ரஜினி ரசிகர் பாபு.தூயவன் இயக்கும் முதல் படம் ‘கதம் கதம்’!

ரஜினி ரசிகர் பாபு.தூயவன் இயக்கும் முதல் படம் ‘கதம் கதம்’!

சென்னை: ஏற்கனவே வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படங்களின் பெயர்களை புதிய படங்களுக்கு பெயராக வைக்கும் டிரண்ட் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. தற்போது, பிற படங்களில் பேசப்பட்ட பிரபல வசனங்களை புதிய படங்களுக்கு பெயராகச் சூட்டி வருகின்றனர்.

அந்த வகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், நண்பேண்டா, இங்க என்ன சொல்லுதுனா படங்களைத் தொடர்ந்து ரஜினியின் பன்ஞ் டயலாக் ஒன்று புதிய படம் ஒன்றிற்கு தலைப்பாகிவிட்டது.

பாபா படத்தில் ரஜினி அடிக்கடி பேசும் வார்த்தைகளான "கதம் கதம்" (முடிஞ்சது முடிஞ்சு போச்சு) என்ற டயலாக்தான் தற்போது ஒரு புதிய படத்தின் தலைப்பாகி இருக்கிறது.

இந்தப் படத்தை பழம்பெரும் தயாரிப்பாளரும், திரைக்கதை வசனகர்த்தாவுமான தூயவனின் மகன் பாபு.தூயவன் இயக்க, நந்தா, ஒளிப்பதிவாளர் நடராஜ் இருவரும் நாயகர்களாக நடிக்கின்றனர். ஷாரிகா நாயகி. தாஜ்நூர் இசையமைக்கிறார்.

பாபு.தூயவன் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் தான் இயக்கும் முதல் படத்துக்கு அவருடைய பன்ஞ் டயலாக்கையே தலைப்பாக வைத்திருக்கிறாராம்.

 

நீங்க சொன்னா சரியா இருக்கும்ஜி... காட்பாதரிடம் சரணடைந்த நடிகர்

சென்னை: நீச்சல் நாயகனை அறிமுகப்படுத்தியது என்னவோ வோறொரு ஒல்லி இயக்குநர் தான். சென்னை கடற்கரை பெயரில் உருவான படத்தில் அறிமுகமான நடிகர், கொலைவெறி படத்தில் நடித்த போது சூப்பர் மருமகனின் திக் பிரண்டான கதை எல்லாரும் அறிந்தது தான்.

தனது தயாரிப்பில் நீச்சலை போட்டு நண்பர்கள் இருவருமே பயனடைந்தனர். அப்படம் மூலம் இன்னும் பிரபலமான நீச்சல்நடிகர், அதிலிருந்து தனது நண்பரை தனது காட்பாதர் ஆக்கிவிட்டாராம்.

தான் எந்த படத்தில் நடிக்கலாம், எவ்வளவு சம்பளம் கேட்கலாம் என எல்லாமே தோழரின் அட்வைஸ் தானாம். பிசியாக இருந்தாலும் கூட நண்பனின் கேரியர் விஷயத்திலும் கவனமாக இருக்கிறாராம் நடிகர்.

நண்பேண்டா....

 

நடிகர் சங்கத் தலைவர் ஆகிறார் நாசர்? இளம் நடிகர்கள் ஆதரவு

சென்னை: நடிகர் சங்கப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் நடிகர் சங்கத்தலைவராக நாசர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் நடைபெற்ற நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நாசர் பின்னால் விஷால் குருப் அணிவகுத்து நின்றது.

பொதுக்குழுவில் விஷால், சூர்யா, கார்த்தி, ஆர்யா, சந்தானம், ஜெயம் ரவி, ஜீவா, நிதின்சத்யா, ஆகிய இளம் ஹீரோக்களுடன் சிவக்குமார், நாசர், எஸ்.வி.சேகர், பொன்வண்ணன் ஆகியோர் ஒரு குழுவாக இருந்தனர்.

நடிகர் சங்கத் தலைவர் ஆகிறார் நாசர்? இளம் நடிகர்கள் ஆதரவு

இளம் ஹீரோக்கள் அனைவரும் வெள்ளைச் சட்டை, நீலநிற ஜீன்ஸ் அணிந்து வந்தனர். எனவே இவர்களை நீலப்படை என்றே வர்ணித்தனர். இவர்கள் அனைவரும் தி.நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கூடி 33 கேள்விகளை தயார் செய்து வந்தனராம்.

சரத்குமாரிடம் விஷால், ஜீவா, நாசர் மூவரும் 33 கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்ல, மூச்சு திணறிப் போகும் அளவுக்கு சரத்குமார் குரூப் சோர்வடைந்தனர்.

புதிதாக வாங்கப்பட்ட ப்ளாட் நடிகர் சங்கம் பெயரில் வாங்காமல் தலைவர், பொதுச்செயலாளர், பெயரில் ஏன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று ஜீவா கேள்வி கேட்கவே,

இவர்களைத் தொடர்ந்து பேசிய நாசர், நீங்கள் தவறு செய்திருப்பதால்தானே நீதிபதி இதற்கு தடை ஆணை பிறப்பித்துள்ளார் என்று கேட்டார்.

இவர்களை அடுத்துப் பேசிய ராதிகா அழுதே விட்டாராம். தலைவர் பதவிக்குப் போட்டி போட வேண்டாம் என்று என் கணவரை சொன்னேன். ரவிதான் என்னை சமாதானம் செய்து இந்த முறை என் கணவரை நடிகர் சங்கத்தலைவர் ஆக்கினார். நடிகர் சங்கப் பிரச்சினையில் என் கணவர் என்னென்ன செய்திருக்கிறார் என்று தெரியும் என்று பட்டியலிட்டாராம் ராதிகா. அதற்குப் பிறகுதான் இளைஞர்களுக்கு வழிவிடுவதாகச் சொன்னார்களாம்.அதனாலேயோ என்னவோ, விஷால் குரூப் நாசரைத் தலைவராக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

அதுமட்டுமல்ல கடந்த 21ம்தேதி நேரு ஸ்டேடியத்தில் நடந்த சினிமா நூற்றாண்டு விழாவிலும் நாசர் எங்கே சென்றாலும் அவர் பின்னாலேயே சூர்யா, கார்த்தி,விஷால்,ஜெயம்ரவி, ஆர்யா என்று நட்சத்திர பட்டாளமே அணிவகுத்து சென்றது.

அடுத்து நடக்கும் நடிகர்சங்க தேர்தலில் இந்த இளம்படை நாசரைத் தலைவராக்க முடிவுசெய்து இருக்கிறதாம்!

 

மலையாள சினிமாவின் தந்தை அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த தமிழரே: குமரிஅனந்தன் அறிக்கை

மலையாள சினிமாவின் தந்தை அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த தமிழரே: குமரிஅனந்தன் அறிக்கை

சென்னை: மலையாள சினிமாவின் தந்தை அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த தமிழரே என அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன்.

சென்னையில் தென்னிந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ள வேளையில், மலையாளச் சினிமாவின் தந்தை ஒரு தமிழர் என அறிக்கை விடுத்துள்ளார் தமிழக முன்னாள் காங்கிரஸ் தமிழர் குமரிஅனந்தன்.

மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ‘சென்னையில் நடைபெறும் சினிமா நூற்றாண்டு விழாவில் பல முக்கிய நிகழ்வுகள் நினைவூட்டப்படுகின்றன. மலையாள சினிமாவின் தந்தை என் ஊராகிய அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஜே.சி.டேனியல் என்ற தமிழரேயாவார். 1928-ல் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு நிலையத்தை தொடங்கி அவர் தயாரித்து 1930-ல் வெளியிட்ட விகத குமாரன் என்பதே முதல் மலையாள படம்.

இந்த அங்கீகாரம் பெரும் பாடுபட்டு 6 ஆண்டுகளுக்கு பின் கேரள அரசிடம் பெறப்பட்டது. இப்போது ஆண்டுதோறும் கேரள அரசு மலையாள திரைப்பட வாழ்நாள் விருது ஜே.சி.டேனியல் பெயரால் வழங்கி வருகிறது. நான் இச்சாதனையாளரை சந்தித்து இருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

 

படம் வர்றதுக்கு முன்னாடியே நெட்டில் லீக் செய்தால் எப்படிப்பா.. சமந்தா வேதனை

சென்னை: ஆந்திரா பவர் ஸ்டார் பவன்கல்யாண் நடித்த அத்தரின்டிக்கி தாரெடி திரைக்கு வரும் முன்னரே படத்தின் பெரும்பகுதி இணையத்தில் வெளியானதில் அப்படத்தின் கதாநாயகி சமந்தா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.

பவன் கல்யாண், சமந்தா மற்றும் பலர் நடிக்க த்ரிவிக்ரம் இயக்கியுள்ள படம் ‘அத்தரின்டிக்கி தாரெடி'. பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘கபார் சிங்' படம் ஆந்திராவில் வசூல் மழை கொட்டியது. அவரது நடிப்பில் அடுத்து ‘அத்தரின்டிக்கி தாரெடி' படம் தான் வெளியாகிறது என்பதால் ஏகத்திற்கு எதிர்பார்த்தார்கள்.

படம் வர்றதுக்கு முன்னாடியே நெட்டில் லீக் செய்தால் எப்படிப்பா.. சமந்தா வேதனை

ஆகஸ்ட் 9ம் தேதி ரிலீசாக வேண்டிய இப்படம் தெலுங்கானா பிரச்சினையால் காலதாமதம் ஆனது. தசரா விடுமுறையை முன்னிட்டு வரும் அக்டோபர் 9ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், 90 நிமிடஅளவுக்கு படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட பாதிப் படம் வெளியாகி விட்டது.

இந்நிலையில், அப்படத்தின் நாயகியான சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அத்தரின்டிக்கி தாரெடி' படத்தில் நிறைய பேரிடன் உழைப்பு அடங்கிருக்கிறது. அதுமட்டுமல்ல, படத்தின் பட்ஜெட்டும் மிக அதிகம். ஆகையால் அனைவருமே தயவுசெய்து தியேட்டரில் படத்தினை ரசியுங்கள். நல்ல படங்களுக்கு உங்கள் ஆதரவு தொடரட்டும். இது எங்கள் தாழ்மையான வேண்டுகோள்' எனத் தெரிவித்துள்ளார்.

 

ரூ. 20 லட்சம் மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த நேரத்திலும் கைது?

ரூ. 20 லட்சம் மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த நேரத்திலும் கைது?

சென்னை: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது கடன் தருவதாக கூறி, பண மோசடி செய்து விட்டதாக வடமாநில என்ஜினியர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சமீபத்தில் பல பண மோசடி புகார்கள் எழுந்தது. இதையொட்டி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த அவர் மீது மீண்டும் ஒரு மோசடி புகார் கூறப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த என்ஜினியர் ஒருவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சென்னை போலீசில் புகார் செய்துள்ளார். அதில் சீனிவாசன் தனக்கு 25 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறியதாகவும், அதற்கு முன்பணமாக தாம் ரூ.20 லட்சத்தையும் அவரிடம் கொடுத்ததாகவும். ஆனால் 2 ஆண்டுகளாகியும் இதுவரை அவர் தமக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, பவர் ஸ்டார் சீனிவாசனை, எந்த நேரத்திலும் போலீசார் கைது செய்யலாம் எனக் கூறப்படுகிறது.