என் தம்பி ஒரு நாள் இயக்குனர் ஆவான்: லயன் நடிகர் நம்பிக்கை

சென்னை: தன் ஆசைப்படி நடிக்க வந்த காட்டு ராஜாவின் தம்பி தனது தந்தையின் ஆசைப்படி இயக்குனர் ஆவாரா?

காட்டு ராஜாவைத் தொடர்ந்து அவரது தம்பியும் நடிக்க வந்தார். முதல் படத்திலேயே யாருடா இந்த பையன், நடிப்பில் பின்னுகிறானே என்று பேச வைத்தார். வந்த வேகத்தில் வளரவும் செய்தார். தற்போது கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்.

காட்டு ராஜாவை ஒரு தொழில் அதிபராகவும், அவரது தம்பியை ஒரு இயக்குனராகவும் ஆக்கிப் பார்க்க தான் அவரது நடிகர் தந்தை ஆசைப்பட்டாராம். ஆனால் அண்ணன், தம்பி இரண்டு பேருமே சொல்லி வைத்த மாதிரி நடிக்க வந்துவிட்டார்கள்.

இந்நிலையில் தம்பி நடிகர் நிச்சயம் ஒரு நாள் இயக்குனர் ஆவார் என்று அண்ணன் நம்புகிறார். முன்னதாக தம்பி நடிகருக்கு நடிக்க வாய்ப்பு வந்தபோது நான் கேமராவுக்கு பின்னே இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி என்றால் அவர் ஒரு நாள் இயக்குனர் ஆவார் என்று நாமும் எதிர்பார்க்கலாம். தம்பி சார் உங்களிடம் கதை சொல்லி அதை ஓகே பண்ணுவதற்குள் இயக்குனர்களின் டவுசர் கிழிந்துவிடுகிறது. நீங்கள் இயக்குனர் ஆனால் உங்களுக்கும் யாராவது இது போன்று செய்யலாம். அதனால் இப்பொழுதில் இருந்தே இயக்குனர்கள் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள்.

 

தீபாவளிக்கு அஜீத்தின் ஆரம்பம் ரிலீஸ்: தயாரிப்பாளர் அறிவிப்பு

சென்னை: அஜீத்தின் ஆரம்பம் படம் சோலோவாக இல்லையாம் மாறாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என்று படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தீபாவளிக்கு அஜீத்தின் ஆரம்பம் ரிலீஸ்: தயாரிப்பாளர் அறிவிப்பு

'ஆரம்பம்' அஜீத் ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி விருந்தாக இருக்கும். படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் படத்தை மெருகேற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மிகப்பெரிய அளவில் பேசப்படும். ‘ஆரம்பம்' படத்தின் இசை வெளியீடு குறித்து செய்தி இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆரம்பம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது என்றும், அதன் பிறகு சோலோவாக ரிலீஸ் ஆகும் என்றும் பேச்சு அடிபட்டது. தீபாவளி அஜீத் குமாருக்கு ராசியான பண்டிகை என்று தான் கூற வேண்டும். முன்பு தீபாவளி அன்று ரிலீஸ் ஆன அவரது படங்கள் ஹிட்டாகின. இந்நிலையில் தான் ஆரம்பம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

தீபாவளி... தல தீபாவளி...

 

ஸ்வீட் நடிகையின் படத்தில் நுழைந்த ‘கேரள நடிகை’...

தம்பி நடிகரின் படமொன்றில் அடிரடி திருப்பமாம். சாப்பாடு படத்திற்கு இணையாக தயாரான கவுண்டரின் பேமஸ் டயலாக்கை தலைப்பாகக் கொண்ட படம் அது.

நகைச்சுவை, காதல் கலந்த குடும்பப்படம் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அப்படத்தில் ஸ்வீட் நடிகை தான் கதாநாயகி. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை திடீரென படத்தில் இன்னொரு நாயகியையும் நுழைத்துள்ளார்களாம்.

பேசிய சித்திர நடிகையான கேரளத்து பைங்கிளிக்கு படத்தில் அதிகப்படியான காட்சிகள் அதிரடியாகச் சேர்க்கப் பட்டுள்ளதாம். இதனால் ஸ்வீட் நடிகையின் போர்ஷன் குறைய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

படம் எப்போ ரிலீஸ் என்ற ரேஞ்சில் திடீரென படத்தில் இன்னொரு கதாநாயகியின் காட்சிகள் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடரும் வதந்திகள்.... அப்செட்டான நடிகர்

சென்னை: சமீபத்தில் தனது லீடர் படத்தில் சொல்லண்ணாத் துயரில் சிக்கிய பஞ்ச் நடிகரைப் பற்றித் தான் கோலிவுட்டில் பரபரப்பே.

நடிகரின் ஒவ்வொரு அசைவையும் கண் கொத்திப் பாம்பாக கவனிக்கும் சிலர், அவரைப் பற்றி இல்லாததயும், பொல்லாததையும் கிளப்பி விடுகின்றனராம்.

அந்தவகையில் சமீபத்தில், நடிகரின் ஏரியா படத்தின் படபிடிப்பு மழையினால் சில நாட்கள் நிறுத்தப்பட, இது தான் சரியான சமயம் என இந்த படமும் பிரச்னையில் சிக்கி விட்டது என இப்போதே கோலிவுட்டில் கொளுத்திப் போட்டுவிட்டார்களாம் சிலர்.

தகவலறிந்த தயாரிப்பாளர் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டாராம். நடிகருக்கு மறுப்பு அறிக்கை கொடுப்பதே புல்டைம் வொர்க் ஆகிடும் போலயே என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரத்து நண்பர்கள் சிலர்.

 

ஸ்வீட் நடிகையின் படத்தில் நுழைந்த ‘கேரள நடிகை’...

தம்பி நடிகரின் படமொன்றில் அடிரடி திருப்பமாம். சாப்பாடு படத்திற்கு இணையாக தயாரான கவுண்டரின் பேமஸ் டயலாக்கை தலைப்பாகக் கொண்ட படம் அது.

நகைச்சுவை, காதல் கலந்த குடும்பப்படம் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அப்படத்தில் ஸ்வீட் நடிகை தான் கதாநாயகி. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை திடீரென படத்தில் இன்னொரு நாயகியையும் நுழைத்துள்ளார்களாம்.

பேசிய சித்திர நடிகையான கேரளத்து பைங்கிளிக்கு படத்தில் அதிகப்படியான காட்சிகள் அதிரடியாகச் சேர்க்கப் பட்டுள்ளதாம். இதனால் ஸ்வீட் நடிகையின் போர்ஷன் குறைய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

படம் எப்போ ரிலீஸ் என்ற ரேஞ்சில் திடீரென படத்தில் இன்னொரு கதாநாயகியின் காட்சிகள் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

கரீனா கபூர் கர்ப்பமாக இருக்கிறாரா...? ட்விட்டரில் வெளியான புகைப்படத்தால் பரபரப்பு

மும்பை: சமீபத்தில் கரீனாகபூர் வயிற்றைத் தள்ளிக் கொண்டு நிறைமாத கர்ப்பிணியாக நிற்பது போன்ற போட்டோ ட்விட்டரில் வெளியானதில் இருந்து, கரீனா கர்ப்பமாக இருக்கிறார் என அனைவரும் பேச ஆரம்பித்து விட்டார்களாம்.

ஆனால், கரீனாவின் உப்பிய வயிற்றின் பிண்ணனியில் உள்ள ரகசியம் கர்ப்பம் தான் என்றும், ஆனால் அது ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட வேஷம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புகைப்படத்தில் ரோஸ் நிற சுடிதார் அணிந்து நிறைமாத கர்ப்பிணியாக கரீனா நிற்பது, நடப்பது போன்ற தோற்றம் காணப்படுகிறது.

கரீனா கபூர் கர்ப்பமாக இருக்கிறாரா...? ட்விட்டரில் வெளியான புகைப்படத்தால் பரபரப்பு

புனித் மல்கோத்ரா இயக்கத்தில் வரும் நவம்பரில் வெளியாக இருக்கும் படமான ‘கோரி தேரா ப்யார் மெயின்' ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாம் அது. யாரோ செய்த குறும்பின் காரணமாக அது நெட்டில் லீக்காகி விட்டதாம்.

கரீனா கபூர் சமீபத்தில் திருமணமானவர் என்பதால் விரைவில் அவரிடமிருந்து சந்தோஷமான செய்தியை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.