இசையாக என் ரத்தத்தில் கலந்திருக்கிறார் எம்எஸ் விஸ்வநாதன்!

-இசைஞானி இளையராஜா

ஜுபிடர் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் தியேட்டரில் தினக்கூலிக்கு வேலை செய்யும் ஒரு சிறுவனாக இருந்த எம்.எஸ்.வி. ஓய்வு நேரங்களில் இசை பயிற்சி எடுத்துக்கொண்டு தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டவர்.

ஒருநாள் அபிமன்யூ படத்துக்காக எஸ்.எம்.சுப்பையநாயுடு அவர்கள் ஒரு டூயட் பாடலுக்கு மெட்டுப் போட்டபோது அது திருப்தியாக வராமல் போகவே, சிறிது நேரம் கழித்து வாசிக்கலாம் என்று முடிவு செய்தார்.

அவர் அங்கு இல்லாத அந்த இடைவெளியில் எம்.எஸ்.வி.அந்த பாடலுக்கு தானே ஒரு மெட்டு போட்டு பாட, அங்கிருந்த கோபாலகிருஷ்ணன் தபேலா வாசித்துக்கொண்டிருந்தார்.

MSV blends in my blood, says Ilaiyaraaja

அந்த நேரம் அங்கு வந்து விட்ட எஸ்.எம்.சுப்பையாநாயுடு, "டேய் என்னடா பண்ற.. இப்ப வாசிச்ச மெட்டை மறுபடியும் வாசி," என்று சொல்ல, பயந்து போய் நின்றிருந்த எம்.எஸ்.வி. மீண்டும் வாசித்து காட்ட, "இதையே டியூனாக வெச்சுக்கலாம் நீ எல்லாருக்கும் நோட்ஸ் எழுதி கொடுத்துடு.. ஆனா நீ போட்டதா சொன்னா ஆர்க்கெஸ்ட்ரா மதிக்க மாட்டாங்க நான் போட்டதா சொல்லு," என்று சொல்லி அந்த பாடலை பதியவைத்திருக்கிறார்.

அபிமன்யூ படம் வெளிவந்தபோது, 'புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மனமே பெறுவோமே" என்ற பாடல் பெரிய வெற்றி பெற்றது.

பின்னாளில் ஜூபிடர் பிக்சர்ஸ் சென்னைக்கு மாறியபோது பணியாளர்கள் எல்லோரையும் கணக்கு முடித்து அனுப்பி கொண்டிருந்தார்கள். எம்.எஸ்.வி.யையும் வேலையை விட்டு விலக்க முடிவு செய்கிறார்கள். இந்த விஷயத்தை எஸ்.எம்.சுப்பையநாயுடுவிடம் கண்ணீர் மல்க எம்.எஸ்.வி சொல்லி அழ, அவர் கையை பிடித்துக்கொண்டு ஜூபிடர் பிக்சர்ஸ் சோமுவிடம் அழைத்து சென்று, ‘உன்னுடைய ஜீபிடர் பிக்சர்ஸ் இருப்பதற்கு காரணம் அபிமன்யூ படம்தான். அந்த படம் ஓடுவதற்கு காரணம் இவன் டியூன் போட்ட புது வசந்தமாமே பாட்டுதான்" என்று அந்த சம்பவத்தைச் சொல்லி, "யாரை வேண்டுமானாலும் அனுப்பு இவனை மட்டும் விட்டு விடாதே.. கூடவே அழைத்துப்போ" என்று சொல்கிறார்.

MSV blends in my blood, says Ilaiyaraaja

இப்படி தன்னுடைய குருநாதர் மூலமே வாழ்க்கை கிடைக்கப் பெற்றவர் எம்.எஸ்.வி. அவர்கள்.

எம்.எஸ்.வி அண்ணா அவர்களின் இசை புலமையைப் பற்றி நன்றாக அறிந்தவர்கள் இங்கு யாருமே இல்லை என்பது என்னுடைய திட்டவட்டமான கருத்து. ஏனென்றால் அவர் தன்னுடைய இசையமைப்பில் மிகவும் உயர்தரமான இசை நுணுக்கங்களையெல்லாம் கொண்டு வந்ததை நான் ஊன்றி கவனித்ததால்தான் நான் ஒரு இசையமைப்பாளராகவே ஆனேன் என்பதைச் சத்தியமாக சொல்லுகிறேன்.

நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே என்னுடைய மானசீக குருவாக இருந்த சி.ஆர்.சுப்புராமன் எப்படி என்னுடைய உயிரில் உடலில் கலந்திருந்தாரோ அப்படியே எம்.எஸ்.வியும் அவர் இசையும் என் உயிரில், உடலில், ரத்தநாளங்களில் இதயதுடிப்பிலும் மூச்சுக் நகாற்றிலும் கலந்திருந்தார்.


MSV blends in my blood, says Ilaiyaraaja

தேவதாஸ் படத்தை சி.ஆர் சுப்புராமனால் முடித்துக்கொடுக்க முடியாமல் போனது. அவரது ஆசி்யினால் அந்த படத்தின் பாடல்களையும் பின்னனி இசைகோர்ப்பு பணியையும், முடித்துக்கொடுத்தார் எம்.எஸ்.வி. படத்தில் பிற பாடல்கள் நன்றாக இருந்தபோதும் எம்.எஸ்.வி. இசையமைத்த 'உலகே மாயம் வாழ்வே மாயம்' என்ற பாடல் அவருக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இந்த பாடலின் வெற்றியால் தேவதாஸ் படம் நீண்டநாள் ஓடியது.

அதேபோல் எம்.எஸ்.வியின் இசையினால் ஓடிய படங்கள் எண்ணிலடங்காதவை. அந்த இசை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் மறக்க முடியாதவை. அந்த தாக்கத்தின் அடையாளம்தான் இளையராஜா என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

 

அந்தரத்தில் தொங்கிய டாம் குரூஸ்.. மயிர்க்கூச்செறிய வைத்த ஆக்ஷன்!

லாஸ் ஏஞ்செல்ஸ்: உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படம் மிஷன் இம்பாசிபிள் 5 ரப் நேஷன், இந்தப் படத்தின் இறுதிக் கட்டக் காட்சிகளின்போது டூப் எதுவும் போடாமல் பறக்கும் விமானத்தில் தொங்கியபடி நடித்து இருக்கிறார் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ்.

மிஷன் இம்பாசிபிள் படத்தின் முதல் 4 பாகங்கள் வெளிவந்து முறையே மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து இருக்கின்றன. மிஷன் இம்பாசிபிள் படத்தின் முதல் பாகம் 1996 ம் ஆண்டு வெளிவந்து 20ம் நூற்றாண்டின் மிக அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Mission impossible 5 rouge nation

முதல் 4 பாகங்களிலும் நாயகனாக நடித்த டாம் குரூஸ் தற்போது வெளிவர இருக்கும் 5 வது பாகத்திலும் நாயகனாக நடித்து இருக்கிறார்.

5 வது பாகத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பின்போது தான் இந்த மாதிரி உயிரைப் பணயம் வைத்து பறக்கும் விமானத்தின் வெளியில் நின்றபடி நடித்து இருக்கிறார் டாம் குரூஸ். 53 வயதான டாம் குரூஸ் இந்தக் காட்சியில் நடித்ததைப் பார்த்து மொத்த படப்பிடிப்புக் குழுவினரும் அசந்து போய் விட்டனராம்.

இந்தக் காட்சியில் நடிக்கும்போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், விமானத்தை தரை இறக்குவது முடியாத ஒன்று என்று படபிடிப்புக் குழுவினர் எச்சரித்தும் கூட டாம் குரூஸ் துணிந்து இந்தக் காட்சியில் நடித்து இருக்கிறார்.

Mission impossible 5 rouge nation

தற்போது டாம் குரூஸ் விமானத்தில் தொங்கியபடி நடித்தது மற்றும் அவருக்கு பறந்தபடி சண்டை போட சொல்லிக் கொடுத்த கலைஞர்களின் பேட்டிகள் ஆகியவை வீடியோவாக வெளியாகி உள்ளன.

படம் வரும் ஜூலை மாதம் 31 ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகின்றது, முதல் 4 பாகங்கள் மாபெரும் வெற்றி பெற்றதால் 5 ம் பாகத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

ஐந்தே நாட்களில் ரூ 200 கோடியைத் தாண்டிய முதல் படம் பாகுபலி!

வெளியான ஐந்தே நாட்களில் ரூ 200 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி.

இந்தியாவிலேயே வேறு எந்த சினிமாவும் இந்தப் பெருமையைப் பெற்றதில்லை என்ற புதிய வரலாற்றைப் படைத்துள்ளது இந்தப் படம்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பாகுபலி படத்தை உலகமே பாராட்டி வருகிறது. விடுமுறை தினங்களில் மட்டுமல்லாமல், வார நாட்களான திங்கள், செவ்வாயிலும் குறையாத கூட்டத்துடன் படம் ஓடுகிறது.

Bahubali is the first Indian movie crosses Rs 200 cr in just 5 days

படம் வெளியான வெள்ளிக்கிழமையை விட, திங்கள் செவ்வாயில் அதிக வசூல் குவிந்துள்ளது, பாக்ஸ் ஆபீஸை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த 5 நாட்களில் ரூ 215 கோடிக்கு மேல் குவித்துள்ளது பாகுபலி. இந்தப் படம் நேரடியாக வெளியான தமிழ், தெலுங்கில் வரலாறு காணாத வரவேற்பைப் பெற்றுள்ளது. டப் செய்யப்பட்ட இந்திப் பதிப்பும் நல்ல வசூலைத் தருகிறது.

இந்திப் பதிப்பை வெளியிட்டுள்ள இயக்குநர் கரண் ஜோஹர், "எப்போது ஒரு படம் வெள்ளிக்கிழமையை விட திங்கள்கிழமை அதிக வசூல் பெறுகிறதோ.. அப்போதே அது பாக்ஸ் ஆபீஸில் தனி வரலாறு படைத்துவிட்டதாக அர்த்தம். பாகுபலி புதிய சாதனைப் படைத்துள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

எந்திரன் 2: ரஜினிக்கு காத்ரீனா... விக்ரமுக்கு தீபிகாவாமே?

சென்னை: எந்திரன் 2 படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து படப்பிடிப்பிற்கு தயார் நிலையில் இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். ரஞ்சித் படத்தில் ரஜினி நடித்து முடித்தவுடன் எந்திரன் 2 படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் துவங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின.

எந்திரன் 2 படத்தை மிகப்பெரிய அளவில் எடுக்க இருப்பதால் நாயகியும் இந்திய அளவில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு முகமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய ஷங்கர், அதற்காக பாலிவுட் நடிகை காத்ரீனா கைப்பை சந்தித்துப் பேசினார்.

Endhiran 2 Updates

ஆனால் காத்ரீனா ஷங்கருக்கு உடனடியாக எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என்று கூறினார்கள், தற்போது எந்திரன் 2 படத்தில் காத்ரீனாவுடன் இணைந்து தீபிகா படுகோனேவும் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

எந்திரன் 2 வில் வில்லனாக நடிக்கும் விக்ரமிற்கு ஜோடியாக தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க தற்போது பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம். ஷங்கர் தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

எனினும் இந்தத் தகவல் உண்மையாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ரஜினியின் கோச்சடையான் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த காத்ரீனா கைப் சில காரணங்களால் அதைத் தவற விட்டார்.

காத்ரீனாவிற்குப் பதில் தீபிகா படுகோனே நாயகியாக கோச்சடையானில் நடித்திருந்தார், தற்போது மீண்டும் ரஜினி படவாய்ப்பு இருவர் வீட்டுக் கதவையும் தட்டி இருக்கின்றது. ஷங்கர் படவாய்ப்பை யார் ஏற்கப் போகிறார்கள் யார் மறுக்கப் போகிறார்கள் என்பதை, பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

ரேஷ்மியுடன் திருமணமா...? வதந்தி என்கிறார் பாபி சிம்ஹா!

கடந்த இரு தினங்களாக ஒரு பரபர கிசுகிசு.. அது வேகமாக வளர்ந்து வரும் பாபி சிம்ஹா - சக நடிகை ரேஷ்மி காதல் பற்றியது.

ஆனால் அந்த கிசுகிசுவை தோன்றிய வேகத்திலேயே அர்த்தமில்லாததாக்கிவிட்டார் பாபி.

‘ஜிகர்தண்டா' படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து, இப்போது உறுமீன், பாம்புச் சட்டை படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் பாபி சி்ம்ஹா. உறுமீன் படத்தில் நாயகியாக ரேஷ்மி மேனன் நடிக்கிறார்.

Bobby Simha denies affair with Reshmi

இந்தப் படப்பிடிப்பில் பாபிசிம்ஹாவுக்கும் ரேஷ்மி மேனனுக்கும் காதல் மலர்ந்ததாக சிலர் டமாரமடித்தார்கள். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக வேறு செய்திகள் பரவின.

இதுகுறித்து பாபிசிம்ஹாவிடம் கேட்டபோது அவர் மறுத்தார்.

"எனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. ரேஷ்மி மேனன் எனது சக நடிகை. நட்பாக இருக்கிறார். எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை. ரேஷ்மியை திருமணம் செய்யப்போவதாக வந்த செய்தியில் உண்மை இல்லை," என்றார் பாபி சிம்ஹா.

 

ரஜினிக்கு முதல் 'வாய்ஸ்' கொடுத்தவர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிகராக ரஜினிகாந்த் அறிமுகமானது அபூர்வ ராகங்களில். அது ஒரு சிறிய வேடம்தான். அதன் பிறகு வந்த இரு படங்களிலும் கூட அவருக்கு பாடல் காட்சிகள் கிடையாது.

அப்போதெல்லாம் திரையில் பாடும் நட்சத்திரத்துக்குத்தான் நாயகன் அந்தஸ்து. ஆனால் ரஜினியோ தொடர்ந்து வில்லனாகவே நடித்துக் கொண்டிருந்தார்.

MS Viswanathan gives voice to Rajinikanth

பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படத்தில் எதிர்மறை நாயகனாக நடித்திருந்தார் ரஜினி. அதில் கமலுக்கு கவுரவ வேடம்.

அந்தப் படத்தில் ஒரு பாடகராக அவருக்கு முதலில் குரல் தந்தவர் எம்எஸ் விஸ்வநாதன்தான். படகிலிருந்து தவறி ஆற்றுக்குள் விழுந்து மூழ்கும் கமல் ஹாஸனை கண்டுகொள்ளாமல், படகை வேகமாக செலுத்தியபடி 'மணவினைகள் யாருடனோ.. மாயவனின் விதிவகைகள்' என்று பாடும் ரஜினிக்கு குரல் தந்தவர் எம்எஸ் விஸ்வநாதன்தான்.

அதன் பிறகு புவனா ஒரு கேள்விக்குறி போன்ற படங்களில் ரஜினிக்கு பாடல் காட்சிகள் வைத்துவிட்டார்கள். ஆனாலும் ரஜினியும் கமலும் கடைசியாக இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்ற சம்போ சிவ சம்போ... பாடல் ரஜினிக்கு பெரும் திருப்பு முனையாகவும், ஏராளமான ரசிகர்களைப் பெறவும் உதவியது. இந்தப் பாடலையும் எம்எஸ்விதான் பாடினார். பின்னர் சங்கர் சலீம் சைமன் படத்தில் இடம்பெற்ற சிந்து நதிப் பூவே என்ற பாடலிலும் ரஜினிக்கு குரல் கொடுத்திருப்பார் எம்எஸ்வி.

MS Viswanathan gives voice to Rajinikanth

பல மேடைகளில் இதனை நன்றியுடன் நினைவு கூறுவார் ரஜினிகாந்த்.

ரஜினியின் ஆரம்பப் படங்கள் பலவற்றுக்கு இசை எம்எஸ்விதான். தப்புத் தாளங்கள், பில்லா, பொல்லாதவன், போக்கிரி ராஜா, சிவப்புச் சூரியன் போன்ற படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களைத் தந்திருக்கிறார் எம்எஸ்வி. குறிப்பாக நானே என்றும் ராஜா, நான் பொல்லாதவன், மை நேம் ஈஸ் பில்லா.. போன்ற மாஸ் பாடல்களை ரஜினிக்கு உருவாக்கியது எம்எஸ்வி - கண்ணதாசன் கூட்டணிதான்.

 

வடை முறுக்கு விற்கும் சிறுவனாக வாழ்க்கையை தொடங்கிய எம்.எஸ்.வி...

சென்னை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஃபேஸ்புக்கில் இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சிவகுமார், எம்.எஸ்.வியின் ஆரம்பகால வாழ்க்கையை விவரித்திருக்கிறார்.

நடிகர் சிவகுமார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

1940ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி. கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ ஜூபிடர் நிறுவனம் 'கண்ணகி' -'ராஜகுமாரி' - படங்கள் மூலம் அன்று புகழ் பெற்றிருந்தது.

ஒரு புதுப்படத்துக்கு, மியூசிக் டைரக்டர் பாடல் கம்போஸ் செய்து கொண்டிருந்தார். டியூன் திருப்திகரமாக வரவில்லை. நாளை பார்க்கலாம் என்று இரவு 9 மணிக்கு கிளம்பி விட்டார்.

ஆபீசில், மேஜை நாற்காலிகளைத் துடைத்து, அறையைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்து, சாமி படங்களுக்கு மாலை போட்டு, பூஜைக்கு தயார் செய்து வைக்கும் ஆபீஸ் பையன் ஹார்மோனியத்தை திறந்து ஒரு டியூன் வாசித்தான்.

Actor Sivakumar Speaks about M.S.Viswanathan

கூட இருந்த சிறுவன் பலே என்றான். மறுநாள் மியூசிக் டைரக்டர் வந்தார். ஹார்மோனியம் இடம் மாறி இருந்தது. 'யார்ரா அவன் பொட்டிய தொட்டது' - சத்தம் போட்டார்.

ஒரு நிமிட அமைதி. 'சார், இவன் நேத்து ஹார்மோனியத்தில ஒரு டியூன் வாசிச்சான் சார்'- உடன் இருந்த பையன் போட்டுக் கொடுத்தான்.

ஒரு வினாடி அவருக்கு கோபம்... 'இங்கே வாடா'.. நடுங்கிக்கொண்டே வந்தான் சிறுவன்.

'எங்கே அதை வாசிச்சுக்காட்டு'... வாசித்தான்... மீண்டும்

ஒரு நிமிடம் அமைதி...

' சரி, இந்த டியூனை நீதான் போட்டேன்னு யார் கிட்டயும் சொல்லாதே'...

படத்தில், அந்த டியூனில் வந்த பாட்டு 'ஹிட்'!..

அதே படத்துக்கு சிறுவன் போட்ட, இன்னொரு டியூனும் 'ஹிட்'! .

அடுத்த படத்திலும் சிறுவன் கம்போஸ் செய்த 3 பாடல்கள் 'ஹிட்'.. ஆனால், மியூசிக் டைரக்டர் பெயர் மட்டும், டைட்டிலில்...

சிறுவனுக்கு சிறு பாராட்டுக் கூட இல்லை.

ஜூபிடர் நிறுவனம் சென்னைக்கு குடி பெயர்ந்தது... காமிரா, லைட், மைக், மேஜை நாற்காலி எல்லாம் வேன்களில் ஏற்றி, வண்டிகள் புறப்படத்தயாராக இருந்தன.

ஓடி வந்த மியூசிக் டைரக்டர் '-முதலாளி, எதை வேணும்னாலும் விட்டுட்டுப் போங்க. இவனை மட்டும் விட்டுடாதீங்க. இவன், தங்கம், வைரம், வைடூரியம் !!

உங்க சமீபத்திய படங்கள்ள 'ஹிட்டான பாட்டு பூராவும் இவன் போட்டது'- என்றார்.

சிறுவன் கண்களில் ரத்தக் கண்ணீர்... மடார் என்று குருவின் காலைக் கட்டிக்கொண்டு கண்ணீரால் அவர் பாதங்களுக்கு அபிசேகம் செய்தான்..

அவன் தான் - கேரளாவில் சினிமா தியேட்டரில், வடை முறுக்கு விற்கும் சிறுவனாக வாழ்க்கையைத் துவக்கி 1200 திரைப் படங்களுக்கும் மேலாக இசையமைத்து, 4 தலைமுறை ஹீரோக்களின் படங்களுக்கு, தன் இசையால் உயிர் கொடுத்த நம் பேரன்புக்குரிய 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.வி.

அந்த மியூசிக் டைரக்டர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு..

தன் ஆசானை கடைசி காலத்தில் தன் வீட்டில் வைத்து கவனித்ததுடன் அவர் மறைந்தபோது ஈமச்சடங்கு செய்ததும் இவர்தான் . அத்துடன் எஸ்.எம்.எஸ் மனைவியும் கடைசி மூச்சுவரை இவர் பாதுகாப்பில் இருந்தார்.

நகைச்சுவை வேந்தன் சந்திரபாபு வேண்டுகோளை ஏற்று அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்ததும் இவரே.

'உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்

உலகம் உன்னிடம் மயங்கும் -

நிலை உயரும்போது பணிவுகொண்டால்

உயிர்கள் உன்னை வணங்கும்'-

ஆம், வணக்கத்துக்குரிய

மேதைதான் நம் எம்.எஸ்.வி.அவர்கள்

இவ்வாறு சிவகுமார் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

Actor Sivakumar Speaks about M.S.Viswanathan

அன்புமணி

இதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி இராமதாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாடிய விஸ்வநாதன் தமது இசை ஞானத்தால் உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளராக உயர்ந்தவர். உலகின் சிறந்த இசை வடிவங்களை தமது திரையிசையில் பயன்படுத்தினார். கவியரசர் கண்ணதாசனின் வைர வரிகளுக்கு உயிர் கொடுத்தார். இவரது இசையில் உருவான பாடல்கள் மக்களுக்கு தன்னம்பிக்கையை அளித்தன. சோர்ந்து கிடந்த உள்ளங்களுக்கு தைரியமூட்டி வாழ்க்கையில் சாதிக்க தூண்டுகோலாக இருந்தது இவரது இசையாகும்.

இத்தகைய சிறப்பு மிக்க விஸ்வநாதனுக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்த போதிலும், அரசாங்கம் இவரது சாதனைகளை அங்கீகரிக்காதது வருத்தம் அளிக்கிறது. இவர் மறைந்தாலும், கோடானு கோடி மக்களின் இதயங்களில் இசையாக வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது உறுதி.

இவரது மறைவு இந்திய திரையுலகிற்கு மட்டுமின்றி உலக இசைக்கே ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்

 

பெசன்ட் நகர் மின் மயானத்தில் எம்எஸ்விக்கு அஞ்சலி செலுத்திய கமல் ஹாஸன்!

மறைந்த மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனுக்கு அஞ்சலி செலுத்த பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு வந்தார் கமல் ஹாஸன்.

எம்எஸ்வி மறைவுக்கு நேற்று அறிக்கை மூலம் இரங்கல் தெரிவித்திருந்தார் கமல் ஹாஸன். அதில் எம்எஸ்வி என்றும் நம்முடனிருப்பார் என்று கூறியிருந்தார்.

இன்று நேரில் அஞ்சலி செலுத்த மயானத்துக்கு வந்தார்.

Kamal pays homage to MSV

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தனக்கு என்ன திறமை இருக்கிறது என்று காட்டிக் கொள்ளத் தெரியாதவர் எம்எஸ்வி. அல்லது அவரையும் அறியாமலேயே அந்தத் திறமை அவரிடம் இருந்திருக்கிறது.

என் மகள் அமெரிக்காவில் இசை பயின்றுவிட்டு, சென்னையில் அவரைச் சந்தித்து ஆசி கோரியபோது, 'எனக்கே எதுவும் தெரியாதேம்மா.. நான் என்ன சொல்லி உன்னை ஆசீர்வதிப்பது?' என்றார். அது வெறும் தன்னடக்கமில்லை. அவரது இயல்பு.

கே பாலச்சந்தருடன் நான் பணியாற்றிய படங்களில் அவரது இசையமைப்பப் பார்த்திருக்கிறேன். மிக நகைச்சுவையாக, பார்க்கவே அத்தனை இனிமையாக இருக்கும் அவர் ரெகார்டிங் செய்த விதம்," என்றார்.

 

டிக்கெட் கிடைக்காதுன்னு அன்றே சொன்ன ராஜமவுலி!

ஹைதராபாத்: நாட்டிலேயே ரொம்ப சந்தோஷமான மனிதர் யார் என்று கேட்டால் இப்போதைக்கு அது ராஜமவுலியாகத்தான் இருக்க முடியும். இருக்காதே பின்ன, ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் பாகுபலி படத்தை இயக்கி, வசூல் மழையில் குளித்துவருபவராச்சே.

கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான பாகுபலி படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் அல்லோகலப்பட்டனர். ரசிகர்களின் இந்த திண்டாட்டம், ராஜமவுலிக்கு கொண்டாட்டம்.

ராஜமவுலி தனது டிவிட்டர் அக்கவுண்டில் ஷேர் செய்துள்ள ஒரு போட்டோ இதற்கு உதாரணம். சினிமா காட்சியொன்றில், திரைப்பட டிக்கெட்டுக்காக நீண்ட வரிசையில், மக்கள் காத்திருக்கும் ஒரு போட்டோவை அவர் ஷேர் செய்துள்ளார்.

பின்வரிசையிலிருந்து ஒருவர் வந்து முன்வரிசையில் நிற்பவரிடம், தனக்கும் காதலிக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்க கேட்டு கெஞ்சுகிறார். இது தகராறில் முடிகிறது. கடுப்பான, முன்வரிசை ஆசாமி சொல்கிறார், ஒரு டிக்கெட் கூட (எனக்கே) கிடைக்கவில்லை என்று. பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடித்து, ராஜமவுலி இயக்கத்தில் வெளியான சத்ரபதி திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிதான் இது.

பாகுபலி திரைப்படத்திற்கு, நிஜமாகவே இதே நிலை ஏற்பட்டுள்ளதை படம்போட்டு விளக்கியுள்ளார் ராஜமவுலி.

 

பாகுபலி படத்தையும் விட்டு வைக்காத சிம்பு ரசிகர்கள்

சென்னை: இதெல்லாம் பெருமையா கடமை என்று சந்தானம் ஒரு படத்தில் சொல்வது போல, சிம்பு ரசிகர்களின் செயல் அமைந்துள்ளது. வாலு படம் தொடர்ந்து வெளியாக முடியாமல் பல்வேறு காரணங்களால் தடைபட்டு உள்ளது.

இந்த நேரத்தில் சிம்புவின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் அளிக்கும் பொருட்டு, பிரர்த்தனையில் குதித்தனர். ஆனால் அவர்களின் ஆறுதல் எல்லை மீறிப் போனதில் அடுத்த கட்டமாக பாகுபலி படத்தையும் கையில் எடுத்துள்ளனர்.

பாகுபலி படத்தில் எடுத்தவுடன் ரம்யா கிருஷ்ணன் ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடிவருவார். எதிரிகளிடம் இருந்து அந்தக் குழந்தையை காப்பாற்ற வேண்டி அருவியைக் கடந்து செல்லும் போது, ரம்யா கிருஷ்ணன் தண்ணீருக்குள் மூழ்கிவிடுவார்.

ரம்யா கிருஷ்ணனின் ஒரு கை மட்டும் வெளியில் நீண்டு அந்தக் குழந்தையை பத்திரமாகத் தாங்கி இருக்கும், கடைசியில் மலைவாழ் மக்கள் அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவர்.

எவ்வளவோ கஷ்டப்பட்டு இந்தக் காட்சியை இயக்குநர் ராஜமௌலி எடுத்திருந்தார். ஆனால் சிம்புவின் ரசிகர்கள் அந்தப் புகைப்படத்தை அப்படியே மாற்றி வாலு பிரச்சினையில் பாதிக்கப்பட்ட சிம்புவை அந்தக் குழந்தை போன்றும், ரசிகர்களை ரம்யா கிருஷ்ணனாகவும் மாற்றி வெளியிட்டுள்ளனர்.

தற்போது சமூக வலைதளங்களில் அதிகமான நபர்களால் ஷேர் செய்யப்படும் ஒன்றாக இந்தப் போஸ்ட் மாறியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

சொல்றதுக்கு எதுவும் இல்லை....

 

பாகுபலி படத்துக்கும், அஜீத்துக்கும் என்ன சம்பந்தம்?

சென்னை: பாகுபலி படத்திற்கும் நடிகர் அஜீத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது என்று, சமீப காலமாக ஒரு பேச்சு சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. நீங்க நெனைக்கிற மாதிரி பிரச்சினையெல்லாம் ஒண்ணும் கிடையாது.

அப்புறம் என்னன்னு கேட்கிறீங்களா மேல படிங்க, பாகுபலி படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடித்து படத்தை தாங்கிப் பிடித்த அனுஷ்கா, தமன்னா மற்றும் ராணா மூன்று பெரும் அஜீத்தின் படங்களில் அடுத்தடுத்து இணைந்து நடித்துள்ளனர்.

Baahubali Vs Ajith Movies

2013ம் ஆண்டு அஜீத் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆரம்பம், இந்தப் படத்தில் அஜீத்தின் நண்பனாக பிளாஷ்பேக் காட்சியில் சிறப்பாக நடித்திருந்தார் ராணா.

2014 ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்து வெற்றிபெற்ற படம் வீரம், இந்தப் படத்தில் அஜீத்தின் காதலியாக நடித்து இருந்தார் தமன்னா. தமிழில் கிட்டத்தட்ட மார்க்கெட் சுத்தமாக இழந்திருந்த தமன்னாவுக்கு ரீ- என்ட்ரி கொடுத்த படம் இது.

இந்த வருடம் (2015) பிப்ரவரியில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் என்னை அறிந்தால். தமிழ் மட்டும் அல்லாது ஆந்திர பூமியிலும் நல்ல வசூலைப் பெற்ற இந்தப் படத்தில் 2 நாயகியரில் ஒருவராக அஜீத்துடன் இணைந்து நடித்து இருந்தார் அனுஷ்கா.

பாகுபலி படத்தில் நடித்த 3 பெரிய நட்சத்திரங்களும் அஜீத்துடன் இணைந்து நடித்ததைக் கூறி, சமூக வலைதளங்களில் அதிகமாக இந்தப் போஸ்ட்டை ஷேர் செய்து வருகின்றனர் அஜீத்தின் ரசிகர்கள்.

நீங்கல்லாம் நல்லா வரணும்...வருவீங்க...

 

ட்விட்டரில் பாகுபலி ஒளிப்பதிவாளர் செந்தில் குமார்... வரவேற்றார் இயக்குநர் ராஜமவுலி!

பாகுபலி.. இந்திய சினிமாவே இன்று இந்தப் படம் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று பிரமாதமான ஒளிப்பதிவு. படம் பார்த்த அத்தனை பேரும் கேட்பது, இந்த அருவி எங்கே இருக்கிறது? இப்படி ஒரு லொகேஷன் இந்தியாவில் இருக்கிறதா? என்றுதான்.

இப்படியெல்லாம் கேட்க வைத்தவர் கேகே செந்தில் குமார். படத்தின் ஒளிப்பதிவாளர். ராஜமவுலியுடன் 6 மெகா ஹிட் படங்களில் பணியாற்றியவர். ஆந்திராவில் செட்டிலான தமிழர். தந்தை பெயர் கிருஷ்ண மூர்த்தி.

Rajamouli welcomes his DOP to twitter

செந்தில்குமார் இதுவரை 13 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க தெலுங்குப் படங்கள்தான். இவற்றில் 6 படங்கள் ராஜமவுலி இயக்கியவை. சை படத்தில்தான் இருவரும் இணைந்தனர்.

பாகுபலியின் இரண்டாம் பாகத்துக்கும் செந்தில்குமார்தான் ஒளிப்பதிவு.

பேஸ்புக்கில் ஆக்டிவாக இருக்கும் செந்தில்குமார், இப்போது ட்விட்டரிலும் இணைந்துள்ளார். கடந்த 13-ம் தேதி ட்விட்டரில் இணைந்த அவர், இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பு, ரிஷி கபூர், கரண் ஜோஹர் போன்ற பாலிவுட் பிரபலங்களின் பாராட்டுகள் போன்றவற்றை ட்விட்டரில் ரீட்வீட் செய்து நன்றி கூறியுள்ளார்.

ட்விட்டரில் இணைந்த செந்தில் குமாரை இயக்குநர் எஸ் எஸ் ராஜமவுலி வரவேற்றுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், "செந்தில் குமாருக்கு இதயப் பூர்வ வரவேற்பு. மிகத் திறமையான, பொறுமையான ஒளிப்பதிவாளர். ஒளிப்பதிவு மற்றும் படங்கள் பற்றி கேள்விகள் தொடரும்..." என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கைராசிக்குடும்பத்தை கலைக்க துடிக்கும் பானு, வைஜெயந்தி… விடுவாளா மீனாட்சி

கூட்டுக்குடும்பத்தை எப்படி சிதைப்பது... அண்ணன் தம்பிகளை எப்படி அக்குவேறு ஆணி வேறாக பிரிப்பது, இதுதான் இன்றைக்கு சீரியல்களின் முக்கிய கதைக்கருவாக இருக்கிறது.

இன்றைக்கு பத்தில் 8 வீடுகள் தனிக்குடும்பங்கள். ஒரு சிலர்தான் மாமனார், மாமியார் மச்சினர், கொழுந்தனார் ஓரகத்திகளுடன் வசிப்பது ஏதோ அதிசயமான நிகழ்வாக இருக்கிறது.

டிவி சீரியல்களில்தான் இத்தகைய கூட்டுக்குடும்பங்களைப் பார்க்க முடிகிறது. முதல் சில எபிசோடுகள் சந்தோசமாக தொடங்கினாலும் சில வாரங்களிலேயே பழிவாங்குதல், கூட இருந்தே குழி பறித்தல் என நச்சு பிச்சுகள் ஆரம்பித்து விடுகிறது.

Karasi kudumbam on Jaya TV

கைராசி குடும்பம்

அழகான அம்மா, நான்கு பையன்கள் என பூந்தோட்டமாய் இருக்கும் கைராசி குடும்பத்தின் மூத்த மருமகள் மீனாட்சி. சிவஞானத்தின் மனைவி மீனாட்சியை கொழுந்தன்கள் மூவருக்கும் ரொம்ப பிடிக்கிறது. தென்றல் வீசும் குடும்பத்தில் அடுத்து வரும் மருமகள்கள் பானு, வைஜெயந்திக்கு பிடிக்காமல் போகிறது.

அண்ணன் தம்பி பாசம்

அண்ணன் தம்பிகளை பிரித்து குடும்பத்தை சிதைப்பதுதான் பானுவின் திட்டம், அதே எண்ணத்தோடு திட்டமிட்டு சிவஞானத்தின் இரண்டாவது தம்பி ராஜேந்திரனை திருமணம் செய்து கொண்டு வருகிறாள் வைஜெயந்தி.

Karasi kudumbam on Jaya TV

பானு - வைஜெயந்தி

பானுவுடன் இணைந்து குடும்பத்தை சீரழிக்க வைஜெயந்தி திட்டமிட்டாலும் முதல் ஆப்பு பானுவுக்குத்தான் வைக்கப் போகிறார். காரணம் வைஜெயந்தி காதலித்தது சண்முகத்தை. திடீரென்று பானுவை திருமணம் செய்து வைத்து விட வேறு வழியின்றி ராஜேந்திரனை மணந்து கொண்டு கைராசி குடும்பத்தின் மருமகளாக அடியெடுத்து வைக்கிறாள்.

Karasi kudumbam on Jaya TV

திருமணம் நடக்குமா?

பானுவும், வைஜெயந்தியும் இணைந்து போடும் திட்டங்கள் பலிக்கிறதா? மீனாட்சி அதை எப்படி முறியடிக்கிறாள். கடைசி கொழுந்தனின் திருமணம் நடக்குமா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.

Karasi kudumbam on Jaya TV

சிவா - சுபத்ரா

ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகி வரும் கைராசி குடும்பம் தொடரை திருச்செல்வம் இயக்கி வருகிறார். நடிகர் சிவா மூத்த அண்ணன் சிவஞானமாக நடிக்க மூத்த மருமகள் மீனாட்சியாக நடிக்கிறார் சுபத்ரா.

வில்லி வித்யா

நிறைய கதாபாத்திரங்கள் தொடரில் இருந்தாலும் தனது வில்லத்தனமான கேரக்டரில் நடித்து பெயரை தட்டிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீவித்யா.

Karasi kudumbam on Jaya TV

வித்யாசமான ஸ்ரீ வித்யா

தென்றல், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட பல தொடர்களில் வில்லியாகத்தான் நடித்திருந்தார். கைராசி குடும்பத்திலும் வில்லி கேரக்டர்தான். தென்றல், பொன்னூஞ்சல் போன்று கைராசி குடும்பமும் ஸ்ரீவித்யாவின் பெயர் சொல்லும் குடும்பமாக இருக்கும் என்று நம்புகிறார்.

மனதில் நிற்கும் வில்லி

கூட்டுக் குடும்பங்களில் அன்றன்றைய மனநிலையே வில்லத்தனமாக அமையும். அது மாதிரி அடிக்கடி வில்லத்தனம் செய்யும் கேரக்டர் என்னுடையது. எனது பார்வையில் சரி என்று படுகிற விஷயங்கள் மற்றவர்களுக்கு வில்லத்தனமாக தெரியும். இல்லத்தரசிகளிடம் திட்டு வாங்கினாலும் அவர்கள் மனதில் பதிவது வில்லி வேடங்கள்தான் என்கிறார் ஸ்ரீவித்யா. வில்லி சொன்னா சரியாத்தான் இருக்கும்.

 

சூணா பாணாவை நீயா நானா கோபிநாத் பார்த்தா? எப்படி இருக்கும்?

விஜய் டிவியில் ஞாயிறு இரவுகளில் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஏதாவது ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு இரு குழுக்கள் பேசி கலைவதுதான் நிகழ்ச்சியின் சிறப்பம்சம். சிறப்பு விருந்தினர்கள் வேறு வந்து தங்களின் கருத்துக்களை கூறுவார்கள். இந்த நிகழ்ச்சியையும், நீயா நானா ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், நிகழ்ச்சியின் இயக்குநர் ஆண்டனி ஆகியோரை கலாய்த்துள்ளது இந்த வாரம் ‘இப்படி பண்றீங்களேம்மா நிகழ்ச்சி.

நீயா நானா சூட்டிங்கை நேரில் பார்த்திருந்தால் மட்டுமே சூணா பாணாவில் இப்படி சீன் பை சீன் ஓட்டமுடியும். என்னா ஒரு கலாய்ப்பு... இதை கோபிநாத் பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை.

Pudhuyugam TV Suna pana VS Vijay TV Neeya Naana

மைக் அவர்கிட்ட குடுங்க... வேற வேற வேற... என்று கூறும் கோபிநாத், டாக் பேக்கில் பேசும் இயக்குநர் ஆண்டனி... சிறப்பு விருந்தினர்களை பேச விடாமல் கூட கூட பேசும் கோபிநாத் என ஓட்டு ஓட்டு என்று ஒட்டி எடுத்திருக்கிறார் அரவிந்தராஜ்.

கோபிநாத் கோட் போட்டாலும் செய்தி, கோட் போடாவிட்டாலும் செய்தி. இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல டிவிட்டரிலும் ஒரே கலாய்ப்புதான். இப்போது டிவியிலும் கோபிநாத்தை கிண்டலடித்து நிகழ்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டனர்.

லட்சுமி ராமகிருஷ்ணனின் இப்படி பண்றீங்களேம்மா வார்த்தையை வைத்து கலாத்த விஜய் டிவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது சூணா பாணா என்கின்றனர் ரசிகர்கள்.