பிரபுதேவாரம்லத் விவாகரத்து குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பு : நயன்தாராவுடன் விரைவில் திருமணம்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிரபுதேவாரம்லத் விவாகரத்து குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பு : நயன்தாராவுடன் விரைவில் திருமணம்?

7/7/2011 3:30:54 PM

நடிகர் பிரபுதேவாவுக்கும் அவரது மனைவி ரம்லத்துக்கும் குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது. நடிகர் பிரபுதேவாவுக்கும் ரம்லத்துக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதையடுத்து, இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். அதன்பின் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் காதல், திருமணம் என்ற செய்தி வெளியானது. இதையடுத்து, கணவனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் கடந்தாண்டு ரம்லத் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் இருக்கும்போதே நயன்தாரா மீதும் ஒரு வழக்கு தொடர்ந்தார்.   அதன்பிறகு 6 மாத காலமாக பிரபுதேவாவும் ரம்லத்தும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி மனுக்களை தாக்கல் செய்து வந்தனர். பின்னர் இருவரும் சுமூகமான முடிவுக்கு வந்து, முழு சம்மதத்துடன் பிரிவது என்று தீர்மானித்தனர். தங்களுக்கு விவாகரத்து கோரி இருவரும் சேர்ந்து, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் ரம்லத்துக்கும் குழந்தைகளுக்கும் 3 வீடுகள், கார் மற்றும் ரொக்கப் பணம் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இருவர் தரப்பிலும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு கூடுதல் குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி  பாண்டியன் முன்னிலையில் கடந்த 2ம் தேதி விசாரணைக்கு வந்தது. பிரபுதேவாவும் ரம்லத்தும் தனித்தனியாக வந்து ஆஜராயினர். இருவரும் நீதிபதி அறைக்கு வந்து நீதிபதியிடம், தங்களின் திருமண போட்டோ, திருமண பதிவு சான்றிதழ் ஆகியவை சரியானவை என்று சாட்சியம் அளித்தனர்.  சுமார் 2 மணி நேரம் சாட்சி விசாரணை நடந்தது. பின்னர் ஜூலை 7ம் தேதி தீர்ப்பளிப்பதாக நீதிபதி தெரிவித்தார். அதன்படி வழக்கு இன்று முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டையும், அண்ணா நகரில் உள்ள வீட்டையும் ரமலத்துக்கு பிரபுதேவா கொடுக்க வேண்டும். அதோடு ஐதராபாத்தில் உள்ள மூன்று வீடுகளையும் கொடுக்க வேண்டும். அந்த வீடுகளை குழந்தைகள் வயதுக்கு வந்த பிறகு, ரம்லத் அந்த குழந்தைகளுக்கு தர வேண்டும். குழந்தைகளின் கல்வி, மருத்துவம், திருமணம் ஆகியவற்றிற்கான செலவை பிரபுதேவாவே மேற்கொள்ள வேண்டும். இதுதவிர ரமலத்துக்கு ரொக்கமாக ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளார். தீர்ப்பு நகலை பிரபுதேவாவின் வக்கீல் சத்யாவும், ரமலத்தின் வக்கீல் பி.ஆனந்தமும் நீதிபதியிடம் பெற்றுக் கொண்டனர். பிரபுதேவாவுக்கு விவாகரத்து கிடைத்திருப்பதை அடுத்து, நயன்தாராவை கைபிடிப்பதில் பிரபுதேவாவுக்கு இருந்த சிக்கல் தீர்ந்திருப்பதாக சினிமா வட்டாரத்தினர் கூறினர். விரைவில் பிரபுதேவா  நயன்தாரா திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.

 

ஜீவாவுடன் நடிக்கிறேனா? அமலா பால் மறுப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஜீவாவுடன் நடிக்கிறேனா? அமலா பால் மறுப்பு

7/7/2011 3:29:19 PM

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘முகமூடி’ படத்தில் அமலா பால் நடிப்பதாக தகவல் பரவியது. இது பற்றி அமலா பால் கூறியது: நான் நடிக்காத படத்தை பற்றி என்ன சொல்வது? ‘முகமூடி’ என்ற பெயரில் படம் எடுப்பதே எனக்கு தெரியாது. 'அந்த படத்தில் நான் நடிக்கிறேன். ஜீவாவுக்கு ஜோடி' என்று கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இது ஆச்சரியமாக இருந்தது. அடுத்ததாக விக்ரமுடன் நடித்துள்ள ‘தெய்வத் திருமகள்’ ரிலீசாக உள்ளது. இது எனக்கு பெரிய படம். இந்த பட ரிலீசுக்காகவே இத்தனை நாள் காத்திருந்தேன். தியேட்டரில் சென்று இப்படத்தை பார்ப்பேன். அடுத்ததாக ‘வேட்டை’ படத்தில் ஆர்யா ஜோடியாக நடிக்கிறேன். ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தில் அதர்வா ஜோடி.  சில படங்களில் நடித்தாலும் பெயர் சொல்லும்படி எனது கேரக்டரும் கதையும் அமைய வேண்டும் என விரும்புகிறேன்.

 

சாலை விபத்தில் ஆர்யா காயம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சாலை விபத்தில் ஆர்யா காயம்

7/7/2011 3:26:52 PM

சமீபத்தில் ஐதராபாத் சென்ற ஆர்யா, அங்கு சாலை விபத்தில் காயம் அடைந்திருக்கிறார். ஐதராபாத்தில் தனது நண்பர் ஒருவரின் கடை திறப்பு விழாவுக்காக காரில் அவசரமாக சென்று கொண்டிருந்தார் ஆர்யா. திடீரென விபத்தில் சிக்கி, தலையில் காயம் அடைந்தார். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். நெற்றியில் தையல்கள் போடப்பட்டது. இது குறித்து ஆர்யா கூறும்போது, ÔÔபெரிய விபத்து கிடையாது. மறுநாள் செல்வராகவனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்றேன். நெற்றியில் கட்டு போட்டிருந்ததால் எல்லோரும் இதைப் பற்றியே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்ÕÕ என்றார்.

 

""சூப்பர் ஹீரோ'' ‌ஜீவா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
''சூப்பர் ஹீரோ'' ‌ஜீவா!

7/7/2011 10:30:28 AM

மிஷ்கினின் நீண்ட நாள் கனவான சூப்பர் ஹீரோ கதை முகமூடி ஒருவழியாக டேக் ஆஃப் ஆகியுள்ளது. ‌ஜீவா சூப்பர் ஹீரோவாக நடிக்க வில்லன் வேடத்தை ஏற்கிறார் நரேன். முதல்கட்டமாக சூப்பர் ஹீரோவுக்கான உடை வடிவமைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆக்சனுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் எமோஷனுக்கும் மதிப்பு அளித்து திரைக்கதையை உருவாக்கியுள்ளாராம் மிஷ்கின்.




 

மீண்டும் ஹ‌ரி இயக்த்தில் சூர்யா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் ஹ‌ரி இயக்த்தில் சூர்யா!

7/7/2011 10:33:50 AM

மீண்டும் சூர்யா நடிக்கும் படத்தை ஹ‌ரி இயக்குகிறார். தற்போது கே.வி.ஆனந்தின் மாற்றான் படத்தில் நடித்துவரும் சூர்யா மாற்றான் முடிந்ததும் ஹ‌ரிக்கு கால்ஷீட் தர சம்மதித்துள்ளார். வாரணம் ஆயிரம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது இடையில் வேல் படத்தை சூர்யா முடித்துக் கொடுத்தது போல் மாற்றான் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே ஹ‌ரி படத்தின் படப்பிடிப்பை முடிக்கவும் திட்டமிருக்கிறதாம்.

 

தெய்வத்திருமகளுக்கு அமோக வரவேற்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தெய்வத்திருமகளுக்கு அமோக வரவேற்பு

7/7/2011 10:28:24 AM

விஜய்யின் தெய்வத்திருமகள் வரும் 15ஆம் தேதி வெளியாகிறது. விக்ரம் சிறுவனுக்கு‌ரிய மூளை வளர்ச்சியுடன் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அனுஷ்கா, அமலா பால் என்று இரு ஹீரோயின்கள். வெட்டு குத்து என்று அடிதடி ரூட்டில் ரசிகர்களின் ரசனை சென்று கொண்டிருப்பதால் தெய்வத்திருமகளுக்கு கிடைக்கப் போகும் வரவேற்பை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்தியா முழுவதுமாக 350 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மணமக்களை வாழ்த்திய ர‌ஜினி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மணமக்களை வாழ்த்திய ர‌ஜினி

7/7/2011 10:23:57 AM

இயக்குனர் செல்வராகவன், கீதாஞ்சலி திருமணம் கடந்த 3ஆம் தேதி நடந்தது. செல்வராகவனின் முதல் திருமணத்தில் முதல் ஆளாக வந்தவர் ர‌ஜினி. ஆனால் இந்தமுறை உடல்நலக்குறைவு காரணமாக அவரால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. அதனால் தொலைபேசியில் செல்வராகவனையும், கீதாஞ்சலியையும் தொடர்பு கொண்டு தனது மனப்பூர்வமான வாழ்த்தை தெ‌ரிவித்துள்ளார்.

 

வீர இளைஞர்களின் கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வீர இளைஞர்களின் கதை

7/7/2011 10:22:25 AM

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‌ஜீவாவும், ஜெயம் ரவியும் இணைந்து நடிக்கின்றனர் என்பது எல்லோரும் அறிந்தது. இயற்கை படத்தின் மூலம் அனைவ‌ரின் கவனத்தையும் ஈர்த்தவர் எஸ்.பி.ஜனநாதன். அபூர்வமான கதைக்களமும், அதன் அடிநாதமாக ஒலிக்கும் கம்யூனிச அரசியலும் ஜனநாதனின் சிறப்பம்சங்கள். படத்தை நிகழ்கால த‌ரித்திரங்களை எதிர்க்கும் இரு வீர இளைஞர்களின் கதையை‌ப் படமாக்க தீர்மானித்திருக்கிறார். படத்தின் பெயர் உள்ளிட்ட பிற தகவல்கள் மிக விரைவில் தெ‌ரிவிக்கப்படும்.