'சேரனும் கரு பழனியப்பனும் முன்பே லைக்காமொபைலிடம் பணம் வாங்கியவர்கள்தான்!'

சென்னை: விஜய் படத்தைத் தயாரிப்பதன் மூலம் இப்போது பெரும் பஞ்சாயத்தில் சிக்கிக் கொண்டுள்ள ராஜபக்சேவின் நட்பு நிறுவனமான லைக்கா மொபைல் தமிழ் சினிமாவில் ஏற்கெனவே தனது பணத்தைப் பாய்ச்சியுள்ளது.

இதனை அந்த நிறுவனமே நேற்றைய பிரஸ் மீட்டில் அம்பலப்படுத்திவிட்டதுதான் சுவாரஸ்யம்.

தமிழ், தமிழன், தமிழ் உணர்வுக்கெல்லாம் நாங்கதான் அக்மார்க் அத்தாரிட்டிகள் என்ற ரேஞ்சுக்கு முஷ்டியை மடக்கும் கூட்டத்தைச் சேர்ந்த சேரனும் கரு பழனியப்பனும்தான் லைக்காமொபைல்காரர்களிடம் முன்பே பணம் வாங்கியவர்கள்.

'சேரனும் கரு பழனியப்பனும் முன்பே லைக்காமொபைலிடம் பணம் வாங்கியவர்கள்தான்!'

அந்தப் படம் பிரிவோம் சந்திப்போம். அன்றைக்கு உண்மையான பெயரைச் சொல்லாமல் ஞானம் பிலிம்ஸ் என்ற பெயரில் படமெடுத்துள்ளனர் இந்த லைக்கா மொபைல்காரர்கள். தயாரிப்பாளர் பெயரைப் பார்த்தால் அ சுபாஸ்கரண் என்றுள்ளது.

இவர் யார், இவரது பின்னணி என்ன என்றெல்லாம் தெரியாமல் சேரனும் கரு பழனியப்பனும் படமெடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் விஷயம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார்கள்.

ஆக தமிழ் சினிமாவில் இனம், தமிழ் உணர்வு என்று பேசுபவர்கள் சிறுபான்மையாகத்தான் உள்ளனர். பெரும்பாலானோர் எல்லா நேரங்களிலும் சிறப்பாக நடிக்கின்றனர் என்பதுதான் உண்மை!

 

நான் சிகப்பு மனிதன் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

நான் சிகப்பு மனிதன் படத்தின் தலைப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ரஜினிகாந்த், பாக்யராஜ், அம்பிகா நடித்து 1985-ல் வெளியான படம் நான் சிகப்பு மனிதன். இந்தப் படத்தை பூர்ணச்சந்திரராவ் என்பவர் தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தின் நெகடிவ் உரிமையை சேலத்தைச் சேர்ந்த ஒரு பட வெளியீட்டாளருக்கு விற்பனை செய்துவிட்டார் பூர்ணச்சந்திரராவ். அவர் அதை சென்னையில் உள்ள நாகப்பனுக்கு பின்னர் விற்றார்.

இந்த நிலையில் விஷால் நடிக்கும் படத்துக்கு நான் சிகப்பு மனிதன் என்று தலைப்பிட்டு தயாரித்து வந்தனர். படம் வெளியாகும் நிலையில், தடை கோரி வழக்குத் தொடர்ந்தார் நாகப்பன். தலைப்புக்கான உரிமை மற்றும் காப்பி ரைட் உரிமை அனைத்தும் தன்னிடம் உள்ளதாகவும் அவர் தன் வழக்கில் தெரிவித்திருந்தார்.

இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த விஷால் பிலிம் பேக்டரி, நாகப்பன் இந்தத் தலைப்புக்கு உரியவர் அல்ல என்றும், அவர் இந்தத் தலைப்பை குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு பதிவு செய்யவில்லை என்றும் வாதாடியது.

நான் சிகப்பு  மனிதன் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்வாணன், இந்தப் படத்தின் தலைப்பு மீது நாகப்பனுக்கு சட்டரீதியான உரிமையில்லை என்றும், நெகடிவ் உரிமையை வைத்திருப்பதால் பேச்சளவில் உரிமை கொண்டாட முடியும் என்றும் கூறினார். ஆனால் இதற்காக படத்தை தடை செய்யத் தேவையில்லை என்று கூறிய நீதிபதி, வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.

இதனால் படம் இன்று எந்தத் தடையுமின்றி வெளியாகிறது.

 

பூனம் பாண்டே பிரதமராம்: இந்த கொடுமையை எங்க போய் சொல்வது?

மும்பை: கவர்ச்சி நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே பிரதமர் என்று அவரது ரசிகர்கள் ட்வீட் செய்து அதை ட்ரெண்டாகவிட்டுள்ளனர்.

பிரதமர் பதவிக்கு ஏற்கனவே பல முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் புதிதாக ஒருத்தரை வேறு அந்த நாற்காலியில் அமர வைக்க சிலருக்கு ஆசை பிறந்துள்ளது.

பூனம் பாண்டே பிரதமராம்: இந்த கொடுமையை எங்க போய் சொல்வது?

அவ்வப்போது அரை நிர்வாணம், முழு நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு நான் இங்கு தான் இருக்கிறேன் என்று மக்களின் கவனத்தை ஈர்ப்பவர் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே.

இந்நிலையில் அவரது ரசிகர்கள் சும்மா இல்லாமல் ட்விட்டரில் பூனம் பாண்டே பிரதமர் என்ற ஹேஷ்டேக்கை போட்டு அதை டிரெண்டாகவிட்டுள்ளனர். இதை பார்த்த பூனத்திற்கு உச்சி குளிர்ந்து போய் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஹா ஹா ஹா இது என்ன பூனம் பாண்டே பிரதமர் என்று அது டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இதை நம்பவே முடியவில்லை. விழுந்து விழுந்து சிரிக்கிறேன். உங்களுக்கு எப்படி இது போன்ற காமெடி ஐடியாக்கள் தோன்றுகிறது என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

இன்றைய ரிலீஸ்... நான் சிகப்பு மனிதன்!

இந்த வெள்ளிக்கிழமை விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் கிட்டத்தட்ட தன்னந்தனியாகக் களமிறங்குகிறது.

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் நான் சிகப்பு மனிதன். திரு இயக்கியுள்ளார். விஷால் - திரு இணைந்து தரும் மூன்றாவது படம் இது. ஏற்கெனவே தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர் என இரண்டு படங்களைத் தந்திருந்தனர்.

இன்றைய ரிலீஸ்... நான் சிகப்பு மனிதன்!

இந்தப் படம் ஏற்கெனவே ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கும் மான் கராத்தேவுக்கு கடும் சவாலாக இருக்கும் என பாக்ஸ் ஆபீஸில் கூறப்படுகிறது.

காரணம், மான் கராத்தேவுக்கு 345 அரங்குகள் தரப்பட்டன தமிழகத்தில். இப்போது நான் சிகப்பு மனிதன் வருவதால், மான் கராத்தேவுக்கு அரங்குகள் குறைக்கப்பட்டுள்ளன. நான் சிகப்பு மனிதன் பிக்கப் ஆகிவிட்டால், மான் கராத்தேவுக்கு நெருக்கடிதான்.

காந்தர்வன்

இன்று வெளியாகும் மற்றொரு படம் காந்தர்வன். காத்தவராயன் படத்தை இயக்கிய சலங்கை துரை இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.