தற்காலிக கிளாமர் நல்லது :டாப்ஸி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தற்காலிக கிளாமர் நல்லது : டாப்ஸி

3/7/2011 12:41:45 PM

'ஆடுகளம்' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த டாப்ஸி, தெலுங்கில் கிளாமராக நடித்து வருகிறார். இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது: அதிகமான ரசிகர்களிடம் நம்மை கொண்டு செல்வது கிளாமர் என்பது உண்மைதான். ஆனால், நடிப்பும் கிளாமரும் வெவ்வேறுவிதமானது. ரசிகர்களிடம் அதிகமாக பிரபலமானால்தான் வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் இன்று இருக்கிறது. அவர்களின் ஆதரவை பெற்றால்தான் சினிமாவில் நிலைக்க முடியும். பிரபலமாகவில்லை என்றால் என்னதான் கிளாமராக நடித்தாலும் அது வீண்தான். சினிமாவில் நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. அதற்குள் என்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். இது எனது ஆரம்பகட்டம். அதனால் கிளாமராக நடிப்பதில் தவறில்லை. ஆனால், இந்த கிளாமர் தற்காலிகமானதுதான். அனைத்துவிதமான கேரக்டர்களிலும் நடித்துவிட்டு, பின்னர் விருதுக்கான படங்களில் நடிப்பேன்.
இவ்வாறு டாப்ஸி கூறினார்.


Source: Dinakaran
 

மகளிர் தினத்துக்காக ஜெனிலியா இசை நிகழ்ச்சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மகளிர் தினத்துக்காக ஜெனிலியா இசை நிகழ்ச்சி

3/7/2011 12:43:31 PM

மகளிர் தினத்தை முன்னிட்டு மும்பையில் நாளை இரவு, ராக் இசை நிகழ்ச்சியை தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நடத்துகிறார் ஜெனிலியா.
இதுபற்றி ஜெனிலியா கூறியதாவது: இப்படியொரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. பெண்களுக்கான சக்தியையும், திறமையையும் எப்போதும் மதிப்பவள் நான். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படிப்பறிவு பெற்றால் அந்த மொத்த குடும்பமும் பிரகாசமாக இருக்கும். இது கண்கூடு. பெண்களை கல்வி ரீதியாக, பொருளாதார ரீதியாக முன்னெடுக்க இப்படியொரு நிகழ்ச்சியில் என்னை இணைத்துள்ளேன். இதற்கு அனைவரது ஆதரவும் வேண்டும். நடிகை என்பதை தாண்டி இது போலான நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு ஜெனிலியா கூறினார்.
 


Source: Dinakaran
 

ஏப்ரல் மாதம் ‘கோ’ ரிலீஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஏப்ரல் மாதம் 'கோ' ரிலீஸ்

3/7/2011 12:45:58 PM

கே.வி.ஆனந்த் இயக்கும் 'மாற்றான்' படத்தில் சூர்யா 5 வேடங்களில் நடிக்கிறார். இதுபற்றி கே.வி.ஆனந்த்திடம் கேட்டபோது கூறியதாவது: நான் இயக்கியுள்ள 'கோ' படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணி நடந்து வருகிறது. வரும் 23ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தோம். தேர்தல் வர இருப்பதால் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும். இதில், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை நடிக்க வைத்தது ஏன் என்கிறார்கள். ஒரு விழாவில் சினிமா பிரபலங்கள் கலந்துகொள்வது போலான காட்சி அது. அதில் கலந்துகொள்ள வேண்டும் என்றதும் முதலில் ஹாரிஸ் மறுத்தார். பிறகு சம்மதிக்க வைத்தோம். சில வரிகளை பாடுவதுபோல் படமாக்கியுள்ளோம். நான் அடுத்து இயக்கும் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன. அதில் எதுவும் உண்மையில்லை. இந்த படத்தில் சூர்யா, 5 கேரக்டரில் நடிக்கிறார். மற்ற விஷயங்களை 'கோ' ரிலீசுக்குப் பிறகு சொல்கிறேன். இவ்வாறு கே.வி. ஆனந்த் கூறினார்.


Source: Dinakaran
 

கதையில் ஹீரோ தலையிடலாம் :விஷ்ணு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கதையில் ஹீரோ தலையிடலாம் : விஷ்ணு

3/7/2011 12:50:17 PM

விஷ்ணு கூறியது: யதார்த்தமான கேரக்டரில்தான் Ôவெண்ணிலா கபடி குழுÕவில் நடித்தேன். அடுத்து நடித்த 'பலே பாண்டியாÕ, 'துரோகிÕ படங்களில் காமெடி, ஆக்ஷன் கலந்து நடித்தேன். 'யதார்த்த ஹீரோவிலிருந்து மாறியதற்கு காரணம் ஆக்ஷன் ஹீரோ ஆசையா?Õ என்கிறார்கள். இல்லை. ஒரே சாயல் வேடங்களில் நடித்தால் இதுதவிர வேறு கேரக்டருக்கு லாயக்கு இல்லை என்று எண்ணிவிடக் கூடாது என்பதால்தான் அடுத்தடுத்த ஸ்கிரிப்டை தேர்வு செய்தேன். இப்போது 'குள்ளநரிக் கூட்டம்Õ படத்தில் நடிக்கிறேன். சுசீந்திரனுடன் வெ.க.குழுவில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீபாலாஜி இயக்குகிறார். நடுத்தர மக்களின் யதார்த்தமான வாழ்க்கையை மையமாக கொண்ட கதை. இதையடுத்து சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளேன். சமமான ரோல் என்ற பட்சத்தில் இரண்டு ஹீரோ படங்களில் நடிப்பதிலும் ஆட்சேபனை இல்லை. பொதுவாக ஹீரோக்கள் கதை விவாதத்தில் பங்கேற்பது பற்றி இருவித கருத்து நிலவுகிறது. ஒரு ஹீரோ தன்னுடைய முழு பொறுப்பையும் டைரக்டரிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் அதில் நடிக்கிறார். அந்த படத்தின் வெற்றியை பொறுத்தே இருவருக்கும் பெயர் கிடைக்கிறது. இயக்குனர் விருப்பப்பட்டால் ஹீரோவும் கதை விவாதத்தில் பங்கேற்பதில் தவறில்லை.


Source: Dinakaran
 

த்ரிஷா கல்யாணம்: ஆந்திர தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது?

http://meenakam.com/newsnet/wp-content/uploads/2011/02/actress_trisha_krishnan_stills_4.jpg
த்ரிஷாவுக்கு தீவிரமாக மாப்பிள்ளை வேட்டையில் இறங்கியுள்ளார் அவரது தாயார் உமா கிருஷ்ணன். இந்நிலையில் அவரது திருமணம் ‌குறித்து தினம் ஒரு வதந்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதை த்ரிஷாவும், அவரது தயாரும் மறுத்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் த்ரிஷாவுக்கு திருமணமாகி, குழந்தை இருக்கிறது என்று செய்திகள் வந்தது. இதற்கு த்ரிஷா மிகுந்த கோபத்துடன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் மீண்டும் ஒரு வதந்தி பரவத் தொடங்கியுள்ளது. ஆந்திர தொழிலதிபர் ஒருவருடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், தற்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று த்ரிஷா முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் பரவத்தொடங்கியுள்ளது. இந்தமுறை இந்த வதந்தி கிளம்பி இருப்பது தமிழ்நாட்டில் அல்ல ஆந்திராவில்.

தற்போது ஐதராபாத் சென்றுள்ள த்ரிஷா விவல் கம்பெனியின் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருக்கிறார். த்ரிஷா ஏற்கனவே இந்த கம்பெனியின் விளம்பர தூதராக இருக்கிறார். இந்நிலையில் இந்த வதந்தி குறித்து அவரிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை காரணம், இதுபோன்ற வதந்திகளுக்கு தேவையில்லாமல் விளக்கம் கொடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அவரது தாயார் உமா கிருஷ்ணன்.