ஜனநாதன் படத்திலிருந்து ஜெயம் ரவி விலகியது ஏன்?

புறம்போக்கு படத்திலிருந்து விலகியதற்கு தன் அண்ணன் ஜெயம் ராஜாவின் படத்தைக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளார் ஜெயம் ரவி.

ஆனால் உண்மையான காரணம், ஈகோ மற்றும் சம்பளப் பிரச்சினைதான் என்று இப்போது தெரியவந்துள்ளது.

ஜனநாதன் படத்திலிருந்து ஜெயம் ரவி விலகியது ஏன்?

எஸ்பி ஜனநாதன் அடுத்து இயக்கும் படம் புறம்போக்கு (இந்த டைட்டில் யாருக்கு என்பதில் ஜனநாதனுக்கும் ஒளிப்பதிவாளர் - நடிகர் நட்ராஜுக்கும் இன்னும் பிரச்சினை தொடர்கிறது).

இந்தப் படத்தில் முதலில் ஜெயம் ரவி - ஜீவாவும் நடிப்பதாக இருந்தது. பின்னர் இந்தப் படத்திலிருந்து ஜீவா விலகினார்.

அடுத்து ஆர்யா வந்தார். இப்போது ஜெயம் ரவி தரப்பில் பிரச்சினை செய்தார்கள். ஆர்யாவுக்கும் ஜெயம் ரவிக்கும் சமமான வேடமென்றால் ஜெயம் ரவி நடிக்க மாட்டார் என்று முதலில் கூறினார்களாம். அடுத்து சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்திக் கேட்டார்களாம்.

இதனால் ஜெயம் ரவியை நீக்கிவிட்டு, விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இப்போது ஆர்யா - விஜய் சேதுபதி இணை நாயகர்களாக இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

ஆனால் இந்த உண்மையை மறைத்துவிட்டு, தன் அண்ணன் படத்துக்காக புறம்போக்கிலிருந்து விலகியதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.

ஜெயம் ராஜா படம் அறிவிப்பதற்கு முன்பே ரவி ஒப்புக் கொண்ட படம் புறம்போக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

 

வழக்குகளில் கைதாவதைத் தவிர்க்க சரணடைகிறார் அஞ்சலி?

சென்னை: தன் மீது சென்னை நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில் கைதாவதைத் தவிர்க்க, நீதிமன்றத்தில் சரணடைய முடிவு செய்துள்ளாராம் நடிகை அஞ்சலி.

சித்தி பாரதிதேவியும், டைரக்டர் களஞ்சியமும் கொடுமைபடுத்தியதாக பரபரப்பு பேட்டி அளித்து காணாமல் போய், பின் போலீசாரிடம் ஆஜரானவர் அஞ்சலி.

அன்றிலிருந்து சென்னைக்கே வராமல் ஹைதராபாதிலேயே தங்கியிருக்கிறார்.

வழக்குகளில் கைதாவதைத் தவிர்க்க சரணடைகிறார் அஞ்சலி?

தெலுங்குப் படங்களில் மட்டும் நடிக்கிறார். இந்த நிலையில் அஞ்சலிக்கு எதிரான வழக்குகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

இயக்குநர் களஞ்சியம் சைதாப்பேட்டை, கோர்ட்டில் அஞ்சலி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சித்தி பாரதிதேவி அஞ்சலி மாதம் தோறும் ரூ.50 ஆயிரம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அஞ்சலி கடைசியாக தமிழில் ஊர் சுற்றி புராணம் படத்தில் நடித்தார். இந்த படம் முடிவடையாமல் பாதியில் நிற்கிறது. படத்தின் இயக்குநர் களஞ்சியம் இதுகுறித்து நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கங்களில் அஞ்சலி மீது புகார் அளித்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அஞ்சலிக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சிக்கல்களிலிருந்து வெளியில் வர வேண்டுமானால் உடனடியாக நீதிமன்றத்தில் அவர் சரணடைய வேண்டும்.

அதன் பிறகு ஊர் சுற்றிப் புராணத்தில் நடிக்க வேண்டும். எனவே முதலில் சரணடை முடிவுப செய்துள்ளாராம் அஞ்சலி.

 

டூப் போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்த ஹீரோயின்!

மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து அதிர வைத்தார் படக்குழுவினரை.

தேனி மாவட்டத்தை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள படம், ‘மெய்யழகி.' இந்த படத்தில், ‘பட்டாளம்,' ‘காதல் சொல்ல வந்தேன்' படங்களில் நடித்துள்ள பாலாஜி கதாநாயகனாகவும், ஜெய்குவேதனி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

டூப் போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்த ஹீரோயின்!

படத்தின் ஷூட்டிங்கின்போது, 170 அடி ஆழமுள்ள கிணற்றில் கதாநாயகி ஜெய்குவேதனி ‘டூப்' இல்லாமல் குதித்து அதிர வைத்தார்.

இதுபற்றி படத்தின் இயக்குநர் ஆர்.டி.ஜெயவேல் கூறுகையில், "கதைப்படி, தம்பியை காணாமல் இரவு முழுவதும் ஊரெல்லாம் தேடிய கதாநாயகி கடைசியாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் கிணற்றுக்கு வந்து பார்க்க, கிணற்றுக்குள் தம்பி தத்தளித்துக் கொண்டிருக்கிறான். தம்பியை காப்பாற்ற தன் உயிரை துச்சமென மதித்து கிணற்றுக்குள் குதிக்கிறாள்.

இந்த காட்சியில், 170 அடி ஆழமுள்ள கிணற்றில் கதாநாயகி ஜெய்குவேதனி ‘டூப்' இல்லாமல் குதித்தார்.

ஆண்களே குதிக்க தயங்கும் அந்த கிணற்றில் குதித்ததால், அவர் அதிகமாக தண்ணீர் குடித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு படக்குழுவினர் முதல் உதவி செய்து காப்பாற்றினார்கள்," என்றார்.

இந்த படத்தில், சி.எல்.ஆனந்தன் மகன் அருண் வில்லனாக நடித்துள்ளார். மீரா ஜாஸ்மின் அக்காள் ஜெனி ஜாஸ்மின், பாடகர் வேல்முருகன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

 

லட்சுமி மேனன் சம்பளம் இப்போ ரூ 40 லட்சமாமே!

தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் லட்சுமி மேனன்தான் இப்போது கோடம்பாக்கத்தின் அதிர்ஷ்ட நாயகி.

சுந்தரபாண்டியனில் அறிமுகமான லட்சுமி மேனனுக்கு அடுத்தடுத்து அமைந்த அத்தனைப் படங்களும் வெற்றிப் படங்களாகவே அமைந்தன.

லட்சுமி மேனன் சம்பளம் இப்போ ரூ 40 லட்சமாமே!  

தொடர்ந்து அவர் நடித்த கும்கி, குட்டிப்புலி படங்களும் பெரிய வெற்றியைப் பெற்றன. விமர்சகர்களால் தோல்விப் படம் என்று கூறப்பட்ட குட்டிப் புலிதான் இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்கிறது பாக்ஸ் ஆபீஸ்.

இடையில் நஸ்ரியா வரவால் கொஞ்சம் ஆட்டம் கண்டது லட்சுமி மேனன் மார்க்கெட். ஆனால் பாண்டிய நாடு வெளியான பிறகு, கோடம்பாக்கத்தின் அதிர்ஷ்ட நாயகியாக பார்க்கப்படுகிறார் லட்சுமி.

இந்தப் படத்தின் வெற்றி அவரது கால்ஷீட் விலையை ரூ 40 லட்சத்துக்கு உயர்த்தியுள்ளது.

இப்போது அவர் நடித்து வரும் சிப்பாய், மஞ்சப்பை போன்ற படங்களுக்குப் பிறகு, புதிதாக ஒப்பந்தமாகியுள்ள படங்களுக்கு இதுதான் சம்பளமாம்.

விஷால் தனது அடுத்த படமான நான் சிகப்பு மனிதனில் லட்சுமியையே ஹீரோயினாக்கியயதோடு, இந்த புதிய சம்பளத்தையும் தாமாகவே முன்வந்து கொடுத்தாராம்.

 

கமல் ஹாஸனுடன் முதல் முறையாக கைகோர்க்கும் சந்தானம்!

கமல் ஹாஸனுடன் முதல் முறையாக கைகோர்க்கும் சந்தானம்!

சென்னை: உலக நாயகன் கமல்ஹாஸனுடன் முதல் முறையாகக் கைகோர்க்கிறார் காமெடி நடிகர் சந்தானம்.

கமல் ஹாஸன் - காஜல் அகர்வால் நடிக்கும் படம் உத்தம வில்லன். ரமேஷ் அர்விந்த் இயக்கும் இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது.

காமெடிக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் பல முதல் முறைகள் இடம் பெறுகின்றன.

கமல் ஹாஸனுடன் முதல் முறையாக ஜோடி சேருகிறார் காஜல் அகர்வால். அதேபோல, அவர் படத்துக்கு முதல் முறையாக இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

அதேபோல, முதல் முறையாக காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடிக்கிறார் கமல் ஹாஸன்,

தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் இந்தப் படத்தில் முதல் முறையாக கமல் ஹாஸனுடன் கைகோர்க்கிறார் சந்தானம்.

சமீப காலமாக கமல் ஹாஸனை தன் காமெடி காட்சிகளில் சந்தானம் கிண்டலடிப்பதாகக் கூறப்பட்டது. இதனால் கமல் ரசிகர்கள் கடுப்பில் இருந்தனர். இப்போது சந்தானமும் கமலும் இணைவதால் இந்த கசப்பு இனிப்பாக மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு மரணம்!

பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு மரணம்!

சென்னை: பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் காலமானார்.

‘பைவ்ஸ்டார்', ‘தூள்', ‘சிவகாசி', ‘திண்டுக்கல் சாரதி', தில்லாலங்கிடி, ‘மாப்பிள்ளை' உள்பட பல படங்களில் நடித்தவர் சிட்டிபாபு.

சிட்டிபாபுவுக்கு ஏற்கனவே இருதய கோளாறு இருந்தது. இதற்காக அவர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் படங்களில் நடிக்காமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

சமீபத்தில்தான் அவர் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

கடந்த இரு தினங்களாக தீவிர சிகிச்சையில் இருந்த சிட்டிபாபு, இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐ.சி.யூ., பிரிவில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவரது உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று (8.11.2013) சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

நடிகர் சிட்டிபாபுவுக்கு 49 வயது. ஜரினா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

மொரீஷியஸ் நாட்டில் "புலம் பெயர்ந்த தமிழர் மாநாடு” சத்தியம் டிவி நேரடி ஒளிபரப்பு

போர்ட் லூயிஸ்: மொரீஷியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில், நவம்பர் 8, 9,10 ஆகிய 3 நாட்களாக புலம் பெயர்ந்த தமிழர் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டினை சத்தியம் டிவி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

ஈவு இரக்கமற்ற இனப் படுகொலைகளை தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய இலங்கை அரசின் மீது சர்வதேச போர்க் குற்ற விசாரணை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அங்கு காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. இதனால் உலக தமிழினம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இதை பிரதிபலிக்கும் விதமாக புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒன்றிணைந்து மாநாட்டை நடத்துகின்றனர்.

மொரீஷியஸ் நாட்டில்

20 நாடுகளைச்சேர்ந்த தமிழர் பிரதிநிதிகள் , பல்வேறு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உலகத்தமிழர்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ளும் அந்த மாநாட்டு நிகழ்வுகளை பிரத்யேகமாக பதிவு செய்வதற்காக சத்தியம் தொலைக்காட்சிக் குழுவினர், செய்தித்துறை தலைவர் சீனு விஜயரங்கம் தலைமையில், மொரீசியஸ் தீவிற்கு நேரடியாகச் சென்றுள்ளனர்.

அந்த மாநாடு குறித்த செய்திகளை உடனுக்குடன் தருவதோடு, மொரீஷியஸ் நாடு மற்றும் அதன் கலாச்சாரம் தொடர்பான செய்தித்தொகுப்புகளையும் சத்தியம் தொலைக்காட்சி வழங்குகிறது.

மாநாட்டில் பங்கேற்கும் தமிழர் பிரதிநிதிகளுடனான சிறப்பு நேர்காணல்களையும் உடனுக்குடன் சத்தியம் தொலைக்காட்சி செய்திகளில் வழங்குகிறது. இந்த நேரடி காட்சி தொகுப்புகளை ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் www.sathiyam.tv என்ற இணையதளத்திலும் மற்றும் சத்தியம் தொலைக்காட்சியிலும் காணலாம்.

 

கமல் ஹாஸனுடன் முதல் முறையாக கைகோர்க்கும் சந்தானம்!

கமல் ஹாஸனுடன் முதல் முறையாக கைகோர்க்கும் சந்தானம்!

சென்னை: உலக நாயகன் கமல்ஹாஸனுடன் முதல் முறையாகக் கைகோர்க்கிறார் காமெடி நடிகர் சந்தானம்.

கமல் ஹாஸன் - காஜல் அகர்வால் நடிக்கும் படம் உத்தம வில்லன். ரமேஷ் அர்விந்த் இயக்கும் இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது.

காமெடிக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் பல முதல் முறைகள் இடம் பெறுகின்றன.

கமல் ஹாஸனுடன் முதல் முறையாக ஜோடி சேருகிறார் காஜல் அகர்வால். அதேபோல, அவர் படத்துக்கு முதல் முறையாக இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

அதேபோல, முதல் முறையாக காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடிக்கிறார் கமல் ஹாஸன்,

தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் இந்தப் படத்தில் முதல் முறையாக கமல் ஹாஸனுடன் கைகோர்க்கிறார் சந்தானம்.

சமீப காலமாக கமல் ஹாஸனை தன் காமெடி காட்சிகளில் சந்தானம் கிண்டலடிப்பதாகக் கூறப்பட்டது. இதனால் கமல் ரசிகர்கள் கடுப்பில் இருந்தனர். இப்போது சந்தானமும் கமலும் இணைவதால் இந்த கசப்பு இனிப்பாக மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

கோச்சடையான் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போகிறது!!

சென்னை: ரஜினியின் பிறந்த நாளன்றும் கோச்சடையான் வெளியாகாது என்பது உறுதியாகிவிட்டது. அநேகமாக இந்தப் படம் ரஜினிக்கு ராசியான ஏப்ரல் 14-ம் தேதிதான் வெளியாகும் என்று தெரிகிறது.

ரஜினி உடல் நலம் பெற்று வந்த பிறகு தொடங்கிய படம் கோச்சடையான்.

கோச்சடையான் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போகிறது!!  

கேஎஸ் ரவிக்குமாரின் கதை-திரைக்கதை-வசனத்தில், சவுந்தர்யாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்தப் படத்தின் ஒரு டீசரும், ஒரு பாடலின் ஒலிக் கோப்பும் மட்டும் இதுவரை வெளியாகியுள்ளன.

பல முறை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப் போடப்பட்டது.

இந்த நிலையில், படத்தின் ஆடியோ அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும், படம் ரஜினி பிறந்த நாளில் வெளியாகும் என்றும் செப்டம்பர் மாதம் அறிவித்தனர்.

அக்டோபர் மாதம் முடிந்த நிலையிலும் படத்தின் இசை வெளியாகவில்லை.

எனவே டிசம்பர் 12-ம் தேதி இந்தப் படம் வெளியாவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

அநேகமாக ரஜினிக்கு ராசியான ஏப்ரல்14- ம் தேதி கோச்சடையான் வெளியாகும் எனத் தெரிகிறது.

 

'ஒரு பொண்ணை சைட் அடிக்கிறாங்க... தவறாம டாஸ்மாக்ல சரக்கடிக்கிறாங்க' - ராதிகா காட்டம்

சென்னை: இன்றைய சினிமாவின் நிலை படுமோசமாக உள்ளது. இன்றைய படங்களில் கதாநாயகன் வேலைவெட்டிக்கே போவதில்லை. ஒன்று, பெண்ணை சைட் அடிக்கிறான்.. மாலையில் டாஸ்மாக்கில் தவறாமல் சரக்கடிக்கிறான், என்று கடுமையாக விமர்சனம் செய்தார் ராதிகா.

ஸ்ரீப்ரியா இயக்கியுள்ள புதிய படம் 'மாலினி 22 பாளையங்கோட்டை'. இப்படத்தின்இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில், நடிகர் கமலஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, இயக்குனர் கே.பாலச்சந்தர், நடிகைகள் நித்யா மேனன், ராதிகா சரத்குமார், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இப்படத்தின் இசைத் தட்டை கமல் வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார். டிரைலரை இயக்குனர் கே.பாலச்சந்தர் வெளியிட நடிகர் விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார்.

'ஒரு பொண்ணை சைட் அடிக்கிறாங்க... தவறாம டாஸ்மாக்ல சரக்கடிக்கிறாங்க' - ராதிகா காட்டம்

விழாவில், நடிகை ராதிகா சரத்குமார் பேசும்போது, "இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீப்ரியாவும் நானும் குழந்தையில் இருந்தே பழக்கம். சினிமாவில் அவர் ஒரு நடிகையாக நன்றாக நடித்திருந்தார். தற்போது இயக்குனராக களமிறங்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு புத்திசாலி பெண் என்று அவரைக் கூறலாம். ஆனால், அவர் அதையெல்லாம் காட்டிக் கொள்ளமாட்டார்.

ஒரு பெண்ணாக இருந்து சினிமாவில் செலவு பண்ணுவது என்பது ரொம்பவும் கஷ்டம். அதை நானும் அனுபவித்திருக்கிறேன். இப்போது ஸ்ரீப்ரியாவும் அதையெல்லாம் சமாளித்து, சமூக உணர்வோடு இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார்.

இன்று வரும் பல படங்களில் டாஸ்மாக் காட்சிகளும், ஹீரோ காலையில் எழுந்ததும் எந்த பெண்ணை சைட் அடிப்பது என்று பேசுவது, அப்பாவை மகன் 'டேய் பாடு' என்றெல்லாம் இழிவாக பேசுவது போன்ற வசனங்கள் நிறைந்த படங்களாகவே வருகின்றன. முன்பெல்லாம் சில்க் ஸ்மிதா பாட்டு ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும் என தமிழ் சினிமாவில் சொல்வார்கள். இப்போது அது டாஸ்மாக் காட்சியாக வருகிறது. டாஸ்மாக்கில் குடிக்கிற மாதிரி ஒரு காட்சியாக வைக்கவேண்டும் என்பது விதியாகிவிட்டது.

அவற்றையும் தமிழ் ரசிகர்கள் ரசிக்கிறார்கள். இருந்தாலும், வித்தியாசமான படங்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன," என்றார்.

 

யு.எஃப்.எக்ஸ் மேகசின் நிகழ்ச்சியில் ஷாரூக்கான்!

சேனல் யு.எஃப்.எக்ஸ் தொலைக்காட்சி வழங்கும் லைஃப் ஸ்டைல் சார்ந்த ஒர் நிகழ்ச்சி‘யு.எஃப்.எக்ஸ் மேகசின்' .

நகரத்தின் அன்றாட நிகழ்வுகள், அது ஃபேஷன் ஆக இருக்கட்டும் அல்லது கலைநிகழ்ச்சிகள் ஆக இருக்கட்டும் அது குறித்த தகவல் தெரிவித்தால் அந்நிகழ்ச்சிகள் யு.எஃப்.எக்ஸ் மேகசின் நிகழ்ச்சியில் இடம்பெறும்.

யு.எஃப்.எக்ஸ் மேகசின் நிகழ்ச்சியில் ஷாரூக்கான்!

இந்த வார நிகழ்ச்சியில் ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் சேவை தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவு பெறும் தருணத்தில் 50-வது லட்சம் கார் ஒன்றை பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக் கான் முன்னிலையில் வெளியிட்டது இடம் பெறுகிறது.

இது தவிர சென்னை நகரில் நடைபெற்ற பல்வேறு தொடக்கவிழாக்கள் மற்றும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் இந்த வார எபிசோடில் இடம்பெறுகின்றன. இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 11.45 மணி முதல் 12.00 மணி வரை ஒளிபரப்பாகிறது

 

யு.எஃப்.எக்ஸ் மேகசின் நிகழ்ச்சியில் ஷாரூக்கான்!

சேனல் யு.எஃப்.எக்ஸ் தொலைக்காட்சி வழங்கும் லைஃப் ஸ்டைல் சார்ந்த ஒர் நிகழ்ச்சி‘யு.எஃப்.எக்ஸ் மேகசின்' .

நகரத்தின் அன்றாட நிகழ்வுகள், அது ஃபேஷன் ஆக இருக்கட்டும் அல்லது கலைநிகழ்ச்சிகள் ஆக இருக்கட்டும் அது குறித்த தகவல் தெரிவித்தால் அந்நிகழ்ச்சிகள் யு.எஃப்.எக்ஸ் மேகசின் நிகழ்ச்சியில் இடம்பெறும்.

யு.எஃப்.எக்ஸ் மேகசின் நிகழ்ச்சியில் ஷாரூக்கான்!

இந்த வார நிகழ்ச்சியில் ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் சேவை தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவு பெறும் தருணத்தில் 50-வது லட்சம் கார் ஒன்றை பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக் கான் முன்னிலையில் வெளியிட்டது இடம் பெறுகிறது.

இது தவிர சென்னை நகரில் நடைபெற்ற பல்வேறு தொடக்கவிழாக்கள் மற்றும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் இந்த வார எபிசோடில் இடம்பெறுகின்றன. இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 11.45 மணி முதல் 12.00 மணி வரை ஒளிபரப்பாகிறது

 

கோச்சடையான் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போகிறது!!

சென்னை: ரஜினியின் பிறந்த நாளன்றும் கோச்சடையான் வெளியாகாது என்பது உறுதியாகிவிட்டது. அநேகமாக இந்தப் படம் ரஜினிக்கு ராசியான ஏப்ரல் 14-ம் தேதிதான் வெளியாகும் என்று தெரிகிறது.

ரஜினி உடல் நலம் பெற்று வந்த பிறகு தொடங்கிய படம் கோச்சடையான்.

கோச்சடையான் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போகிறது!!  

கேஎஸ் ரவிக்குமாரின் கதை-திரைக்கதை-வசனத்தில், சவுந்தர்யாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்தப் படத்தின் ஒரு டீசரும், ஒரு பாடலின் ஒலிக் கோப்பும் மட்டும் இதுவரை வெளியாகியுள்ளன.

பல முறை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப் போடப்பட்டது.

இந்த நிலையில், படத்தின் ஆடியோ அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும், படம் ரஜினி பிறந்த நாளில் வெளியாகும் என்றும் செப்டம்பர் மாதம் அறிவித்தனர்.

அக்டோபர் மாதம் முடிந்த நிலையிலும் படத்தின் இசை வெளியாகவில்லை.

எனவே டிசம்பர் 12-ம் தேதி இந்தப் படம் வெளியாவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

அநேகமாக ரஜினிக்கு ராசியான ஏப்ரல்14- ம் தேதி கோச்சடையான் வெளியாகும் எனத் தெரிகிறது.

 

எதிர்கால சமூகத்தில் என் மகளை நினைத்தால் பயமாக உள்ளது! - சூர்யா

சென்னை: எதிர்கால சூழலில் என் மகளை நினைத்துப் பார்த்தால் பயமாக உள்ளது என்று நடிகர் சூர்யா கூறினார்.

ஸ்ரீப்ரியாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாலினி 22 பாளையங்கோட்டை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. மாலினி 22 பாளையங்கோட்டை திரைப்படத்தின் பாடல்களை கமல்ஹாசன் வெளியிட சூர்யா பெற்றுக்கொண்டார்.

விழாவில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, "மாலினி 22 பாளையங்கோட்டை படம் துவங்கிய நாளிலிருந்தே எனக்கு தெரியும். படம் என்பது இரண்டரை மணி நேர எண்டர்டெயின்மெண்டாக இல்லாமல், படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு போனபிறகும் படம் பார்த்த தாக்கம் இருக்கவேண்டும்.

எதிர்கால சமூகத்தில் என் மகளை நினைத்தால் பயமாக உள்ளது! - சூர்யா

ஒரு கருத்தை மக்கள் மனதில் பதிய வைக்கும் படங்கள் எத்தனை என்பதை கடைசி 3 வருடங்களில் விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்ற துறையில் இருப்பவர்களிடம் பேசும்போது நல்ல கருத்துள்ள படங்கள் என்றால் 2-3 படங்கள்தான் நினைவுக்கு வருகின்றன. இதில் நானும் அடக்கம் என்பதை மறுக்கவில்லை.

தற்போதைய தலைமுறையின் மீது பெரிய பழியே இருக்கிறது. என் மகளின் தலைமுறை வெளிவரும்போது சமூகம் எப்படி இருக்கும் என்று ஒரு பயம் கண்முன்னே தெரிகிறது.

இன்று ஒரு அமெரிக்க பேப்பரில் அஸ்ஸாம் மாநிலத்தில் ‘ரேப்' ஃபெஸ்டிவல் நடப்பதாக எழுதியிருக்கிறார்கள். அதை உண்மை என நம்பி ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் யாரும் இந்தியாவிற்கு போகாதீர்கள் என்று சொல்லிவருகிறார்கள்.

நாட்டில் நடப்பதை சினிமாவாக எடுக்கிறோம். சினிமாவில் எடுப்பதுதான் நாட்டில் நடக்கிறது. நம்மிடம் மிகவும் பலமான காட்சி ஊடகம் இருக்கிறது. இதை வைத்து நாம் செய்ய நினைப்பதை செய்யலாம். புதுமைப்பெண், அச்சமில்லை அச்சமில்லை, மனதில் உறுதி வேண்டும் போன்ற படங்கள் வேண்டும் என தோன்றுகிறது.

கலைத் துறையிலும் தொழில் நுட்பத்துறையிலும் பெண்கள் அதிக அளவில் வரவேண்டும் என எதிர்பார்க்கிறேன். அதற்கு இந்த படம் ஒரு முயற்சியாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று பேசினார்.

 

இரும்புக் குதிரையிலிருந்து லட்சுமி ராய் நீக்கம்!

இரும்புக் குதிரை படத்திலிருந்து நடிகை லட்சுமிராய் நீக்கப்பட்டுள்ளார்.

‘பரதேசி' படத்தை அடுத்து நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கும் புதிய படம் ‘இரும்புக் குதிரை'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இரும்புக் குதிரையிலிருந்து லட்சுமி ராய் நீக்கம்!

இன்னொரு நாயகியாக லட்சுமிராய் ஒப்பந்தமாகியிருந்தார். யுவராஜ் இயக்குகிறார்.

இப்படத்தில் லட்சுமிராய் பைக் சாகச வீராங்கனையாக நடிப்பதாக இருந்தது. இதற்காக, கடந்த சில நாட்களாக பைக் ஓட்டும் பயிற்சியும் எடுத்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தாலும், படப்பிடிப்பில் கலந்து கொள்ள இதுவரை லட்சுமிராய்க்கு அழைப்பு வரவே இல்லையாம்.

இதுகுறித்து படக் குழுவினரிடம் கேட்டால், நாங்கள் லட்சுமிராயை ஒப்பந்தம் செய்யவே இல்லையே... அப்புறம் எங்கே கூப்பிடுவது என்றனர்.

ஆனால் லட்சுமி ராய் இது பற்றிக் கூறுகையில், என்னை ஒப்பந்தம் செய்தது உண்மையே. ஆனால் அவர்கள் என்னை நீக்கியது பற்றி எந்தத் தகவலும் இ்ல்லை... என்னை படப்பிடிப்புக்கு வருமாறு அழைக்கவும் இல்லை, என்றார்.