எக்காரணம் கொண்டும் பிரபு தேவாவுடன் மட்டும் நடிக்கக் கூப்பிடாதீங்க! - இது நயன் வேண்டுகோள்

'சிம்புவுடன் மீண்டும் நடிச்சது ஒரு விபத்து... ஆனா இதே மாதிரி பிரபுதேவாவுடன் நடிக்க மட்டும் கூப்பிட்டுவிடாதீர்கள்' என தன்னிடம் கால்ஷீட் கேட்டு வந்த தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டாராம் நயன்தாரா.

நயன்தாரா இப்போது மிகவும் பிஸியாக உள்ளார் தமிழில். தெலுங்குப் படங்களிலும் நிறைய வாய்ப்புகள் வருகின்றன.

எக்காரணம் கொண்டும் பிரபு தேவாவுடன் மட்டும் நடிக்கக் கூப்பிடாதீங்க! - இது நயன் வேண்டுகோள்

அப்படி வந்த வாய்ப்புகளில் ஒன்றுதான் பிரபுதேவாவுடன் மீண்டும் நடிப்பது.

ஏற்கெனவே சிம்புவிடம் காதலில் விழுந்தவர் நயன். அது முறிந்த பிறகு, பிரபுதேவாவைக் காதலித்து, அவருக்காக மதம் மாறி, திருமணம் வரை போய், பிரிந்து வந்தார் நயன்தாரா.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மீண்டும் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்துள்ளார் நயன்தாரா. இருவரும் விருந்துகளில் ஜோடியாக பங்கேற்கிறார்கள். பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடுகிறார்கள். தாங்கள் நல்ல நண்பர்களாக இருப்பதாக பேட்டிகள் கொடுக்கிறார்கள்.

எக்காரணம் கொண்டும் பிரபு தேவாவுடன் மட்டும் நடிக்கக் கூப்பிடாதீங்க! - இது நயன் வேண்டுகோள்

இந்தியில் பரபரப்பான இயக்குநராகத் திகழும் பிரபு தேவா, மீண்டும் தமிழ்ப் படங்கள் இயக்கவும், தெலுங்கில் நடிக்கவும் தயாராகிவிட்டார். அப்படி அவர் ஒப்புக் கொண்ட தெலுங்குப் படத்துக்காகத்தான் நயன்தாராவிடம் பேசினார்களாம்.

அதற்கு நயன்தாரா சொன்ன பதில்தான் மேலே நீங்கள் படித்தது!

யார் கண்டது.. இன்னும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு நயனின் இந்த மனநிலை மாறினாலும மாறலாம்!

 

பப்ளிசிட்டிக்காக கொளுத்திப் போட்ட கிசுகிசு... நிஜமாகவே டூ விட்டுக் கொண்ட நடிகைகள்!

சென்னை: உயரமான யோகா நடிகை நடித்துள்ள மெகா பட்ஜெட் படம் ஒன்று விரைவில் ரிலீசாக உள்ளது. நீண்ட காலமாக தயாரிக்கப் பட்டு வரும் இப்படம் தொடர்பாக ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக் கிடக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தில் காதலைக் கண்ட நடிகையைச் சேர்த்தார் இயக்குநர். பால் போன்ற வண்ணத்தில் சிக்கென ஸ்லிம்மாகி இப்படத்தில் நடிகை தோன்றும் ஸ்டில்கள் இணையத்தில் உலா வந்தன.

பப்ளிசிட்டிக்காக கொளுத்திப் போட்ட கிசுகிசு... நிஜமாகவே டூ விட்டுக் கொண்ட நடிகைகள்!

அதோடு, இப்படத்தில் உயர்ந்த நடிகையை விட, புதிதாக வந்த காதல் நடிகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதாகவும் செய்தி பரவியது. இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உயரமான நடிகையின் காதுக்கும் இந்தத் தகவல் சென்றதால், நடிகை அப்செட் ஆகிவிட்டாராம். புதிய போட்டியாக முளைத்த காதல் நடிகையோடு பேசுவதையும் தடாலடியாக நிறுத்தி விட்டாராம்.

ஆனால், பரவிய வதந்தியில் உண்மையில்லையாம். சும்மா பட விளம்பரத்திற்காக வேண்டப்பட்டவர்களே இந்த வதந்தியைப் பரப்பியதாக கூறுகிறார்கள் விசயம் தெரிந்தவர்கள்.

 

விழுந்து விழுந்து கவனித்த படக்குழு: ஓவரா சீன் போட்ட நம்பர் நடிகை

சென்னை: பேய் படக்குழுவினர் ஓவராக தாங்கியதால் நம்பர் நடிகை வழக்கத்திற்கு மாறாக ஓவர் சீன் போட்டாராம்.

நம்பர் நடிகை ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டால் அவர் அர்பணிப்புடன் நடந்து கொள்வார். கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளபோதிலும் அவர் படப்பிடிப்பு தளத்தில் சீன் போட மாட்டார், யாரையும் அதிகாரம் செய்து எரிச்சல் அடைய வைக்க மாட்டார்.

நல்லா இருந்த நம்பர் நடிகையை இப்படி மாத்திட்டாங்களே பரமா!

நடிகையின் இந்த குணங்களால் தான் அவரை தயாரிப்பாளர்களுக்கு பிடித்துள்ளது. ஹீரோவுடனான கெமிஸ்ட்ரியை திரையில் அருமையாக கொண்டு வந்துவிடுவார் என்பதால் அவருடன் நடிக்க அனைத்து இளம் ஹீரோக்களும் போட்டி போடுகிறார்கள்.

இந்நிலையில் நடிகை ஒரு பேய் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பின்போது படக்குழுவினர் நடிகையை விழுந்து விழுந்து கவனித்துள்ளனர். இதை பார்த்த நடிகை பிற நடிகைகளை போன்று அதிகாரம் செய்ய ஆரம்பித்துவிட்டாராம்.

நல்லா இருந்த பொண்ணை தேவையில்லாமல் தாங்கி இப்படி மாற்றிவிட்டாங்களே என்று தயாரிப்பு வட்டம் புலம்பியதாம்.

 

மங்காத்தா இந்தி ரீமேக்கில் யார் 'தல'?: சல்லுவா, அக்கியா?

மும்பை: மங்காத்தா இந்தி ரீமேக்கில் அஜீத்தின் கதாபாத்திரத்தில் சல்மான் கான் அல்லது அக்ஷய் குமார் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் குமார் நடித்த ஹிட் படமான மங்காத்தா இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. மங்காத்தாவின் ரீமேக் உரிமையை ஸ்டுடியோ கிரீன் பெற்றுள்ளது. பாலிவுட்டில் தென்னிந்திய படங்களை ரீமேக் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மங்காத்தா இந்தி ரீமேக்கில் யார் 'தல'?: சல்லுவா, அக்கியா?

ரீமேக் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருபவர்கள் சல்மான் கானும், அக்ஷய் குமாரும். இந்நிலையில் அவர்களில் யாராவது ஒருவரை மங்காத்தா இந்தி ரீமேக்கில் அஜீத் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ரந்தீப் ஹூடா அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மங்காத்தா இந்தி ரீமேக்கை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கிறது. அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் இந்தி படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சல்மான் கான் போலீஸ் அதிகாரியாக நடித்த தபாங், தபாங் 2 படங்கள் வெற்றி பெற்றன என்பது நினைவிருக்கலாம்.

 

முதல் முறையாக விக்ரமுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்

கொஞ்ச காலம் பட வாய்ப்புகள் இல்லாமலிருந்த காஜல் அகர்வாலுக்கு, இப்போது அடுத்தடுத்து புதுப்பட வாய்ப்புகள்.

அவற்றில் ஒன்றில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார் காஜல். இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர்.

முதல் முறையாக விக்ரமுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்

தமிழில் சூர்யா, விஜய், கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்த காஜல், இப்போதுதான் முதல் முறையாக விக்ரமுடன் ஜோடி சேர்கிறார்.

இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது.

காஜல் அகர்வால்தான் இந்தப் படத்தின் நாயகி என்பதில் உறுதியாக நின்றவர் முருகதாஸ்தானாம். துப்பாக்கியிலிருந்து தொடரும் நட்பு காரணமாக கொடுக்கப்பட்ட வாய்ப்பு என்கிறார்கள்!

 

அட, நெசமாவே 3 மாசம் புதுப்படம் ரிலீஸ் ஆகாதா?

சில தினங்களுக்கு முன் நடந்த தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில், இப்போதுள்ள திரைத்துறையின் ஒழுங்கற்ற பட வெளியீடுகள் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்க 6 மாதங்களுக்கு தொழிலை நிறுத்திவிடலாம். படங்களையும் வெளியிட வேண்டாம் என்ற ஒரு யோசனையைச் சிலர் முன் வைத்தனர்.

இதற்கு எதிரான கருத்துகள் மிகக் குறைந்த அளவுக்குதான் வந்தன. 6 மாதங்கள் வேண்டாம்... 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கலாம் என்று அதில் சிலர் திருத்தம் சொல்ல, அதை அனைவருமே கிட்டத்தட்ட ஏற்றுக் கொண்டனர்.

அட, நெசமாவே 3 மாசம் புதுப்படம் ரிலீஸ் ஆகாதா?

இதைப் பார்த்த சங்கத் தலைவர் கலைப்புலி தாணு, உறுப்பினர்களின் பெரும் ஆதரவுடன் வந்திருக்கும் யோசனையை கவுன்சில் புறக்கணிக்காது. அனைவருடனும் கலந்து பேசிவிட்டு இரண்டு வாரங்களில் ஒரு முடிவை அறிவிப்போம் என்றார்.

இப்போது உண்மையிலேயே இப்படி ஒரு வேலை நிறுத்தம் வந்தால் கூட நல்லதுதான், அப்படி வந்தால் என்னென்ன மாற்றங்கள் வரக் கூடும் என்பது பற்றியும் பலரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், இந்த மூன்று மாத காலம் படத்தை வெளியிடாமல் முடக்கினால், வாங்கிய கடன்களுக்கு வட்டி என்னாவது? தினசரி இந்த தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் தொழிலாளர்கள் நிலை? பற்றியும் விவாதித்து வருகிறார்கள்.

இரண்டாவது தரப்பினரின் கேள்விகளுக்கு பதில்களை தயாரிப்பாளர்கள் சிலர் தயாராகவே வைத்துள்ளனர்.

ஒன்று தொழிலாளர்களை அந்த மூன்று மாத காலத்துக்கு முன்கூட்டியே தயார்ப்படுத்துவது போல சில ஏற்பாடுகளைச் செய்வது. அடுத்து கடன் கொடுத்தவர்களிடம் மூன்று மாதங்கள் வட்டி விடுப்பு கோருவது. சினிமா பைனான்ஸியர்களும் சினிமாவில் ஒரு அங்கம்தானே. எனவே துறையின் நலன் கருதி, அவர்கள் மூன்று மாத காலத்துக்கு வட்டி கேட்காமல் இருக்க வேண்டும் என்ற யோசனையையும் சிலர் முன் வைத்துள்ளனர்.

அப்ப நிசமாவே 3 மாதங்களுக்கு புதுப்படங்கள் வராதா?

 

குடும்பத்துடன் ”ஹோலி” கொண்டாட்டம் – ஜோதிகாவுக்கு சூர்யாவின் “டபுள் டிரீட்”

சென்னை: திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் நடிக்காமல் "லீவு" விட்டிருந்த ஜோதிகாவிற்கு மீண்டும் நடிக்க பச்சைக் கொடி காட்டியதுடன், மற்றொரு ஆசையையும் நிறைவேற்றி வைத்துள்ளார் அவரது அன்புக் கணவர் சூர்யா.

தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் ஜோடி என்றால் சூர்யா-ஜோதிகா தான். இதில் ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

குடும்பத்துடன் ”ஹோலி” கொண்டாட்டம் – ஜோதிகாவுக்கு சூர்யாவின் “டபுள் டிரீட்”

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து இந்திய அளவில் ட்ரண்ட் ஆனது.

இந்நிலையில் தமிழ்நாட்டு மருமகள் ஆன ஜோதிகாவிற்கு ஹோலி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று ஆசை வந்துள்ளது.

இதை சூர்யாவிடம் கூற, தன் நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து தன் வீட்டிலேயே ஹோலி கொண்டாடி உள்ளனர்.

 

அப்படி பண்ணாதீங்க... இப்படியே பண்ணுங்க... நல்லா வருவீங்க: 'சிவா' வுக்கு 'தல' அட்வைஸ்!

சென்னை: ‘கடும் முயற்சி பண்ணுவதை விட இப்படியே பண்ணினாலே போதும்' என நடிகர் சிவகார்த்திக்கேயனுக்கு நடிகர் அஜீத் அறிவுரை கூறியுள்ளாராம்.

'காக்கி சட்டை' படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது 'ரஜினி முருகன்' என்ற படத்தில் நடித்து வரும் அவர், புதிய படங்களுக்கான கதைகளைக் கேட்டு வருகிறார்.

அப்படி பண்ணாதீங்க... இப்படியே பண்ணுங்க... நல்லா வருவீங்க: 'சிவா' வுக்கு 'தல' அட்வைஸ்!

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த போது, அஜித் தனக்கு வழங்கிய அறிவுரை குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

அதில் அவர், ‘நீங்க நல்லா பண்ணிட்டு இருக்கீங்க. வாழ்த்துகள்" என அஜீத் வாழ்த்தியதாக கூறியிருக்கிறார். மேலும், "கடும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் சார்" என தான் கூறியதற்கு, ‘அதெல்லாம் பண்ணாதீங்க. இப்படியே பண்ணுங்க.. நல்லா வருவீங்க' என அஜீத் அறிவுரை சொன்னதாக தெரிவித்துள்ளார்.

அஜித் தன் மீது அக்கறை கொண்டு சொன்ன அறிவுரையால் நெகிழ்ந்து போயுள்ளாராம் சிவகார்த்திகேயன்.

 

சத்தமாய் “இச்” கொடுக்க சாரகாத்து நாயகிக்கு 1 லட்சம் எக்ஸ்ட்ரா “சார்ஜ்”!

சென்னை: சாரக்காத்து நாயகி புதியதாக நடித்து வருகின்ற படத்தில் ஒரு முத்தக் காட்சிக்கு ஒரு லட்ச ரூபாய் அதிகமாய் "சார்ஜ்" செய்துள்ளாராம் கோடம்பாக்கத்தில்.

மேற்படி அந்த இனிமையான சாரகாத்து நாயகி புதிய படம் ஒன்றில், புதுமுக கதாநாயகன் ஒருவருடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் உச்சக்கட்ட கிளைமாக்ஸ் காட்சியில் இருவரும் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தங்களை பகிர்ந்து கொள்கிற காட்சி இடம்பெறுகிறதாம்.

இதற்காக அந்த நடிகை முத்தமெல்லாம் ஓகேதான் ஆனால், தனது சம்பளத்தில் கூடுதலாக ஒரு லட்சம் தரவேண்டும் என்று கேட்டாராம். தயாரிப்பாளரும் அதற்கு சம்மதித்ததால், முத்த காட்சியில் சந்தோஷமாக நடித்து கொடுத்துள்ளாராம் இனிமை நாயகி.

 

ஸ்ருதிமயமான நடிகையின் திடீர் அமைதி – இசை ஆசையால் அடக்கி வாசிக்கும் நடிகை

சென்னை: எண்பதுகளின் ஹீரோவின் வாரிசு என்ற முகவுரையோடு சினிமாவில் நுழைந்த ராக மயமான நடிகை இப்போதெல்லாம் படப்பிடிப்பு தளங்களில் அடக்கி வாசிக்கின்றாராம்.

முன்பெல்லாம் மடை திறந்த வெள்ளமாக பேசிக் கொண்டிருந்த நடிகை இப்போது தேவையில்லாமல் யாரிடமும் பேசக்கூடாது என்று முடிவு செய்துள்ளாராம்.

ஸ்ருதிமயமான நடிகையின் திடீர் அமைதி – இசை ஆசையால் அடக்கி வாசிக்கும் நடிகை

ஷூட்டிங் முடிந்தபிறகு இப்போதெல்லாம் ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டவண்ணம் இருக்கிறாராம்.

இவருடைய திடீர் மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்று விசாரித்தால், இப்போதைக்கு நடிப்புதான் அவருடைய முழு நேர வேலை என்றாலும், எதிர்காலத்தில் இசைத்துறையில் பெரிய அளவுல சாதிக்கனுமாம்.

அதனால, கிடைக்கிற நேரத்துல புது புது ஆல்பங்களை வாங்கி, அந்த ஆல்பங்களின் மூலமாக இசை நுணுக்கங்களை அறிந்து வருகிறாராம். அதனாலேயே வீண் வெட்டி பேச்சுக்களையெல்லாம் இப்போதிருந்தே குறைத்துக் கொண்டாராம்.

 

சிவாவுக்கு ”வடிவேலு”; தீபக்கிற்கு “விவேக்” – இது கோடம்பாக்கம் ”கலகல”!

சென்னை: வடிவேலுவின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவாவிற்கென்றால், விவேக்கின் தண்ணில கண்டம் வசனத்தினைக் கையில் எடுத்துள்ளார் சின்னத்திரை தொகுப்பாளர் தீபக் தன்னுடைய படத்தின் தலைப்பிற்கு.

தமிழ் சினிமாவில் தற்போது கடினமான வேலை என்றால், ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பது தான். அந்த வகையில் ஏற்கனவே ஹிட் ஆன பாடல்களோ, அல்லது நகைச்சுவை வசனங்களையோ படத்தின் தலைப்பாக வைத்தால் இன்னும் மக்களை கவரும்.

சிவாவுக்கு ”வடிவேலு”; தீபக்கிற்கு “விவேக்” – இது கோடம்பாக்கம் ”கலகல”!

அதேபோல் சமீபத்தில் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சிரிக்க வைத்த டீசர், என்றால் ஒரு ரோடு, ரோட்டுக்கு அந்தாண்ட நா நல்லவன், இந்தாண்ட ரொம்ப கெட்டவன் என்று ராஜேந்திரன் கூறும் "இவனுக்கு தண்ணில கண்டம்" படத்தின் டீசர் தான்.

இப்படத்தில் சின்னத்திரை கலைஞர் தீபக் ஹீரோவாக நடித்துள்ளார். ஏற்கனவே வடிவேலுவில் காமெடியில் மைல் கல்லான வின்னர் படத்தில் இடம்பெறும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் வசனத்தை படத் தலைப்பாக சிவகார்த்திகேயன் பயன்படுத்தி தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாகிவிட்டார்.

தற்போது காமெடி நடிகர் விவேக் ஒரு படத்தில் தண்ணில கண்டம் என்ற வசனத்தைப் பயன்படுத்தியிருப்பார். அதே வசனத்தை இப்படக்குழுவினர் பயன்படுத்த கண்டிப்பாக இந்த படமும் மாபெரும் வரவேற்பு பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த தகவலை இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விவேக் அவர்களே கூறினார்.

 

ஏப்ரல் 17-ம் தேதி விஜய் ஆன்டனியின் 'இந்தியா பாகிஸ்தான்'

விஜய் ஆன்டனி நடித்துள்ள இந்தியா பாகிஸ்தான் படத்தை வரும் ஏப்ரல் 17-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

சலீம் படத்துக்குப் பிறகு விஜய் ஆன்டனி - சுஷ்மா ராஜ் நடித்துள்ள படம் இந்தியா பாகிஸ்தான். இந்தப் படத்தை விஜய் ஆன்டனியே தயாரித்துள்ளார்.

ஏப்ரல் 17-ம் தேதி விஜய் ஆன்டனியின் 'இந்தியா பாகிஸ்தான்'

புதுமுகம் ஆனந்த் இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் வாங்கியுள்ளது.

பசுபதி, ஜெகன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

இந்த மாதத்தில் உத்தமவில்லன், நண்பேன்டா, ஓகே கண்மணி, வை ராஜா வை என முக்கியமான படங்கள் வெளியாகின்றன. அவற்றுடன் இந்தியா பாகிஸ்தானும் இணைகிறது.

 

லிங்கா வரிச் சலுகை வழக்கு நாளைக்கு தள்ளி வைப்பு

லிங்கா படத்துக்கு வரிச்சலுகை வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நாளை தள்ளி வைத்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

"லிங்கா என்பது தமிழ் பெயர் இல்லை. இது சமஸ்கிருத வார்த்தையாகும். மேலும், லிங்கா படத்தின் கதை தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக இல்லை.

லிங்கா வரிச் சலுகை வழக்கு நாளைக்கு தள்ளி வைப்பு

எனவே, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசும், ரஜினிகாந்தும் தகுதியில்லாத படத்துக்கு வரிசலுகை பெற்று, அரசுக்கு ரூ.21 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்," என்று குற்றம்சாட்டி, அந்தப் படத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவரான மெரினா பிக்சர்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி, வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஏ நடராஜன் நாளை ஆஜராகிறார்.

 

'கொம்பன்' திரைப்படத்துக்கு மறு தணிக்கை தேவை! - டாக்டர் கிருஷ்ணசாமி

மதுரை: நடிகர் கார்த்தி நடித்த 'கொம்பன்' திரைப்படத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வசனங்கள் இருப்பதால் அதனை மறுதணிக்கை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

மதுரையில் செவ்வாய்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "விரைவில் திரைக்கு வரவிருக்கும் நடிகர் கார்த்தி - லட்சுமி மேனன் நடித்த 'கொம்பன்' திரைப் படத்தில் குறிப்பிட்ட ஜாதியை உயர்த்தியும், சிறுபான்மை மக்களை தாழ்த்தியும் வசனம் உள்ளதாக அறிகிறோம். அந்த திரைப்படத் தணிக்கை குழு அனுமதியளித்துள்ளது.

'கொம்பன்' திரைப்படத்துக்கு மறு தணிக்கை தேவை!  - டாக்டர் கிருஷ்ணசாமி

அது தவறானது. அந்த திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும். இது சம்பந்தமாக திரைப்படத் தணிக்கை குழுவினரை சந்திக்க உள்ளோம்," என்றார்.

கொம்பன் படம் வரும் மார்ச் 27-ம் தேதி திரைக்கு வருகிறது.

மேலும் அவர் கூறுகையில், "தமிழகத்தில் சமீபகாலமாக ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் கொடூரமான தாக்குதல் மற்றும் தீண்டாமை கொடுமைகளுக்கு ஆளாகி உயிரிழப்புகள் அதிகமாகிறது. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

தென் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனுமதிக்கப்படாத தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. எனவே, குடியரசு விழா மற்றும் சுதந்திர தினத்தை தவிர மாணவர்கள் வேறு விழாக்களைக் கொண்டாட கல்வித் துறை அனுமதிக்க கூடாது. மீறி கொண்டாடும் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.