அடுத்த கதைக்கான ஆய்வில் வெற்றிமாறன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அடுத்த கதைக்கான ஆய்வில் வெற்றிமாறன்

2/9/2011 11:29:52 AM

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட, 'ஆடுகளம்' படத்தின் ஹிட்டுக்குப் பிறகு அடுத்த படத்துக்கான ஆய்வில் இருப்பதாக இயக்குனர் வெற்றிமாறன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: 'ஆடுகளம்' படத்துக்கு வந்த பாராட்டுகள், விமர்சனங்கள் பிரமிப்பாக இருக்கிறது. இந்த வெற்றிக்கு சன் பிக்சர்ஸ்தான் காரணம். தொடர்ந்து இதுபோன்ற யதார்த்த கதைகளையே இயக்குவேன். அடுத்த படம் 'வடசென்னை'யா என்று கேட்கிறார்கள். அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அடுத்தப் படத்துக்கான கதைக்காக, தீவிர ஆராய்ச்சியில் இறங்கியுள்ளேன். சில விஷயங்களை ஆதாரப்பூர்வமாகச் சேகரிக்க வேண்டியுள்ளது. இப்போது அந்த வேலையில் இருக்கிறேன். யார் ஹீரோ, ஹீரோயின் போன்ற விஷயங்களும் முடிவாகவில்லை. விரைவில் முடிவாகும். இவ்வாறு வெற்றிமாறன் கூறினார்.


Source: Dinakaran
 

காதல் போரடித்து விட்டது :சங்கீதா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காதல் போரடித்து விட்டது : சங்கீதா

2/9/2011 11:32:22 AM

'தம்பிக்கோட்டை' படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார் சங்கீதா. அவர் கூறியதாவது: 17 வயதில் நடிக்க வந்து, இதுவரை ஏகப்பட்ட காதலி வேடங்களில் நடித்து விட்டேன். காதல் காட்சிகள் போரடித்து விட்டது. எனது வயதுக்கும், தோற்றத்துக்கும் ஏற்ற வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதை விரும்புகிறேன். அதனால்தான் இந்தப் படத்தில் தாதாவாக நடிக்க சம்மதித்தேன். 'மன்மதன் அம்பு' படத்தில் இரண்டு குழந்தைக்கு தாயாக நடித்தேன். அதுவும் புதிதில்லை. 'எவனோ ஒருவன்' படத்தில் நடுத்தர வயது பெண்ணாக நடித்தேன். மனதுக்கு பிடித்த கேரக்டர், சின்ன படத்தில் கிடைத்தாலும் நடிப்பேன். 'புத்திரன்' படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நடிக்கிறேன்.


Source: Dinakaran
 

இளைஞன் திரைப்பட வசனத்துக்காக கருணாநிதிக்கு விருது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இளைஞன் திரைப்பட வசனத்துக்காக கருணாநிதிக்கு விருது

2/9/2011 11:34:43 AM

நாக்பூரில் உள்ள நிர்சார் பிலிம் சொசைட்டி சார்பில் இன்டர்நேசனல் பிலிம் பெஸ்டிவல் நாளை (10ம் தேதி) நடத்தப்படுகிறது. இதில் சிறந்த வசனத்திற்கான விருதுக்காக இளைஞன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்துக்கு முதல்வர் கருணாநிதி வசனம் எழுதியுள்ளதால் சிறந்த வசனத்திற்கான விருது அவருக்கு வழங்கப்படுகிறது. நாளை நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி சார்பில், நடிகை குஷ்பு, நடிகர் ப.விஜய், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, தயாரிப்பாளர் மார்ட்டின் ஆகியோர் விருது பெற்றுக் கொள்கின்றனர்.
இந்த தகவலை நாக்பூர் கலெக்டர் பிரவீன் தெரிவித்துள்ளார்.


Source: Dinakaran
 

பெங்காலி பெண்ணாக சமீரா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பெங்காலி பெண்ணாக சமீரா

2/9/2011 11:37:43 AM

பிரபுதேவா இயக்கும் படத்தில் பெங்காலி பெண்ணாக நடிக்கிறேன் என்றார் சமீரா ரெட்டி. 'எங்கேயும் காதல்' படத்தை அடுத்து, விஷால் நடிக்கும் படத்தை இயக்குகிறார் பிரபுதேவா. இதில் ஹீரோயினாக நடிக்கும் சமீரா ரெட்டி கூறியதாவது: இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை, தூத்துக்குடி, மற்றும் கொல்கத்தாவில் நடக்கிறது. கடந்த 5-ம் தேதி கொல்கத்தாவில் ஷூட்டிங் தொடங்கியிருக்க வேண்டும். சில காரணங்களால் அது தள்ளிப்போயுள்ளது. இதில் எனது கேரக்டர் பெயர் பாரோ. கொல்கத்தா பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவி. பிரபுதேவா இயக்கத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. கவுதம் இயக்கத்தில் நான் நடித்துள்ள 'நடுநிசி நாய்கள்' வரும் 18-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் என் நடிப்பு பேசப்படும் விதமாக இருக்கும். இவ்வாறு சமீரா கூறினார்.


Source: Dinakaran
 

காதலர் தினத்தில் காதலி நயன்தாராவுடன் ரொமான்ஸா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காதலர் தினத்தில் காதலி நயன்தாராவுடன் ரொமான்ஸா?

2/9/2011 11:41:54 AM

'காதலர் தினத்தில் காதலி நயன்தாராவுடன் ரொமான்ஸா?' என்ற கேள்விக்கு பிரபுதேவா ருசிகர பதில் அளித்தார். பிரபுதேவா கூறியயிருப்பதாவது: விதிப்படிதான் எல்லாம் நடக்கிறது. படிப்பில் நான் கொஞ்சம் சுமார்தான். அதனால் படிப்பை விட்டு டான்ஸ் மாஸ்டர் ஆனேன். பிறகு நடிகன். இப்போது இயக்குனர். வாழ்வில் எது வந்தாலும் ஏற்றுக் கொள்கிறேன். சந்தோஷமாக இருக்கிறேன். பொதுவாகவே, மற்றவர்கள் புண்படும்படி ஒருபோதும் நடந்ததில்லை. அது என் சுபாவம். 'காதலன்' படத்தில் 'டேக் இட் ஈஸி பாலிசி' என்று பாடியதுபோல்தான் எதையும் எடுத்துக்கொள்கிறேன்.

'நயன்தாராவுடன் திருமணமா?' என்கிறார்கள். இப்போதுள்ள சூழலில் எந்த பரபரப்பு அறிவிப்பும் தரும் எண்ணம் இல்லை. எல்லாவற்றுக்கும் நேரம் காலம் இருக்கிறது. சரியான நேரம் வரும்போது எல்லாம் நடக்கும். சினிமா வாழ்க்கை நன்றாக இருக்கிறது. 'ஜெயம்' ரவி நடிக்கும் 'எங்கேயும் காதல்' படம் முடித்துவிட்டேன். இது காதல் கதை. அடுத்து விஷால் படம். இது ஆக்ஷன் கதை. அக்ஷய் குமாருடன் பணியாற்ற உள்ள இந்தி படத்துக்கான வேலைகளையும் தொடங்கிவிட்டேன். 'வரும் காதலர் தினத்தன்று யாருடன் இருக்கப்போகிறீர்கள்?' என்கிறார்கள். சத்தியமாக நீங்கள் நினைப்பவருடன் இருக்கப்போவதில்லை. அன்றைய தினம் மும்பையில் அக்ஷய் படத்துக்கான கிளைமாக்ஸ் காட்சி பற்றி டிஸ்கஷன்.
இவ்வாறு பிரபுதேவா கூறினார்.

நயன்தாரா அதே பதில்

'பிரபுதேவாவுடன் எப்போது திருமணம்?' என்று சமீபத்தில் நயன்தாராவிடம் கேட்டபோது, 'எல்லாவற்றுக்கும் நேரம் காலம் இருக்கிறது. சரியான நேரம் வரும்போது எல்லாம் நடக்கும்' என்று பேசிவைத்ததுபோல பிரபுதேவா சொன்ன அதே டயலாக்கை பதிலாகச் சொன்னார்.


Source: Dinakaran
 

திருநங்கைகள் நடிப்பது சினிமாவின் வளர்ச்சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

திருநங்கைகள் நடிப்பது சினிமாவின் வளர்ச்சி

2/9/2011 11:43:40 AM

திருநங்கை கல்கி ஹீரோயினாக நடிக்கும் 'நர்த்தகி' படப் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், தயாரிப்பாளர் சங்க துணை தலைவர் அன்பாலயா பிரபாகரன் வெளியிட, எக்ஸ்னோரா நிர்மல், இயக்குனர் ஜனநாதன் பெற்றுக் கொண்டனர். விழாவில் ஜனநாதன் பேசியதாவது: ஒரு காலகட்டம் வரை திருநங்கைகளை தமிழ் சினிமா, காமெடிக்காக பயன்படுத்தி வந்தது. நான் இயக்கிய படங்களில் கூட திருதங்கைகளின் பிரச்னை பற்றி சொல்லவில்லை. நயன்தாரா, ஜெயம்ரவி என்று கமர்ஷியல் வழியைத்தான் தேர்ந்தெடுத்தேன். ஆனால் 'புன்னகைப்பூ கீதா' என்ற பெண் தயாரிக்க, விஜயபத்மா என்ற இன்னொரு பெண் இயக்க, திருநங்கை கல்கி ஹீரோயினாக நடிக்க, படம் உருவாகியிருப்பது தமிழ் சினிமாவின் வளர்ச்சியை காட்டுகிறது. இப்படிப்பட்ட முயற்சிகள்தான் தமிழ் சினிமாவை உலகத் தரத்துக்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. திருநங்கைகளும் மனித சமூகத்தின் முக்கிய அங்கம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஜனநாதன் பேசினார். பாடலாசிரியர் நா.முத்துக்குமார், நடன இயக்குனர் ரகுராம், சண்டை இயக்குனர் ஜாக்குவார் தங்கம் உட்பட பலர் பேசினார்கள்.


Source: Dinakaran
 

டூயட் வேண்டாம் :அஞ்சலி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

டூயட் வேண்டாம் : அஞ்சலி

2/9/2011 12:00:32 PM

அஞ்சலி கூறியது: 'அங்காடித் தெருÕவிலிருந்தே என்னிடம் நிறைய நடிப்பை எதிர்பார்க்கிறார்கள். நடிப்பில் கொஞ்சம் குறைந்தாலும் உடனே ரசிகர்கள் கேட்கிறார்கள். அதனால் எனது படங்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் 'அங்காடி தெருÕ போல் வெயிட்டான வேடம். வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் இதற்கு கால்ஷீட் ஒதுக்குவது கஷ்டமாக இருந்தது. 'கதையை கேட்டுவிட்டு பிறகு சொல்லுங்கள்Õ என்றார் முருகதாஸ். கதை கேட்டேன். பிடித்தது. இதில் எனது இன்னொரு பரிமாணத்தை பார்க்கலாம். ஷூட்டிங் தொடங்கிவிட்டது. ஒரு மாதம் திருச்சியில் நடக்கிறது. ஹீரோ ஜெய்க்கு இணையான வேடம். அது எனக்கு சவால். போட்டியில் நிச்சயம் ஜெயிப்பேன். ஆனால் இந்த நடிப்பு போதாது. அதற்கு மேல் கேரக்டர்கள் எதிர்பார்க்கிறேன். கிளாமராக நடிப்பீர்களா? என்கிறார்கள். அந்த எல்லைக்குள் இன்னும் போகவில்லை. கிளாமராக நடிக்க மாட்டேன் என்றில்லை. ஆனால் கிளாமரை மட்டுமே நம்ப மாட்டேன். 4 டூயட் வேண்டுமா? 4 காட்சிகள் வேண்டுமா? என்றால் டூயட் வேண்டாம். 4 காட்சிகள் கொடுங்கள்? என்றுதான் தேர்வு
செய்வேன்.


Source: Dinakaran
 

பயணம் படத்துக்கு திடீர் தடை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பயணம் படத்துக்கு திடீர் தடை

2/9/2011 12:02:23 PM

நாகார்ஜுனா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள Ôபயணம்Õ படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீசாக இருந்தது. இப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த பைனான்சியர் மகேந்திரகுமார் ஜெயின் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ராமசுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பாக வக்கீல் அப்துல்ஹமீத் ஆஜராகி, ÔÔபயணம்Õ பட தயாரிப்புக்காக மகேந்திரகுமாரிடமிருந்து பிரகாஷ்ராஜ் ரூ. 50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்தப் பணத்தை த¤ருப்பி தரும்வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்Õ என்றார். இதை நீதிபதி ஏற்றுக் கொண்டு, Ôரூ. 50 லட்சத்துக்கான வங்கி உத்தரவாதம் அல்லது ரொக்கத்தை கொடுத்துவிட்டுதான் படத்தை திரையிட வேண்டும். அதுவரை படம் வெளியிட தடை விதிக்கப்படுகிறதுÕ என உத்தரவிட்டார்.


Source: Dinakaran
 

தமிழில் கதைகள் பிடிக்காததால் நடிக்கவில்லை:அனன்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழில் கதைகள் பிடிக்காததால் நடிக்கவில்லை: அனன்யா

2/9/2011 12:03:33 PM

‘நாடோடிகள்’ அனன்யா கூறியது: 'நாடேடிகள்Õ படத்துக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. கதை பிடிக்காததால் நடிக்கவில்லை. கடந்த வருடம் தமிழில் எனக்கு எந்த படமும் இல்லை. ஆனால் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 13 படங்கள் நடித்துவிட்டேன். ஒரு வருடத்துக்கு பிறகு தனுஷின் 'சீடன்Õ படத்தில் நடிக்கிறேன். இது 'நந்தனம்Õ மலையாள படத்தின் ரீமேக். அதில் நவ்யா நாயர் ஹீரோயின். அப்படத்தை நான் பார்த்தேன். ஆனால் அவரது நடிப்பை காப்பி அடிக்கவில்லை. டைரக்டர் சுப்ரமணியம் சிவா சொல்லிக் கொடுத்ததுபோல் நடித்திருக்கிறேன். தனுஷ் எனக்கு சீனியர். நடிப்பு சம்பந்தமாக நிறைய விஷயங்கள் சொல்லித் தந்தார். எனக்கு நன்றாக சமைக்க தெரியும். கேரளாவில் மாவட்ட அளவில் நடந்த சமையல் போட்டியில் 3 மணி நேரத்தில் 53 உணவு வகைகள் தயாரித்தேன். அதில் எனக்கு பரிசு கிடைத்தது. நடிப்பில் எனக்கென்று பாலிசி வைத்திருக்கிறேன். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் கிளாமராக நடிக்க மாட்டேன். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதைவிட அர்த்தமுள்ள கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். அடுத்து முருகதாஸ் தயாரிக்கும் படம் உள்பட 2 படங்களில் நடிக்கிறேன்.


Source: Dinakaran
 

கிசு கிசு -நடிகருக்கு சிபாரிசு பண்ணும் நடிகர்கள்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

நடிகருக்கு சிபாரிசு பண்ணும் நடிகர்கள்

2/9/2011 12:13:11 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

தொழில் அதிபருடன் மூணுஷாவுக்கு டும் டும்ன்னு இண்டஸ்ட்ரில பேசுறாங்களாம்… பேசுறாங்களாம்… விஷயத்தை கேள்விப்பட்டு மூணுஷா ஷாக் ஆயிட்டாராம். உடனே ட்விட்டர் பக்கத்துல டும் டும் பற்றி கிளப்புனவங்களுக்கு டோஸ் விட்டிருக்க¤றாராம்… டோஸ் விட்டிருக்கிறாராம்…

நடிக்கப்போற நான்கெழுத்து பட கதை டிஸ்கஷன்லேருந்து ஹீரோயின், நடிகர்கள் செலக்ஷன் வரைக்கும் எல்லாத்துலேயும் பிரகாச ஹீரோ கலந்துக்கிறாராம்… கலந்துக்கிறாராம்… நிறைய
தலையீடும் இருக்காம். இது டைரக்ருடருக்கே அதிர்ச்சியா இருக்காம்… இருக்காம்…

நவரச நடிகருக்கு இடையில சில படங்கள¢ல வாய்ப்பு கிடைச்சுது. இப்போ அதுவும் இல்லை. சக நடிகர்கள் விளம்பரங்கள்ல நடிக்கிறதால நவரசத்துக்கும் அந்த ஆசை வந்துருச்சாம்…
வந்துருச்சாம்… விளம்பர கம்பெனிகள்ல நவரசத்தோட பெயரை நட்பு நடிகருங்க சிபாரிசு பண்றாங்களாம்… பண்றாங்களாம்…


Source: Dinakaran
 

பிரபுதேவா படத்தில் விவேக்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிரபுதேவா படத்தில் விவேக்

2/8/2011 5:42:49 PM

பிரபுதேவா இயக்கிய போக்கி‌ரி, வில்லு இரண்டிலும் காமெடிப் பகுதியை கவனித்துக் கொண்டவர் வடிவேலு. ஆனால் விஷாலை வைத்து இயக்கும் படத்தில் வடிவேலுக்குப் பதில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பவர் விவேக். ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி நடித்த எங்கேயும் காதல் படத்தை இயக்கிய பிரபுதேவா, அடுத்து ‌ஜிகே ஃபிலிம்ஸ் தயா‌ரிப்பில் விஷால் நடிக்கும் படத்தை இயக்குகிறார். அவன் இவன் படத்தில் விஷால் பிஸியாக இருந்ததால் அவர் இல்லாமலே படப்பிடிப்பு தொடங்கியது. விஷாலுக்கு ஜோடி சமீரா ரெட்டி.

தற்போது அவன் இவன் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதால் விரைவில் விஷால் நடிக்கும் காட்சிகளை பிரபுதேவா படமாக்கவுள்ளார். அவருடன் காம்பினேஷன் காமெடியில் விவேக் பங்குகொள்வார் என்பது லேட்டஸ்ட் தகவல்.


Source: Dinakaran