பீட்சா , ஜிகர்தண்டாவைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் கையில் எடுக்கும் "அவியல்"

சென்னை: பீட்சா, ஜிகர்தண்டா படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்தப் படத்திற்கு வைத்திற்கும் தலைப்பு என்னவென்று தெரியுமா? அவியல்.

தொடர்ந்து வித்தியாசமான படங்களைக் கொடுத்து வரும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஸ்டோன் பெஞ்ச் என்ற பெயரில் சொந்தப் படநிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.

இந்த நிறுவனத்தின் சார்பாக பெஞ்ச் டாக்கீஸ் என்ற பெயரில் 6 குறும்படங்களை ஒன்றிணைத்து ஒரு திரைப்படமாக வெளியிட்டார், இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Karthik Subbaraj Next Movie Title Aviyal

தற்போது இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக 5 குறும்படங்களை ஒன்றிணைத்து ஒரு திரைப்படமாக வெளியிடவிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ், இதற்காக ரசிகர்களிடம் தலைப்பு கேட்டு ஒரு போட்டி ஒன்றையும் நடத்தியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

இவரது படத் தலைப்புகள் பீட்சா, ஜிகர்தண்டா என்று உணவு சார்ந்தே இருப்பதால் ரசிகர்களும் உணவுப் பெயர்களின் பெயர்களையே தலைப்புகளாக அனுப்பி இருக்கின்றனர்.

வந்து குவிந்த தலைப்புகளில் இருந்து அவியல் என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ், இந்தத் தலைப்பை திருச்சி வாசகர் ராஜ்குமார் என்பவர் அனுப்பி வைத்திருக்கிறார்.

இந்த முறை உலமெங்கும் இதனை வெளியிட இருப்பதால் அதிக உழைப்பு, அதிக சிரிப்பு, அதிக பொழுதுபோக்கு கலந்து இருக்கும் என்று உறுதிமொழி கொடுக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

உங்கள் அபிமானத் திரையரங்குகளில் விரைவில் வெளியாக இருக்கிறது அவியல்....

 

பேயாக மாறி "கலாய்ச்சிபை" செய்யப் போகும் லட்சுமி!

சென்னை: தமிழ் சினிமாவில் பெரும்பான்மையான நாயகிகளின் தற்போதைய ஆசையாக பேய் கதாபாத்திரமாகவே இருக்கிறது, எல்லா நடிகைகளும் தற்போது பேய் வேடங்களில்நடித்து புகழ் பெறவேண்டும் என்று ஆசைப்படத் தொடங்கி இருக்கிறார்கள்.

ஏற்கனவே நடிகை நயன்தாரா மாயா படத்தில் பேயாக நடித்துக் கொண்டு இருக்கிறார், ஹன்சிகா மற்றும் த்ரிஷா ஆகியோர் அரண்மனை 2 படத்தில் பேயாக மாறியிருக்கின்றனர்.

Lakshmi Menon Next Movie to Play a Ghost?

தற்போது அந்த வரிசையில் புதிதாக நடிகை லட்சுமி மேனனும் இணைந்து விட்டார், ஆமாம் ஜெயம் ரவியுடன் லட்சுமி மேனன் நடித்து வரும் புதிய படமொன்றில் பேயாக நடிக்கிறாராம்.

காமெடி + திகில் என இரண்டும் சரிவிகிதத்தில் கலந்த கலவையாக இந்தப் படம் இருக்குமென்று கூறுகிறார்கள், தொடர்ந்து கிராமத்துக் கதைகளிலேயே நடித்து வந்த லட்சுமி மேனன் தற்போது வித்தியாசமான வேடங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.

நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய சக்தி சவுந்தர் ராஜன் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து முடிந்திருக்கிறது, அடுத்த கட்ட படப்பிடிப்புகள் சென்னை மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் நடக்க இருக்கிறது.

ஏற்கனவே அஜீத் படத்தில் மாடர்ன் உடைகளை அணிந்து நடிக்கத் தொடங்கிய லட்சுமி தற்போது பேயாக அவதாரம் எடுத்து இருக்கிறார். இன்னும் எத்தனை அவதாரங்களை எடுக்கப் போகிறாரோ? தெரியவில்லை.

 

தனி ஒருவன்: தடயவியல் நிபுணராக வரும் நயன்தாரா

சென்னை: ஜெயம் ரவி - Thani Oruvan: Nayanthara to Play a Forensic Expert?

சமூக அக்கறையுடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று இயக்குநர் மோகன் ராஜா கூறியிருக்கிறார், படத்தில் குற்றங்களைக் கண்டுபிடிப்பவராக ஜெயம் ரவியும் அந்தக் குற்றங்களின் பின்னணியைக் கண்டுபிடிப்பவராக நயன்தாராவும் இணைந்து நடித்திருக்கின்றனர்.

Thani Oruvan: Nayanthara to Play a Forensic Expert?

ரோஜா நாயகன் அரவிந்த் சாமி படத்தில் வில்லனாக அவதாரம் எடுக்க, ஹிப்ஹாப் தமிழன் ஆதி படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். தனி ஒருவன் படத்தின் டீசர் கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஜெயம், எம்.குமரன் S/O மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் மற்றும் சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் மோகன் ராஜா ஜெயம் ரவியுடன் தனி ஒருவன் படத்தில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு கடும் எதிர்பார்ப்பு உள்ளது.

 

ஆர்யா, ஜெயம் ரவியுடன் "மோதுகிறாரா" சிம்பு?

சென்னை: சிம்புவின் நடிப்பில் உருவான வாலு திரைப்படம் கடந்த ரம்ஜான் அன்று திரைக்கு வரவிருந்தது, கடைசி நேரத்தில் மேஜிக் ரேஸ் என்ற நிறுவனம் வாலு படத்தின் மீது வழக்குத் தொடர்ந்ததால் படம் வெளியாகவில்லை.

தொடர்ந்து வாலு படத்தை வெளியிட சிம்புவும் அவரது தந்தை டி.ராஜேந்தரும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மேஜிக் ரேஸ் நிறுவனம் வழக்கை வாபஸ் பெறப் போகிறது என்று 2 தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.

Simbu's vaalu to be Released on August 14?

அது உண்மைதான் என்று சொல்லுவதுபோல மேலும் ஒரு செய்தி தற்போது வெளியாகி உள்ளது, இந்த செய்தியைப் பார்க்கையில் வாலு கண்டிப்பாக வெளியாகும் என்று சற்று நம்பும் விதமாகவே உள்ளது.

அதாவது அடுத்த மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆர்யாவின் நடிப்பில் உருவான வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க மற்றும் ஜெயம் ரவியின் தனி ஒருவன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன.

இதில் ஆர்யாவின் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும், ஜெயம் ரவியின் படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் வெளியிடுகின்றன.

இந்த 2 திரைப்படங்களுக்கும் போட்டியாக சிம்புவின் வாலு திரைப்படமும் வெளியாகிறது என்று செய்திகள் கசிந்துள்ளன. இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் தியேட்டர் தொடங்கி பாக்ஸ் ஆபிஸ் வரை, கடும் போட்டியை மேற்கண்ட 3 படங்களும் சந்திக்கக் கூடும்.

 

ஆந்திராவில் "விஜய் திவஸ்".. கலக்கும் 'ஜில்லா'... ஜேம்ஸ் பாண்டை விரட்டியது!

ஹைதராபாத்: விஜய்யின் ஜில்லா தெலுங்கு டப்பிங் படத்திற்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. முதல் நாளில் அப்படம் ரூ. 2 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பாகுபலி படத்தைத் தவிர மற்ற நேரடி தெலுங்குப் படங்களுக்கு சரியான போட்டியாக ஜில்லா அமைந்திருப்பதாகவும் தெலுங்குப் பட விமர்கர்கள் கூறுகிறார்கள்.

Telugu Jilla rocks and beats James Bond

மேலும் அல்லரி நரேஷ் நடித்து நல்ல தொடக்கத்தைக் கண்டிருந்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை தற்போது ஜில்லா முந்திச் சென்று பின்னுக்குத் தள்ளி விட்டதாம்.

நேரடித் தெலுங்குப் படங்களுக்கு இணையாக தெலுங்கு ஜில்லாவுக்கு நல்ல கூட்டமும், ரசிகர்களிடையே அமோக வரவேற்பும் கிடைத்துள்ளாம். வெள்ளிக்கிழமை, சனி மற்றும் இன்று ஆகிய 3 நாட்களுமே படத்திற்கு நல்லதாக அமைந்துள்ளதாகவும், ஒரு ஸ்கிரீன் உள்ள தியேட்டர்கள் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவதாகவும், மல்ட்டிபிளக்ஸ்களில் 70 சதவீதத்திற்கு மேல் இருக்கைகள் நிரம்புவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Telugu Jilla rocks and beats James Bond

தெலுங்கு ஜில்லா ஹிட் படம் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் முன்னணி நடிகர்களில் விஜய்க்கு மட்டுமே தெலுங்கில் அவ்வளவாக மார்க்கெட் கிடையாது. துப்பாக்கி படத்தின் டப்பிங் மட்டுமே அங்கு நன்றாக ஓடியது. இந்த நிலையில் ஜில்லா அதை முறியடித்தோடு, நேரடித் தெலுங்குப் பட நாயகர்கள் மத்தியிலும் பீதியைக் கிளப்பியுள்ளதாம்.

ரிலீஸான முதல் நாளில் அனைத்துத் தியேட்டர்களுமே ஹவுஸ் புல் ஆகியதோடு கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருந்ததாம். பாகுபலியும், பஜ்ரங்கி பாய்ஜானும் தற்போது தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருவதால் ஜில்லா பெரிய அளவில் வசூல் சாதனை படைக்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதாக சொல்கிறார்கள்.

அல்லரி நரேஷ் நடித்த ஜேம்ஸ் பாண்ட் படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம் அவர் நடித்த கடைசி 5 படங்களும் பாக்ஸ் ஆபீஸில் போண்டியாகியிருந்தன. இந்த நிலையில் ஜேம்ஸ் பாண்ட் நல்ல தொடக்கத்தைப் பெற்றதால் நரேஷ் மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் ஜில்லா வந்து அதை ஊற்றி முடி விட்டதாக சொல்கிறார்கள்.

பாகுபலிக்கு மத்தியிலும் விஜய்யின் ஜில்லாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்நாட்டில் 50 கோடியை அள்ளிய பாகுபலி!

சென்னை: பாகுபலி படம் தமிழில் ரூ. 50 கோடியை வசூலித்துள்ளதாம்.

தமிழில் இந்த வருடம் மொழி மாற்றுப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்திய உதாரணம் பாகுபலி. படம் வெளிவந்து 3 வாரங்களைக் கடந்து விட்டது ஆனால் தியேட்டர்களில் இன்னும் கூட்டம் குவிகிறது என்று கூறுகிறார்கள்.

உலகமெங்கும் வசூலில் இதுவரை சுமார் 400 கோடியைத் தாண்டியிருக்கும் இந்தத் திரைப்படம், தமிழில் மட்டும் சுளையாக இதுவரை 50 கோடிகளை அள்ளி இருக்கிறது என்று தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Baahubali Creates History in Tamilnadu?

பெரிய அளவில் ஸ்டார் நடிகர்கள் இல்லை தமிழில் படம் எடுபடாது என்று பாகுபலி வெளியீட்டிற்கு முன்பு ஏகப்பட்ட கணிப்புகள் வெளியாகின, அவை அத்தனையையும் முறியடித்து வசூலில் உச்சத்தைத் தொட்டு இருக்கிறது பாகுபலி.

முதல் 6 மாதங்களில் தமிழ் சினிமா நஷ்டங்களைச் சந்தித்து தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வருகிறது, பாபநாசம், இன்று நேற்று நாளை, பாலக்காட்டு மாதவன், யாகாவராயினும் நாகாக்க போன்ற படங்கள் வெளியாகி சமீபகாலமாகத்தான் தமிழ் சினிமா முன்னேற்றத்தை நோக்கி திரும்பியிருக்கிறது.

ஆனால் பிறமொழிப் படங்களுக்கு சவால் கொடுக்கக் கூடிய வகையில் சமீபகாலமாக எந்தத் தமிழ்ப் படங்களும் வெளிவராததால், பிறமொழிப் படங்களின் ராஜ்ஜியம் இங்கு கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.