திருமணமாகி ஒரே ஆண்டில் கணவரைப் பிரிந்த நடிகை மம்தா!

Mamta File Papers Divorce

திருமணமாகி ஒரே ஆண்டில் கணவரை விவாகரத்து செய்கிறார் மம்தா மோகன்தாஸ்.

அடுத்த மாதம் விவாகரத்து வழக்கு தொடர்கிறார்.

சிவப்பதிகாரம், குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். தெலுங்கு, மலையாளத்திலும் பல படங்கலில் நடித்துள்ளார். இப்போதும் கைவசம் அரை டஜன் மலையாளப் படங்கள் உள்ளன.

இவருக்கும் கேரள தொழில் அதிபர் பிரஜித் பத்மநாபனுக்கும், கடந்த வருடம் டிசம்பரில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு சந்தோஷமாக இருப்பதாக கூறிவந்தார்.

மம்தா மோகன்தாஸ் ஏற்கனவே புற்று நோயால் பாதிக்கப்பட்டு பிறகு குணமானார். கணவர் பிரஜித் தந்த தைரியத்தாலேயே புற்று நோயை தைரியமாக எதிர் கொண்டு மீண்டேன் என்றும் கூறிவந்தார்.

ஆனால் தற்போது திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். ஒரு வருடத்திலேயே திருமண முறிவு ஏற்பட்டுள்ளது. கணவரை விவாகரத்து செய்ய மம்தா மோகன்தாஸ் முடிவு செய்துள்ளார். இதையடுத்து வக்கீல்களை வீட்டுக்கு அழைத்து கோர்ட்டில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்தார்.

இன்னும் ஓரிரு வாரத்தில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.

 

விஸ்வரூபம் ஒளிபரப்பில், ஏர்டெல்லுடன் வீடியோகான், ரிலையன்ஸும் சேர்ந்தன!

Visvaroopam On Dth Videocon Relian

சென்னை: ஏர்டெல்லுடன் வீடியோகான் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இணைந்து விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்புகின்றன.

'விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச். மூலம் டி.வி.யில் ஒளிபரப்புவதில் கமல் உறுதியாக நிற்கிறார். அதுவும் தியேட்டர்களில் வெளியாவதற்கு 8 மணி நேரம் முன்பே இந்தப் படம் டிடிஎச்சில் வெளியாகிறது.

இதற்காக இணைப்புக்கு ரூ 1000 வரை வசூலிக்க முடிவு செய்துள்ளனர். தியேட்டர்களில் வெளியாகும்போது இந்தப் படம் ஆரோ 3டி என்ற நவீன ஒலி தொழில்நுட்பத்தில் வெளியாகும்.

அடுத்த மாதம் (ஜனவரி) 11-ந்தேதி படம் ரிலீசாகிறது. ஒருநாள் முன்னதாக 10-ந்தேதி இரவு 'விஸ்வரூபம்' படம் டி.டி.எச். மூலம் டி.வி.யில் ஒளிபரப்பப்படும்.

முதலில் ஏர்டெல் நிறுவனம் மட்டுமே இதில் இருந்தது. ஆனால் இப்போது ஏர்டெல், வீடியோகான், ரிலையன்ஸ் ஆகிய 3 டி.டி.எச்.கள் மூலம் படத்தை ஒளிபரப்ப உள்ளனர்.

இதன் மூலம் டி.டி.எச். இணைப்பு வைத்துள்ள பெரும்பான்மையோர், வீடுகளில் இருந்தே படத்தை பார்க்க முடியும். கமல் முடிவுக்கு தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் தியேட்டர் அதிபர்களும் வினியோகஸ்தர்களும் இதனை எதிர்த்து வருகிறார்கள்.

டி.டி.எச்.சில் ஒளிபரப்பினால் திரையரங்குகளில் 'விஸ்வரூபம்' படத்தை திரையிட மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர். அவர்களுடன் கமல் நடத்திய சமரச பேச்சு தோல்லியில் முடிந்தது. தனது முடிவில் கமல் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்க தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்களின் கூட்டு கூட்டம் வருகிற 20-ந்தேதி சென்னையில் நடக்கிறது. இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

 

இயக்குநர் மணிவண்ணன், சத்யராஜூக்கு கேரள வனத்துறை அதிகாரிகள் விருந்து

Forest Officials Praise Manivannan And Sathyaraj

வனத்தில் படப்பிடிப்பு நடத்தினாலும் சுற்றுச்சூழல் பாதிக்காமல் நடந்து கொண்டதற்காக இயக்குநர் மணிவண்ணன், சத்யராஜூக்கு கேரளா வனத்துறை அதிகாரிகள் விருந்து கொடுத்து பாராட்டியுள்ளனர்.

நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ, படப்பிடிப்பு கேரளாவின் டோனி காட்டில் படமாக்கப்பட்டு வருகின்றன. மணிவண்ணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சத்தியராஜ், சீமான், வர்ஷா, கோமல்ஷர்மா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்பு நடைபெறும் வனப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஆங்காங்கே அட்டைப் பெட்டியை வைத்து அதில் குப்பைகளை போடுமாறு மணிவண்ணன் அறிவுறுத்தினாராம். இதனையடுத்து காடுகளில் பிளாஸ்டிக் குப்பைகள் விழாமல் தடுக்கப்பட்டது.

அப்போது அங்கு முகாமிட வந்த கேரளா வனத்துறை அதிகாரிகள் இயக்குநர் மணிவண்ணனை வெகுவாக பாராட்டியுள்ளனர். அதோடு நிற்காமல் மணிவண்ணன், சத்தியராஜ் உள்ளிட்ட முழு படப்பிடிப்புக் குழுவினரையும் மாலை நேரத்தில் தங்களின் முகாமிற்கு அழைத்து விருந்து கொடுத்து கவுரவப்படுத்தினார்களாம்.

 

மதுரையில் பாரதிராஜாவின் பட ஆடியோ ரிலீஸ் - ரஜினி, கமலுக்கு அழைப்பு!

சென்னை: மதுரையில் நடக்கும் அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வருமாறு ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவிக்கு அழைப்பு விடுத்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

இந்த மூன்று நட்சத்திரங்களும் பாரதிராஜாவின் முதல்படமான 16 வயதினிலேயில் நடித்தவர்கள்.

bharathiraja invites kamal rajini
அந்தப் படத்தில் கமல் சப்பானி கேரக்டரிலும், ரஜினி பரட்டை வேடத்தில் வில்லனாகவும், ஸ்ரீதேவி மயிலு கேரக்டரிலும் நடித்தனர். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது பாரதிராஜா நீண்ட இடைவெளிக்கு பின் அன்னக்கொடியும் கொடி வீரனும் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.

இதன் பாடல் வெளியீட்டு விழாவைத்தான் மதுரையில் நடத்த பாரதிராஜா ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக மூவரிடமும் பாரதிராஜா பேசி வருகிறார். அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் தொடக்க விழா தேனி அல்லி நகரத்தில் அமர்க்களமாக நடந்தது நினைவிருக்கலாம்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.

 

திடுமென்று மார்க்கெட்டில் குதித்த கடல் ஆடியோ!

 

அரசு விழாவில் கரீனாகபூர் நடனமாட 1.40 கோடி செலவு… இது சட்டீஸ்கர் மாநில கூத்து

Kareena Kapoor Was Paid Rs 1 40 Crore   

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் அரசு விழாவில் நடனமாடிய நடிகை கரீனா கபூருக்கு 1.40 கோடி ரூபாய் செலவிடப்பட்ட சம்பவம் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம் உருவான ஆண்டு விழா கொண்டாட்டம் அண்மையில் சட்டீஸ்கர் அரசு சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் நடனமாடுவதற்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்து, பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரை அழைத்து வந்து ஆடவிட்டு ரசித்திருக்கின்றனர் அம்மாநில அதிகாரிகளும், அமைச்சர்களும். இந்த விழாவுக்கு மட்டும் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவானதாக செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

கரீனா கபூரின் நடன நிகழ்ச்சி, நயா ராய்ப்பூர் நகரில், நவம்பர் 1 ஆம் தேதியன்று நடைபெற்றது.இதில் கரீனா ஆடியது வெறும் எட்டு நிமிடங்கள் மட்டுமே. கரீனாவுக்கு அடுத்தபடியாக மேலும் 5 நட்சத்திரங்களுக்கும் அதிக தொகை கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர நடன கலைஞர்களுக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து செலவு 54 லட்சத்து 62,461 ரூபாயும், தங்குமிடம் மற்றும் உணவுக்காக 11 லட்சத்து 67,956 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டீஸ்கர் சட்டசபையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அம்மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் பிரிஜ்மோகன், அரசு விழா நடன நிகழ்ச்சிக்கு கரீனா கபூர் உள்ளிட்ட 245 கலைஞர்கள் கலந்துகொண்டதாகவும், இதற்காக ரூ. 5 கோடியே 21 லட்சத்து 22,500 ரூபாய் செலவிடப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த 245 கலைஞர்களில் 42 பேர் வெளிமாநிலத்திலிருந்து அழைத்து வரப்பட்டதாகவும்,இதில் கரீனா கபூருக்குத்தான் மிக அதிகமாக ரூ.1 கோடியே 40 லட்சத்து 71,000 அன்பளிப்பாக வழங்கப்பட்டதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புத்தாண்டு பார்ட்டிகளில் சில நிமிடங்கள் நடனமாடும் நடிகைகளுக்குக்தான் கோடிகளில் கொட்டிக்கொடுப்பது வழக்கம். ஆனால் சட்டீஸ்கர் மாநிலத்தில் அரசு விழாவில் பாலிவுட் நடிகையின் குத்தாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதோடு அதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.