மனுஷி படத்துக்கு மகளிர் அமைப்பு எதிர்ப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மனுஷி படத்துக்கு மகளிர் அமைப்பு எதிர்ப்பு

1/21/2011 2:26:12 PM

'மனுஷி’ பட இயக்குனர் தமிழ் பிரபு கூறியது:  ஆசை வார்த்தை கூறி பெண்களை ஏமாற்றுபவர்கள் அதிகரித்துவிட்டனர். அப்படி கைவிடப்பட்ட ஒரு பெண், பாலியல் தொழிலாளியாகி வாழ்க்கையை இழந்த கதையே ‘மனுஷி’. அந்தியூர் அடுத்துள்ள வெள்ளிதிருப்பூரில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை. தீபக், ஸ்ரீதேவி நடிக்கின்றனர். ஓசூர் பகுதியில் நண்பர் வீட்டுக்கு சென்றபோது ஸ்ரீதேவியை பார்த்தேன். கதைக்கு பொருத்தமாக இருந்தார். நடிக்க கேட்டபோது மறுத்தார். வற்புறுத்தலுக்கு பிறகு சம்மதித்தார். கோபிசெட்டிப்பாளையம் சுற்றியுள்ள பகுதியில் ஷூட்டிங் நடந்தது. பாலியல் தொழிலாளியாக ஸ்ரீதேவி நடிப்பதற்கு அப்பகுதியில் உள்ள மகளிர் அமைப்பை சேர்ந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் கதையை கூறியபிறகு ஒப்புக்கொண்டனர்.


Source: Dinakaran
 

கிசு கிசு -அடிக்கடி வெளிநாடு பறக்கும் நடிகை

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

அடிக்கடி வெளிநாடு பறக்கும் நடிகை

1/21/2011 2:30:54 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

மகளை டாப் லிஸ்ட்ல கொண்டு வர ராத நடிகை தீவிரமா இருக்காராம்… இருக்காராம்… தன்னோட பேரையும் வாரிசு பேரையும் சேர்த்து ரசிகர் மன்ற பேனரை வச்சி, இண்டஸ்ட்ரி கவனத்தை கவர முயற்சிக்கிறாராம்… முயற்சிக்கிறாராம்… அதைப் பார்த்தவங்க, 'இனிமேதான் படமே ரிலீஸ் ஆகப்போகுது. அதுக்குள்ள ரசிகர் மன்றம¢னு பில்டப் பண்றாரேÕனு ஆச்சரியப்படுறாங்களாம்…
ஆச்சரியப்படுறாங்களாம்…

மழை நடிகை திடீர் திடீர்னு வெளிநாட்டு ட்ரிப்னு சொல்லி, லண்டன் போகுறாராம்… போகுறாராம்… கேட்டா, Ôஷூட்டிங் இல்லாதப்போ ஊர் சுத்தப் போறேன். இது தப்பாÕனு பதிலுக்கு கேட்கிறாராம்… கேட்கிறாராம்… வெளிநாட்டுல உறவினரோட பிசினஸ்ல நடிகைக்கும் பங்கு இருக்காம். அதை கவனிக்கத்தான¢ அடிக்கடி லண்டனுக்கு போறாராம்… போறாராம்…

காமெடி நடிகைகளுக்கு தமிழ்ல திரும்ப பஞ்சம் ஏற்பட்டிருக்காம்… ஏற்பட்டிருக்காம்… அதனால சீரியல்ல நடிக்கிற நடிகைங்க, சினிமால காமெடி இடத்தை பிடிக்க ட்ரை பண்றாங்களாம்… பண்றாங்களாம்… இதுக்காக தெரிஞ்ச காமெடியன்கள்கிட்ட, சிபாரிசு பண்ணச் சொல்லி கேட்கிறாங்களாம்… கேட்கிறாங்களாம்…


Source: Dinakaran
 

எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன்

1/21/2011 12:49:17 PM

அரசியலில் குதிக்கும் எண்ணம் இப்போது இல்லை என்று நடிகர் விஜய் கூறினார். சென்னையில், 'வேலாயுதம்' படப்பிடிப்பில் இருந்த விஜய், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பல பிரச்னைகளுக்குப் பிறகு 'காவலன்' படம் வெளியாகி வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன் எனது சில படங்கள் வெளியாகும்போது பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறது, அதை நான் சரி செய்திருக்கிறேன். ஆனால் 'காவலன்' படத்துக்கு புதிதாக பல பிரச்னைகள் உருவானது. அது எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் தவித்தேன். படத்துக்கு மக்கள் அளித்திருக்கும் வரவேற்பால் அந்த கவலை மறந்து சந்தோஷமாக இருக்கிறது.

நான் அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா? என்ற செய்தி அடிக்கடி மீடியாவில் வெளிவந்து கொண்டிருக்கிறது. நான் தெளிவாகச் சொல்கிறேன். நான் நடிகன் ஆனேன். ஆனால் இவ்வளவு பெரிய உயரத்தில் மக்கள் என்னை அமர வைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. என்னை உயர்த்திப் பார்த்த மக்களுக்கு நானும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். அரசியலுக்கு வரும் சூழ்நிலை இன்னும் வரவில்லை. அதற்கு முக்கியமான காரணம், இப்போது என் கவனம் சினிமாவில்தான் இருக்கிறது. இனி ஒரு ஆக்ஷன் படம், ஒரு கதையம்சமுள்ள படம் என்று மாறி மாறி நடிக்க முடிவு செய்திருக்கிறேன். வரும் தேர்தலில் எந்த கட்சிக்கு பிரசாரம் செய்வீர்கள் என்று கேட்கிறார்கள். நான் அரசியலுக்கு வருவது பற்றியே முடிவு செய்யாதபோது, அந்த கேள்விக்கே இடம் இல்லை.

எனது தந்தை ஜெயலலிதாவை சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. எனக்கு ராகுலை சந்திக்க அரிய வாய்ப்பு கிடைத்ததைபோல ஜெயலலிதாவை சந்திக்க, அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு நல்ல சந்திப்பு. அவ்வளவுதான். ஷங்கர் படத்தில் நடிக்க வேண்டுமென்றால் அவருக்கு தேவையானபடி நான் மாற வேண்டும். இப்போதைக்கு நான் வேறு சில படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அது இயலாத காரியம். அதனால் '3 இடியட்ஸ்' படத்தில் நடிக்க முடியவில்லை. அதற்கும் வேறு காரணம் கற்பிப்பது தவறு. திருச்சியில் நடக்க உத்தேசித்திருக்கும் ரசிகர் மன்ற மாநாடு குறித்தும் இதுவரை முடிவெடுக்கவில்லை என்றார்.





Source: Dinakaran
 

பிஸி என ஏமாற்றுவது பிடிக்காது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிஸி என ஏமாற்றுவது பிடிக்காது

1/21/2011 2:29:18 PM

'ஆயிரத்தில் ஒருவன்Õ படத்தையடுத்து 'இரண்டாம் உலகம்Õ படத்தில் நடிக்கிறார் ஆண்ட்ரியா. அவர் கூறியது: நடிகைகள் 24 மணி நேரமும் தனது அழகை பேணுவதிலேயே கவனமாக இருப்பார்கள் என்று சொல்வதுண்டு. என்னைப் பொறுத்தவரை எந்நேரமும் மேக்கப்பில் இருக்க வேண்டும் என எண்ணியதில்லை. எப்போது கேட்டாலும் நான் ரொம்ப பிஸி என சிலர் சொல்வதுண்டு. பிஸி என்ற போலி முகமூடியை நான் அணிவதில்லை. ஒரு நடிகையாக, பாடகியாக இருப்பதால் எனது பெரும்பாலான நேரம் ஏர்போர்ட்டிலேயே காத்திருந்து கழிகிறது. ஆனாலும் நான் பிஸியானவள் கிடையாது. பேஸ்புக், இன்டர்நெட் என்று பொழுதை கழிக்க மாட்டேன். அவ்வப்போது எனக்கு வரும் மெயில் மட்டும் பார்த்துக் கொள்வேன். செல்வராகவன் திருமணம் செய்ய உள்ளதை பற்றி கேட்கிறார்கள். அது பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.


Source: Dinakaran
 

‘யுத்தம் செய்’ படத்தின் சிறப்பு காட்சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
‘யுத்தம் செய்’ படத்தின் சிறப்பு காட்சி
1/20/2011 2:43:30 PM
மிஷ்கின் இயக்கத்தில் சேரன், தீபா ஷா நடிக்கும் படம் 'யுத்தம் செய்'. சேரன் சி.பி.ஐ அதிகாரியாக நடிக்கிறார். முன்னதாக, சி.பி.ஐ அதிகாரியின் அணுகுமுறை, நடை, உடை, பாவனைகளை சேரனுக்கு சொல்லிக்கொடுத்த அவர், டெஸ்ட் ஷூட்டிங்கும் நடத்தி உள்ளாராம். இந்நிலையில் ‘யுத்தம் செய்’ படத்தின் சிறப்பு காட்சியை திரையுலக நண்பர்களுக்கு நேற்று முன்தினம் திரையிட்டு காண்பித்துள்ளார் மிஷ்கின்.


Source: Dinakaran
 

ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?
1/20/2011 12:19:10 PM
தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கருவாக வைத்து புதிய படத்துக்கான கதையை உருவாக்கியிருக்கிறார் மணிரத்னம். இந்த படத்தை மணிரத்னம் தயாரிக்க, அவரது அசிஸ்டென்ட் சிவா இயக்க உள்ளார். இந்நிலையில் மணிரத்னம் அடுத்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்குகிறார். ச‌ரித்திர கதையான இதன் திரைக்கதையை எழுதுவதில் மணிரத்னத்துடன் இணைந்திருப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன்.
ஆனால் படத்தின் இசையமைப்பாளரை மட்டும் மாற்ற மணிரத்னம் முடிவு செய்திருப்பதாக தெ‌ரிவிக்கிறார்கள். அந்த அதிர்ஷ்ட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்கிறது கோலிவுட் வட்டாராம். இளையராஜாவிற்கு பிறகு ஏ.ஆர்.ரகுமானை தன்னுடைய படத்தில் இசையமைக்க வைத்து மணிரத்னம், ரகுமான் பிசியாக இருப்பதால் யுவனிடம் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிகிறது.


Source: Dinakaran
 

'ரவுத்திரம்' பட ஷூட்டிங் 50சதவீதம் முடிந்தது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ரவுத்திரம்' பட ஷூட்டிங் 50 சதவீதம் முடிந்தது
1/20/2011 2:47:04 PM
ஜீவா நடிக்கும் ரவுத்திரம் படத்தின் இரண்டாம் ஷெட்யூல் ஒரு வழியாக தொடங்கியுள்ளது. ஸ்ரேயாவால் இரண்டாவது ஷெட்யூல் தாமதமாகி வந்தது. சிக்கு புக்கு, தெலுங்கு டான் சீனு படங்களின் ஷூட்டிங்கிற்காக வெளிநாடுகளுக்கு பறந்துவிட்டதால் ரவுத்திரம் படப்பிடிப்பில் ஸ்ரேயா பங்கேற்கவில்லை. அவர் இல்லாமலேயே முதல் ஷெட்யூலை முடித்தனர். இரண்டாம் ஷெட்யூலுக்காக அவரிடம் பட யூனிட் தேதி கேட்டபோது, குக்கிங் வித் ஸ்டெல்லா ஆங்கில படத்தின் புரமோஷனுக்காக வெளிநாடு சென்றுவிட்டாராம் ஸ்ரேயா. இதனால் ஸ்ரேயாவுக்காக யூனிட் காத்திருந்தது. இப்போது ஒரு வழியாக அவர் ரவுத்திரம் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கியிருக்கிறார். ެ¶, ஜீவா, ஸ்ரேயா நடிக்கும் Ôரவுத்திரம்Õ பட ஷூட்டிங் 50 சதவீதம் முடிந்துவிட்டது.


Source: Dinakaran
 

ஏப்ரலில் அவன் இவன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஏப்ரலில் அவன் இவன்

1/20/2011 12:26:41 PM

பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிக்கும் 'அவன் இவன்' படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது. தொடர்ந்து குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. படம் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் விரைவாக போஸ்ட் புரொட‌க்சன் வேலைகளை முடித்து ஏப்ரலில் அதாவது தமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் பாலா. பொதுவாக பாலா படம் என்றால் வருடக்கணக்கில் படப்பிடிப்பு நடக்கும். இந்த தாமதத்தை பாலாவின் குரு பாலுமகேந்திரா உள்பட பலரும் சுட்டிக் காட்டியதன் விளைவு, தனது அவன் இவன் படத்தை ஆறு மாதத்தில் முடிப்பதாக பாலா அறிவித்தார். ஆனால் ஆறு மாதம் கடந்துவிட்டது. என்றாலும் மற்ற‌‌ப் படங்களுடன் ஒப்பிடுகையில் மிக விரைவாக அவன் இவன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வரும் ஏப்ரலில் படத்தை வெளியிட முடியும் என்ற நம்பிக்கை தயா‌ரிப்பாளருக்கு ஏற்பட்டுள்ளதால் பட ‌ரிலீசுக்கான வேலைகளை இப்போதே தொடங்கியுள்ளனர்.


Source: Dinakaran
 

ஆடுகளத்தை வியந்து பார்த்த ர‌ஜினி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆடுகளத்தை வியந்து பார்த்த ர‌ஜினி!

1/20/2011 11:48:50 AM

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் தனுஷின் ஆடுகளம் பொங்கலுக்கு வெளியாகி உலக முழுவதும் வெற்றி நடை போடுகிறது. பொல்லாதவன் படத்தை இயக்கிய வெற்றிமாறனின் படைப்பு என்பதால் அனைத்து தரப்பினரும் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது எதிர்பார்ப்புகளை எல்லா வகை ரசிகர்க¬யும் திருப்தி செய்யும் வகையில் அசத்தியுள்ளார் வெற்றிமாறன். தன்னை முன்னணி இயக்குனர்களின் பட்டியல் சேர்க்கும் அளவிற்கு அவரது திரைக்கதை அமைந்துள்ளது.

ஆடுகளம் டீம்மிற்கு பொங்கல் போனஸாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளாராம். ஆடுகளத்தைப் பார்த்து வியந்தவர்களில் ர‌ஜினியும் ஒருவர். படம் பார்த்துவிட்டு பட யூனிட்டை வெகுவாக‌ப் பாராட்டினார் சூப்பர் ஸ்டார். குறிப்பாக இயக்குனர் வெற்றிமாறனை. இதில் விசேஷம், ஆடுகளத்தை இரண்டாவது முறையும் பார்த்திருக்கிறார். படத்தின் மேக்கிங் அவரை கவர்ந்ததே இதற்கு காரணம் என்கிறார்கள்.

மதுரை பின்னணியில் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன். தனுஷுடன் கவிஞர் வஐசா ஜெயபாலன், சம்பத் ஆகியோரும் நடித்துள்ளனர். டெல்லி மாடல் டாப்ஸி ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

ஆடுகளத்தைப் பற்றி தனுஷ் குறிப்பிடுகையில், என்னுடைய சினிமா கே‌ரிய‌ரில் பெஸ்ட் ஃபிலிம், நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறேன். படம் பார்க்கும் போது நீங்களும் அதை உணர்ந்து கொள்வீர்கள் என்றார்.


Source: Dinakaran
 

மலையாளத்திலும்,கன்னடத்திலும் நான் தான் நம்பர்.1!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மலையாளத்திலும், கன்னடத்திலும் நான் தான் நம்பர்.1!

1/20/2011 12:02:11 PM

தமிழில் சில படங்கள் கைகொடுக்காவிட்டாலும், மலையாளத்திலும், கன்னடத்திலும் பட்டையை கிளிப்பி வருகிறார் பாவனா. மலையாளத்தில் பாவனா நடித்த ஹேப்பி ஹஸ்ப‌ண்ட்ஸ், மே‌ரிக்குண்டொரு குஞ்ஞாடு, பம்பர் ஹிட். இதனால் மலையாளத்தில் நெ.ஒன் கி‌‌ரீடம் பாவனாவின் தலையில். கன்னடத்தில் பாவனா நடித்த ஜாக்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அவரது முதல் கன்னடப் படம். வெற்றிகள் வெளி மாநிலத்தில் தொடர்ந்தாலும் தமிழும், தெலுங்கும்தான் என்னுடைய இலக்கு என்கிறார் பாவனா.


Source: Dinakaran
 

அதர்வா நடிக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அதர்வா நடிக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள்

1/20/2011 12:32:57 PM

பாணா காத்தாடி படத்தில் அறிமுகமான அதர்வா, அவரது தந்தை மறைவுக்கு பிறகு ஒப்பந்தமான முதல் படம் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்'. படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் இயக்குகிறார். முதல் படத்திலேயே நடிப்பில் முத்திரைப் பதித்த அதர்வா இந்தப் படம் தன்னை தமிழகமெங்கும் கொண்டு சேர்க்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். முதல் படத்திலேயே நடிப்பில் முத்திரைப் பதித்த அதர்வா இந்தப் படம் தன்னை தமிழகமெங்கும் கொண்டு சேர்க்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்.





Source: Dinakaran
 

தங்கைக்கு காஜல் சிபாரிசு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தங்கைக்கு காஜல் சிபாரிசு

1/20/2011 2:24:38 PM

'மோதி விளையாடு’, 'நான் மகான் அல்ல’ படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் தெலுங்கிலும் பந்தய குதிரையாக ஓடிக் கொண்டிருக்கிறார். இவரது தங்கை நிஷா அகர்வால். மும்பையில் பணிபுரிந்து வந்தார். பத்திரிகை ஒன்றில் அட்டை படமாக நிஷாவின் போட்டோ வந்ததும் தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டார். தற்போது தமிழ் பக்கம் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார். அதற்கு அக்கா காஜலின் ஆதரவும் முழுமையாக கிடைத்திருக்கிறது. தன்னிடம் கால்ஷீட் கேட்டு வரும் தயாரிப்புகளிடம் கால்ஷீட் இல்லை என்று கூறாமல் அருகில் இருக்கும் தங்கையை காட்டி, 'இவருக்கு இந்த கதை பொருத்தமாக இருக்கும். அவளிடம் கதை சொல்லுங்கள்Õ என்று வாய்ப்புகளை திருப்பி விடுகிறாராம் காஜல். கூடியவிரைவில் நிஷா அகர்வால் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்க வருவார் என்கிறது கோலிவுட் வட்டாராம்.


Source: Dinakaran
 

கிசு கிசு -நடிகரின் புது நண்பி

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

நடிகரின் புது நண்பி

1/20/2011 2:29:07 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

ஜ காட் நடிகரோட புது நண்பி, அவரோடு நடிக்கிற புதுமுகம்தானாம்… புதுமுகம்தானாம்… மில்க் இயக்குனர் படத்துலதான் ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறாங்க. ஆஃப் ஸ்கிரீன்லே ரெண்டு பேரோட கெம¤ஸ்ட்ரியும் சூப்பரா இருக்குன்னு யூனிட்ல பேசிக்கிறாங்களாம்… பேசிக்கிறாங்களாம்…

பிரகாச வில்லன் நடிகரு, புதுசா இன்னொரு தயாரிப்பு கம்பெனி தொடங்கப் போறாராம்… தொடங்கப் போறாராம்… இதுக்கு உதவியா இருக்கப்போவது நடிகருக்கு புதுசா கிடைச்சிருக்கிற என்ஆர்ஐ நண்பராம்… நண்பராம்… அந்த நண்பரை வச்சி, கன்னடத்துலேயும் படங்களை தயாரிக்க நடிகரு திட்டம்
போட்டிருக்கிறாராம்… போட்டிருக்கிறாராம்…

அஞ்சாத ஹீரோ நடிகருக்கு வாய்ப்புகள் வருதாம்… வருதாம்… ஆனா, நடிகரு அதை ஏற்க மறுக்கிறாராம்… மறுக்கிறாராம்… காரணம், எல்லாமே செகண்ட் ஹீரோ வாய்ப்புகளாம். நடிச்சா, சோலோதான்னு நடிகரு பிடிவாதம் பிடிக்கிறாராம்… பிடிக்கிறாராம்…


Source: Dinakaran
 

ஜந்தே நாளில் முழு பட ஷூட்டிங்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஜந்தே நாளில் முழு பட ஷூட்டிங்

1/20/2011 2:27:45 PM

ஐந்தே நாட்களில் முழு பட ஷூட்டிங்கையும் நடத்த¤ முடிக்க திட்டமிட¢டுள்ளார் ராம் கோபால் வர்மா. குறைந்த பட்ஜெட்டில் குறைந்த நாட்களில் படத்தை எடுப்பதுதான் வர்மாவின் ஸ்டைல். இம்முறை மிகக் குறைந்த நாட்களாக வெறும் 5 நாட்களில் படத்தை எடுத்து முடிக்க உள்ளார். Ôடான்கலா முதாÕ என்ற பெயரில் தெலுங்கில் இப்படத்தை அவர் உருவாக்குகிறார். ரவிதேஜா, சார்மி உட்பட மேலும் சிலர் நடிக்கின்றனர்.
இது பற்றி ராம் கோபால் வர்மா கூறும்போது, ÔÔஇது நிஜமாகவே ஒரு வித்தியாசமான படம். அதனால்தான் குறைந்த நாளில் முழு பட ஷூட்டிங்கையும் நடத¢தி முடிக்கிறேன். பிப்ரவரி 11ம் தேதி ஷூட்டிங் தொடங்கும். 15ம் தேதி முடிந்துவிடும். இதில் சம்பளம் இல்லாமல் அனைவரும் நடிக்கிறார்கள். மொத்தம் 8 பேர்தான் டெக்னீஷியன்கள். இது போன்ற ஒரு புதுமையை யாரும் செய¢ததில்லை. விளம்பரத்துக்காக இதை செய¢யவில்லை. படத்தின் கதை அப்படிÕÕ என்றார்.


Source: Dinakaran
 

டப்பிங் பேச திணறிய நடிகர்கள் இயக்குனர் தவிப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

டப்பிங் பேச திணறிய நடிகர்கள் இயக்குனர் தவிப்பு

1/20/2011 2:32:41 PM

Ôகள்வனின் காதலிÕ, Ôமச்சக்காரன்Õ படங்களை இயக்கியவர் தமிழ்வாணன். அகில், சனுஷா நடிக்கும் Ôநந்திÕ படத்தை இயக்கி வருகிறார். அவர்
கூறியது: ராமநாதபுரம் அருகே கலையனூர் கிராமத்தில் இப்பட ஷூட்டிங் நடந்தது. கதைப்படி, இந்த ஊரில் முக்கிய புள்ளியாக இருக்கிறார் வில்லன் நித்தேஷ். ஊருக்கு வேலைக்கு வரும் அகில், சனுஷாவை காதலிக்கிறார். இந்த காதலுக்கு நித்தேஷ் தடையாக இருக்கிறார். இத்துடன் கிராமத்தில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் பின்னணியாகக் கொண்டு கதை அமைத்துள்ளேன். இதில் 25 துணை நடிகர்கள் தேவைப்பட்டார்கள். அதற்காக கலையனூர் கிராமத்திலும் சுற்றியுள்ள மற்ற கிராமங்களையும் சேர்ந்த 25 பேரை தேர்வு செய்தேன். அவர்களை நடிக்க வைப்பதில் பெரிய சிரமம் இல்லை. காரணம், யதார்த்தமாக வசனம் பேசச் சொன்னேன். அதை சரியாக செய்துவிட்டார்கள். ஆனால் டப்பிங் பேச வைப்பதற்குள் படாத பாடு பட்டேன். டப்பிங் கலைஞர்களை பேச வைத¢தால், கிராமத்து பாஷையும் யதார்த்தமும் அடிபட்டு போகும். அதனால் அவர்களையே பேச வைப்பதில் தீர¢மானமாக இருந்தேன். அவர்களின் லிப் மூவ்மென்ட்டுக்கு ஏற்றது போல் அவர்களால் டப்பிங் பேச முடியாமல் திணறினர். உதவி இயக்குனர்களை வைத்து பயிற்சி கொடுத்தேன். அதற்கே மூன்று நாட்கள் செலவிட்டோம். அதன் பின் ஒரு வழியாக டப்பிங் பேச வைத்து விட்டேன்.


Source: Dinakaran