‘சம்பளம் கிடக்கட்டும்… கதை இருக்கா?’ – தமன்னா

Tamanna
சில மாதங்கள் வரை, படத்துக்கு கதை இருக்கோ இல்லையோ கால்ஷீட் இருந்தா போதும் என்பதுதான் நிலைமை.

ஆனால் சுறாவின் தோல்வி, அம்மணியின் கோலிவுட் நாற்காலிக்கு பலத்த ஆட்டத்தைக் கொடுத்திருக்கிறதாம்.

நிலைமை இப்படி இருக்க, இவரோ சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திவிட்டார் என்றம், இதில் எழுந்த பிரச்சினை காரணமாகத்தான், அதனால்தான் லிங்குசாமியின் புதிய படத்தில் கூட நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

என்ன சொல்கிறார் தமன்னா…?

“நான் சம்பளத்தை உயர்த்தி விட்டதாக கூறுவதில் உண்மையில்லை. எனக்கு பணம் முக்கியமல்ல. அதை விட நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற் கிறது. கதை, இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பல விஷயங்களைப் பார்த்துதான் நான் படங்களை ஒப்புக் கொள்கிறேன்.

நிறைய சம்பளம் இருக்கா என்று பார்ப்பதில்லை. நல்ல கதை இருக்கா என்றுதான் பார்க்கிறேன்.

லிங்குசாமியின் வேட்டை படத்தில் நடிக் காததற்கு சில காரணங்கள் உள்ளன. இயக்குனர் லிங்குசாமியை நான் மதிக்கிறேன். அவரது பையா படத்தில் நான்தான் ஹீரோயின்.

ஆனால் அவர் கேட்ட தேதிகள் என்னிடம் இல்லை. தெலுங்கில் இரண்டு படங்களிலும், தனுஷ் ஜோடியாக ஹரி இயக்கும் படத்திலும் விரைவில் நடிக்க உள்ளேன். ஜூனியர் என்.டி.ஆர். ஜோடி யாக நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளேன். இவ்வளவு பிசி யாக இருக்கும் நான் எப்படி வேட்டை படத்தில் நடிக்க முடியும்…”, என்கிறார்.

 

தீபாவளிக்கு மூணுதான்!!

Danush and Genelia
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்களுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்த பிறகு, தீபாவளிக்கு தங்கள் படங்களை ரிலீஸ் செய்யலாமா வேண்டாமா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் தயாரிப்பாளர்கள்.

கடந்த வாரம் வெளியான படங்களில் ஒச்சாயி, தொட்டுப் பார் தவிர வேறு எதுவும் திரையரங்குகளில் இருக்கிறதா என்றே தெரியாத நிலை. அந்தப் படஹ்களை ரிலீஸ் செய்த சில அரங்குகள், கூட்டம் சற்று குறைந்தாலும் பரவாயில்லை, ஓட்ட எந்திரன் கிடைக்குமா என்று கேட்டு வருகிறார்கள். இன்னும் சிலர், பழைய படங்களை திரையிட ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்துள்ளது.

தனுஷ் நடித்துள்ள உத்தமபுத்திரன், தயாநிதி அழகிரி தயாரித்துள்ள வா குவாட்டர் கட்டிங், உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிடும் மைனா ஆகிய மூன்று படங்கள் மட்டுமே இப்போதைக்கு தீபாவளி ரேஸை சற்று தைரியமாக எதிர் கொள்கின்றன.

 

குடிப்பழக்கம்,ஆண் நண்பர்கள்...கணவன் கண்டித்ததால் துணை நடிகை தற்கொலை

குடித்து விட்டு, ஆண் நண்பர்களுடன் வந்ததைக் கணவன் கண்டித்ததால் துணை நடிகை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

மாதவரம் பொன்னியம்மன் மேடு இ பிளாக்கை சேர்ந்தவர் அஸ்வின். இவர் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி மீரா ரித்திகா (20). சினிமா நடன நடிகை. ஏராளமான படங்களில் குரூப் டான்ஸராக வந்துள்ளார். இவரது சொந்த ஊர் கோவை.

இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. இதனால் ரித்திகாவிடம் இனி குழந்தையை கவனித்தால் போதும் சினிமாவில் நடனமாடக் கூடாது என்றாராம் அஸ்வின்.

ஆனால் இதையும் மீறி ரித்திகா அடிக்கடி சினிமா நடன குழு நண்பர்களை பார்க்க சென்றுவிடுவார். இதனால் இருவருக்கும் கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று ரித்திகா கணவருக்கு தெரியாமல் தனது ஆண் நண்பர் ஒருவருடன் மதுவிருந்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் போதையில் தள்ளாடியபடி நண்பருடன் வீட்டுக்கு வந்தார். அப்போது அஸ்வின், ரித்திகாவை கண்டித்தாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது.

இதில் மனம் உடைந்த ரித்திகா வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காப்பாற்ற முயன்றதில் அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டது. இதுபற்றி மாதவரம் இன்ஸ்பெக்டர் சுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

 

கரணின் மார்க்கெட் ரகசியம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பெரிய நடிகர்களுக்கே ஒரு படம் ஓடாவிட்டால் மார்க்கெட் விழுந்துவிடுகிறது. கரணுக்கு மட்டும் எப்படி அடுத்தடுத்து படங்கள் வருகின்றன. எப்படி மார்க்கெட் இருக்கிறது? அவருக்கு எந்தப் படமும் சூப்பராகப் போகவில்லையே? விநியோகஸ்தர்கள் சொல்லும் பதில் இதுதான், அவருடைய படங்கள் எப்படியும் சுமாராகப் போய்விடுகின்றன. கரண் படத்துக்கென பெரிய பட்ஜெட் தேவையில்லை. அவருக்குச் சம்பளம் கொடுக்க கோடிகளைப் புரட்ட வேண்டியதில்லை. இதுதான் அவருடைய மார்க்கெட் ரகசியமாம்.


Source: Dinakaran
 

யார் அந்த துப்பறியும் ஆனந்த்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

துப்பறியும் ஆனந்த் என்ற படத்தில் இணைவதாக இருந்த அஜீத்தும், கெளதம் மேனனும் இப்போது திடீரென பிரிந்து விட்டனர். கதையில் பாடல்களோ, ரசிகர்களைக் கவரும் காட்சிகளோ இல்லையென்பது அஜீத்தின் வருத்தம். அஜீத்துக்காக கதை எழுத முடியாது, என் கதையில் வேண்டுமானால் அஜீத் நடிக்கட்டும் என்பது கவுதம் மேனனின் பிடிவாதம்.

எல்லா இயக்குநர்களின் செல்ல ஹீரோவாக மாறி வரும் சூர்யாவிற்கு அஜீத் கைவிடப்பட்ட (துப்பறியும் ஆனந்த்) படத்திற்கு ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. இன்னும் சில மாதங்களுக்கு கா‌ல்ஷ‌ீட் இல்லை என்பது சூர்யாவின் பிரச்சனை. அதனால் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்து சீக்கிரமே சொல்கிறேன் என்கிறார் கௌதம்.


Source: Dinakaran
 

கால்ஷீட் சொதப்பல்:அமரா படத்திலிருந்து தூக்கப்பட்டார் ஓவியா!

Oviya
களவாணி என்ற ஒரே படத்தில் படுபாப்புலரான (அந்த ‘ஸ்ப்ரே’ மேட்டராலும்தான்!) ஓவியா, கால்ஷீட் விவகாரத்தில் சொதப்பியதால் ஒரு பதிய படத்திலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.

களவாணியில் நிறையப் பேரி்ன் மனசைக் களவாடியவர் நடிகை ஓவியா. அந்தப் படத்தின் வெற்றியால் செவனு உள்பட 5 புதிய படங்களில் ஒப்பந்தமானார்.

ஒளிப்பதிவாளர் – இயக்குநர் ஜீவன் இயக்கவிருந்த அமரா என்ற படத்திலும் இவர்தான் நாயகி.

ஆனால் சொன்னபடி கால்ஷீட் தராமல் சொதப்பிவிட்டாராம் ஓவியா. களவாணிக்கு சொந்தமான ஒருவர், ஓவியாவையும் சொந்தம் கொண்டாடியபடி இருப்பதால், கால்ஷீட்டில் கவனம் செலுத்த முடியவில்லையாம் ஓவியாவால்.

பொறுத்துப் பார்த்த ஜீவன், திடீரென்று ஒரு நாள் படத்திலிருந்தே ஓவியாவைத் தூக்கிவிட்டதாக அறிவித்துள்ளார். அட்வான்ஸைத் திருப்பித் தருமாறு கடுமையாகக் கூறிவிட்டாராம்.

வளர்ந்து வரும் நேரத்தில், நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தலாமே ஓவியா!

 

‘ஸ்ஸ்ஸ் ஜெயிக்கணும்..!’ – பாம்பு கோவிலில் மல்லிகா ஷெராவத் பூஜை

Mallika Sherawat
நாகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள தனது புதிய படம் வெற்றி பெற பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் பாம்பு கோயிலில் பிரார்த்தனை செய்தசார்.

மல்லிகா ஷெராவத் நாககன்னியாக நடித்த ‘ஸ்..ஸ்..ஸ்..’ என்ற புதிய படம், வரும் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. இப் படம் வெற்றி பெற வேண்டி, கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் மன்னரசாலாவில் உள்ள ஸ்ரீநாகராஜா கோவிலில் மல்லிகா ஷெராவத் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

இதற்காக அவர் மும்பையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் கோவிலை அடைந்து வழிபட்டார். இந்தியாவிலேயே இந்தக் கோவில்தான், பாம்பு கடவுளுக்கான கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.

மல்லிகாவுடன், அப்படத்தின் தயாரிப்பாளர் கோவிந்த் மேனனும் வந்திருந்தார்.

 

கோவா திரைப்பட விழாவில் அங்காடித் தெரு,ராவணன்!

Anjali and Magesh
சென்னை: கோவாவில் அடுத்த மாதம் 22-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வசந்த பாலனின் அங்காடித் தெரு, மணிரத்னம் இயக்கிய ராவணன் ஆகிய 2 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்கின்றன.

இந்த விழாவில் கலந்து கொண்ட 140 திரைப்படங்களை பார்த்து, அதில் 26 இந்திய மொழி திரைப்படங்களை என்.சந்திரா தலைமையிலான 10 உறுப்பினர்கள் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்துள்ளனர்.

இதில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ராவணன், இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித் தெரு ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளன.

ஆத்ம கதா என்ற மலையாளப் படமும் தேர்வாகியுள்ளது.

 

பாடகி சித்ராவுக்கு சக்குளத்து அம்மா விருது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இந்த ஆண்டு 'சக்குளத்து அம்மா' விருது பிரபல சினிமா பின்னணி பாடகி சித்ராவுக்கு வழங்கப்பட்டது. கேரளாவில் உள்ள பகவதி அம்மன் கோயில்களில் சக்குளத்து பகவதி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழாவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர். இந்த பொங்கல் விழாவின்போது, சக்குளத்து பகவதி கோவில் அறக்கட்டளை சார்பில் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருட விருது, பிரபல சினிமா பின்னணி பாடகி கே.எஸ்.சித்ராவுக்கு வழங்கப்பட்டது. கோயில் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சக்குளத்து பகவதி அம்மன் கோயில் அறக்கட்டளை நிர்வாகி மணிக்குட்டன் நம்பூதிரி, 'சக்குளத்து அம்மா' விருதை சித்ராவுக்கு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி கே.கே.கோபாலகிருஷ்ணன் நாயர், மணக்கால கோபாலகிருஷ்ணன், மக்கள் தொடர்பு அதிகாரி சுரேஷ் காவும்பாகம், கே.சதீஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Source: Dinakaran