துப்பாக்கி படத்தை காஜல் அகர்வால் எப்போ பார்த்தார் தெரியுமா?

சென்னை: துப்பாக்கி படத்தை அதன் நாயகி காஜல் அண்மையில் தான் பார்த்துள்ளார் என்று உங்களுக்கு எல்லாம் தெரியுமா?

kajal the late viewer thuppakki

துப்பாக்கி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் அந்த படத்தின் ஹீரோயினான காஜல் அகர்வால் ஊர், உலகமெல்லாம் படத்தைப் பார்த்த பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஹைதராபாத்தில் உள்ள சினிமேக்ஸில் பார்த்துவிட்டு அட படம் நல்லா வந்துருக்கே என்று லேட் ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டாரே படத்தை இரண்டு வாட்டி பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஷூட்டிங்கிற்கு வரும் காஜலுக்கு யூனிட் சாப்பாடு சுத்தமாகப் பிடிக்காதாம். அதனால் ஷூட்டிங் வரும்போது தனது சமையல்காரரையும் கையோடு அழைத்து வந்துவிடுவாராம்.

என்ன விஜய் உங்க ஸ்வீட் கேர்ள் பிரண்ட் இப்படி இருக்கிறாரே?

 

புத்தம், சரணம், கச்சாமி: அஜீத்தின் புதிய பாதை

Buddhism Inspires Ajith Kumar

சென்னை: நடிகர் அஜீத் குமார் புத்த மத கொள்ளைகள் அடங்கிய புத்தகத்தை படித்து வருகிறாராம்.

நடிகர் அஜீத் குமார் ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் கொண்டவர் என்பது பலரும் அறிந்த விஷயம். இந்நிலையில் அவர் தற்போது புத்த மத கொள்கைள் அடங்கிய புத்தகத்தை படித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சாந்தமாகியுள்ள அஜீத் தற்போது மேலும் சாந்தம் ஆகும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் போலும்.

அஜீத் தற்போது விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் சிவாவுடன் அவர் சேரும் புதிய படத்தின் ஷூட்டிங் வரும் டிசம்பர் மாதம் 10ம் தேதி ஹைதராபாத்தில் துவங்குகிறது.

நான் கடவுள், அங்காடி தெரு போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய ஜெயமோகன் தான் சிவாவின் படத்திற்கும் வசனம் எழுதுகிறார். அதனால் இந்த படத்தில் வரும் வசனங்கள் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜீத் குமார் ஆன்மீகத்தில் மூழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

 

துப்பாக்கி வெற்றி: பார்ட்டி மேல பார்ட்டி கொடுக்கும் விஜய்

சென்னை: துப்பாக்கி பட வெற்றியைக் கொண்டாட நடிகர் விஜய் மீண்டும் ஒரு பார்ட்டி கொடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

vijay partying mood

நடிகர் விஜய் முகத்தில் சற்றே அதிக மினுமினுப்பு தெரிகிறது. காரணம் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி வெற்றி பெற்றுள்ளது தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜீத் குமார் என பலரும் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளனர். படம் வெற்றி பெற்றதையடுத்து விஜய் கொடுத்த பார்ட்டியில் விக்ரம், முருகதாஸ், படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

துப்பாக்கியில் மட்டுமில்லை பார்ட்டியிலயும் கலக்கிட்டீங்க விஜய் என்று வந்தவர்கள் பாராட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில் துப்பாக்கி வெற்றியைக் கொண்டாட மீண்டும் ஒரு பார்ட்டி கொடுக்க திட்டமிட்டுள்ளார் விஜய். இந்த பார்ட்டிக்கு தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகினரை அழைக்கவிருக்கிறார்.

துப்பாக்கி வெற்றியை விஜய் ரசிகர்களும் அவர்கள் பாணியில் கொண்டாடிக் கொண்டு தான் இருக்கின்றனர்.

 

ரஜினி மகளாக இருந்தும் என்னாலேயே முடியலையே: ஐஸ்வர்யா தனுஷ்

Rajini S Daughter Aishwarya Finds Difficult To Market

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக இருந்தும், கொலவெறி பாடல் படு பிரபலமாகியும் தனது படத்தை இந்தி மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த கஷ்டப்பட வேண்டியுள்ளதே என்று ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.

43வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பேசிய ஐஸ்வர்யா தனுஷ் கூறுகையில்,

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை இந்தி மக்களிடம் விளம்பரப்படுத்துவதில் எனக்கு கஷ்டமாக உள்ளது. எனது குடும்பப் பின்னணி(சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள்) மற்றும் கொலவெறி பாடல் இன்டர்நெட்டை கலக்கிய பிறகும் எனது படத்தை இந்தி மக்களிடையே விளம்பரப்படுத்த நான் போராடினேன் என்றார்.

ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷ், தோழி ஸ்ருதி ஹாசனை வைத்து எடுத்த 3 படத்தின் மூலம் தான் இயக்குனர் அவதாரம் எடுத்தார். அந்த படத்தில் வந்த ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகப் பிரபலமானது. மக்கள் தங்கள் கவலைகளை எல்லாம் மறந்து பார்க்கும் வகையில் தான் படம் எடுப்பதாக ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

ரஜினி மகளாக இருந்தும் ஐஸ்வர்யாவின் நிலைமையே இப்படி என்றால் எந்த பின்னணியும் இன்று புதிதாக வரும் இயக்குனர்களின் பாடை சொல்லவா வேண்டும்.

 

பரதேசி, அதர்வாவுக்கு நான் செய்த கடமை.. பாலா பேச்சு

Bala Praises Atharva

சென்னை: அதர்வாவுக்கு நான் செய்த கடமையாகத்தான் பரதேசி படத்தைப் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் இயக்குநர் பாலா.

அதர்வாவின் வித்தியாசமான நடிப்பிலும், பாலாவின் இயக்கத்திலும் உருவாகியுள்ள படம் பரதேசி. இதில் நாயகியாக நடித்திருக்கிறார் தன்ஷிகா. வேதிகாவும் படத்தில் இருக்கிறார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட பாலா வழக்கம் போல வித்தியாசமாகப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாலா கூறுகையில், நான் செண்ட்டிமெண்ட் பார்க்காதவன் என்பவன் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே படத்தின் தலைப்பு சென்ட்டிமென்ட்டாக வைக்கப்பட்டதா என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள்.

அதர்வாவிற்கு நான் செய்யும் கடமையாகத்தான் இந்தப்படத்தில் அவனை நடிக்க வைத்தேன்.

ஜி.வி.பிரகாஷூம் அதிகம் பேசாதவன்; நானும் அதிகம் பேசாதவன். அதனால் எப்படி அவனிடம் மியூசிக் வாங்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். படம் முழுவதையும் எடுத்து முடித்து அவனுக்கு போட்டுக் காண்பித்தேன். இதற்கேற்றார் போல் மியூசிக் வேண்டும் என்று கேட்டேன். அது மாதிரியே போட்டுக் கொடுத்து விட்டான்.

வைரமுத்து சாருக்கு படத்தைப் போட்டுக் காண்பித்து இதற்கேற்றார் போல் பாடல்கள் வேண்டும் என்று கேட்டேன். அவர் மூன்று நாட்கள் கழித்து என்னை அழைத்தார். பாடல் வரிகள் அடங்கிய காகிதங்களை என்னிடம் கொடுத்துவிட்டு, இது ரத்தத்தால் எழுதப்பட்ட வரிகள். ஒரு வரி கூட மாறக்கூடாதுஎன்று கூறினார்.

மதுரைப்பக்கம் எப்பவுமே கொஞ்சம் நகைச்சுவையாகத்தானே பேசுவார்கள். அதனால் நானும் சிரித்துக் கொண்டே வாங்கினேன். ஒருவேளை மை தீர்ந்து போய் ரத்தத்தால் எழுதியிருப்பாரோ என்று கூட சிரித்துக் கொண்டேன்.

ஆனால், வீட்டுக்கு வந்து பாடல் வரிகளை படித்துப் பார்த்தபோதுதான் அவர் சொன்னது உண்மை என புரிந்தது. அத்தனை பாடல்களும் ரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது. அது, இந்தப் பாடல்களை கேட்கும்போது உங்களூக்கே தெரியும் என்றார் பாலா.

 

'தேவதையே.. என் தேவதையே...!'

சென்னை: ஒவ்வொருவருக்கும் ஒரு தேவதை இருப்பார்... மனம் கவர்ந்த அந்தப் பெண்ணை அவர்கள் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள். அந்த வகையில் நடிகர் சிம்புவுக்கும் ஒரு தேவதை கிடைத்துள்ளார்... அவர்தான் ஹன்சிகா மோத்வானி. வாயைத் திறந்தாலே ஹன்சிகா புகழ்தான் பாடுகிறாராம் சிம்பு.

simbu hails hansika modhwani

சார்மி தொடங்கி திரிஷா, குத்து ரம்யா வழியாக நயனதாராவைக் கடந்து வரலட்சுமி வரை பலருடனும் ஜோடி போட்டு விட்டார் சிம்பு. ஆனால் தன்னுடன் ஜோடியாக நடித்தவர்களிலேயே தன்னை மிகவும் கவர்ந்தவர் ஹன்சிகாதான் என்று ஒரே போடாகப் போடுகிறார் சிம்பு.

ஹன்சிகாவை தேவதை என்று போற்றிப் பாடுகிறார் சிம்பு. அவரைப் போல அழகும், இளமையும் யாருக்கும் கிடையாது என்றும் புளகாங்கிதப்பட்டுப் பேசுகிறார்.

இதுகுறித்து சிம்பு கூறுவதைக் கேளுங்கள்...

ஹன்சிகா ஒரு தேவதை. மிகவும் அழகானவர். யாராக இருந்தாலும் அவரைத் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியாது. எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் போல தோன்றும். அப்படிப்பட்ட பெண்தான் ஹன்சிகா.

அடுத்து நான் நடிக்கும் வேட்டை மன்னன், வாலு இரண்டு படங்களிலும் எனக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவைத்தான் தேர்வு செய்திருக்கிறேன். அவரது அழகும், சொக்க வைக்கும் இளமை இரண்டையும் மனதில் வைத்துத்தான் அவரை தேர்வு செய்தேன். அவர் ஒரு தேவதை....என்று புல்லரித்துப் போய் கூறுகிறார் சிம்பு.

நிஜம்தான்.. தேவதைகளைப் பார்த்தால், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலத்தான் தோன்றும், சிம்பு மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா என்ன...?

 

பெண்மையை அசிங்கப்படுத்திவிட்டார்: நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்கு

delivery scene case filed against shwetha menon
திருவனந்தபுரம்: மலையாள நடிகை ஸ்வேதா மேனன் தான் நடிக்கும் படத்திற்காக தனது பிரசவத்தை படமாக்க அனுமதித்ததற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகில் கவர்ச்சிப் புயலாக இருப்பவர் ஸ்வேதா மேனன்(38). திருமணத்திற்கு பிறகும் கூட கவர்ச்சியில் கலக்கி வருகிறார். இந்நிலையில் கர்ப்பமான அவர் களிமண்ணு என்ற படத்தில் நடித்தார். அந்த படத்திலும் அவர் கர்ப்பிணியாக நடித்துள்ளார். படத்தில் அவர் குழந்தை பெறும் காட்சி உள்ளது.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஸ்வேதா பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். தனது படத்தில் பயன்படுத்திக் கொள்ள தனது பிரசவத்தை படமாக்க அனுமதித்தார். அதன்படி அவரது பிரசவத்தை பட்ககுழுவினர் படமாக்கினர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில் பிரசவத்தை படமாக்கியது சமுதாயத்திற்கு தேவையற்ற ஒன்று என்றும், இது பெண்மையை அவமானப்படுத்தும் செயல் என்றும் கூறி எர்ணாகுளத்தைச் சேர்ந்த பவுலோஸ் என்பவர் ஸ்வேதா மேனன், களிமண்ணு இயக்குனர் பிளஸி உள்பட 5 பேருக்கு எதிராக அங்குள்ள முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

பாலாவின் பரதேசி ஆடியோ ரிலீஸ்.. பாலுமகேந்திரா வெளியிட்டார்

சென்னை: பாலா இயக்கியுள்ள பரதேசி படத்தின் ஆடியோ இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. பாலாவின் குரு பாலு மகேந்திரா வெளியிட நடிகர்கள் விக்ரம், சூர்யா பெற்றுக் கொண்டனர்.

balu mahendra releases paradesi audio

அவன் இவன் படததிற்குப் பின்னர் பாலா இயக்கியுள்ள படம் பரதேசி. இப்படத்தில் முதல்முறையாக அவர் ராஜா குடும்பத்தை விட்டு வெளியே வந்து ஜி.வி.பிரகாஷ் குமாருடன் இசைக்காக கை கோர்த்துள்ளார்.

இப்படத்தில் நாயகனாக அதர்வாவும், நாயகியாக தன்ஷிகாவும் நடித்துள்ளனர். வேதிகாவும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். உமா ரியாஸுக்கும் முக்கியப் பாத்திரம் தந்துள்ளாராம் பாலா.

இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று சென்னை சத்யம் சினிமாஸில் நடந்தது. பாலாவின் குருவான இயக்குநர் பாலுமகேந்திரா முதல் ஆடியோ சிடியை வெளியிட அதை நடிகர்கள் விக்ரம், சூர்யா பெற்றுக் கொண்டனர். பாலாவின் முதல் படத்தில் விக்ரம் நாயகனாக நடித்தார், 2வது படத்தின் நாயகன் சூர்யா என்பது நினைவிருக்கலாம்.

அதர்வா முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ள பரதேசி டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.