ஏர்போர்ட்டில் செலினா 11 மணி நேரம் தவிப்பு

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
ஏர்போர்ட்டில் செலினா 11 மணி நேரம் தவிப்பு

7/6/2011 4:38:57 PM

கொழும்பு விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு சிறிய அறையில் நடிகை செலினா ஜெட்லி 11 மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டார். பிரபல இந்தி நடிகை செலினா ஜெட்லி. தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா வேடத்தில் ஸ்ரீமதி என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு மாலத்தீவில் நடந்தது. அங்கிருந்து மும்பை திரும்ப இலங்கை வழியாக இணைப்பு விமானத்தில் செலினா மற்றும் படப்பிடிப்பு குழுவினர் வந்தனர். கொழும்பு விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த இணைப்பு விமானம் தாமதமானது. அவர்கள் அனைவரும் விமான நிலைய வளாகத்தில் இருந்த சிறிய அறையில் தங்க வைக்கப்பட்டனர்.

விமானம் வரும் வரை அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பதற்கு பதிலாக, சிறிது நேரம் வெளியே சென்று வர விரும்பினார் செலினா. ஆனால், இலங்கை விமான நிலைய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இலங்கை விசா அவரிடம் இல்லாததால் வெளியே விடமுடியாது என்று கூறினர். அறையை விட்டு வெளியே வருவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் கூறி அவரை அறைக்குள் முடக்கினர். சுமார் 11 மணி நேரம் சிறிய அறையில் முடங்கியிருந்தது மிகவும் அசவுகரியமாக இருந்ததாக செலினா கூறியுள்ளார்.




 

கிசு கிசு - பார்ட்டியில் அதிர வைத்த ஜோடி

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

பார்ட்டியில் அதிர வைத்த ஜோடி

7/6/2011 4:36:25 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

அம்மா ரோல்னா சரண நடிகையைத்தான் இயக்குனருங்க தேடுறாங்களாம்… தேடுறாங்களாம்… இதை பார்த்து மத்த அம்மா நடிகைங்க புலம்புறாங்களாம்… புலம்புறாங்களாம்… நாங்களும் அம்மா ரோலுக்கு ரெடியாத்தான் இருக்கிறோம்னு டைரக்டர்களை பார்க்கும்போது அந்த நடிகைங்க சொல்றாங்களாம். Ôஅடிக்கடி சினிமா விழாக்களுக்கு வாங்க. அப்போத்தான் உங்களையும் ஞாபகத்துல வச்சிக்க முடியும்Õனு  நாட்டாமை இயக்கம் அம்மா நடிகைகளுக்கு அட்வைஸ் பண்றாராம்…
பண்றாராம்…

ஜெயமான ஹீரோ அந்த படத்தோட கேரக்டருக்காக தாடி வளர்த்திருக்காரு. யாராவது விழாக்களுக்கு வாங்கன்னு கூப்பிட்டா ரொம்ப யோசிக்கிறாராம்… யோசிக்கிறாராம்… படத்தை இயக்குற பஞ்சுவீர டைரக்டருக்கு பயப்படுறாராம்… பயப்படுறாராம்… இந்த கெட்அப்ல விழாக்களுக்கு போக வேணாம்னு  டைரக்டரு கண்டிஷன் போடுறதாலதான் இந்த பயமாம்… பயமாம்…

இளைஞன் இளைஞி பட ஹீரோயினுக்கும் அப்பட ஹீரோவான காதல் நடிகருக்கும் லவ் பத்திக்கிட்டு எரியுதாம்… எரியுதாம்… சமீபத்துல நடந்த நைட் பார்ட்டிக்கு ரெண்டு பேரும் ஒண்ணா வந்து கோடம்பாக்கத்து ஆட்களை அதிர வச்சாங்களாம்… வச்சாங்களாம்…

 

கல்யாணத்துக்கு ரெடியாகிறார் ஜெனிலியா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கல்யாணத்துக்கு ரெடியாகிறார் ஜெனிலியா?

7/6/2011 4:31:41 PM

இந்தியில் ஜான் ஆப்ரகாமுடன் 'ஃபோர்ஸ்Õ, அபிஷேக் பச்சனுடன் 'போல் பச்சன்Õ ஆகிய 2 படங்களிலும் தமிழில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் ஜெனிலியா. டோலிவுட்டில் படம் இல்லை. இதையடுத்து இவருக்கு கெட்டிமேளம் கொட்ட குடும்பத்தினர் முடிவு செய்திருக்கிறார்களாம். காதலன் ரிதேஷ் தேஷ்முக்குடன் இவரது நெருக்கம் அதிகரித்து விட்டதே இதற்கு காரணம். வெளி உலகுக்கு தெரியாமல் ரகசியமாக சுற்றித்திரிந்த இந்த ஜோடி, இப்போது காதலை வெளிப்படை யாக அரங்கேற்ற தொடங்கி விட்டனர். டொரன்டோவில் சமீபத்தில் நடந்த பட விழாவில் ரித்தேஷ்-ஜெனிலியா ஜோடி பற்றிதான் சினிமா உலகில் பேச்சாக இருக¢கிறது. விழாவுக்கு கை கோர்த்துக்கொண்டு ஜோடியாக வந்தவர்கள், அருகருகே அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டபடி இருந்தனர். ஜெனிலியாவின் அம்மாவும் இவர்களின் அருகே அமர்ந்து காதலுக்கு பச்சை கொடி காட்டிக்கொண்டிருந்தாராம். இது மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்தியில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துவரும் ஜெனிலியா, விரைவில் நடிப்புக்கு முழுக்கு போட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இவர்கள் திருமணம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

 

குடிசை ஜெயபாரதியின் குழந்தை கடத்தல் படம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

குடிசை ஜெயபாரதியின் குழந்தை கடத்தல் படம்

7/6/2011 11:40:22 AM

சைதன்யா மூவீஸ் சார்பில் 'குடிசை' ஜெயபாரதி தயாரித்து இயக்கி உள்ள படம் 'புத்ரன்'. ஒய்.ஜி.மகேந்திரா, சங்கீதா, மாஸ்டர் வருண் நடித்துள்ளனர். படம் பற்றி ஜெயபாரதி கூறியதாவது:
சமீப காலமாக அதிகரித்து வரும் குழந்தை கடத்தல் சம்பவங்கள் மனதை பாதித்தது. அந்த உணர்வில் உருவான படம்தான் இது. கடத்தல்காரர்களிடம் குழந்தையை பறிகொடுத்த சங்கீதாவுக்கு மனநோய் வருகிறது. அவரைக் குணப்படுத்த சென்னை அழைத்து வருகிறார் ஒய்.ஜி.மகேந்திரா. வந்த இடத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க அகிம்சை வழியில் போராடுகிறார். கடத்தல்காரர்கள் அவரை வன்முறை வழியில் ஒழித்துக்கட்ட நினைக்கிறார்கள். வெற்றி யாருக்கு என்பதுதான் படம். படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

 

டீ விற்கும் பெண்ணாக இனியா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

டீ விற்கும் பெண்ணாக இனியா

7/6/2011 11:37:13 AM

'வாகை சூட வா' படத்தில் ஹீரோயினாக நடிக்கும் இனியா, கூறியதாவது:கேரளாவில் பிறந்தேன். குழந்தையாக இருந்த போதே நாடகங்களில் நடித்தேன். தொடர்ந்து டெலி பிலிம்களில் நடித்தேன். பிறகு மலையாளத்தில் 'சாயிரா' படத்தில் சின்ன கேரக்டரில் வந்தேன். ஹீரோயினாக 'தளமர்மரங்கள்' படத்தில் அறிமுகமானேன். நடித்த எல்லா படங்களுக்கும் அவார்டு கிடைத்தது. தமிழில் சற்குணம் இயக்கும் 'வாகை சூட வா' படத்தில், டீ விற்கும் பெண்ணாக நடிக்கிறேன். இது பீரியட் பிலிம் என்பதால், 1968ம் வருடத்துக்குரிய மேக்கப்பையும், நடிப்பு பாணியையும் பின்பற்றுகிறேன். அடுத்து அருள்நிதி ஜோடியாக 'மவுன குரு'வில் நடிக்கிறேன். திறமையை வெளிப் படுத்தும் கேரக்டர்களுக்கு முன்னுரிமை தருவேன்.   

 

வெளியில் தெரியாத வீரப்பன் விஷயங்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வெளியில் தெரியாத வீரப்பன் விஷயங்கள்

7/6/2011 11:33:15 AM

சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் கதையை, இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ், 'வன யுத்தம்' என்ற பெயரில் படமாக எடுக்கிறார். இதில் வீரப்பனாக, கிஷோர் நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக அர்ஜுன், ரவிகாளே, கன்னட நடிகர் ராஜ்குமாராக இந்தி நடிகர் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராய் உட்பட பலர் நடிக்கின்றனர். அஜயன் பாலா வசனம். விஜய் மில்டன் ஒளிப்பதிவு. வீரப்பன் மனைவியாக நடிக்க, இந்தி நடிகை ராணி முகர்ஜியுடன் பேசியுள்ளனர். தமிழ், கன்னடத்தில் தயாராகும் இந்தப் படம் பற்றி கிஷோர் கூறியதாவது:

 இதில், வீரப்பன் பற்றி வெளியில் தெரியாத பல ஆச்சரியமான, சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கிறது. இயக்குனர் ரமேஷ், சில வருடங்களாக தேடி அலைந்து இந்த தகவல்களைச் சேகரித்திருக்கிறார். வீரப்பன் கேரக்டரை, சிலரால் தாங்கிக்கொள்ள முடியாது என்பது தெரியும். இருந்தாலும் யார் மனதையும் புண்படுத்தாமல் ஸ்கிரிப்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் நடந்த விஷயங்களை மட்டுமே ஆதாரத்துடன் படத்தில் வைத்துள்ளோம். அதை தாண்டி சினிமாவுக்காக எந்த மிகைப்படுத்தலும் இருக்காது. ஏற்கனவே வாழ்ந்த ஒரு கேரக்டரை படமாக்கும்போது இதை கவனத்தில் கொள்வது அவசியம் என்பதும் எங்களுக்குத் தெரியும். படத்தின் பெரும்பாலான காட்சிகள், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதும் அதையடுத்து நடந்த விஷயங்களுமாகவே இருக்கும். மற்ற கேரக்டர்களை விட வீரப்பன் கேரக்டரில் நடிப்பது சவாலானது. நான் அழகானவன் இல்லை. அழகான இளம்பெண்களுடன் மரத்தைச் சுற்றி ஆடவும் அவர்களை காதலிக்கவுமான முகம் என்னிடம் இல்லை. அதனால் இந்த மாதிரியான கேரக்டர்களில் என் திறமையை காட்ட நினைக்கிறேன்.

 

மலையாளத்தில் எமி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மலையாளத்தில் எமி!

7/6/2011 11:32:03 AM

'மதராசப்பட்டணம்' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் லண்டன் மாடல் எமி ஜாக்சன். இவர், கவுதம் மேனன் இயக்கும் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்போது, லால் ஜோஷ் இயக்கும் மலையாளப் படத்தில் நடிக்கிறார். படத்துக்கு 'ஸ்பானிஷ் மசாலா' என்று பெயரிடப்பட்டுள்ளது. திலீப், குஞ்சகோ போபன் ஹீரோக்கள். மலையாளத்தில் இருந்து ஸ்பெயின் செல்லும் திலீப், அந்நாட்டு பெண் மீது காதல் கொள்வதும் அதனால் ஏற்படும் பிரச்னைகளும் கதை. இந்தப் படத்துக்காக, ஆங்கில பெண் ஒருவரை ஹீரோயினாக நடிக்கத் தேடி வந்தனர். இப்போது, எமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

கர்ப்பத்தை மறைத்துவிட்டார் ஐஸ்வர்யா! - மதுர் பண்டார்கர் குற்றச்சாட்டு


ஹீரோயின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடும்போதே ஐஸ்வர்யா ராய் 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால் அதை முழுமையாக மறைத்துவிட்டு 8 நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார், என்று கூறியுள்ளார் இயக்குநர் மதுர் பண்டார்கள்.

ஐஸ்வர்யா ராயை நாயகியாகப் போட்டு ஹீரோயின் என்ற பெரிய பட்ஜெட் படத்தை ஆரம்பித்தார் மதுர் பண்டார்கர். ஆனால் படப்பிடிப்பு நடக்கும்போதுதான் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியானது. இதனால் படத்தை தொடர முடியாத நிலை. ஐஸ்வர்யாவை நீக்கினால் கேஸ் போடுவதாக மிரட்டியிருந்தார்.

எனவே படத்திலிருந்து ஐஸ்வர்யா ராயை நீக்குவதற்கு பதில், படத்தையே கிடப்பில் போட்டுவிட்டது தயாரிப்பு நிறுவனம்.

ஒரு பக்கம், தாய்மைப் பேறு அடைந்ததை எண்ணி ஐஸ்வர்யா ராயும் அவரது உறவினர்களும் சந்தோஷத்தில் பரவசப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் படம் நின்றுவிட்டதால் இயக்குநர் மதுர் பண்டார்கர் மற்றும் அவரது யூனிட் ஆட்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்

இந்த விவகாரத்தில் இதுவரை ஐஸ்வர்யா, அமிதாப் பச்சன் போன்றவர்கள் சொன்னவை மட்டும் செய்தியாக வந்துகொண்டிருந்தன. இப்போதுதான் முதல்முறையாக மதுர் பண்டார்கர் தனது மனதைத் திறந்துள்ளார், தனது வலைப்பதிவு மூலம்.

அதில் அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

ஹீரோயின் எனது கனவுப் படம். ஒன்றரை ஆண்டுகள் ரத்தமும் வியர்வையும் சிந்தி உருவாக்கப்பட்ட திரைக்கதை அது. ஆனால் இன்று அந்தப் படத்தின் கதி என்னவென்றே தெரியவில்லை. படப்பிடிப்பு மீண்டும் தொடருமா... அல்லது படம் ஒரேயடியாக நிற்குமா என்றே தெரியவில்லை.

இவை எல்லாவற்றுக்கும் காரணம் ஐஸ்வர்யா ராய்தான். அவர் தான் கர்ப்பமடைந்திருப்பதாக எங்களிடம் முழுமையாக மறைத்துவிட்டார். கடந்த மே மாதம் இந்தப் படத்தை கேன்ஸில் அறிவித்தோம். அப்போதே ஐஸ்வர்யா ராய் 4 மாத கர்ப்பமாக இருந்திருக்கிறார். அதன் பிறகு 24 நாட்கள் கழித்துதான் ஷூட்டிங் தொடங்கியது. இந்த இடைப்பட்ட காலத்தில் சொல்ல்யிருந்தாலாவது, நான் மாற்று ஏற்பாடு செய்திருப்பேன்.

ஆனால் எல்லாவற்றையும் மூடி மறைத்து 8 நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்ட பிறகு, திடீரென கர்ப்பத்தை அறிவித்ததால் படமே நின்றுவிட்டது.

என்ன செய்வதென்று தெரியாமல் இருட்டில் உட்கார்ந்திருப்பது போல இருக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார் மதுர் பண்டார்கர்.
 

கமல் ஹாஸன் மீது வருமான வரித்துறை போட்ட வழக்கு தள்ளுபடி!


டெல்லி: குருதிப் புனல் படத்தின் வெளிநாட்டு உரிமை வருவாய் தொடர்பாக வருமான வரித்துறை கமல்ஹாஸன் மீது தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குருதிப் புனல் படத்தின் வெளிநாட்டு உரிமையை மாற்றியதில் ரூ 54.50 லட்சம் வரி விலக்கு கோரியிருந்தார் கமல்ஹாஸன். ஆனால் இதை எதிர்த்து தீர்ப்பாயம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது வருமான வரித்துறை. உயர்நீதி மன்றத்தில் கமலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் அப்பீல் செய்தது வருமான வரித்துறை. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வெறும் பெயர் மாற்றத்துக்காக மட்டும் இந்த விலக்கை கமல்ஹாஸன் கோருவது நியாயமில்லை என்று வாதிட்டது வருமான வரித்துறை.

ஆனாலும் வருமான வரித் துறையின் அப்பீல் மனுவை ரத்து செய்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
 

ரம்யா நம்பீசனின் 'லிப் லாக்'!


முன்பெல்லாம் உதட்டோடு உதடு பதிக்கும் முத்தக் காட்சி என்பது இந்தியப் படங்களில் அரிதான விஷயமாக இருந்தது.

பின்னர் கமல் 'தயவில்' ஹீரோயின்களின் உதடுகளை ஹீரோ சுவைக்கும் காட்சி அதிகம் இடம்பெற ஆரம்பித்தன.

இன்றைக்கு குடும்பப் பாங்கான வேடங்களில் நடிக்கும் நாயகிகளும் கூட 'லிப் டு லிப்' முத்தக் காட்சியில் நடிக்கும் அளவு நிலைமை மாறியுள்ளது.

அந்த பட்டியலில் புதிதாக இடம் பெற்றிருப்பவர், ரம்யா நம்பீசன். இவர், 'சாப்பா குரிசு' என்ற மலையாள படத்தில், கதாநாயகன் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தக் காட்சியில் நடித்துள்ளார்.

அந்த காட்சியில் ரம்யா நம்பீசனுடன் நடித்த கதாநாயகனின் பெயர், சஹத். இவர், ஏற்கனவே சில மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். இவரும், ரம்யா நம்பீசனும் நடித்த முத்தக்காட்சி, படத்தில் 2 நிமிடங்கள் இடம்பெறுகின்றன.

இந்த முத்தக்காட்சி, 'சாப்பாகுரிசு' படத்தின் 'டிரைலரிலும்' இடம்பெற்றுள்ளது.
 

ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி-ஜீவா நடிக்கும் புதிய படம்!


எஸ்பி ஜனநாதன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவியும், ஜீவாவும் இணைந்து நடிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த அதிரடிப் படத்துக்கு இன்னமும் பெயர் வைக்கப்படவில்லை.

இந்தப் படம் குறித்து இயக்குநர் ஜனநாதன் கூறுகையில், "ஈ படம் முடிந்ததும், இன்னொரு படம் இருவரும் சேர்ந்து பண்ணலாம் என்று ஜீவாவும், நானும் திட்டமிட்டோம்.

அதேபோல் பேராண்மை முடிந்ததும், ஜெயம் ரவியோடு இன்னொரு படம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டோம். இப்போதுதான் அதற்கான காலம் கனிந்து இருக்கிறது. ஒரே படத்தில் இரண்டு பேரையும் இணைத்து இயக்கும் திட்டம் கைகூடியிருக்கிறது.

ஜெயம் ரவியும், ஜீவாவும் இணையும் முதல் படம் இது. முழுக்க முழுக்க அதிரடி சண்டை படமாக இருக்கும். கதையின் களம் தமிழ்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருப்பதால், இங்கேயும், வெளிநாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

கதாநாயகியின் கதாபாத்திரம் கவர்ச்சியும், சண்டையும் கலந்து அமைந்திருக்கிறது. இதற்காக தமிழ் பேச தெரிந்த எந்த மாநில நடிகையாக இருந்தாலும், பொருத்தமாக தேர்ந்தெடுக்க இருக்கிறோம்.

ஏற்கனவே ஜீவா நடித்த ஈ, கோ ஆகிய படங்கள் தெலுங்கில் `டப்' செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றுள்ளது. `பேராண்மை' படமும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு விரைவில் வெளிவர இருக்கிறது.

எனவே ஜெயம் ரவியும், ஜீவாவும் இணைந்து நடிக்கும் படம், தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும்,'' என்றார்.
 

நேதாஜியை அவமதிப்பதா? - அமிதாப் மீது வழக்கு!


மும்பை: விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அவமதிக்கும் வகையிலான விளம்பரம் தொடர்பாக நடிகர் அமிதாப் பச்சனுக்கு மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியில் பிரபலமான 'கோன் பனேகா குரோர்பதி' தொலைக்காட்சி நிகழ்ச்சியின் 4-ம் பாகத்தை நடிகர் அமிதாப்பச்சன் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் இடையே வரும் விளம்பரங்களில் ஒரு விளம்பரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

சுதந்திர போராட்டத்தின்போது, "நீங்கள் எனக்கு ரத்தம் தாருங்கள். நான் உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன்'' என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எழுப்பிய வாசகத்தை இழிவு படுத்தும் வகையில் அந்த விளம்பரம் உள்ளது என்றும், அதை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி, நடிகர் அமிதாப்பச்சன், மத்திய தணிக்கை வாரியம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி முகேஷ் சர்மா என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மொகித் ஷா, ஜி.எஸ்.காட்போலே ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல், அந்த விளம்பரம் நகைச்சுவையானது மட்டுமே. யாரையும் இழிவு படுத்துவது அல்ல என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 28-ந் தேதிக்கு தள்ளி வைத்தும், அதற்குள் அமிதாப்பச்சன் மற்றும் தனியார் தொலைக்காட்சி இதுகுறித்து பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.