டோலிவுட்டில் ஸ்டிரைக் மோகன்லால் ஷூட்டிங் பாதிப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

டோலிவுட்டில் ஸ்டிரைக் மோகன்லால் ஷூட்டிங் பாதிப்பு

12/30/2010 4:43:29 PM

பல தமிழ்ப் படங்களின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடக்கிறது. சமீபத்தில் நடந்த ஒரு படத்தின் ஷூட்டிங்கில் பெரும்பாலும் தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களும் தமிழ் ஸ்டன்ட் நடிகர்களுமே பணியாற்றினர். இதனால் தெலுங்கு பட தொழில்நுட்பக் கலைஞர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். ஐதராபாத்தில் ஷூட்டிங் நடத்தும்போது, தெலுங்கு கலைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என வலியுறுத்தினர். இந்த போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் மோகன்லால், ஜெயராம், திலீப் இணைந்து நடிக்கும் 'சைனா டவுன்' பட ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்க இருந்தது. இதற்காக பிரமாண்ட செட்டும் அந்த ஸ்டுடியோவில் போடப்பட்டது. இங்கு 25 நாள் தொடர்ந்து ஷூட்டிங் நடத்த இயக்குனர் ரபி முடிவு செய்திருந்தார். தொழில்நுட்பக் கலைஞர்கள் ஸ்டிரைக்கால் பிற மொழிப் படங்களின் ஷூட்டிங் ஆந்திராவில் பாதிக்கப்பட்டுள்ளது. மோகன்லால் படமும் இதில் சிக்கிவிட்டது. இதனால் படத்துக்கு போடப்பட்ட செட்டை கலைத்துள்ளனர். ஐதராபாத்துக்கு பதிலாக ஊட்டியில் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக படக்குழு ஊட்டி பறந்துள்ளது.


Source: Dinakaran
 

செல்வராகவன் படத்திலிருந்து விலகியது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

செல்வராகவன் படத்திலிருந்து விலகியது ஏன்?

12/30/2010 4:45:36 PM

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா நடிக்கும் படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படத்தில் ஆரம்பத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டது. படத்தின் 40 சதவீத ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளார். செல்வராகவனிடமிருந்து பிரிந்து சென்ற யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் அவருடன் இணைந்துள¢ளார். இப்போது, ‘இரண்டாம் உலக’த்தில் அவர்தான் இசையமைக்கிறார். படத்திலிருந்து விலகியது தொடர்பாக ஜி.வி. பிரகாஷ் குமார் கூறும்போது, “இப்படத்தில் என்னை நீக்கிவிட்டு, யுவனை தேர்வு செய்திருப்பதாக சொல்வதில் உண்மையில்லை. கால்ஷீட் பிரச்னை மற்றும் சம்பள விஷயம் காரணமாக நானே நட்புடன் விலகியிருக்கிறேன். எனக்கும் செல்வராகவனுக்கும் இடையே எந்த பிரச்னையும் கிடையாது”என்றார். அவர் மேலும் கூறும்போது, “இந்தியில் அனுராக் கஷ்யப் இயக்கும் படத்தில் பிப்ரவரி முதல் பணியாற்ற உள்ளேன்” என்றார்.


Source: Dinakaran