புதுஹீரோயின் கொடுத்த டார்ச்சர்... வருத்தத்தில் பெண் தயாரிப்பாளர்!

சென்னை: அறிமுகமான முதல் படம் முடிந்து வெளிவருவதற்குள், தனக்கு ப்ளைட் டிக்கெட் வேண்டும், நட்சத்திர ஓட்டலில் ரூம் வேண்டும், உடன் அம்மாவுக்கும் டிக்கெட் வேண்டும் என்றெல்லாம் கேட்டு பெண் தயாரிப்பாளரை டார்ச்சர் செய்துள்ளார் புதுமுகம் கீர்த்தி.

படங்களின் விளம்பர நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்களுக்கு ஹீரோயின்கள் வருவதே இல்லையே என்ற குற்றச்சாட்டுகளை பல தயாரிப்பாளர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

புதுஹீரோயின் கொடுத்த டார்ச்சர்... வருத்தத்தில் பெண் தயாரிப்பாளர்!

முன்னணி ஹீரோவான கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்துக்கே, அதன் நாயகி காஜல் அகர்வால் வரவில்லை. அவரை வரவிடாமல் மேனேஜர் தடுத்துவிட்டதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

எனவே இனி படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு நாயகிகள் வராவிட்டால் அவர்களுக்கு சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

அப்படி இருந்தும் நேற்று நடந்த உயிர்மொழி படத்தின் இசை மற்றும் அறிமுக பிரஸ் மீட்டுக்கு படத்தின் நாயகி கீர்த்தி வரவில்லை. இத்தனைக்கும் அவருக்கு இதுதான் முதல் படம்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சண்முகப்பிரியா பேசுகையில், "இந்த உயிர்மொழி படத்தின் படப்பிடிப்பை சொன்ன நேரத்துக்குள், குறித்த பட்ஜெட்டுக்குள் நல்லபடியாக நடத்திக் கொடுத்துவிட்டார் இயக்குநர். என் நிலைமையைப் புரிந்து ஒத்துழைத்தனர் அனைவரும்.

ஆனால் நடிகை கீர்த்தி மட்டும் சரியான ஒத்துழைப்பைத் தரவில்லை. படம் முடிந்து வியாபாரம் பேசப்போகும் இந்த நேரத்தில்தான் பப்ளிசிட்டி முக்கியம். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கே அவர் வர மறுத்துவிட்டார்.

புதுஹீரோயின் கொடுத்த டார்ச்சர்... வருத்தத்தில் பெண் தயாரிப்பாளர்!

கிட்டத்தட்ட ஒரு வாரமா பேசிப் பார்த்தோம். ‘ப்ளைட்ல டிக்கெட் போட்டுக் கொடுக்கணும், ஸ்டார் ஓட்டல்லதான் ரூம் வேணும்... கூட அம்மா மேனேஜருக்கும் அதே வசதி வேண்டும் என்றெல்லாம் கண்டிஷன் போட்டார். பரவால்ல வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

இந்தப்படத்தை நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு தான் முடிச்சோம். படம் ஆரம்பிச்சப்ப நான் நிறைமாத கர்ப்பிணியா இருந்தேன். உடல் சிரமங்களைப் பார்க்காம நான் ஓடித் திரிஞ்சேன். குழந்த பிறந்த 12-ம் நாளே நான் ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்தேன். தயாரிக்கணும்னு வந்ததுக்கப்புறம் ஏற்றம், இறக்கமெல்லாம் இருக்கும்னு முடிவு பண்ணிட்டேன். அதனால் இதையெல்லாம் பெரிசா எடுத்துக்கல.

ஆனா, ஒரு தயாரிப்பாளரை நடிகை இப்படி நோகடிப்பது சரியா?

என்னோட டீம்ல எல்லாருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தாங்க. ஹீரோயின் மட்டும் ஒத்துழைப்பு கொடுக்கல.

ஷுட்டிங் டைம்ல கூட அவங்களை ரொம்ப கெஞ்சிக் கூத்தாடி தான் கூப்பிட வேண்டியிருந்தது. நான் எதுவும் சொல்லக்கூடாதுன்னு தான் நெனைச்சேன். ஆனா முடியல.

இதுக்கு நிச்சயம் ஒரு தீர்வு வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்திலும் நிச்சயம் முறையிடுவேன்.

ஆனா ஒண்ணு... அந்த ஹீரோயின் இப்போ இங்க இல்லாததால நஷ்டம் எங்களுக்கில்ல. அவங்களுக்குதான். இந்த மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்த்திட்டு, புதிய பட வாய்ப்புகள் இந்த மாதிரி நடிகைகளைத்தான் தேடிப்போகிறதே தவிர, எங்களைப் போன்றவர்களைத் தேடி அல்ல.

இந்த மாதிரி ஹீரோயின்கள் வந்து பப்ளிசிட்டி கொடுத்து ஓட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தப் படத்தில் கதை இருக்கிறது.. அந்த நம்பிக்கையில் படத்தை வெளியிடுகிறோம்," என்றார்.

 

ஸ்பாட்டில் கடும் வாக்குவாதம்: அஜீத்தின் 'வீரம்' ஷூட்டிங் ரத்து

ஹைதராபாத்: ஆந்திர பிரதேச ஸ்டண்ட் யூனியன் உறுப்பினர்களுக்கும், வீரம் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

ஸ்பாட்டில் கடும் வாக்குவாதம்: அஜீத்தின் 'வீரம்' ஷூட்டிங் ரத்து

அஜீத் குமார், தமன்னா நடிக்கும் வீரம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான சண்டை காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆந்திர மாநில ஸ்டண்ட் யூனியன் உறுப்பினர்கள் அங்கு வந்தனர். ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்தினால் உள்ளூர் ஆட்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை ஏன் பின்பற்றவில்லை என்று கேட்டனர்.

உடனே ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவுக்கும், யூனியன் ஆட்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நிலைமை கையை மீறிப் போக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த பிரச்சனை தீர்வது போன்று தெரியாதாதல் அஜீத், தமன்னா வரும் காட்சிகளை படமாக்குவது என்று இயக்குனர் சிவா திட்டமிட்டார்.

 

ஆறு ஆண்டுகளுக்குப் பின் நடிப்பு... சின்னத் திரையில் அறிமுகமாகும் அர்ச்சனா!

ஆறு ஆண்டுகளுக்குப் பின் நடிப்பு... சின்னத் திரையில் அறிமுகமாகும் அர்ச்சனா!

பழைய நடிகைகள் மீண்டும் நடிக்க வருவது ஒன்றும் புதிதில்லை. எண்பதுகளில் பெரும் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவரான அர்ச்சனா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

ஏற்கெனவே அவர் ஒன்பது ரூபாய் நோட்டு, பரட்டை போன்ற படங்களில் நடித்திருந்தாலும், இப்போது முதல் முறையாக டிவியில் நடிக்கிறார்.

தாசி, வீடு, நீங்கள் கேட்டவை போன்ற படங்களில் மறக்க முடியாத நடிப்பைத் தந்தவர் அர்ச்சனா.

நடிப்பை விட்டு விலகியிருந்த அவர் மீண்டும் ஒன்பது ரூபாய் நோட்டு, பரட்டை என்கிற அழகுசுந்தரம் போன்ற படங்களில் நடித்தார்.

பின்னர் 6 ஆண்டுகள் நடிக்கவில்லை. இடையில் நிறைய அர்ச்சனாக்கள் சினிமாவிலும் சீரியல்களிலும் வந்துவிட்டனர்.

இந்த நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்த முறை சின்னத் திரையில்.

‘உணர்வுகள்' என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

இதுகுறித்து இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூறுகையில், "ஒவ்வொரு அழகான, ஆச்சர்யமான, நெகிழ்ச்சியான உணர்வுகளின் தொகுப்புதான் உணர்வுகள்.

சின்னத்திரை தொடர் பார்க்கும் உணர்வு இல்லாமல் வெள்ளித்திரையில் திரைப்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தும் தொடராக உணர்வுகள் இருக்கும். தேவாவின் இசையில், சஞ்சய் பி.லோக்நாத் ஒளிப்பதிவில், எல்.சேக்கிழார் திரைக்கதையில், ஜான் மகேந்திரன் வசனத்தில் வரும் திங்கட்கிழமை முதல் ‘புதுயுகம்' தொலைக்காட்சியில் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது," என்றார்.

 

நடிகைக்கு தெரியாமல் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றும் 'டாக்டர்' அம்மா

சென்னை: கொழுக் மொழுக் நடிகையின் அம்மா மகளின் காதல் விவகாரம் பிடிக்காமல் சொத்துக்களை எல்லாம் கமுக்கமாக தன் பெயருக்கு மாற்றிக் கொண்டிருக்கிறாராம்.

கோலிவுட்டில் மளமளவென வளர்ந்து வந்த கொழுக் மொழுக் நடிகை தான் விரல் வித்தை நடிகரை காதலிப்பதாக பகிரங்கமாக அறிவித்தார். காதலை ஒப்புக் கொண்டவர் 5 ஆண்டுகள் கழித்து தான் திருமணம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் நடிகையின் டாக்டர் அம்மாவுக்கு மகளின் காதல் விவகாரம் பிடிக்கவில்லை போன்று. இதனால் அம்மாவுக்கும், மகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறதாம். படப்பிடிப்பில் கூட கேரவனுக்குள் இருவரும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சண்டை போட்டுக் கொள்கிறார்களாம்.

எங்கே மகள் நம் கையை விட்டு போய்விடுவாளோ என்று பயந்த அம்மா கமுக்கமாக சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டிருக்கிறாராம். மேலும் புதிதாக வாங்கும் சொத்துக்களையும் தன் பெயரில் மட்டுமே வாங்குகிறாராம்.

காதலில் இருக்கும் நடிகையோ அம்மாவின் செயல் பற்றி தெரியாமல் தாய்க்குலத்துடன் மோதிக் கொண்டிருக்கிறாராம்.

 

இப்படி என் பெயரை கெடுக்கிறாங்களே, கெடுக்கிறாங்களே: நடிகர் புலம்பல்

சென்னை: தனக்கு நெருக்கமானவர்களே தனது பெயரை கெடுப்பதால் நடிகைகளை கலாய்த்து ஓட வைப்பதில் வல்லவரான நடிகர் கவலையில் உள்ளாராம்.

படப்பிடிப்பில் இந்த நடிகர் இருந்தால் அவர் நிச்சயம் மகளிர் கூட்டத்துடன் உட்கார்ந்து அவர்களை கலாய்த்துக் கொண்டிருப்பார் என்பது கோடம்பாக்கத்திற்கே தெரியும். இந்நிலையில் அவருக்கு நெருக்கமானவர்களே அவரது பெயரைக் கெடுக்கும் வகையில் பல விஷயங்களை பேசி வருகிறார்களாம்.

அந்த நடிகரா அவர் எப்பொழுது பார்த்தாலும் நடிகைகளுடன் தான் பேசிக் கொண்டிருப்பார், நடிகைகளுக்கு பிரியாணி விருந்து வைக்கிறார் என்று வெளிப்படையாக பேசி வருகிறார்களாம். இது அந்த நடிகரை மிகவும் கவலை அடைய வைத்துள்ளதாம்.

இப்படிப்பட்ட விமர்சனங்கள் தனது வளர்ச்சியை பாதிக்கும் என்று அஞ்சுகிறாராம். அதனால் இனி மிகவும் எச்சரிக்கையாக இருக்க முடிவு செய்துள்ளாராம். சென்னையில் பிரியாணி ஹோட்டல் வைத்திருக்கும் நடிகர் தற்போது ரியல் எஸ்டேட்டில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ராமராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!!!!!!!!

புதுச்சேரி: நடிகர் ராமராஜனுக்கு புதுவையைச் சேர்ந்த ஒரு அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

ராமராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!!!!!!!!

தமிழ் திரையுலகில் எண்பதுகளிலேயே ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் என்ற சாதனையைச் செய்தவர் ராமராஜன். இவரது கரகாட்டக்காரன் 400 நாட்களுக்கும் மேல் ஓடியது.

சினிமாவில் ஓஹோவென இருந்தவரை அரசியல் வீழ்த்தியது. திடீரென சினிமாவில் காணாமல் போனார்.

புதுவையைச் சேர்ந்த அஸிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் பவுண்டேஷன் என்ற அமைப்பு ராமராஜன் உள்பட 80 சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.

ராமராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!!!!!!!!

இந்த விருது வழங்கும் விழா சமீபத்தில் புதுச்சேரியில் நடந்தது. விழாவில் ராமராஜன் பங்கேற்றார். அமைப்பின் தலைவர் ராஜேந்திரன் விருதினையும் பாராட்டுப் பத்திரத்தையும் வழங்கி கவுரவித்தார்.

 

ஜீ தமிழ் சேனலின் ‘தூள்’ காமெடி ஷோ

ஜீ தமிழின் புதிய படைப்பு ‘‘தூள்'' நிகழ்ச்சி. இது நகைச்சுவை கலைஞர்கள் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாகும்.

இதில் 5 அணிகளாக நகைச்சுவை கலைஞர்கள் பங்கேற்று, தங்களின் திறமையால் நேயர்களை சிரிக்க வைக்கின்றனர்.

‘‘லக்கா கிக்கா'' நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் கால்பதித்த நடிகை ரோஜா, நடிகர் மற்றும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா ஆகியோர் தூள் நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர்.

ஜீ தமிழ் சேனலின் ‘தூள்’ காமெடி ஷோ

திறமை அடிப்படையில் 5 அணிகளில் சிறந்த அணியை தேர்வு செய்து அறிவிக்கும் பொறுப்பேற்றுள்ள இந்த நடுவர்கள், தங்களின் கலகலப்பான அணுகுமுறையில் நிகழ்ச்சியை மேலும் கலகலப்பூட்டி பங்கேற்பாளர்களையும், பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்துகின்றனர்.

சினிமாவில் பிரபலமாக உள்ள காமெடி ஜாம்பவான்களும் ‘‘தூள்'' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது சிறப்பம்சம். இவர்களும் நகைச்சுவை கலைஞர்களுடன் இணைந்து சிரிக்க வைக்கின்றனர்.

காமெடியை கருப்பொருளாக கொண்ட இந்நிகழ்ச்சி, ஜீ தொலைக்காட்சியில் வரும் திங்கள் முதல் புதன்கிழமை வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.