எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை - மம்முட்டி

எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை - மம்முட்டி

திருவனந்தபுரம்: எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை என்று நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள மம்முட்டி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகின.

மம்முட்டி இடது சாரி கட்சிகள் மீது அபிமானம் கொண்டவர் என்பதால், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவர் போட்டியிடக் கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த செய்தி மலையாள சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் கேரள அரசியல் பிரமுகர்களிடையேயும் பரபரப்பைக் கிளப்பியது.

இது குறித்து மம்முட்டியிடம் கேட்டபோது, "இந்த அரசியல் செய்திக்கும் எனக்கும் ம் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை எனும்போது, இபப்டியெல்லாம் செய்திகள் வெளியிடுவது தேவைதானா... இது போன்ற தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்'' என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

ரஜினி ப்ளட்ஸ்டோன் பட தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஆங்கிலப் படமான ப்ளட்ஸ்டோனைத் தயாரித்த அசோக் அமிர்தராஜின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை ஆளுநர் ரோசய்யா வெளியிட்டார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் லதா ரஜினிகாந்த்.

ஹாலிவுட்டில் பிரபலமான தயாரிப்பாளராக விளங்குபவர் அசோக் அமிர்தராஜ். சென்னையைச் சேர்ந்த இவர் விம்பிள்டன் உள்ளிட்ட டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றவர்.

ரஜினி ப்ளட்ஸ்டோன் பட தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு!

பின்னர் அமெரிக்காவில் செட்டிலாகி சினிமா தயாரிப்பாளராகிவிட்டார். ஆங்கிலத்தில் ரஜினி நடித்த ‘பிளட்ஸ்டோன்', தமிழில் ஷங்கர் இயக்கிய ‘ஜீன்ஸ்' உட்பட 100 க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

அசோக் அமிர்தராஜ் தன் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதிய ஆங்கிலப் புத்தகம் ‘அட்வான்டேஜ் ஹாலிவுட்'.

இந்த சுயசரிதை நூலை, ஆளுநர் ரோசய்யா சென்னையில் சமீபத்தில் வெளியிட்டார். சென்னை அமெரிக்க தூதர் ஜெனிபர் மெக்கின்டயர் பெற்றுக் கொண்டார்.

ரஜினி ப்ளட்ஸ்டோன் பட தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு!

லதா ரஜினிகாந்த், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், நடிகை சஞ்சிதா ஷெட்டி உட்பட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்று அசோக் அமிர்தராஜை வாழ்த்தினர்.

 

சினிமா நூற்றாண்டு விழா: கருணாநிதிக்கு திடீர் அழைப்பு!... பாலுமகேந்திராவுக்கு அழைப்பில்லை

சென்னை: சென்னையில் இன்று தொடங்க இருக்கும் இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படாதது விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு திடீரென அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

சினிமா நூற்றாண்டு விழா: கருணாநிதிக்கு திடீர் அழைப்பு!... பாலுமகேந்திராவுக்கு அழைப்பில்லை

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை துணைத் தலைவர் தேவராஜ், எடிட்டர் மோகன் ஆகியோர் நேரில் சென்று கருணாநிதிக்கு அழைப்பிதழை கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட கருணாநிதி "வாழ்த்துக்கள்!" என்று மட்டும் சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக தனக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து," நான் யார்...எனக்கு அழைப்பு விடுக்க...?" என்று வேதனையுடன் அறிக்கை ஒன்றில் கருணாநிதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாலு மகேந்திராவுக்கு அழைப்பில்லை

இதனிடையே இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்கு தனக்கு அழைப்பில்லை என இயக்குநர் பாலு மகேந்திரா தெரிவித்துள்ளார்.

சினிமா நூற்றாண்டு விழா: கருணாநிதிக்கு திடீர் அழைப்பு!... பாலுமகேந்திராவுக்கு அழைப்பில்லை

சாகித்ய அகாதெமி சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், "நான் மிகச்சிறிய ஆள் என்பதால் என்னை விழாவுக்கு அழைக்கவில்லை எனத் தெரிகிறது. எனவே, இந்த விழாவில் நான் பங்கேற்கப் போவதில்லை" என்றார்.

பத்திரிக்கை வர லேட்

இது குறித்து கருத்து கூறியுள்ள நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எல்.சுரேஷ், சினிமா விழாவிற்கான பத்திரிக்கை பிரிண்ட் ஆகி வர தாமதமாகிவிட்டது. முதல்வர் ஜெயலலிதாவிற்கே இன்றுதான் பத்திரிக்கை கொடுத்தோம் என்று கூறினார்.

 

காமராஜரை விமர்சித்ததாக எதிர்ப்பு: கருணாஸ் வீட்டில் முற்றுகை போராட்டம் - 150 பேர் கைது

காமராஜரை விமர்சித்ததாக எதிர்ப்பு: கருணாஸ் வீட்டில் முற்றுகை போராட்டம் - 150 பேர் கைது

சென்னை: காமராஜரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி நடிகர் கருணாஸ் வீட்டு முன் பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

நகைச்சுவை நடிகர் கருணாஸ் கோவையை அடுத்த பள்ளப்பாளையத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசியதாக பெருந்தலைவர் மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அக்கட்சியினர் இன்று காலை அண்ணாநகரில் உள்ள கருணாஸ் வீட்டின் முன் திரண்டனர். கருணாசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில பொருளாளர் புழல் ஏ.தர்மராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து செல்ல வற்புறுத்தினார்கள். கருணாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் போட்டபடி முற்றுகையில் ஈடுபட்டார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்து திருமங்கலத்தில் உள்ள சமூகநல கூடத்தில் வைத்தனர். அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் நேரில் போய் பார்த்தார்.

 

காமராஜரை அவமதிக்கவில்லை - கருணாஸ் அறிக்கை

காமராஜரை அவமதிக்கவில்லை - கருணாஸ் அறிக்கை

சென்னை: காமராஜரை அவமதித்து பேசவில்லை என்றும், பத்திரிகையில் தவறாக பிரசுரித்துள்ளனர் என்றும் கருணாஸ் மறுப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தேவர் ஜெயந்தி பொதுக்கூட்டம் கோவையை அடுத்த பள்ளபாளையம் கிராமத்தில் செப்டம்பர் 15-ம் தேதி நடந்தது.

அதில் பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி நான் தவறாகப் பேசியதாக ஒரு வார இதழில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்துக்கு பெருமை சேர்த்த, கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரை நான் வழிகாட்டியாக நினைத்து வாழ்ந்து வருகிறேன்.

நான் பேசியதை உண்மைக்குப் புறம்பாக வெளியிட்ட பத்திரிகை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப் போகிறேன்.

காமராஜர் பற்றி நான் பேசியதாக வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

தமிழர்களின் ஒற்றுமைக்காகவும், ஜாதி வேறுபாடுகளைக் களைந்து சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்பதற்காகவும் களப்பணியாற்றி வரும் என் மீது ஜாதி முத்திரைக் குத்த வேண்டாம்.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

விஷாலின் பாண்டிய நாட்டை வாங்கியது வேந்தர் மூவீஸ்!

விஷால் நடித்து தயாரித்து வரும் பாண்டிய நாடு படத்தின் வெளியீட்டு உரிமையை வேந்தர் மூவீஸ் நிறுவனம் வாங்கியது.

விஷால் பிலிம் சர்க்யூட் என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த விஷால், அதன் முதல் தயாரிப்பாக பாண்டிய நாடு படத்தை அறிவித்தார்.

விஷாலின் பாண்டிய நாட்டை வாங்கியது வேந்தர் மூவீஸ்!

விஷால் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். ‘வெண்ணிலா கபடி குழு', ‘நான் மகான் அல்ல'. ‘ஆதலால் காதல் செய்வீர்' படங்களைத் தந்த சுசீந்திரன் இயக்குகிறார். முதல் முறையாக சுசீந்திரன் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையா வேந்தர் மூவீஸ் பெற்றுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பே இந்தப் படத்தை வாங்க விஷால் - வேந்தர் மூவீஸ் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் விலை படியாததால், படத்தைத் தர மறுத்துவிட்டார் விஷால்.

விஷாலின் பாண்டிய நாட்டை வாங்கியது வேந்தர் மூவீஸ்!

இப்போது, இரு தரப்பும் ஒரு சுமூக முடிவுக்கு வந்திருப்பதால், படத்தின் உரிமையைத் தர ஒப்புக் கொண்டார் விஷால்.

தலைவா படத்துக்குப் பிறகு வேந்தர் மூவிஸ் வெளியிடும் படம் பாண்டிய நாடு.

 

இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெயா டிவி தவிர பிற டிவி சேனல்களுக்கு தடை

இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெயா டிவி தவிர பிற டிவி சேனல்களுக்கு தடை

சென்னை: இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா குறித்த செய்தி சேகரிக்க ஜெயா டிவியைத் தவிர மற்ற தொலைக்காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.

சென்னையில் இன்று மாலை தொடங்கும் இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழக அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இணைந்து நடத்தும் இந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கேரள முதல்வர் உம்மன்சாண்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மேலும், தமிழ்நாடு உள்பட நான்கு மாநில திரைப்பட கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில், திரைப்பட விழா குறித்த செய்தி சேரிக்க ஆளும் கட்சிக்கு சொந்தமான தொலைக்காட்சியை தவிர மற்ற தொலைக்காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.

இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவுக்கு தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாகவும், இதனால் ஒளிபரப்பு செய்ய குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும், விழாவில் முதல்வர் ஜெயலலிதா உரையாற்றும் செய்தியை சேரிக்கவும் தொலைக்காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

நடிகை சங்கீதா-கணவர் க்ரிஷ் இடையே லடாயா?

சென்னை: நடிகை சங்கீதாவின் வீட்டில் புகைச்சலாக கிடக்கிறதாம்.

நடிகை சங்கீதா-கணவர் க்ரிஷ் இடையே லடாயா?

ரசிகாவாக கோலிவுட்டில் அறிமுகமானவர் பின்னர் தனது பெயரை சங்கீதா என்று மாற்றிக் கொண்டார். பிதாமகன் படத்தில் தில்லாக நடித்திருந்தார். அதன் பிறகு சில படங்களில் நடித்த அவரால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. இந்நிலையில் அவர் பாடகரான க்ரிஷை மணந்தார். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அவர்கள் திருமணம் நடந்தது.

நடிகை சங்கீதா-கணவர் க்ரிஷ் இடையே லடாயா?

திருமணம் முடிந்த பிறகு அமைதியாகச் சென்ற அவர்கள் வாழ்க்கையில் புதுவரவாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் க்ரிஷ் சில பெண்களுடன் நெருக்கமாக உள்ளாராம். இதனால் வீட்டில் புகைச்சலாக இருக்கிறதாம்.

வீட்டில் நடக்கும் விஷயங்களை மறக்கவே சங்கீதா சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறாராம்.