20ம் தேதி குடும்பத்தோடு ஆஸ்திரேலியா செல்லும் அஜீத்

20ம் தேதி குடும்பத்தோடு ஆஸ்திரேலியா செல்லும் அஜீத்

சென்னை: அஜீத் குமார் ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்துடன் வரும் 20ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறார்.

அஜீத் குமார் ஒவ்வொரு படத்தை முடித்த உடன் தனது குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு சென்று ஓய்வு எடுத்துவிட்டு வருவார். ஆனால் பில்லா 2 முடிந்த கையோடு ஆரம்பம் படப்பிடிப்பு துவங்கியதால் அவரால் வெளிநாடு செல்ல முடியவில்லை. ஆரம்பம் முடியும் முன்பே வீரம் பட வேலைகள் துவங்கிவிட்டன.

இதனால் அவரால் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடமுடியவில்லை. தற்போது வீரம் படப்பிடிப்பு முடிந்துள்ளதால் அஜீத் வரும் 20ம் தேதி குடும்பத்துடன் ஆஸ்திரேலியா கிளம்புகிறார். அங்கு அவர் ஒரு மாத காலம் ஓய்வு எடுப்பார் என்று கூறப்படுகிறது.

ஆரம்பம் படப்பிடிப்பின்போது அஜீத் காலில் அடிபட்டது. இதையடுத்து டிசம்பர் மாதம் அஜீத் காயம்பட்ட காலில் ஆபரேஷன் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆபரேஷனை தள்ளிப் போட்டுவிட்டார்.

 

ஜிம்மே கதி என்று கிடக்கும் நடிகை

சென்னை: உயர்ந்த நடிகை உடம்பை குறைக்க ஜிம்மே கதி என்று கிடக்கிறாராம்.

யோகா ஆசிரியையாக வாழ்க்கையை துவங்கி நடிகையானவர் அந்த உயர்ந்த நடிகை. தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போதைக்கு அவர் தெலுங்கில் 2 சரித்திர படங்களில் நடித்து வருகிறார்.

நடிகையை பார்த்த தோழிமார்கள் என்ன நீ இவ்வளவு வெயிட் போட்டுட்ட என்று கிண்டலடித்தார்களாம். இதையடுத்து அவர் ஜிம்மில் மாங்கு மாங்குன்னு உடற்பயிற்சி செய்து வருகிறாராம். மேலும் நன்றாக சாப்பிடாமல் பழச்சாறு குடித்து உணவு கட்டுப்பாட்டில் இருக்கிறாராம்.

சரித்திர படத்திற்காகவும் தான் உடம்பை குறைக்கும் முயற்சியில் அம்மணி இறங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. வயது ஏறிக் கொண்டே போவதால் கையில் இருக்கும் 2 படங்களை முடித்த பிறகு அவர் திருமணம் செய்து செட்டிலாவாரா என்ற கேள்வி திரை உலகில் எழுந்துள்ளது.

 

சூர்யா- வெங்கட் பிரபு படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு- தயாரிப்பு ஸ்டுடியோ கிரீன்!

சென்னை: நாம் ஏற்கெனவே சொன்னதுபோல, சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு படம் இயக்குவது உறுதியாகிவிட்டது. ஆனால் தயாரிப்புதான் வேறு... இந்தப் படத்தை சூர்யா தயாரிக்கவில்லை. அவரது சகோதரர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்தான் தயாரிக்கிறது.

இதனை அதிகாரப்பூர்வமாக நேற்று மாலை ஞானவேல் ராஜா தெரிவித்தார்.

சூர்யா- வெங்கட் பிரபு படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு- தயாரிப்பு ஸ்டுடியோ கிரீன்!

இதன் மூலம் வெங்கட் பிரபுவுக்கும் ஸ்டுடியோ கிரீனுக்கும் கசமுசா என்று வந்த செய்திகளையெல்லாம் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்!

பிரியாணி படம் பார்த்து திருப்தியடைந்துதான் இந்தப் பட வாய்ப்பை வெங்கட் பிரபுவுக்குத் தந்திருக்கிறார் சூர்யா.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "'டிசம்பர 20 ம் தேதி பிரியாணி ரிலீசாகிறது. அதற்கடுத்து ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன், மீண்டும் சூர்யா படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். சிங்கம் 2 படத்துக்குப் பிறகு ஸ்டுடியோ கிரீன் - சூர்யா இணையும் படம் இது. ஹீரோயின் உள்ளிட்ட விவரங்களை விரைவில் அறிவிப்போம்," என ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் தெரிவித்துள்ளார்.

 

சென்னை சர்வதேச திரைப்பட விழா.. கமல்- அமீர்கான் தொடங்கி வைக்கிறார்கள்

சென்னை சர்வதேச திரைப்பட விழா.. கமல்- அமீர்கான் தொடங்கி வைக்கிறார்கள்

சென்னை: 11வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 12-ம் தேதி தொடங்குகிறது.

8 நாட்கள் நடக்கும் இந்த விழாவை கமல் ஹாஸன் மற்றும் அமீர்கான் தொடங்கி வைக்கிறார்கள். நிறைவு விழாவில் மோகன் லால் கலந்து கொள்கிறார்.

மக்களின் பணத்தை இந்த விழாவுக்கு அரசு வாரிக் கொடுப்பதால், தொடக்க விழாவில் தமிழக அரசின் செய்தித் துறை அமைச்சரும் பங்கேற்கிறார்.

சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள வெங்கடசுப்பாராவ் நினைவு அரங்கில் திரைப்பட விழாவின் தொடக்க, இறுதி நிகழ்ச்சிகள் நடக்கிறது.

8 அரங்குகளில் படங்கள் திரையிடப்பட உள்ளன. அவை, அபிராமி மெகா மால், உட்லண்ட்ஸ் காம்ப்ளக்ஸ், கேசினோ, ஐநாக்ஸ், ராணி சீதை ஹால் ஆகியவைதான் இந்த 8 அரங்குகள்.

இந்த விழாவில் பங்கு பெற பல்வேறு நாடுகளிலிருந்தும் செய்தியாளர்கள், பல நாட்டு தூதர்கள், இயக்குநர்கள் பங்கேற்கிறார்கள்.

திரைப்படங்கள் குறித்த விவாத கருத்தரங்குகளும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு அமிதாப் பச்சன் பெயரில் இளம் சாதனையாளருக்கான விருது அறிமுகப்படுத்தப்படுகிறது. மொத்தம் 58 நாடுகளிலிருந்து 163 படங்கள் சென்னை திரைப்பட விழாவில் கலந்து கொள்கின்றன.

 

பிரியாணிக்கு யு சான்று தர முடியாது- ரிவைசிங் கமிட்டி அதிரடி

பிரியாணிக்கு யு சான்று தர முடியாது- ரிவைசிங் கமிட்டி அதிரடி  

இதனால் கேளிக்கை வரி விலக்கு பெற முடியாத சூழல் உருவாகிவிட்டது.

எனவே படத்தை ஹைதராபாதில் உள்ள ரிவைசிங் கமிட்டிக்கு கொண்டு போனார்கள் தயாரிப்பாளர்கள். படத்தைப் பார்த்த ரிவைசிங் கமிட்டி அதிகாரிகள், படத்துக்கு யு சான்றிதழ் தர முடியாது என்றும், யு ஏ சான்றுதான் பொருத்தமானது என்றும் கூறிவிட்டார்கள்.

இதனால் படத்து்ககு வரிவிலக்கும் கிடைக்காது, டிவியிலும் ஒளிபரப்ப முடியாது.

இந்தப் படத்தில் கார்த்தி பெண் பித்தராக வருகிறாராம். எனவே பல காட்சிகள் பலான பட ரேஞ்சுக்கு இருப்பதால், யு சான்று கிடைப்பது கஷ்டம் என்று சென்சாரில் கூறியுள்ளனர்.