மீண்டும் மேக்கப் போட்டார் அனன்யா!

Ananya Malayalam 3 D Movie   

திருமண சர்ச்சையில் ஒரு தீர்வு கிடைக்கிற மாதிரி தெரியாததால் மீண்டும் மேக்கப் போட்டார் நடிகை அனன்யா.

ஒரு மலையாள 3 டி படத்தில் அவர் நடிக்கிறார்.

"நாடோடிகள்', 'எங்கேயும் எப்போதும்' படங்களில் நடித்தவர் அனன்யா. இவருக்கும் தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் வெளியானதால் அனன்யா குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

ஆரம்பத்தில் ஆஞ்சநேயனைத்தான் மணப்பேன் என ஒற்றைக் காலில் நின்ற அனன்யா, இப்போது இரண்டு காலிலும் நின்றபடி, வேண்டாம் ஆஞ்சநேயன் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.

விஷயம் கேள்விப்பட்டு சந்தோஷப்பட்ட இயக்குநர்கள் மீண்டும் அவர் வீட்டுக் கதவை பெட்டிகளோடு வந்த தட்ட, முதல் படமாக மலையாளத்தில் ரத்தா ராஷா என்ற 3 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார்.

கல்லூரி மாணவரி, மோகினிப் பிசாசு என இதில் அவருக்கு இரட்டை வேடமாம். 3 விதமான க்ளைமாக்ஸாம்.

இவரது பேய் கெட்டப்பைப் பார்த்து உடன் நடித்த சன்னி வனே என்ற நடிகர் மிரண்டு விழுந்துவிட்டாராம். தெளிய ரொம்ப நேரமானதாம்!

 

கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா! - பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!

Santhanam Power Star Srinivasan Team Up

பவர் ஸ்டார் எனப்படும் டாக்டர் சீனிவாசனைப் பற்றிய செய்தி தினசரி எப்படியாவது அச்சில் ஏறிவிடுகிறது.

இதுவரை அவரை நடிகராகக் கூட யோசித்துப் பார்க்காதவர்கள், இப்போது ‘அட’ என நிமிர்ந்து பார்க்கும் அளவு நிலைமை மேம்பட்டிருகிறது.

ஏற்கெனவே 10 படங்களை கைவசம் வைத்திருக்கும் சீனிவாசன், அடுத்து ஒரு படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் கை கோர்க்கும் இன்னொரு ஹீரோ சந்தானம்!

படத்துக்கு கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா! என தலைப்பிட்டுள்ளனர் (இது ஒரு சாக்லேட் விளம்பர வாசகம்!)

சும்மனாங்காட்டியும் ஏதோ கிளப்பிவிடுகிறார்களா… அல்லது நிஜமான செய்திதானா என தெரிந்து கொள்ள சந்தானத்திடமே கேட்டுவிட்டோம்.

அவரும் சீரியஸாக, “ஏங்க… உண்மையா இருக்கக் கூடாதா… பவர் ஸ்டார் சீனிவாசன் கூட சேர்ந்து இந்தப் படத்தில் நான் நடிப்பது உண்மைதான். ஆனா, இன்னும் பல விஷயங்கள் முடிவாகவில்லை. முடிவான பிறகு அறிவிப்பு வெளியாகும். செம ஜாலியான படமா பண்ண திட்டமிட்டிருக்கோம்,” என்றார்.

செய்தி வெளியானதும் இப்பவே பிஸினெஸ் விசாரணை வேற ஆரம்பிச்சிடுச்சாம்!

 

தெலுங்கில் பில்லா 2 ஐ 'சாப்பிட்ட' சகுனி!

Saguni Rights Overtakes Billa 2 Telugu   

இந்த செய்தி நிச்சயம் அஜீத் ரசிகர்களுக்கு கடுப்பாகத்தான் இருக்கும். ஆனாலும் உண்மை.

அஜீத் நடிப்பில் தயாராகி, அடுத்த வாரம் வெளியாகவிருந்து, பின்னர் தள்ளிப் போயுள்ள பில்லா 2-ன் தெலுங்கு விற்பனை உரிமையை விட அதிக விலைக்குப் போயுள்ளது கார்த்தியின் சகுனி படம்.

தெலுங்கில் ஆரம்பத்திலிருந்தே கார்த்திக்கு நல்ல வரவேற்பு. சகுனி அவரது ஆறாவது படம். இப்போதே பெரிய நடிகர்கள் வரிசைக்குப் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சகுனி படத்தைப் பொறுத்தவரை, எல்லாமே பக்கா திட்டமிடலோடு நடக்கிறது. படத்தைத் தொடங்கியதிலிருந்து, முடித்து சென்சாருக்கு அனுப்பி, ரிலீஸ் தேதி அறிவித்தது வரை எந்தத் தடுமாற்றமும் இல்லா.

பில்லா 2ம் சகுனியும் ஒரு நாள் இடைவெளியில், அதவாது ஜூன் 21, 22 ஆகிய தேதிகளில் வெளியாவதாக இருந்தன. ஆனால் கடந்த வாரம் சென்சாருக்குப் போன பில்லா 2-க்கு ஏ சான்றிதழ் கிடைத்தது. அத்துடன் படத்திலிருந்து பல வன்முறை காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் தயாரிப்பாளர் அதிருப்தியில் உள்ளார்.

இப்போது 'பில்லா 2' திரைப்படத்தின் வெளியீடு எந்தவித அறிவிப்பின்றி தள்ளிப்போய்விட்டது.

ஆனால் சகுனி திரைப்படம் திட்டமிட்டபடி ஜூன் 22ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

 

ஒரு 'மலரின்' பயணம்... நாதஸ்வரம் ஸ்ரிதிகாவின் 'நச்' பேட்டி!

Nadaswaram Srithika Opens Her Mind

நாதஸ்வரம் தொடரில் மலர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துக்கொண்டிருக்கும் கதாநாயகி ஸ்ரிதிகா சின்னத்திரைக்கு புதியவரல்ல. நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கிய அவர் பெரியதிரையில் கதாநாயகியாக நடித்து பின்னர் சின்னத்திரைக்கு வந்துள்ளார்.

டிவி, சினிமா என இரண்டிலுமே வெற்றிகரமான பயணத்தை தொடக்கியுள்ள நடிகை ஸ்ரிதிகாவிடம் அவர் பயணம் செய்த பாதையை பற்றி கேட்கலாம்.

''நாதஸ்வரம் தொடர்ல கமிட் ஆகி ரெண்டு வருஷம் ஆகப்போகுது. நாட்கள் ஓடினதே தெரியல. 'நாதஸ்வரம்' சீரியல் ஷூட்டிங் முழுக்க முழுக்க காரைக்குடியிலயே நடக்கறதால, சென்னைக்கு அப்பப்போதான் வர முடியுது. வர்ற நேரத்துல ஷாப்பிங், தியேட்டர்னு ஒரே ரவுண்ட்ஸ்தான்!.

எங்கப்பா மலேசியாவில பிஸினஸ் செய்துட்டு இருந்ததால, ப்ளஸ் டூ வரை அங்கதான் படிச்சேன். அப்புறம் எங்க குடும்பம் சென்னைக்கு ஷிஃப்ட் ஆச்சு. எங்கக்கா சுதா, டிகிரி முடிச்சுட்டு ஒரு சேனல்ல தொகுப்பாளினியா சேர்ந்தாங்க. அவங்களோட கான்டாக்ட்ஸால எனக்கும் ஆங்கர், விளம்பரங்கள், வாய்ப்பு கிடைச்சது.

தற்போது நான், அம்மா, அக்கா மூவரும் சென்னையிலேயே தங்கிவிட்டோம். அப்பா மட்டும் அடிக்கடி மலேசியா சென்று வருகிறார்.

நிகழ்ச்சி தொகுப்பு, தவிர நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்தேன். அதன் பிறகுதான் பெரியதிரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது சின்னதிரை,பெரியதிரை இரண்டிலும் நடிக்கிறேன். "வெண்ணிலா கபடி குழு' படத்தில் நான் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தேன். அதற்கடுத்து "மதுரை டூ தேனி' படத்திலும் நடித்திருக்கிறேன்.

"வெண்ணிலா கபடி குழு' படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதியவர்தான் "நாதஸ்வரம்' தொடருக்கு ஸ்கிரிப்ட் ரைட்டர். அவர் மூலமாகத்தான் இந்தத் தொடரில் நடிக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

இயக்குநர் திருமுருகன் பற்றி நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. அந்த அளவுக்கு வெற்றிகரமாக ஓடிய தொடர்களை இயக்கியவர். அவருடைய டைரக்ஷனில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்தத் தொடரில் எனக்கு ரொம்ப சாஃப்ட்டான நேச்சர் உள்ள பாத்திரம். அதேசமயம் என்னோட ஒர்க்ல ரொம்ப பெர்பக்ட்டா இருக்கிற மாதிரியான கேரக்டர்.

படப்பிடிப்பில் வேலைப் பளுவே தெரியாமல் ரொம்ப ரிலாக்ஸாக ஒரு குடும்பத்துல இருப்பது போல இருக்கு. குடும்பத்திற்கு ஏற்ற மருமகளாக எப்படி நடந்து கொள்வது என்று இப்போதே ட்ரெயினிங் எடுத்துக்கொள்ளலாம்.

"நாதஸ்வரம்' தொடரில் மலர் கதாபாத்திரம் நிறைய பேருக்கு பிடித்திருக்கிறது. நிறைய பேர் அடையாளம் தெரிந்து கொண்டு வந்து பேசுகிறார்கள். இங்கு இருப்பது போலவே மலேசியாவிலும் தமிழ் தொடர்களுக்கு நிறைய வரவேற்பிருக்கிறது. மலேசியர்கள், தமிழ் தொடர்களை விரும்பிப் பார்க்கிறார்கள்.

என் நண்பர்கள் எல்லாம் நான் நடிக்கும் தொடரைப் பார்த்துவிட்டு எப்படியிருந்தது என்று போன் செய்து சொல்லும்பொழுது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறி மகிழ்ச்சியுடன் புன்னகை செய்தார் மலர்.

 

இலங்கை 'போலி டாக்டரிடம்' வலிக்கு சிகிச்சை பெற்ற பிபாஷா பாசு!

Bipasha Gets Treatment From Lanka   

இலங்கையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் இலங்கை மருத்துவக் கழகத்தால் போலி டாக்டர் என்று அழைக்கப்படும் எலியந்தா வைட் என்பவரிடம் இந்தி நடிகை பிபாஷா பாசு தோள்பட்டை வலிக்கு சிகிச்சை எடுத்துள்ளார்.

இந்த எலியந்த வைட் வேறு யாருமல்ல, ராஜபக்சேவின் ஆஸ்தான மருத்துவர் ஆவார்.மேலும் சச்சின் டெண்டுல்கர், ஆசிஷ்நெஹ்ரா மற்றும் கெளதம் கம்பீர் ஆகிய இந்திய வீரர்கள் உள்பட பல கிரிக்கெட் வீரர்களுக்கும் இவரது கை வைத்தியம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போலி டாக்டர், மோசடிக்காரர், பொய் சொல்லி என்று இலங்கை மருத்துவக் கழகத்தாலும், இலங்கையில் உள்ள மருத்துவத்தை முறையாகப் படித்த டாக்டர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்படுபவர் இந்த எலியந்தா. இவர் டாக்டருக்கும் படிக்கவில்லை, டிகிரி கூட முடித்ததாக தெரியவில்லை.

ஆயுர்வேதத்தைப் பயன்படுத்தி இவர் ஏதோ ஒரு மருத்துவத்தை கடைப்பிடித்து வருகிறார். இவர்தான் ராஜபக்சேவின் நிரந்தர மருத்துவ ஆலோசகராகவும் உள்ளார். இதனால் இலங்கைக்கு வருவோரிடம் எல்லாம் இந்த எலியந்தாவை அறிமுகப்படுத்தி எலியந்தாவின் பிஆர்ஓ போல செயல்படுகிறார் ராஜபக்சே.

இப்படித்தான் சச்சின் டெண்டுல்கர், கம்பீர், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோருக்கும் இந்த எலியந்தா தனக்குத் தெரிந்த கைவைத்தியத்தை முன்பு செய்துள்ளார். இவரைத் தேடி சிகிச்சை பெற வந்ததால்தான் கம்பீரம், நெஹ்ராவும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டனர். ஆனால் சச்சினை மட்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது.

இந்த நிலையில் எலியந்தா வைட்டிடம், தனது வலிக்காக சிகிச்சை பெற்றுள்ளாராம் பிபாஷா பாசு. அவருக்கு ஏற்பட்ட வலியை எலியந்தா தனது சிகிச்சை மூலம் குணப்படுத்தி விட்டாராம். சமீபத்தில் கொழும்பில் நடந்த ஒரு ரக்பி போட்டிக்கு வந்திருந்தார் பிபாஷா பாசு. அதில் இடம் பெற்ற டான்ஸ் நிகழ்ச்சிக்காக அவர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது வழுக்கி விட்டார். இதனால் தோள்பட்டை பிசகி விட்டதாம், வலி தாங்க முடியவில்லையாம். டாக்டர்கள் வந்து மருந்து கொடுத்ததால் தோள்பட்டை பிசகல் சரியானதாம், ஆனாலும் வலி நிற்கவில்லையாம்.

இதையடுத்து எலியந்தாவைக் கூப்பிட்டு பிபாஷாவின் தோள்பட்டையைக் காண்பித்துள்ளனர். அவர் ஏதோ ஒரு சிகிச்சையை அளித்துள்ளார், இதையடுத்து வலி போய் விட்டதாம்.

பிபாஷாவுக்கு ஏற்பட்ட இந்த வலியைப் போக்க முக்கியக் காரணமே ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேதானாம். அவர்தான் தனது அப்பாவுக்குப் போனைப் போட்டு மேட்டரைக் கூறியுள்ளார். பதறிப் போன ராஜபக்சே, உடனே எலியந்தாவுக்குப் போனைப் போட்டு வரவழைத்து பிபாஷாவுக்கு நிவாரணம் தேடித் தந்தாராம்.

 

'ஒரிஜினல்' பில்லா கதை உங்களுக்குத் தெரியுமா....?

Do You Know Original Billa

அமிதாப்பின் பில்லா, ரஜினியின் பில்லா, அஜீத்தின் பில்லா என பில்லா என்றாலே சூப்பர் ஹிட், மெகா ஹிட் என்றாகி விட்டது.

அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான முதல் பில்லா சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. பாலிவுட்டில் மட்டுமல்லாமல், சென்னை உள்பட திரையிட்ட இடங்களிலெல்லாம் திருவிழாக் கோலம் பூண்டது.

பின்னர் இப்படத்தை தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க ரீமேக் செய்தார்கள். 1979ம் ஆண்டு இப்படத்தின் ரீமேக் தொடங்கியது. அதற்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மகுடம் சூட்டப்பட்டிருந்தார். இதனால் மிகப் பெரிய ஹிட்டான பில்லாவின் ரீமேக்கில் ரஜினி நடிப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

1980ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வெளியான பில்லா, மிகப் பெரிய ஹிட்டானது, சில்வர் ஜூப்ளி ஹிட் கொடுத்தது. ரஜினி ஒன் அண்ட் ஒன்லி சூப்பர்ஸ்டாராக தமிழில் கொடி கட்டிப் பறக்க இந்தப் படம்தான் பிள்ளையார் சுழியாக அமைந்தது. ரஜினிகாந்த் டபுள் ரோலில் நடித்த முதல் படம் பில்லாதான். அதேபோல அமிதாப் பச்சன் படம் ஒன்றின் ரீமேக்கில் ரஜினி நடித்ததும் இதுவே முதல் முறை. இதன் பின்னர் அவர், அமிதாப்பின் தீவார் (தீ), நமக் ஹலால் (வேலைக்காரன்), திரிஷூல் (மிஸ்டர் பாரத்) என ரீமேக் படங்களில் நடித்தார்.

பிறகு பல வருடங்கள் கழித்து அமிதாப்பின் பில்லாவை ஷாருக்கானும், ரஜினியின் பில்லாவை அஜீத்தும் ரீமேக் செய்து ஹிட்டானார்கள். இப்போது அஜீத் மேலும் ஒரு படி போய், பில்லாவின் 2ம் பாகத்தையும் முடித்து விட்டார்.

இந்த பில்லாக்களை விடுங்கள், உங்களுக்கு உண்மையான 'பில்லா' குறித்து தெரியுமா... தெரியாவிட்டால் தொடர்ந்து படியுங்கள்..

டெல்லியைக் கலக்கிய பில்லா - ரங்கா

வருடம், 1978. தலைநகர் டெல்லியே அல்லோகல்லப்பட்டுப் போய்க் கிடந்தது. காரணம், கீதா மற்றும் சஞ்சய் சோப்ரா என இரு சிறார்கள் கடத்தப்பட்டதால். அவர்களைக் கடத்தியது பில்லா எனப்படும் ஜஸ்பீர் சிங் மற்றும் ரங்கா எனப்படும் குல்ஜீத் சிங் என்று தெரிய வந்தது.

இந்த இரு இளைஞர்களும் சேர்ந்து கீதாவையும், சோப்ராவையும் கடத்திச் சென்றது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. போலீஸாரின் தீவிர வேட்டையில், இருவரின் உடல்களும் சிக்கின. இதில் கீதாவை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பில்லா, ரங்காவின் இந்த பயங்கரச் செயல் தலைநகர் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரையும் உயிருடனோ அல்லது சுட்டோ பிடிக்க உத்தரவிடப்பட்டது. தலைநகர் போலீஸார் பல்வேறு தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் குதித்தனர்.

பில்லாவும், ரங்காவும் சில மாத தேடுதல் வேட்டைக்குப் பின்னர் சிக்கினர். ஓடும் ரயிலில் வைத்து அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் நிறுத்தி விசாரணை பல மாதங்களுக்கு நீடித்தது. இறுதியில் 1982ம் ஆண்டு இருவரும் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்கள் சிக்கும் வரை அவர்கள் குறித்த செய்திதான் அத்தனை நாளிதழ்களிலும் முதல் பக்க தலைப்புச் செய்தியாக திகழ்ந்தன. அந்த அளவுக்கு பில்லா, ரங்காவைப் பற்றிய கதைகள் காட்டுத் தீ போல அப்போது பற்றி எரிந்தன.

பில்லா-ரங்காவால் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட கீதா சோப்ரா மற்றும் சஞ்சய் சோப்ரா ஆகியோரின் நினைவாக இரு வீர விருதுகளை இந்திய சிறார் நல கவுன்சில் உருவாக்கியது. ஆண்டுதோறும் இந்த தேசிய வீர விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பில்லா-ரங்கா வழக்கு சரிவர கையாளப்படவில்லை, அதில் அப்போது டெல்லியில் ஆளும் கட்சியாக இருந்த ஜனதாக் கட்சி அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு வியாபித்து எழுந்ததால், 1978ல் நடந்த தேர்தலில் ஜனதாக் கட்சி படு தோல்வியைச் சந்தித்தது. அந்த அளவுக்கு அக்காலத்தில் பில்லாவும், ரங்காவும் நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தி வைத்திருந்தனர்.

அமிதாப் பச்சன் நடித்த டான் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இயக்குநரும், நடிகருமான பாலாஜி முடிவு செய்தபோது டான் என்ற பெயர் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானதாக இருக்காது என்று நினைத்தார். அந்த சமயத்தில் பில்லா என்ற பெயர் நாடு முழுவதும் பரபரப்பாக இருந்ததால் அந்தப் பெயரையே ரஜினிக்கு வைத்தார் பாலாஜி. இப்படித்தான் ரஜினிகாந்த் பில்லாவானார்.

இதே ரஜினிகாந்த்தை வைத்து பின்னர் ரங்கா என்ற பெயரிலும் ஒரு படம் வந்தது. ஆனால் பில்லா அளவுக்கு ரங்கா ஓடவில்லை. பில்லா 1980ல் வந்தது என்றால் ரங்கா 82ல் வெளியானது. ரங்கா வெளியான சமயத்தில்தான் பில்லாவும், ரங்காவும் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முதல்ல மெட்டனுப்புங்க... அப்புறம் ஒரு கோடி துட்டனுப்புங்க! - அலற வைக்கும் நடிகை

Katrina Kaif Demands Crore Item Song    | இசை  

இயக்குநராக வெற்றிக் கொடி நாட்டி, பின்னர் நடிகராக சொதப்ப ஆரம்பித்த எஸ் ஜே சூர்யா, நடித்து இயக்கும் புதிய படமான 'இசை'யின் இறுதிக் கட்ட வேலைகள் நடந்து கொண்டுள்ளன.

இந்தப் படத்தில் தன்னுடன் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட பிரபல நடிகைகளைத் தேடிய எஸ் ஜே சூர்யா, கடைசியில் பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைபை அணுகியுள்ளார்.

படத்தின் கதை, யார் இசை என்றெல்லாம் கேட்ட கத்ரீனா, இசையமைத்துள்ளது எஸ்ஜே சூர்யாதான் என்றதும், முழு மெட்டையும் எனக்கு அனுப்ப முடியுமா என்று கேட்டுள்ளார்.

கூடவே அவர் சொன்னது, "இந்தப் பாட்டுக்கு நான் ஆட ரூ 1 கோடிக்கு மேல் சம்பளமாக வேண்டும். அட்லீஸ்ட் 1 கோடியாவது வேண்டும். தயார் என்றால் மெட்டை அனுப்பிய கையோடு, பணத்தை செட்டில் பண்ணிடுங்க, நான் தயார்," என்றாராம்.

ஷாக்காகி திரும்பியுள்ளார் எஸ்ஜே சூர்யா.

இதுக்கு பேசாம சன்னி லியோன் கிட்டயே பேசி முடிச்சிடலாம்!

 

தமிழ் படத்தில் ஆட கரீனா திடீர் நிபந்தனை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட திடீர் நிபந்தனை விதித்தார் கரீனா கபூர். ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் ஹீரோயின்கள் தமிழ் படத்தில் நடித்துள்ளனர். கரீனா கபூரை நடிக்க வைக்க நடந்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. தற்போது இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தான் இயக்கி நடிக்கும் 'இசைÕ படத்தில் கரீனாவை குத்துப்பாடலுக்கு ஆட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் மும்பை சென்ற சூர்யா இப்படத்தின் கதையை கரீனாவிடம் விளக்கினார். குத்து பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடும்படி அவரிடம் கேட்டார். இதற்காக ரூ 1 கோடி சம்பளம் தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதைக்கேட்ட கரீனா, 'ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அந்த பாடலை எனக்கு முதலில் போட்டுக்காட்ட வேண்டும். அது பிடித்திருந்தால்தான் நடிப்பேன்Õ என்று நிபந்தனை விதித்தார். இதையடுத்து பாடலை ஒலிப்பதிவு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். 'இப்பாடல் கரீனாவை நிச்சயம் கவரும். அவர் இதில் நடிப்பது உறுதிÕ என்றார் சூர்யா.


 

காமெடி நடிகர்களுக்கு நான் ரசிகை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சீரியஸான வேடங்களில் நடித்தாலும் காமெடி நடிகர்களுக்கு நான் ரசிகை என்றார் அசின். இது பற்றி அசின் கூறியதாவது: நடிப்பில் உள்ள ஆர்வத்தைவிட அதிகபட்ச ஆர்வம் புத்தகம் படிப்பதில்தான் இருக்கிறது. எந்த புத்தகம் கிடைத்தாலும் படித்து முடிக்காமல் கீழே வைக்க மாட்டேன். கதைகள், தத்துவம், பொழுதுபோக்கு என எல்லா வகை புத்தகங்களும் படிப்பேன். குறிப்பாக காமெடி கதை அம்சம் கொண்ட புத்தகம் என்றால் உயிர். படிக்கும் ஆர்வம் சிறுவயதிலிருந்து என் உடலில் ஊறி இருக்கிறது. எனக்கு நண்பர்கள் குறைவு. எனவே எனது பெரும்பாலான நேரத்தை புத்தகம் படிப்பதில்தான் செலவிடுவேன். இப்போதுகூட எங்காவது பயணம் புறப்பட்டால் என் துணையாக வருவது புத்தகம்தான். எந்த ஏர்போர்ட்களில் இறங்கினாலும் உடனே புத்தக கடைக்கு செல்வேன். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள புத்தக கடையில் என்னை அடிக்கடி பார்க்கலாம். அங்கு வேலை செய்யும் எல்லோரையும் எனக்கு தெரியும். நான் வருகிறேன் என்று தெரிந்தால் காமெடி கதைகள் அடங்கிய புத்தக தொகுப்பை தயாராக எடுத்து வைத்துவிடுவார்கள். படங்களில் சீரியஸான வேடங்களில் நடிக்கிறேன். நிஜத்தில் நான் காமெடி பட ரசிகை. படங்களில் வரும் காமெடி நடிகர்களுக்கு நான் எப்போதும் ரசிகை. இவ்வாறு அசின் கூறினார்.


 

திருமண சர்ச்சைக்கு பிறகு நடிக்க வந்தார் அனன்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திருமண சர்ச்சைக்கு பிறகு படங்களில் கவனம் செலுத்தும் அனன்யா, 3 கிளைமாக்ஸ் கொண்ட படத்தில் நடிக்கிறார். 'நாடோடிகள்', 'எங் கேயும் எப்போதும்' படங்களில் நடித்தவர் அனன்யா. இவருக்கும் தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் வெளியானதால் அனன்யா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர். ஆனால் அவரை மணப்பதில் பிடிவாதமாக இருக்கிறார் அனன்யா. இதையடுத்து திருமண தேதி முடிவாவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த பிரச்னையால் படங்களில் நடிப்பதை அவர் தவிர்த்து வந்தார். இதற்கிடையில் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் அனன்யா. மலையாளத்தில் Ôரத்தா ராக்ஷாÕ என்ற 3 டி படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். பேஷன் டிசைனராக ஒரு வேடம். மோகினியாக மற்றொரு வேடம். 8 நாட்கள் தொடர்ந்து மாறி மாறி இருவேடங்களிலும் நடித்தது மறக்க முடியாத அனுபவம். உடன் நடிக்கும் சன்னி வனேயை பேய் வேடம் போட்டு பயமுறுத்த எண்ணினேன். முதல் நாள் ஷூட்டிங்கில் அந்த சம்பவம் நடந்தது. அதுவரை நான் பேய் கெட்டப் போட்டு சன்னி பார்க்கவில்லை. எனவே அவருக்கு ஷாக் கொடுக்க எண்ணினேன். இரவில் அவர் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தபோது விளக்குகள் அணைந்திருந்தது. மொபைல் போனில் என் கண்களுக்கு மட்டும் வெளிச்சம் காட்டி அவரை குரல் மாற்றி அழைத்தேன். அவர் மெதுவாக கண்விழித்துப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்து அலறியபடி கட்டிலிலிருந்து கீழே விழுந்தார். இப்படத்துக்கு 3 விதமான கிளைமாக்ஸ் படமாக்கப்படுகிறது. இவ்வாறு அனன்யா கூறினார்.


 

வானத்தில் உள்ள நட்சத்திரத்துக்கு நடிகை மாதுரி தீட்சித் பெயர்!

Star Named After Madhuri Dixit   

விண்மீன் கூட்டத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்துக்கு நடிகை மாதிரி தீட்சித்தின் பெயரைச் சூட்டியுள்ளனர்.

இந்தி திரைப்பட உலகில் 20 ஆண்டுளுக்கும் மேல் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை மாதுரி தீட்சித். தற்போது 45 வயதானாலும், இன்னும் பல லட்சம் ரசிகர்கள் அவருக்கு உள்ளனர்.

இந்த நிலையில் திரையுலக நட்சத்திரமான மாதுரி தீட்சித் விண்ணிலும் நட்சத்திரமாக மின்னத் தொடங்கியுள்ளார். அதாவது விண்மீன் கூட்டத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்துக்கு அவருடைய பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். இந்த தகவலை சமூக வலைதளத்தில் அவரே வெளியிட்டு உள்ளார்.

"ஓரியான் என்ற விண்மீன் கூட்டத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்துக்கு என்னுடைய பெயரை வைத்துள்ளனர். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மிகப்பெரிய கவுரவம் வழங்கப்பட்டதற்காக எனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

நட்சத்திரத்துக்கு மாதுரி தீட்சித் பெயர் வைத்ததற்கான சான்றிதழை ஸ்டார் பவுண்டேசன் என்ற அமைப்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வழங்கியது.

அந்த சான்றிதழையும் சமூக வலைத்தளத்தில் நடிகை மாதுரி தீட்சித் வெளியிட்டுள்ளார்.

 

சன், ஜெயா டிவியில் மோதிக் கொண்ட எம்.ஜி.ஆரும், கார்த்தியும்!

Sunday Films Suntv Vs Jaya Tv

ஞாயிறுகிழமை வந்தாலே திரைப்படங்களை ஒளிபரப்புவதில் சேனல்களுக்கு இடையே பெரிய போட்டியே நடக்கும். புதுப்படங்களை போட்டி போட்டு ஒளிபரப்புவார்கள்.

கடந்த சில வாரங்களாக புதிய திரைப்படங்களை விஜய் டிவியுடன் போட்டி போட்டு காலை நேரத்தில் ஒளிபரப்பிய சன் டிவி இந்த வாரம் ஜெயா டிவியுடன் போட்டி போட்டு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை ஒளிபரப்பியது.

ஜெயா டிவியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஒளிபரப்பானது அதே நேரத்தில் சன் தொலைக்காட்சியில் கார்த்தி, ரீமாசென், ஆன்ட்ரியா நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ரசிகர்களின் ஆதரவு என்னவோ எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குதான் கிடைத்திருக்கும் என்றாலும் சன் டிவி என்றைக்கு தன்னுடைய போக்கை மாற்றிக்கொள்ளப்போகிறதோ என்று கேட்கத் தொடங்கியுள்ளனர் தமிழ்நாட்டு ரசிகர்கள்.

 

மலையாளப் படத்தில் நடிக்கிறார் விஜய்?

Vijay Malayalam Movie    | விஜய்  

மலையாளத்தில் ரஜினிக்கு அடுத்து ஓரளவு வரவேற்புள்ள நடிகர் விஜய். இவரது சமீபத்திய படங்கள் சில அங்கு 50 நாட்களைத் தாண்டி ஓடியுள்ளன. வசூலும் பரவாயில்லை!

சமீபத்தில் திருவனந்தபுரம், கொச்சின் போன்ற நகரங்களில் ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

கருத்தன் என்ற மலையாளப் படத்தில் விஜய் நடிக்கப் போவதாக அந்த போஸ்டர் மூலம் தெரிந்து கொண்ட மலையாள ரசிகர்கள் உற்சாகத்துடன் விஜய்க்கு வாழ்த்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் படத்தை மஸ்தான் முஜீப் கான் இயக்கப் போவதாகவும், எஸ்என் சாமி திரைக்கதை வசனம் எழுதப் போவதாகவும் வேறு குறிப்பிட்டிருந்தனர்.

இது உண்மைதானா என விஜய்யின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டோம்.

அவர் கூறுகையில், "மலையாளப் படத்தில் விஜய் நடிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. இப்போதைக்கு தமிழ்ப் படங்களில்தான் அவர் கவனம் செலுத்துகிறார். தெலுங்கு, இந்தியில் வந்த வாய்ப்புகளைக் கூட அவர் ஏற்கவில்லையே," என்றார்.

ஆனால் அடுத்த இரு ஆண்டுகளுக்குப் பின் விஜய் மலையாளத்தில் ஒரு படம் நடிக்கக்கூடும் என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்!

 

சில்க் ஸ்மிதாவை பெருமைப் படுத்தும் சினிமா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி மலையாளத்தில் 'கிளைமாக்ஸ்' என்ற படம் உருவாகிறது. இதில் சில்க் வேடத்தில் நடிக்கும் சனாகான், நிருபர்களிடம் கூறியதாவது: மலையாளத்தில் சில்க் ஸ்மிதாவை அறிமுகம் செய்தவர், ஆண்டனி ஈஸ்ட்மென். அவர் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைச் சம்பவங்களை தொகுத்து எழுதும் 'கிளைமாக்ஸ்' படத்தை அனில் இயக்குகிறார். அதில் நடிக்கிறேன். இந்தப்படம் அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில், 'யு' சான்றிதழ் வாங்கும் நோக்கத்தில் உருவாகிறது. பாடல்களில் கவர்ச்சியாக வருவேன். பிகினி டிரெஸ்சில் வர மாட்டேன். சில்க்கின் வாழ்க்கையை பெருமைப்படுத்தும் விதமாக இப்படம் அமையும். சில்க்கின் கண்கள் மீது காதல் உண்டு. அதுபோல் என் சிரிப்பு மற்றும் உதடுகள் மீதும் காதல் உண்டு. ஆனால், நிஜ வாழ்க்கையில் யாருடனும் எனக்கு காதல் ஏற்பட்டது இல்லை.


 

ஆக்ஷனுக்கும் லாஜிக் வேண்டும்: மகிழ் திருமேனி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆக்ஷன் படத்துக்கும் லாஜிக் அவசியம் என்று இயக்குனர் மகிழ் திருமேனி கூறினார். அருண்விஜய், மம்தா நடித்த 'தடையறத் தாக்க' படத்தை இயக்கிய மகிழ்திருமேனி நிருபர்களிடம் கூறியதாவது:
 'தடையற தாக்க' ஆக்ஷன் படமாக இருந்தாலும் எந்த இடத்திலும் லாஜிக் மீறல் இல்லை. ஆக்ஷன் படங்களுக்கு லாஜிக் தேவையில்லை என்ற வாதத்தை ஏற்க மாட்டேன். லாஜிக்குடன் ஆக்ஷன் படத்தை இயக்க முடியும். 'தடையறத் தாக்க' படம் திட்டமிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்டது. இடையில் ஏற்பட்ட தாமதங்களுக்கு நான் காரணம் இல்லை. தயாரிப்பாளருக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு என்பதிலும் உண்மையில்லை. அடுத்து நம் கண்ணுக்குத் தெரியாமல் செயல்படும் அண்டர்கிரவுண்ட் காவல்துறையை மையமாக வைத்து படம் இயக்குகிறேன். அவர்களின் செயல்பாடு, நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்து திரைக்கதை அமைத்திருக்கிறேன். ஒரு முன்னணி ஹீரோவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு மகிழ் திருமேனி கூறினார்.


 

பாலுமகேந்திரா இயக்கத்தில் ரம்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சின்னத்திரை நடிகை ரம்யா, பாலுமகேந்திரா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: டி.வி. தொடர்களில் நடித்துவருகிறேன். அடுத்த கட்டமாக சினிமா வாய்ப்பு வந்தது. 'மந்திரப்புன்னகை' படத்தில் துணிச்சலான கேரக்டரில் நடித்தேன். 'தடையறத் தாக்க' படத்தில் அருண் விஜய்யின் தோழியாக நடித்திருக்கிறேன். 'ரெண்டாவது படம்' எனக்கு முக்கிய படமாக இருக்கும். இதுதவிர பாலுமகேந்திரா இயக்கி வரும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன். என்னைச் சுற்றி நடக்கும் கதை. சிறந்த குணச்சித்திர நடிகையாக வரவேண்டும் என்பது ஆசை.


 

ஆக்ரோஷ வக்கீலாக ராதிகா ஆப்தே

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அஜ்மல், ராதிகா ஆப்தே நடிக்கும் படம், 'வெற்றிச் செல்வன்'. சிருஷ்டி சினிமா சார்பில் தயாரித்து இயக்கும் ருத்ரன் படம் பற்றி கூறியதாவது: அஜ்மல் மருத்துவக் கல்லூரி மாணவர், மனோ இசை கல்லூரி பேராசிரியர். ஷெரீப் டான்சர். இப்படி வெவ்வேறு துறையில் உள்ளவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையே வருகிறார் வழக்கறிஞர் ராதிகா ஆப்தே. இதனால் என்ன நடக்கிறது என்பதை காதல், ஆக்ஷன் திகில் கலந்து சொல்லியிருக்கிறோம். ராதிகா, இதில் கொடுமைகளை கண்டு பொங்கி எழும் வழக்கறிஞராக நடித்திருக்கிறார். ராதிகாவுக்கு தமிழ்நாட்டு பெண் வழக்கறிஞர்கள் பற்றித் தெரியாது. இந்த கேரக்டரைச் சொன்னதும் பெண் வழக்கறிஞர்களை பார்க்க வேண்டும் என்றார். இதற்காக, நீதிமன்றத்துக்கு அவரை அழைத்துச் சென்றோம். அங்கு பெண் வழக்கறிஞர்களை கவனித்து, அவர்கள் மாதிரியே நடித்துக்காட்டி ஆச்சர்யப்படுத்தினார். கமர்சியல் படம் என்பதால் கிளாமராகவும் நடித்துள்ளார்.


 

பெண் இயக்குனரின் பேய் கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆர்.எம்.எஸ். புரொடக்ஷன் சார்பில் எஸ்.ஜீவானந்தம் தயாரிக்கும் படம், 'பேய்'. அகரம், ஸ்ரீரேவதி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். பப்லு ஒளிப்பதிவு. ஜே.மஹாலட்சுமி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ' தமிழ் நாட்டில் பெண்கள் பேய் பிடித்து ஆடுவது காலம் காலமாக நடந்து வருகிறது. இது ஏன், எப்படி? பேய் உண்மையில் இருக்கிறதா இல்லையா என்பதை பற்றிய படம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாதிரியான பேய் பிரச்னைகள் இருக்கிறது. அதையும் பதிவு செய்கிறோம்'' என்றார்.


 

வினய் நடிக்கும் இருவர் உள்ளம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'மிரட்டல்' படத்தை முடித்துள்ள வினய், கூறியதாவது: 'வாமனன்' அஹமது இயக்கும் 'என்றென்றும் புன்னகை' படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடிக்கிறேன். அவருக்கு ஜோடி, த்ரிஷா. அடுத்து கேமராமேன் ஜி.ரமேஷ் இயக்கும் 'இருவர் உள்ளம்' படத்தில், ஹீரோவாக நடிக்கிறேன். எனக்கு ஜோடி, பிந்து மாதவி. மூன்று வருட இ¬டைவெளிக்குப் பிறகு 'மிரட்டல்' மூலம் தமிழுக்கு வந்துள்ள நான், மேலும் இரண்டு படங்களில் பொருத்தமான வேடங்களில் நடிப்பதுபற்றி சந்தோஷப்படுகிறேன்.


 

தந்தம் பதுக்கிய வழக்கு: மோகன்லாலிடம் 1 மணி நேரம் விசாரணை!

Mohan Lal Attends Forest Dept Interrogation

கொச்சி: சட்டவிரோதமாக யானை தந்தங்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மோகன்லாலிடம் வனத்துறை அதிகாரிகள் 1 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

நடிகர் மோகன்லால் கொச்சியில் உள்ள தனது வீட்டில் 4 யானை தந்தங்கள் வைத்திருந்தார். அவற்றை கோடநாடு வனத்துறையினர் கைப்பற்றி மோகன்லால் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மோகன்லாலுக்கு 3 முறை வனத்துறை சம்மன் அனுப்பியது.

ஆனால் மோகன்லால் இந்தத் தந்தங்களை சட்டப்படி பெற்றதாகவும், 23 ஆண்டுகளாக வைத்திருப்பதாகவும் கூறி இந்த விசாரணைக்கு வராமல் இருந்து வந்தார். இந்தநிலையில் வருகிற 20-ந் தேதி எர்ணாகுளம் தேவரா கோர்ட்டில் நடிகர் மோகன்லால் மீது வனத்துறை வழக்கு தொடர உள்ளது.

இதற்கிடையே மோகன்லால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக கூறி கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று திடீரென அவர் கோடநாடு வனத்துறை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவரிடம் வனத்துறை அதிகாரி நாகராஜ் யானை தந்தங்கள் குறித்து விசாரணை நடத்தினார்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது. வன அதிகாரி கேட்ட கேள்விகளுக்கு மோகன்லால் பதில் அளித்தார். பின்னர் அவர் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

மோகன்லால் தன் வீட்டில் இருந்த யானை தந்தங்களை தனது நண்பர்களான பி.என்.கிருஷ்ண குமார், கே.கிருஷ்ணகுமார் ஆகியோர் கொடுத்ததாக கூறி உள்ளார். எனவே அவரது நண்பர்களிடமும் வனத்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.

 

சினிமாவைப் பற்றிய சிந்தனையை ஒதுக்கிவைத்துவிட்டேன் - ஐஸ்வர்யா ராய்

No Idea Acting Cinema Now Says Aishwarya Rai   

இப்போதைக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணமில்லை. சினிமா பற்றி சிந்தனையையே ஒதுக்கி வைத்துவிட்டேன், என்கிறார் ஐஸ்வர்யா ராய்.

முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார்.

தற்போது 38 வயதாகும் ஐஸ்வர்யாராய், குழந்தை மற்றும் கணவர் அபிஷேக் பச்சனுடன் லண்டன் சென்றுள்ளார். இந்திய வம்சாவழி இங்கிலாந்து எம்.பி. அளித்த விருந்தில் கலந்து கொள்வதற்காக, அவர்கள் லண்டன் சென்ற அவர், அங்கு அளித்த பேட்டி:

"ஒரு குழந்தைக்கு தாயாக இருப்பதில் ஆனந்தம் அடைகிறேன். இப்போதைக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை. சினிமாவை பற்றிய சிந்தனையே இப்போது எனக்கு இல்லை.

எனது வாழ்க்கையில் சிறப்பான தினம் எது என்றால், அது அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட நாள்தான். எங்களுக்குள் உள்ள உறவு இயல்பானது. நாளுக்கு நாள் அந்த உறவு மேலும் அர்த்தமுள்ளதாக மாறிவருகிறது," என்றார்.

ஐஸ்வர்யா ராயுடனிருந்த அபிஷேக்பச்சன் கூறுகையில், "உடனிருந்து என்னால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. குழந்தையின் எல்லா தேவைகளையும் ஐஸ்வர்யாதான் நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் என்பக்கம் தவறு இருக்கிறது. காரணம் கேரியர்!," என்றார்.

 

குழந்தைகள்தான் முக்கியம், சீரியல் அப்புறம்தான்...'முத்தாரம்' தேவயானி!

First Family Next Serial Devayani

இரண்டு குழந்தைகள் இருப்பதால் அவர்களை கவனித்துவிட்டுதான் சீரியல்களின் கவனம் செலுத்துகிறேன் என்று நடிகை தேவயானி கூறியுள்ளார். தற்போது முத்தாரம் தொடரில் போலீஸ் அதிகாரியாக நடிப்பது மிகவும் பிடித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனியார் நகைக்கடை ஷோரும் ஷோரூம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக தனது கணவர் டைரக்டர் ராஜகுமாரனுடன் திருநெல்வேலிக்கு வந்த நடிகை தேவயானி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சினிமாவைப் போல சின்னத்திரையிலும் பெயர் சொல்லும்படியான கதாபாத்திரங்கள் எனக்கு கிடைக்கின்றன. எங்களுக்கு இனியா, பிரியங்கா என இரு குழந்தைகள் உள்ளனர். இனியா 2-ம் வகுப்பு படிக்கிறாள். பிரியங்கா யூ.கே.ஜி. படிக்கிறாள்.

குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்பதற்காகவே அவுட்டோர் சூட்டிங்கில் அதிகமாக நான் பங்கேற்பதில்லை. ஏனெனில் முதலில் குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

தற்போது முத்தாரம் டி.வி. தொடரில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்து வருகிறேன். போலீஸ் சீருடை அணிந்ததுமே ஒரு கம்பீரமும், மிடுக்கும் வருகிறது. நானே எதிர்பாராத அளவுக்கு அந்த கேரக்டரில் மிக இயல்பாக நடித்து வருகிறேன்.

தற்போது சின்னத்திரையிலேயே முழு கவனம் செலுத்தி வருகிறேன். கதைக்கு ஏற்ற கேரக்டர்கள் அங்கு கிடைக்கின்றன. போலீஸ் கேரக்டரில் நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது. சண்டை காட்சிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்.