மறுபடியுமா?....?....?...?

Power Star Rock With Santhanam Again

சென்னை: கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு பவர் ஸ்டார் சீனிவாசன் மறுபடியும் சந்தானத்துடன் சேர்ந்து நடிக்கிறார்.

இத்தனை நாட்களாக பவர் ஸ்டார் என்றால் காமெடி பீஸ் ஏதோ உளறுகிறார் என்று நினைத்தனர். ஆனால் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தைப் பார்த்துவிட்டு பவர் ஸ்டார் சூப்பர் என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. தியேட்டர்களில் பவர் ஸ்டார் வரும் காட்சிகளில் விசில் பறக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இந்த படத்தின் வெற்றியையடுத்து அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். சிவா, சந்தானம், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்து வரும் யா யா படத்தில் பவர் ஸ்டாரை ஒப்பந்தம் செய்துள்ளனர். சிவா, சந்தானம் கூட்டணியே பட்டைய கிளப்பும் இதில் பவர் ஸ்டார் வேறு, சொல்லவா வேண்டும் காமெடிக்கு. படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி உள்ளிட்டோரும் நம்மை சிரிக்க வைக்க உள்ளனர்.

வயிறு குலுங்கச் சிரிக்க தயாராகுங்கள் ரசிகர்களே. யா யா நிச்சயம் ஹிட்டாகும் என்பது தற்போதே தெரிந்துவிட்டது.

 

'லைப் ஆப் பை' படத்திற்கு கோல்டன் குளோப் விருது: சிறந்த திரைப்படமாக 'அர்கோ' தேர்வு…

Golden Globe Awards 2013 Winners List

புதுச்சேரியில் தயாரான ‘லைப் ஆப் பை' ஆங்கில படத்துக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

70 வது கோல்டன் குளோப் விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த திரைப்படம், இயக்குநர், உள்ளிட்ட பிரிவுக்கு லைப் ஆப் பை பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில் பின்னணி இசைக்காக கோல்டன் குளோப் விருதை லைப் ஆப் பை வென்றுள்ளது.

இதில் சிறந்த திரைப்படமாக அர்கோ தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்படத்தை இயக்கியும் இருந்த பென் அஃப்லெக் சிறந்த இயக்குநர் விருதையும் வென்றார்.

லிங்கன் சிறந்த நடிகர்

சிறந்த திரைப்பட நடிகர் விருதை லிங்கன் படத்தில் ஆப்ரஹாம் லிங்கனாக நடித்த டேனியல் டே லூயிஸ் பெற்றார். இந்த திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவைப் படத்தில் நடித்த ஜெனிஃபர் லாரன்ஸ், சில்வர் லைனிங்ஸ் படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்

ஸ்கைஃபால் படத்தின் பாடல்

ஸ்கைஃபால் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஸ்கைஃபால் பாடலைப் பாடிய அடெலுக்கு சிறந்த திரைப்படப் பாடலுக்கான விருது கிடைத்துள்ளது.இசை நடனத் திரைப்படப் பிரிவில் சிறந்த நடிகர் விருதை லே மிசெராப்லில் தோன்றிய ஹியூ ஜேக்மன் வென்றார்.

சிறந்த பின்னணி இசை

லைப் ஆப் பை படத்திற்கு சிறந்த பின்னணி இசை( ஒரிஜினல் ஸ்கோர்) விருது கிடைத்துள்ளது.

இவ்விருதுக்கு 5 படங்கள் போட்டியிட்டன. இதில் ‘லைப் ஆப் பை' இசையமைப்பாளர் டன்னா இந்திய இசை வாத்தியங்களை சேர்த்து படத்தில் அமைத்திருந்த பின்னணி இசை வித்தியாசமாக இருந்ததால் விருதுக்கு தேர்வானது. ‘லைப் ஆப் பை' படத்தில் இந்தியாவை சேர்ந்த சூரஜ்சர்மா, இர்பான்கான், தபு, உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பலர் நடித்துள்ளனர். இதில் பாம்பே ஜெயஸ்ரீ ஒரு பாடலை பாடி உள்ளார். இப்பாடல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ‘ லைப் ஆப் பை' படத்தை ஆங்க்லீ இயக்கி உள்ளார்.

ஏற்கனவே ‘ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரகுமான் கோல்டன் குளோப் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சி நடிகர்கள்

சிறந்த தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடர் பிரிவில் கர்ல்ஸ் தொடர் விருது வென்றது. அத்தொடரை எழுதியும் நடித்த லினா டன்ஹாமுடன் நடிகையர் ஸொஸியா மமெட் மற்றும் ஆலிசன் வில்லியம்ஸ்.

இசை நடனத் திரைப்படங்களில் தோன்றிய சிறந்த துணை நடிகை விருதை ஆன் ஹேதவே வென்றார். லே மிசெராப்ல் என்ற படத்துக்காக இவருக்கு இவ்விருது கிடைத்தது.

சிறந்த தொலைக்காட்சி நடிகை விருதை ஹோம்லண்ட் என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக கிளேர் டேன்ஸ் வாங்கினார்

தொலைக்காட்சியில் வெளியான திரைப்படப் பிரிவில் சிறந்த நடிகை விருதை கேம் சேஞ்ச் படத்துக்காக ஜூலியன் மூர் வென்றார்.

ஹோம்லண்ட் தொலைக்காட்சித் தொடரில் நடித்த டேமியன் லூயிஸ் சிறந்த தொலைக்காட்சி நடிகர் விருதை வென்றார்.

 

மகனை ஹீரோவாக்கும் நடிகை அனுராதா

Actress Anuratha Son S Debuts As Hero

எண்பதுகளில் தென்னிந்திய திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்தவர் அனுராதா. 700 படங்களுக்கும் மேல் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். 35 படங்களுக்கும் மேல் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சில காலம் திரை உலகை விட்டு ஒதுங்கியிருந்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில் வாரிசுகளை களம் இறக்குவதைப் போல இவரும் தனது மகள் அபிநயஸ்ரீ யை நடிக்க வைத்தார். ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த அவர் சில படங்களில் குறிப்பிடத்தகுந்த கதாபாத்திரத்தில் நடித்துவிட்டர் பின்னர் காணாமல் போனார். இப்போது அவரும் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக களம் இறங்கிவிட்டார்.

இப்போது மேட்டர் அது இல்லை. மகளுக்கு அமையாத சினிமா வாய்ப்பு மகனுக்காவது சரியாக அமையுமா? என்ற ஆசையில் தனது மகன் கெவினை ஹீரோவாக்கியிருக்கிறார். படத்தின் பெயர் ‘என்னமோ பிடிச்சிருக்கு' என்ற தகவல் வெளியாகியுள்ளது. மகளைத்தான் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. அனுராதாவின் மகனையாவது பிடிக்குதா என்று பார்ப்போமே?.

 

பண்ணையாரும் பத்மினியும்: பத்மினியைப் பார்த்தா அசந்துருவீங்க

Pannaiyarum Padminiyum Aims High   

சென்னை: குறும்பட இயக்குனர் அருண் குமார் பண்ணையாரும் பத்மினியும் என்ற பெயரில் எடுத்துள்ள படம் வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகிறது.

காதலில் சொதப்புவது எப்படி படத்திற்கு பிறகு குறும்பட இயக்குனர்கள் பெரிய திரையில் படம் எடுப்பது அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர் அருண் குமார். அவர் குறும்படத்தை தழுவி பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தை எடுத்துள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகிறது.

படத் தலைப்பை பார்த்து பண்ணையாருக்கும் பத்மினி என்ற பெண்ணுக்கும் இடையே நடக்கும் விஷயங்களைப் பற்றி கூறப் போகிறார்களோ என்று தவறாக நினைக்க வேண்டாம். ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிட இப்படி தலைப்பு வைத்திருக்கிறார்கள். உண்மையில் படத்தில் வரும் வயதான பண்ணையாருக்கு ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த பிரீமியர் பத்மினி கார் என்றால் உயிர். இதைத் தான் தலைப்பில் அப்படி கூறியிருக்கிறார்கள். விஜய் சேதுபதி, ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இப்ப பண்ணையாரும் பத்மினியும் வருகிறது அடுத்து ஜமீந்தாரும் ஷெவர்லேவும் வரலாம். பத்மினி என்றதும் பெண்ணோ என்று நினைக்கத் தோன்றியதல்லவா பிளேன்முத்து என்றால் உங்களுக்கு என்ற தோன்றுகிறது. மதுரைக்காரங்கள கேளுங்க. பிளைமவுத் காரைத் தான் ஒரு காலத்தில் அவ்வளவு அழகாக அழைத்துள்ளனர்.

 

த்ரிஷாவுக்கு பிடிச்சது விஜய் இல்லை அஜீத்தாம்

Ajith Is Trisha S All Time Favourite

சென்னை: நடிகை த்ரிஷாவுக்கு எப்பொழுதுமே பிடித்த ஹீரோ அஜீத் குமார் தானாம்.

நடிகை த்ரிஷாவுக்கு பிடித்த ஹீரோ யார் என்று அவரிடம் கேட்டதற்கு, ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் ஹீரோ எனக்கு பிடிக்கும். உதாரணமாக சமர் படத்தில் நடித்தபோது விஷாலின் நடிப்பு பிடித்திருந்தது. ஆனால் எப்பொழுதுமே பிடித்த ஹீரோ என்றால் அது அஜீத் குமார் தான். நிஜ வாழ்க்கையில் அவரது நடவடிக்கைகளைப் பார்த்து வியப்பவள் நான் என்றார்.

ஜி, கிரீடம், மங்காத்தா என்று 3 படங்களில் த்ரிஷா அஜீத் ஜோடியாக நடித்துள்ளார். அவர் விஜய்க்கு மட்டுமல்ல அஜீத்துக்கும் ஏற்ற ஜோடியாாக உள்ளார்.

த்ரிஷாவும் விஜயும் நல்ல நண்பர்கள் என்றெல்லாம் கூறினார்களே. அவரைப் பற்றி த்ரிஷா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனக்கு எப்பொழுதுமே பிடித்தவர் அஜீத் என்று அவர் சொன்னதைக் கேட்டு விஜய் என்ன ரியாக்ஷன் கொடுக்கப் போகிறாரோ.

 

'தலைவா' அரசியல் படமா? விஜய் விளக்கம்

Is Thalaivaa Political Movie

சென்னை: தான் நடிக்கும் தலைவா அரசியல் படமல்ல என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தலைவா என்று பெயர் வைத்து போஸ்டர்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் கையசைக்கும் போஸ்டரைப் பார்க்கையில் ஏதோ அரசியல் படம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் தலைவா படத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறிய விஜய் கதை குறித்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுனில் சந்திரபிரகாஷ் ஜெயின் கூறுகையில்,

தலைவா என்ற தலைப்பு படத்தின் கதைக்கும், விஜயின் இமேஜுக்கும் மகிவும் பொருத்தமாக இருந்ததால் அதை தேர்வு செய்துள்ளோம். மேலும் போஸ்டர்களும் அதன்படி தான் டிசைன் செய்யப்பட்டன என்றார்.

விஜய் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் அவர் அரசியலுக்கு நிச்சயம் வருவார் ஆனால் அதற்கு காலம் ஆகும் என்று அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

 

கண்ணா லட்டு திண்ண ஆசையாவில் இந்து கடவுளை அவமானப்படுத்திய காட்சிக்கு தடை விதிக்கக் கோரி புகார்

Kanna Laddu Thinna Aasaiya Trouble

சென்னை: கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் இந்து கடவுளையும், பெண் போலீஸையும் அவமதிக்கும் வகையில் இருக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு இந்து மகாசபா நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தமிழ்நாடு இந்து மகாசபா அமைப்பு சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் உட்பட பலர் நடித்துள்ள கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற படம் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ராமநாராயணன், நடிகர் சந்தானம் ஆகியோர் கூட்டாக தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சந்தானம், சீனிவாசன் மற்றும் ஹீரோவாக நடித்திருப்பவர்கள் குடிபோதையில் கையில் லட்டை வைத்துக் கொண்டு அம்மன் சாமியிடம் இருந்து சூலாயுதம், கிரீடம், அம்மனின் இடுப்பில் உள்ள ஒட்டியாணம் ஆகியவற்றை பறிப்பதுபோல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அதுபோல பெண் போலீஸ் அதிகாரியின் இடுப்பை பிடித்து பெல்ட்டை கழற்றுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிகள் மூலம் அம்மன் சாமியையும், பெண் போலீஸ் அதிகாரியையும் அவமானப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இந்த காட்சிகளினால் இந்து மதத்தை சேர்ந்த மக்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளனர். எனவே இந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்து கடவுளை அவமானப்படுத்தி படம் தயாரித்த ராமநாராயணன் மற்றும் சந்தானத்தின் வீட்டுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு இந்து மகாசபா நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

 

செக் மோசடி வழக்கு: துறையூர் கோர்ட்டில் பவர் ஸ்டார் ஆஜர்

Power Star Appears Before Thuraiyur Court

சென்னை: செக் மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் துறையூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த தொழில் அதிபர் வரதராஜன் என்பவருக்கு பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ. 30 லட்சத்திற்கான செக் ஒன்றை கொடுத்தார். அந்த செக்கை வங்கியில் போட்டபோது பணமின்றி அது திரும்பி வந்தது. இதையடுத்து வரதராஜன் பவர் ஸ்டார் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு துறையூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜனவரி 10ம் தேதி பவர் ஸ்டார் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்ட தேதியில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதையடுத்து பிடிவாரண்ட்டை நீதிபதி எழில் வேலன் ரத்து செய்தார். மேலும் வழக்கை வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்த அவர் அன்றைய தினமும் பவர் ஸ்டார் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.