விஜய் ஒரு மிகச்சிறந்த மற்றும் அமைதியான நடிகர்- சுருதிஹாசன்

சென்னை: நடிகை சுருதி ஹாசன் "புலி" படத்தில் நடித்தது மட்டும் விஜயுடன் இணைந்து நடித்தது போன்ற அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

அக்டோபர் 1 ம் தேதி விஜயின் நடிப்பில் பேன்டஸி கலந்த திரைப்படமாக உருவாகியிருக்கும் புலி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.

படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருப்பது மற்றும் விஜய் முதல்முறையாக சரித்திரப் படத்தில் நடித்திருப்பது போன்ற காரணங்களால், ரசிகர்கள் ஆவலுடன் படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Vijay is very calm and good Actor - Says Shruti Haasan

இந்நிலையில் விஜயுடன் இணைந்து நடித்தது மற்றும் புலி திரைப்படம் ஆகியவை குறித்து நடிகை சுருதிஹாசன் முதல்முறையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

புலி திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது மிகவும் நல்ல அனுபவம். விஜய் எவ்வளவு பெரிய நடிகர், எவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் அவருக்கு பின்னால் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

எனினும் அதையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக அவரது வேலையில் மட்டுமே ஈடுபாடு செலுத்துவார். மேலும் விஜய் ஒரு நல்ல பாடகர் என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

புலி திரைப்படம் கண்டிப்பாக குடும்பமாகப் பார்க்கக்கூடிய படம். படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் வித்யாசமான அனுபவமும், கண்கவர் ஃபேண்டஸி விருந்தும் காத்திருக்கிறது".

என்று விஜயைப் பற்றி நடிகை சுருதிஹாசன் கூறியிருக்கிறார். "புலி" வெளியாக இன்னும் 3 தினங்களே இருப்பது குறிப்பிடத்தக்கது...

 

இங்கிலீஷ் படம்... அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் ராம்கி!

நடிகர் ராம்கி மீண்டும் தன் அடுத்த ரவுண்டைத் தொடங்கியிருக்கிறார் கோடம்பாக்கத்தில்.

மாசாணி, பிரியாணி போன்ற படங்களில் சமீபத்தில் நடித்த அவர், இப்போது இங்கிலீஷ் படம் என்ற புதிய படத்தில் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.

புதுமுகம் குமரேஷ் என்பவர் இயக்கும் இப்படம் காமெடி த்ரில்லராக வளர்ந்து வருகிறது. இப்போதைக்கு இதை மட்டுமே கூறிய இயக்குநர் மற்ற விஷயங்ளை விரைவில் அறிவிப்போம் என்றார்.

Ramki in English Padam

படத்தில் நடித்துள்ள நடிகர் ராம்கி கூறும்போது, "இப்படத்தில் நான் நாயகனும் கிடையாது,வில்லனும் கிடையாது ஆனால் இப்படம் என்னை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு போக கூடிய படமாக அமையும்," என்றார்.

படத்தை பற்றி நடிகர் சஞ்சீவ் கூறும் போது, "நான் குளிர் 100 படத்தில் கதாநாயகனாக அறிமுகமானேன். அதையும் சேர்த்தும் 7 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன். குளிர் 100 படத்தை தவிர வேறு எந்த படமும் எனக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை. ஆனால் இங்கிலீஷ் படம் மூலம் நல்ல அடையாளம் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை. இந்த படத்தில் நான் நடிக்கும் ஒவ்வொரு காட்சியும் ஒரு அறிமுக நடிகராக உணர்ந்துதான் நடித்து வருகிறேன்," என்றார்.

படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பரபரப்பாக சென்னையில் நடந்து வருகிறது.

 

நிக்கி கல்ராணி, ஆனந்தியைத் தொடர்ந்து கீர்த்தியுடன் கூட்டு சேரும் ஜி.வி.பிரகாஷ்

சென்னை: நிக்கி கல்ராணி, ஆனந்தி, மனிஷா யாதவ் ஆகியோரைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தில் கீர்த்தி கர்பந்தா என்ற அறிமுக நடிகை நாயகியாக நடிக்கவிருக்கிறார்.

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் உதவியாளர், பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கும் புருஸ்லீ படத்தில் நடிக்கவிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

இந்தப் படத்தில் முதலில் நாயகியாக சமந்தா அல்லது நயன்தாரா அல்லது எமி ஜாக்சன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் புரூஸ்லி படத்தில் நாயகியாக கீர்த்தி கர்பந்தா நடிக்கிறார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

G.V.Praksh's next Heroine Kriti Kharbanda

இதுவரை தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நாயகியாக நடித்து வந்த கீர்த்தி கர்பந்தா புரூஸ்லீ திரைப்படத்தின் மூலம் முதல்முறையாக தமிழில் காலடி பதிக்கிறார்.

2009 ம் ஆண்டு போனி என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான கீர்த்தி கர்பந்தா, இதுவரை 20 க்கும் அதிகமான தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார்.

புரூஸ்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016 ம் ஆண்டு காதலர் தினத்தில் புரூஸ்லி திரைப்படம் வெளியாக வாய்ப்புகள் இருக்கின்றன.

தமிழில் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் என்னும் பெயரில் நடிகை ஒருவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

செல்ல மகளுக்காக போட்டோகிராபர் ஆன ஷாருக்கான்

லண்டன்: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது செல்ல மகள் சுஹானாவுக்காக போட்டோகிராபர் ஆகியுள்ளார்.

பாலிவுட் பாதுஷா எனப்படும் நடிகர் ஷாருக்கானுக்கு ஆர்யன், ஆபிராம் என்று 2 மகன்கள் உள்ளனர். மேலும் 15 வயதில் சுஹானா என்ற மகள் உள்ளார். ஆர்யன் மற்றும் சுஹானா இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.

படங்களில் பிசியாக இருக்கும் ஷாருக்கான் ஒரு குட்டி பிரேக் எடுத்துக் கொண்டு தனது பிள்ளைகளை சந்திக்க லண்டன் சென்றுள்ளார். லண்டனில் மகள் சுஹானாவை சந்தித்த ஷாருக்கான் அவரின் தோழிகளுக்கு மதிய விருந்து அளித்துள்ளார்.

அதன் பிறகு சுஹானாவை அவரது தோழிகளுடன் சேர்த்து புகைப்படம் எடுத்துள்ளார் ஷாருக். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஒவ்வொரு மகள் மற்றும் அவரின் அருமையான தோழிகளின் வெற்றிகரமான புகைப்படத்திற்கு பின்னால் ஒரு தந்தை இருப்பார். லவ்லி யங் லேடீஸுடன் மதிய விருந்து என்று தெரிவித்துள்ளார்.

 

எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் கைவசம். கமல்ஹாசனின் தூங்காவனம்

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் "தூங்காவனம்" திரைப்படத்தை பெரும் தொகை கொடுத்து மதனின் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

கமலின் உதவியாளர் ராஜேஷ் எம்செல்வா இயக்கத்தில் கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், ஆஷா சரத், யூகிசேது உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தூங்காவனம்.

Escape Artist Motion Pictures has acquired kamal's Thoonga Vanam

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன, தீபாவளிக்கு இந்தப்படத்தை வெளியிடத் திட்டமிட்டு படக்குழுவினர் மும்முரமாக வேலைசெய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்தப்படத்தை கமலின் ராஜ்கமல்நிறுவனமும், ஸ்ரீகோகிலம்மூவிஸ் படநிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்போது இந்தப்படத்தைத் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை, மதனின் எஸ்கேப்ஆர்டிஸ்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

இதற்காகப் பெரிய தொகை ஒன்றைக் கொடுத்திருப்பதாகக் கூறுகின்றனர். இதுநாள்வரை சிவகார்த்திகேயன், விமல் ஆகியோரின் படங்களைத் தயாரித்து வந்த இந்நிறுவனம் தற்போது கமலின் படத்தை வாங்கி வெளியிடவிருப்பதன் மூலம் தன் எல்லைகளை விரிவுபடுத்த முன்வந்திருக்கிறது.

"ஸ்லீப்லெஸ் நைட்" என்ற பிரெஞ்சுப் படத்தின் தழுவலாக உருவாகியிருக்கும் தூங்காவனம் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது.