உறவினர்கள் ஏமாற்றியதால் பல கோடி ரூபாய் சொத்துகளை இழந்து தெருவுக்கு வந்த நடிகர் கார்த்திக்!

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90 -களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் கார்த்திக். மறைந்த நடிகர் முத்துராமனின் மகன்.

அன்றைக்கு ரஜினி, கமலுக்கு அடுத்த நிலை நடிகராகத் திகழ்ந்தார். இந்த இருவரும் நடிக்க இயலாத படங்கள், வேடங்களில் கூட கார்த்திக் அட்டகாசமாக நடித்தார்.

இயக்குநர் ஷங்கர் தன் ஜென்டில்மேன் படக்கதையை கார்த்திக்கை மனதில் வைத்து எழுதியதாகச் சொல்வார். அதேபோல, கார்த்திக்குக்காக எழுதப்பட்ட கதைதான் இந்தியன்.

உறவினர்கள் ஏமாற்றியதால் பல கோடி ரூபாய் சொத்துகளை இழந்து தெருவுக்கு வந்த நடிகர் கார்த்திக்!

இப்படி கொடிகட்டிப் பறந்த கார்த்திக், திடீரென்று காணாமல் போனது காலத்தின் கோலமல்ல, அவரது தனிப்பட்ட குணாதிசயம். லட்ச லட்சமாக சம்பாதித்தாலும் அதை தனக்காக வைத்துக் கொள்ளாமல், உறவினர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு, ஜாலியாக வாழ்ந்தவர் கார்த்திக்.

அம்மா மீது மிகுந்த பாசம் வைத்திருந்த அவர், தனது வருவாய் முழுவதையும் அம்மா, அண்ணன், சகோதரிகள் மற்றும் உறவுகளுக்கே வாரி வழங்கியதாகச் சொல்வார்கள் அவருடனிருந்தவர்கள். சக நடிகர்களுக்கும் நிறைய கொடுத்து உதவியிருக்கிறார், அது திரும்ப வருமா வராதா என்று யோசிக்காமலே.

ஆனால் நேரத்தை மதிக்காதது, தொழிலில் கவனமின்மை ஆகிய இரண்டு விஷயங்கள் அவரைக் கவிழ்த்தன (அவரது அரசியல் காமெடி தனிக்கதை).

முத்துராமனுக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடுகள் மற்றும் வணிக வளாகம் உள்ளது. இவற்றின் மதிப்பு பல கோடிகள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இவை தவிர, கார்த்திக் சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துகளும் உள்ளன.

முத்துராமனின் பூர்வீக வீட்டில் கார்த்திக் குடும்பத்துடன் வசித்தார். இதே வீட்டில் முத்துராமன் மனைவி சுலோசனா மற்றும் குடும்பத்தினர் வசித்தார்கள். முத்துராமனுக்கு கார்த்திக் தவிர இன்னொரு மகன் மற்றும் மகள்கள் உள்ளனர்.

கார்த்திக் குடும்பத்தினர் இடையே சமீபத்தில் திடீர் சொத்து தகராறு ஏற்பட்டது. வீட்டை விட்டு வெளியேறும்படி அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். சொத்தில் எனக்கும் பங்கு உண்டு. நான் ஏன் வெளியேற வேண்டும் என்று கார்த்திக் வெளியேற மறுத்த போதுதான், உயிலை அவரிடம் காட்டினார்களாம்.

சொத்து உயில் அவர் பெயரில் இல்லை. அண்ணன் பெயரிலும் மற்றவர்கள் பெயரிலும்தான் இருந்ததாம். அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கார்த்திக், தன்னை ஏமாற்றி விட்டதாக சண்டை போட்டார். தன் பணத்தில் வாங்கிய சொத்துகளை தனக்கே தெரியாமல் உறவினர்கள் பெயரில் மாற்றி எழுதிக் கொண்டதைச் சொல்லி குமுறினார். ஆனால் வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

சொத்தில் தனக்கும் பங்கு உண்டு என்றும், ஏமாற்றப்பட்டு விட்டேன் என்றும் நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டு பேசி வருகிறார் கார்த்திக். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறார்.

கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் இப்போது முன்னணி இளம் நாயகர்களில் ஒருவராக உள்ளார். மகன் விவகாரங்களை கார்த்திக்தான் கவனித்து வருகிறார்.

 

சமந்தாவை அடுத்து தமன்னாவுக்கும், மகேஷ் பாபுவுக்கும் இடையே லடாயா?

ஹைதராபாத்: மகேஷ் பாபுவுக்கும், தமன்னாவுக்கும் இடையே பிரச்சனை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

தமன்னாவும், மகேஷ் பாபுவும் சேர்ந்து தற்போது ஆகடு என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்கள். சீனு வைட்லா இயக்கி வரும் இந்த படத்தின் பாடல் காட்சிகளை படமாக்க படக்குழு சுவிட்சர்லாந்து சென்று வந்துள்ளது.

சமந்தாவை அடுத்து தமன்னாவுக்கும், மகேஷ் பாபுவுக்கும் இடையே லடாயா?

இந்நிலையில் படப்பிடிப்பில் மகேஷ் பாபுவும், தமன்னாவும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்வது இல்லையாம். ஏன் நல்லா பேசிப் பழகும் இருவரும் இப்படி பேசாமல் உள்ளனர் என்று படக்குழுவினர் வியக்கிறார்களாம்.

அதே சமயம் சுவிட்சர்லாந்து சென்று இருந்த இடத்தில் தமன்னா மகேஷ் பாபுவின் மனைவியோடு ஜாலியாக பேசியுள்ளார். அவருடன் சேர்ந்து ஷாப்பிங் கூட சென்றுள்ளார்.

முன்னதாக சமந்தா, மகேஷ் பாபு இடையே பிரச்சனை இருந்தது. ஆனால் விருது விழாவில் பார்த்து பேசி ராசியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விநாயகர் சதுர்த்தியன்று விஜய் டிவியில் மூடர் கூடம், புதுயுகத்தில் பார்த்தீபன் 'டே-அவுட்'

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் நாளை சிறப்பு நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.

விஜய் டிவியில் சிறப்பு திரைப்படங்களாக காலை 10 மணிக்கு 'வில்லா', பகல் 12 மணிக்கு 'மூடர் கூடம்', மாலை 4 மணிக்கு 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', இரவு 7 மணிக்கு சிறுத்தை, இரவு 11 மணிக்கு 'சைனீஸ் சோடியாக்' ஆகிய திரைப்படங்களை ஒளிபரப்புகிறது.

விநாயகர் சதுர்த்தியன்று விஜய் டிவியில் மூடர் கூடம், புதுயுகத்தில் பார்த்தீபன் 'டே-அவுட்'

புதுயுகம் டிவியில் காலை 11 மணிக்கு, 'ஸ்டாரின் டே அவுட்' என்ற வித்தியாசமான நிகழ்ச்சி காண்பிக்கப்படுகிறது. இயக்குநர் பார்த்தீபன் ஒவ்வொரு திரையரங்காக சென்று கதை, திரைக்கதை வசனம், இயக்கம் திரைப்படம் குறித்த விமர்சனத்தை ரசிகர்களிடமே கேட்டு தெரிந்துகொள்ளப்போகிறார்.

பகல் 12 மணிக்கு, 'செலப்ரிட்டி கிச்சன்' ஸ்பெஷல் நிகழ்ச்சியில், நடிகை சுலோக்ஷனா பங்கேற்கிறார்.

மாலை 5 மணிக்கு, 'கோலிவுட் அன்கட்' நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு சீயர்ஸ் வித் சூப் பாய்ஸ் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு ஜோடி புதுசு நிகழ்ச்சியும் காண்பிக்கப்படுகிறது.

இரவு 8 மணிக்கு 'ஆர் யூ அப்பாடக்கர்' சிறப்பு நிகழ்ச்சியில் சினிமா ஸ்டார்கள் பங்கேற்கிறார்கள். இரவு 9 மணிக்கு லிங்குசாமியுடன், மதன் சந்திப்பு நிகழ்ச்சி காண்பிக்கப்படுகிறது.

 

ஷங்கர், விக்ரமின் 2 வருட உழைப்பின் பயனான 'ஐ' படத்தை வாங்கிய ஜெயா டிவி

சென்னை: விக்ரம் நடித்துள்ள ஐ படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜெயா டிவி வாங்கியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடித்துள்ள ஐ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்காக விக்ரம் இரண்டு ஆண்டுகளாக உடல் எடையை அதிகரித்தும், குறைத்தும் கடினமாக உழைத்துள்ளார்.

ஷங்கர், விக்ரமின் 2 வருட உழைப்பின் பயனான 'ஐ' படத்தை வாங்கிய ஜெயா டிவி

ஐ படத்தை சீனாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர்கள் ஆர்னால்டு, ஜாக்கி சான் ஆகியோர் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜெயா டிவி வாங்கியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்த வல்லினம் மற்றும் திருமணம் என்னும் நிக்காஹ் ஆகிய படங்களின் சாட்டிலைட் உரிமங்களையும் ஜெயா டிவி தான் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

3 நடிகைகளுக்குள் சண்டை மூட்டிவிடும் இளம் ஹீரோ

சென்னை: பெயரில் வெனயத்தை வைத்திருக்கும் நடிகர் தற்போது தான் நடித்து வரும் படத்தில் தன்னுடன் நடிக்கும் 3 நடிகைகளுக்குள் சண்டை மூட்டி விடுகிறாராம்.

பெயரிலேயே வெனயத்தை வைத்துள்ள அந்த நடிகர் தற்போது 4 படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தில் பெயரில் மதுவை வைத்துள்ள நடிகை அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றபோது நடிகர் அந்த நடிகையுடன் ஜோடி போட்டு ஜாலியாக சுற்றியுள்ளார். அவர்கள் ஜாலியாக சுற்றியதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு தயாரிப்பாளர் தான் கன்னத்தில் கையை வைத்து ஓரமாக உட்கார்ந்தாராம்.

இந்நிலையில் நடிகர் நடித்து வரும் மற்றொரு படத்தில் 3 நாயகிகள். நடிகர் 3 நாயகிகளுடன் ஜாலியாக கடலை போட்டு சுற்றுகிறாரா என்று கேட்கிறீர்களா. கடலை ஒரு பக்கம் இருந்தாலும் நடிகைகளுக்குள் போட்டுக் கொடுத்து சண்டை மூட்டி விடுகிறாராம்.

என்னய்யா ஹீரோ இவர் இப்படி நடிகைகளை மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறாரே என்று தலையில் அடித்துக் கொள்கிறதாம் படக்குழு.

 

நாய்களை அடிப்பவர்களை காட்டிக் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு: நடிகை அறிவிப்பு

மும்பை: நாய்களை அடிப்பவர்களை அடையாளம் காட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று பாலிவுட் நடிகை இஷா குப்தா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை இஷா குப்தா ஒரு விலங்கு பிரியர். அவர் வீ்ட்டில் 2 தெரு நாய்கள் உள்பட 4 நாய்கள் உள்ளன. அதில் ஒரு நாய் அண்மையில் தான் இறந்து போனது. இந்நிலையில் அவரது மேக்கப் மேன் யாரோ ஒருவர் நாயை அடித்து துன்புறுத்தும் வீடியோவை அவரிடம் காண்பித்துள்ளார்.

நாய்களை அடிப்பவர்களை காட்டிக் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு: நடிகை அறிவிப்பு

அதை பார்த்து கோபம் அடைந்த இஷா நாயை அடித்த அந்த நபரின் மர்ம உறுப்பை அறுக்க வேண்டும் என்று கொந்தளித்தார். இந்நிலையில் அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, யாராவது நாயை அடித்து துன்புறுத்துவதை பார்த்தால் அதை வீடியோ எடுத்து அந்த நபரை அடையாளம் காட்டுபவர்களுக்கு தான் ரூ.1 லட்சம் பரிசு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இஷாவின் இந்த அதிரடி அறிவிப்பு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

 

நடிகையின் பிடியில் 'ஒரு இயக்குநர் இரண்டு ஹீரோக்கள்'!

தான் ஒரு பச்சைத் தமிழச்சி என தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஹீரோயின் அவர். முகத்திலும் தோள்களிலும் முதிர்ச்சி எட்டிப் பார்த்தாலும் கோலிவுட்டைப் பொறுத்தவரை அவர் ப்ரியமான இளம் 'ஹீரோயினி'தான்.

ஆரம்பத்தில் இவரது படங்கள் ஒன்று கூட எடுபடவில்லை. இந்தப் பொண்ணு நடிச்சா அவ்ளோதாம்பா என்று திரும்பிப் பார்க்காமல் போய்விட்டார்கள் தயாரிப்பாளர்கள். நடிகர்களின் ஆதரவும் இல்லாத நிலையில், முன்னாள் நடிகை ஒருவரின் மறுபிரவேசப் படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது.

எப்படியோ எதிர்நீச்சல் போட்டு இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகிவிட்டார்.

இப்போது கிடைத்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். இல்லாவிட்டால் பழையபடி ராசியில்லாத பட்டம் தேடி வந்துவிடுமோ என்ற பயம்.

பார்த்தார்.. உடனே நினைவுக்கு வந்தது கலைக்குடும்ப நடிகரின் டெக்னிக்தான். பார்ட்டி, டிஸ்கஷன் என்ற பெயரில் உடன் நடித்த ஹீரோக்களை வளைக்க ஆரம்பித்துவிட்டாராம். அவரது அன்புப் பிடியில் இப்போது சிக்கியிருப்பவர்கள் மறைந்த காலேஜ் ஹீரோவின் மகனும், காதல் ஹீரோவின் மகனும்தான். இந்த இருவரும் இப்போது பெரும்பாலான நேரத்தைக் கழிப்பதே ஹீரோயினுடன்தானாம்.

உடன் நடித்த ஹீரோக்கள் விழுவதில் ஆச்சர்யமில்லைதான். ஆனால் அவரை வைத்து இயக்கிய டைரக்டரையும் கப்பென்று பிடித்துக் கொண்டார் நடிகை.

ஆரம்பத்தில் அந்தப் படத்தில் இவரல்ல நாயகி. இத்தனைக்கும் அவரைப் பார்த்து ரொம்ப மெச்சூர்டா இருக்காளே.. என்று சொன்ன டைரக்டருக்கு என்ன நடந்ததோ... ப்ரிய நாயகியே இருக்கட்டும் என ஆனந்தமாக ஒப்பந்தம் செய்தார்.

இதன் விளைவு, திட்டமிட்ட பட்ஜெட்டை விட ஒன்றரை கோடி அதிகமாக விழுங்கியிருக்கிறது அந்தப் படம். நாயகியின் அன்பில் அளவுக்கு மீறி நனைந்துவிட்டதால், சோலோ பாடல் வைத்திருக்கிறார் டைரக்டர். நாயகி யாரை நோக்கி கை நீட்டினாரோ, அவர்தான் மேக்கப் மேன்.. யாரை சிபாரிசு செய்தாரோ அவரே நடன இயக்குநர்...

இந்த ரேஞ்சில் போனால் நடிகையின் கொடி பறக்கும்.. ஆனால் சம்பந்தப்பட்ட இயக்குநர் மற்றும் நடிகர்களின் கதி?

கவலையோடு பார்க்கிறது சம்பந்தப்பட்டவர்களின் நட்பு வட்டம்!