நிதியுதவி விழாவில் திடீர் என்று ஜில்லா இசையை வெளியிட்ட விஜய்

சென்னை: ஜில்லா படத்தின் இசையை நாளை மறுநாள் வெளியிடுவதாக அறிவித்துவிட்டு சத்தமில்லாமல் இன்றே வெளியிட்டுவிட்டனர்.

ஜில்லா படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 21ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. நாளை மறுநாள் வெளியாகும் இசையை கேட்க விஜய் ரசிகர்களும் ஆவலுடன் இருந்தனர்.

இந்நிலையில் விஜய் திரைத்துறையில் 21 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா இன்று சென்னையில் நடந்தது. விழாவில் 3 தயாரிப்பாளர்கள் மற்றும் 2 தயாரிப்பாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கினார் விஜய். உதவிகள் வழங்கும் விழா என்று நினைத்தால் திடீர் என்று ஜில்லா இசையை வெளியிட்டுவிட்டனர்.

நிதியுதவி விழாவில் திடீர் என்று ஜில்லா இசையை வெளியிட்ட விஜய்

நிகழ்ச்சி துவங்கியபோது ஜில்லா இயக்குனர் நேசன் மற்றும் இசையமைப்பாளர் இமான் ஆகியோர் அங்கு வரவில்லை. ஆனால் விஜய் மேடையில் ஏறியதும் நேசனும், இமானும் திடீர் என்று வந்து மேடையில் ஏறினர். விஜய் இசையை வெளியிட 5 தயாரிப்பாளர்கள் அதை பெற்றுக் கொண்டனர்.

21ம் தேதி இசை வெளியீடு என்று அறிவித்துவிட்டு இப்படி கமுக்கமாக வெளியிட்டதன் அவசியம் என்னவோ என்று தான் கோடம்பாக்கத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

 

இன்டர்நெட்டில் கசிந்த 'வீரம்' ஆடியோ: கலங்காத படக்குழு

சென்னை: வீரம் படத்தின் இசை இணையதளத்தில் கசிந்துள்ளது. இருப்பினும் அறிவித்தபடி இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், தமன்னா நடித்துள்ள வீரம் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடக்கிறது. இந்நிலையில் படத்தின் இசை இணையதளத்தில் கசிந்துவிட்டது. இருப்பினும் அறிவித்தபடி நாளை இசை வெளியீட்டு விழா நடக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இன்டர்நெட்டில் கசிந்த 'வீரம்' ஆடியோ: கலங்காத படக்குழு

இது குறித்து வீரம் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சிறு கசிவுகளால் சமுத்திரம் காலியாகிவிடாது. வீரம் பட பாடல்களை கேட்க ஆவலுடன் காத்திருக்கும் அஜீத் ரசிகர்களுக்கு சில டிராக்குகள் கசிந்தது நம்பிக்கை இழந்துவிடச் செய்யாது. அறிவித்தபடி நாளை இசை வெளியீடு நடைபெறும்.

நாள் காலை 8 மணி முதல் ரேடியோ மிர்ச்சியில் வீரம் படம் பாடல்கள் ஒலிபரப்பப்படும். இசை குறித்து படத்தின் இயக்குனர் சிவாவும், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் ரேடியோவில் பேசுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

9-ம் எண் எனக்கு ராசி.. இதையெல்லாமா குறை சொல்வீங்க? - ஹன்சிகா

ஹோட்டல்களில் 9-ம் எண் கொண்ட அறையை புக் பண்ணச் சொல்வது உண்மைதான். இது எனக்கு ராசியான எண் என்பதால் அப்படிச் சொல்கிறேன், என்று விளக்கம் அளித்தார் 9-ம் எண் எனக்கு ராசி.. இதையெல்லாமா குறை சொல்வீங்க? - ஹன்சிகா

குறிப்பாக எண்களில் அபார நம்பிக்கை. நடிகை ஹன்சிகாவுக்கு 9 - ம் நம்பர் மீது அபார நம்பிக்கை. வெளியூர் - உள்ளூர் படப்பிடிப்புகளுக்கு சென்று ஓட்டல்களில் தங்கும்போது 9-ம் நம்பர் அறையை கேட்டு வாங்குகிறார். அந்த அறை கிடைக்காவிட்டால் கூட்டு எண் ‘9' என வரும்படியான அறைகளில்தாம் தங்குகிறார்.

9-ம் நம்பர் அறை கிடைக்காத ஓட்டல்களில் தங்க மறுத்து வெளியேறி விடுகிறாராம்.

இதனால் ஹன்சிகாவுக்கு ரூம் போடுவதற்குள் நாக்குத் தள்ளிவிடுகிறதாம் படக்குழுவினருக்கு. இந்த விவகாரம் ஒரு செய்தியாகவும் மீடியாவில் வெளியாக, அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் ஹன்சிகா.

அவர் கூறுகையில், "என்னைவிட எனது அம்மாவுக்கு அதிர்ஷ்ட விஷயங்களில் நம்பிக்கை அதிகம். ‘9'-ம் எண்தான் எனக்கு அதிர்ஷ்டம். நீண்ட நாட்களாகவே 9-ம் நம்பர் என்னுடன் வருகிறது. பள்ளியில் படித்தபோது என் ரோல் ‘நம்பர் 9' எனது வீட்டு நம்பரும் ஒன்பதுதான். கார் லைசென்ஸ் நம்பரை கூட்டினாலும் ஒன்பது வரும்.

எனவேதான் ஓட்டல்களில் தங்கும்போதுதான் அறை எண் ஒன்பது என்றோ, அல்லது கூட்டு எண் ஒன்பதாக வரும்படியோ பார்த்துக் கொள்கிறேன். இது எனக்கு அதிஷ்ட எண்ணாக இருக்கிறது.

இதில் யாருக்கு என்ன பிரச்சினை? இதைப் போய் குறை சொல்கிறார்களே?," என்றார்.

 

கோவையில் ஆரம்பத்தை விட அதிக தியேட்டர்களில் ஜில்லா?

சென்னை: கோவை நகரில் மட்டும் ஜில்லா படத்தை சுமார் 60 ஸ்கிரீன்களில் திரையிட அப்பகுதிக்கான வினியோக உரிமையை வாங்கிய காஸ்மோ பிலிம்ஸ் திட்டமிட்டுள்ளதாம்.

விஜய்யின் ஜில்லா பொங்கலுக்கு ரிலீஸாகிறது. படத்தின் வினியோக உரிமை இரண்டே நாட்களில் விற்றுத் தீர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் கோவை நகருக்கான வினியோக உரிமையை காஸ்மோ பிலிம்ஸ் வாங்கியது என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

கோவையில் ஆரம்பத்தை விட அதிக தியேட்டர்களில் ஜில்லா?

இந்நிலையில் காஸ்மோ பிலிம்ஸ் ஜில்லா படத்தை கோவையில் சுமார் 60 ஸ்கிரீன்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாம். இதே காஸ்மோ பிலிம்ஸ் தான் ஆரம்பம் படத்தையும் கோவையில் வெளியிட்டது.

நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்துள்ள ஜில்லா படம் ஆரம்பம் படத்தை விட அதிக ஸ்கிரீன்களில் கோவையில் ரிலீஸாகவிருக்கிறது.

 

ஆம் ஆத்மிக்கு கொபசெ ஆகிட்டாங்களா சமந்தாவும் சித்தார்த்தும்? - டோலிவுட் கிண்டல்

அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக திடீரென கருத்து தெரிவித்துள்ள நடிகை ஆம் ஆத்மிக்கு கொபசெ ஆகிட்டாங்களா சமந்தாவும் சித்தார்த்தும்? - டோலிவுட் கிண்டல்

நடிகர் விஷால் கூட சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்தப் பட்டியலில் நடிகை சமந்தாவும் இணைந்துள்ளார். 'ஆம் ஆத்மி' கட்சிக்கு ஆதரவாக ட்விட்டரில் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

"ஆம் ஆத்மி' கட்சி ஒரு இனிய தொடக்கம். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றம் டெல்லியில் இருந்து ஆரம்பாகி இருப்பது இன்னும் சிறப்பு," என்று கூறியுள்ளார்.

இவரது கருத்தை வரவேற்று சமந்தாவின் காதலர் சித்தார்த்தும் பதில் கருத்து வெளியிட்டார்.

ஆனால் ஆம் ஆத்மியோ, ஒரு சராசரி அரசியல் கட்சியைப் போலவே, வெற்றிக்குப் பிறகு தன்னைக் காட்டிக் கொண்டுள்ளது. அந்தக் கட்சியில் வென்றவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. கட்சிக்குள் குழப்பம் நிலவுவதாக வேறு அரவிந்த் கேஜ்ரிவால் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையெல்லாம் கவனித்த ஆந்திர சினிமா உலகினர், ஆம் ஆத்மியும் ஒரு சராசரி கட்சிதான். ஆனால் என்னவே இவர்கள்தான் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்கள் போல சமந்தாவும் சித்தார்த்தும் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்களே என்று கிண்டலடித்துள்ளனர்.

டோலிவுட் எனும் தெலுங்கு சினி்மாவில் உள்ள நடிகர் நடிகைகள் பெரும்பாலும் காங்கிரஸ் அல்லது தெலுங்கு தேசம் என ஏதாவது ஒரு கட்சியைச் சார்ந்தே செயல்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பைசூல் மீதான வழக்கை வாபஸ் பெறுகிறேன் - நடிகை ராதா திடீர் பல்டி

சென்னை: தொழிலதிபர் பைசூல் மீது செக்ஸ் மோசடி மற்றும் பணமோசடி புகார் கொடுத்த ராதா, திடீரென அந்தப் புகாரை வாபஸ் பெறுவதாக மனு கொடுத்தார்.

இதனால் கடுப்பான போலீசார் இந்த மனுவை ஏற்க மறுத்து, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பைசூல் மீதான வழக்கை வாபஸ் பெறுகிறேன் - நடிகை ராதா திடீர் பல்டி

சுந்தரா டிராவல்ஸ் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா. இவர் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.

சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த தொழிலதிபர் பைசூல் மீது நடிகை ராதா பரபரப்பு புகார் மனு கொடுத்தார்.தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி தொழிலதிபர் பைசூல் 6 ஆண்டுகள் தன்னோடு குடும்பம் நடத்தியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், ரூ.50 லட்சம் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்து விட்டதாகவும் புகார் மனுவில் நடிகை ராதா குறிப்பிட்டிருந்தார்.

அவரது புகார் மனு மீது வடபழனி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க தொழிலதிபர் பைசூல் 3 முறை முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். 3 முறையும் அவரது முன்ஜாமீன் மனுக்களை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

இந்த நிலையில் நடிகை ராதா தொழிலதிபர் பைசூலை கைது செய்ய வேண்டுமென்றும், அவரை சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்றும் சவால் விட்டு தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வந்தார்.

போலீஸ் அதிகாரிகள் மீதும் குறை கூறினார். பைசூலை கண்டிப்பாக கைது செய்ய வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்துக்கும் வந்து மூன்று முறை நடிகை ராதா முறையிட்டார்.

திடீர் பல்டி

இந்த நிலையில் நேற்று இரவு நடிகை ராதா திடீரென்று வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தொழிலதிபர் பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், அவர் மீதான வழக்கை கைவிட்டு விடவேண்டும் என்றும் மனு எழுதி கொடுத்துவிட்டு அவசரமாக சென்றார்.

இது போலீசாருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கிவிட்டது. இந்த மனுவை ஏற்பதற்கில்லை என்றும், இதை நீதிமன்றத்தில் போய் சொல்லுங்கள் என்று தெரிவித்தனர். அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் நடிகை ராதா காரில் ஏறி வேகமாக போய்விட்டார்.

பைசூலை கைது செய்ய தேடிவரும் நிலையில் நடிகை ராதா திடீரென்று புகாரை வாபஸ் வாங்குவதாக பல்டி அடித்திருப்பது குறித்து போலீசார் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.