கால்ஷீட் பிரச்னை இல்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கால்ஷீட் பிரச்னை இல்லை

1/10/2011 11:28:26 AM

'மைனா' படத்துக்குப் பிறகு வந்த பல வாய்ப்புகளை ஒரே நேரத்தில் ஒப்புக் கொண்டதால் அமலா பால் கால்ஷீட் பிரச்னையில் தவிப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது: 'மைனா' படத்துக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்துள்ளது. விஜய் இயக்கத்தில் விக்ரமுடன் நடிக்கிறேன், கணேஷ் விநாயக் இயக்கத்தில் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', லிங்குசாமி இயக்கத்தில் 'வேட்டை ஆரம்பம்', இதுதவிர பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறேன்.

ஒரே நேரத்தில் பல வாய்ப்புகள் வந்ததால் சிறிது தடுமாற்றம் அடைந்தது உண்மைதான். ஆனால் கால்ஷீட்டில் எந்த பிரச்னையும் இல்லை.
முதல் படத்திலேயே நான் வெற்றி பெற்றுவிடவில்லை. முதல் இரு படங்களில் கசப்பான அனுபங்களை கடந்து வந்திருக்கிறேன். 'மைனா'வுக்காக இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்திருக்கிறேன். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறேன். தமிழ் மக்கள் கொடுத்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது இப்போதைய குறிக்கோள். அதற்காக கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன்.


Source: Dinakaran
 

இரட்டை வேடத்தில் விக்ரம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இரட்டை வேடத்தில் விக்ரம்

1/10/2011 10:50:38 AM

விக்ரம் நடிப்பில் செல்வராகவன் தொடங்கிய படம் சிந்துபாத். ரமேஷ்பாபு படத்தின் தயா‌ரிப்பாளர். லடாக்கில் விக்ரம் மற்றும் ஸ்வாதியை வைத்து சில காட்சிகள் படமாக்கவும் செய்தார் செல்வராகவன். சில காரணங்களால் சிந்துபாத் கைவிடப்பட்டது. அதன் பிறகு விக்ரம் கே.குமார், பூபதி பாண்டியன் என பல மலர்கள் தாவி இறுதியாக விஜய் இயக்கத்தில் தெய்வமகன் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். விக்ரமின் கால்ஷீட் கைவசம் இருப்பதால் சிந்துபாத் தயா‌ரிப்பாளர் விக்ரமுக்கான இயக்குனர் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளார். அனேகமாக விக்ரமை வைத்து அவர் தயா‌ரிக்கும் படத்தை சுசீந்திரன் இயக்குவார் என தெ‌ரிகிறது. வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல படங்களை இயக்கிய சுசீந்திரன் தற்போது கௌதம் தயா‌ரிப்பில் அழகர்சாமியின் குதிரை படத்தை இயக்கி வருகிறார். சுசீந்திரன் விக்ரமை இயக்கப் போகும் படத்தில் விக்ரமுக்கு இரண்டு வேடங்களாம். இரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற விக்ரமின் நீண்ட நாள் ஆசை இதன் மூலம் பூர்த்தியாகியிருக்கிறது.


Source: Dinakaran
 

பைக் விபத்து சந்தியா படுகாயம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பைக் விபத்து சந்தியா படுகாயம்

1/10/2011 11:26:26 AM

மோட்டார் பைக்கில் இருந்து தவறி விழுந்த சந்தியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மலையாளத்தில் வி.கே.பிரகாஷ் இயக்கத்தில், சந்தியா நடிக்கும் படம், 'த்ரீ கிங்ஸ்'. இந்திரஜித் ஹீரோ. இதன் ஷூட்டிங் கேரளாவில் சாலக்குடி அருகிலுள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே நடந்தது. மோட்டார் பைக்கில் இந்திரஜித், சந்தியா அமர்ந்து சென்ற காட்சி படமானது. அப்போது இந்திரஜித் பைக்கை வேகமாக ஓட்டினார். பலத்த மழையால் ரோடு சேறும் சகதியுமாக இருந்தது. இதில் நிலைகுலைந்து இருவரும் கீழே விழுந்தனர். இந்திரஜித் லேசான காயத்துடன் தப்பினார். சந்தியா மீது பைக் இன்ஜின் விழுந்து அழுத்தியது. இதில் அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த படப்பிடிப்பு குழுவினர், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து சந்தியா, தினகரன் நிருபரிடம் கூறும்போது, 'பைக் தடுமாறி விழுந்ததில், அதன் அடியில் சிக்கிக்கொண்டேன். இடது கால் முட்டிப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஓய்வு எடுத்து வருகிறேன்' என்றார்.


Source: Dinakaran
 

போராளி படப்பிடிப்பை பிப்ரவ‌ரியில் தொடங்க திட்டம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

போராளி படப்பிடிப்பை பிப்ரவ‌ரியில் தொடங்க திட்டம்

1/10/2011 10:45:30 AM

‘நாடோடிகள்’ படத்தில் நடித்த பின் ‘ஈசன்’ படத்தை இயக்க சென்றுவிட்டார் சசிகுமார். இதில் அவர் நடிக்கவில்லை. இதையடுத்து ‘போராளி’ என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இதில் சமுத்திரக்கனி இயக்குனர், சசிகுமார் ஹீரோ. போராளி சென்னையில் சில பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளும் இளைஞனைப் பற்றியது. சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். சுப்பிரமணியபுரம், நாடோடிகள் போல இந்தப் படத்தில் காதல், காமெடி, சென்டிமெண்ட் அனைத்தும் இருக்கும் என்று தெ‌ரிவித்தார் சமுத்திரக்கனி. படப்பிடிப்பை பிப்ரவ‌ரியில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.


Source: Dinakaran
 

சினேகா ச‌ரியான சாய்ஸ் :விஜயசாந்தி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சினேகா ச‌ரியான சாய்ஸ் : விஜயசாந்தி

1/10/2011 10:55:33 AM

சினேகா காக்கி சட்டை போட்ட படம் பவானி. இதில் ஐபிஎஸ் அதிகா‌ரியாக சமூக விரோதிகளை பந்தாடியிருக்கிறார். ‌ஜி.கிச்சா இயக்கம். பவானி விஜயசாந்தி நடித்த வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தின் ‌ரீமேக். இதனால் சினேகா பவானியில் நடித்திருப்பது பற்றி விஜயசாந்தியிடமும் கேட்டிருக்கிறார்கள். அதற்கு லேடி சூப்பர் ஸ்டா‌ரின் பதில், சினேகா ரொம்ப ச‌ரியான சாய்ஸ். இதை கேட்டது முதல் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் சினேகா. பவானி படத்தை விஜயசாந்திக்கு ஸ்பெஷலாக போட்டுக் காண்பிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தையும் சினேகா தெ‌ரிவித்தார்.


Source: Dinakaran
 

இளைஞன் தெலுங்கில் மொழிமாற்றம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இளைஞன் தெலுங்கில் மொழிமாற்றம்

1/10/2011 11:30:39 AM

முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள படம் 'இளைஞன்'. சுரேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார். மீரா ஜாஸ்மின், ரம்யா நம்பீசன், நமீதா, சுமன் நடித்துள்ளனர். படம் பற்றி படத்தின் நாயகனும் பாடலாசிரியருமான பா.விஜய் கூறியதாவது: 'இளைஞன்' எல்லா மொழிக்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தும் கதை. தாய்ப்பாசம் பேணாத மொழியும் இல்லை, தேசமும் இல்லை. 'இளைஞன்' படத்தை பல்வேறு மொழிகளுக்கு மாற்றும் திட்டம் உள்ளது. முதல் கட்டமாக தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ், மலையாளத்தில் பொங்கல் அன்று வெளிவருகிறது. அதிலிருந்து இரண்டு வாரத்திற்கு பிறகு தெலுங்கில் வெளியாகிறது. படம் வெளிவந்த பிறகு இரண்டாவது வாரத்திலிருந்து படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் தமிழ்நாடு முழுவதும் ஒரு வாரம் சுற்றுப் பயணம் செய்கிறார்கள். தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை நேரில் சந்திக்க இருக்கிறார்கள். பிப்ரவரி மாதத்தில் இதே குழுவினர் தயாரிக்கும் அடுத்த படம் பற்றி அறிவிக்க இருக்கிறோம்.


Source: Dinakaran
 

மலையாளத்தில் தடை தமிழுக்கு வந்தார் திலகன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மலையாளத்தில் தடை தமிழுக்கு வந்தார் திலகன்

1/10/2011 11:31:57 AM

மலையாள படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டதால், கேரளாவில் மேடை நாடகங்களில் நடித்து வருகிறார் திலகன். இந்நிலையில், தமிழில் 'உயிரின் எடை 21 அயிரி' படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதன் கதை, திரைக்கதை, ஒலி வடிவமைப்பு, இசை, இயக்கம் பொறுப்புகளை ஏற்று ஹீரோவாக நடிக்கும் இ.எல்.இந்திரஜித் கூறியதாவது: 1908ல், டாக்டர் டங்கன் மெக் டஹல் என்பவர், உயிரின் எடை எவ்வளவு என்று, சிலரை வைத்து ஆராய்ச்சி செய்தார். இறப்புக்குப் பின், ஒருவருடைய மொத்த எடையிலிருந்து 21 கிராம் குறைவதாக நிரூபித்தார். அதுவே உயிரின் எடை. இதை, படத்தின் கதையுடன் எப்படி இணைத்திருக்கிறேன் என்பது சஸ்பென்ஸ். தாதாவாக திலகன் வருகிறார். நான் அவரது அடியாள். புதுமுகம் வினிதா, குழந்தை சங்கமித்ரா மற்றும் என்னைச்சுற்றி கதை நகரும். படத்தில் பணியாற்றிய அனைவரையும் நடிக்க வைத்துள்ளேன். வழக்கமான பார்முலாவில் இல்லாத படமாக இருக்கும்.


Source: Dinakaran
 

தேவதாசியின் கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தேவதாசியின் கதை

1/10/2011 11:46:23 AM

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மோனிகா பேடி, அவற்றிலிருந்து விலகி நடித்துள்ள படம், 'தேவதாசியின் கதை'. 3டி ஸ்டுடியோ காம் என்டர்டெயின்மென்ட் கம்பெனி தயாரிக்கிறது. சுவாதி வர்மா, சத்யபிரகாஷ், முகேஷ் ரிஷி, தீபக் நடிக்கின்றனர். இசை, துர்கா. வசனம், அன்பழகன். ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கும் கவுதம், நிருபர்களிடம் கூறியதாவது: கதையை கேட்டவுடனே மோனிகா பேடி ஒப்புக்கொண்டார். தன்னால் எந்த பிரச்னையும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவர் நடிக்கும் தமிழ் படம் என்பதால், மீடியாக்களிடம் இருந்து விலகியிருக்க நினைத்தார். எனவே, மும்பை ஸ்டுடியோவில் அவரது காட்சிகளை 3 மாதங்கள் படமாக்கினேன். இந்தியில் 'ஆர்டிஎக்ஸ்' படத்தை இயக்கியுள்ளேன். ஆந்திராவிலுள்ள பெத்தாபுரம் சென்று, தேவதாசிகளின் வாழ்க்கை குறித்து பல மாதங்கள் ஆய்வு செய்தேன். அதன் அடிப்படையில் இதை உருவாக்கியுள்ளேன். வரும் 28ம் தேதி ரிலீசாகிறது.


Source: Dinakaran
 

விஜய்யின் அரசியல் வசனங்களுக்கு தடை

சினிமாவில் விஜய் அடித்தால் சுற்றி இருக்கும் பொருட்கள் தூள் தூளாக உடையும். ஆனால் இப்போதோ அவர் பார்வையிலேயே எல்லாம் உடைந்து விழுகிற அளவுக்கு அவருக்குள் ஆயிரம் கோபம். பொதுவாகவே விஜய் படங்களில் வில்லனை தாக்கிப் பேசுகிற மாதிரியான வசனங்கள்அதிகமாக இருக்கும். அவை அனைத்துமே யாரையாவது மறைமுகமாக தாக்கிப் பேசுகிற மாதிரிஅமைத்திருப்பார்கள். விஜய்யின் காவலன் படத்திலும் அப்படி நிறைய வசனங்கள் இருக்கிறதாம். ஆனால் அது இப்போது விஷயம் இல்லை.

http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/ntalkies/hollywood/vijay_kavalan.jpg

இப்போது இருக்கிற நிலையில், தான் நடித்துக் கொண்டிருக்கிற வேலாயுதம் படத்தில் நேரடியாக சிலரை தாக்கிப் பேசுகிற வசனங்கள் அமைத்திருக்கிறாராம் விஜய். தன் பெயரை யாரிடமும் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்த படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் விஜய்யிடம் இதில் அரசியல் வேண்டாம், அரசியல் வசனங்களும் வேண்டாம் என்றாராம். என் ரசிகர்கள் அதைத் தான் எதிர்பார்க்கிறார்கள் என்று விஜய் சொன்னபோதும், படத்தில் பஞ்ச் வசனங்கள் இருக்கட்டும் அதில் அரசியல் வேண்டாம் சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர்.