உலகிலேயே மிகப்பெரிய போஸ்டர்... கின்னஸுக்கு போகிறது பாகுபலி?

திருவனந்தபுரம்: மிகவும் அதிகமான பொருட்செலவில், ஏராளாமான நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் பாகுபலி படம். அடுத்த மாதம் ஜூலை 10 தேதி தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் படம் வெளியாகிறது , படத்தின் வெளியீட்டுத் தேதியை இந்தியத் திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை கொச்சியில் மலையாள பாகுபலி படத்தின் பாடல்களை, படத்தின் நட்சத்திரங்களான பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராஜமௌலி மற்றும் ராணா போன்றோர் கலந்து கொண்டு வெளியிட்டனர்.

Guinness Record for Baahubali Poster?

தமிழ் பாகுபலி படத்தின் டப்பிங் தான் மலையாள பாகுபலி எனினும் டப்பிங் படமாக இருந்தாலும், படத்திற்கு நிறைய விளம்பரம் செய்து நேற்று பாடல்களை வெளியிட்டனர். இதில் இன்னும் ஒரு சிறப்பாக மலையாள இசை வெளியீட்டின் போஸ்டரை மிகப் பெரிதாக வடிவமைத்து கவனத்தை ஈர்த்திருக்கின்றனர்.

உலகிலேயே மிகப்பெரிய போஸ்டர் என்னும் பெருமையை இந்தப் போஸ்டர் பெற்றுள்ளது, தற்போது இந்தப் போஸ்டரை கின்னஸுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர்.

பாகுபலி போஸ்டர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுகிறதா என்று பார்க்கலாம்.

 

தனுஷ் என்னை தமிழ்ப் பெண்ணாக மாற்றிவிட்டார் – புகழ்ந்து தள்ளும் எமி ஜாக்சன்

சென்னை: மதராசப்பட்டினம் படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமான எமி ஜாக்சன், சுமார் 5 வருடங்களில் மூன்று படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். இந்த தாமதத்தை ஈடு செய்யும் விதமாக தற்போது மூன்று படங்களில் ஒரே சமயத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

உதயநிதியுடன் கெத்து, தனுஷுடன் வேலை இல்லாப் பட்டதாரி, விஜயின் அடுத்த படம் என்று பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் எமி, தனுஷ் தன்னை மாற்றி விட்டதாகக் கூறி இருக்கிறார்.

Actor Danush Helped  Improve My Acting Style- Amy Jackson

வேலை இல்லாப் பட்டதாரி படத்தில் மேக்கப் எதுவும் வேண்டாம், ஒரு பெண்ணாக இயல்பாக இருங்கள் என்று கூறியிருக்கிறார். லண்டனில் பிறந்து வளர்ந்த எமி இதனைக் கேட்பதாகத் தெரியவில்லை.

வேறு வழியில்லாமல் தனுஷ் ஒரு தமிழ்ப் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று எமியைக் கூப்பிட்டு டியுஷன் எடுத்திருக்கிறார், அது மட்டுமின்றி ஆன் தி ஸ்பாட்டில் வசனங்களிக் கொடுத்து நடிக்கச் சொல்லியிருக்கிறார்.

இதனால் எனது நடிப்புத் திறமை நன்றாக வளர்கிறது, தனுஷ் என்னைத் தமிழ்ப் பெண்ணாகவே மாற்றி விட்டார் என்று போகுமிடமெல்லாம் தனுஷ் புகழைப் பாடி வருகிறாராம் எமி.

 

தொடர்ந்து தோல்வி அடையும் படங்கள்- சரிகிறதா நயன்தாராவின் மார்க்கெட்

சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருகின்றன, இதனால் நயன்தாராவின் மார்க்கெட் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ந்து கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார் நயன்தாரா, சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவியின் படத்தில் நடிக்க ரூபாய் 3 கோடி சம்பளம் கேட்டு ஆந்திராவையே அலற வைத்தார்.

Nayanthara Market Now Going Down?

ஆனால் சமீப காலமாக தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார் நயன்தாரா, இது கதிர்வேலன் காதல், நண்பன்டா, மாசு என்கிற மாசிலாமணி போன்ற 3 படங்களுமே இவர் நடிப்பில் வெளிவந்து தோல்வியை ருசித்துள்ளன.

இதனால் தமிழ்த் திரையுலகில் சரிவை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருக்கிறார் நயன்தாரா.

 

தொடரும் குழப்பம்... டிடியை தக்க வைக்க மெனக்கெடுகிறது விஜய் டிவி?

சென்னை: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சித் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. டிடி என்றால் தூர்தர்ஷன் என்ற நிலையை மாற்றி டிடி என்றால் திவ்யதர்ஷினி என்று மக்களின் மனதில் பதியவைத்த பெருமை இவரையே சேரும்.

விஜய் டிவி என்றாலே திவ்யதர்ஷினி தான் பிரபலமான தொகுப்பாளர் என்று மக்களின் மனதில் பதிய வைத்து, தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர்.

இவர் நடத்தி வந்த காபி வித் டிடி நிகழ்ச்சி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி. சினிமா பிரபலங்களை பேட்டி கண்டு பல சுவாரஸ்யமான விஷயங்களை அவர்களிடம் இருந்து வெளிக்கொணர்ந்து நிகழ்ச்சியை, கலகலப்பாக இவர் நடத்திச் சென்றதில் விஜய் டிவியின் டிஆர்பி எகிறியது.

 Vijay Television Anchor Divyadharshini  Working Or Not?

இவ்வளவு நல்ல தொகுப்பாளரை சமீப காலமாக எந்த நிகழ்ச்சிகளிலும் விஜய் டிவியில் காண முடியவில்லை, பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டாலும் குழப்பமான பதிலையே தருகின்றார் டிடி.

விஜய் டிவியில் கேள்வி கேட்டாலும் எந்த ஒரு பதிலையும் சொல்வதில்லை, இதனால் விஜய் டிவியில் டிடி இருக்கிறாரா இல்லையா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் விஜய் டிவியில் டிடி இருப்பது போல காட்டிக் கொள்கிறது விஜய் டிவி.

நேற்று இரவு காபி வித் டிடி நிகழ்ச்சியில் டிடி தொகுத்து வழங்கிய பழைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, அவர் இங்குதான் இருக்கிறார் என்று சொல்லாமல் சொல்கிறது விஜய் டிவி.

இதற்கிடையில் டிடியின் காலில் ஆக்ஸிடென்ட் ஏற்பட்டு இருக்கிறது, அதனால் அவர் ஓய்வில் இருக்கிறார் என்று ஒரு தகவலும், டிடி தரப்பில் இருந்து கசிந்துள்ளது.

இரண்டு தரப்பினருமே தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடி வருகின்றனர், விரைவில் உண்மை வெளியாகிறதா என்று பார்க்கலாம்.

 

சீனாவைத் தொடர்ந்து ஜப்பானிற்கு செல்லும் பிகே

சென்னை: கடவுள் மறுப்புக் கொளகைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட பிகே திரைப்படம் இந்தியாவில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான் மற்றும் அனுஷ்கா ஷர்மா நடிப்பில் கடந்த ஆண்டு இந்தியில் வெளிவந்தது பிகே.

ஒருபக்கம் படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்தாலும், மறுபக்கம் நல்ல விமர்சனங்கள் படத்திற்கு கைகொடுத்ததில் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது பிகே. இந்தியாவில் மட்டும் சுமார் 300 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.

Aamir Khan’s PK Next release in Japan

படத்தின் வெற்றியால் சீனாவில் உள்ள தியேட்டர்களிலும் கடந்த மாதம் இந்தப் படத்தை திரையிட்டனர் பிகே படக்குழுவினர், சீனாவில் 100 கோடியை வசூலித்து அங்கும் சாதனை புரிந்தது பிகே.

சீனாவின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அடுத்தகட்டமாக ஜப்பானிலும் பிகே படத்தைத் திரையிடப் போகின்றனர். இந்தத் தகவலை படத்தின் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி உறுதிப்படுத்தி உள்ளார்.

இன்னும் 5 மாதங்கள் கழித்து டிசம்பர் மாதம் 19 ம் தேதி ஜப்பானில் வெளியாக இருக்கின்றது பிகே, ஏற்கனவே அமீரின் 3 இடியட்ஸ் ஜப்பானில் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

எந்திரன் பார்ட் - 2.. மும்முரமாக இறங்கியுள்ள ஷங்கர்.. புதிய டீம்?

சென்னை: எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் முழுவீச்சில் இறங்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

2010ம் ஆண்டில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் எந்திரன்.

தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள இயக்குநர் ஷங்கர் , படத்திற்கான கதை முழுவதையும் முடித்து விட்டு படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்து கொண்டு இருக்கிறார் என்று கூறுகின்றனர்.

Endhiran 2 Update News

இதற்கான முயற்சியில் மொத்த படக்குழுவும் இறங்கி வேலை பார்க்கின்றனர், இதைப் பற்றிய செய்திகள் எதையும் வெளியே கசிய விடாமல் பார்த்துக் கொள்கின்றனர் படக்குழுவினர்.

எந்திரன் படம் 132 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகி இருந்தது, சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் படத்தை வெளியிட்டு இருந்தார். தற்போது எந்திரன் 2 படத்திலும் அதே போன்ற இடங்களை ஷங்கரிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என்று கூறுகின்றனர்,

எந்திரன் முதல் பாகத்தின் படக்குழுவினர் மீண்டும் இணைகின்றனரா அல்லது புதியவர்களுடன் ஷங்கர் கைகோர்க்கிறாரா என்பது தெரியவில்லை.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ஆகஸ்ட் மாதத்தில் புதிய படத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நம்பர் ஒன் இடத்திற்கு வேகமாக முன்னேறுகிறார் சுருதி

சென்னை: தமிழ்த் திரையுலகில் நம்பர் 1 இடத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறார் நடிகை சுருதிஹாசன். ஆமாம் இந்த 2015 ம் ஆண்டு சுருதிக்கு மிகவும் அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமைந்திருக்கிறது.

சமீபத்தில் மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கி இருந்தார் சுருதிஹாசன், கார் வாங்கிய ராசியோ என்னவோ தொடர்ந்து ஏறுமுகத்துடன் சினிமாவில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் சுருதி.

Shruti No 1 Heroine In Kollywood?

சுருதி இந்தியில் நடித்த கப்பார் இஸ் பேக் திரைப்படம் இந்தியில் நன்றாக ஓடி வசூல் சாதனை படைத்தது, தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் நடித்த ரேஸ் குர்ரம் படம் நன்றாக ஓடியது. அதுமட்டுமின்றி ரேஸ் குர்ரம் படத்தில் நடித்ததற்காக 62 வது தென்னிந்திய பிலிம்பேர் விருதில் இந்த ஆண்டின் சிறந்த கதாநாயகி என்ற விருதையும் பெற்றார்.

இப்போது தமிழிலும் கைநிறைய படங்களுடன் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சுருதிஹாசன். புலி படத்தில் விஜயுடன் நடித்து முடித்திருக்கும் சுருதிக்கு அடுத்தடுத்து அஜீத்தின் புதிய படம் மற்றும் நடிகர் சூர்யாவின் புதிய படம் என்று வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டுகின்றன.

இதனால் தமிழில் வேகமாக நம்பர் ஒன் நடிகை என்ற இடத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் நடிகை சுருதிஹாசன்.

 

தமிழ்நாடுதான் என் தாய்நாடு.. இதை ஆந்திராவிலும் சொல்வேன்!- மோகன்பாபு

இந்த தமிழ்நாடுதான் என் தாய்நாடு.. இதை ஆந்திராவிலும் சொல்வேன்.. தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் உயிருள்ளவரை மறக்க மாட்டேன், என்றார் நடிகரும் அரசியல் பிரமுகருமான மோகன் பாபு.

பிரபல நடிகை ஜெயப்பிரதா, தன் சகோதரி மகன் சித்தார்த்தை நாயகனாக உயிரே உயிரே என்ற படத்தில் அறிமுகம் செய்கிறார். அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான்.

Tamil Nadu is my Motherland, says Mohan Babu

இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர் அமர் சிங், இந்தி நடிகர் அனில் கபூர், நடிகைகள் ராதிகா, ஸ்ரீபிரியா, சுமலதா, தெலுங்கு பிரமுகர் சுப்பாராமி ரெட்டி உள்பட பலரும் வந்திருந்து சித்தார்த்தை வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் மோகன்பாபு பேசுகையில், "வந்திருக்கும் அனைவருக்கும், தமிழ் மக்களுக்கும் என் வணக்கம். நான் இந்த நிகழ்ச்சியில் தமிழில்தான் பேசுவேன். காரணம் எனக்கு பாலூட்டியது, சோறு போட்டு வளர்த்து ஆளாக்கியது இந்த சென்னையும் தமிழ் மக்களும்தான்.

தமிழ் மக்கள் நம்பி வந்த யாரையும் கைவிட்டதில்லை. ஆதரித்துக் காப்பாற்றியிருக்கிறார்கள். இந்த சென்னையில் ஒரு சினிமாக்காரன், கையில் பைசா இல்லாமல் வாழ்ந்துவிட முடியும். கடைகாரர்கள் மளிகை சாமான் கொடுத்து உதவுவார்கள். ஆனால் உலகின் எந்த மூலையிலும் அப்படிப்பட்ட நல்ல மனசு கொண்டவர்களைப் பார்க்க முடியாது. ஆந்திராவில் சினிமாக்காரனுக்கு கடன்கூட கொடுக்க மாட்டார்கள்.

எனக்கு தாய்பூமி, தாய் நாடு என்றால் அது தமிழ்நாடுதான். இதை நான் ஆந்திராவிலும் கூட பல முறை சொல்லியிருக்கிறேன். எனக்கு பொய் பேசிப் பழக்கமில்ல. கடவுளுக்கு மட்டும் பயப்படுபவன், சாதாரண மனிதனுக்கு எதற்காக பயப்படப் போகிறேன்," என்றார்.

 

ட்விட்டரில் ட்ரெண்டாகிறது வாலு டிரைலர் 2

சென்னை: சற்று முன்பு வெளியான வாலு டிரைலர் 2 தற்போது இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

வாலு பட நாயகி நடிகை ஹன்சிகா டிரைலரை வெளியிட்டு புண்ணியத்தைக் கட்டிக் கொண்டுள்ளார். டிரைலர் வெளியானது முதல் ட்விட்டரில் தீயாய் வேலை செய்கின்றனர் சிம்புவின் ரசிகர்கள்.

Vaalu 2 Trailer Released

அனுமார் வால் போல நீண்டு கொண்டு போன வாலு படத்தின் வெளியீடு ஜூலை 17ம் தேதி என்று அதிகாரப் பூர்வமாய் அறிவித்து இருந்த வாலு, படக்குழு தற்போது டிரைலரையும் வெளியிட்டு உள்ளதால் கண்டிப்பாக இந்த ரம்ஜான் நமக்குக் கொண்டாட்டம் தான் என்று உற்சாகத்தில் திளைக்கின்றனர் சிம்பு ரசிகர்கள்.

டிரைலரின் ஆரம்பத்தில் ஹன்சிகா சிம்புவிடம் ஆங்கிலத்தில் பேச எனக்கு இங்கிலீஷ் தெரியாது என்று சிம்பு ஆரம்பிக்கும் வேகம் டிரைலர் முழுதுமே தொற்றிக் கொள்கின்றது.

அடிச்சா ரத்தம் வரும், எத்தன தல படம் பார்த்து இருப்போம் , உன்கிட்ட பிடிச்சதே இந்த டயலாக் டெலிவரி தாண்டா டிரைலர் முழுதுமே தெறிக்கின்றன வசனங்கள்.

சிம்பு நல்ல எனர்ஜி லுக்குடன் சூப்பராக நடித்திருக்கிறார், ஹன்சிகா - சிம்பு கெமிஸ்ட்ரி , சந்தானம் காமெடி எல்லாமே இருக்கு நல்லாவே இருக்கு என்று ட்வீட் செய்துள்ளனர் சிம்பு ரசிகர்கள்.

வாலு படத்தின் இயக்குநர் விஜய் சந்தர் ஹன்சிகா மேடம் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்று ட்வீட் செய்துள்ளார்.