நடிக்க வந்த காமெடி டைம் தொகுப்பாளினி

சூர்ய தொலைக்காட்சியில் காமெடி டைம் தொகுத்து வழங்கிய அர்ச்சனை தொகுப்பாளினி திருமணத்திற்கு பின்னர் பிரேக் விட்டார். மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போது நட்சத்திர சேனலில் திருமண நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

அவ்வப்போது சினிமா ஆடியோ விழாவையும் தொகுத்து வழங்கி வந்தவர் இப்போது சினிமாவில் நடிக்கப் போகிறாராம். அதற்கான வாய்ப்பு அவர் தொகுத்து வழங்கிய பட இயக்குநர் மூலமே வந்துள்ளதாம். ஹீரோயினியின் அக்காவாக பிரியாணி கடை நடத்தும் அட்ராசிட்டி பெண்ணாக நடிக்கும் அந்த தொகுப்பாளினி ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பை பொறுத்து நடிப்பை தொடர முடிவு செய்துள்ளாராம்.

அது வேற இதுவேற... பூ வின் கட் அட் ரைட் பேச்சு

பூ நடிகை தேசிய கட்சியில் சேர்ந்தாலும் சேர்ந்தார். அவரை எப்படியாவது தங்கள் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி செய்ய வைத்துவிடவேண்டும் என்று ஆசையோடு அணுகியுள்ளனர் அந்த கட்சியைச் சேர்ந்த இரு சேனல் அதிபர்கள். ஆனால் பாலிடிக்ஸ் வேற... தொழில் வேற என்று கட் அட் ரைட் ஆக கூறி கையெடுத்து கும்பிட்டு விட்டாராம் பூ.

புது தலைவிக்கு வந்த தலைவலி

சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நளினமான நாயகிக்கு இப்போது ஏகப்பட்ட சிக்கல்கள். டப்பிங் தொடர்கள் மூலம் ஒரு சிக்கல் என்றால் வரும் புகார்கள் எல்லாமே அதேமாதிரியான புகார்கள் தான் வருகிறதாம்.

முன்பெல்லாம் சம்பள பிரச்சினையை விட அந்தமாதிரி பிரச்சினைகள் அதிகமாக வரவே கமுக்கமாக பேசி முடித்தார்களாம். இப்போது புது தலைவிக்கு இது தலைவலியாக போகவே, இதென்னடா இந்த சின்னத்திரை சங்கத்திற்கு வந்த சோதனை... இந்த தலைவலியை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் தவியாய் தவிக்கிறாராம் சின்னப்பாப்பா.

நாட்டாமை ஆளை மாத்து

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட செய்தி சேனல் ரொம்பவே தடுமாறுதாம். அதனால அதிக அளவில் ஆண்களுக்கும் இடம் கொடுத்து கான்செப்டை மாத்த முடிவு செய்துள்ளதாம். இனியாவது 7ஆம் நம்பர் 1ஆம் நம்பருக்கு வருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்கின்றனர்.

 

தள்ளிப் போனது பாகுபலி... ஜூலையில்தான் தரிசனம் கிடைக்கும்!

இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தெலுங்குப் படமான பாகுபலி வெளியாவது இரண்டு மாதங்கள் தள்ளிப் போயின.

ராஜமவுலி இயக்கும், சரித்திரப் படமான இதில் நடிகர் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர் மற்றும் சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். கீரவாணி இசையமைக்க, படத்தின் எடிட்டிங்கை கோட்டகிரி வெங்கடேஷ்வரராவ் கவனிக்கிறார்.

Bahubali release postponed to July

ஆர்கா மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனம் இதனைத் தயாரித்து வருகிறது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீஸாகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாகுபலி படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது.

படம் மே 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்விட்டது. படம் ஜூலை மாதம் திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ராஜமவுலி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், "பாகுபலி படத்தின் முதல் பாகத்தை மே 15ம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவித்திருந்தோம். திட்டமிட்டபடி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட பணிகளை முடிக்க முடியவில்லை. அதனால் பாகுபலி வெளியீட்டை ஜுலை மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறோம். படத்தின் டிரைலரை மே 31ம் தேதி வெளியிட உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். பாகுபலி படம் தமிழில் 'மகாபலி' என்ற பெயரில் வெளியாக உள்ளது," என்று கூறியுள்ளார்.

 

ரஜினி என் இன்ஸ்பிரேஷன், தலைவர், கடவுள் - சிவகார்த்திகேயன் உருக்கம்

ரஜினி என் இன்ஸ்பிரேஷன், தலைவர், கடவுள்.. அவர் பெயர் என் படத் தலைப்பில் அமைந்தது என் வாழ்நாள் அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பட இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சூரியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Sivakarthikeyan thanked Rajini

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் மே மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ரஜினி முருகன் என்ற தலைப்பில் படம் அமைந்தது, சிவகார்த்திகேயனை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறும்போது, "என்னுடைய கடவுள், என்னுடைய இன்ஸ்பிரேஷன், என்னுடைய தலைவர் ரஜினி அவர்களின் பெயரில் என்னுடைய படம் அமைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பெருந்தன்மையுடன் இந்த தலைப்பை அனுமதித்த தலைவர் ரஜினிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

 

"நம்பருக்கு"க் கல்யாணம்.. இருந்தும் படங்கள் குவிவதால் பிற நடிகைகள் “திகுதிகு”

சென்னை: கல்யாண நிச்சயதார்த்தம் முடிந்த பின்னரும் கூட மூணு சா நடிகைக்கு படங்கள் கமிட்டாகி வருகின்ற காரணத்தினால் மற்ற நடிகைகள் கடுப்ஸ் ஆப் இண்டியாவாக உள்ளனராம்.

மேரேஜ் எங்கேஜ்மென்ட் முடிந்துவிட்டது. இனி அவ்வளவுதான் என்று நினைக்கப்பட்டு வந்தார் அந்த நம்பர் நடிகை. இதனால் மற்ற நடிகைகள் சற்று நிம்மதியுடன் காணப்பட்டனர்.

இனி மூணு நடிகைக்குப் போகும் வாய்ப்புகள் எல்லாம் தங்கள் பக்கம் திரும்பி வரும், நாமும் சந்தோஷமாக இருக்கலாம் என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது.

ஆனாலும், மூணு சா நடிகைக்கு தொடர்ந்து படங்கள் கமிட்டாவதால் கடுப்பாகியுள்ளனராம் சக ஹீரோயின்கள். குறிப்பாக வேர்ல்ட் ஹீரோவுடன் மீண்டும் இவர் இணைவது எரிச்சலை அதிகப்படுத்தியுள்ளதாம்.

ஆனால் தற்போது மூணு சா நடிகையின் திருமணமே பெரும் கேள்விக்குறியாகியுள்ளதால் நடிகைகள் மத்தியில் பெரும் குழப்பமாகியுள்ளதாம். மறுபடியும் முதல்ல இருந்தா என்ற டென்ஷனுக்கு அவர்கள் போய் விட்டனராம்.

 

வெளியானது உத்தம வில்லன் 3 வது ட்ரைலர்!

கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படத்தின் 3வது ட்ரைலர் நேற்று வெளியானது.

இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில், நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘உத்தம வில்லன்'. இதில் கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடிக்கின்றனர். இவர்களுடன் இயக்குனர்கள் கே.பாலசந்தரும், கே.விஸ்வநாத்தும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

'உத்தம வில்லன்' படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். படம் சென்சார் ஆனதைத் தொடர்ந்து மே 1ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் உத்தமவில்லன் படத்தின் 3-வது டிரைலர் வெளியாகி உள்ளது. 1.11 நிமிடம் ஓடும் இந்த ட்ரைலர் மறைந்த பாலச்சந்தருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

 

காஞ்சனா-2 விளம்பரத்துக்காக புதிய பாடலைப் படமாக்கும் லாரன்ஸ்

வசூலில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2 படத்தின் விளம்பரத்துக்காக சில்லாட்ட பில்லாட்ட என்ற பாடலை புதிதாக படமாக்கவிருக்கிறார்கள்,

ராகவா லாரன்ஸ் நடித்து, இயக்கி வெளிவந்த ‘காஞ்சனா 2-' படம் கடந்த வாரம் வெளியானது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த முந்தைய இரண்டு பாகங்களைப் போலவே இந்த படத்தையும் பேய்ப் படமாக எடுத்திருந்தார்.

கோடையில் குடும்பத்துடன் போய் இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்கின்றனர் ரசிகர்கள்.

New promo song for Kanchana 2

படத்தின் பாடல்கள் பெரிதாக பேசப்படும் அளவுக்கு இல்லை என்றாலும், அவற்றைப் பார்க்கும்படி படமாக்கியிருந்தார் லாரன்ஸ்.

இந்தப் படத்துக்கு ரசிகர்களை மேலும் ஈர்ப்பதற்காக ஒரு விளம்பர பாடலை படமாக்கப் போகிறார் லாரன்ஸ். படத்தில் இடம்பெறும் சில்லாட்ட பில்லாட்ட என்ற பாடலையே அதற்கு பயன்படுத்தப் போகிறாராம். இதில் நித்யா மேனன், டாப்சியுடன் லாரன்ஸ் ஆட்டம் போடப் போகிறார். மூவரும் பங்கு பெரும் பாடல் காட்சி படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு நடந்து வருகிறது.

 

நகைச்சுவைையை தொடர்ந்து கவுரவிக்கும் சத்யபாமா பல்கலைக் கழகம்

சின்னக் கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக்குக்கு சத்யபாமா பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது.

இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக நகைச்சுவைக் கலைஞர்களை கவிரவித்துள்ளது இந்த பல்கலைக் கழகம்.

விவேக்குக்கு முன் நடிகை மனோரமாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது சத்யபாமா பல்கலை.

Vivek gets honorary Doctorate

திரைப்படங்களில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களுடன் காமெடி செய்து வருபவர் விவேக். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் இவரது நகைச்சுவைக்கு பெரும் வரவேற்பு உண்டு.

கடவுள் பக்தி உள்ளவர் என்றாலும், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து திரையில் பிரச்சாரமே செய்து வருபவர் விவேக் என்றால் மிகையல்ல. சாமி, திருநெல்வேலி, காதல் சடுகுடு, தூள் போன்ற படங்களில் இவரது நகைச்சுவை அத்தனை சிறப்பாக இருக்கும்.

அதேபோல, உத்தம புத்திரன், வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் விவேக்கின் நகைச்சுவை வயிறு குலுங்க வைத்தவை.

தமிழ் திரைப்படத் துறையில் இவரது பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது.

நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் நாட்டம் கொண்டவர். தற்போது தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி மரக் கன்றுகள் நடும் திட்டத்தை கையிலெடுத்து முன்னின்று நடத்தி வருகிறார்.

சுமார் 25 ஆண்டுக்ளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான நகைச்சுவையைத் தந்து வரும் கலைஞனான விவேக்கைப் பாராட்டி சத்யபாமா பல்கலைக்கழகம் ‘டாக்டர்' பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

ஏற்கெனவே, இயக்குநர் கே பாலச்சந்தர், நடிகர் கமல் ஹாஸன் உள்ளிட்டோருக்கும் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது சத்யபாமா பல்கலைக்கழகம்.

நகைச்சுவை நடிகர்களுக்கு வேறு எந்த பல்கலைக் கழகத்திலும் இதுபோன்ற கவுரவ டாக்டர் பட்டங்கள் அளிக்கப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

 

உத்தம வில்லனை தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது ஸ்டுடியோ கிரீன்!

உத்தம வில்லன் படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

சமீப காலமாக ஸ்டுடியோ கிரீனுக்கு சுக்கிர தசைதான்... அந்த நிறுவனம் தயாரித்து வெளியிட்ட கொம்பன் மிக நல்ல வரவேற்பைப் பெற்றது.

அடுத்து, இந்த நிறுவனம் பெற்ற படம் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி. இந்தப் படமும் நன்றாகவே போனது.

Studio Green to release Uthama Villain in Tamil Nadu

இதையெல்லாம் பார்த்துதானோ என்னமோ, இப்போது உத்தம வில்லனை தமிழகத்தில் வெளியிடும் பொறுப்பை ஸ்டுடியோ கிரீனுக்கு தந்துள்ளது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.

உத்தம வில்லனின் உலகளாவிய உரிமை ஈராஸ் நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது.