சென்னை: ஜூலை மாதம் 17 ம் தேதி வெளியாகும் என்று பல மாதங்களுக்கு முன்பே ரஜினிமுருகன் படக்குழுவினர் அறிவித்திருந்தாலும், அதனைப் பற்றிய எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இடம் பொருள் ஏவல் படத்திற்கு தொடர்ந்து விளம்பரம் செய்து வருகின்றது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.
வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் ரஜினிமுருகன், வருத்தபடாத வாலிபர் சங்கத்தின் மாபெரும் வெற்றிக்குப்பின்னர் மீண்டும் அதே குழுவினர் இணைந்து உருவாக்கி இருக்கும் ரஜினிமுருகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
ரஜினிமுருகனுக்கு போட்டியாக தனுஷின் மாரி மற்றும் சிம்புவின் வாலு போன்ற படங்களும் வெளியாகும் என்று கூறியதால், எல்லாவற்றிலும் போட்டி கடுமையாக என்று திரையுலகினர் சார்பில் கூறப்பட்டது.
ஆனால் படத்தை வாங்கி வெளியிடும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ரஜினிமுருகன் பற்றி வாயைத் திறக்காமல், இடம் பொருள் ஏவல் படத்திற்கு தொடர்ந்து விளம்பரம் செய்து வருகின்றனர்.
ரஜினிமுருகன் படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகள் இன்னும் முடியவில்லை என்று, என்று ஒரு காரணத்தை வேறு கூறி வருகின்றனர். காரணம் அந்த அளவுக்கு இல்லை என்று சொல்பவர்களுக்கு நன்றாகத் தெரியும், இருந்தும் ஏன் இப்படி படத்தைப் பற்றி ஒரு தகவலும் கூறாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை பார்க்கலாம்.