குத்துப் பாட்டுக்கு ஆடினால் தனி கெளரவம் கிடைக்கிறது... சமீரா ரெட்டி

Item Songs Today Have Prestige Sameera Reddy   

மும்பை: குத்துப் பாட்டுக்கு ஆடினால் தனி கெளரவம் கிடைக்கிறது என்று கூறியுள்ளார் நடிகை சமீரா ரெட்டி.

பிரகாஷ் ஜா உருவாக்கத்தில் தயாராகி வரும் சக்ரவியூக் என்ற இந்திப் படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார் சமீரா. இதுகுறித்து அவர் கூறுகையில், குத்துப் பாடல்களுக்கு ஆடுவது என்று பெருமையான ஒன்றாக மாறியுள்ளது. அதில் ஆடும்போது தனி கெளரவம் கிடைக்கிறது. உரிய அங்கீகாரமும் கிடைக்கிறது.

எனவே குத்துப்பாடல்களுக்கு ஆடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒரு படத்தில் குத்துப் பாட்டு இருக்கிறதா என்று மக்களே கேட்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. இது வரவேற்புக்குரியது. மேலும் ஒரு படத்தை தள்ளிக் கொண்டு போகும் சக்தி குத்துப்பாட்டுகளுக்கு மட்டுமே உண்டு என்று கூறியுள்ளார் சமீரா ரெட்டி.

ஹீரோயின் வரிசையில்தான் கெட்டியாக இல்லை சமீரா ரெட்டி, குத்துப் பாட்டிலாவது கொடி கட்டிப் பறக்கட்டும்....

 

அசத்திய அனன்யா.. வில் வித்தைப் போட்டியில் தங்கம் வென்றார்

Actress Ananya Scalps Gold Medal Archery Contest   

திருமண விவகாரத்தில் பெரும் சரிவைச் சந்தித்தாலும் கூட விளையாட்டில் பின்னி எடுத்து விட்டார் நடிகை அனன்யா. மலையாள நடிகையான அனன்யா, கேரள மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தமிழில் நாடோடிகள் படம் மூலம் நடிக்க வந்தவர் அனன்யா. இவர் வில்வித்தைப் போட்டியிலும் கை தேர்ந்தவர். சமீபத்தில் தனது திருமண சர்ச்சையால் பெரும் சரிவைச் சந்தித்தார் அனன்யா. இருப்பினும் தற்போது வில்வித்தைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கொச்சியில் நடந்த மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் கலந்து கொண்ட அனன்யா, முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

இவர் ஏற்கனவே பிளஸ் ஒன், மற்றும் பிளஸ் டூ படித்தபோதே சாம்பியன் பட்டம் வென்றவராம். 9ம் வகுப்பு படித்தபோதே வில்லை கையில் தூக்கி விட்டாராம்.

அடுத்து சென்னையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியிலும் அனன்யா கலந்து கொள்ளப் போகிறாராம்.

 

இளையராஜாவுக்கு நந்தி விருது... 7 விருதுகளை அள்ளியது ஸ்ரீராமராஜ்ஜியம்

Ilayaraja Nayanthara Bag Prestigious Nandi Awards

ஹைதராபாத்: ஆந்திர மாநில அரசு சார்பில் வழங்கப்படும் நந்தி திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்ற ஸ்ரீராமராஜ்ஜியம் படத்திற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளன. அப்படத்தில் சீதையாக நடித்த நயனதாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டுக்கான நந்தி விருது பெறுவோர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகராக மகேஷ்பாபு, சிறந்த நடிகையாக நயனதாரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இளையராஜாவின் இசையில், நயனதாராவின் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஸ்ரீராமராஜ்ஜியம் படத்திற்கு மொத்தம் 7 விருதுகள் கிடைத்துள்ளன.

தூக்குடு படத்தில் நடித்த மகேஷ்பாபுவுக்கு சிறந்த நடிகர் விருதி கிடைத்துள்ளது. நாகார்ஜூனாவுக்கு சிறப்பு ஜூரி விருது கிடைத்துள்ளது.

 

பழம்பெரும் நடிகர் பாலையாவின் பேரன், பேத்திகளின் நிலம் ஸ்வாஹா... 4 பேர் கைது

காஞ்சிபுரம்: பழம்பெரும் நடிகர் பாலையாவின் பேரன், பேத்திகளின் நிலத்தை மோசடியாக சுருட்டிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மறைந்த நடிகர் பாலையாவும், அவரது மனைவி பத்மாவதியும், காஞ்சிபுரம் மாவட்டம் தையூர் கிராமம், கற்பகம் நகரில் ரூ. ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்களது நிலத்தை பேரன், பேத்திகள் ரவி, உமா, கீதா ஆகியோரது பெயர்களில் எழுதி வைத்திருந்தனர். இந்த நிலத்தின் அளவு 15,000 சதுர அடி ஆகும்.

ஆனால் இந்த நிலத்தை தையூரைச் சேர்ந்த தங்கவேல், கிளாம்பாக்கம் எத்திராஜ், அவரது மனைவி பூங்காவனம், மகன் தினேஷ் குமார் ஆகியோர் மோசடியாக பறித்துக் கொண்டு விட்டனர்.

இந்தத் தகவல் ரவிக்குத் தெரிய வரே அவர் காஞ்சிபுரம் எஸ்.பி. மனோகரனை நேரில் சந்தித்துப் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். அதில் நில மோசடி விவரம் உறுதியானது. இதையடுத்து நிலத்தை அபகரித்த நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

சம்பளப் பாக்கியை கொடுக்காமல் திருத்தணியை ரிலீஸ் செய்யக் கூடாது.. ராஜ்கிரண் வழக்கு

Rajkiran Sues Thiruthani Producer

சென்னை: எனது சம்பளப் பணத்தைக் கொடுக்காமல், திருத்தணி படத்தை வெளியிடக் கூடாது என்று கோரி நடிகர் ராஜ்கிரண் சென்னை கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர் சிட்டி சிவில் கோர்ட்டில் போட்டுள்ள வழக்கில் கூறியுள்ளதாவது:

நடிகர் பரத் நடிப்பில் திருத்தணி என்ற படத்தை வி.கே.மீடியா தயாரித்துள்ளது. அதனை டி.என்.எல்.சினி ஸ்கிரீன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் நடிப்பதற்கு தயாரிப்பாளரிடம் இருந்து அழைப்பு வந்தபோது ரூ.80 லட்சம் சம்பளம் கேட்டேன். இறுதியில் ரூ.60 லட்சம் தர ஒப்புக்கொண்டனர். ரூ.36 லட்சம் கொடுக்கப்பட்டு விட்டது.

படப்பிடிப்பு முடிவை நெருங்கும் நிலையில் பாக்கி சம்பளம் ரூ.24 லட்சத்தை கேட்டேன். தரவில்லை என்பதால் டப்பிங் பேச மறுத்துவிட்டேன். பின்னர் சம்பந்தப்பட்ட சங்கங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, டப்பிங் பேசுவதற்கு முன்பு இரண்டு தவணைகளில் ரூ.5 லட்சமும், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு ரூ.14 லட்சமும் தர உறுதி அளித்தனர்.

எனவே பாக்கியிருந்த ஒரு நாள் சூட்டிங்கை முடித்தேன். அதோடு சூட்டிங் முடிந்தது. ஆனால் பாக்கி சம்பளத்தை தரவில்லை. எனது குரலைத்தான் பதிவு செய்ய வேண்டும். ஆனால் எனக்கு பதிலாக மற்றொருவரின் டப்பிங் குரல் பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து சிவில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தேன். அது நிலுவையில் உள்ளது.

தற்போது படம் விரைவில் வெளியாக இருப்பதாக செய்திகள் வருகின்றன. படம் ரிலீஸ் ஆனால் எனக்கு நஷ்டம் ஏற்படும். எனவே திருத்தணி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 

தயாரிப்பாளராகிறார் 'மைக்' மோகன்!

Silver Jubilee Hero Set Shine As Producer

சென்னை: மைக் மோகன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட நடிகர் மோகன் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்.

ஒரு காலத்தில் சில்வர் ஜூப்ளி படங்களாகக் கொடுத்துக் குவித்தவர் மோகன். இவரது படங்களுக்கு பெரிய மவுசு இருந்தது. காரணம், இவரது படங்களின் கதை உள்ளிட்டவை மட்டும் காரணமல்ல, மாறாக இசைஞானி இளையராஜாவின் இன்னிசையும்தான்.

இளையராஜாவின் இசையும், மோகனும் இருந்தால் அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது அக்காலத்தில் எழுதப்படாத விதியாகவே இருந்தது. பயணங்கல் முடிவதில்லை. உதயகீதம், மெளன ராகம் என சொல்லிக் கொண்டே போகலாம் இவர்களின் ஹிட் படங்களை.

இந்த நிலையில் தற்போது மோகன் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். கூடவே மீண்டும் நடிக்கவும் ஆரம்பித்துள்ளார். 2 பெயரிடப்படாத படங்களில் நடித்து வரும் மோகன் ஒரு படத்தைத் தயாரிக்கவும் போகிறார். தனது தயாரிப்பில் உருவாகப் போகும் முதல் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் உருவாக்கிறார் மோகன். மோகனின் தாய்மொழி கன்னடம் என்பதால் தனது முதல் தயாரிப்பை கன்னடத்திலும் பதிவு செய்கிறார்.

மலையாளத்தில் வெளியான பியூட்டிபுல் என்ற படத்தைத்தான் தனது முதல் தயாரிப்புக்கு எடுத்துக் கொள்கிறார். மலையாளத்தில் ஜெயசூர்யா, அனூப் மோகன், மேகனா ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழில் முற்றிலும் வேறுபட்ட நட்சத்திரங்களைப் போட்டு எடுக்கத் திட்டமிட்டுள்ளார் மோகன்.