சினேகாவைச் சூழ்ந்த ரசிகர்கள்... லேசான தடியடி நடத்தி மீட்ட போலீஸ்


திருப்பூரில் நகைக்கடை திறக்க வந்த நடிகை சினேகாவைக் காண கூட்டம் முண்டியடித்தது. இதனால் அவர் ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டார்.

அவரை மீட்க போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

பிரபல நடிகை சினேகா ஏராளமான கடை திறப்பு மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போதெல்லாம் அவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் சூழந்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது.

இந்த முறையும் இதே மாதிரி சம்பவம் நடந்தது. சமீபத்தில் திருப்பூரில் ஒரு பெரிய நகைக்கடை திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தார் சினேகா. திருப்பூரில் சினேகா இறங்கியதுமே கூட்டம் எக்கச்சக்கமாகக் கூடிவிட்டது.

ஆரம்பத்தில் உற்சாகமாக கையசைத்தபடி, தனக்கே உரிய ஸ்டைலில் சிரித்துக் கொண்டிருந்த சினேகா, கூட்டம் சூழ்ந்துவிட்டதால், வெளியேற முடியாமல் தடுமாறினார்.

வேறுவழியின்றி போலீசார் உதவிக்கு அழைக்கப்பட்டனர். உடனே அவர்கல் லேசான தடியடி நடத்திய பிறகே கூட்டம் கலைந்தது. பின்னர் சினேகா நகைக்கடையைத் திறந்துவைத்துவிட்டு பாதுகாப்பாக கோவை விமான நிலையம் விரைந்தார்.

 

அல்-கொய்தா தலைவர் பின்லாடன் சுட்டுக் கொள்ளப்பட்டது திரைப்படமாகிறது


வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தினரால் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட விதம் மற்றும் அதற்கான விசாரணை முறைகளை மையமாக கொண்ட திரைப்படம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தாக்கி, அமெரிக்கப் பாதுகாப்பிற்கே கேள்விக்குறியை போட்டவர், அல்-கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லாடன். பின்னர் அமெரிக்கா படையின் பல ஆண்டுத் தேடலுக்கு பின், பின்லாடனை, பாகிஸ்தானில் சுட்டு கொன்றனர்.

இதனிடையே நடந்த விசாரணை, பின்லாடனை பிடிக்க வகுக்கப்பட்ட திட்டங்கள், அமெரிக்க் கடற்படையின் சீல் படையினர் வகுத்து வியூகங்கள், தாக்குதல் முறைகள் உள்ளிட்டவற்றை வைத்து திரைப்படமாக வெளியாகவுள்ளது பின்லாடன் கொல்லப்பட்ட சம்பவம். 2008ம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் இயக்குனர் கேத்ரின் பிக்லோ இந்த படத்தை இயக்குகிறார். அமெரிக்காவின் ஹோம்லான்ட் பாதுகாப்பு கமிட்டியின் தலைவராக உள்ள பீட்டர் கிங் தயாரிக்கிறார்.

திரைப்பட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ள கேத்ரின்பிக்லோ மற்றும் திரைக்கதை எழுத்தாளர் மார்க்போல் ஆகியோர் நடிகர்கள் தேர்வை முடித்துள்ளனர். இறுதி முடிவிற்கு காத்திருக்கின்றனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றி வெளிவந்த “த ஹர்ட் லாக்கர்” என்ற திரைப்படம் உலகமெங்கும் மெகா ஹிட்டாக ஓடியது. இதில் அமெரிக்கா ஈராக்கில் நடத்திய குண்டுவீச்சு சம்பவத்தை தழுவி வந்தது.

தற்போது பின்லாடன் கொலையை மையமாக கொண்ட படத்திற்கு, “கில் பின்லாடன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் அதிகாரி ஒருவர் கூறுகையில், பின்லாடனின் சம்பவங்களை குறித்து பல ரகசிய தகவல்கள் வெளியிட முடியாதவை. இவற்றை வெளியிட்டால், அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு பின்னாட்களில் ஆபத்து வரலாம். திரைப்படங்களுக்கு பேட்டி கொடுப்பது எங்கள் வேலையல்ல. திரைப்படங்களை குறித்து சிந்திப்பதற்கு எங்களுக்கு நேரமும் இல்லை. என்றார்.

 

ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியில் போட்டியிட்ட வைரமுத்துவின் உறவினர் சீமான் கைது


ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் கடந்த 2006ம் ஆண்டு ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியுற்றவரான சீமான் டுடோரியல் நிறுவனத்தின் தலைவர் சீமான் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

சீமான் சென்னையில் டுடோரியல் கல்லூரிகளை நடத்தி வருகிறார். திரைப்பட விநியோகஸ்தராகவும் செயல்பட்டு வருகிறார். கவிஞர் வைரமுத்துவின் உறவினரும் கூட.

தேர்தல் அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி இவர் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. அந்த வழக்கில் சீமானை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு பலமுறை சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சி நடந்து வந்ததால், அவர் விசாரணைக்கு ஆஜரகாவில்லை.

இதையடுத்து ஆண்டிப்பட்டி கோர்ட்டில் போலீஸ் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் சீமானைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் தங்கியிருந்த சீமான் கைது செய்யப்பட்டு ஆண்டிப்பட்டி கொண்டு செல்லப்பட்டார்.

 

கொஞ்சம் காபி... கொஞ்சம் காதல்!


கொஞ்சம் காபி… கொஞ்சம் காதல்’ – படத்தின் தலைப்பே இதுதான்… நாசர், ரேவதி மட்டும்தான் தெரிந்த முகங்கள். மற்றபடி முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ள படம் இது.

விஜய் டிவியின் புரொக்ராம் மேனேஜராக இருந்த வெங்கி இயக்கியுள்ள முதல் படம் இது. டெல்லியைச் சேர்ந்த அதிதி ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர் பிரபல மாடல் அழகி. இவருக்கு ஜோடி இருதயராஜ்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் வெங்கி கூறுகையில், இந்தப் படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். காதல்தான் படத்தின் கரு. அதை அனுபவித்து சொல்லியிருக்கிறோம். நிச்சயம் இன்றைய தலைமுறை ரசிக்கும் படமாக இருக்கும், என்றார்.

இந்தப் படத்தை அறிமுகப்படுத்த நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரஸ் மீட்டில், வித விதமான காபியை அறிமுகப்படுத்தி வைத்தியதோடு, செய்தியாளர்களை ருசிக்கவும் வைத்தார் இயக்குநர்.

காபியெல்லாம் வித்தியாசமாகத்தான் இருந்தது…. வித்தியாசம் ஓவர்டோஸாகி படம் கசக்காம இருந்தா சரி!

 

இம்ரானுக்கு 16 தடவை பளார் விட்ட கத்ரீனா


பாலிவுட் நடிகர் இம்ரான் கானை சக நடிகை கத்ரீனா கைப் பளார் பளான கன்னத்தில் அறைந்துள்ளார். அதுவும் 16 தடவை!

உடனே கற்பனையைத் தட்டிவிடாதீங்க. செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் பாலிவுட் படம் ‘மேரே பிரதர் கி துல்ஹன்’. அந்த படத்தில் ஆமீர் கான் மருமகன் இம்ரான் கான், கத்ரீனா கைப், பாகிஸ்தானிய நடிகர் அலி ஜாபர் ஆகியோர் நடிக்கின்றனர். அதில் ஒரு காட்சியில் கத்ரீனா இம்ரானை அறைய வேண்டும்.

கத்ரீனாவுக்கு இம்ரான் மேல் என்ன கடுப்போ என்னவோ தெரியவில்லை. 16 டேக் வாங்கியிருக்கிறார். கன்னம் சிவக்க, சிவக்க அறை வாங்கியிருக்கிறார் இம்ரான்.

16 டேக்குக்கு பிறகு இயக்குனர் ஓகே சொல்ல அன்றைய படபிடிப்பு முடிந்தது.

மறுநாள் படபிடிப்புக்கு வந்த இம்ரானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. செட்டில் நுழைந்ததும், நுழையாததுமாய் நேற்று எடுத்த காட்சியில் கத்ரீனாவுக்கு திருப்தி இல்லையாம். அதனால் இன்றும் கன்னதில் அறையும் காட்சி தான் என்று சொல்லியிருக்கின்றனர். பாவம் இம்ரான் என்ன சொல்ல முடியும், அமைதியாக அறை வாங்கினார்.

காதல் படங்களுக்குப் புகழ்பெற்ற யாஷ் ராஜ் பிலிம்ஸ்-ன் மேரே பிரதர் கி துல்ஹன் ஒரு முக்கோணக் காதல் கதை. சகோதரனுக்காக பெண் பார்க்கச் சென்றவன் அந்த பெண் மீது காதல் கொள்கிறான். இறுதியில் அந்த பெண் யாருக்கு என்பதுதான் கதை!

 

இந்தியில் அனுஷ்கா சர்மா Vs அனுஷ்கா ஷெட்டி!


பாலிவுட்டில் ஒரு அனுஷ்கா இருக்கிறார்…. அனுஷ்கா சர்மா… பிரபலமான நடிகையும் கூட. இப்போது அவருக்குப் போட்டியாகப் போகிறார் இங்கே டாப் இடத்தில் உள்ள அனுஷ்கா அதாவது அனுஷ்கா ஷெட்டி!

இன்றைய தேதிக்கு அனுஷ்காவுக்கு தமிழ், தெலுங்கில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. ஆனாலும் அவர் இந்தியில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அவரது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு இரண்டு பெரிய படநிறுவனங்கள் அவரிடம் கதை சொல்லி ஓகேவும் வாங்கிவிட்டனவாம்.

இதில் ஒரு படத்துக்கு தேதி கூட கொடுத்து விட்ட அனுஷ்கா, அட்வான்ஸ் மட்டும் இப்போது வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.

தெற்கிலிருந்து அனுஷ்கா வருகிறார் என்றதுமே, கடுப்பாகிவிட்டாராம் பாலிவுட்டில் ஏற்கெனவே உள்ள அனுஷ்கா சர்மா. தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டு, இங்கே ஒரு அனுஷ்கா இருக்கும்போது தெற்கிலிருந்து அவரை வேறு அழைத்து வருகிறீர்களே, சரியா என சிணுங்குகிறாராம்.

என்ன செய்வது… சினிமாவில் காட்சிகள் மாறிக் கொண்டே இருந்தால்தானே சுவாரஸ்யம்!

 

மாஜி மனைவி லலிதகுமாரிக்கு நன்றி கூறிய பிரகாஷ் ராஜ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மாஜி மனைவி லலிதகுமாரிக்கு நன்றி கூறிய பிரகாஷ் ராஜ்!

8/11/2011 12:25:58 PM

சமீபத்தில் தன் மனைவி லலிதாகுமாரியை விவாகரத்து பண்ணிவிட்டு, போனி வர்மாவைத் திருமணம் செய்திருக்கும் பிரகாஷ்ராஜ் தான் தயாரித்த பயணம் படத்தை ரிலீஸ் செய்ய பயங்கரமான கஷட்ங்களை அனுபவித்துள்ளார். இதனையடுத்து அவரது மாஜி மனைவி லலிதகுமாரி படத்தை ரிலஸ் செய்ய தனது சொத்தை விற்று பிரகாஷ் ராஜ்-க்கு உதவியுள்ளார். பின்னர் தனது 'பயணம்' பட ரிலீஸுக்காக தனது சொத்தை கொடுத்து உதவிய மாஜி மனைவி லலிதகுமாரிக்கு நன்றி கூறினார் பிரகாஷ் ராஜ். இதனையடுத்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட பிரகாஷ்ராஜ்-லலிதகுமாரி, இப்போதும் நட்புடன் பழகி வருகின்றனர்.




 

கிசு கிசு - தல நடிகரின் திடீர் முடிவு!

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

தல நடிகரின் திடீர் முடிவு!

8/11/2011 12:27:37 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

உலக ஹீரோ, விஸ்வரூப படத்தை ஆரம்பிக்க முடியாம தவிக்கிறாராம்… தவிக்கிறாராம்… ஏற்கனவே போட்ட பட்ஜெட்டை விட அதிகமாகும்னு தயாரிப்புகிட்ட சொன்னாராம். இதனால தயாரிப்பு யோசிக்கிறதால படம் ஆரம்பிக்காம இருக¢காங்களாம்… இருக்காங்களாம்…

கதை விஷயங்கள்ல இனிமே தலையிடாதீங்கனு தல நடிகருக்கு நெருக்கமானவங்க அட்வைஸ் பண்றாங்களாம்… பண்றாங்களாம்…

டைரக்டர்கிட்ட முழுசா பொறுப்பை ஒப்படைச்சிட்டு, நீங்க ஒதுங்கியே இருங்கனு சொல்றாங்களாம். அதனால இனிமே கதை இலாகாக்குள்ள நுழையாம நடிப்புல மட்டும் கவனம் செலுத்த தல முடிவு பண்ணியிருக்காராம்… பண்ணியிருக்காராம்…

காட்டன் வ¦ர இயக்கம், படம் எடுத்தபடியே ஜிம்முக்கும் போயிட்டு இருக்காராம்… இருக்காராம்… நெருங்கிய டைரக்டர்கள்கிட்ட தனக்காக கதை பண்ணும்படி சொல்லியிருக்காராம். இயக்குற படம் முடிஞ்சதும் திரும்ப ஹீரோவா மாறப்போறாராம்… மாறப்போறாராம்…

 

கவுரவ வேடத்தில் ஆர்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கவுரவ வேடத்தில் ஆர்யா

8/11/2011 12:24:27 PM

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் இரண்டாவது ஷெட்யூல் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. மூன்றாவது ஷெட்யூல் எப்போது என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்றார் இயக்குனர் ராஜேஷ். ராஜேஷின் முந்தைய இரு படங்களைப் போலவே காமெடிக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்து வருகின்றனர். இதிலும் ஹீரோவுக்கு நண்பனாக வருகிறார் நகைச்சுவை நடிகர் சந்தானம். இவர்கள் தவிர அழகம்பெருமாள், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கியமான வேடத்தில் நடித்து வருகின்றனர். தன்னுடைய முதல் இரண்டு படங்களை போலவே இந்த படத்திலும் ஆர்யா அல்லது ஜீவாவை கவுரவ வேடத்தில் நடிக்க திட்டமிட்டார். இதனையடுத்து 'ஒரு கல் ஒரு கண்ணாடிÕ படத்தில் ஆர்யா கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.




 

த்ரிஷா அவுட் ஸ்ரேயா இன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

த்ரிஷா அவுட் ஸ்ரேயா இன்

8/11/2011 12:23:45 PM

தமிழ், தெலுங்கு, இந்தியை தொடர்ந்து மலையாள படத்தில் அறிமுகமாக காத்திருந்தார் த்ரிஷா. பிருத்விராஜ் நடிக்கும் 'ஹீரோÕ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கதை கேட்டு பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்க இயக்குனர் தீபன் முடிவு செய்தார். ஆனால் பிற படங்களில் பிஸியாக இருப்பதால் நவம்பரில் கால்ஷீட் தர இயலாது என்றார் த்ரிஷா. இதனால் ஷூட்டிங் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து படத்தில் இருந்து விலகி கொள்வதாக த்ரிஷா கூறிவிட்டார். த்ரிஷாவின் திடீர் முடிவால் திணறிய இயக்குனர் ஸ்ரேயாவை அணுகினார். அவரிடம் கதை சொன்னார். பிடித்திருந்ததையடுத்து நடிக்க சம்மதித்தார். கேட்ட தேதியில் கால்ஷீட்டும் தந்தார். ஸ்ரேயா நடிப்பதை உறுதி செய்த இயக்குனர், திட்டமிட்டபடி நவம்பரில் ஷூட்டிங் தொடங்க முடிவு செய்துள்ளார். ஏற்கனவே மம்மூட்டி, ப்ருத்விராஜ் நடித்த 'போக்கிரி ராஜாÕ, மோகன்லாலுடன் 'கேசனோவாÕ ஆகிய படங்களில் நடித்திருக்கும் ஸ்ரேயா இது மலையாளத்தில் நடிக்கும் 3வது படம்.

 

மணிரத்னம் படத்தில் கார்த்திக் மகன் ஹீரோ?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மணிரத்னம் படத்தில் கார்த்திக் மகன் ஹீரோ?

8/11/2011 11:44:43 AM

மணிரத்னம் அடுத்து இயக்கப் போகும் படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய படத்தில் நடிகர் கார்த்திக்கின் மகனை நாயகனாக அறிமுகப்படுத்தப் போகிறாராம் மணிரத்னம். நாயகி உள்பட முக்கிய பாத்திரங்களுக்கு புதுமுகங்களையே ஒப்பந்தம் செய்திருப்பதாகத் தெரிகிறது. கார்த்திக்கும் கவுரவ வேடத்தில் தோன்றுவார் என்கிறார்கள். இந்தப் படத்துக்காக லொக்கேஷன் கூட பார்த்தாகிவிட்டதாம். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை தமிழில் மட்டுமே எடுக்கிறார் மணிரத்னம். 2002 ம் ஆண்டுக்குப் பிறகு நேரடியாக தமிழில் மட்டுமே அவர் இயக்கும் படம் இதுதான்.

 

கன்னட திரையுலகில் நுழைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கன்னட திரையுலகில் நுழைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!

8/11/2011 11:37:47 AM

தனது திரையுலக வரலாற்றில் முதல் முறையாக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கன்னட திரையுலகில் நுழைந்துள்ளார். காட்பாதர் என்ற கன்னடப் படத்திற்கு அவர்தான் இசை. தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாகி, இந்திய இசையமைப்பாளராக உயர்ந்து, இப்போது உலக இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முறையாக கன்னடப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். காட்பாதர் என்ற படத்திற்கு அவர்தான் இசையமைப்பாளர். உபேந்திரா மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் செளந்தர்யா நாயகியாக நடிக்கிறார். சிம்ரன் அம்மா வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் கதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த கதைதான். ஆம், அஜீத் நடித்த வரலாறு படத்தின் ரீமேக்தான் இது. இப்படத்தில் தந்தை அஜீத்துக்கு ஜோடியாக, கனிகா நடித்திருப்பார். இப்போது கனிகா வேடத்தில் கன்னடத்தில் நடிக்கப் போவது நம்ம ஊர் சிம்ரன். மகன் உபேந்திராவின் ஜோடியாக வரப் போகிறார் செளந்தர்யா. இவர் அந்தக் கால கன்னட நாயகி ஜெயமாலாவின் மகள் ஆவார். இந்தப் படத்தில் இன்னொரு விசேஷமும் உள்ளது. அது பி.சி.ஸ்ரீராம். அவர்தான் இப்படத்தை இயக்கப் போகிறார்.

 

அமிதாப் படத்துக்கு மாயாவதி தடை!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

அமிதாப் படத்துக்கு மாயாவதி தடை!

8/11/2011 11:31:07 AM

அமிதாப்பின் ஆராக்ஷன் படத்தில் இடஒதுக்கீடு குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கினால்தான் அனுமதிக்க முடியும் என உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதனால் இந்தப் படம் வட இந்தியாவின் முக்கிய மாநிலமான உத்திரபிரதேசத்தில் வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆராக்ஷன் படம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் நாளை இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தை இரண்டு மாதங்களுக்கு தடை செய்வதாக மாயாவதி அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், படக் காட்சிகளில் கடுமையான தணிக்கை முறையை பின்பற்றுமாறு சென்சார் போர்டுக்கு ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய கமிஷன் உத்தரவிட்டது.

 

ஷாருக்குடன் நெருங்கிப் பழகும் பிரியங்கா சோப்ரா-டென்ஷனில் கெளரி கான்


பிரியங்கா சோப்ரா எப்பொழுது பார்த்தாலும் ஷாருக்கானுடனே இருப்பதால் அவர் மீது கௌரி கான் கடுப்பில் இருப்பதாக பாலிவுட் கிசுகிசுக்கிறது.

நடிகை பிரியங்கா சோப்ரா ஷாஹித் கபூரை பிரிந்த பிறகு எப்பொழுது பார்த்தாலும் ஷாருக்கானுடன் தான் நேரத்தை செலவிடுகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் வரை சுமார் 14 லட்சம் இணையதளங்கில் இது தான் பிரதான செய்தியாகும்.

பாலிவுட்டில் தங்களுக்கு என்று ஒரு பெயர் வாங்க முடியாத சில துணை இயக்குனர்கள் தான் இந்த செய்தியை வெளியிடுவதாகக் கூறப்படுகிறது.

பிரியங்கா சோப்ராவும், ஷாருக்கானும் நெருக்கமாக இருப்பது கௌரியை ஆத்திரம் அடையச் செய்துள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் நடக்கிறது என்று ஒரு துணை இயக்குனர் தனது பிளாக்கில் எழுதியுள்ளார்.

கௌரிக்கும், ஷாருக் கானுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் பிரியங்கா சோப்ரா தான். இதனால் தற்போது ஷாருக் வீட்டில் இருந்தால் தானே பிரச்சனை என்று படபிடிப்பு மற்றும் விளம்பரங்களில் பிசியாகியுள்ளார் என்று மற்றொரு துணை இயக்குனர் இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

பிரியங்கா எப்பொழுதுமே ஷாருக்குடன் தான் இருக்கிறார். அவருடன் படபிடிப்பு, ஒத்திகை, சாப்பாடு, பார்ட்டி என்று இருவரும் ஒன்றாகத் தான் இருக்கின்றனர். அன்மைக் காலமாக ஷாருக் அருகில் பிரியங்காவைத் தவிர வேறு யாரும் இல்லை. இதனால் கௌரி ஆத்திரம் அடைந்துள்ளார். இது குறித்து ஷாருக்குடன் அவர் பேசியுள்ளார் என்று நம்பத்தகுந்த ஒருவர் தெரிவித்தார்.

டான் 2 படபிடிப்புக்கு பிறகு ஷாருக்கும், பிரியங்காவும் நெருக்கமாகிவிட்டனர். நான் ஷாருக் கானின் தீவிர ரசிகை என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பவர் பிரியங்கா.

கரன் ஜோஹாரின் ஷோவிற்கு வந்த பிரியங்கா ஷாருக் பேச்சை எடுக்கும்போதெல்லாம் வெட்கச் சிரிப்பு சிரித்தார். ஷாருக்கான் பெயரைச் சொல்லும் போதெல்லாம் பிரியங்கா வெட்கப்பட்டு சிரிப்பது எனக்கும் தெரியும் என்று அந்த ஷோவில் கலந்து கொண்ட ஷாஹித் தெரிவித்தார்.
 

மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அதிரடி தடை


மதுரையில் உள்ள புகழ் பெற்ற திருமலை நாயக்கர் மஹாலில் சினிமாக்காரர்கள் படப்பிடிப்புகளை நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது.

படப்பிடிப்புக்குரிய குறைந்த அளவிலான கட்டணத்தைக் கொடுத்து விட்டு அதை விட பல மடங்கு நாசத்தை ஏற்படுத்தி வைப்பது சினிமாக்காரர்களின் வழக்கமாகி விட்டது.

இயற்கை எழில் கொ்ஞ்சும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த சோகக் கதை முடிவே இல்லாமல் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கூட எஸ்.ஏ.சந்திரசேகர் குழுவின் படப்பிடிப்பின்போது சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் நாசப்படுத்தி விட்டதாக அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுரையி்ல உள்ள புகழ் பெற்ற திருமலை நாயக்கர் மஹாலில் சினிமாப் படப்பிடிப்புகளை நடத்தத் தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மதுரை உயர்நீதி்மன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், தொல்லியல் துறைக்கு வெறும் ரூ. 5000 கட்டணம் கொடுத்து திருமலை நாயக்கர் மஹாலில் படப்பிடிப்புக்கு செல்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட ரூ. 25,000 அளவுக்கு நாசத்தை ஏற்படுத்தி வைக்கின்றனர்.

மிகவும் பழமையான, பாரம்பரியமான, வரலாற்றுச் சின்னம் மதுரை திருமலை நாயக்கர் மஹால். அதைப் பாதுகாக்க வகை செய்ய வேண்டும். எனவே அங்கு படப்பிடிப்புகளை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, படப்பிடிப்பு நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
 

லண்டன் கலவரம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பிரியங்கா சோப்ரா


சென்னை: லண்டனுக்கு படபிடிப்புக்காக சென்ற பிரியங்கா சோப்ரா அங்கு நடக்கும் கலவரத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக செய்திகள் வந்துள்ளன.

கடந்த சனிக்கிழமை லண்டனின் வடக்கில் உள்ள டாட்டன்ஹாம் மாவட்டத்தில் கலவரம் மூண்டது. அப்போது அங்கு நடந்து வந்த அமைதியான ஊர்வலத்தின்போது போலீசார் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் மார்க் டுக்கான் என்ற 29 வயது இளைஞர் உயிரிழந்தார். இவர் நான்கு குழந்தைகளுக்குத் தந்தை ஆவார். இதையடுத்து கலவரம் வெடித்து விட்டது.

லண்டன் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. தீவைப்பு, கல்வீச்சு, துப்பாக்கிச் சூடு, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் சூறையாடல், ஏடிஎம் இயந்திரங்களை சூறையாடுதல் என வன்முறைக் காடாக மாறியுள்ளது லண்டன். இங்கிலாந்தின் பிற பகுதிகளுக்கும் கலவரம் பரவி வருகிறது.

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ராவும், நடிகர் ஷாஹித் கபூரும் படபிடிப்புக்காக லண்டனில் தங்கி இருந்தனர். அவர்கள் கலவரத்தில் சிக்கிக் கொண்டதாகவும் அதில் பிரியங்கா சோப்ரா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர்கள் இருவரும் பாதுகாப்பாக இருக்கி்ன்றனர் என்று அப்படத்தின் இயக்குனர் குனால் தெரிவித்துள்ளார்.
 

தொடங்கியது வன யுத்தம்... 'வீரப்பன்' மனைவியாக விஜயலட்சுமி!


ஒருவழியாக சந்தனக் காட்டு வீரப்பன் வாழ்க்கையை படமாக்கும் வேலையை தொடங்கிவிட்டார் குப்பி புகழ் ஏஎம்ஆர் ரமேஷ்.

காட்டையும் நாட்டையும் கலக்கி வந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு படமாக்கும் முயற்சியில் நான்கைந்து இயக்குநர்கள் இறங்கியிருந்தனர். பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா கூட, வீரப்பன் மனைவி முத்துலட்சுமி துணையுடன் இந்தப் படத்தை உருவாக்கும் முயற்சியில் இருந்தார்.

இப்போது, ஏஎம்ஆர் ரமேஷ் அதற்கான படப்பிடிப்பையே ஆரம்பித்துவிட்டார்.

படத்துக்கு வன யுத்தம் என பெயர் வைத்துள்ளனர். வீரப்பன் வேடத்தில் நடிப்பவர் கிஷோர். பொல்லாதவன் உள்ளிட்ட எக்கச்சக்க படங்களில் ஹீரோக்களை முந்திக் கொண்டு நல்ல பெயரை தட்டிச் சென்றவர்.

தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாராகும் இந்தப் படத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடிப்பவர் விஜயலட்சுமி. சீமானை மிரட்டிப் பார்க்கும் விஜயலட்சுமி அல்ல.... இவர் சென்னை 28 புகழ் விஜயலட்சுமி!

அதிரடிப் படை தலைவர் விஜயகுமார் வேடத்தில் அர்ஜூனும், எஸ்பி செந்தாமரைக் கண்ணன் வேடத்தில் ரவி காலேவும் நடிக்கிறார்கள். கன்னட நடிகர் ராஜ்குமார், அவர் மனைவி பர்வதம்மா பாத்திரங்களில் முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்தப் படம் குறித்து ஏஎம்ஆர் ரமேஷ் கூறுகையில் , "வீரப்பன் குறித்து ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்து இந்தப் படத்தை உள்ளது உள்ளபடி எடுக்கப் போகிறேன். வீரப்பனின் கோபி நத்தம், ஒகேனக்கல் பகுதிகளில்தான் முழுப் படமும் எடுக்கப்படும்," என்றார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தமிழில் இதற்கு முன் வந்த படம் கேப்டன் பிரபாகரன். இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வீரப்பன் கதை. இதற்கு இளையராஜா மகன் யுவன் இசை!
 

கல்பாத்தி அகோரத்துடன் கைகோர்க்கும் கார்த்தி!


கல்பாத்தி அகோரத்தின் ஏ.ஜி.எஸ். என்டர்டெய்ன் மென்ட் நிறுவன படத்துடன் கார்த்தி.

தமிழில் இன்றைய தேதிக்கு அதிக படங்களைத் தயாரித்து வரும் நிறுவனம் ஏஜிஎஸ். திருட்டுப் பயலே தொடங்கி அவன் இவன் வரை இந்த நிறுவனத்தின் வெற்றிப்பட எண்ணிக்கையும் அதிகம்.

இந்த நிறுவனம் இப்போது இளம் நடிகர்களில் முன்னணியில் உள்ள கார்த்தியுடன் இணைகிறது. தற்போது கைவசம் உள்ள சகுனியை முடித்ததும் இந்த படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கித் தந்துள்ளார் கார்த்தி.

இந்தப் படத்துக்கான இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் படங்களில் நடிப்பதற்கு முன்னோட்டமாக அந்த நிறுவனத்தின் படவிழாக்களில் பங்கேற்று வருகிறார் கார்த்தி.
 

அந்தியூர் சந்தையைக் கலக்கும் 'சூர்யா குதிரை'!


ஈரோடு: அந்தியூரில் பிரபலமான குதிரைச்சந்தை நேற்று தொடங்கியது. இந்த சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள ஒரு குதிரைக்கு ரூ 5 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் குதிரை நடிகர் சூர்யாவுடன் ஏழாம் அறிவு படத்தில் நடித்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்துள்ள புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் குதிரை சந்தை நடத்தப்பட்டு வருகிறது. மைசூர் மன்னர் திப்பு சுல்தான் காலத்திலேயே புகழ்பெற்ற சந்தை இது.

நேற்று தொடங்கிய இந்த சந்தையில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குதிரைகள் விற்பனைக்கு வந்தன.

உயர்ந்த ரக குதிரைகளான கத்தியவார், மார்வார் குதிரைகளும், வண்டி ஓட்டவும், சரக்கு இழுக்கவும் பயன்படும் சாதாரண ரக குதிரைகளும் சந்தையில் ஏராளமாக கொண்டு வரப்பட்டு உள்ளன. உயர்ந்த ரகத்தை சேர்ந்த குதிரைகள் மட்டும் 300-க்கும் மேற்பட்டவை வந்துள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான குதிரைகளும், மாடுகளும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளன.

சூர்யாவுடன் நடித்த குதிரை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த இளங்கோ என்பவர் 4 குதிரைகள் விற்பனைக்கு கொண்டு வந்து உள்ளார். இதில் ஒரு குதிரை மார்வார் இனத்தை சேர்ந்தது. முழுமையாக கறுப்பு நிறம் கொண்ட இந்த உயர்ந்த ரக குதிரை சமீபத்தில் நடிகர் சூர்யாவுடன் 7-ம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குதிரை பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டு உள்ளது. மார்வார் இன குதிரைகள் இந்த ஆண்டு குறைவாகவே வந்துள்ளன. அதில் கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த கறுப்பு குதிரையை சந்தைக்கு வந்த அனைவரும் ஆர்வமாக வந்து பார்த்துச்செல்கின்றனர். 6 வயதான இந்த ஆண் குதிரைக்கு அதன் உரிமையாளர் ரூ.5 லட்சம் விலையை நிர்ணயித்துள்ளார்.

இதேபோல, போனி குதிரைகள், நோக்ரா குதிரைகள் போன்றவையும் விற்பனைக்கு வந்துள்ளன.

குதிரைகள் மட்டுமின்றி காங்கயம் இன மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. காங்கயம் மாடுகள் ஒரு ஜோடி ரூ.80 ஆயிரம் வரையிலும், ஓங்கோல் இன மாடுகள் ஒரு ஜோடி ரூ.1.5 லட்சம் வரையிலும் விலைக்குப் போகின்றன.

செல்லப்பிராணியான பூனைகளும் இந்த சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பெர்சியன் கேர் இனத்தை சேர்ந்த ஒரு பூனை ரூ.15 ஆயிரம் விலை வைக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர 4 கொம்புகளை கொண்ட செம்மறி ஆடு, 6 கால்கள் கொண்ட வெள்ளாடு, கட்டுச்சேவல் என விதவிதமான கால்நடைகளும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. குதிரை சந்தை ஆகஸ்ட் 13-ந் தேதி வரை நடக்கிறது.
 

ரூ 1 கோடிக்குமேல் வாங்கும் நடிகர்களுக்கு வசூல் அடிப்படையில் சம்பளம்!


ராமேஸ்வரம்: சினிமாவில் ரூ 1 கோடிக்கு மேல் வாங்கும் நடிகர்களுக்கு இனி வசூல் அடிப்படையில்தான் சம்பளம் தரவேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.20, அதிகபட்சம் ரூ.100 என்ற அடிப்படையில் கட்டண முறையை அரசு மாற்றி நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சிறப்பு கூட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், மாநில துணைத்தலைவர் ரமேஷ்பாபு, துணைச்செயலாளர் ஸ்ரீதர், ராமநாதபுரம் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுகுமாறன், செயலாளர் தினேஷ்பாபு, மதுரை நகர் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் கஜேந்திரன், சேலம் டி.என்.டி.ராஜா உள்பட தமிழகம் முழுவதும் இருந்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த 466 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

வசூல் அடிப்படையில் சம்பளம்

தமிழகத்தில் 3-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். கேளிக்கை வரிவிலக்கு பெற புதிய நிபந்தனைகளை விதித்திருப்பதற்கும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

திரைப்பட தயாரிப்பு செலவுகள் அதிகரித்து வருவதால் திரையரங்க நுழைவு கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே திரைப்பட தயாரிப்பு செலவை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் சம்பளம் திரைப்படத்தின் வசூல் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

ரூ.20, 100 கட்டணம்

இது சம்பந்தமாக வினியோகஸ்தர்கள் மற்றும் நடிகர் சங்கத்தினருடன் கலந்து ஆலோசித்து எந்த அடிப்படையில் நடிகர், நடிகைகளுக்கு சம்பளத்தை நிர்ணயிப்பது என்பது குறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் முடிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் நுழைவு கட்டணத்தை மாற்றி அமைத்து தரும்படி முதல்வரிடம் கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி குளிர்சாதன வசதி உள்ள திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.20-ம், அதிகபட்சம் ரூ.100-ம், குளிர்சாதன வசதி செய்யப்படாத சாதாரண திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.10-ம், அதிகபட்சம் ரூ.70-ம் கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும்.

பராமரிப்பு செலவை உயர்த்துக

திரையரங்குகளின் பராமரிப்பு செலவுகள் அதிகரித்து விட்டதால் திரையரங்குகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை குளிர்சாதன திரையரங்குகளுக்கு ரூ.5 ஆகவும், சாதாரண திரையரங்குகளுக்கு ரூ.3 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். திரையரங்குகளுக்கான 'சி' உரிமம் பெறுவதற்கான கால அளவை 5 ஆண்டுகளாக அரசு நீட்டிக்க வேண்டும்.

திரையரங்குகளுக்கான கட்டிட உறுதி சான்றிதழை அங்கீகரிக்கப்பட்ட தனி பொறியாளர்களிடம் இருந்து பெறுவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். திரையரங்குகளுக்கான கேளிக்கை வரியை முன்காலத்தில் நடைமுறையில் இருந்ததை போலவே மீண்டும் பின்பற்றி கேளிக்கை வரியை கழித்து மீதமுள்ள தொகையில் வினியோகஸ்தர்களுக்கான பங்கு தொகையை தருவது என்று தீர்மானிக்கப்பட்டது.

வேறு உபயோகத்துக்கு....

திரைப்படங்கள் கிடைக்காத காலங்களில் திரையரங்குகளை வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும். அரசு விதிகளுக்குட்பட்டு காலை 9 மணி முதல் இரவு 1.30 மணி வரை எத்தனை காட்சிகளை வேண்டுமானாலும் நடத்திக்கொள்ள அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

ஆராக்ஷன் படத்துக்கு மாயாவதி தடை!


அமிதாப்பின் ஆராக்ஷன் படத்தில் இடஒதுக்கீடு குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கினால்தான் அனுமதிக்க முடியும் என உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இதனால் இந்தப் படம் வட இந்தியாவின் முக்கிய மாநிலமான உத்திரபிரதேசத்தில் வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆராக்ஷன் படம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் நாளை இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் படத்தை இரண்டு மாதங்களுக்கு தடை செய்வதாக மாயாவதி அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், படக் காட்சிகளில் கடுமையான தணிக்கை முறையை பின்பற்றுமாறு சென்சார் போர்டுக்கு ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய கமிஷன் உத்தரவிட்டது.

இதனைத் தொர்ந்து இந்த கமிஷனைச் சேர்ந்த உறுப்பினர்கள் படத்தை நேற்று டெல்லியில் பார்த்தனர். ஆட்சேபணைக்குரிய காட்சிகளைக் குறிப்பிட்டுக் கொடுத்த கமிஷன் உறுப்பினர்கள் அவற்றை நீக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறிவிட்டனர்.

மேலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அமைப்பின் தலைவரும் மராட்டிய மூத்த அமைச்சருமான சக்கன் புஜ்பால், இந்தப் படத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பற்றி மோசமாக சித்தரித்திருப்பதாகக் கூறி, அந்தக் காட்சிகளையும் நீக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.

உபி அரசு இந்தப் படத்தை வெளியிடவே முடியாது என தீர்மானமாகக் கூறிவிட்டது. இரண்டு மாதங்கள் அவகாசம் தருகிறோம். அதற்குள் ஆட்சேபணைக்குரிய காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அனுமதி கிடையாது என கூறிவிட்டது.

தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை இந்தப் படம் கேவலமாக சித்தரித்துள்ளது. இதுகுறித்த அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை படத்தில் வரும் பல கேரக்டர்கள் கிண்டலடிக்கிறார்கள். இதை நிச்சயம் அனுமதிக்க முடியாது, என மாயாவதி அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.