கட்சியில் இருந்து உதிர்ந்த 'பூ' மீண்டும் கோடம்பாக்கத்தில்

சென்னை: அரசியல் கட்சியில் இருந்து வெளியேறிய நடிகை மீண்டும் படங்களில் மும்முரமாக நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

உயரமான இயக்குனரை திருமணம் செய்த நடிகை பிரபல அரசியல் கட்சியில் சேர்ந்து பிரச்சார பீரங்கியானார். கட்சிக்காக பல ஆண்டுகளாக பாடுபட்டார். இந்நிலையில் தான் கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக நினைத்த அவர் அந்த கட்சியில் இருந்து விலகினார்.

இத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருந்த அவர் தற்போது கட்சி பணிகள் இல்லாமல் உள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவும், அத்துடன் சேர்ந்து சின்னத்திரையிலும் முழுமூச்சில் கவனம் செலுத்தவும் முடிவு செய்துள்ளாராம்.

நடிகை அந்த கட்சியில் இருந்து விலகியதும் அவர் தன் பெயரைப் போன்றே பூ உள்ள கட்சியில் சேரப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தான் எந்த கட்சியிலும் சேருவதாக இல்லை என்று நடிகை தெரிவித்தார்.

இதையடுத்து அவர் அந்த தேசிய கட்சியில் சேரப்போவதாக எழுந்த பேச்சு அடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிம்புவின் 'வாலு' டன் வரும் தனுஷின் வேலையில்லா பட்டதாரி

சென்னை: தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்துடன் சிம்புவின் வாலு பட ட்ரெய்லரை வெளியிடுகிறார்கள்.

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி வரும் 18ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் ரிலீஸாகும் தினம் தனுஷ் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல சிம்பு ரசிகர்களுக்கும் குஷியான தினம். ஏன் என்றால் வேலையில்லா பட்டதாரி படத்தின் இடையே சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள வாலு படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார்கள்.

சிம்புவின் 'வாலு' டன் வரும் தனுஷின் வேலையில்லா பட்டதாரி   | வேலையில்லா பட்டதாரி  

சிம்புவும், தனுஷும் நண்பர்களாகிவிட்டதால் இந்த செய்தியை பார்த்து பலரும் வியக்க மாட்டார்கள்.

ட்ரெய்லர் குறித்து வாலு படத்தின் எடிட்டர் சுரேஷ் கூறுகையில்,

ட்ரெய்லரில் வசனங்கள் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். ரசிகர்களுக்கு அது நிச்சயம் பிடிக்கும். ட்ரெய்லரில் ஆக்ஷனும் உண்டு. அதனால் ரசிகர்கள் ட்ரீட்டை எதிர்பார்க்கலாம் என்றார்.

 

நடிகர் திலீப் குமாரின் வீட்டை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவித்த பாகிஸ்தான் அரசு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள இந்தி நடிகர் திலீப் குமாரின் வீட்டை அந்நாட்டு அரசு தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

இந்தி நடிகர் திலீப் குமாரின் இயற்பெயர் யூசுப் கான். 91 வயதாகும் அவர் பாகிஸ்தானில் உள்ள கைபர் படுங்க்வா மாகாணத்தில் பிறந்தவர். அவருடைய பூர்வீக வீடு பெஷாவரில் உள்ளது. திலீப் குமார் இந்தியாவில் வசித்து வருவதால் அவரது பூர்வீக வீடு பராமரிப்பு இன்றி கிடந்தது.

நடிகர் திலீப் குமாரின் வீட்டை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவித்த பாகிஸ்தான் அரசு

இந்நிலையில் திலீப்பின் வீட்டை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கைபர் படுங்க்வா மாகாண அரசு நவாஸ் ஷெரீஃப் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அந்த வீட்டை தேசிய பாரம்பரிய சின்னமாக்கினால் இந்தியா, பாகிஸ்தான் மக்களிடையேயான உறவை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்று மாகாண அரசு தெரிவித்திருந்தது.

மாகாண அரசின் கோரிக்கையை ஏற்று திலீப் குமாரின் வீட்டை தேசிய பாரம்பரிய சின்னமாக மாற்றுமாறு நவாஸ் ஷெரீஃப் உத்தரவிட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான கலாச்சார உறவை மேம்படுத்த விரும்புகிறாராம் ஷெரீஃப். அவர் தனது இந்திய பயணத்தின்போது பாலிவுட் பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.

 

விழாவுக்கு 'பவர்' வந்தால் நாங்கள் வர மாட்டோம்: ஹீரோக்கள் அடம்

சென்னை: இசை வெளியீட்டு விழாவுக்கு பவர் நடிகரை அழைப்பது பெரிய ஹீரோக்களுக்கு பிடிக்கவில்லையாம்.

அண்மை காலமாக இசை வெளியீட்டு விழாக்களுக்கு பவர் நடிகரை அழைத்து வந்து பேச வைக்கிறார்கள். அப்படி அவரை அழைப்பது பெரிய ஹீரோக்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லையாம். பவர் வந்தால் இவர்களுக்கு என்ன என்று தானே நினைக்கிறீர்கள். மேட்டர் இருக்கே.

ஹீரோக்கள் விழாவுக்கு வருகையில் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள். ஆனால் பவர் மேடையில் பேசினால் விசில் பறப்பதுடன் கைதட்டல் காதை கிழிக்கிறதாம். இது பவரை நக்கலடித்து தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

இருந்தும் நம்மை விட அவருக்கு கைதட்டல் அதிகமாக இருக்கிறதே என்று நினைக்கிறார்களாம் ஹீரோக்கள். அதனால் இனி எந்த விழாவாக இருந்தாலும் சரி பவர் வந்தால் நாங்கள் வர மாட்டோம் என்கிறார்களாம் ஹீரோக்கள்.

இதையடுத்து வேறு வழியின்றி பவரை விழாக்களுக்கு அழைப்பதை நிறுத்திக் கொண்டுள்ளார்களாம்.