ஹீரோ கன்னத்தில் ராஜேஷ் பளார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

புதுமுகங்கள் தயா, தாமரை நடிக்கும் படம் 'ஒச்சாயி'. ஆசைத்தம்பி இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மதுரை உசிலம்பட்டியில் நடந்தது. காட்சிப்படி, தந்தை ராஜேஷின் பேச்சை மீறி, ஆத்திரத்துடன் அரிவாளை தூக்கிக்கொண்டு ஓடுவார் தயா. அவரை தடுத்து நிறுத்தும் ராஜேஷ், மகனின் கன்னத்தில் பளார் என்று அறைய வேண்டும். இக்காட்சியை யதார்த்தமான முறையில் படமாக்க விரும்பிய இயக்குனர், ஹீரோவிடம், 'கொஞ்சம் பொறுத்துக்குங்க. ராஜேஷ் உங்களை நிஜமாவே கன்னத்துல அடிப்பார். அப்பதான் ரிசல்ட் நல்லா வரும்' என்றார்.அவர் எதிர்பார்ப்பதை புரிந்துகொண்ட ராஜேஷ், தயாவின் கன்னத்தில் நிஜமாகவே ஓங்கி அறைந்தார். கன்னம் வீங்கி வலியால் துடித்தார் தயா. இக்காட்சியை ஒளிப்பதிவாளர் பிரேம்சங்கர் பல கோணங்களில் படமாக்கினார். நடிப்புக்காக சில மாதங்கள் பயிற்சி பெற்ற தயா, ராஜேஷிடம் அடி வாங்க அரை நாள் முழுக்க ஆயத்தமாக இருந்தார். ஷூட்டிங் முடிந்த பின், தயாவை கட்டியணைத்து, 'ஸாரி,  நல்லா ஒத்துழைப்பு தந்ததுக்கு நன்றி' என்றாராம் ராஜேஷ்.


Source: Dinakaran
 

ஒரு வாரத்தில் ரூ.117கோடி வசூல் :எந்திரனின் மந்திர சாதனை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள எந்திரன் திரைப்படம் ஒரு வாரத்தில் இந்தியா முழுவதும் ரூ.117 கோடி வசூல் செய்து, சாதனை படைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுவதும் எந்திரன் திரைப்படம் வெளியானது. இது குறித்து இன்று வெளியான செய்திக்குறிப்பில் ஒரு வாரத்திற்கான வசூல் பட்டியல் காண்பிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மட்டும் ரூ.60 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. ஆந்திராவில் ரூ.30 கோடியும், கர்நாடகாவில் 8 கோடியும், கேரளாவில் 4 கோடியும், வட இந்தியா முழுவதும் ரூ.15 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்னதாக சல்மான் கான் நடித்த ‘தபாங்’ திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.87 கோடி வசூல் செய்தது தான் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை எந்திரன் முறியடித்துள்ளது. மேலும் ‘தபாங்’ திரைப்படம் 2 வாரத்தில் ரூ.117 கோடி வசூல் செய்த சாதனையை எந்திரன் படம் ஒரு வாரத்தில் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வாரத்தில் ரூ.117 கோடி வசூல் : எந்திரனின் மந்திர சாதனை


Source: Dinakaran
 

திடீர் மாற்றத்தில் சமீரா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'வாரணம் ஆயிரம்' படத்தில் குண்டாக இருந்த சமீரா ரெட்டி ஆச்சர்யப்படும் அளவுக்கு மெலிந்துவிட்டார்.
அவர் கூறியது:கவுதம் இயக்கத்தில் நடித்த 'நடுநிசி நாய்கள்' முடிந்துவிட்டது. அடுத்து பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கிறேன். அந்த வேடத்துக்கு இப்போதைய எனது ஸ்லிம் தோற்றம் பொருத்தமாக அமைந்துவிட்டது. இந்த வார இறுதியில் இந்தி பட ஷூட்டிங்கிற்காக லண்டன் செல்கிறேன். இப்படத்தில் பைக் ஓட்டும் காட்சி வருவதால் பைக் ஓட்டி பழகி இருக்கிறேன். நான் அசைவ பிரியை. மட்டன், சிக்கன் என வெளுத்துக்கட்டுவேன். இப்போது சுத்த சைவப்பிரியை ஆகிவிட்டேன். இந்த மாற்றத்துக்கு காரணம் என்ன என்று சொல்ல முடியவில்லை. இத்துடன் யோகா செய்வதையும் தினசரி பயிற்சி ஆக்கிக்கொண்டிருக்கிறேன். இதனால் எனது உடல் ஆரோக்கியத்தில்  புதிய மாற்றத்தையும் எனக்குள் புதுவேகம் ஏற்பட்டிருப்பதையும் உணர முடிகிறது.


Source: Dinakaran
 

முதல்வராவேன் என்று குரல் கொடுக்காத ஒரே தலைவன் நான்தான் - டி.ராஜேந்தர்

Vijaya T.Rajendhar
நெல்லை: 25 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். நாளைய முதல்வர் என குரல் கொடுக்காத ஓரே அரசியல் கட்சி தலைவர் நான்தான். ஆனால் மக்களுக்கு குரல் கொடுப்பதில் முதல்வராக இருக்கிறேன். பணபலம் இல்லை என்றாலும் மனபலத்துடன் கட்சி நடத்துகிறேன் என நெல்லையில் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, தேர்தலில் மின்னனு வாக்குபதிவு இயந்திரத்தை தவிர்த்து வாக்கு சீட்டு மூலம் ஓட்டு போடும் நிலைக்கு நாடு திரும்ப வேண்டும்.
லட்சிய திமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும். 25 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். நாளைய முதல்வர் என குரல் கொடுக்காத ஓரே அரசியல் கட்சி தலைவர் நான்தான். ஆனால் மக்களுக்கு குரல் கொடுப்பதில் முதல்வராக இருக்கிறேன். பணபலம் இல்லை என்றாலும் மனபலத்துடன் கட்சி நடத்துகிறேன்.
லட்சிய திமுக அங்கீகரக்கப்பட்ட கட்சியாக பதிவு செய்ய 9 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். எனவே வருகிற தேர்தலில் 20 முதல் 30 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்வோம்.
காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைக்கிறது என்பதை பொறுத்துதான் கூட்டணி முடிவு செய்யப்படும். காங்கிரஸ் இல்லாத கூட்டணிக்கு நாங்கள் அழைக்கப்படுவோம் என்றார் அவர்.
 

நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மன்னார்குடியில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைஅருகே உள்ள இடும்பாவனம் என்ற ஊரில் நேற்று கண்டனக் கூட்டம் ஒன்றில் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு பேசிய எஸ்.எஸ்.சந்திரன், கூட்டத்தை முடித்த பின்னர் நள்ளிரவில் மன்னார்குடி வந்த எஸ்.எஸ்.சந்திரன் அங்குள்ள பூர்ணா என்ற தனியார் ஹோட்டலில் தங்கினார். இந்த நிலையில் அவருக்கு மாத்திரை கொடுப்பதற்காக அவரது உதவியாளர் ஒரு மணியளவில் சந்திரனை எழுப்பினார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. உடலிலும் அசைவு எதுவும் இல்லை.
இதனால் பயந்து போன உதவியாளர் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சந்திரனைப் பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் அவர் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனடியாக சந்திரனின் உடலை அவரது காரிலேயே சென்னைக்குக் கொண்டு வந்தனர். சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட சந்திரனின் உடலைப் பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.


Source: Dinakaran
 

நயன்தாரா மேனேஜர்-பிஆர்ஓ நீக்கம்-பல லட்சம் மோசடி?

Nayanthara
தனக்கு மேனேஜராக இருந்த அஜீத் மற்றும் பிஆர்ஓ ஜான்சன் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளார் நயன்தாரா.
இதன் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் திரையுலகை அதிர வைத்துள்ளது.
பிரபலமான அந்த ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ 1 கோடி சம்பளம் பேசியிருக்கிறார்கள். ஆனால் நயன்தாராவிடம் அந்தத் தொகையை காட்டாமல் ரூ 60 லட்சம்தான் சம்பளம் பேசப்பட்டதாக மேனேஜர் அஜீத் மற்றும் பிஆர்ஓ சொன்னதாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் சந்தேகம் கொண்ட நயன்தாரா, நேரடியாக சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடை உரிமையாளரிடமே தொடர்பு கொண்டு விசாரிக்க, அவரும் முதலில் மழுப்பி, பின்னர் உண்மையைக் கூறியுள்ளார்.
கோபத்தை அடக்கிக் கொண்ட நயன்தாரா, மீண்டும் மேனேஜரையும், பிஆர்ஓவையும் அழைத்து விசாரிக்க அவர்கள் தொடர்ந்து அந்த ரூ 60 லட்சம் கதையையே தொடர்ந்தார்களாம்.
“கஷ்டப்பட்டு நடிப்பது நான், சம்பளம் பேசுவதாகக் கூறி எனக்கே தெரியாமல் பணத்தை அபகரிப்பதா?”, என்று கோபம் காட்டிய நயன்தாரா, உடனடியாக இருவரையும் நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுவரை நயன்தாரா தொடர்பான அனைத்துப் படங்களுக்கும் இந்த இருவர்தான் சம்பளம் பேசினார்களாம். அதிலெல்லாம் எந்த அளவு பணம் கணக்கில் வராமல் போனதோ என்று அங்கலாய்த்தாராம் நயன். ஆனால் சட்டப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது (திருடனுக்கு தேள் கொட்டிய கதை!) என்ற சூழல் காரணமாக பல்லைக் கடித்துக்கொண்டு அமைதி காக்கிறாராம் நயன்தாரா.
ஆனால் இதுகுறித்து அஜீத்திடம் கேட்டபோது, நானாகவே நயன்தாராவிடமிருந்து விலகி வந்துவிட்டேன் என்றும், பணவிவகாரம் பற்றிய எதுவும் உண்மையில்லை என்றும், கூறினார்.
சம்பந்தப்பட்ட பிஆர்ஓவைத் தொடர்பு கொண்டால், அவர் போனையே எடுக்கவில்லை!
 

மலையாளப் படத்தில் நடிக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்!

A R Rahman
சின்ன பட்ஜெட்டில் தயாராகும் மலையாளப் படங்களில் பெரிய சம்பளம் வாங்கும் ரஹ்மான் இசை சாத்தியப்படாது என்று முடிவு செய்து, அவரை நடிக்க வைப்பதில் முனைப்பு காட்டி வெற்றியும் பெற்றுள்ளனர் மலையாளப் படவுலகினர்.
ஜெயராஜ் இயக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராகவே நடிக்கிறாராம் ஏ ஆர் ரஹ்மான்.
இந்தப் படத்தில் மம்முட்டியும் ஜெயசூர்யாவும் நடிக்கிறார்கள்.
இந்தப் படம் ஒரு துப்பறியும் கதை. வழக்கம் போல துப்பறியும் நிபுணர் பாத்திரத்தில் மம்முட்டி நடிக்கிறார். அதில் சில காட்சிகளில் ஏஆர் ரஹ்மானிடம் விசாரிப்பது போல எடுக்க வேண்டியிருந்ததால், அவரையே நடிக்க வைத்துவிடலாம் என முடிவு செய்து கேட்டிருக்கிறார்கள். தயங்கித் தயங்கி கேட்டிருக்கிறார்கள்.
ஒருநாள் கால்ஷீட் போதும், அதுவும் வீட்டிலேயே ஷூட்டிங் என்றதும் ஒப்புக் கொண்டாராம் ரஹ்மான்.
 

நகைச்சுவைச் செல்வர் எஸ்.எஸ்.சந்திரன்

SS Chandran
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத காமெடி நடிகர்களில் எஸ்.எஸ்.சந்திரனுக்கு தனி இடம் உண்டு.
இரட்டை அர்த்தத்துடன் கூடிய வசனங்களைப் பேசியவர் என்ற ஒரு பெயர் இருந்தாலும் கூட இவரது காமெடி தனி பாணியிலானது என்பதில் சந்தேகம் இல்லை.
காமெடி நடிகராக, வில்லனாக, குணச்சித்திர வேடத்தில் என பல்வேறு வகையான நடிப்பைக் கொடுத்தவர் எஸ்.எஸ்.சந்திரன். திரையுலகினரால் எஸ்எஸ் என அழைக்கப்பட்ட சந்திரன், நகைச்சுவை செல்வர் என்றும் அழைக்கப்பட்டார்.
தீவிர திமுக அனுதாபியாக இருந்தவர் சந்திரன். பின்னர் மதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார். வைகோவின் தீவிர ரசிகராகவும் விளங்கியவர். திமுகவில் தான் ஒதுக்கப்படுவதாக நினைத்த சந்திரன் அதிமுகவில் இணைந்தார். அப்போது அவருடன் இணைந்தவர் ராதாரவி.
தனது இறுதி மூச்சு வரை அதிமுகவில் இருந்தவர் சந்திரன். தீவிர ஜெயலலிதா விசுவாசியாகவும் செயல்பட்டு ஜெயலலிதாவின் மனதில் இடம் பிடித்தவர்.
இவரை ராஜ்யசபா எம்.பியாக்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா. அதேபோல கடந்த லோக்சபா தேர்தலில் மத்திய சென்னை தொகுதியையும் ஒதுக்கினார். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக போட்டியிடவில்லை சந்திரன்.
நடிகராக மட்டுமல்லாமல், சிறப்பாக பேசக் கூடிய திறமையும் படைத்தவர் சந்திரன். சமீப காலமாக இருதயக் கோளாறால் அவதிப்பட்டு வந்த போதிலும் கூட அவர் தனது பேச்சை நிறுத்தவில்லை. மாறாக தொடர்ந்து அதிமுக கூட்டங்களுக்குச் சென்று பேசி வந்தார்.
அதிமுக கூட்டத்தில் பேசி முடித்த நிலையில் அவர் மரணத்தைத் தழுவியிருப்பது அதிமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

செக் மோசடி வழக்கு-நாங்குநேரி கோர்ட்டில் டிவி நடிகை ஸ்வேதா ஆஜர்

நாங்குநேரி: செக் திரும்பி வந்த வழக்கில் டிவி நடிகை ஸ்வேதா நாங்குநேரி கோர்ட்டில் ஆஜரானார்.
நாங்குநேரி அருகே உள்ள சங்கனாங்குளத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரிடம் டிவி நடிகை ஸ்வேதா கடந்த ஆண்டு 2 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
கடனை திருப்பி கொடுப்பதற்காக ரூ.2 லட்சத்திற்கான செக்கை ஸ்வேதா முத்தையாவிடம் கொடுத்தார். ஆனால் வங்கியில் பணம் இல்லாமல் செக் திரும்பி வந்தது.
இதையடுத்து முத்தையா நாங்குநேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நடிகை ஸ்வேதா நேற்று கோர்ட்டில் ஆஜாரானார்.
நடிகை ஸ்வேதா ஏராளமான டிவி தொடர்களில் நடித்துள்ளார். அவற்றில் இளவரசி, மகள் ஆகியவை முக்கியமானவையாகும்.
 

பெங்களூர்-எந்திரன் ஓடும் தியேட்டர்களில் ‘ஓவர்’ வசூல்-அதிகாரிகள் அதிரடி ரெய்ட்!

Bangalore Theatre
பெங்களூரு: எந்திரன் திரையிடப்பட்டுள்ள பெங்களூர் திரையரங்குகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து கர்நாடக மாநில வணிக வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
கர்நாடகத்தில் ரூ 9.5 கோடிக்கு எந்திரன் விற்கப்பட்டது. இந்தப் படம் கிட்டத்தட்ட 60 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. பொதுவாக மற்ற மொழிப் படங்களை 24 திரையரங்குகளில் மட்டுமே திரையிட அனுமதிப்பது என்று கர்நாடக பிலிம்சேம்பர் விதிமுறை வகுத்துள்ளது. எந்திரனுக்கும் இதே அளவிலான தியேட்டர்களில் மட்டுமே படத்தை திரையிட உத்தரவிடப்பட்டதாம்.
அதேசமயம், எந்திரன் படத்துக்காக இந்த விதி தளர்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் அப்படி செய்ய்பபடவில்லை என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை விளக்கியுள்ளது.
வர்த்தக சபை குறிப்பிட்ட அளவிலான தியேட்டர்களுக்குப் பதில் கர்நாடகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 தியேட்டர்களில் எந்திரன்-ரோபோ திரையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பெங்களூர் உள்ளிட்ட தென் கர்நாடகத்தில் மட்டும் 58 திரையரங்குகளில் எந்திரன் / ரோபோ ஓடுகிறது.
மிகப் பெரிய விலை கொடுத்து படத்தை வாங்கியுள்ளதால் விரைவிலேயே அதை வசூலித்து விடும் நோக்கில் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வைத்து விற்கப்படுகிறதாம்.
எந்திரன் திரையிடப்பட்டுள்ள அனைத்து தியேட்டர்களிலும் வழக்கத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். அதிலும் மல்டிபிளக்ஸ்களில் மிக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். குறைந்தபட்சமே ரூ 300 வரை வைத்து விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென்று பெங்களூரில் எந்திரன் ஓடும் தியேட்டர்களில் திடீர் சோதனை நடத்தினர் வணிக வரித்துறையினர். கூடுதல் கட்டணம் வசூலித்தது உள்ளிட்ட விதி மீறல்கள் தொடர்பாக இந்த சோதனை நடந்துள்ளது.
இந்த சோதனை குறித்து வணிக வரித்துறையினர் கூறுகையில், முறைகேடாக டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய தியேட்டர்களில் ரெய்டு நடந்துள்ளது உண்மைதான். அவர்களுக்கு கடும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரஹள்ளி பகுதியில் உள்ள இரண்டு தியேட்டர்களைக் கொண்ட வளாகத்தில் மிகப் பெரிய அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தியேட்டர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.
கர்நாடகத்தில் கன்னடப் படங்களுக்கு முழு வரிவிலக்கு அமலில் உள்ளது. அதேசமயம், கன்னடம் அல்லாத பிற மொழிப் படங்களுக்கு 30 சதவீதம் வரை கேளிக்கை வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.