சென்னை: சமீபகாலமாக செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறாராம் சின்னப்பூ நடிகை.
காரணம் முன்பெல்லாம் அவரது முறிந்து போன காதல் குறித்து கேள்விக்கணைகளை வீசியவர்கள் தற்போது புதிதாக குளியல் வீடியோ பற்றியும் கேட்கிறார்களாம்.
சமீபத்தில் நடிகையின் குளியல் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வந்தது. அது மார்பிங் செய்யப்பட்டது என சிலர் சமாளித்தாலும், அது நடிகையோடது தான் என சிலர் சத்தியம் செய்கிறார்கள். அந்த மனவேதனையைப் போக்கிக் கொள்வதற்காகவே வெளிநாடு சென்று விடுமுறையைக் கொண்டாடினார் நடிகை.
ஆனால், அதனை மறக்க விடாமல் தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் அது தொடர்பாகவே கேள்வி எழுப்புவதால் நடிகை வேதனையில் உள்ளாராம்.
இதனால், தனது சேவைகளைப் பற்றிய செய்திகளை பரவ விட்டு, குளியல் வீடியோவை மக்களை மறக்கச் செய்ய வேண்டும் என தனது மேனேஜர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளாராம்.