நோ பார்க்கிங்கில் அசின் கார்... ஜாக்கி போட்டுத் தூக்கிய போலீஸ்... அசின் கெஞ்சியதால் விட்டனர்!

மும்பை : மும்பை விமான நிலையத்தில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த நடிகை அசினின் கார் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பின்னர் அசின் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து கார் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். கஜினி படம் மூலம் இந்திக்கு சென்ற அசின் தமிழ்ப் படங்களில் நடிப்பதை நிறுத்தினார். தொடர்ந்து இந்தியில் சல்மான்கான், அஜய் தேவ்கான், அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தற்போது ‘ஆல் இஸ் வெல்' என்ற படத்தில் அபிஷேக் பச்சன் ஜோடியாக நடித்து வருகிறார்.

Bollywood actress Asin's car seized by the police

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை விமான நிலையத்தில் அசினின் கார் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மும்பை விமான நிலையத்தில் கார்களை நிறுத்தக்கூடாது என்ற நடைமுறை உள்ளது. ஆனால், ‘நோ பார்க்கிங்' பகுதியில் அசினின் சொகுசு கார் நிறுத்தப்பட்டிருந்தது.

நீண்ட நேரமாக அந்தக்கார் அங்கு நின்றிருந்ததால், போலீசார் அந்த காரின் டயரில் பூட்டுப் போட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்தக் காரை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

இதனால், காருக்குள் இருந்த அசின் பெரும் தவிப்பிற்கு ஆளானார். பின்னர் அவர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்து, கார் டயரின் பூட்டை கழற்றி விடுமாறு கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் காரை விடுவித்ததாகக் கூறப்படுகிறது.

 

நயன்தாராவுடன் இணையும் 'திருநாள்' ஜீவாவுக்கு ஏற்றம் தருமா?

சென்னை: ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகராக அறிமுகமான ஜீவா, ராம் படத்தின் மூலம் தன்னை நல்ல நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர்.

அதற்குப் பின் இவர் நடித்த படங்கள் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இவரின் அப்பா ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பாளராக இருந்தும் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் இவர் கொடுக்கவில்லை.

Actor Jeeva - Nayanthara again acting one new Movie

இயக்குனர் ராஜேஷ் முதன்முதலில் இவரை வைத்து எடுத்த சிவா மனசுல சக்தி படம் இவரை நச்சென்று நங்கூரமிட்டது போல் ரசிகர்களின் மனதில் நிறுத்தியது. அதுவரை சின்ன சின்ன காமெடி ரோலில் நடித்துக் கொண்டிருந்த சந்தானம் இப்படத்தில் இருந்து தான் முழு நேர காமெடியனாக மாறினார்.

பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கே.வி.ஆனந்தின் கோ படம் வந்து ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. கடைசியாக இவர் நடித்து வெளிவந்த யான் படம் வந்த வேகத்திலேயே பெட்டிக்குள் சென்று முடங்கியதால் படம் எதுவும் இல்லாமலேயே இருந்தார். ஆரம்ப காலத்தில் நடிகை நயன்தாராவுடன் இணைந்து ஈ என்ற வித்தியாசமான படத்தில் நடித்து இருந்தார்.அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தின் மூலம் இருவரும் இணைவது குறிப்பிடத் தக்கது.

இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கும் நயன்தாராவுடன் இணைந்து ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு திருநாள் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி கிட்டத் தட்ட இரண்டு வருடங்கள் கழித்து நடிக்க வந்த போதும் முன்னணி நடிகையாக விளங்கும் நயன்தாரா இப்படத்தில் நடிப்பதால் படத்தின் மதிப்பு கூடியுள்ளது.

கதை கிராமத்தில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. தெனாவட்டு படத்திற்குப் பின் நடிகர் ஜீவா கிராமத்து இளைஞனாக இப்படத்தில் நடிக்கிறார். இயக்குனர் ராசு மதுரவன்,எஸ்.பி.ஜன நாதன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த பி.எஸ்.ராம் நாத் இப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பின் முதல் கட்டம் இம்மாத இறுதியில் கும்பகோணத்தில் தொடங்குகிறது.

 

அமெரிக்காவில் விஜய் ஆன்டனியின் இந்தியா- பாகிஸ்தான்!

எடிசன்(யு.எஸ்): நான், சலீம் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகும் இந்தியா பாகிஸ்தான் திரைப்படம் அமெரிக்காவிலும் இன்று வெளியாகிறது.

நியூ ஜெர்ஸி எடிசன் நகரின் பிக் சினிமாஸ், சியாட்டல் ராக்சி சினிமாஸ், ராஸ்வெல் (அட்லாண்டா மாநகரம்) நவ்ரங் சினிமாஸ், சான் ஓசே (கலிஃபோர்னியா) டவுண் சினிமாஸ், நைல்ஸ் (சிகாகோ) மூவி மேக்ஸ் சினிமாஸ் ஆகிய ஐந்து திரையரங்குகளில் இந்தியா - பாகிஸ்தான் படம் வெளியாகிறது.

Vijay Antony's India Pakistan releasing in US

கமல்ஹாசனின் உத்தம வில்லன் முக்கிய நகரங்களில் ஓடிக் கொண்டிருப்பதால் கூடுதல் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வினியோகிஸ்தர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் டல்லாஸ் உள்ளிட்ட ஏனைய முக்கிய நகரங்களில் வெளியிட முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நான், சலீம் படங்களின் தொடர் வெற்றியால் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளிவரும் மூன்றாவது படமான இந்தியா பாகிஸ்தானுக்கு அமெரிக்காவிலும் ஓரளவு எதிர்ப்பார்ப்பு உள்ளது.

 

ரசிகர்கள் தன்னுடன் செல்பி எடுக்கத் தடை போட்ட கிம் கர்தஷியான்

லாஸ் ஏஞ்செல்ஸ்: கிம் கர்தஷியான் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் தன்னுடன் செல்பி எடுக்கத் தடை விதித்தால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

பிரபல நடிகை கிம் கர்தஷியான் தனது செல்பி புகைப்படங்களை வைத்து செல்பிஷ் என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி கடந்த வாரம் வெளியிட்டார். புத்தகத்தோட தலைப்பே செல்பினு இருக்கே நாம போனா நிச்சயம் கிம் கர்தாஷியானுடன் செல்பி எடுத்துக்கலாம் என்று சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சடியது. காரணம் மொபைலில் புகைப்படம் எடுக்க தடை செய்யப்பட்டதால் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

Kim Kardashian Bans Selfies At Launch of Her Book of Selfies

கிம் கர்தஷியான் இப்புத்தகத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள மான்ஹட்டானில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தான் இது போன்ற அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளாகி உள்ளார்.

பிரபல அமெரிக்க பத்திரிக்கையான நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை நிருபர் ருவேன் பிலா என்பவர் கூறுகையில் " இது போன்ற நிகழ்ச்சிகளில் விதிகளை மீறுவதில் தவறில்லை என்று கூறி உள்ளார். அதாவது தடைகளை தாண்டி புகைப்படம் எடுப்பது தவறில்லை என்ற அர்த்தத்தில் அந்த தத்துவத்தை அவர் உதிர்த்து உள்ளார்.

அவர் புத்தகத்தில் கையெழுத்திடும் அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப் படம் ஒன்று வேண்டும் என்று எனது ஆசிரியர் கண்டிப்பாக கூறியதால் நான் எனது மொபைலை மறைத்து வைத்து அந்த தருணத்தை எதிர் நோக்கி காத்திருந்து எடுத்த அந்த புகைப் படம் சரியாக வரவில்லை.

இது போல ஒரு சூழ்நிலை விளைவு என்ன வேண்டுமானாலும் ஆகலாம் என்று மனைவிடம் வீட்டில் சொல்லிவிட்டே வந்தேன். ஆனால் விதி வசத்தால் இப்படி ஆகி விட்டது என்று மனிதன் புலம்பி தள்ளி உள்ளார்.

ஆனாலும் ஒரு போட்டோவுக்கு இப்படி புலம்புவதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் !

 

ஒரே நாளில் 'மாரி; தனுஷ், 'ரஜினி முருகன்' சிவகார்த்தி மோதல்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாரி', சிவகார்த்திகேயன் நடிப்பில் லிங்குசாமி தயாரித்துள்ள ‘ரஜினி முருகன்' ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளது.

அனிருத் இசையில் மாரி படத்தின் இசை மே 25ம் தேதி வெளியாக உள்ளது.

ராதிகா சரத்குமார் , லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் ஃப்ரேம்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூன்றும் இணைந்து தயாரிக்கும் இப்படம் ஜூலை 17ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Maari to clash with Rajini Murugan on July 17th

இதே நாளில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி நடிப்பில் பொன் ராம் இயக்கத்தில் 'ரஜினி முருகன்' படமும் வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயனை பெரிய நடிகராக்கியதில் தனுஷுக்கு பெரும் பங்கு உள்ளது. கடைசியில் அந்த தனுஷ் படத்துடனே மோத வருகிறார் சிவகார்த்திகேயன். இவர்களில் யார் படம் பெரிய வெற்றி பெறும் என்ற பரபரப்பான எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

 

ஹலோ.. நான் +2வில் பெயிலெல்லாம் கிடையாது....லட்சுமி மேனன்!

சென்னை: பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை லட்சுமி மேனன்.

கேரளாவைச் சேர்ந்த நடிகை லட்சுமிமேனன், கொச்சியில் உள்ள பாரதிய வித்யா மந்திர் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். சமீபத்தில் அதற்கான தேர்வு எழுதினார்.

 Laxmi menon refuses her plus2 result gossips

பிளஸ் 2 தேர்வில் லட்சுமிமேனன் பெயில் ஆகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வியாழக்கிழமை தகவல்கள் பரவின. அதற்கு லட்சுமிமேனன் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது, "நான் மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டத்தில் படிக்கவில்லை. சி.பி.எஸ்.இயில் படித்தேன். சி.பி.எஸ்.இயில் தான் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினேன். அந்த தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. 20 ஆம் தேதிக்குமேல்தான் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறுகிறார்கள்.

நான் பிளஸ் 2 தேர்வில் "பெயில்" ஆனதாக வெளியான தகவல் தவறானது. அதை யாரும் நம்பவேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

 

வேட்டி விளம்பரத்தில் நடிக்காதது ஏன்? ஒவ்வொரு மனிதரையும் சிந்திக்க வைத்த ராஜ்கிரண் பதில்!

என்னதான் வர்த்தகமயமான சினிமா உலகில் வாழ்ந்தாலும், தனக்கென சில கொள்கைகளை விடாப்பிடியாக வைத்திருக்கும் அபூர்வ மனிதர்களும் அதே சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வர்த்தக விளம்பரங்களில் என்றல்ல, எந்த விளம்பரத்திலுமே தோன்றுவதில்லை என்ற கொள்கையில் பல ஆண்டுகள் உறுதியாக நிற்பவர் ரஜினி.

அடுத்து ராஜ்கிரண். இவர் ஒரேயடியாக விளம்பரங்களில் நடிக்க மறுப்பதில்லை. அது நல்லதா, சமூகத்தை பாதிக்கிறதா என்பதைப் பார்த்தே எதையும் ஒப்புக் கொள்கிறார்.

Why Rajkiran denies to appear in Dothi ad?

சமீபத்தில் அப்படி வந்த ஒரு பெரிய வாய்ப்பை உதறித் தள்ளியிருக்கிறார்.

இதுபற்றி விகடனில் வெளியாகியுள்ள அவரது பேட்டியின் ஒரு பகுதி:

''விளம்பரங்கள்ல நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துட்டீங்களாமே... ஏன்?''

''ஆமா தம்பி. நான் எப்பவும் வேட்டியிலயே இருக்கிறதால, வேட்டி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. மறுத்தேன். 'மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் ஷூட்டுக்கு அஞ்சாறு லட்சம் கொடுப்போம். உங்களுக்கு டபுள்'னு கூப்பிட்டாங்க. அப்பவும் மறுத்தேன். அப்புறம் அதுவே படிப்படியா 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை போச்சு. மறுத்துட்டே இருந்தேன். பொறுமை இழந்து மிரட்டுற தொனியில் 'ஒன்றரைக் கோடி தர்றோம். மறுக்காதீங்க'ன்னாங்க. விடாப்பிடியா மறுத்தேன்.

'நீங்க கடன்ல இருக்கீங்கனு தெரியும். இவ்வளவு பெரிய அமௌன்ட் கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க. அதுக்கான காரணத்தை மட்டும் தெரிஞ்சுக்கலாமா?'னு கேட்டாங்க.

'வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா, அந்தக் காசையும் அவன்கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க மாட்டேன்'னு சொன்னேன். பதில் சொல்லாமப் போயிட்டாங்க!''

 

சல்மானுக்கு தண்டனை... மவுனம் சாதிக்கும் கான்கள்!

பாலிவுட்டின் முதல் நிலை நடிகர்களுள் ஒருவரான சல்மான் கானுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கிடைத்திருக்கிறது. ஆனால் அது குறித்து மற்ற முன்னணி கான் நடிகர்கள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் கார் ஓட்டி, ஒருவரைக் கொன்ற வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் சிறை தண்டனைப் பெற்றுள்ளார் சல்மான். அவருக்கு ஜாமீன் தொடருமா, ரத்தாகுமா என்பது இன்று தெரிந்துவிடும்.

ரத்தானால் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அவர் அடைக்கப்படுவார்.

Why the other 'Khans' keep mum in Salman Khan conviction

சல்மான் கானுக்கு இத்தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளமான ட்விட்டர் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சோனாக்‌ஷி சின்கா, பிரீத்தி ஜிந்தா, பிபாஷா பாசு, நடிகர்கள் சதிஷ் கவுசிக், ரிஷி கபூர், அர்ஜுன் கபூர், இயக்குநர் கரண் ஜோஹர் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் சல்மான் கானுக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

ஒட்டுமொத்த பாலிவுட்டைய அதிரவைத்துள்ளது இந்தத் தீர்ப்பு.

எனினும் சல்மான்கானின் மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் போட்டியாளர்களான பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் ஷாரூக்கான் மற்றும் அமீர் கான் ஆகிய இருவரும் இதுவரை நீதிமன்ற தீர்ப்பு பற்றி எவ்வித கருத்துகளையும் தெரிவிக்காமல் உள்ளனர்.

 

சல்மானுக்கு 5 ஆண்டு சிறை: பூனம் பாண்டே என்ன சொல்கிறார்?

மும்பை: சல்மான் வழக்கின் தீர்ப்பு குறித்து தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.

2002ம் ஆண்டு குடிபோதையில் காரை ஓட்டி சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் சல்மானுக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளதை அறிந்து அவரது ரசிகர்களும், பாலிவுட் பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலர் சல்மானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாலிவுட் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நீதிமன்ற தீர்ப்பு பற்றி நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். அன்பான மனிதரான சல்மான் கானுக்காக நான் அனுதாபப்படுகிறேன். ஆனால் யாரும் சட்டத்திற்கு மேல் ஆனவர்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 

"ஹாட்ரிக்" அடிப்பாரா விஜய் ஆண்டனி?

சென்னை: இசை அமைப்பாளராக அறிமுகமாகி நடிப்பிலும் கலக்கி கொண்டிருக்கும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த இந்தியா பாகிஸ்தான் படம் இன்று வெளியாகிறது. என்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக சுஷ்மா ராஜ் மற்றும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிகர் பசுபதி நடித்துள்ளார்.

ஜெகன், மனோ பாலா, எம்.எஸ்.பாஸ்கர், டி.பி.கஜேந்திரன் மற்றும் ஊர்வசி என்று காமெடிக்காக ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் விஜய் ஆண்டனி அல்ல.. மாறாக தீனா தேவராஜன்.

Will Vijay Antony Give A Hat-Trick?

தொடர்ந்து 2 வெற்றிப் படங்களை (நான், சலீம்) கொடுத்த விஜய் ஆண்டனிக்கு இன்று வெளியாகும் இந்தியா பாகிஸ்தான் படமும் வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றியாகக் கொண்டாடி மகிழலாம் .

நான், சலீம் ஆகிய இரு படங்களுமே த்ரில்லர் வகையைச் சேர்ந்தவை இதற்கு முற்றிலும் நேர்மாறாக இந்தியா பாகிஸ்தான் படமானது முழுக்க முழுக்க காமெடி படமாக எடுக்கப் பட்டுள்ளது.

காமெடி கரை சேர்க்குமா? விஜய் ஆண்டனியை பொறுத்திருந்து பார்க்கலாம்?

 

சூர்யா, அஜீத் படங்களில் சந்தானத்தை 'தூக்கிய' சூரி!

சூர்யா நடிக்கும் சிங்கம் 3 மற்றும் அஜீத் நடிக்கும் 56 வது படம் ஆகியவற்றிலிருந்து சந்தானம் தூக்கப்பட்டார். அவருக்கு பதில் பிரதான காமெடியனாக சூரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கால்ஷீட் பிரச்சினைகள் காரணமாகவே இந்த மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடியன் என்ற இடத்திலிருந்த சந்தானம் கதாநாயகனாக நடிக்கவே அதிகம் ஆசைப்படுகிறாராம். நம்மால்தானே இந்த பெரிய ஹீரோக்கள் படங்கள் ஓடுகின்றன.. நாமே தனித்து நடித்தால் நல்ல வரவேற்பிருக்கும் எண்ணத்தால், இப்போது இரு புதிய படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Soori becomes No 1 comedian in Tamil

வருகிற புதுப்பட வாய்ப்புகளையும் உதறுவதிலேயே குறியாக இருக்கிறாராம்.

இன்னொரு பக்கம் வடிவேலு. அரசியல் பிரச்சினைகள் அனைத்தும் ஓய்ந்து, அவரது தெனாலிராமன் படம் வந்ததும், பல பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் அவரை காமெடி வேடங்களுக்கு அணுகியுள்ளனர். ஆனால் அதையெல்லாம் மறுத்துவிட்டு, எலி படத்தில் மீண்டும் கதாநாயகனாகியுள்ளார்.

இந்த இருவருமே நடித்தால் நாயகன் வேடம்தான் என்பதில் அடமாக இருப்பதால், இப்போது சூரிக்கு நம்பர் ஒன் காமெடியன் இடம் கிடைத்திருக்கிறது.

அதன் விளைவு முன்னணி நடிகர்களான அஜீத், சூர்யாவுடன் இணைந்துள்ளார். சூர்யாவுடன் ஏற்கெனவே அவர் அஞ்சானில் நடித்துவிட்டார். ஆனால் அஜீத்துடன் நடிப்பது இதுதான் முதல் முறை.

 

அன்னையர் தினத்தன்று அம்மாவுக்கு கோயில் கட்டும் ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ்தான் இன்றைக்கு கோடம்பாக்கத்தின் பரபர நாயகன், இயக்குநர். சொல்லி அடிப்பது மாதிரி அடுத்தடுத்த ஹிட்களைக் கொடுத்து அசரடிக்கிறார்.

அவரது காஞ்சனா 2 படம் வசூலில் பேயாட்டம் போடுகிறது பாக்ஸ் ஆபீஸில். வெளியாகி 25 நாட்களாகியும் ஏ சென்டர்களிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

திரையுலக வாழ்க்கை இப்படி பரபரப்பாக இருந்தாலும், தன்னை பெற்று, மிகக் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய தன் தாயை கவனிக்க அவர் தவறவில்லை.

Lawrence to erect temple for his Mother

அன்னையின் அன்புக்கு மதிப்பே இல்லை அல்லவா... அதை உணர்த்த தனது அம்மா கண்மணிக்கு ராகவா லாரன்ஸ் கோயிலே கட்டுகிறார்.

வரும் ஞாயிறு அன்னையர் தினத்தன்று, தான் கட்டியுள்ள அம்பத்தூர் ராகவேந்திரா கோவில் அருகேயே கோயில் கட்ட அடித்தளம் அமைகிறார். தனது அன்னையின் முன்னிலையில் கோயில் கட்டத் துவங்குகிறார்.

உலகிலேயே வாழும் தாய்க்கு மகனால் கோயில் கட்டப்படுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.