

நிலம் புயல் தமிழக கடற்கரைப் பகுதியைத் தாக்கி கரையைக் கடந்த சமயத்தில் மணிரத்தினம், ராஜீவ்மேனன் உள்ளிட்டோர் ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் முகாமிட்டிருந்தனர். புயலின் கோரக் காட்சிகளை தத்ரூபமாக படம் பிடிப்பதே இவர்களது நோக்கம். இருப்பினும் புயல் இவர்கள் இருந்த பக்கம் வராமல் மகாபலிபுரத்தோடு நின்று விட்டது. இருப்பினும் கடல் கொந்தளிப்பையும், சீற்றத்தையும், சூறைக் காற்றையும் இவர்கள் படம் பிடித்துள்ளனர்.

இந்த சமாச்சாரத்தை இப்படத்தில் வில்லனாக நடிக்கும் அரவிந்த் சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். புயல் சீற்றத்துக்கு மத்தியில் சில காட்சிகளைப் படம் பிடித்தோம். அது புதிய அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார் அரவிந்த்சாமி.

புயல் பலருக்கு வாழ்க்கையைக் கெடுக்கிறது, சிலருக்கு வாழ்க்கையை புதுவிதமாக அனுபவிக்க சொல்கிறது...!

 

‘கோலிவுட் கிங்’ பட்டத்தை தவற விட்ட விஜயகாந்த் ரசிகர்!

Vijay Tv S Kollywood King

சினிமாவைப் பற்றி தெரிந்த ரசிகர்களுக்காக கோலிவுட் கிங் என்ற புத்தம் புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது விஜய் டிவி. நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிவரை வந்து கோலிவுட் கிங் பட்டத்திற்கான சரியான பதிலை சொல்ல முடியாமல் பட்டத்தை இழந்தார் விஜயகாந்த் ரசிகர் ஒருவர்.

ரசிகர்களின் ரசனைகள், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் களமாக இருக்கிறது கோலிவுட் கிங் நிகழ்ச்சி. 40க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அஜீத், விஜய், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களின் ரசிகர்கள் கலந்து கொண்டு சினிமா பற்றிய வெங்கட் பிரபுவின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

கோலிவுட் கிங் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக சிம்ரன் பங்கேற்றார். சிம்ரன் சினிமாவை விட்டுச் சென்று சில ஆண்டுகள் ஆகிவிட்டாலும் தற்போது சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அவரைப் பற்றிய பல தகவல்களை வெங்கட் பிரபு ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

சிம்ரன் ரசிகர்கள் இன்றைக்கும் அதே ஆர்வத்துடன் சிம்ரனை வரவேற்றனர். வாரணம் ஆயிரம் படத்தில் இருந்து ‘முன்தினம் பார்த்தேனே' பாடலைப் பாடி சிம்ரனை அசத்தினார் லயோலா கல்லூரியின் மாணவர். துள்ளாத மனமும் துள்ளும் படத்தை 87 தடவை பார்த்தேன் என்று கூறினார் அந்த ரசிகர்.

இதைக்கேட்டு உள்ளம் பூரித்த சிம்ரன், தமிழ் ரசிகர்களுக்கே உள்ள தனிச்சிறப்பு உண்டு. தமிழ் ரசிகர்கள் உண்மையான, நேர்மையான ரசிகர்கள் என்று போட்டுத்தாக்கினார்.

நிகழ்ச்சியின் இடை இடையே சினிமாவைப் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் வேறு சொன்னார்கள். முதல் மரியாதை படத்தில் முதன் முதலில் நடிக்க எஸ்.பி.பாலசுப்ரமணியத்தைதான் தேர்ந்தெடுத்தாராம் பாரதிராஜா. அவர் பாடல்கள் பாடுவதில் பிஸியாக இருக்கவே அந்த வேடத்தில் சிவாஜி நடித்தாராம். இது அநேகம் பேருக்கு தெரியாத செய்தியாக இருக்கலாம்.

சினிமாவைப் பற்றியும், சினிமாவை நேசிக்கும் இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இடையே பாடல் ஒன்றின் சில வரிகளைப் பாடி அசத்தினார் வெங்கட் பிரபு.

40க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் ‘ரெட் கார்பெட்' சுற்றில் 5 பேர் பங்கேற்றனர். தனித்தனியாக கேள்விகள் கேட்கப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஐவரில் இரண்டு பேர் மட்டும் வெற்றி பெற்று கோலிவுட் கிங் சுற்றுக்கு சென்றனர்.

கேப்டன் விஜயகாந்தை அறிமுகப்படுத்திய இயக்குநர் யார் என்ற கேள்விக்கு எம்.ஏ.காஜா என்ற பதிலை கூறி கோலிவுட் கிங் கேள்விக்கான பதிலை சொல்வதற்கான தகுதியை பெற்ற்றார் ஒரு ரசிகர்.

இளையாராஜா கதை எழுதிய படம் எது என்பதுதான் கோலிவுட் கிங் பட்டத்திற்காக வெங்கட் பிரபு கேட்ட கேள்வி. அதற்கு ‘தாய் மூகாம்பிகை' என்ற தவறான பதிலை கூறியதால் அவர் கோலிவுட் கிங் பட்டத்தை இழந்தார்.

பாரதிராஜா இயக்கிய நாடோடித் தென்றல் படத்தின் கதைதான் இளையராஜா எழுதியது என்று சரியான விடையை கூறினார் வெங்கட் பிரபு. பட்டம் கிடைக்காவிட்டாலும் கடைசி வரை விளையாடியதற்காக அந்த ரசிகர் அவர் ஏற்கனவே ஜெயித்த பணம் 11ஆயிரத்து 500 ரூபாயுடன் ஹோம் தியேட்டர், கேமரா என்ற கிப்ட் வழங்கப்பட்டது.

சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியை காணலாம்.