வயசானாலும் 'வெங்கி'க்கு மட்டும் ஓகே சொன்ன அஞ்சலி!

Anjali Be Paired With Venatesh Telugu Again   

வயசான நடிகர்களுடன் நடிப்பதில்லை என்பது அஞ்சலியின் கொள்கைகளில் ஒன்று.

ஆனால் ஒருவருக்காக அதைத் தளர்த்திக் கொண்டாராம். அவர் வெங்கடேஷ்.

போல்பச்சன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அவர் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். விஜய் பாஸ்கர் இயக்குகிறார்.

இதுகுறித்து அஞ்சலியின் அம்மா கம் 'மேனேஜர்' கூறுகையில், "போல்பச்சன் ரீமேக்கில் அஞ்சலி நடிப்பது உண்மைதான். படப்பிடிப்பு தொடங்கி, அதில் சில தினங்கள் அஞ்சலி நடித்தார். வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்," என்றார்.

ஏற்கெனவே சீதம்மா வகிட்லோ சிரிமல்லே செட்டு என்ற படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக நடித்தவர் அஞ்சலி. அந்த பழக்கம் காரணமாக, வெங்கடேஷுடன் மட்டும் நடிக்க ஒப்புக் கொள்கிறாராம்.

போல்பச்சன் தெலுங்கு ரீமேக்கில் அஜய் தேவ்கன் வேடத்தை வெங்கடேஷும், அபிஷேக் பச்சன் வேடத்தை ராமும் செய்கிறார்கள்.

 

காந்தி கொலைச் சதி திரைப்படமாகிறது!

Plot Kill Mahatma Gandhi Subject New Film

மும்பை: காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் நடந்த சதித் திட்டத்தை The Men Who Killed Gandhi என்ற பெயரில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

நாடு சுதந்திரமடைந்த சில மாதங்களில் 1948ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி காந்தியடிகள் கொல்லப்பட்டார். நாதுராம் கோட்சே என்பவன் காந்தியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.

ஆனால் இந்தக் கொலை ஒரு தனிமனித முயற்சி அல்ல. இதன் பின்னணியில் பெரிய இயக்கமே திட்டமிட்டு சதி வேலை செய்து வந்தது.

இந்த சதிகள் குறித்து விரிவாக The Men Who Killed Gandhi என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் மனோகர் மல்கோங்கர்.

இவர் பிர்லா ஹவுசில் காந்தி வசித்த வீட்டுக்கு மூன்றாவது வீட்டில் குடியிருந்தவர். எனவே அவருக்கு முழு விவரங்களும் தெரியும். அத்துடன் காந்தியை சுட்ட கோட்சேவின் உறவினர்களை நேரில் சந்தித்து பேசி அவர்கள் சொன்ன தகவல்களையும் இப்புத்தகத்தில் சேர்த்து உள்ளார்.

இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து அதே பெயரில் இப்படம் தயாராகிறது. சித்தார்த் சென்குப்தா இயக்குகிறார்.

காந்தி கொலை, இந்திய விடுதலை மற்றும் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தது. எனவே காந்தியின் சுதந்திர போராட்டங்கள், அவரை கொல்ல வகுக்கப்பட்ட திட்டங்கள் கோட்சேயின் பின்னணி விவரங்கள், காந்தியை அவன் வேவு பார்த்தது மற்றும் சுட்டுக் கொன்றது போன்ற அனைத்தும் படத்தில் இடம்பெறுகின்றன.

நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. 2014-ம் ஆண்டு காந்தியின் 66வது நினைவு நாளையொட்டி இந்தப் படத்தை வெளியிடுகின்றனர்.

 

மலேசிய அமைச்சருடன் பாக்யராஜ் சந்திப்பு!

படப்பிடிப்புக்காக மலேசியா சென்றபோது, மலேசிய துணை அமைச்சர் எம் சரவணனைச் சந்தித்தார் இயக்குநர் கே பாக்யராஜ்.

'3 ஜீனியஸ்' என்ற படத்தில் நடிக்கிறார் இயக்குநர் கே பாக்யராஜ். இந்தப் படப்பிடிப்பு மலேசியாவில் நடக்கிறது.

k bagyaraj meets malaysian minister
ஷூட்டிங்குக்காக மனைவி பூர்ணிமாவுடன் மலேசியா சென்றுள்ள கே.பாக்யராஜ் மரியாதை நிமித்தமாக துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணனை (கூட்டரசு பிரதேசம் மற்றும் நகர்ப் புற நல்வாழ்வுத்துறை) சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது பூர்ணிமா பாக்யராஜும் உடனிருந்தார். தமிழ் சினிமா மற்றும் மலேசிய கலைஞர்களின் தமிழ்சினிமா ஆர்வம் ஆகியவை உட்பட பல பொதுவான விஷயங்களை இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

 

ஆஸ்கர் இயக்குனர் அட்டன்பரோவுக்கு மறதி நோய்

Gandhi Director Richard Attenborough In Care Home

லண்டன்: ஆஸ்கர் விருது பெற்ற, "காந்தி' திரைப்பட இயக்குனர், ரிச்சர்டு அட்டன்பரோ, மறதி நோய் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே, உடல்நலம் பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் அமரும் நிலை ஏற்பட்டதுகுறிப்பிடத்தக்கது.

'ஆஸ்கார்' காந்தி...

காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து, 1982ல், அட்டன்பரோ இயக்கிய, "காந்தி' திரைப்படம்.

எட்டு ஆஸ்கார்...

சிறந்த இயக்குனருக்காக ரிச்சர்டு அட்டன்பரோவுக்கும் மேலும் எட்டு ஆஸ்கர் விருதுகளையும் அள்ளி குவித்தது ‘காந்தி'

நடிப்பிலும் மிளிர்ந்தார்...

அட்டன்பரோ "த க்ரேட் எஸ்கேப், ஜுராசிக் பார்க்' உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

கீழே வீழ்ந்தார்...

கடந்த, 2008ல், தவறி விழுந்ததால், உடல்நலம் பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் அமரும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், அவர் மனைவி ஷீலா சிம்முக்கு, முதுமை காரணமாக மறதி நோய் ஏற்பட்டதால், பிரிட்டனில் உள்ள சிகிச்சை மையத்தில், அனுமதிக்கப்பட்டார்.

எல்லாம் மறக்குது...

தற்போது, 89 வயதாகும் அட்டன்பரோவுக்கும், மறதி நோய் ஏற்பட்டுள்ளதால், அவரும், அதே சிகிச்சை மையத்தில், அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

 

திருமணத்துக்கு சித்தார்த் தயார்.. மணமகள் சமந்தாவா?

I M Preparing Marriage Says Sidhardh

திருமணத்துக்குத் தயாராகிறேன். குடும்பம் குழந்தைகள் என வாழ் ஆசையாக உள்ளது, என்கிறார் சித்தார்த்.

ஆனால் மணமகள் சமந்தாவா என்ற கேள்விக்கு மட்டும், அது என் தனிப்பட்ட விஷயம் என்று கூறியுள்ளார்.

பாய்ஸில் அறிமுகமான சித்தார்த், ஒரு எம்பிஏ பட்டதாரி. ஷங்கரிடம் பணியாற்றியவர். தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார்.

ஏற்கெனவே திருமணமாகி, மனைவியைப் பிரிந்தவர் சித்தார்த்.

இவருடன் பல நடிகைகள் இணைத்துப்பேசப்பட்டனர். குறிப்பாக ஸ்ருதி ஹாஸனும் இவரும் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்வதாகக் கூறப்பட்டது.

இப்போது சமந்தாவுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறார். சமீபத்தில் இருவரும் குடும்பத்தினருடன் காளஹஸ்தி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். ஜோடியாக அமர்ந்து ராகு, கேது பரிகார பூஜையும் செய்தார்கள். அப்போதுதான் இவர்கள் காதல் விஷயம் அம்பலமானது.

இருவரும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். இதுகுறித்து சித்தார்த் கூறுகையில், "நான் திருமணத்துக்கு தயாராகிறேன். குழந்தை குடும்பம் என்று இருக்க ஆசை வந்துள்ளது. விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நிறைய பெண்களுடன் என்னை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. அவற்றை பொருட்படுத்தவில்லை. என் சொந்த வாழ்க்கையில் தலையிடும் உரிமை பத்திரிகைகளுக்கும் இல்லை... ரசிகருக்கும் இல்லை," என்றார்.

 

பாரம்பரிய உணவுகளை மெல்லக் கொல்லும் வெளிநாட்டு உணவுகள்... நீயா நானாவில் எச்சரிக்கை

 

சல்மான் கான் கார் மோதல் வழக்கு: ஏப்.8-க்கு விசாரணை ஒத்திவைப்பு

2002 Hit And Run Case Salman Khan Gets Breather

மும்பை: கார் மோதி உயிரிழந்த வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் இன்று ஆஜராகாத காரணத்தால் வழக்கு விசாரணை ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு மும்பை நகரின் பந்தாரா பகுதியில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றியதில் ஒருவர் உயிரிழந்தார். நான்குபேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை 2005-ம் ஆண்டு தொடங்கியது.

வேகமாகவும், அலட்சியமாகவும் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சல்மான்கான் மரணம் விளைவிக்கும் குற்றம் புரிந்ததாக போலீசார் ஆதாரம் அளித்துள்ளனர். இதனையடுத்து சல்மான் கான் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மும்பை கோர்ட், இதுதொடர்பாக மார்ச் 11-ம் தேதி சல்மான் கான் ஆஜராக வேண்டும் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரிக்கும் அமர்வு நீதிபதி யார் என்பது உறுதி செய்யப்படாததால் அன்று சல்மான கான் கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை.

இவ்வழக்கின் விசாரணை இன்று தொடங்கும் என அமர்வு நீதிமன்றம் அறிவித்திருந்தது. விசாரணையின் போது சல்மான் கான் கோர்ட்டில் ஆஜர் ஆவார் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள், செய்தியாளர்கள் என ஏராளமானோர் கோர்ட்டு வாசலில் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், சல்மான் கான் வரவில்லை. அவரது வக்கீல் நீதிபதியின் முன்னர் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

இதனையொட்டி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 8ம் தேதி நீதிபதி ஒத்தி வைத்தார். சல்மான் கான் மீதான புதிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சூரியன் எப்.எம்ல் உதயம் என் ஹெச் 4 இசை வெளியீடு

Uthayam Nh 4 Film Music Release On Soorian Fm

ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவை திருவிழாவாக கொண்டாடுபவர்கள் இருக்கின்றனர். வெளிநாடு போய் கேசட் வெளியிடுவார்கள். ஹெலிகாப்டரில் பறந்து பறந்தும் இசை வெளியீடு நடத்துவார்கள். இது அவரவர் வசதியைப் பொறுத்த விசயம்.

சன் குழுமத்தின் சூரியன் எப்.எம் ரேடியோவில் உதயம் என்.ஹெச் 4 படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 1ம் தேதி நடைபெறுகிறது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகின்றன.

உதயம் என்.ஹெச்4 படத்தில் சித்தார்த் - அஷ்ரிடா நடித்துள்ளனர். மணிமாறன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படத்திற்கு டப்பிங் பணிகள் தற்போது பெங்களூரில் நடைபெறுகிறது. உதயம் என்ஹெச்4 படம் ஏப்ரல் 14ல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கோவையில் உதயநிதியுடன் நயன்தாரா.. பார்க்கக் கூடியது பெருங்கூட்டம்!

Nayanthara In Coimbatore

இது கதிர்வேலன் காதலி படத்தின் ஷூட்டிங்குக்காக கோவை வந்த நயன்தாராவைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படம் கதிரவனின் காதலி. சுந்தர பாண்டியன் படம் தந்த எஸ் ஆர் பிரபாகரன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.

பீளமேடு, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் படத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட்டன. திங்கள் கிழமை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள பூங்காவில் படப்பிடிப்பு நடந்தது.

பூங்காவில் நயன்தாரா கோபமாக அமர்ந்திருப்பது போலவும், அவரை உதயநிதி ஸ்டாலின் சமாதானம் செய்து பேசுவது போலவும் காட்சி படமாக்கப்பட்டது.

நயன்தாரா மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்ட ஏராளமான பொதுமக்களும் ரசிகர்களும் அந்த பகுதியில் குவிந்துவிட்டனர்.

இவர்களின் ஆர்வத்தால், நேற்று ரேஸ்கோர்ஸ் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

போதும் லிப் டு லிப்பு... உதடு புண்ணா போச்சு! - ஓட்டம் பிடித்த நடிகை

விரைவில் வரவிருக்கும் அந்தப் பெரிய படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் முதல் ஹீரோவின் சேட்டை ரொம்பத்தான் அதிகம் போலிருக்கிறது.

ஏகப்பட்ட நட்சத்திரக் கூட்டம் நடிக்கும் இந்தப் படத்தில் இரு நாயகிகள். ஒருவர் கொழுக் மொழுக் பார்ட்டி. இன்னொருவர் கலகலப்பான அங்காடி நடிகை.

படத்தின் காட்சிப்படி (கதைப்படி-ன்னு சொல்ல முடியாது.. இருந்தால்தானே சொல்வதற்கு!) இரு நாயகிகளுக்குமே லிப் டு லிப் அடிக்கும் வாய்ப்பு பாஸுக்கு.

ஏக குஷியுடன் கொழுக் மொழுக்கின் உதடுகளை மேய்ந்துவிட்டாராம். அவரும் ஆறேழு டேக்குகள் வாங்கியும் பெரிதாக முணுமுணுக்காமல் ஒத்துழைத்தாராம்.

இப்போது கலகல நடிகையின் உதடுகளைப் பதம் பார்க்கும் வாய்ப்பு. நடிகை ரொம்ப பிகு பண்ணி பின் ஒப்புக் கொண்டாராம். இதை மனதில் வைத்துக் கொண்ட நடிகர், லிப் டு லிப் காட்சி வந்ததும், கிட்டத்தட்ட 15 டேக்குகள் வரை இழுத்தாராம். நடிகைக்கு உதடு புண்ணாகும் நிலை. இதை வெளிப்படையாகவே சொல்லியும் விட்டாராம். பின்னர்தான் ஒருவழியாக அவரை ரிலீஸ் செய்தாராம் நடிகர்.

அடுத்த இரு தினங்களுக்கு நடிகை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

 

கமலை போன்று 'முத்த' நாயகனாக விரும்பும் ஆர்யா?

Arya Follow The Footsteps Kamal

சென்னை: கமல் ஹாசனைப் போன்று முத்த ஸ்பெஷலிஸ்டாக விரும்புகிறாராம் ஆர்யா.

கோலிவுட் நடிகர்களில் முத்த காட்சிகளுக்கு பெயர் போனவர் உலக நாயகன் கமல் ஹாசன் தான். கமல் படம் என்றால் முத்தம் இல்லாமலா என்று கூறும் அளவுக்கு 'இச்' கொடுப்பதில் அவர் ஸ்பெஷலிஸ்ட். இந்நிலையில் கமல் வழியில் ஆர்யாவும் முத்த நாயகனாக விருப்பப்படுகிறார் என்று கூறப்படுகிறது.

அவரது விருப்பத்தை அறிந்து தான் சேட்டை படத்தில் ஹன்சிகாவுடன் ஒரு முத்தக் காட்சி வைத்துள்ளார்களாம். இந்த காட்சி பற்றி ஆர்யா முதலில் ஓவராக பில்ட்அப் கொடுத்துள்ளார். இதனால் அந்த காட்சி ஆபாசமாக இருக்கும் என்று செய்தி பரவியது. இது குறித்து அறிந்த ஆர்யா தற்போது முத்தக் காட்சி பற்றி தன்னிடம் கேட்பவர்களிடம் தானும், ஹன்சிகாவும் நடித்த முத்தக் காட்சி ஆபாசமாக இருக்காது. அது காதல் முத்தம் என்று கூறி வருகிறாராம்.