உதயன் இசையில் எங்க குடும்பத்து சாயல் தெரிகிறது! - மன்னாரு விழாவில் கங்கை அமரன் பேச்சு

Mannaru Audio Launched

இசையமைப்பாளர் உதயன் இசையில் எங்கள் குடும்ப இசையின் சாயல் தெரிகிறது. அது மனசுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, என இயக்குநர் - இசையமைப்பாளர் - பாடலாசிரியர் கங்கை அமரன் பாராட்டினார்.

அப்புக்குட்டி, ஸ்வாதி, வைஷாலி, தம்பி ராமையா, பாண்டியராஜன் நடித்துள்ள படம் மன்னாரு. ஜெய்சங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு உதயன் இசையமைத்துள்ளார்.

மொத்தம் நான்கு பாடல்கள். சிறிய இடைவெளிக்குப் பிறகு கிருஷ்ண ராஜுடன் இணைந்து எஸ்பி ஷைலஜா இந்தப் படத்தில் இனிமையான காதல் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை காலை சத்யம் திரையரங்கில் நடந்தது.

விழாவுக்கு தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் திரண்டு வந்திருந்தனர்.

படத்தின் நாயகன் அப்புக்குட்டி, நாயகி ஸ்வாதி, வைஷாலி தம்பி ராமையா, பாண்டியராஜன் தவிர, இயக்குநர்கள் எஸ்பி முத்துராமன், கங்கை அமரன், எஸ்பி ஜனநாதன், பெப்சி சிவா, வ கவுதமன், சுசீந்திரன் என பலரும் பங்கேற்று வாழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகம் கொண்ட கங்கை அமரனின் பேச்சு. இசையமைப்பாளர் உதயனின் பாடல்களைக் கேட்டதுமே, இதில் எங்கள் குடும்பத்து இசையின் சாயல் இருக்கிறது. கேட்க மிக இனிமையாக இருக்கிறது, என பாராட்டினார்.

மேலும் அவர் பேசுகையில், "இன்றைக்கு இசை என்ற பெயரில் என்னென்னமோ செய்கிறார்கள். ஒய் திஸ் கொல வெறி என்ற ஒன்று... இதெல்லாம் பாட்டாங்க... என்னய்யா கொடுமை.

இப்போதெல்லாம் ஒரு பாட்டு பாடினாலே போதும்... அல்லது ஒரு பாட்டுக்கு இசையமைச்சாலே போதும்... தலைகால் புரிவதில்லை யாருக்கும்.

உதயனின் இசையில் இனிமை இருக்கிறது. குறிப்பாக அந்த ஊரையெல்லாம் காவல் காக்கும் பாடலைக் கேட்டவுடன் இந்த இசை நம் குடும்பத்தின் சாயல் கொண்டது என்று தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக வார்த்தைகள் புரியும்படி அருமையாக இசையமைத்துள்ளார்," என்றார்.

சாதனை இயக்குநர் எஸ்பி முத்துராமன் பேசுகையில், "ரொம்ப நாளைக்குப் பிறகு நல்ல இனிமையான காதல் பாடலைக் கேட்க முடிந்தது. மிகவும் அருமையான இசை. உதயனுக்கு வாழ்த்துகள்," என்றார்.

இயக்குநர் பாண்டியராஜன், தம்பி ராமையா, எஸ்பி ஜனநாதன் ஆகியோர், பாடல்கள் மற்றும் இசையை வெகுவாகப் புகழ்ந்தனர்.

 

ஷங்கர் படத்தில் ஸ்ருதி ஹாஸன் இல்லை... ஒரே ஹீரோயின் எமிதான்!

No Place Shruthi Shankar S Movie

ஷங்கர் படத்தில் எமி ஜாக்ஸன் மட்டும்தான் ஹீரோயின். இரண்டாவது ஹீரோயினாக ஸ்ருதி நடிப்பார் என்று வரும் செய்திகளில் உண்மையில்லை என்று இயக்குநர் ஷங்கர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

விக்ரம் நடிக்க, ஷங்கர் இயக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் புதிய படம் ஐ. ரொமான்டிக் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் சமந்தா.

ஆனால் உடல் நிலை காரணமாக அவர் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட, அவருக்கு பதிலாக எமி ஜாக்ஸன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தில் இன்னும் ஒரு ஹீரோயினும் உண்டு என்றும், அந்த வேடத்துக்கு ஸ்ருதிஹாஸன் மற்றும் காஜல் அகர்வால் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியானது.

ஆனால் இப்போது அதில் உண்மையில்லை என ஷங்கர் தரப்பே மறுத்துள்ளது.

"இந்தப் படத்தில் கதைப்படி ஒரு ஹீரோயின்தான். அப்புறம் எப்படி இன்னொரு ஹீரோயின் வரமுடியும். தனிப்பட்ட ஆதாயங்களுக்காக யாராவது இப்படி செய்தி கிளப்பிவிட்டிருப்பார்கள். அதை நம்ப வேண்டாம்," என்று ஷங்கர் அலுவலகத்தில் தெரிவித்தனர்.

 

'ரசிகர்கள் உணர்வே முக்கியம்': இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் ஹரிஹரன்!

Hariharan Cancels Sri Lankan Tour

தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பை மதித்து இலங்கை தலைநகர் கொழும்பில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் திட்டத்தை ரத்து செய்தார் பாடகர் ஹரிஹரன்.

இலங்கைக்கு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக இன்று சனிக்கிழமை பாடகர் ஹரிகரன் செல்வதாக இருந்தார்.

இதனை அறிந்ததும் உலகம் முழுவதும் உள்ள ஈழ ஆதரவாளர்களிடமிருந்தும், தமிழகத்தில் இருந்தும் பலத்த எதிர்ப்புக் குரல் எழுந்தது.

கொட்டும் மழையிலும் அவரது மும்பை வீட்டை தமிழ் உணர்வாளர்கள் முற்றுகையிட்டு, தமிழர்களுக்குப் பிடித்த பாடகரான ஹரிஹரன், தமிழர் விரோத நாட்டுக்கு பாடச் செல்லக் கூடாது என்று கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து ஹரிஹரன் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'எனது இசை உலகம் முழுவதும் அமைதியையும், அன்பையும் பரப்பி வருகிறது. இதில், ஏதாவது ஒரு விதத்தில் எனது ரசிகர்கள் மனது பாதிக்கப்படுமானால் இசையின் நோக்கத்திற்கு இழப்பு ஏற்பட்டுவிடும். அதனால்தான் எனது இலங்கை பயணத்தை ரத்து செய்துவிட்டேன்,' என்று கூறியுள்ளார்.

 

ஏக குளறுபடி... 'கரிகாலன்' வர மாட்டான்?

Vikram S Karikalan Shelved   

விக்ரம் நடிக்கும் முதல் சரித்திரப் படம் என்ற விளம்பரங்களுடன் வந்த கரிகாலன் படத்தில் ஏகப்பட்ட குளறுபடி. இனி அந்தப் படம் வருமா என்ற கேள்விக்குறியுடன் நிற்கிறது.

விக்ரம், ஷரின் கான், அஞ்சலி நடிப்பில் கண்ணன் இயக்கத்தில் தயாராக இருந்த 'கரிகாலன்' படத்தினை 'சில்வர் லைன் பிலிம் பேக்டரி' நிறுவனம் தயாரித்தது.

இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 40 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. அப்படப்பிடிப்பில் டிரெய்லர் மற்றும் போட்டோ ஷுட் மட்டுமே எடுத்தார்களாம். படத்திற்காக என்று இதுவரை ஒரு காட்சி கூட எடுக்கவில்லையாம்.

இதனால் இயக்குனர் கண்ணன் நீக்கப்பட்டு, காந்தி கிருஷ்ணா இயக்குனராக ஒப்பந்தமானார். ஆனால், இப்போது படமே இல்லை என்றாகிவிட்டது.

விக்ரம் தனது அடுத்தடுத்த படப்பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். 'தாண்டவம்' படத்தினை முடித்து இருக்கும் விக்ரம், தற்போது ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்திற்காக தேதிகள் ஒதுக்கி கொடுத்து இருக்கிறார்.

விக்ரம் கால்ஷீட் தேதிகள் ஒதுக்கினால் மட்டுமே 'கரிகாலன்' படத்தை துவக்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

இன்னொரு பக்கம், இந்தப் படத்தில் தனக்கு ஜோடியாக நயன்தாராதான் நடிக்க வேண்டும் என்று கண்டிஷன் வேறு போட்டுள்ளாராம் விக்ரம். நயனோ கால்ஷீட் இல்லை என கைவிரிக்க, கரிகாலன் நிலைமை வடிவேலு போட்ட கிரிகாலன் வேடம் மாதிரி ஆகிவிட்டது.

 

இனி கவர்ச்சி ட்ரஸ் வேணாம் - ஹன்ஸிகா அதிரடி

Hansika Says No Glam Roles   

இனி கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என்று கூறி, தமிழ் ரசிகர்கள் மனதில் கல்லைப் போட்டிருக்கிறார் சின்ன குஷ்புவான ஹன்ஸிகா.

ஏனம்மணி இந்த முடிவு?

"அடிப்படையில் நான் கவர்ச்சி நடிகை இல்லை. நான் நடித்த அனைத்துப் படங்களுமே குடும்பப் பாங்கானவை. அனைவரும் பார்த்து ரசிக்கும்படியாக இருந்தன.

பாடல் காட்சிகளில் மட்டும் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடித்திருந்தேன். ஆனால் இனி நல்ல டீஸன்டான உடைகளில் மட்டுமே தோன்றப் போகிறேன்," என்கிறார் ஹன்ஸிகா.

இவர் நடிக்கும் சேட்டை படத்தில் ஒரு பாடல் காட்சியில் நீச்சல் உடையில் நடிக்க வேண்டும் என இயக்குனர் கூறியதற்கு, மறுப்பு தெரிவித்துவிட்டாராம் ஹன்சிகா.

ஹன்ஸிகாவின் இந்த முடிவுக்கு இன்னொரு காரணம், ஒரு கல் ஒரு கண்ணாடியில் இவரது குடும்பப் பாங்குக்கு கிடைத்த வரவேற்புதானாம்.

ஆனால் ஹன்ஸிகாவின் முடிவு அவருக்கு மட்டும்தான் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. இயக்குநர்களோ மகா எரிச்சலில் உள்ளார்களாம்.

 

கலர்புல் பீச் கேர்ள்ஸ் கல்யாணி - பாவனா!

Bhavana Kalyanai Hosting Beech Gi

ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் 'பீச் கேள்ர்ஸ்' நிகழ்ச்சி சினிமா பிரபலங்களின் பெர்சனல் பக்கங்களை கொஞ்சம் புரட்டிப் பார்க்க வைக்கிறது. ஆனால் கேள்விகளின் கொஞ்சம் குறும்பு அதிகமாக இருக்கிறது என்பதுதான் பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

திங்கள் முதல் புதன் வரை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மறு ஒளிபரப்பாகவும் செய்கிறது. பாவனா, கல்யாணி என்ற இரு இளம் பெண் தொகுப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள்.

பீச் போன்ற செட் அமைத்து அதில் கலர் ஃபுல் உடையில் இரண்டு தொகுப்பாளினிகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சிறப்பம்சம். நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறப்பு அழைப்பாளரின் உடையும் கூட பீச் பகுதியில் அணிவதைப் போல இருக்கும். ஒவ்வொரு வாரமும் சினிமா பிரபலங்கள் யாரையாவது அழைத்து கேள்வி கேட்கிறோம் பதில் சொல்ல வேண்டுமென்று ஆரம்பிப்பார்கள். ரூம் போட்டு யோசிப்பாங்களா என்பதைப்போல அதி புத்திசாலித்தனமான கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இந்த கேள்வி கேட்பதில் ஒவ்வொரு ரவுண்டும் வித்தியாசப்படும். ஒரு ரவுண்டில் ஆறு பந்துகளை எடுத்து தொகுப்பாளரிடம் கொடுக்க வேண்டும் அதில் எழுதப்பட்டுள்ள கேள்விகளை கேட்பார்கள். , யோசிக்காம பதிலை உடனே சொல்ல வேண்டும்.

மற்றொரு ரவுண்டில் பலூன்களை அம்பு கொண்டு எரிய வேண்டும், பலூனை உடைத்து அதன் உள்ளே பங்கேற்பாளருக்கு தெரிந்த ஒருவர் இருப்பார், அவரை பற்றி இதுவரை மீடியா அறிந்திராத ஒரு விசயத்தை சொல்ல வேண்டும். சிறப்பு அழைப்பாளருடன் விளையாட்டும் வேடிக்கையுமாக போகிறது இந்த நிகழ்ச்சி. ஒவ்வொரு ரவுண்டும் முடிந்ததும் விளம்பரதாரரின் பரிசு பொருள்கள் பங்கேற்கும் பிரபலத்துக்கு வழங்கப்படும்.

 

பாசப்பறவைகள் : கோவை சரளாவும், மாடர்ன் டிரஸ்சும் !

Pasapparavaikal With Kovai Sarala

கலைஞர் டிவியில் ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு "பாசப்பறைவைகள்" எனும் கேம் ஷோ ஒளிபரப்பாகிறது. சின்னதிரை நட்சத்திரங்கள், பாடகர்கள் என பிரபலமாக இருக்கும் சினிமாத்துறையினர் என பலர் இதில் குடும்பத்துடன் கலந்துகொள்கிறார்கள். இது வேடிக்கையான விளையாட்டு போட்டி. கோவை சரளா தொகுத்து வழங்குவதால் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதை நிரூபித்து வருகிறார்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களின் பெர்சனல் பக்கங்களைக் குறித்து பத்து கேள்விகளை கேட்கிறார். வேடிக்கையான கேள்விகளும் விவகாரமான பதில்களுமாக போகிறது நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்காக விதவிதமான மார்டன் உடைகளை அணிந்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கிவருவது சிறப்பம்சம்.

முதலில் மார்டன் உடைகளை அணிய வெட்கப்பட்டு கோவை சரளா மறுக்க, டான்ஸ் மாஸ்டர் காலா விடாப்பிடியாக மார்டன் உடைகளை போட்டுவிட்டு சூப்பர் என்று பாராட்டினாராம்.ஆனால் சில சமயங்களில் வயதை மறந்து ஆடைகளை தேர்வு செய்துவிடுகிறார் என்பதுதான் நேயர்களின் கமெண்ட் ஆக உள்ளது.

கலைஞர் டிவி ஆரம்பித்த காலத்திலிருந்து மானாட மயிலாட , குயில் பாட்டு போன்ற பல ரியாலிட்டி ஷோக்களை இயக்கிய கலா மாஸ்டர் தான் இந்த நிகழ்ச்சியையும் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அப்பாவின் மீசை - ரோகினியின் இயக்குநர் அவதாரம்!

பவுனு பவுனுதான் போன்ற படங்கள் மூலம் திறமையான நடிகை எனப் பெயரெடுத்த ரோகினி விரைவில் இயக்குநராக வலம் வரப் போகிறார்.

இவர் இயக்கும் முதல் படத்துக்கு அப்பாவின் மீசை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

திரைக்குப் பின்னால் பணியாற்றுவது ரோகினிக்குப் புதிதல்ல. ஏற்கெனவே கமல் நடித்த 'வேட்டையாடு விளையாடு' படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

விரைவில் வெளிவர இருக்கும் 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' படத்தில் அனைத்து பாடல்களையும் இவரே எழுதி இருக்கிறார்.

விளம்பரங்கள், குறும்படங்கள் என திரையுலகில் பல பரிமாணங்களில் தன்னை முன்னிலைப்படுத்தி வந்த ரோகினிக்கு, தற்போது இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார்.

இந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறவர் இயக்குனர் சேரன்!

 

டாக்டரேட் ஆகணுமாம்...! – இது சொர்ணமால்யா கனவு

My Dream Is Be Called Dr Swarnamalya
‘இளமை புதுமை'யில் தொடங்கிய சொர்ணமால்யாவின் சின்னத்திரை வாழ்க்கை ‘தங்கம்' வரை தொடர்கிறது. அவ்வப்போது திரைப்படங்களில் எட்டிப்பார்த்தாலும் டான்சராக இருப்பதும், டாக்டரேட் படிப்பும்தான் தன்னுடைய லட்சியம் என்கிறார் சொர்ணமால்யா.

அவர் கூறுகையில்...

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பை என்​னு​டைய பதி​னாறு வய​தில் தொடங்​கி​னேன் என்​னு​டைய வளர்ச்​சி​யோட சேர்ந்து அந்த நிகழ்ச்​சி​யும் வளர்ந்​தது. சொர்ணமால்யா என்​றால் யார் என்று என்னை அறி​மு​கப்​ப​டுத்​தி​யது இளமை புதுமை நிகழ்ச்சி தான். நான் அந்த நிகழ்ச்​சியை தொடர்ந்து ஏழு வரு​டங்​கள் பண்​ணி​னேன். நிறைய நல்ல நல்ல விஷ​யங்​கள் எல்​லாம் நடந்​தது. ஒரு விஷ​யம் நன்​றாக நடக்​கும் பொழுது சில நேரங்​க​ளில் அதை விட்டு கொடுக்க வேண்டி வரும் அப்​படி தான் அந்த நிகழ்ச்​சியை ​ ரொம்ப சந்​தோ​ஷ​மான சூழ்​நி​லை​யில் தான் முடித்​தோம்.

சினி​மா​வுக்​கும்,​ சின்​னத்​தி​ரைக்​கும் இருந்த வித்​தி​யா​சங்​கள் இப்​போது போய்​விட்​டது. இன்றைய சூழ்​நி​லை​யில் சினி​மா​விற்கு பல​மாக இருப்​பது சின்​னத்​திரை தான். சினிமாவோ சின்னத்திரையோ எனக்கு பிடித்த கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன். சினிமாவில் "மொழி' ​ படம் போல ஒரு ​ நல்ல படத்தில் நடித்​தால் பத்து சுமா​ரான படங்​களில் நடிக்க வேண்​டி​யி​ருக்​கி​றது. அது போல் வராத பட்​சத்​தில் பத்து சுமா​ரான படங்​கள் நடிக்க எனக்கு நேரமோ,​ விருப்​பமோ இல்லை.

நெகடிவ் ரோல்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. நெகட்​டீவா ​ பண்​ணி​னா​லும் அதில் ஒரு அர்த்​தம் இருக்க வேண்​டும். இயல்​பான நெகட்​டீவ் ரோலாக இருந்​தால் பர​வா​யில்லை. கத்தி எடுத்து ​குத்​து​வது மாதிரி எல்​லாம் நான் செய்ய முடி​யாது. ​ ஏன் என்​றால் என்​னி​டம் நாட்​டி​யம் கற்​றுக்​கொள்ள நிறைய பிள்​ளை​கள் வரு​கி​றார்​கள். அது ​ மட்​டு​மல்​லா​மல் நான் நிறைய சோஷி​யல் ஒர்க்​கி​லும் ஈடு​பட்​டுக் ​ கொண்​டி​ருக்​கி​றேன். அது நிஜ​வாழ்க்​கை​யில் எந்த பாதிப்​பை​யும் ஏற்​ப​டுத்​தக் கூடாது என்​ப​தால் எனக்கு இஷ்​டம் இல்லை. ​ ​ரொம்ப பெரிய கம்​பெ​னி​யில் இருந்து ​ வில்​லி​யாக நடிப்​ப​தற்கு கேட்​டார்​கள். நல்ல கம்​பெனி,​ நல்ல டைரக்​டர்,​ ரொம்ப நல்ல கதை இருந்​தா​லும் அவர்​க​ளோடு ஒர்க் பண்ண முடி​ய​வில்​லையே என்று வருத்​தப்​பட்​டேன்.

காஞ்சிபுரத்தில் நாட்டியப் பள்ளி

ஒரு நாளில் இரு​பத்​தி​நாலு மணி நேரம் இருக்​கி​றது. அதை வைத்​துக் கொண்டு எத்​த​னையோ நிறைய நல்ல விஷ​யங்​களைச் செய்​ய​லாம். படிப்​புக்​காக டான்ஸை விட்​ட​தில்லை,​ டான்ஸ்​காக நடிப்பை விட்​ட​தில்லை,​ ​ ஒவ்​வொன்​றுக்​கும் என் நேரத்​தைப் பிரித்து செயல்படு​கி​றேன். இது​தான் என் பங்​க​ளிப்​புன்னு சொல்லி முற்​றுப்​புள்ளி வைக்க முடி​யாது. இப்​போ​து தான் ஆரம்​பித்​தி​ருக்​கி​றேன். நிறைய விஷ​யங்​கள் செய்​ய​ணும்னு ஆர்​வம் இருக்கு. அதற்​கான முயற்​சி​க​ளில் ஒன்று தான் பிஎச்.டி. பட்​டம் வாங்க வேண்​டும் என்​பது. என் மூல​மாக சில விஷ​யங்​க​ளைக் கலை உல​கத்​துக்​குக் கொடுக்க வேண்​டும் என்​பது என் ஆசை. இதை தவிர சென்​னை​யி​லும்,​ காஞ்​சி​பு​ரத்​தி​லும் நாட்​டிய பள்ளி வைத்து நடத்​திக் கொண்​டி​ருக்​கி​றேன்.

தொடர் இயக்​கு​வ​தற்கு நிறைய ​ நேரம் வேண்​டும். ஆனால் ​ சினிமா டைர​க்ஷன் பண்​ண​வேண்​டும் என்று ஆசை​யி​ருக்​கி​றது. ஆனால் இப்​போது அந்த எண்​ணம் இல்லை. ​ பிஎச்.டி.முடித்​து​விட்​டு​தான் பண்​ண​வேண்​டும் என்று வைராக்​கி​யத்​தில் இருக்​கி​றேன். டாக்​டர் சொர்​ண​மால்யா ஆகி​விட்​டுத்​தான் டைரக்​டர் சொர்​ண​மால்யா ஆவேன் என்றார்.
 

தெலுங்கு பேசும் ஓகேஓகே!

Okok Goes Telugu   
தமிழ் சினிமாவைக் கலக்கிய காமெடி திருவிழாவான சந்தானம் - உதயநிதியின் ஒரு கல் ஒரு கண்ணாடி, அடுத்து தெலுங்குக்குப் போகிறது.

தமிழில் இப்படம் குவித்த வசூலைப் பார்த்து, இதன் தெலுங்கு உரிமைக்கு பலர் போட்டியிட்டனர். ஆனால், படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை யாருக்கும் தரப்படவில்லை. மாறாக மகதீரா போல இப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

'ஓகே.. ஓகே' என்ற தலைப்பில் ஆந்திராவில் இப்படம் வெளியாகிறது. ஹன்ஸிகா தவிர எல்லோருமே ஆந்திராவுக்கு புதிது என்பதால், ரசிகர்களுக்கு இது ஒரு டப்பிங் படம் என்ற உணர்வே இருக்காது என்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

ஹன்சிகா, ஹாரிஸ் ஜெயராஜ் இருவருக்குமே தெலுங்கிலும் நல்ல மவுசு இருக்கிறது.

எனவே தெலுங்கு சினிமாவின் கறுப்புக் குதிரை மாதிரி திடீர் வெற்றியை இந்தப் படம் தரலாம் என்ற எதிர்ப்பார்ப்பு இருப்பதால், படத்தைத் திரையிட விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டுகிறார்களாம்.
 

ஒரே நாளில் ஹீரோவான 'ஈ'!!

A Housefly Becomes Hero
ராஜமவுலி இயக்கத்தில் தமிழ் - தெலுங்கில் வெளியாகியுள்ள நான் ஈ மற்றும் ஈகா பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்தப் படம் மூலம் தென் இந்தியாவின் ஷோமேன் என்ற புதிய அந்தஸ்தைப் பிடித்துள்ளார் ராஜமவுலி.

ஹீரோ இறந்து ஈயாக மாறி எதிரிகளைப் பழிவாங்கும் ஒரு சாதாரண கதையை, மூக்கின் மீது விரல் வைக்கும் அளவுக்கு பிரமாண்டமாகவும், தொழில்நுட்ப நேர்த்தி குறையாமலும் தந்த ராஜமவுலிக்கு பாராட்டுக்களும் வசூலும் குவிகின்றன (மனிதர் இத்தனை வெற்றி கொடுத்தும் சாதாரண ஐ டென் காரில்தான் போகிறாராம்!)

தெலுங்கில் இந்தப் படம் ரூ 34 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. அங்கே கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்தால், இந்தப் படம் விற்பனைத் தொகையை இரண்டு மடங்காக திருப்பித் தந்துவிடும் நிலை உள்ளது.

தமிழில் நேரடிப் படமாகவே வெளியாகியுள்ளது. போட்டிக்கு வேறு படங்களும் இல்லை. சோலோ ரிலீஸ். பல அரங்குகளில் சகுனியையும் ஸ்பைடர்மேனையும் கூட தூக்கிவிட்டு நான் ஈயை வெளியிட்டுள்ளனர்.

படம் வெளியான வெள்ளிக்கிழமை தமிழகத்தின் அத்தனை அரங்குகளிலும் 99 சதவீத பார்வையாளர்கள் கூட்டம். சிறுவர்கள் ஆர்வம் காட்டுவதால், இனி குடும்பம் குடும்பமாக வர வாய்ப்பிருப்பதால், நான் ஈயை வாங்கியவர்கள் முகமெல்லாம் சந்தோஷம்!

ஆக, ஒரேநாளில் ஹீரோவாகிவிட்டது ஈ!