லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் புரொடக்ஷன்ஸ்...!!

Agadam New Thriller Begins With New

இந்தப் பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ள ரசியாபி முஹம்மத் தயாரிக்கும் முதல் படத்துக்கு அகடம் என்று தலைப்பிட்டுள்ளனர்!

லாஸ்ட் பெஞ்ச் பையன்கள் மீதான தப்பான அபிப்பிராயத்தை மாற்ற பட நிறுவனத்துக்கே இப்படி பெயர் வைத்தாராம் ரசியாபி முஹம்மத்.

அகடம் என்றால் தமிழில் கபடம் அல்லது அநீதி என்று பொருள்.

இந்தப் படத்தை இசாக் என்ற சாப்ட்வேர் எஞ்ஜினீயர் இயக்குகிறார். கதாநாயகனாக தமிழ், ஸ்ரீநி (அய்யர்) ஆகிய இரு இளைஞர்கள் நாயகர்களாக அறிமுகமாகிறார்கள். இதில் ஸ்ரீநி முறையாக பரதம் பயின்றவர்.

இரு புதுமுகங்களை நாயகிகளாக அறிமுகமாகவிருக்கிறார்கள்.

நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்ய, பவன் இசையமைக்கிறார். துரைராஜ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

முழுக்க முழுக்க திகில் காட்சிகள் நிறைந்த க்ரைம் த்ரில்லர் படமாம் இது. சென்னையில் இம்மாத இறுதியில் தொடங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஒரே ஷெட்யூலாக முடிக்கப்பட்டு, நவம்பரில் திரைக்கு வருகிறது.

 

முதல்முறையாக வைரமுத்துவுடன் இணையும் பாலா!

Vairamuthu Joins With Bala Paradesi

இளையராஜாவுடன் பணியாற்றியவர்கள், அவரை விட்டுப் பிரிந்ததும் செய்யும் முதல் வேலை, வைரமுத்துவை அழைத்து வாய்ப்பு தருவதுதான்.

இந்த லிஸ்டில் இப்போது இணைந்திருப்பவர் பாலா.

தனது பரதேசி படத்துக்கு பாட்டெழுத வைரமுத்துவை அழைத்துள்ளார் பாலா.

பாலா என்ற இளைஞர், வாய்ப்பு மறுக்கப்பட்டு அல்லது தொடங்கிய படம் பாதியில் நின்று தவித்த காலத்தில் அவரை உறுதுணையாக இருந்து, படைப்பாளியாக நிமிர வைத்தவர்கள் இருவர். ஒருவர் சிவகுமார். இன்னொருவர் இசைஞானி இளையராஜா.

சேது தொடங்கி, அவன் இவன் வரை பாலாவின் படங்களுக்கு இளையராஜா அல்லது யுவன் மட்டும்தான் இசையமைத்து வந்தனர். சூர்யாவும் தொடர்ந்து பாலா படங்களில் தோன்றி வந்தார்.

இப்போது பரதேசி படத்துக்காக முதல் முறையாக ஜீவி பிரகாஷ் குமாருடன் கைகோர்த்துள்ளார் பாலா. அடுத்ததாக, வைரமுத்துவை அழைத்து பாடல் எழுதுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் சினிமா ஒரு வட்டம்தான்!!

 

பிறந்த நாள் கொண்டாடும் 'ஷோமேன் ஆப் இந்தியா' இயக்குநர் ஷங்கர்!


Happy Birthday Shankar The Showman Of India
சென்னை: பாலிவுட்டில், இந்தியாவின் ஷோமேன் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக இருந்தவர் ராஜ்கபூர். அவருக்குப் பிறகு அந்தப் பட்டத்தை மெகா படங்களை இயக்கிய சுபாஷ் கய்-க்குத் தந்தார்கள்.

ஆனால் இப்போது அந்தப் பெயரைத் தட்டிச் சென்றுள்ளவர் இயக்குநர் ஷங்கர்! தமிழ்நாட்டு திறமைகளை முழுசாகப் பயன்படுத்திக் கொண்டாலும், அதை பெரிதாகக் கொண்டாட விரும்பாத பாலிவுட்டே இதனை ஒப்புக் கொள்வதுதான் ஷங்கரின் சிறப்பு.

எஸ்ஏசந்திரசேகரின் உதவி இயக்குநராக திரையுலகில் நுழைந்த ஷங்கர், ஜென்டில்மேன் மூலம் இயக்குநரானார். முதல் படமே மெகா ஹிட்.

தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அன்னியன், சிவாஜி, எந்திரன், நண்பன் என 10 படங்களை தமிழில் இயக்கியுள்ளார். ஜென்டில்மேன் மற்றும் முதல்வன் படங்களை இந்தியில் ரீமேக் செய்துள்ளார்.

தமிழில் இவர் இயக்கிய அத்தனைப் படங்களுமே ஹிட்தான். பாய்ஸ் மட்டும் கொஞ்சம் சொதப்பிவிட்டது.

இந்திய சினிமாவில் உச்சகட்ட வசூலைக் குவித்த ரஜினியின் எந்திரன் - தி ரோபோ படத்தின் இயக்குநர் என்பதால், ஷங்கருக்கு பாலிவுட்டில் இன்று பெரிய மரியாதை. பல முன்னணி நட்சத்திரங்கள் அவரை அழைத்தாலும், அவர் தன் விருப்பப்படிதான் படங்களை இயக்கி வருகிறார்.

தற்போது விக்ரம் - எமி ஜோடியுடன் ஐ என்ற ரொமான்டிக் த்ரில்லரை உருவாக்கி வருகிறார் ஷங்கர்.

இன்று தனது 49வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் ஷங்கர். வாழ்த்துகள்!
 

டிவிக்கு வரும் அனுராக் காஷ்யப்: க்ரைம் தொடர் இயக்குகிறார்

Anurag Kashyap Launch Crime Thriller Tv Show

அனுராக் காஷ்யப் என்றாலே க்ரைம், ரத்தம், வன்முறை இன்றி இருக்காது. பாலிவுட் திரை உலகின் தவிர்க்க முடியாத நபர் அனுராக் காஷ்யப். இயக்குநராக, திரைக்கதை எழுத்தாளராக, தயாரிப்பாளராக, நடிகராக பன்முகம் காட்டி வரும் அனுராக் இப்பொழுது சின்னத்திரையில் காலடி பதிக்க இருக்கிறார். வெள்ளித்திரையைப் போல சின்னத்திரையும் பவர்ஃபுல் மீடியா என்பதால் டிவி தொடர் இயக்க முடிவு செய்துள்ளதாக அனுராக் தெரிவித்துள்ளார். புதிய சூழல் முழுக்க, முழுக்க புதிய குழுவினருடன் களமிறங்கப் போவதால், மனதுக்குள் அவ்வப்போது படபடப்பு ஏற்படுவதாகவும் அனுராக் கூறியுள்ளார்.

இந்த க்ரைம் தொடரில் இந்தி வில்லன் நடிகர் குல்சான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் அனுராக்குடன் சைத்தான் படத்தில் நடித்துள்ளார். பிரபல, "டிவி சேனலுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், தொடர் சம்பந்தமான முன்னோட்ட காட்சிகளை படம் பிடித்து பார்த்த அனுராக், காட்சிகள் திருப்தி அளித்ததால், உற்சாகமாக இருக்கிறார். க்ரைம் கலந்த இந்த தொடர் பிரபல சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

 

என்னைப்பார்த்து பயப்படுறாங்க: காஞ்சனா சீரியல் பூஜா

S S Music Pooja Play New Serial Kanchana

எஸ்.எஸ் மியூசிக் தொகுப்பாளராக இருந்த பூஜாவிற்கு இளம் ரசிகர் பட்டாளங்கள் ஏராளம். சின்னத்திரையில் இருந்த போதே காதலில் சொதப்புவது எப்படி? படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கூடவே நல்ல பெயரும் கிடைத்தது. சினிமாவை விட சின்னத்திரையே மேல் என்று நினைத்த பூஜா இப்போது விஜய் டிவியில் காஞ்சனா சீரியல் மூலம் களம் இறங்கியிருக்கிறார். தனது சின்னத்திரை பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் பூஜா.

அம்மா, அப்பா பெங்களூர்ல இருக்காங்க. நானும், தங்கை ஆர்த்தியும் படிக்கவும், வேலை பார்க்கவும் சென்னை வந்தோம். எஸ்.எஸ். மியூசிக்கில் வேலை பார்த்த போதே எனக்கு திருமணம் ஆயிருச்சு. என்னோட கணவர் க்ரேக் அவரும் எஸ்.எஸ். மியூசிக்கில் வேலை பார்க்கிறார்.

நான் எஸ்.எஸ்.மியூசிக்கில் வேலை பார்த்தபோதே சினிமாவிலும், சீரியலும் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் மறுத்துவிட்டேன். அதற்கு காரணம் எனக்கு சினிமா மேல் இருந்த பயம்தான். காதலில் சொதப்புவது எப்படி பட இயக்குநர் பாலாஜி மோகன் என்னிடம் வந்து கதை சொன்னதும், கதை பிடித்து போய் ஓ.கே., சொல்லிவிட்டேன். ஏனென்றால் படம் முழுக்க காமெடி சப்ஜெக்ட். படத்தில் என்னுடைய கேரக்டர் பிடிச்சது, அதனால் இந்தபடத்தில் நடிச்சேன். படம் பார்த்து நிறைய பேர் பாராட்டுனாங்க. சித்தார்த்கிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கிட்டேன்.

எஸ்.எஸ். மியூசிக்கில் இருந்து விலகி ஒருவருடம் ஆகிவிட்டது. திடீர்னு ஒருநாள் காஞ்சனா சீரியல் கதை கேட்டேன். த்ரில்லிங் கதைக்காகவே நடிக்க ஒத்துக்கொண்டேன். இப்பதான் அதோட கஷ்டம் தெரியுது.

நிகழ்ச்சி தொகுப்பாளர் வேலை 2 அல்லது 3 மணி நேரத்தில் முடிந்துவிடும். ஆனா சீரியலுக்காக 15 மணிநேரம் கூட வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. தென்காசி, குற்றாலம்னு காடுமேடெல்லாம் சுத்த வேண்டியிருக்கு. இப்பல்லாம் சின்னப்பசங்க என்னைப்பார்த்து காஞ்சனா பேய்னு பயப்படுறாங்க என்று குஷியாக சொல்லிவிட்டு சூட்டிங்கிற்கு கிளம்பினார் பூஜா.

 

ராணா - த்ரிஷா காதல் 'கன்ஃபர்ம்': அடுத்த ஆண்டு திருமணம்!!

Trisha Raana Marry Next Year

சென்னை: டி.ராமாநாயுடுவின் பேரனும், தெலுங்கு நடிகருமான ராணாவும், நடிகை த்ரிஷாவும் காதலிப்பது குறித்து ஏற்கெனவே எழுதியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்கள்.

'லேசா லேசா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், த்ரிஷா. தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தனது 50 வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

பிரபல பட அதிபர் டி.ராமாநாயுடுவின் பேரன் ராணாவுடன் ஒரு தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தபோது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

அந்த நட்பு பின்னர் காதலாக மலர்ந்தது. இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். இந்த நட்சத்திர காதல், கல்யாணத்தில் முடிய இருக்கிறது. த்ரிஷாவும், ராணாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள்.

ராணாவுக்கு ஒரே ஒரு தங்கை இருக்கிறார். அவருக்கு திருமணம் முடிவாகியிருக்கிறது. நிச்சயதார்த்த நிகழ்ச்சி, ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில், த்ரிஷாவும் கலந்து கொண்டார்.

ராணா தங்கையின் திருமணம், வருகிற டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. தங்கை திருமணம் முடிந்ததும், த்ரிஷாவை திருமணம் செய்து கொள்ள ராணா திட்டமிட்டு இருக்கிறார். இவர்களின் திருமணத்துக்கு இரண்டு பேர்களின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள்.

அடுத்த வருடம் ஆரம்பத்தில், ஜனவரி அல்லது பிப்ரவரியில் த்ரிஷா-ராணா திருமணம் நடைபெறும் என்று த்ரிஷா தரப்பில் தெரிவித்தனர்.

 

இன்று ரிலீசாகவிருந்த பாண்டி ஒலி பெருக்கி நிலையம் படத்துக்கு நீதிமன்றம் தடை!

Chennai Court Bans The Release Pandi Oliperukki Nilayam   

சென்னை: ராசுமதுரவன் இயக்கத்தில் இன்று வெளியாகவிருந்த பாண்டி ஒலி பெருக்கி நிலையம் என்ற படத்தை வெளியிட சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பைனான்சியர் எஸ்.சிவகுமார் இது தொடர்பாக சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழ் திரைப்படத்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக பைனான்ஸ் தொழில் செய்து வருகிறேன். சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த ராசுமதுரவன் என்பவர், "பாண்டி ஒலி பெருக்கி நிலையம்'' என்ற தலைப்பில் தமிழ் சினிமா படம் தயாரித்து இயக்குகிறார்.

இந்த படத்தை தயாரிப்பதற்காக, என்னிடம் ரூ.24 லட்சம் கடனாக 21.2.2012 அன்று வாங்கினார். அப்போது, இந்த தொகையை 24 சதவீத வட்டியுடன், படம் ரிலீசாவதற்கு 30 நாட்களுக்கு முன்பு தந்து விடுவேன் என்று ராசுமதுரவன் உத்தரவாதம் அளித்தார்.

ஆனால் ஒப்பந்தம் செய்தபடி, பணத்தை திருப்பித்தராமல், படத்தை ஆகஸ்டு 17-ந் தேதி (இன்று) வெளியிடுவதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளார். எனவே எனக்கு தரவேண்டிய ரூ.24 லட்சம், அதற்கான வட்டி ஆகியவற்றை தராமல் பாண்டி ஒலி பெருக்கி நிலையம் என்ற படத்தை வெளியிட ராசுமதுரவனுக்கு தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு 8-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி ஜெ.கலியமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து நீதிபதி கலியமூர்த்தி பிறப்பித்த உத்தரவில், "ராசுமதுரவன் தயாரித்து, இயக்கும் பாண்டி ஒலி பெருக்கி நிலையம் படம் வெளியானால், தனக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஆவணங்கள், வக்கீல் வாதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது, இந்த படத்துக்கு இடைக்கால தடை விதிக்க ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளது தெரிகிறது. எனவே பாண்டி ஒலி பெருக்கி நிலையம் படத்துக்கு, வரும் ஆகஸ்டு 24-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிடுகிறேன். இந்த வழக்கு குறித்து எதிர்மனுதாரர் ராசுமதுரவன் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு வரும் 24-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்," என்று கூறியுள்ளார்.

 

விக்ரம் நடிக்கும் 'தாண்டவம்' தலைப்புக்கு தடை கேட்ட மனு தள்ளுபடி!

Court Dismissed Case Against Thanda   

சென்னை: விக்ரம் நடிக்கும் `தாண்டவம்` படத்தின் தலைப்புக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தாண்டவம்

சென்னை 16-வது உதவி சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில், ஸ்டார் நைன் மீடியாஸ் உரிமையாளர் எஸ்.விஜய் தாக்கல் செய்துள்ள மனுவில், "தாண்டவம் என்ற தலைப்பில் புதுமுக நடிகர் நடிக்கும் சினிமா படத்தை தயாரித்து வருகிறேன். இந்த படத்தின் தலைப்பை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில் 2010 டிசம்பர் மாதம் பதிவு செய்துள்ளேன்.

இந்தநிலையில், யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனம், நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தை `தாண்டவம்` என்ற தலைப்பில் தயாரிக்கிறது. இதுதொடர்பாக, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில் வைத்து சமரச பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், ஆர்.சங்கரின் தாண்டவம் என்ற தலைப்பை நாங்களும், விக்ரமின் தாண்டவம் அல்லது சிவதாண்டவம் என்ற தலைப்பை யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் பயன்படுத்தவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில், யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனம், தாண்டவம் என்ற பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்துள்ளது. எனவே தாண்டவம் படத்தின் தலைப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். தாண்டவம் படத்தின் தலைப்பை பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்," என்று கூறியிருந்தார்.

இந்த மனுவுக்கு யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், `தாண்டவம் என்ற படத்தின் தலைப்பை பதிவு செய்துவிட்டு, அதை புதுப்பிக்க வில்லை. எனவே மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

பின்னர் மனுதாரர் தரப்பில் கோதண்டபாணி, யு.டி.வி மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் வக்கீல் சிவானந்தராஜ் ஆகியோர் ஆஜராகி வாதம் செய்தனர்.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "மனுதாரருக்கு ஆர்.சங்கரின் `தாண்டவம்' என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் புதுப்பிக்கவில்லை. எனவே, யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் தாண்டவம் என்ற தலைப்பை பயன்படுத்தியுள்ளது. எனவே தாண்டவம் தலைப்பை பயன்படுத்த இடைக்கால தடைக் கேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

 

7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் சினிமா விழா - கோடம்பாக்கம் திரள்கிறது!

Jayalalithaa Attend Jaya Tv S 14 Anniversary
சென்னை: ஜெயா டிவியின் 14வது ஆண்டு விழாவில் ஜெயலலிதா பங்கேற்கிறார். 2005-ம் ஆண்டுக்குப் பிறகு அவர் பங்கேற்கும் கலைத்துறைச் சார்ந்த விழா இதுதான் என்பதால், தமிழ் சினிமாக்காரர்கள் மொத்தமும் இதில் திரள்கிறார்கள்.

ஜெயா டிவி ஆரம்பிக்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வரையில் நினைத்தாலே இனிக்கும் என்ற நிகழ்ச்சிக்கு அந்த நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பழம்பெரும் இசையமைப்பாளர்கள் எம்எஸ் விஸ்வநாதன் - டி கே ராமமூர்த்திக்கு மரியாதை செய்யப்படுகிறது. மேலும் அவர்களின் இசைக் கச்சேரியும் நடக்கிறது.

இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதாவும் பங்கேற்று விஸ்வநாதன் - ராமமூர்த்தியை கவுரவிக்கிறார்.

சினிமா சம்பந்தப்பட்ட விழாவில் ஜெயலலிதா கடைசியாகக் கலந்து கொண்டது 2005-ம் ஆண்டுதான். அதன் பிறகு அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. இப்போது புதிதாக பதவி ஏற்ற பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி இது. வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி மாலை நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கிறது.

இதற்காகவே காத்திருந்த தமிழ் சினிமாக்காரர்கள் மொத்தப் பேரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு மேடையில் பேச வாய்ப்புக் கிடைக்குமா என்று தெரியவில்லை!