தனுஷுடன் மோதலா?- இயக்குநர் வேல்ராஜ் விளக்கம்

வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் தனக்கும் தனுஷுக்கும் மோதல் என்று வந்த செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் வேல்ராஜ்.

‘வேலையில்லா பட்டதாரி' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அப்படத்தின் இயக்குநர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக எமிஜாக்சன், சமந்தா நடிக்கின்றனர். ராதிகா, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.

No rift with Dhanush, Says Director Velraj

இப்படத்தை வேல்ராஜ் இயக்குவதோடு ஒளிப்பதிவும் செய்து வருகிறார். இவர் சில நாட்களாக படப்பிடிப்பு செல்லாததால், படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து வேல்ராஜ் கூறும்போது, "நான் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘பாயும் புலி' படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறேன். சில முக்கியமான காட்சிகளை படமாக்க இருந்ததால் வேலையில்லா பட்டதாரி 2 பட ஷூட்டிங்கில் கலந்துக் கொள்ளவில்லை. தனுஷுக்கு சொல்லிவிட்டுத்தான் என்னுடைய உதவியாளரை வைத்து தனுஷ் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினேன்.

நான் கலந்துக் கொள்ளாததால் படத்தில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் பரவி உள்ளது. அது முற்றிலும் வதந்தி. மேலும் ஒளிப்பதிவு பொறுப்பை என் உதவியாளரிடம்தான் கொடுத்திருக்கிறேன்," என்றார்.

 

கரகாட்டக்காரனை ரீமேக் பண்ணா கனகா ரோல் எனக்குத்தான்! - சொல்கிறார் லட்சுமி மேனன்

இப்போது ரீமேக், இரண்டாம் பாகம் மற்றும் பேய்ப் பட சீஸன் கோடம்பாக்கத்தில்.

சம்பந்தா சம்பந்தமில்லாமல், இரண்டாம் பாகம் என்ற அறிவிப்போடு படத்தை வெளியிடுவதுதான் பெரும்பாலும் நடக்கிறது.

இன்னொரு பக்கம் பெரும் ஹிட்டடித்த பழைய படங்களை அப்படியே ரீமேக் பண்ணுகிறார்கள். சமயத்தில் அதுவும் ஒர்க் அவுட் ஆகிறது.

Lakshmi Menon wants to do Kanaka's role in Karakattakaran remake

பில்லா, நான் அவனில்லை, தில்லு முல்லு படங்கள் ரிமேக்காகி வசூல் குவித்தன. இப்போது நூறாவது நாள், சிகப்பு ரோஜாக்கள் போன்ற படங்களை ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்கள். அடுத்து கரகாட்டக்காரனை ரீமேக் செய்யப் போவதாக ஒரு பேச்சு.

இதனைக் கேள்விப்பட்ட நடிகை லட்சுமி மேனன், கரகாட்டக்காரனை யார் ரீமேக் செய்தாலும் அதில் கனகா வேடத்தில் நடித்துத் தரத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார்.

பழைய படங்களில் ஏதாவது ஒன்றை ரீமேக் செய்தால், எந்தப் படத்தில் நடிக்க விருப்பம் என்று கேட்டதற்கு, "கரகாட்டக்காரன். அந்தப் படத்தை ரீமேக் செய்யப் போவதாகக் கேள்விப்பட்டேன். அப்படி செய்தால், கனகா வேடத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்," என்றார்.

 

அழகென்ற சொல்லுக்கு அமுதா.. இது சுசீந்திரன் உதவியாளர் இயக்கும் படம்

கோடம்பாக்கத்தையே பேய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் இந்த சூழலில், ஒரு மென்மையான காதலைச் சொல்ல வருகிறார் இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் நாகராஜன்.

படத்துக்கு அவர் வைத்திருக்கும் தலைப்பே அதைப் பறை சாற்றுகிறது. அழகென்ற சொல்லுக்கு அமுதா!

ஒரு இளைஞனுடைய காதலில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது.

Azhagendra Sollukku Amudha

ரிஜன் நாயகனாகவும், அர்ஷிதா நாயகியாகவும் நடிக்க, உடன் பட்டிமன்றம் ராஜா, ரேகா சுரேஷ், சுவாமிநாதன், சதுரங்க வேட்டை வளவன், மகாந்தி சங்கர், கலை, நிப்பு இயக்குனர் சரவணசக்தி, மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி நாகராஜன் இயக்குகிறார். ரஜின் மகாதேவ் இசையமைக்க, கேகே கல்யாணராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

ரால்ப் புரொடக்ஷன்ஸ் சார்பில், ரபேல் சுல்தானா தயாரிக்கிறார்.

சென்னை வியாசர்பாடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை, மற்றும் எண்ணூர் போன்ற பகுதிகளில் படபிடிப்பு நடந்து வருகிறது.

 

'மாமி' தொகுப்பாளினியின் புதிய அவதாரம்…

டிவி தொகுப்பாளர்கள் சினிமாவில் நடிக்கத்தான் வரவேண்டுமா? எழுத்தாளர்களாகவும் ஜொலிக்க முடியும் என்று கூறியுள்ளார் சன் மியுசிக் சேனலின் நட்சத்திர தொகுப்பாளினி வைஷ்ணவி.

சன் மியூசிக் சேனலின் மாமீஸ் டே அவுட் என்ற நிகழ்ச்சி பிரபலமானது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி வைஷ்ணவிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. மாமி போல மடிசார் கட்டிக்கொண்டு இவர் பண்ணும் அதகள அலப்பறைக்காவே நிகழ்ச்சி ஹிட் அடிக்கிறது.

TV anchor Vaisnavi takes new avatar

பொதுவாகவே தொகுப்பாளினிகளின் ஆசை சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் வைஷ்ணவியோ எழுத்தாளர் அவதாரம் எடுத்துள்ளார். ஆங்கில நாவல் ஒன்றை எழுதி முடித்துள்ள அவர் விரைவில் வெளியிட இருக்கிறாராம்.

நைய்போ குவின் என்பதுதான் நாவலின் தலைப்பாம். மார்க்கெட் படித்த இந்த வைஷூ மாமி... டார்கெட்டுக்குப் பயந்தோ டிவி தொகுப்பாளினி ஆகிவிட்டாராம்.

TV anchor Vaisnavi takes new avatar

சிறு வயதில் இருந்தே சிறு கதைகள் எழுதி வந்த வைஷ்ணவி தற்போது முழு நாவலை எழுதி முடித்திருக்கிறாராம்.

வயதான பெண்ணுக்கும், இளைஞனுக்குமான நட்பும் அன்பும்தான் கதையாம். டிவி தொகுப்பாளினியாக இருப்பதை விட ஒரு எழுத்தாளராகவே அடையாளம் காணப்படவேண்டும் என்பதுதான் வைஷ்ணவியின் ஆசையாம்.

 

ஸ்ரீமந்துடு: மகேஷ்பாபு ஓட்டிய சைக்கிளின் விலை ஜஸ்ட் மூன்றரை லட்சம்தான்

ஹைதராபாத்: தெலுங்கு உலகின் இளவரசன் என்று கொண்டாடப்படும் நடிகர் மகேஷ்பாபு, இளவரசர் மட்டுமல்லாது வசூல் சக்கரவர்த்தியாகவும் திகழ்பவர். அவர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் ஸ்ரீமந்துடு.

இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது, ஆனால் வழக்கத்திற்கு மாறாக சைக்கிளில் அப்பாவியான முகத்தை வைத்துக் கொண்டு மகேஷ்பாபு நடித்திருந்த காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

Maheshbabu Bicycle Cost More Than 3 Lakhs

இதைக் கண்டு மகேஷ்பாபுவின் ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் சற்றே அதிர்ச்சி அடைந்தனர். இதுதான் சாக்கு என்று சக நடிகர்களின் ரசிகர்கள் மகேஷ் பாபுவைக் கலாய்த்து சமூக வலைதளங்களில் இஷ்டத்திற்கு மீம்ஸ் கிரியேட் செய்து மகிழ்ந்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது, அதைக் கேட்ட எல்லோருமே ஆடிப் போய்விட்டனர். ஸ்ரீமந்துடு படத்தில் மகேஷ்பாபு ஓட்டிய சைக்கிளின் விலை சுமார் மூன்றரை லட்சம் ரூபாயாம்.

கிட்டத்தட்ட ஒரு காரின் விலைக்கு நிகரான இந்த சைக்கிளில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா, இது ஒரு ஸ்போர்ட்ஸ் சைக்கிள் 20 கியர்கள் இந்த சைக்கிளில் உள்ளன.

இதைத் தவிர மேடு பள்ளங்களில் செல்லும்போது அதற்கு ஏற்றவாறு உயரத்தை சரிபடுத்திக் கொள்ளும் வசதியும் இந்த சைக்கிளில் இருக்கிறது என்று, ரமணா விஜயகாந்த் ரேஞ்சுக்கு சைக்கிளைப் பற்றிய புள்ளிவிவரங்களை அடுக்குகின்றனர் ஸ்ரீமந்துடு படக்குழுவினர்.

சைக்கிளை ஒழுங்காக ஓட்டவில்லை நீங்கள் கீழே விழவேண்டியதுதான், என்று சற்று பயமுறுத்தவும் செய்கின்றனர் அதுசரி...

 

பிறந்த நாளுக்கு வாழ்த்திய ரசிகர்களுக்கு வாய்ஸ் மெசேஜில் நன்றி சொன்ன சூர்யா

சென்னை: நடிகர் சூர்யா தனது 40வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி, சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. டிவிட்டரில் தேசிய அளவில் சூர்யாவை வாழ்த்திய வாசகம் டிரெண்ட் ஆனது.

இதனிடையே, சவுண்ட்கிளவுட் மூலமாக, சூர்யா தனது ரசிகர்களுக்கு வாய்ஸ் மெசேஜில் நன்றி சொல்லியுள்ளார்.

Surya thanking everyone for wishing him on his Birthday

அதில், "அனைத்து அன்பானவர்களுக்கும் நன்றி. உங்கள் மெசேஜ், பிரார்த்தனைகள், நலத் திட்ட உதவிகள் போன்றவற்றுக்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு வாழ்த்துக்களையும், படங்களையும் அனுப்பி வைத்தீர்கள். நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்ந்தேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. பை" என்று கூறியுள்ளார்.

 

ஜூராசிக் வேர்ல்ட்... வசூலில் உலக அளவில் மூன்றாம் இடம்!

விமர்சனங்கள் மட்டுமே ஒரு படத்தின் வெற்றியையும் வசூலையும் தீர்மானிப்பதில்லை என்பதற்கு இன்னும் ஒரு எடுத்துக் காட்டு ஜூராசிக் வேர்ல்ட்.

இந்தப் படத்துக்குச் சாதகமான விமரிசனங்கள் கிடைக்கவில்லை என்றாலும் உலகளவில் அதிகம் வசூலித்த படங்களில் இதற்கு 3-ம் இடம் கிடைத்துள்ளது.

படம் வெளியான முதல் மூன்று நாள்களில் மட்டும் ரூ. 3363 கோடியை (524 மில்லியன் டாலர்) வசூலித்தது இந்தப் படம்.

Jurassic World gets 3rd place in box office history

ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் வசூல் தொடர்ந்து சீராக இருந்ததால், இதுவரை இந்தப் படம் $1.52 பில்லியன் வசூலித்துள்ளது. அதாவது, 9,716 கோடி ரூபாய்!

ஃபியூரியஸ் 7 மற்றும் தி அவெஞ்சர்ஸ் படங்களைத் தாண்டி இப்போது உலகளவில் அதிகம் வசூலித்த 3-வது படம் என்கிற பெருமை ஜூராசிக் வேர்ல்டுக்குக் கிடைத்துள்ளது. இன்னும் அவதார், டைட்டானிக் படங்களின் வசூலைத் தாண்ட வேண்டியதுதான் பாக்கி.

அவதார் படம் ரூ. 17,851 கோடியையும் ($2.79 பில்லியன்) டைட்டானிக் ரூ. 13,948 கோடியையும் ($2.18 பில்லியன்) வசூலித்து முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

ஜூராசிக் வேர்ல்ட் வரிசையின் அடுத்தப் படம் 2018, ஜூன் 22 அன்று வெளியாகும் என யுனிவர்சல் ஸ்டூடியோ அறிவித்துள்ளது.

 

வந்துருச்சு 'ஏண்டி ஏண்டி'.. விஜய்யும், ஸ்ருதியும் இணைந்து பாடிய புலிப் பாட்டு!

சென்னை: புலி படத்திற்காக நடிகர் விஜய் நடிகை சுருதிஹாசன் இணைந்து பாடிய ஏண்டி ஏண்டி பாடலின் டீசர் சற்று முன்பு வெளியானது.

மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப் பட்டிருக்கும் புலி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஏற்கனவே விஜயின் பிறந்த நாள் பரிசாக புலி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி உள்ள ஏண்டி ஏண்டி பாடலின் டீசரும் இடம்பிடித்துள்ளது.


தீசரின் ஆரம்பத்தில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பாடலைப் பற்றி ஒருசில வார்த்தைகள் பேசுவது போல ஆரம்பித்து, தொடர்ந்து விஜய் பாடுவது போன்றும் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பது போன்றும் டீசர் உள்ளது.

பாடல் வரிகள் காட்சிகளாக விரிய( வீடியோ இல்லை) பின்னணியில் நடிகர் விஜயின் குரலும் சுருதிஹாசன் குரலும் ஒலிக்கின்றது, இடையில் கவிஞர் வைரமுத்துவின் புகைப்படம் மற்றும் விஜய், சிம்புதேவன், தேவிஸ்ரீ பிரசாத் நிற்பது போன்ற படங்கள் வந்து செல்கின்றன.

காதலியின் நினைவு வாட்டுவதாக காதலன் உருகிப் பாடுவது போன்று அமைந்து, இருக்கும் இந்தப்பாடல் கண்டிப்பாக இந்த வருடத்தின் ஹிட் பட்டியலில் இடம்பெறும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்ற ஏண்டி ஏண்டி இப்படிப் பண்ணுற பாடலின் டீசரை, ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

 

ரஞ்சித் படத்தில் ரஜினிக்கு வில்லன் ஜேடி சக்கரவர்த்தி?

கொஞ்சம் சைக்கோத்தனமான முகம், ஆனால் சாதுவான உடல் மொழி, வில்லத்தனமான பார்வை.. இவைதான் ஜேடி சக்கரவர்த்தி.

ராம்கோபால் வர்மாவின் உதயம் படத்தில் 1989-ல் அறிமுகமானவர் சக்ரவர்த்தி. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், ஏழு படங்களை இயக்கியுள்ளார். மூன்று படங்களைத் தயாரித்துள்ளார்.

Is JD Chakravarthy Rajini's villain?

தமிழில் பிரதாப், சர்வம், கச்சேரி ஆரம்பம், சமர், அரிமா நம்பி உள்பட 9 படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

தமிழில் இவர் கடைசியாக நடித்த ‘அரிமா நம்பி' படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது அஸ்வின் கக்குமனு நடிக்கும் ‘ஜீரோ' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

எந்திரன் படத்திலேயே ரஜினிக்கு வில்லனாக நடிக்கவிருந்தார் சக்கரவர்த்தி. கடைசி நிமிடத்தில் அது மாறியது.

இப்போது ரஜினியை வைத்து பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் சக்கரவர்த்திதான் வில்லனாக நடிக்கிறார் என்கிறார்கள். சமீபத்தில் இவரை ரஞ்சித் சார்பில் சந்தித்துப் பேசியுள்ளார்கள். ஏற்கெனவே இப்படத்தில் நடிக்க பிரகாஷ் ராஜும் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தப் படம், நடிப்பவர்கள் குறித்து முழு விவரம் வந்துவிடும் எனத் தெரிகிறது.

 

பேய்கிட்ட போய் உனக்கென்ன வேணும் டெய்சின்னு எல்லோரும் கேட்பாங்களோ?

சென்னை: அறிமுக இயக்குநர் ஸ்ரீ நாத் ராமலிங்கம் இயக்கி வந்த திகில் படமான டெய்சி திரைப்படம், தற்போது உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் மீண்டும் பேய்ப் படங்களை கொண்டு வந்தே தீருவேன் என்ற நோக்கத்துடன் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இந்தப் படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார்.

ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை என்கிறார்கள், அதாவது கருவில் இருக்கும் தன் குழந்தைக்கு ஒரு வாக்குறுதியை அந்த சிசிவின் தந்தை அளிக்கிறார். தந்தையின் வாக்குறுதியை அவரால் காப்பாற்ற முடியாமல் போக கருவிலிருக்கும் அந்தக் குழந்தை இறந்து ஆவியாகி, தன்னுடைய நிலைமைக்கு காரணமானவர்களைபழிவாங்குவதுகின்றது.

Daisy  Horror Movie

சிலபல உண்மை சம்பவங்களின் தொகுப்புகள் தான் படத்தின் கதை, தலைப்பு எல்லோருக்கும் புரியும்படி இருக்க வேண்டும் என்று தான் படத்தின் தலைப்பை உனக்கென்ன வேணும் டெய்சி என்று மாற்றியதாக இயக்குநர் கூறியுள்ளார்.

தீபக் பரமேஷ், ஜாக்லின் பிரகாஷ், மைம் கோபி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஜுனா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவை புதுமுகம் மனிஷ் யாதவ் கவனித்துக் கொள்ள, படத்திற்கு இசையமைத்து தமிழ்த் திரையில் காலடி எடுத்து வைக்கிறார் இசையமைப்பாளர் சிவ சரவணன்.

ஆகஸ்ட் மாதம் இறுதியில் படம் திரையைத் தொட உள்ளது, பேய்கிட்ட போய் உனக்கென்ன வேணும் டெய்சின்னு எல்லோரும் கேட்பாங்களோ?

 

வெற்றிகரமாக 50 வது நாளைத் தொட்ட காக்கா முட்டை

சென்னை: 2 சிறுவர்களின் இயல்பான வாழ்கையை அழகாக எடுத்துச் சொன்ன காக்கா முட்டை திரைப்படம் வெற்றிகரமாக 50 வது நாளைத் தொட்டு இருக்கிறது, கடந்த ஜூன் மாதம் 5 ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் இன்று 50 வது நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

பெரிய நடிகர்கள் இல்லை மற்றும் பட்ஜெட் பெரிதாக இல்லை போன்று நிறைய இல்லைகள் படத்தில் இருந்தாலும் கூட, படம் வெற்றிப் படமாக மாறி உண்மையிலேயே நல்ல படம் தான் என்று ரசிகர்கள் அனைவரையும் ஆமாம் சொல்ல வைத்திருக்கிறது காக்கா முட்டை.


அறிமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த திரைப்படம் காக்கா முட்டை, உலகம் முழுவதும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை விளம்பரம் செய்து வெளியிட்டது.

2 தேசிய விருதுகளைப் பெற்ற இந்தத் திரைப்படம் வசூலிலும் குறை வைக்கவில்லை, இதுவரை உலகம் முழுவதும் சுமார் 12 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்து இருக்கிறது.

விருதுகள் பெரும் படம் பாக்ஸ் ஆபிசில் படுத்துவிடும் என்ற கூற்றை முதலில் உடைத்து எறிந்த திரைப்படம் காக்கா முட்டை, இன்றைய நாட்களில் ஒரு திரைப்படம் 1 வாரம் ஓடினாலே பெரிய விஷயமாகப் பார்க்கப்படும் போது காக்கா முட்டை 50 நாட்களைத் தொட்டது உண்மையிலேயே பெரிய சாதனைதான்.

நல்ல படங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான்...

 

'பேஸ்புக் - ஸ்டேடஸ போடு சாட் பண்ணு'... இதுவும் படத்தோட தலைப்புதாங்கோ!

விஞ்ஞானமும் புதிய கண்டுபிடிப்புகளும் பெருகப் பெருக வில்லங்கங்களும் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

தகவல் பரிமாற்றத்தின் அடுத்த பரிமாணமாக வந்தது இணையதளம் என்றால், அந்த இணைய தள உலகில் புதிய புரட்சியையே ஏற்படுத்தியது பேஸ்புக்.

ஆனால் அதே பேஸ்புக் இன்று பலரது வாழ்க்கையைச் சூறையாடியிருக்கிறது. பலரது எதிர்காலத்தைக் கேள்விக்குறியதாக்கியுள்ளது.

FB-Statushae Podu Chat Pannu - A new movie on Facebook

ஹீரோவாகப் பார்க்கப்பட்ட அதே பேஸ்புக், இன்று வில்லனாகவும் பார்க்கப்படும் நிலை. இதை மையப்படுத்தி ஒரு சினிமாவை தமிழில் உருவாக்குகிறார்கள்.

படத்தின் தலைப்பு: பேஸ்புக் - ஸ்டேடஸ போடு சாட் பண்ணு!

FB-Statushae Podu Chat Pannu - A new movie on Facebook

பேஸ்புக்கில் புரொபைல் படத்தை மாற்றி வைத்துக் கொண்ட நாயகன் மற்றும் நாயகியின் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி திருப்பங்கள்தான் கதை.

இந்தப் படத்தில் ரகுமான் நாயகனாக நடிக்க, புதுமுகம் சுர்ஸ் சர்மா, அதிதி ஆச்சார்யா மற்றும் ஸ்ருதி ஆகியோர் நாயகிகளாக அறிமுகமாகின்றனர். டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், சாம்ஸ், சுவாமிநாதன் போன்றவர்களும் நடிக்கிறார்கள்.

FB-Statushae Podu Chat Pannu - A new movie on Facebook

ஆர் செந்தில் நாதன் இயக்கும் இந்தப் படத்துக்கு சரவண பாண்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ் பிரேம் குமார் இசையமைக்கிறார்.

ஆர் செல்வம் தனது எஸ்எஸ்விஎஸ் எஸ்எஸ்கே புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிக்கிறார்.

 

மோகன் லாலுக்கு எதிர்ப்பு: தெரு நாய்களைக் காக்க நாளை விஷால் உண்ணாவிரதம்

கேரளாவில் மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் தெரு நாய்களைக் கொல்ல மோகன் லால் கோரிக்கை விடுத்ததை நேற்று செய்தியாக வெளியிட்டிருந்தோம் அல்லவா...

இன்று அதற்கு எதிர்வினையாக, தெரு நாய்களைக் கொல்லக் கூடாது என்று கூறி நடிகர் விஷால் நாளை சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

Vishal to participate fasting against killing street dogs

தமிழகத்தை விட கேரளாவில் மூன்று மடங்கு அதிக தெருநாய்கள் உள்ளன. இதனால் மக்கள் அடிக்கடி துன்பத்துக்குள்ளாகிறார்கள். குறிப்பாக சிறுவர் சிறுமியரை இந்த நாய்கள் கடித்து குதறி வைக்கின்றன.

எனவே அந்த நாய்களைக் கொல்ல பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். நடிகர் மோகன்லாலும் மக்களின் கோரிக்கையை ஏற்று தெரு நாய்களைக் கொல்லுமாறு கேரள அரசைக் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து தெரு நாய்களை பிடித்து கூண்டோடு அழிக்க அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்கு பிராணிகள் நல அமைப்பும், பிராணிகள் நல ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மற்ற மாநிலங்களிலும் தெருநாய்களை கொல்லக் கூடாது என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை (25-ந் தேதி) பிராணிகள் நலபாதுகாப்பு அமைப்பு தெரு நாய்களை கொல்லப்படுவதை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளது. இதில் நடிகர் விஷால் கலந்து கொள்கிறார். பிராணிகள் நல ஆர்வலர்கள் பலரும் பங்கேற்கிறார்கள். நடிகை த்ரிஷாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஷால் கூறுகையில், "தெரு நாய்கள் கொல்லப்படுவதை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் உண்ணாவிரதத்தில் நானும் கலந்து கொள்கிறேன். பிராணிகளை நேசிக்கிறவன் என்ற முறையில் இதில் பங்கேற்கிறேன்.

எனக்கு நாளை படப்பிடிப்பு இருக்கிறது. ஆனாலும் சில மணி நேரங்கள் உண்ணாவிரதம் இருப்பேன். அதன்பிறகு படப்பிடிப்புக்குச் செல்வேன்.

நாய்களுக்கும் சமூகத்தில் வாழ்வதற்கு உரிமை உண்டு. அவற்றைக் கொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. கேரளாவில் பிராணிகள் மீதான குரூர நடவடிக்கையை நிறுத்தும்படி உண்ணாவிரதத்தில் கோஷங்கள் எழுப்பப்படும்," என்றார்.

இந்த உண்ணாவிரதத்தில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வழக்கெல்லாம் தீர்ந்திடுச்சாமே.. அப்போ நிஜமாகவே வரப் போகுதா வாலு?

சென்னை: சிம்பு நடித்துள்ள Vaalu - Coming Soon  

இந்த 2015 ம் ஆண்டு சிம்பு நடித்த படங்களில் எதுவும் வெளிவராதா என்ற அவரது ரசிகர்களின் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, சிம்புவின் நடிப்பில் வாலு திரைப்படம் வெளிவரும் என்று அறிவிக்கப் பட்டது.

படம் வெளிவர இருந்த நேரத்தில் இடையில் புகுந்த மேஜிக் ரேஸ் நிறுவனம் வழக்கொன்றைப் போட, படம் தடைபட்டு நின்றது.

வாலு வெளியாகாத வருத்தத்தில் ஒரு வாலிபர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூட கிளப்பிவிட்டார்கள்.

இந்த நிலையில் மேஜிக் ரேஸ் நிறுவனம் வழக்கை வாபஸ் பெறப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன, இதனால் இன்னும் 3 வாரத்துக்குள் படம் கண்டிப்பாக வெளியாகி விடும் என்று கூறுகிறார்கள்.

தேதி அறிவித்தால் கூட படம் வெளியாவதை உறுதியாகச் சொல்ல முடியாத சூழல் அல்லவா... அதனால் வெளியான பிறகுதான் உறுதியாகச் சொல்ல முடியும், வாலு விஷயத்தில்!

 

பிரபல சின்னத் திரை இயக்குநர் விடுதலை மரணம்

பிரபல சின்னத் திரை இயக்குநரும், சின்னத் திரை கலைஞர்கள் சங்க முன்னாள் தலைவருமான விடுதலை இன்று காலை சிதம்பரத்தில் காலமானார். அவருக்கு வயது 52.

எத்தனை மனிதர்கள், வார்த்தை தவறிவிட்டாய், அக்னிசாட்சி, ஆனந்தம், அவளும் பெண்தானே, குறிஞ்சி மலர் போன்ற தொடர்களை இயக்கியவர் விடுதலை.

Popular TV serial director Viduthalai died

சின்னத் திரை கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

சொந்த ஊரான சிதம்பரத்தில் இன்று காலை 6 மணிக்கு அவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.

அவரது இறுதி நிகழ்வுகள் நாளை சிதம்பரத்தில் நடக்கவிருக்கிறது.

 

குஷ்பு இனி ஜீ தமிழில் சிம்ப்ளி குஷ்பு…

ஜீ தமிழ் சேனலில் புத்தம் புதிதாக ஒரு நிகழ்ச்சியை நடத்த வருகிறார் நடிகை குஷ்பு. அது நட்சத்திரங்களை பேட்டி காணும் நிகழ்ச்சி. பரபரப்பான அரசியல்வாதி, தேசிய கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்,திரைப்பட தயாரிப்பாளர், நடிகை என பலமுகம் காட்டும் குஷ்பு, சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஜாக்பாட் தொடங்கி, தந்தி டிவியில் அச்சம் தவிர், ஜீ தமிழ் டிவியில் நம்ம வீட்டு மகாலட்சுமி, வேந்தர் டிவியில் நினைத்தாலே இனிக்கும் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் குஷ்பு. இதோடு சீரியல்களையும் எழுதி தயாரித்து வருகிறார்.

இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் உங்க மனசுக்கு பிடிச்ச ஸ்டார்ஸ் உங்க வீடுதேடி வந்து அவங்க மனசு விட்டு பேச போறாங்க., இது "...

Posted by Zee Tamil on Tuesday, July 14, 2015

புத்தம் புதிதாக ஜீ தமிழ் சேனலில் நட்சத்திரங்களை பேட்டி காண வருகிறார். பிரபல நட்சத்திரங்கள் தங்களின் பெர்சனல் பக்கங்களை பகிர்ந்து கொள்கின்றனர். நிகழ்ச்சியின் பெயர் ‘சிம்ப்ளி குஷ்பு'.

வேந்தர் டிவியில் 'நினைத்தாலே இனிக்கும்' என்ற நிகழ்ச்சியில் நட்சத்திரங்களை பேட்டி கண்டு வந்தார் குஷ்பு. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை திடீரென்று அதேபோன்ற நிகழ்ச்சியை ஜீ தமிழ் சேனலில் நடத்தப்போகிறார்.

ஆகஸ்ட் 22 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் மனசுக்கு பிடிச்ச ஸ்டார்ஸ் உங்க வீடுதேடி வந்து அவங்க மனசு விட்டு பேச போறாங்க. "SIMPLY குஷ்பூ" ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 8:00 மணிக்கு ஜீ தமிழில் காணத்தவறாதிர்கள் என்று முன்னோட்டத்தில் பேசுகிறார் குஷ்பு.

 

பாகுபலியில் சர்ச்சை வசனம்.. வருத்தம் தெரிவித்த கார்க்கி... குறிப்பிட்ட வார்த்தை நீக்க முடிவு!

பாகுபலியில் இடம் பெற்றுள்ள ஒரு வார்த்தை தங்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக ஒரு சமூகத்தினர் போராட்டத்தில் இறங்கியுள்ளதால், அந்த வார்த்தையை நீக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து படத்தின் வசனகர்த்தாவான மதன் கார்க்கி இன்று வெளியிட்ட விளக்க அறிக்கை:

பாகுபலி திரைப்படத்தின் இறுதிக் காட்சி வசனத்தில் இடம்பெற்ற ஒரு வார்த்தை சிலர் மனதைப் புண்படுத்தியதாகவும், அதனால் சில வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.

Bahubali team decides to remove a word from the climax

'என் தாயையும் தாய்நாட்டையும் எந்தப் பகடைக்குப் பிறந்தவனும் தொட முடியாது...' என்று வரும் வசனத்தில், ‘பகடைக்குப் பிறந்தவன்' என்ற வாக்கியத்தை தாயக் கட்டையால் ஆடப் படும் சூதாட்டத்தின் தோல்விக்குப் பிறந்தவன் என்ற பொருளில்தான் எழுதியிருந்தேன். அது ஒரு சமூகத்தின் பெயர் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. சாதிப் பிரிவுகள் வேண்டாம், அனைவரும் சமம் என்று இன்னொரு காட்சியில் பேசும் கதையின் நாயகன், எந்தச் சாதியையும் இழித்துப் பேச மாட்டான். இழிவு செய்வது எங்கள் நோக்கமில்லை.

படை எடுத்து வருபவர்களை எந்த இனத்தைச் சார்ந்தவர்களாகவும் காட்ட வேண்டாம் என்ற நோக்கத்தில்தான் அவர்களுக்கு என்று புதிய ஒரு மொழியை உருவாக்கினோம். யார் மனமும் புண்படக் கூடாது என்று கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டோம்.

ஒரு சமூகம் புண்படுவதற்குக் காரணமான அந்தச் சொல்லைப் படத்தில் இருந்து நீக்கிவிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். விரைவில் அந்தச் சொல் நீக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இதில் யார் மனமேனும் புண்பட்டிருந்தால் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

 

ஓவர் விலை வைத்து மக்களிடம் பணம் கறந்த 3 பாகுபலி தியேட்டர்கள்.. அதிரடி தடை!

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகுபலி படம் திரையிடப்பட்ட 3 தியேட்டர்களில் அதிக விலை வைத்து மக்களிடம் பணத்தைக் கறந்ததால் அந்தத் தியேட்டர்களை இழுத்து மூட சப் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ஒசூரில் ஐந்து தியேட்டர்கள் உள்ளன. இதில் சீனிவாசா என்ற தியேட்டர் லைசென்ஸே இல்லாமல் செயல்பட்டு வந்தது. இதையடுத்து இந்தத் தியேட்டரை சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து விட்டனர்.

Sub collector orders to shut  3 theaters in Hosur for collectiing extra fare

இதையடுத்து மற்ற நான்கு தியேட்டர்களும் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்தத் தியேட்டர்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட மிக அதிகமாக புதுப் படங்களுக்கு வசூலிப்பதாக மக்கள் குற்றண் சாட்டி வந்தனர். இதுதொடர்பாக சப் கலெக்டர் டாக்டர் செந்தில் ராஜுக்கும் புகார்கள் குவிந்தன.

இதையடுத்து சப் கலெக்டரே அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். பாகுபலி படம் திரையிடப்பட்ட ராகவேந்திரா, ஸ்ரீலட்சுமி தேவி, பாலாஜி ஆகிய தியேட்டர்களுக்கு சாதாரணமான முறையில் ஜனங்களோடு ஜனமாக போய் டிக்கெட் வாங்கினார். அப்போது 100 ரூபாய் அதிகம் வைத்து டிக்கெட் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.

இதையடுத்து 3 தியேட்டர்களிலும் படம் திரையிடுவதை நிறுத்த உத்தரவிட்டார். மேலும் இந்தத் தியேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அவர் பரிந்துரை செய்தார்.

 

பழனியிலே கலகம்... இது 'மல்லிகாக்களின்' ஆட்டோகிராப்!

ஒரு நடிகை சினிமா உலகிலும், அதற்கு வெளியிலும் என்ன பாடு படுகிறாள் என்பதை முழுமையாக யாரும் எழுதியதில்லை, சொன்னதுமில்லை.

அப்படி யாராலும் முழுமையாகச் சொல்ல முடியாத ஒன்றை படமாக எடுக்கிறார் ஒரு நடிகை. அவர் மல்லிகா. ஆட்டோகிராப் நாயகிகளில் ஒருவர்.

தமிழில் ஆட்டோகிராபில் நாயகியாக நடித்தாலும், அடுத்தடுத்து அமைந்த விஜய், அஜீத் படங்களில் அவரை தங்கை கேரக்டரில் நடிக்க வைத்து 'டீ ப்ரமோட்' செய்துவிட்டனர். அம்மணி கவர்ச்சிக்கு எப்போதுமே சிவப்புக் கொடி என்பதால் வேறு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை.

Autograph Mallika turns film director

எனவே துளு படம் ஒன்றில் நடித்தார். அது தேசிய விருதே பெற்றது. பின்னர் மலையாளத்தில் நடிக்க, உதவி இயக்குநராக வேலைப் பார்க்க ஆரம்பித்தார்.

இப்போது மலையாளத்தில் படம் இயக்கப் போகிறார். திரையுலகில் நடிகைகள் உடலளவிலும், மனதளவிலும் எந்த அளவிற்கு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதே படத்தின் கதை. சினிமாவுக்கு வெளியில் சமூக வலைத் தளங்கள், வாட்ஸ்ஆப் குழுக்களில் நடிகைகள் படும் பாட்டையும் இந்தப் படத்தில் சொல்லப் போகிறாராம்.

படத்துக்கு தலைப்பு பழனியிலே கலகம். நாயகியாக நடிக்கப் போகிறவர் பாவனா!

 

இப்ராகிம் ராவுத்தர் உடல் அடக்கம்... திரையுலகினர் அஞ்சலி

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் உடல் இன்று சாலிகிராமம் பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார் இப்ராகிம் ராவுத்தர். அவரது உடல் வடபழனி நூறடி சாலையில் உள்ள ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரையுலகினர் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Ibrahim Rawther body buried

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு, இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் விஷால், மன்சூர்அலிகான், கருணாஸ், சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ., இயக்குநர் செந்தில்நாதன், கலைப்புலி சேகரன், ஆனந்தராஜ், தயாரிப்பாளர்கள் கே.ஆர்., ஏ.எல்.அழகப்பன், முரளிதரன், கே.ராஜன், ஏ.என்.சுந்தரரேசன், சவுந்தர், கப்பார், சவுந்தர் முருகன், துரைராஜ், பெப்சி விஜயன், அருண்பாண்டியன், மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, சிங்காரவேலன் உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

பகல் 12 மணிக்கு இப்ராகிம் ராவுத்தர் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சாலி கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.

 

அரசியலில் குதிக்கிறார் சின்ன நம்பர் நடிகை?

சென்னை: சின்ன நம்பர் நடிகை அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

சின்ன நம்பர் நடிகை திருமணம் நின்ற பிறகு பட வேலைகளில் பிசியாக உள்ளார். நல்ல துணை கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் அரசியலில் குதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 32 வயதாகிவிட்டது, வயது ஆக ஆக வாய்ப்புகள் குறைந்துவிடும் என்று நினைக்கிறாராம் நடிகை. மும்பை, கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு ஏராளமான நடிகைகள் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் நம்பர் நடிகையின் கவனம் அரசியல் பக்கம் திரும்பியுள்ளதாம்.

அரசியல் பக்கம் செல்ல விரும்பும் நடிகை ஆளுங்கட்சியில் சேர முடிவு செய்துள்ளாராம். அம்மா பிள்ளையான நடிகை ஆளுங்கட்சியில் சேரலாம் என்று இருக்கிறாராம். அதிலும் சட்டசபை தேர்தலுக்கு முன்பே அவர் அந்த கட்சியில் சேரக்கூடும் என்று கூறப்படுகிறது.

நடிகைகள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

 

அஜீத் படத்தில் ஸ்ருதியின் வேடம் என்ன தெரியுமா?

சிவா இயக்கி வரும் அஜீத் படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார் ஸ்ருதி ஹாஸன். முதலில் இருவரும் அஜீத்தும் ஸ்ருதியும் கால் டாக்சி டிரைவர்களாக நடிப்பதாக செய்திகள் வந்தன.

ஆனால் ஸ்ருதி ஹாஸன் வக்கீல் வேடத்தில் தோன்றும் படம் ஒன்று நாளிதழில் வெளியாக, அவரது உண்மையான வேடம் அம்பலமானது.

இன்னும் பெயரிடப்படாத அல்லது பெயரை ரகசியமாக வைத்திருக்கும் இதன் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

Shruthi is playing lawyer role in Ajith movie

அங்குதான் ஸ்ருதிஹாசன் சம்மந்தப்பட்ட காட்சிகளை இயக்குநர் சிவா படமாக்கி வருகிறார். இதில் ஸ்ருதிஹாசன் வக்கீல் உடையில் ஓடுவது போன்ற காட்சி ஒன்றை படமாக்கியிருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தினசரியில் வெளியாகி, இப்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.

இந்தப் படத்தில் லட்சுமி மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வில்லனாக கபீர் சிங் நடித்துள்ளார். ஏ எம் ரத்னம் தயாரிக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது.

 

இந்தி திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாஸான்.. 300 அரங்குகளில் நாளை ரிலீஸ்

மும்பை: இந்தியத் திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாஸான் திரைப்படம் நாளை இந்தியா முழுவதும் சுமார் 300 திரையரங்குகளில் வெளியாகின்றது, இயக்குநர் நீரஜ் கெய்வான் இயக்கத்தில் வெளியாக இருக்கும் இந்தப் படம் ஹிந்தித் திரையுலகில் பலரின் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி இருக்கிறது.

அதே நேரம் பாக்ஸ் ஆபிசைப் பொறுத்தவரை பாகுபலி மற்றும் பஜ்ரங்கி பைஜான் போன்ற படங்களின் முன்னால் தாக்குப் பிடிக்குமா? என்ற சந்தேகமும், தற்போது படக்குழுவினருக்கு எழுந்துள்ளது.

Massan Hindi Movie

ஏனெனில் மாஸான் திரைப்படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும், பெரிதான கமர்சியல் நெடிகள் ஏதும் படத்தில் இல்லை படம் முழுவதுமே எதார்த்தமான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

தாழ்ந்த சாதியைச் சேர்ந்த வெட்டியான் ஒருவன் உயர்ந்த சாதிப் பெண்ணைக் காதலிப்பது தான் படத்தின் கதை, மாஸான் வெளியாவதற்கு முன்பே கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு 2 விருதுகளை வென்றுள்ளது.

நாளை இந்தியா முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியாகும் மாஸான் மல்ட்டிபிளக்ஸ் அரங்குகளில் மட்டுமே வெளியாக இருக்கிறது. படம் வசூலில் பெரிதாக எதுவும் சாதிக்காது ஆனால் விருதுகளைக் கண்டிப்பாக அள்ளும் என்று படத்தைப் பார்த்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

ஐஸ்வர்யா ராய்க்கும், மகளுக்கும் உடல்நலம் சரியில்லையாம்ப்பா..

மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆராத்யாவுக்கும் உடல்நலம் சரியில்லையாம்.

மகள் ஆராத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராய் படங்களில் நடிக்காமல் இருந்தார். மகளுடன் நேரம் செலவிட அவர் படங்களில் நடிக்காமல் விளம்பர படங்களில் மட்டும் நடித்து வந்தார். தற்போது ஆராத்யாவுக்கு விவரம் தெரிய ஆரம்பித்துவிட்டதால் ஐஸ்வர்யா மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.

Aishwarya Rai Bachchan and daughter Aaradhya fall ill

அவர் தற்போது ஜஸ்பா படத்தில் வழக்கறிஞராக நடித்து வருகிறார். குழந்தையையும் கவனித்துக் கொண்டு படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே கபடி லீக் போட்டிகளில் விளையாடும் கணவர் அபிஷேக் பச்சனின் அணியை ஊக்குவிக்க ஸ்டேடியத்திற்கு செல்கிறார்.

இப்படி அலைந்து கொண்டே இருப்பதால் ஐஸ்வர்யா ராயின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து அவரின் மகள் ஆராத்யாவின் உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் விரைவில் குணமாக ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.