கோடம்பாக்கத்தின் இப்போதைய நம்பிக்கை ஹீரோ... விஜய்சேதுபதி!

Vijay Sethupathy Turns Hot Hero Kollywood

கோடம்பாக்கத்தில் இன்றைக்கு சத்தமின்றி முன்னணிக்கு வந்து கொண்டிருப்பவர்... விஜய் சேதுபதி!

பிரபு சாலமன் இயக்கிய லீ படத்தில் ஒரு சின்ன வேடத்தில் வந்திருப்பார் விஜய் சேதுபதி. அதற்கு முன் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, புதுப்பேட்டை போன்ற படங்களில் துணை நடிகராக வந்திருப்பார்.

அடுத்து வெண்ணிலா கபடி குழுவில் சின்ன வேடத்தில் நடித்தார்.

அவருக்கு பெரிய திருப்பத்தைத் தந்தது சீனு ராமசாமி இயக்கத்தில் வந்த தென்மேற்கு பருவக்காற்று.

பின்னர் வந்த சுந்தரபாண்டியனில் வில்லனாக நடித்தார். மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சுந்தரபாண்டியன் வந்த நேரத்திலேயே வெளியான பீட்சா விஜய் சேதுபதியை முக்கிய ஹீரோவாக்கியது.

தொடர்ந்து வந்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படம் தமிழ் சினிமாவை விஜய் சேதுபதி பக்கம் திரும்ப வைத்தது.

இதோ... கடந்த வாரம் வெளியான அவரது சூது கவ்வும், ஹாட்ரிக் வெற்றி தந்த ஹீரோ என அவரது அந்தஸ்தை பாக்ஸ் ஆபீஸில் உயர்த்தியுள்ளது.

இன்றைக்கு அவர் கையில் ஏழு படங்கள். வசந்தகுமாரன், பண்ணையாரும் பத்மினியும், சங்குத் தேவன், ரம்மி, இதற்காகத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பெங்களூர் தமிழன் மற்றும் சீனுராமசாமி படம் என அத்தனையும் வித்தியாசமான தலைப்புகள். கதைகளும் வித்தியாசமானவைதான் என்கிறார் விஜய் சேதுபதி.

இவர் படத்தை இயக்குபவர்களும் பிரபலங்கள் அல்ல... பெரும்பாலும் குறும்பட இயக்குநர்கள் அல்லது உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள்.

பாக்ஸ் ஆபீசில் இன்று விஜய் சேதுபதி படம் என்றால் நம்பிக்கையோடு வாங்கத் தயாராக இருக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள், இயக்குநர்களிடம் மாட்டாமல், தனக்கேற்ற இயக்குநர்கள், சிறு தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதை தன் பாணியாக வைத்துள்ளார் விஜய் சேதுபதி.

 

‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் 'வாராயோ வெண்ணிலாவே'!

Attakathi Dinesh Signs His Second Movie

அட்டகத்தி படத்தில் நாயகனாக நடித்த தினேஷ், அடுத்து நடிக்கும் படம் வாராயோ வெண்ணிலாவே.

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் ‘நினைத்தது யாரோ' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் அபிஷேக் பிலிம்ஸ் பட நிறுவன தயாரிப்பாளர்கள் பி. ரமேஷ், இமானுவேல் இருவரும் அதிக பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கதாநாயகிகளாக ஹரிப்ரியா, காவ்யா ஷெட்டி இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமய்யா, முருகதாஸ் உள்பட பலரும் நடிக்கின்றனர்.

ராணா ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். ஆர் சசிதரன் எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே வெங்கட் பிரபு இயக்கி வெற்றி பெற்ற ‘சென்னை - 28' படத்தின் திரைக்கதை எழுதி வசன உதவியாளராகப் பணியாற்றியவர்.

சசிதரனிடம் படம் பற்றிக் கேட்டோம்...

"பணக்கார இளைஞராக வரும் தினேஷ் சென்னையிலிருந்து கேரளாவுக்கு வேலை செய்ய செல்கிறார். சென்ற இடத்தில் அழகான பெண்ணை சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். காதலின் விளைவு, எதிர்பாராத திடீர் திருப்பங்களுடன் கதை முடிகிறது. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளன,' என்றார்.

படத்தைப் பற்றி நடிகர் தினேஷ் என்ன சொல்கிறார்?

"அட்டகத்தி படத்தின் வெற்றிக்குப் பிறகு சிறப்பான கதைக்களம் என்பதால் இதுவும் எனக்கு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கையுடன் நடிக்க ஒத்துக் கொண்டேன், என்கிறார்.

 

நாளை ஆர்யா - நயன்தாரா 'திருமணம்'!! - நிஜமா... சினிமா விளம்பரமா?

'ஆர்யா வெட்ஸ் நயன்தாரா...' தேதி - மே 11, நேரம் இரவு 9 மணி...

-இப்படி வாசகங்கள் அடங்கிய ஒரு அழைப்பிதழ் பிரதியை இமெயிலில் அனுப்பி வைத்திருக்கிறார் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா.

கூடவே,

'இந்த செய்தி பல நாட்களாக காற்றில் மிதந்து வரும் செய்திதான் ....
இதை பற்றி அறியாதவரோ தெரியாதவரோ யாரும் இல்லை ...
இது ஆச்சரியமூட்டினாலும் அதிர்ச்சி தரும் தகவல் இல்லை ...
நெஞ்சை அள்ளிய அரசன் அரசியை தன்னிலை மறக்க செய்யும் தருணம் ...
இந்த மாபெரும் தருணம் அரங்கேறும் நாள் நாளை ...'

- என்று குறிப்பிட்டுள்ளனர்.

arya weds nayanthara on may 11

இந்த மின்னஞ்சல் வந்த கையோடு, பரபரவென செய்தி பரவ ஆரம்பித்துவிட்டது.

இதுகுறித்து மின்னஞ்சலை அனுப்பிய பிஆர்ஓவிடம் விசாரித்தபோது, 'இந்த அழைப்பிதழை எங்களுக்கு அனுப்பி அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பச் சொன்னார்கள். அனுப்பி விட்டோம். வேறு எதும் எங்களுக்குத் தெரியாது,' என்றார்.

சினிமா விளம்பரம்

ஆனால் நாம் விசாரித்த வகையில் இது ஆர்யா - நயன்தாரா நடிக்கும் ராஜா ராணி படத்துக்கான எதிர்மறை விளம்பரம் என்பதே உண்மை என்றார்கள்.

ஏற்கெனவே இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது ஆர்யாவும் நயன்தாராவும் கோவா சர்ச்சில் வைத்து மோதிரம் மாற்றிக் கொண்டதாக செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.

இப்போது நாளை இரவு திருமணம் என்று செய்தி வெளியிட்டுள்ளனர். ஆர்யா முஸ்லிம் என்பதால் இரவில் திருமணம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

பிரான் வீட்டுக்கு சென்று தாதாசாகேப் பால்கே விருது வழங்கிய மத்திய அமைச்சர் மனிஷ் திவாரி

Pran Handed Over Dadasaheb Phalke Award At His Home

மும்பை: பழம்பெரும் பாலிவுட் நடிகர் பிரான் சோப்ராவுக்கு தாதா சாகேப் பால்கே விருது இன்று வழங்கப்பட்டது.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் பிரான் சோப்ரா தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். 93 வயதாகும் அவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார். இதனால் அவரால் கடந்த 3ம் தேதி டெல்லியில் நடந்த தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.

பிரான் குடும்பத்தார் யாரும் அவருக்கு பதிலாக விருதை வாங்க வரவில்லை. இதையடுத்து மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று காலை அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனிஷ் திவாரி இந்த விருதை பிரானுக்கு வழங்கினார்.

பிரான் ஹீரோவாக நடித்ததைவிட வில்லன் வேடங்களில் அசத்தி இருப்பார். வில்லன் கதாபாத்திரம் தவிர குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். 1960களில் இருந்து 80கள் வரை ரிலீஸான கிட்டத்தட்ட அனைத்து பாலிவுட் படங்களிலும் பிரான் நடித்துள்ளார். சில ஆண்டுகளாக ஹீரோ, ஹீரோயினைவிட அவர் அதிக சம்பளம் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

'கழுகு'க்கு மிட்நைட் பார்ட்டி கொடுக்க போட்டா போட்டிபோடும் இளம் நடிகர்கள்!!

சென்னை: தான் பக்கா சைவம் என்று கூறி வந்த கழுகு நடிகை தற்போது நள்ளிரவு பார்ட்டிகளுக்கு ரகசியமாக வந்து மூக்கு முட்ட குடிப்பதோடு அசைவ உணவு வகைகளை செம கட்டு கட்டுகிறாராம்.

கழுகு நடிகை, தான் ஒரு பக்கா சைவப் பிரியை என்று கூறி வந்தார். மேலும் நள்ளிரவு பார்ட்டிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால் அபிமான நடிகர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்ததையடுத்து அம்மணி மனம் மாறியுள்ளது. தற்போது அவர் சில நள்ளிரவு பார்ட்டிகளுக்கு ரகசியமாக வருகிறாராம்.

பார்ட்டியில் மதுபான வகைகளை மூக்கு முட்ட குடிக்கும் அவர், முன்பு எந்த அசைவ உணவுகளை பார்த்து மூக்கைப் பொத்தினாரோ தற்போது அதே உணவை செம கட்டு கட்டுகிறாராம். அவர் சாப்பிடுவதைப் பார்த்து நடிகர்களே மிரள்கிறார்களாம்.

மறுநாள் என்னப்பா இப்படி அசைவத்தை ஒரு புடி புடிக்கிறீங்க என்று நடிகர்கள் கேட்டால் நானா? நிஜமாவா? என்று எதுவுமே தெரியாதது போன்று கேட்கிறாராம் நடிகை. இதைக் கேட்ட நடிகர்கள் அது சரி சரக்கடிச்சா அம்மணி நடப்பது எதுவும் தெரியாது போல. அதுவும் நல்லதாப் போச்சு இனி அடிக்கடி பார்ட்டி வைத்து விடலாம் என்று நடிகர்கள் நினைக்கிறார்களாம். மேலும் அம்மணிக்கு பார்ட்டி கொடுக்க சில இளவட்ட நடிகர்கள் போட்டா போட்டி போடுகிறார்களாம்.

 

நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும்!

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்ற படத்தைத் தந்த நிறுவனம் அடுத்து நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என்ற பெயரில் படம் தயாரிக்கிறது.

லியோ விஷன் என்ற நிறுவனம் சார்பில் விஎஸ் ராஜ்குமார் தயாரித்து வெளியிட்ட படம் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.

naalu policeum nalla irundha oorum

இந்த வகை தலைப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட நிறுவனம், தனது அடுத்தடுத்த படங்களுக்கும் இதே மாதிரி தலைப்பு வைத்து வருகிறது.

இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இதிலும் விஜய் சேதுபதிதான் ஹீரோ. அடுத்து மீண்டும் இதே மாதிரி தலைப்புடன் புதிய படத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என்று பெயர் சூட்டியுள்ளனர். சமூக அக்கறையுடன் உருவாகும் இந்தப் படத்தை என்ஜே கிருஷ்ணா இயக்குகிறார்.

ஹீரோ ஹீரோயின் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

 

பவர் ஸ்டார் அல்ல பிராடு ஸ்டார் சீனிவாசன்: குவியும் மோசடி புகார்கள்

Is Srinivasan Power Star Or Fraud Star

சென்னை: மோசடி வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபர் ரங்கநாதன் என்பவருக்கு ரூ.20 கோடி கடன் வாங்கித் தர ரூ.50 லட்சம் கமிஷன் பெற்று ஏமாற்றியவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இதையடுத்து ரங்கநாதன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின்பேரில் பவர் கடந்த 26ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பிறகு வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் மேலும் 3 வழக்குகளில் மீண்டும் கைது செய்யப்பட்டார். பவரை ஏற்கனவே தங்கள் காவலில் எடுத்து விசாரித்த போலீசார் தற்போது அவரை மீண்டும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று இரவு முதல் பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பவர் ஸ்டார் மீது ஏராளமானோர் புகார் கொடுத்து வருகின்றனர்.

 

சின்ன வயசுல அம்மா கையால விளக்குமாத்தால அடி வாங்கி இருக்கேன்: நடிகை கங்கனா ரனௌத்

I Was Beaten Up With Broom My Childhood Kangna Ranaut

மும்பை: தனது அம்மா தன்னை விளக்குமாறால் அடித்துள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனௌத் தெரிவித்துள்ளார்.

அன்னையர் தினத்தை முன்னிட்டு பி அன்ட் ஜி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை கங்கனா ரனௌத் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது,

நான் சிறுபிள்ளையாக இருக்கையில் அம்மா ஆஷா என்னை விளக்குமாறால் அடித்துள்ளார். அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல உணவு கொடுத்து பாட்டு பாடி தூங்க வைப்பார்கள். ஆனால் என் அம்மா எனக்காக பாட்டு பாடியதாக ஞாபகமே இல்லை. எங்கம்மா ரொம்ப ஸ்டிரிக்ட். என் அம்மா ஒரு சமஸ்கிருத ஆசிரியை. பள்ளியில் அவரைப் பார்த்து மாணவ-மாணவியர் பயப்படுவார்கள்.

என் அம்மா எனக்கு நடிப்பைத் தவிர எல்லாமே சொல்லிக் கொடுத்திருக்கிறார். எனக்கு பாத்திரம் தேய்க்கத் தெரியும், சமைக்கத் தெரியும். சினிமா ஒத்து வரவில்லை என்றாலும் நான் பிழைத்துக் கொள்வேன். திருமணமாகிப் போகிற வீட்டில் எங்கள் பெயரைக் கெடுக்கப் போகிறாய் என்று என் அம்மா தெரிவித்தார் என்றார்.