அம்மாவுக்கு தனி ரூம் கேட்டு தகராறு செய்யும் அளவுக்கு நான் கீழ்த்தரமானவள் அல்ல! - த்ரிஷா

Trisha Denies Report On Her Clash For Separate Room

சென்னை: வெளிநாட்டுப் படப்பிடிப்பின்போது என் அம்மாவுக்கு தனி ரூம் கேட்டு நான் தகராறு செய்ததாக வந்த செய்தியில் உண்மையில்லை. அந்த அளவு கீழ்த்தரவமானவள் இல்லை நான், என்றார் நடிகை த்ரிஷா.

சுவிட்சர்லாந்தில் என்றென்றும் புன்னகை படப்பிடிப்பின்போது த்ரிஷாவின் அம்மாவுக்கு தனியாக ரூம் ஒதுக்கவில்லை என்று த்ரிஷா தகராறு செய்ததாக தகவல் வெளியானது.

தனி ரூம் கொடுத்த பிறகுதான் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக வந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறாமலிருந்தார் த்ரிஷா.

இப்போது படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு திரும்பிய த்ரிஷா இதுகுறித்து வாய்திறந்துள்ளார்.

அவர் கூறுகையில், " சுவிட்சர்லாந்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் மூன்று வாரங்களுக்கு மேல் தங்கியிருந்து படப்பிடிப்பையும் ஒரு விளம்பரப் படத்தையும் முடித்துக் கொடுத்தவிட்டு சென்னை திரும்பியுள்ளேன். நான் எந்த அளவு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தேன் என்பதை படப்பிடிப்புக் குழுவினரை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

என் அம்மாவுக்கு நான் தனி ரூம் கேட்கவே இல்லை. அப்படி கேட்டு தகராறு செய்யும் அளவுக்கு நான் கீழ்த்தரமானவள் இல்லை," என்றார்.

 

பால்கே விருது போல தமிழில் நடராஜ முதலியார் விருது வழங்க வேண்டும்! - பாலு மகேந்திரா

Balu Mahendra Urges Set Up Nataraja Mudhaliyar Award

சென்னை: இந்திய அளவில் பால்கே விருது வழங்கப்படுவது போல, தமிழில் நடராஜா முதலியார் பெயரில் விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று இயக்குநர் பாலு மகேந்திரா கூறினார்.

மலையாள சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் ஜே.சி.டேனியலின் வாழ்க்கை வரலாற்று படத்தை 'செலுலாய்ட்' என்ற பெயரில் மலையாள இயக்குநர் கமல் இயக்கியுள்ளார்.

இதில், பிருதிவிராஜ்-மம்தா நடித்துள்ளனர். இந்த படத்தை 'ஜே.சி.டேனியல்' என்ற பெயரில் தமிழில் வெளியிடுகின்றனர்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாலு மகேந்திரா பேசுகையில், "தமிழ் சினிமாவில் முன்னோடிகளை மதிக்கும் பண்பு குறைந்து வருகிறது. மலையாள சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் ஜே.சி.டேனியல், ஒரு தமிழர். அவரை பெருமைப்படுத்தும் விதமாகவும், இந்திய சினிமா நூற்றாண்டை பெருமைப்படுத்தும் விதமாகவும், கமல் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். அவருக்கு தமிழ் சினிமா சார்பில் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

சினிமாவில் நுழைந்த என்னை 14 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய வைத்து வளர்த்து விட்டது, மலையாள சினிமாதான். அந்த நன்றி எனக்கு எப்போதும் உண்டு. மலையாள சினிமா அதன் தந்தை டேனியலை கொண்டாடுவது போல், தமிழ் சினிமா அதன் பிதாமகன் நடராஜ முதலியாரை கொண்டாட வேண்டும்.

வட இந்தியாவில் பால்கே விருது வழங்குவது போல் தமிழ்நாட்டில் நடராஜ முதலியார் பெயரில் விருது வழங்க வேண்டும். தமிழ் சினிமாவின் முன்னோடிகளை போற்றும் அதே நேரத்தில், பழைய சினிமா படங்களையும் பாதுகாக்க வேண்டும். இதற்காக, சினிமா ஆவண காப்பகம் ஒன்றை நிறுவ வேண்டும்.

இதை கடந்த மூன்று ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வருகிறேன். காரணம், நானே நேரடியாக பாதிக்கப்பட்டு இருக்கிறேன். நான் இயக்கிய மூன்றாம் பிறை, மறுபடியும், சந்தியாராகம், வீடு ஆகிய படங்களின் 'நெகட்டிவ்'கள் அழிந்து விட்டன. இதுபோல் பல அரிய படங்களின் 'நெகட்டிவ்'களை நாம் இழந்து வருகிறோம். இந்த இழப்புகளை தடுக்க, உடனடியாக ஆவண காப்பகம் அமைக்கப்பட வேண்டும்.

அண்ணா முதல் அம்மா வரை தமிழ்நாட்டை ஆள்பவர்கள், திரைப்பட துறையை சேர்ந்தவர்கள்தான். அவர்கள் இதை செய்யாவிட்டால், வேறு யார் செய்வார்கள்? இது ஒன்றும் பெரிய பணி அல்ல. ஒரு அலுவலகமும், 10 பணியாளர்களும் போதும்," என்றார்.

யார் நடராஜ முதலியார்?

தமிழ் சினிமாவின் தந்தை இவர்தான். வேலூர்தான் இவர் சொந்த ஊர். தமிழின் முதல் படமான கீசக வதத்தை ரூ 35000 செலவில் எடுத்து 1916-ல் ஊமைப்படமாக வெளியிட்டு, அனைவரையும் அதிர வைத்தவர். 1916-ம் ஆண்டு இந்தத் தொகை எவ்வளவு பெரிய தொகை என்பதை கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

சென்னையில் வெயில் அதிகம் என்பதால், ஏசி வசதி இல்லாத அந்த நாளில் பெங்களூரில் சொந்தமாக லேப் நிறுவியுள்ளார். பின்னர் வேலூரில் சொந்தமாக ஸ்டுடியோ நிறுவி தன் படங்களை அங்கு வைத்து பிரின்ட் போட்டு புரட்சி செய்த சாதனையாளர்.

1917 முதல் 1921 வரை திரௌபதி வஸ்திரபரனம், மைத்திரேயி விஜயம், லவ குசா, மஹிரவனன், மார்க்கண்டேயன், கலிங்க மர்தனம், ருக்மணி கல்யாணம் ஆகிய படங்களை எடுத்தார். இந்தப் படங்களின் ப்ராசஸிங் பெரும்பாலும் அவரது வேலூர் ஸ்டுடியோவிலேயே நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் - இந்தியில் படமாகும் ஏஆர் ரஹ்மான் கதைகள்!

Rahman Now Turns Script Writer

சென்னை: ஏ ஆர் ரஹ்மான் எழுதியுள்ள இரண்டு கதைகள் இப்போது தமிழ் மற்றும் இந்தியில் படங்களாகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக இசையமைப்போடு, கதை எழுதுவதிலும் தீவிர கவனம் செலுத்தி வந்தார் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்.

சும்மா மனம் போன போக்கில் எழுதவில்லை அவர். இதற்கென அமெரிக்காவில் திரைக்கதை எழுதுவது பற்றி ஒரு கோர்ஸ் படித்துள்ளார். ஹாலிவுட் படங்களின் இயக்குநர்களுடன் திரைக்கதை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக அவர் இரு கதைகளை எழுதி முடித்து, அதற்கான திரைக்கதையையும் உருவாக்கியுள்ளார். இந்தக் கதைகளை சில இயக்குனர்களிடம் சொன்னபோது, ரஹ்மானைப் பாராட்டியதோடு படமாக்கவும் முன்வந்தனர். தயாரிப்பாளர்களும் தயாராக உள்ளனர்.

இப்படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார். நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களை தேர்வு செய்த பிறகு படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கின்றனர்.

தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் இப்படங்களை எடுக்கிறார் ரஹ்மான்.

 

கேன்ஸ் விழாவுக்கு ஏன் போகவில்லை கோச்சடையானும் ரஜினியும்? - தயாரிப்பாளர் விளக்கம்

Why Rajini Cancels His Cannes Plan

மும்பை: கோச்சடையான் ட்ரைலரை இன்னும் சிறப்பாக உருவாக்கிய பிறகே சர்வதேச விழா ஒன்றில் வெளியிட வேண்டும் என்பதாலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி கேன்ஸ் விழாவுக்குச் செல்லும் திட்டத்தைக் கைவிட்டார், என்று தயாரிப்பாளர் முரளி மனோகர் தெரிவித்துள்ளார்.

கோச்சடையான் படத்தின் முதல் முன்னோட்டக் காட்சியை சர்வதேச அளவில் புகழ்பெற்ற கேன்ஸ் விழாவில், உலகின் முக்கிய படைப்பாளிகள் மத்தியில் திரையிட வேண்டும் என படக்குழுவினர் விரும்பினர். ரஜினியும் இதற்கு முதலில் ஒப்புக் கொண்டார்.

ட்ரைலரைப் பார்த்துப் பாராட்டிய ரஜினி, 'இந்த ட்ரைலர் நன்றாகத்தான் உள்ளது. நிச்சயம் பெரிய மைல்கல்லாக அமையும். ஆனால் இந்தப் படம் மூன்று ஆண்டுகள் கழித்து வெளியாகும் படம். சர்வதேச விழாவில் திரையிடுகிறீர்கள். எனவே இன்னும் சிறப்பாக தயார் செய்யுங்கள்," என்று கூறினாராம்.

ஆனால் அப்படி தயார் செய்ய காலதாமதமாகிவிட்டதால், தனது கேன்ஸ் பயணத்திட்டத்தை ரத்து செய்துவிட்டாராம்.

ஆனால் வெளியில் பிரான்ஸ் செல்லும் அளவுக்கு ரஜினியின் உடல்நிலை இடம்தரவில்லை என்பதுபோல சிலர் கிளப்பிவிட்டனர்.

இதுகுறித்துப் பேசிய தயாரிப்பாளர் முரளி மனோகர், "இது முற்றிலும் மடத்தனமான கற்பனை. ரஜினி ஒரு ஆண்டுக்கு முன்பே உங்களையும் என்னையும் போல மிக நல்ல ஆரோக்கியமடைந்துவிட்டார். ரஜினியின் புகழை சிதைப்பதாக நினைத்து தம்மைத் தாமே அசிங்கப் படுத்திக் கொள்கிறார்கள் இதுபோன்ற செய்தியைப் பரப்புபவர்கள்.

உண்மையில் என்ன நடந்தது தெரியுமா... கோச்சடையான் ட்ரைலர் பார்த்த ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், இன்னும் கூட சிறப்பாக இந்த ட்ரைலரை உருவாக்கலாமே என யோசனைகள் சொன்னார். எனவே அவசர கோலத்தில் எதுவும் செய்யாமல், கொஞ்சம் பொறுமையாக இந்த ட்ரைலரை உருவாக்குமாறு ரஜினி கூறியதால், நாங்கள் கேன்ஸ் பயணத்தை ரத்து செய்துவிட்டு, ட்ரைலரை சிறப்பாக உருவாக்கும் முயற்சியில் உள்ளோம்.

கேன்ஸ் ரத்தால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. வேறு சர்வதேச நிகழ்வுகள் நிறையவே உள்ளன. அதில் ட்ரைலரை வெளியிடுவோம். இன்னும் 10 நாட்களில் பிரமாதமான ட்ரைலர் தயாராகிவிடும். இந்தப் படத்துக்கு ஏராளமான உழைப்பும் அபரிமிதமான ஆற்றலும் தேவைப்படுகிறது. ரஜினி சாரின் ரசிகர்களுக்கு ஏதாவது ஒன்றைத் தந்துவிட முடியாது. இருப்பதிலேயே சிறப்பான படைப்பால்தான் அவர்களைத் திருப்திப்படுத்த முடியும்," என்றார்.

 

39வது பிறந்த நாள்... 3900 பேருக்கு உதவி!- நடிகர் விஜய் திட்டம்

Vijay Fans Planning Big Celebrate His 39th Bday

சென்னை: தனது 39வது பிறந்த நாளன்று 3900 பேருக்கு உதவிகள் வழங்கப் போகிறாராம் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்யின் பிறந்த நாள் வரும் ஜூன் 22-ம் தேதி வருகிறது. இதற்காக இப்போதே அவரது ரசிகர் மன்றத்தின் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் விஜய் பிறந்த நாளை சென்னையில் ஒரு மாநாடு மாதிரி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா திரைப்படத்தின் பாடல்களை ஜூன் 22 காலையில் வெளியிடுகின்றனர்.

அன்று மாலை ஜூன் 22-ஆம் தேதி மாலை 4 மணியளவில் மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் மிகப் பிரம்மாண்ட மேடை அமைத்து, 3900 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் போகிறார்களாம்.

இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்து வருகின்றனர். ரசிகர்களிடமிருந்தும் நிதி திரட்டும் வேலை நடப்பதாகத் தெரிகிறது.

கடைசியாக விஜய் கலந்துகொண்ட இரு இலவச திருமண உதவித் திட்ட விழாக்கள் படு சொதப்பலாக மாறின. காரணம் ரசிகர்களின் ஆர்வக் கோளாறு மற்றும் போதிய பாதுகாப்பின்மை. எனவே இந்த நிகழ்ச்சியை பக்காவாக திட்டமிட்டுள்ளார்களாம். முதல்முறையாக ரசிகர்களிலிருந்து சிலரை தேர்ந்தெடுத்து தொண்டர் படை போல ஒரு ஏற்பாட்டைச் செய்துள்ளார்களாம்.

தொண்டர் படையே தொந்தரவுப் படையாக மாறாமலிருக்கணுமே!!

 

நயன்தாரா வாய்ப்பை தட்டிப்பறித்தேனா? ஹன்சிகா

Fight With Nayanthara Explains Hansika

சென்னை: நயன்தாராவுடன் தான் மோதலில் ஈடுபட்டதாக வரும் தகவல்கள் குறித்து ஹன்சிகா விளக்கம் தெரிவித்துள்ளார்.

ஹன்சிகா பிரபுதேவாவுடன் நெருக்கமானதால் தான் நயன்தாரா பிரிய நேரிட்டது என்றெல்லாம் ஒரு காலத்தில் பேச்சு அடிபட்டது. அய்யய்யோ பிரபுதேவா என் அண்ணன் மாதிரி என்று ஹன்சிகா அலறினார். அதன் பிறகு நயன், பிரபு அவரவர் வழியைப் பார்த்து சென்றுவிட்டனர்.

இந்நிலையில் ஹன்சிகா நயன்தாராவை குறி வைத்து அவரது பட வாய்ப்புகளை தட்டிப்பறிப்பதாக செய்தி வந்தது. இது குறித்து அறிந்த நயன் ஹன்சிகா மீது கோபப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து ஹன்சிகா கூறுகையில்,

நான் நயன்தாராவின் பட வாய்ப்புகளை தட்டிப்பறிக்கவே இல்லை. அவரும் என் மீது கோபப்படவில்லை. அவருக்கு ஏதாவது வருத்தம் இருந்தால் கூட அதை என்னிடமே தெரிவித்திருந்திருப்பார். நான் யார் மீதும் கோபப்படவே மாட்டேன். நான் நேர்மையானவள் என்றார்.

Hansika told that she didn't snatch Nayanthara's movie offers. Nayanthara was not angry with me, she added.

 

பெப்சி திடீர் ஸ்ட்ரைக்- படப்பிடிப்புகள் முடங்கின!

Fefsi Strike Affects 28 Movie Shooting

சென்னை: பெப்சி தொழிலாளர்களின் திடீர் ஸ்ட்ரைக் காரணமாக இன்று அனைத்து படப்பிடிப்புகளும் முடங்கின.

பெப்சி பொருளாளர் அங்கமுத்து சண்முகத்தை நேற்று சிலர் தாக்கிவிட்டனர். சினிமா டிரைவர் யூனியனை சேர்ந்தவர்கள்தான் தன்னை தாக்கியதாக அங்கமுத்து சண்முகம் குற்றம் சாட்டினார். பெப்சியின் மற்றொரு நிர்வாகி தனபாலும் தாக்கப்பட்டார்.

பெப்சியில் அங்கம் வகிக்கும் கார் டிரைவர்கள் யூனியன் 2 பிரிவுகளாக செயல்படுவதாகவும் எனவே கார் டிரைவர் யூனியனுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்று பெப்சி பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், இதனால் தன்னை டிரைவர் யூனியனை சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும் அங்கமுத்து சண்முகம் போலீசில் புகார் தெரிவித்தார்.

தங்கள் அமைப்பின் நிர்வாகிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ‘பெப்சி' தொழிலாளர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

சென்னையில் கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி', விஷால் நடிக்கும் ‘பட்டத்துயானை' படப்பிடிப்புகள் நடந்தன. தொழிலாளர்கள் வராததால் இவ்விருபடப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது.

இதுபோல் மேலும் 26 படப்பிடிப்புகள் இந்த ஸ்ட்ரைக்கால் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெப்சி தொழிலாளர்கள் இன்று காலை கோடம்பாக்கம் டைரக்டர்கள் காலனியில் ஒன்றுகூடி, நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் போட்டு போராட்டம் நடத்தினர்.

 

வசந்த பாலன் இயக்கும் காவியத் தலைவன் - பிருத்விராஜ் இன்னொரு ஹீரோ!

Prithviraj Joins With Vasantha Balan

சென்னை: காவியத் தலைவன் என்ற தலைப்பில் வசந்த பாலன் இயக்கும் புதிய படத்தில் பிருத்விராஜா இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார்.

அரவான் படத்துக்குப் பிறகு வசந்த பாலன் இயக்கும் படம் இது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் இந்த ஸ்க்ரிப்டை உருவாக்கி வந்தார்.

படத்தில் ஒரு ஹீரோவாக சித்தார்த் நடிப்பார் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார். இப்போது அடுத்த ஹீரோவாக ப்ருத்விராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நாயகிகளாக லட்சுமி மேனன் அல்லது நஸ்ரியா நஸீம் நடிப்பார்கள் என தெரிகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. வசந்த பாலனுடன் அவர் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அரவான் மாதிரி இந்தப் படமும் குறிப்பிட்ட காலகட்டத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

 

'அதெல்லாம் ஏழ வருஷத்துக்கு முந்தின படம்... இப்பப் போயி...!' - அலுத்துக் கொள்ளும் லட்சுமி ராய்

சென்னை: நானும் ஸ்ரீசாந்தும் நெருக்கமாக உள்ளது போன்ற படங்கள் 7 ஆண்டுகளுக்கு முன்பு விளம்பரத்துக்காக எடுக்கப்பட்டவை.. இதை இப்போது பெரிது படுத்துவது வருத்தமாக உள்ளது என நடிகை லட்சுமி ராய் தெரிவித்துள்ளார்.

சூதாட்டப் புகாரில் சிக்கி சிறையில் உள்ள ஸ்ரீசாந்த்துடன் நெருக்கமாக இருந்த அத்தனை நடிகைகளும் சிக்கலுக்குள்ளாகி உள்ளனர்.

அத்தனை நடிகைகளும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரம் முயற்சியில் உள்ளனர் போலீசார்.

lakshmi rai s explanation on her affair with sreesanth

இந்த நிலையில் லட்சுமிராயும் ஸ்ரீசாந்தும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இது தனக்கு எதிரான சதி என்று வருத்தப்பட்டுள்ளார் லட்சுமி ராய்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இப்போது இன்டர்நெட்டில் வெளியாகியுள்ள படங்கள் எல்லாம் ஏழு வருடங்களுக்கு முன் ஒரு விளம்பர படத்துக்காக எடுக்கப்பட்டவை.

இதை இந்த நேரத்தில் இணைய தளங்களில் பரப்புவதும், பத்திரிகைகளில் வெளியிடுவதும் தவறானது. இந்த இக்கட்டான நேரத்தில் இப்படங்கள் வெளியாவதால் என் இமேஜ் பாதிக்கப்படும். நான் ஒரு பெண் என்பதைக் கூட கருத்தில் கொள்ளாமல் இப்படி வதந்தி பரப்புவது என் எதிர்காலத்தைப் பாதிக்கும்.

நான் ஐபிஎல் தூதுவராக இருந்ததால், தொழில் ரீதியாக அது தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்றேன். ஒரு நடிகை என்ற முறையிலேயே ஸ்ரீசாந்துடன் அந்தப் படத்தில் நடித்தேன்.

வேறு வகையில் யாருடனும் எனக்கு தனிப்பட்ட தொடர்பில்லை," என்றார்.

 

காவி வேட்டி, கழுத்தில் ருத்ராட்சம், தெருவோரத்தில் ஓய்வு..! - இதுதான் இன்றைய சிம்பு!

Simbu Speaks More On Spirituality Than Movies

சென்னை: ஆன்மீகத்துக்கு மாறிவிட்டேன் என்று நடிகர் சிம்பு சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

அறிவித்ததோடு நில்லாமல், ஆன்மீக வேடத்துக்கும் மாறிவிட்டார். தலையில் காவித்துண்டு கட்டிக் கொண்டு, சாதாரண உடையில் இமயமலைப் பகுதிகளில் சுற்றித் திரிந்து அனுபவம் பெற்றுள்ளார்.

காவி வேட்டி கட்டி, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து சாலையோரங்களில் அமர்ந்து, மக்களோடு ஓய்வெடுத்துள்ளார். புனிதமான சில மலை குகைகளில் அமர்ந்து தியானம் செய்தாராம் (பாபா குகைக்குப் போய் வந்தீங்களா?).

ஆன்மீகத்துக்கு மாறியது குறித்து அவர் கூறுகையில், "கடவுள் எனக்கு தேவையான புகழைக் கொடுத்துள்ளார். தேவையான அளவு பணமும் இருக்கிறது. ரசிகர்கள் ஆதரவு உள்ளது.

இப்போது வேறு ஒரு உலகில் இருப்பதை உணர முடிகிறது. இனி பணம் சம்பாதிப்பது முக்கியமல்ல. விரைவில் சினிமாவிலிருந்து கொஞ்சம் ஓய்வெடுப்பேன்," என்றார்.

சினிமாவை விட ஆன்மீகம் பற்றிப் பேசுவதுதான் சிம்புவுக்கு இப்போது ரொம்பப் பிடித்திருக்கிறது.

இந்த சீஸன் எப்போ முடிவுக்கு வரப் போகுதோ...