எப்பப் பார்த்தாலும் ‘அதை’ப் பத்தியே கேட்குறாங்களே... நொந்து நூடுல்ஸாகும் நடிகை!

சென்னை: சமீபகாலமாக செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறாராம் சின்னப்பூ நடிகை.

காரணம் முன்பெல்லாம் அவரது முறிந்து போன காதல் குறித்து கேள்விக்கணைகளை வீசியவர்கள் தற்போது புதிதாக குளியல் வீடியோ பற்றியும் கேட்கிறார்களாம்.

சமீபத்தில் நடிகையின் குளியல் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வந்தது. அது மார்பிங் செய்யப்பட்டது என சிலர் சமாளித்தாலும், அது நடிகையோடது தான் என சிலர் சத்தியம் செய்கிறார்கள். அந்த மனவேதனையைப் போக்கிக் கொள்வதற்காகவே வெளிநாடு சென்று விடுமுறையைக் கொண்டாடினார் நடிகை.

ஆனால், அதனை மறக்க விடாமல் தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் அது தொடர்பாகவே கேள்வி எழுப்புவதால் நடிகை வேதனையில் உள்ளாராம்.

இதனால், தனது சேவைகளைப் பற்றிய செய்திகளை பரவ விட்டு, குளியல் வீடியோவை மக்களை மறக்கச் செய்ய வேண்டும் என தனது மேனேஜர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளாராம்.

 

தடைகள் வந்தாலும் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருப்பேன்: கமல்

சென்னை: எனக்கு இடையூறுகள் அளித்தாலும் என்னால் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. நான் தொடர்ந்து நடிப்பேன் என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

தன்னையே சிலர் குறிவைப்பதாக உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். சண்டியர் என கமல் தனது படத்திற்கு தலைப்பை தேர்வு செய்து பிரச்சனையில் சிக்கினார். அதையடுத்து கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ், விஸ்வரூபம் ஆகிய படங்களும் பிரச்சனையை சந்தித்தன.

என்னால் சும்மா இருக்க முடியாது: கமல் ஹாஸன்

அதிலும் விஸ்வரூபம் படத்தை வெளியிட கமல் ஹாஸன் படாதபாடு பட்டார். நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கூறும் அளவுக்கு அவருக்கு பிரச்சனைகள் ஏற்பட்டது. ஆனால் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை நினைத்து முடங்கிவிடாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து கமல் கூறுகையில்,

நாந் நடித்துள்ள பாபநாசம் மற்றும் விஸ்வரூபம் 2 ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனாலும் சரி அல்லது தாமதமானாலும் சரி நான் தொடர்ந்து நடித்துக் கொண்டு தான் இருப்பேன். என்னால் சும்மா உட்கார முடியாது. ரசிகர்களுக்கு நல்ல படங்களை அளிக்க விரும்புகிறேன். அவர்களும் அதைத் தான் என்னிடம் எதிர்பார்க்கிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்கக் கூடாது, அதை தடுக்கவும் முடியாது என்றார்.

 

லகலக... லகலக... துரத்தும் பிரச்சினைகளால் மீண்டும் இமயமலைக்கு பறக்கும் ‘சூப்பர்’!

சென்னை: சமீபகாலமாக சூப்பரையும், அவரது குடும்பத்தாரையும் பிரச்சினை துரத்தி துரத்தி அடித்து வருகிறது. இதனால் நடிகர் ரொம்பவே வேதனையில் உள்ளாராம்.

முதலில் பொம்மைப்படத்திற்கு பிரச்சினை வந்தது, கஷ்டப்பட்டு நடிகர் தனது மகளைக் காப்பாற்றினார். பின்னர் திரையில் அணை கட்டியவரை மீண்டும் துரத்தியது பிரச்சினை. தலைக்கு மேல் வெள்ளம் போவதை உணர்ந்து, உரியவர்களை அழைத்து பிரச்சினையை சுமூகமாக முடித்தார்.

ஒரு வழியாக பிரச்சினைகள் முடிந்தது என நடிகர் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு முன்னதாக, மனைவிக்கு வந்தது பிரச்சினை.

தொடர் பிரச்சினைகளால் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம் நடிகர். எனவே, விரைவில் நிம்மதி தேடி இமயமலைக்கு ஒரு பயணம் சென்று வரும் முடிவில் இருக்கிறாராம்.

 

திருட்டு "காக்கிச் சட்டை"யை கையும் களவுமாக பிடித்த கரூர் போலீஸ்!

கரூர்: கரூர் நகரில் திருட்டு பட சிடிக்கள் விற்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தி 3 பேரைக் கைது செய்தனர்.

கரூர் நகரில் திரைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம்புது திரைப்படங்கள் திருட்டு வி.சி.டியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கரூர் பேருந்து நிலையம், ஜவஹர் பஜார், மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில் போலீஸார் திடீர் ரெய்டு நடத்தினார்கள்.

திருட்டு

அப்போது, புதுப்பட சி.டிகள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதில் எனக்குள் ஒருவன், அனேகன், காக்கிசட்டை, வெள்ளைக்காரத்துரை, கதம் கதம், டார்லிங் உள்ளிட்ட பல படங்கள் சிக்கின.

மேலும் இதை விற்பனை செய்த கரூர் பாரதியார் தெருவில் வசிக்கும் முருகன் (எ) கார்த்திக் (வயது 30), பெரியார் நகர் பகுதியை சார்ந்த சரவணன் (வயது 32), செல்லாண்டிபாளையம் பகுதியை சார்ந்த திருமூர்த்தி (வயது 29), ஆகிய 3 பேரை கரூர் நகர காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர்களிடமிருந்து சுமார் 200 புதுப்பட சிடிக்களும் பறிமுதல் செய்யப்பட்டது,