தமிழ்நாடு: 2 நாட்களில் 10 கோடியை அள்ளியது பாகுபலி

சென்னை: இந்த வருடம் முதல் 6 மாதங்கள் சோதனையைச் சந்தித்த தமிழ் சினிமா தற்போது தான் அதில் இருந்து மீண்டு வருகின்றது. இந்த மாதத் தொடக்கத்தில் வெளிவந்த பாபநாசம் மற்றும் பாலக்காட்டு மாதவன் 2 படங்களும் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன.

இந்நிலையில் தென்னிந்திய நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த பாகுபலி திரைப்படம், தமிழ்நாட்டில் ஒரு வசூல் சூறாவளியை நிகழ்த்தியுள்ளது. தமிழில் எந்தப் பெரிய நடிகர்களும் படத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை எனினும் இந்த 2 நாட்களில், இதுவரை 10.25 கோடியை தமிழ்நாட்டில் வசூலித்து சாதனை செய்துள்ளது பாகுபலி.

Tamil Nadu: 'Baahubali'  Two Days Box Office Collection More Than 10 Crores

கே.ஈ.ஞானவேல்ராஜா தனது ஸ்டுடியோகிரீன் சார்பாக சுமார் 333 திரையரங்குகளில் பாகுபலி திரைப்படத்தை வாங்கி வெளியிட்டார், தெலுங்கு மொழியில் பாகுபலி திரைப்படம் 46 திரையரங்குகளில் வெளியானது.

மொத்தம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 379 திரையரங்குகளில் பாகுபலி திரைப்படம் வெளியானது, வெளியான 2 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை மொத்தம் 10.25 கோடியை வசூலித்து உள்ளது.

பெரிய நடிகர்கள் யாரும் இல்லாத போதும் ராஜமௌலி என்ற பெயருக்காகவே தமிழ்நாட்டில் படம் வெற்றிகரமாக ஓடிவருகிறது, உலகம் முழுவதும் சுமார் 4200 திரையரங்குகளில் வெளியான பாகுபலி 2 நாட்களில் 100 கோடியை வசூலித்து வரலாறு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஆகஸ்ட் 7ம் தேதி ஓடி வருகிறான் ‘சண்டி வீரன்’

சென்னை: பாலா தயாரிக்க சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள சண்டி வீரன் படம் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி ரிலீசாக உள்ளது.

களவாணி, வாகை சூடவா ஆகிய படங்களை இயக்கியவர் சற்குணம். இவர் தற்போது இயக்குநர் பாலாவின் சொந்த நிறுவனமான பி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சண்டி வீரன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

Chandi veeran to be released on August 7th

இப்படத்தில் அதர்வா நாயகனாகவும், கயல் ஆனந்தி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப் பட்டது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியானது.

Chandi veeran to be released on August 7th

அவற்றிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. இந்நிலையில், இப்படத்தினை வரும் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ஸ்ரீகிரீன் புரோடக்‌ஷன் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் தியேட்டர் உரிமையை பெற்று படத்தை வெளியிடுகிறது.

 

ஒரு பொய்யாவது சொல் பெண்ணே.. ஏம்ப்பா இப்படி ஓட்டுறீங்க சிம்புவை!

சென்னை: நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவான வாலு திரைப்படம் தொடர்ந்து பல வெளியீட்டுத் தேதிகளைப் பார்த்தும் வெளியிட முடியாமல் தடுமாறி வருகின்றது. இந்நிலையில் வரும் ரம்ஜான் தினத்தன்று படம் வெளியாகும் என்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கூறியிருந்தார்.

வாலு படத்தின் பாடலை ஷூட் செய்வது, டிரைலர் வெளியிடுவது என்று படக்குழுவினர் பதறியடித்து வேலை செய்ததைப் பார்த்து இந்த முறை வாலு, கண்டிப்பாக வெளியாகும் என்று சிம்பு ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆடிப் பாடினர்.

Vaalu Movie Issue- Face book Post

யார் கண்பட்டதோ மீண்டும் வாலுவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, இதனால் உற்சாகத்தில் மிதந்த சிம்புவின் ரசிகர்கள் தற்போது காற்றுப் போன பலூன் போல ஆகிவிட்டனர். இதை வைத்து சமூக வலைதளங்களில் ஓட்ட ஆரம்பித்து விட்டனர். அதில் ஒன்றுதான் இது.

தற்போது சோகத்தில் திரியும் சிம்பு ரசிகர்கள் இந்தப் பாடலைத் தான் பாடித் திரிகின்றனாராம், அப்படி என்ன பாடல் என்று கேட்கிறீர்களா? ஜோடி படத்தில் பிரசாந்த் சிம்ரனைப் பார்த்து ஒரு பொய்யாவது சொல் பெண்ணே உன் காதலன் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர்வாழ்வேன் என்று பாடுவாரே.

அதே பாடலை இப்படி மாற்றிப் பாடியுள்ளனர் அதாவது ஒரு பொய்யாவது சொல் பெண்ணே வாலு ரிலீசாகும் என்று அந்த சொல்லில் நான் உயிர் வாழ்வேன். இப்படி ஒரு போஸ்ட்டை யாரோ ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட தற்போது அதிகமான பேரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது இந்த போஸ்ட்.

விடுங்கய்யா. வேற வேலை இருந்தா பாருங்கய்யா...!

 

தளபதியின் இடத்தை பிடிக்கத் துடிக்கும் சங்கத் தலைவர்

சென்னை: தளபதியோட இடத்தை பிடிப்பது தான் தனது குறிக்கோள் என சங்கத் தலைவர் நடிகர் தெரிவித்துள்ளாராம்.

சங்கம் படம் மூலம் மிகவும் பிரபலமான அந்த நடிகர் காட்டில் தற்போது வாய்ப்பு மழை பெய்து கொண்டிருக்கிறது. அவர் காக்கிச்சட்டை போட்டு வந்த படமும் ஹிட்டாகியுள்ளது. இதனால் அவர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்.

இந்நிலையில் சங்கத் தலைவர் நடிகரின் படங்களுக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு இருப்பதை பார்த்த வினியோகஸ்தர்கள் அவரது படத்தை வாங்க போட்டா போட்டி போடுகிறார்கள். இதற்கிடையே சிலர் சங்கத் தலைவருக்கு தளபதி போன்று ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் ஏராளம் தெரியுமா என்று பிட்டை போட்டு வருகிறார்கள்.

அதனால் அவரின் படத்தை சொன்ன விலைக்கு மறுபேச்சு பேசாமல் வினியோகஸ்தர்கள் வாங்கிச் செல்கிறார்களாம். அண்ணே, உங்க படத்தை வினியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்கிறார்கள் என்று ஆதரவாளர்கள் நடிகரிடம் தெரிவித்துள்ளனர்.

நல்ல செய்தி கேட்டு குஷியான நடிகர் அதை கொண்டாட பார்ட்டி கொடுத்துள்ளார். பார்ட்டிக்கு வந்தவர்களிடம் இன்னும் 2 ஆண்டுகளில் டாப் நடிகராகிவிடுவேன். தளபதி இடத்தைப் பிடிப்பது தான் என் குறிக்கோள் பார் என்று சொடுக்கிக் கூறினாராம்.

 

டார்லிங் டார்லிங் டார்லிங்.. பாகுபலி பிரபாஸ் குறித்து உருகும் தமன்னா!

ஹைதராபாத்: இந்தியா முழுவதும் பாகுபலி ஜுரமாக உள்ள நிலையில், பாகுபலி படத்தில், நடித்த தமன்னா நடிகர் பிரபாசை டார்லிங் பிரபாஸ் என வர்ணித்து உள்ளார்.

இந்தியா முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் பிரபாஸின் காதலியாகவும், போராளியாகவும் நடித்து பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் நடிகை தமன்னா.

Milk Beauty Tamanna Says -Prabhas Is The Real Darling In Tollywood

பாகுபலி படத்தில் சிறிது நேரமே இடம்பெற்றாலும் கூட பிரபாஸ்- தமன்னா இடையிலான கெமிஸ்ட்ரி பலரின் பாராட்டுகளையும் தமன்னாவுக்கு, பெற்றுத் தந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தமன்னா அளித்த பேட்டி ஒன்றில் தெலுங்கின் உண்மையான டார்லிங் பிரபாஸ் வீட்டில் இருந்து வந்த சுவையான உணவை, தவற விட்டது வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

 

அக்காவுக்கு வாய்ப்பு கொடுத்தால் சம்பளத்தில் சலுகை: நடிகையின் அதிரடி ஆஃபர்

சென்னை: சங்கத் தலைவி நடிகை தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் தன் அக்காவுக்கும் ஒரு கதாபாத்திரம் அளிக்குமாறு கேட்கிறாராம்.

சங்கப் படம் மூலம் பிரபலமானவர் அந்த ஆந்திர நடிகை. அவர் மீண்டும் சங்கத் தலைவருடன் சேர்ந்து நடித்த படமும் ஹிட்டானது. நடிகையின் மார்க்கெட் கோலிவுட்டில் பாதிப்பில்லாமல் உள்ளது. ஆனால் அவரது அக்கா நடிகைக்கு தான் தமிழிலும் சரி, தெலுங்கிலும் சரி மார்க்கெட் சரியில்லை.

அக்காவின் நிலைமையை பார்த்து பாவப்பட்ட சங்கத் தலைவி அவருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்க முடிவு செய்துள்ளார். இதனால் தன்னை படங்களில் ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர்களிடம் சார், என்னோடு சேர்த்து என் அக்காவுக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுங்களேன் என்று கேட்கிறாராம்.

என் படத்தில் அப்படி ஒரு புது கதாபாத்திரத்திற்கு வழியில்லை என்று யாராவது கூறினால் சார், நீங்கள் கூறிய கதையில் வருகிறதே அந்த கதாபாத்திரம் அதையே என் அக்காவுக்கு கொடுத்துவிடுங்கள். நான் ஒன்றும் உங்களிடம் சும்மா என் அக்காவுக்கு வாய்ப்பு கேட்கவில்லை. என் அக்காவை நடிக்க வைத்தால் நான் சம்பளத்தை குறைக்கத் தயார் என்கிறாராம் சங்கத் தலைவி.

அவரின் இந்த அக்கா நிபந்தனையை கேட்டு பல இயக்குனர்கள் சொல்வது தெரியாமல் விழிக்கிறார்களாம்.

 

குரு சூர்யாவா, சிஷ்யன் முருகதாஸா.. விஜயின் 60 வது படத்தை இயக்கப் போவது யார்?

சென்னை: நடிகர் விஜயின் 60 வது படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி திரையுலகில் மீண்டும் எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் இந்தக் கேள்வி எழுந்த போது பிரபுதேவா மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இருவரின் பெயர்களும் அடிபட்டன.

ஆனால் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் பெயரும் மற்றொரு இயக்குனரான எஸ்.ஜே.சூர்யாவின் பெயரும், அடிபடுகின்றன. சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிகர் விஜயை சந்தித்து பேசியிருக்கிறார்.

Vijay 60: SJ Suryah or AR Murugadoss?

அப்போது அடுத்த படத்தின் கதையைப் பற்றி விஜயிடம் ஒருசில வரிகள் கூற, விஜய்க்கு அந்தக் கதை பிடித்துப் போய்விட்டது என்று கூறுகிறார்கள். ஏற்கனவே இருவரும் இணைந்த குஷி திரைப்படம் பிளாக்பஸ்டராக மாறியது அனைவரும் அறிந்ததுதான்.

ஆனால் இருவரும் சேர்ந்து புலி என்ற பெயரில் மீண்டும் இணையத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அது முடியாமல் போய் விட்டது. தற்போது அந்தப் படப் பெயரை வாங்கித்தான் புலி படத்தில் நடித்துள்ளார் விஜய் என்பது நினைவிருக்கலாம்.

மற்றொரு பக்கம் விஜயை வைத்து ஏற்கனவே 2 மெகாஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், விஜயை வைத்து அடுத்த படத்தை இயக்க ஆர்வமாக இருக்கிறார்.இருவரில் யாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை.

முருகதாஸின் குருதான் எஸ்.ஜே.சூர்யா என்பதால் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் மற்றவர்கள் மகிழவே செய்வார்கள் என்று நம்பலாம்.

எதுவாக இருந்தாலும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் தான் விஜயின் 60 வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

இன்னும் சிலமாதங்கள் கழித்து விஜயின் 60 வது படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறுகிறார்கள். பார்க்கலாம் விஜய் யாரைத் தேர்வு செய்கிறார் என்று?

 

(குடிகார) வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க .. டீசருக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!

சென்னை: நேற்று முன்தினம் வெளியான வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தின் டீசருக்கு, ரசிகர்களிடையே தொடர்ந்து எதிர்ப்புகள் வலுக்கின்றன. ஆர்யாவின் 25 வது படமான வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தின் டீசர் ஜூலை 10 தேதி அன்று வெளியானது.

டீசர் முழுவதுமே ஆர்யாவும்,சந்தானமும் குடிப்பது போன்ற காட்சிகளே நிறைந்துள்ளன, இதனைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் எதிர்ப்புகளை வலுவாகப் பதிந்து வருகின்றனர்.

இயக்குநர் ராஜேஷின் அனைத்துப் படங்களிலும் குடிப்பது போன்ற காட்சிகளே அதிகம் இடம்பெறுகின்றன, இயக்குநர் ராஜேஷ் குடிப்பது போன்ற காட்சிகளை எப்போது தனது படங்களில் இருந்து நீக்கப் போகிறார் என்று கேள்வி என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும் ஒருசிலர் தமிழ்நாட்டில் தற்போது பிஞ்சுக் குழந்தைகளையும் மது அருந்த வைக்கும் கொடூரங்கள் ஆங்காங்கே நடைபெறும் வேளையில், இதுபோன்ற காட்சிகளை வைப்பது அவசியமா? என்று கோபத்துடன் கேட்டுள்ளனர்.

இன்னும் சிலர் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க என்ற டைட்டிலை மாத்திவிட்டு, வாசுவும் சரவணனும் ஒண்ணாக் குடிக்கிறவங்க என்று டைட்டிலை வைக்குமாறு கிண்டல் செய்துள்ளனர்.

இதைப் போன்று ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டுள்ளதால் டீசருக்கு எதிரான கருத்துக்கள் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இயக்குநர் ராஜேஷ் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கலாம்?