கோடீஸ்வரர் திருமணத்தில் சல்மான் நடனம்: ரூ. 3 1/2 கோடி சம்பளம்..

Salman Khan Charges Rs 3 5 Crore Dance

டெல்லி: கோடீஸ்வர்ர் வீட்டு திருமண விழாவில் நடனமாட பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மூன்றரை கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் வீட்டு திருமணம் வியாழக்கிழமை வெகு ஆடம்பரமாக நடைபெற்றது.

திருமண அரங்கில் சூதாட்டம், குத்தாட்டம் என அத்தனை பொழுதுப்போக்கு அம்சங்களும் படு அமர்க்களமாக களை கட்டியிருந்தன. சூதாட்டத்தில் வென்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு ஆடம்பர கார்களும், லண்டன் சென்றுவர விமான டிக்கெட்டுகளும் பரிசாக வழங்கப்பட்டன.

பாலிவுட் பிரபலங்களின் திருமண ஆடம்பரங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பணம் தண்ணீராக இறைக்கப்பட்டதாம்.

இந்த திருமணத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடனமாடினார். ஓர் இரவுக்கு நடனமாடுவதற்கு சல்மான் கானுக்கு ரூ. 3 1/2 கோடி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

'சரி... எல்லாருக்கும் அழைப்பிதழ் வச்சிருவோம்!' - வடிவேலு முடிவு

Vadivelu Decides Call Leaders Daughters Wedding

மதுரை: மகளின் திருமணத்துக்கு அரசியல் பேதமின்றி அனைவருக்குமே அழைப்பிதழ் வைக்க நடிகர் வடிவேலு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசியல் பிரச்சினைகளால் கடந்த இரண்டாண்டு காலமாக ஒதுங்கியிருந்த வடிவேலு, இப்போது மீண்டும் பரபரப்பாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் வடிவேலுவின் மூத்த மகளுக்கு வரும் ஏப்ரல் 7-ம் தேதி மதுரையில் திருமணம் நடக்கிறது. திருமண வேலைகளில் மும்முரமாக உள்ளார் வடிவேலு.

மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சடிக்கும் பணி இப்போது நடந்து வருகிறது.

வடிவேலு இப்போது அரசியல் பற்றி பேசுவதில்லை என்றாலும், அவர் சார்ந்திருக்கும் திமுக தலைவர்களை அழைத்தால் மீண்டும் தேவையற்ற சர்ச்சைகள் வரும். எனவே அழைப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாராம்.

இப்போது அனைத்து அரசியல் தலைவர்களுக்குமே அழைப்பிதழ் தருவதென முடிவு செய்துள்ளாராம்.

திருமணம் முடிந்த பிறகு புதுப்பட ஷூட்டிங்கை தொடங்கப் போகிறாராம் வடிவேலு.

 

போதையில் பறந்த கார்... சினிமா உதவி இயக்குனரை விரட்டிப் பிடித்த போலீஸ்

மும்பை: மும்பையில் குடிபோதையில் கார் ஓட்டிய உதவி பாலிவுட் உதவி இயக்குநரை மும்பை போலீசார் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்தனர்.

மும்பையில் உள்ள மேற்கு விரைவு நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் ஜோகேஷ்வரி பகுதி நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்த ஒரு கார், போலீஸ் வேன் நின்றிருப்பதை பார்த்ததும் 'யூ டர்ன்' அடித்து வந்த வழியே மின்னல் வேகத்தில் பறந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் வேனில் ஏறி அந்த காரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.

அந்த காரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத அவர்கள், கட்டுப்பாட்டு அறையின் மூலம் அப்பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களையும் உஷார் படுத்தினார்கள்.

சினிமா பாணியில் சேஸிங்

சினிமாவில் வரும் 'கார் சேஸ்' காட்சி போல் 15 நிமிடம் வரை நீடித்தது. விடாமல் துரத்திய போலீசார், பெஷ்ராம் பாக் பகுதியில் அந்த காரை மடக்கிப் பிடித்தனர். டிரைவரை வெளியே வரச்சொன்னபோது அவர் நிற்க கூட நிதானமில்லாத நிலையில் இருந்தது தெரியவந்தது. காரின் பின் இருக்கையில் இளம் பெண் ஒருவரும் போதையில் அமர்ந்திருந்தார். விசாரணையில் காரின் டிரைவர் பெயர் மார்க் சாமுவேல் என்பதும், சமீபத்தில் வெளியான 'டபாங் 2' இந்தி திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பதும் தெரிய வந்தது.

லைசென்ஸ் இல்லை

இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்த போது அவர்கள் போலீசாருடன் தகராறு செய்தனர். எனினும், போலீசார் அவர்களை குண்டுகட்டாக வேனில் தூக்கி போட்டு ஜோகேஷ்வரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மார்க் சாமுவேலிடம் நடத்திய விசாரணையில் அவரிடம் கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் கூட இல்லாதது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

 

கைக்குழந்தையுடன் படப்பிடிப்புக்கு வந்த கோபிகா!

Gopika Starts Her Post Marriage Innings   

குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் முழு வேகத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் கோபிகா.

சமீபத்தில் தொடங்கிய மலையாளப் பட ஷூட்டிங்குக்கு தனது கைக்குழந்தையுடன் வந்து கலந்து கொண்டார்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார் கோபிகா. ஆனாலும் அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்தன.

குழந்தை பெற்ற பிறகு, மலையாளத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கு ‘பரயா அத்ரா போரா' என தலைப்பிட்டுள்ளனர்.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் கொச்சியில் துவங்கியது. இதில் கோபிகா பங்கேற்க வந்த கோபிகா, தனது 2 வயது மகளையும் அழைத்துக் கொண்டு படப்பிடிப்புக்கு வந்தார்.

குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஒரு பெண் உடன் இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் தானே குழந்தையை கவனித்துக் கொண்டார்.

மீண்டும் படங்களில் நடிப்பதை தன் கணவரே ஆதரிப்பதால், நடிக்க ஆரம்பித்துவிட்டதாக கோபிகா தெரிவித்தார்.

 

என்னை இயக்குநராக ஏற்றுக்கொள்வார்கள்… பிருந்தாதாஸ்

Actor Brinda Das Makes Her Debut As A Dirctor

சின்னத்திரை நடிகையாக, வில்லியாக, சினிமா தயாரிப்பாளராக என்னை ஏற்றுக்கொண்ட மக்கள் சினிமா இயக்குநராகவும் ஏற்றுக்கொள்வார்கள் என்று மகிழ்ச்சியோடு கூறியுள்ளார் பிருந்தா தாஸ்.

நடனம், டப்பிங்,நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவர் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருந்தாலும் ஆனந்தம் தொடரில் அபிராமி என்ற வில்லி கதாபாத்திரம் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.

பல ஆண்டுகாலமாக சினிமா, சின்னத்திரை என பயணித்துக் கொண்டிருக்கும் பிருந்தா தாஸ் இப்போது ஹாய் டா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதன்மூலம் சினிமாவில் பெண் இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளார் பிருந்தாதாஸ்.

சின்னத்திரை கலைஞர்கள்

பல வருடங்களாக ஏகப்பட்ட மெகா தொடர்களில் நடித்து சின்னத் திரையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கும் இவர், தன்னுடைய படத்தில் ஒரு சில டிவி நடிக நடிகைகளையும் நடிக்க வைத்திருக்கிறார்.

எப்படி இயக்குநரானேன்?

நடிகையாகவும், நிர்வாக தயாரிப்பாளராகவும் இருந்த நான் சினிமா இயக்குநராக மாறியது எதிர்பாராத நிகழ்வுதான் என்கிறார் பிருந்தா.

பெருமான் படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியவர் பிருந்தா. அந்த அனுபவத்தில் சினிமா தயாரிப்பு நுணுக்கங்களை தெரிந்து கொண்டாராம். பெருமான் படத்தில் பணியாற்றியபோது அதன் இயக்குனர் ராஜேஷ் கண்ணாகிட்ட இந்த கதையை சொன்னேன். அவரே தயாரிக்கிறேன்னு சொன்னார் படமும் தயாராயிட்டிருக்கு. இது ஒரு புது பாதை. இதில் உதய், அஸ்வின், பிரதீஷ், ஜாக்குலின், பாவனா, இந்த 6 பேரும்தான் முக்கிய கேரக்டர். இவர்களுக்குள் நடக்கும் யதார்த்தமான விஷயங்கள்தான் கதை. அதை காமெடியா சொல்றேன்.

துன்பம் வரும்போது நண்பர்கள் எந்த அளவுக்கு நடந்துக்கணும் என்பதையும், எந்த பிரச்னையும் பேசித் தீர்க்காலாம் என்பதையும் சுவாரஸ்யமா சொல்றேன். நடிகையா ஏத்துக்கிட்டவங்க. இயக்குனராவும் ஏத்துக்குவாங்கன்னு நம்புறேன் என்று நம்பிக்கையோடு சொன்னார் பிருந்தாதாஸ்.

இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள அஸ்வின் டணால் கே.ஏ. தங்கவேலு அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக பெரியமருது, சாம்ராட் படத்தில் நடித்துள்ளார். செல்லமே தொடரில் ராதிகாவின் தம்பியாக நடித்துள்ளார்.

 

டயம் சரியில்லையாம்! கோவில் கோவிலாக ஏறி இறங்கும் அனுஷ்கா…

Anushka Special Pooja At Andra Temples

ஹைதராபாத்: நடித்த படங்கள் ஆகா ஒகோ என்று ஓடினால் பிஸியாக விமானத்தில் பறப்பது திரை நட்சத்திரங்களில் வாடிக்கை. அதே படம் ஊற்றிக்கொண்டால், ஜோசியம், ஜாதகம் என்று பார்த்து கோவில் கோவிலாக சுற்றி வருவதும் நடப்பதுதான்.

இந்த பட்டியலில் நடிகை அனுஷ்கா இணைந்துள்ளார். அவர் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஆந்திராவில் உள்ள சில முக்கிய ஸ்தலங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறாராம். அதுமட்டுமின்றி, தனது சார்பில் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்து வருகிறாராம்.

சமீபத்தில் குடும்பத்தோடு ஸ்ரீ காளஹஸ்தி வந்த அனுஷ்கா அங்கு நடைபெற்ற ராகு கேது பூஜையில் பயபக்தியோடு பங்கேற்றாராம். எதற்காக இந்த சிறப்பு பூஜை அன்னதானம் என விசாரித்தால், இவருடைய ஜாதகத்தில் சில கிரகங்கள் எதிர்மறையான வேலைகள் செய்கிறதாம். அவை பெரிய அளவில் தாக்காமல் தவிர்க்க ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று அன்னதானமும் பரிகார பூஜைகளும் செய்து வந்தால் நிவர்த்தியாகும் என குடும்ப ஜோதிடர் கூறியதால், அவருடைய ஆலோசனையின் பேரிலேயே இதை செய்து வருகிறாராம்.

அனுஷ்கா கடைசியாக தமிழில் நடித்த தாண்டவம், அலெக்ஸ் பாண்டிய்ன இரு படங்களும் தோல்வியை தழுவியுள்ளதால், ஜோதிடர் சொன்னது உண்மைதான் என்று நம்பத் தொடங்கிவிட்ட அனுஷ்கா இப்படி கோயில் கோயிலாக சுற்றி வருகிறார் என்று பேசிக்கொள்கின்றனர்.

இனியாவது நல்ல காலம் வந்தால் சரிதான்...